ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாக்ரே மரணம் ; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: போலீஸ் அட்வைஸ்

3 posters

Go down

தாக்ரே மரணம் ; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: போலீஸ் அட்வைஸ் Empty தாக்ரே மரணம் ; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: போலீஸ் அட்வைஸ்

Post by சிவா Sun Nov 18, 2012 9:20 am

மும்பை: மும்பை மைந்தன் என்ற பேருபெற்ற சிவசேனா தலைவர் பால்தாக்ரே மறைவை யொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் அட்வைஸ் செய்துள்ளனர். இங்கு ஆட்டோ முதல் சைக்கிள் ரிக்ஷா வரை நிறுத்தப்பட்டுள்ளதுடன், நகைகடைகள் முதல் அனைத்து கடைகளும் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) அடைக்கப்படுகிறது. இன்று இவது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தொடர்ந்து மாலையில் தகனம் செய்யப்படுகிறது.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே காலமானார். அவருக்கு வயது 86.

மராட்டிய இனம், இந்திய நாடு, இந்து மதத்திற்கு ஆதரவான கொள்கைளை கொண்டது சிவசேனா கட்சி. இந்து மத ஆதரவு கொள்கைகளை கொண்ட, சிவசேனா கட்சி, 1966ல், துவக்கப்பட்டது.மும்பை நகரில், இந்துக்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் பாதுகாப்பான கட்சி என்ற பெயர் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் தலைவராக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியல் நடத்தி வருபவர், பால் தாக்கரே, 86. சில மாதங்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த புதன் கிழமை மிகவும் மோசமான நிலையை அடைந்தார். மூச்சு விடுவதில் சிரமம், இருதய கோளாறால் அவதிப்பட்ட அவருக்கு, அவரின் இல்லமான, மும்பை, பாந்த்ராவில் உள்ள, "மாதோஸ்ரீ'யின், இரண்டாவது மாடியில் உள்ள, அவரின் தனியறையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது.

மும்பை நகரின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான, லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், 24 மணி நேரமும், பால் தாக்கரே உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளித்து வந்தனர்.."தாக்கரே கவலைக்கிடமாக உள்ளார்' என்ற தகவல் பரவியதும், அவர் மீது மிகுந்த அன்பு கொண்ட கட்சியினர், மாதோஸ்ரீ முன் கூடி, "ஜெய் பவானி... ஜெய் சிவாஜி...' என்று கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். அரசியல், சினிமா மற்றும் கலைத்துறை பிரமுகர்கள், மாதோஸ்ரீக்கு வந்த வண்ணம் இருந்தனர்.எனினும், அவர்கள் யாரும், தாக்கரேயை சந்திக்க முடியவில்லை. தனியறையில் இருந்த அவரை, சிவசேனா கட்சியின் செயல் தலைவர், உத்தவ் தாக்கரே, அவரின் மனைவி, ராஷ்மி மற்றும் லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் மட்டுமே கவனித்து வந்தனர்.கடந்த புதன் கிழமை, தாக்கரே உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், வியாழக்கிழமை சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த, உயிர் காக்கும், அவசர கருவிகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில் பால் தாக்கரே ‌நேற்று (சனிக்கிழ‌ைமை ) மாலை 3.33 மணியளவில் காலமானதாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அறிவித்தார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக கூறினார். பால் தாக்கரேவின் இறுதி தகனம்நாளை மாலை 3 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் பால் தாக்கரேவின் உடல் சிவாஜி பூங்காவில் அஞ்சலிக்கு வைக்கப்படும்.

கடந்த 1926ம் ஆண்டு பால் தாக்கரே பிறந்தார். கார்ட்டூன் வரைவதில் பால் தாக்கரே, பத்திரிகை ஒன்றில், கார்ட்டூனிஸ்டாக அறிமுகமாகி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியலில் ஈடுபட்டார். கடந்த 1966ம் ஆண்டு சிவசேனா கட்சி ஆரம்பித்த பின்னர் கட்சிக்கு சாம்னா பத்திரிகையை துவக்கினார். இதில் பல்வேறு கட்டுரைகள் மற்றும் தலையங்கங்களை பால் தாக்கரே எழுதி வந்தார். கடந்த 1995ம் ஆண்டு பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி ஆட்சியை பிடித்தது. அப்போது தாக்கரே அமைச்சர் பொறுப்பு ஏதும் ஏற்கவில்லை. பம்பாய் என்ற, அந்நகரின் பெயரை, மும்பா தேவி நினைவாக, மும்பை என, மாற்றியதில், தாக்கரேயின் பங்கு அதிகம்.தாக்கரேவுக்கு பிந்து தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் உத்தவ் தாக்கரே அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டு, தற்போது அவர் சிவசேனா கட்சியின் செயல் தலைவராக உள்ளார்.

பால் தாக்கரே காலமானதை தொடர்ந்து, சிவசேனா தொண்டர்கள் அமைதி காக்கும்படி, உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். பால் தாக்கரேவின் காலமானதை தொடர்ந்து மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை நகரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பா.ஜ., இரங்கல்: பால் தாக்கரே காலமானதற்கு பாரதிய ஜனதா கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.,வின் ஷா நவாஸ் ஹூசைன் கூறுகையில், பால் தாக்கரே புலி போல் வாழ்ந்தவர், அவர் இந்திய அரசியலில் முக்கிய தலைவர். இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் அவர் ஒருவர். அவரது மரணத்திற்கு பா.ஜ., இரங்கலை தெரிவித்து கொள்கிறது என கூறினார். பால் தாக்கரே காலமான‌து மிகுந்த மனவேதனை அளிப்பதாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். பால் தாக்கரே காலமானதை தொடர்ந்து ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பால் தாக்கரே காலமானதை தொடர்ந்து, எதிர்கட்சிக்கு பிரதமர் அளிக்க இருந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமலர்


தாக்ரே மரணம் ; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: போலீஸ் அட்வைஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாக்ரே மரணம் ; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: போலீஸ் அட்வைஸ் Empty Re: தாக்ரே மரணம் ; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: போலீஸ் அட்வைஸ்

Post by பிளேடு பக்கிரி Sun Nov 18, 2012 11:26 am

ஆத்மா சாந்தி அடையட்டும் சோகம்



தாக்ரே மரணம் ; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: போலீஸ் அட்வைஸ் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தாக்ரே மரணம் ; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: போலீஸ் அட்வைஸ் Empty Re: தாக்ரே மரணம் ; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: போலீஸ் அட்வைஸ்

Post by றினா Sun Nov 18, 2012 12:34 pm

அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தாக்ரே மரணம் ; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: போலீஸ் அட்வைஸ் Empty Re: தாக்ரே மரணம் ; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: போலீஸ் அட்வைஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை!
» காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்
» வீட்டை விட்டு வெளியேறினார் 274 கிலோ குண்டுப்பெண்
» கொடைக்கானலில் நித்தியானந்தா... ஹோட்டலை விட்டு வெளியேற போலீஸ் திடீர் தடை!
» சென்னையில் நிலநடுக்கம்... பயத்தில் வீட்டை விட்டு ஓடிய மக்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum