ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச்சொல் வேட்டை

+10
Kuzhali
T.N.Balasubramanian
ரா.ரா3275
யினியவன்
சிவா
அசுரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ஆரூரன்
றினா
சாமி
14 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி Sun Nov 18, 2012 7:39 am

First topic message reminder :

தமிழ்ச்சொல் வேட்டை - தொடர்பதிவு
ஒன்று)

புதுச் சொற்களை உருவாக்குவதற்கான சொல் வேட்டையில் ஈடுபடும் முன்னால், வாசகர்கள் ஒரு செய்தியை கவனத்தில் கொள்ளுதல் நலம். நீதிமன்றங்களில் சாட்சி விசாரணையின் போது குறியிடப்படும் பத்திரங்களை ஆங்கிலத்தில் எக்சிபிட்(exhibit) என்று சொல்வார்கள். இந்தச் சொல்லுக்கு சரியான மொழிபெயர்ப்பு "காட்சிக்கு வைக்கப்படுவது' என்பதே ஆகும்.

ஆனால், இந்தச் சொல்லை தமிழில் மொழிபெயர்த்த மொழியியல் வல்லுநர்கள் இதைச் "சான்றாவணம்' என்று மொழிபெயர்த்தார்கள். அதற்குக் காரணம், வழக்குகளில் காட்டப்படும் பத்திரங்களை "ஆவணம்' என்று சொல்லும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் இருந்ததுதான்.

இறைவன், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட போது, இறைவனிடம் சுந்தமூர்த்தி நாயனார் கேட்ட கேள்வி:
"ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்றைக் காட்டுக''
என்பதாகும். எனவே, சொல் வேட்டையில் ஈடுபடும்போது, இலக்கியச் சான்றுகளோடு நாம் புதுச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி முடியாதபோது, சொற்களின் வேர்களுக்குப் போய் (root of the word) புதுச் சொற்களை உருவாக்குவதில் தவறில்லை.

சில நேரங்களில், சில மொழிபெயர்ப்புகள் ஒரு காலத்தில் சரியானவையாகவும், பிற்காலத்தில் சரியற்றதாகவும் ஆகிவிட வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு ட்ரெயின் (train) என்கிற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும் போது நீராவி என்ஜினைக் கருத்தில் கொண்டு அது விடும் புகையை மையப்படுத்திப் "புகை வண்டி' என்று மொழிபெயர்த்தார்கள். ஆனால், இன்றைக்கு எந்த ரயில் வண்டியும் புகை விடுவதே இல்லை. எனவே, இனிமேலும் ரயில் வண்டியைப் புகை வண்டி என்று அழைப்பது பொருத்தமாகுமா என்பது தெரியவில்லை. சிலர் இதைத் "தொடர் வண்டி' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், "ட்ரெய்லர்' கூட தொடர் வண்டிதான் என்பதால் ரயிலைத் தொடர்வண்டி என்று அழைப்பது எங்ஙனம் சரியாக இருக்கும்?

"ஃபோபியா' (phobia) என்கிற ஆங்கிலச் சொல் உயரம் குறித்த அச்சம், இருள் குறித்த அச்சம், தனிமை குறித்த அச்சம், தண்ணீர் குறித்த அச்சம் போன்ற பல்வேறு வகையான அச்சங்களைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். ஆங்கிலச் சொல் அகராதிகளில் இந்தச் சொல்லுக்கு "அச்சம்' என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்தால், தமிழில் இந்தச் சொல்லை "அச்சம்' என்றே குறிப்பிடுகிறோம். ஆனால், "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு அச்சம், பயம், நடுக்கம் போன்ற சொற்களைத் தாண்டி வேறு ஒரு பொருள் இருக்கிறது. ஆனால், அதை உணர்த்தும் சரியான தமிழ்ச்சொல் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அடுத்த வாரத்திற்குள் உருவாக்கி வாசகர்கள் அனுப்பி வைக்கலாம்.

முன்பே கூறிய இக்கருத்துகளை மனதிலே கொண்டு, இந்த வாரம் "ஃபோபியா' என்கிற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை நாம் தேடுவோம்.

இனி, அடுத்த வாரம் "ஃபோபியா'வுக்குப் புதிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்த களிப்பில் இன்னொரு புதுச் சொல் வேட்டையில் இறங்குவோம்...

(தொடரும்) (நன்றி-தினமணி-நீதி அரசர் வி.இராமசுப்ரமணியன்)

இதுவரை வேட்டையாடிய சொற்கள்:
ஃபோபியா = வெருளி அல்லது வெருட்சி
அடிக்ட்' = மீளா வேட்கையன்
அடிக்ஷன் = மீளா வேட்கை
டென்சன் = கொதிப்பு
பாரநோய = மனப்பிறழ்வு
அப்ஜக்டிவ் – சப்ஜக்டிவ் = புறத்தாய்வு - அகத்தாய்வு
இன்புட்-அவுட்புட் = உள்ளீடு-வெளியீடு
அக்ரோனிம் = தொகுசொல்.
அப்ரிவியேஷன் = சொற்சுருக்கம்
பங்க்சுவேஷன் மார்க்ஸ் = நிறுத்தற் குறிகள்
அல்யூஷன் = மறை பொருள்
காமன் சென்ஸ் = இயல்பறிவு.
ஆஸ்ட்ரல் = விசும்புருவான' அல்லது "விசும்புரு


Last edited by சாமி on Sun Jan 27, 2013 8:17 am; edited 3 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by T.N.Balasubramanian Thu Nov 22, 2012 7:13 am

சிவா wrote:addict என்பதற்கான தனித் தமிழ் வார்த்தையை அடிமை மட்டுமே! ஆனால் இதைத் தனியாகக் கூறினால் பல பொருள் தரும் சொல்லாக இருக்கும்.

Drug addiction - போதைக்கு அடிமை!

அருமையிருக்கு அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி Sun Nov 25, 2012 7:46 am

மூன்று)
இந்த வாரச் சொல் வேட்டைக்குள் நுழைவதற்கு முன், ஒரு வாக்கு மூலத்தை வாசகர்களுக்கு நான் அளிக்க வேண்டும். நான் தமிழ் அறிஞன் அல்லன். ஆனால் தமிழ் ஆர்வலன். இந்த வேட்டையில் பங்கேற்கும் வாசகர்களும், படித்து மகிழும் அல்லது படித்துப் பார்க்கும் பலரும், மொழியியலில் என்னைவிட மிகப்பெரிய அறிஞர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். எனவே, இந்த வேட்டையில் தேர்ந்தெடுக்கப்படும் சொற்கள், என்னுடைய அல்லது தினமணி ஆசிரியருடைய இறுதித் தீர்ப்பல்ல. தீர்ப்பளிப்பதற்கு, இது நீதி மன்றமும் அல்ல. இதில் தேர்ந்தெடுக்கப்படும் சொற்களை நாங்கள் தமிழ்கூறும் நல்லுலகம் முன் பரிசீலனைக்கு வைக்கிறோம். அவர்களது தீர்ப்பிற்கு நாம் கட்டுப்படுவோம். இனி இந்தவார வேட்டைக்கு வருவோம்.

÷"அடிக்ட்' என்ற சொல்லை சென்ற வாரம் நாம் வேட்டைக்கு விட்டோம். பட்டுக்கோட்டையில் இருந்து பன்னீர்செல்வம் என்னும் வாசகர் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி "விடுதல் அறியா விருப்பினன்' என்ற சொற்றொடரையும், வேட்கை, கூடுதல் விருப்பம், மிகு விருப்பம் என்னும் சொற்களையும் மாற்றாகக் குறிப்பிட்டு விட்டு, "அடிக்ட்' என்ற சொல்லுக்குக் "கொடு வேட்கை'' என்னும் சொல்லும் பொருத்தமாக இருக்கும் என்று எழுதியிருக்கிறார்.

÷அம்பத்தூரிலிருந்து புலவர் உ.தேவதாசு, கள், கவறு (சூது), காமம் இவற்றுக்கு ஆட்பட்டு மீள முடியாமல் போகும் நிலையையே "அடிக்ட்' என்ற சொல் குறிப்பதானால் சிலப்பதிகாரம் கூறும் "விடுதல் அறியா விருப்பம்' அல்லது "வேட்கை' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும் உரைத்திருக்கிறார். கோவை கோவில்பாளையம் முனைவர் வே. குழந்தைசாமியும் விடுதல் அறியா விருப்பினன், மீளா வேட்கை, வேட்கை அடிமை, மீளா விருப்பினன், மீளா விருப்பு ஆகிய சொற்களை எழுதியுள்ளார்.

÷வில்லிவாக்கம் சோலை. கருப்பையா பித்து, பைத்தியம் ஆகிய சொற்களையும், உள்ளகரத்திலிருந்து வி.ந.ஸ்ரீதரன் "மீளான்' என்ற சொல்லையும், பட்டாபிராம் பாரதி நேசன் ""பண்பில் பழக்கம்', "மது மயக்கம்' என்ற சொற்களையும், திருவாரூர் தனபாலன், ""ஆட்படுதல்' என்ற சொல்லையும், காஞ்சிபுரம் முனைவர் அமுத.இளவழகன், ""விடுதல் அறியா விருப்பினன்', ""விடா விருப்பு', "விடா வேட்கை' என்னும் சொற்களையும், போளூர் ரகுபதி முழுகுதல், அனுபவித்தல், திளைத்தல், மகிழ்தல், துர்பழக்கம் என்னும் சொற்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

÷புலவர் அடியன் மணிவாசகன் திருவள்ளுவர், அக நிலையிலும், புற நிலையிலும் தீமை செய்து ஒழுகுதலை, படிறு + ஒழுக்கம் = படிற்றொழுக்கம் என்று சொல்வதையும், தேவாரத்தில் "மீளா அடிமை உனக்கே' (சுந்தரர்) என்று சொல்லப்படுவதையும் சுட்டிக்காட்டி, காட்சி நிலையில் திடீரென அறிவு மயங்குவது "மருட்கை' எனப்படும் எனவும், தொல்காப்பியத்தில் மருட்கை என்பது அறிவுக்குப் பொருந்தாத சிறுமைச் செயல் என்று குறிப்பிடப்படுவதால், அடிக்ட் என்ற சொல்லுக்கு, படிற்றொழுக்கம், "சிறுமைச் செயல்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்றும் எழுதியிருக்கிறார். பாடியில் இருந்து முனைவர் மு. அரங்கசுவாமி திருமூலரின் வாக்காகிய "வேட்கை விட்டார் நெஞ்சில்'' என்பதைக் குறிப்பிட்டு, வேட்கை என்னும் சொல் சரியாக இருக்கும் என்கிறார்.

÷போதை என்னும் சொல், "போதல்' என்னும் சொல்லில் இருந்து வருவதாலும், போதல் என்ற சொல்லுக்கு நன்கு பயிலுதல் என்று பொருள் உள்ளதாலும், ஆட்பட்ட மனம், தீமையைப் பழகுவதால், அடிக்ட் என்ற சொல்லுக்கு "தீயொழுழுக்கம்' என்பதே பொருத்தமான சொல்லாக இருக்கும் என்றும் ""நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்'' என்ற குறளைச் சுட்டிக் காட்டி, புதுச்சேரி தெ.முருகசாமி எழுதியுள்ளார்.

÷நாமக்கல் கா. சிவராஜ், அடிமை உணர்ச்சி தன்னுணர்ச்சியால் வருவதால் "அடிக்ட்' என்ற சொல்லுக்குத் "தன்னடிமை' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். அதற்குச் சான்றாக பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வரும் "தன்னை இழந்து அடிமையான பின்னர் தாரம் ஏது வீடு ஏது?' என்ற பாடலைச் சுட்டிக் காட்டுகிறார்.

÷திருச்சியிலிருந்து தி.அன்பழகன், தீய பழக்கங்களுக்கு மனிதன் அடிமையாவது பலவீனம் என்பதால், "அடிக்ட்' என்ற சொல்லுக்கு "பழக்கவீனம்' அல்லது "மாறாப்பழக்கம்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்கிறார். ஜெயகிருஷ்ணன் என்பவர், "வேட்கை' என்றும், கே.ஆர்.சுரேந்திரன் "விடாப் பழக்கம்'' பொருத்தமாக இருக்கும் என்றும் எழுதி இருக்கிறார்கள்.

÷சேக்கிழார் சிவநெறிக் கழகத்திலிருந்து சைவப் புலவர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவுள்ள மனிதன் தகாத செயல்களைச் செய்யும் பொழுது அவனை "அறிவு இல்லாதவன்', "மடையன்' என்று அழைப்பதால், "அடிக்ஷன்' என்ற சொல்லுக்கு "அறிமடம்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும், அதே சமயம் மனம் அறிவுக்குக் கட்டுப்படாமல் இருப்பதால், "மனக்கோட்டம்' அல்லது "ஒüவியம்' என்ற சொற்களாலும் இதைக் குறிக்கலாம் என்கிறார். "கோட்டி' என்ற சொல் ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

÷இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது "அடிக்ட்' என்ற சொல்லுக்கு "மீளா வேட்கையன்' என்ற சொல்லும், "அடிக்ஷன்' என்ற சொல்லுக்கு "மீளா வேட்கை' என்பதும் பொருத்தமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. "மீளா அடிமை' என்ற சொல்கூட பொருத்தமாக இருக்கலாம். ஆனால், இறைவனுக்கு ஆட்பட்டவர்களை அப்படிக் குறிப்பிடுவதால் "அடிக்ட்' என்ற சொல்லுக்கு அதே சொல்லை பயன்படுத்துவதை மனம் ஒப்ப மறுக்கிறது. "விடுதல் அறியா விருப்பினன்'' என்பது பொருத்தமாக இருந்தாலும், அது நீண்ட தொடராக இருக்கும் காரணத்தால் அதைவிட "மீளா வேட்கை' என்ற சொல்லே பொருத்தம் என்று தோன்றுகிறது.

அடுத்த சொல் வேட்டை
"டென்ஷன்'. "பதட்டம், பதற்றம் என்கிற சொற்கள் ஏற்கெனவே இருந்தாலும், ஒரு மனிதனின் உடல் நிலையில் ஏற்படும் "ஹைபர் டென்ஷன்' "இரத்தக் கொதிப்பு' என்று கூறப்படுகிறது. மனோ நிலையில் ஏற்படும் டென்ஷன் சில சமயம் "நிலைகொள்ளாமை' என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிராமத்திலோ, ஒரு சமூகத்திலோ ஏற்படும் பதட்டமும் டென்ஷன் என்றே அழைக்கப்படுகிறது. எது சரியாக இருக்கும்?

அடுத்த வார சொல் வேட்டைக்கான சொல் - "டென்ஷன்'

வேட்டை தொடரும்...


Last edited by சாமி on Thu Jan 03, 2013 10:49 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 25, 2012 8:42 am

டென்ஷன் என்ற சொல்லுக்கு: மழுங்கல் (எந்த செயலிலும் ஈடுபட முடியாத நிலை) அல்லது அதிர்நிலை (ஒரு அதிர்வுற்ற நிலை ,
நாடி நரம்புகளில் ஒரு விதமான பதற்ற நிலை)


கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by ஆரூரன் Tue Nov 27, 2012 12:06 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:ஆங்கிலத்தில் 'அடிக்ட்' என்ற சொல்லுக்கு இந்த வார்த்தை : ' விடுதலையறியா ' என்ற வார்த்தையை உபயோகிக்கலாம்.

சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவியிடத்தில் 'விடுதலையறியா விருப்பினனாக' இன்ருந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார்.

மகிழ்ச்சி நம்ம கா.ந.க ஐயா சொன்னதை நிறைய பேர் சொல்லி இருக்காங்க !!!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி Sun Dec 02, 2012 8:38 am

நான்கு)
அனேகமாக தேர்வுக்கும், தேர்வு முடிவுக்கும் காத்திருக்கும் பிள்ளைகளைப் போல் நமது வாசகர்களும் ஞாயிறு அன்று உதயமாகும் தமிழ் மணிக்காக எழுதுகோலோடும், ஏட்டோடும் காத்திருப்பார்கள் போல் தெரிகிறது. அந்த அளவிற்கு இலக்கியச் சான்றுகளோடு அளப்பரிய சொற்செல்வங்களை வாசகர்கள் கொண்டுவந்து கொட்டுகிறார்கள்.

கோவில்பாளையம் முனைவர் வே.குழந்தைசாமி, ""பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை'' என்ற திருவாசகக் கூற்றையும், ""மனம் பதைப்பு அறல் வேண்டும்'' என்ற திருப்புகழ் வரியையும் சுட்டிக்காட்டி "பதைப்பு' அல்லது "பதற்றம்' என்பது "டென்சன்' என்ற சொல்லுக்குச் சரியான சொல்லாக இருக்கலாம் என்கிறார். "ஹைப்பர் டென்சன்' என்ற சொல்லுக்குக் கம்ப இராமாயணத்தில் பயன்படுத்தப்படும் மனக்கொதிப்பு, என்ற சொல்லைச் சுட்டிக் காட்டுகிறார்.

தஞ்சாவூரிலிருந்து பா.ஜம்புலிங்கம், இரத்தத்தில் ஏற்படும் அழுத்தம் இரத்த அழுத்தம் (ஹைப்பர் டென்சன்) என்றும், சித்தத்தில் ஏற்படும் அழுத்தம் டென்சன் என்று குறிப்பிடப்படுவதால், "மன அழுத்தம்' அல்லது "மன இறுக்கம்' என்ற சொல் சரியாக இருக்கும் என எழுதியிருக்கிறார். அதே கருத்தை பொன்னமராவதியிலிருந்து அ.கருப்பையாவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பவானிசாகரிலிருந்து பெரு.தமிழ்வேந்தன், "டென்சன்' என்ற சொல்லுக்கு உள்ளழுத்தம், உட்படு சினம், உள்ளழற்சி, உள்ளரவம், உள்ளிடல் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

சென்னையிலிருந்து ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் என்பவர், உணர்ச்சி மிகுதியின் காரணமாக மன நெருக்கடிக்கு ஆளாவதால் "மிகு உணர்ச்சி' என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார்.

சென்னை கோட்டூரிலிருந்து ஜெயகிருஷ்ணன் என்பவர், "டென்சன்' என்ற சொல்லை "அழுத்தம்' என்று சொல்வது சரியாக இல்லை என்றும், "இறுக்கம்' அல்லது "மன இறுக்கம்' என்பதே முறையானதாக இருக்கும் என்கிறார்.

திருச்சியிலிருந்து தி.அன்பழகன், "டென்சன்' என்ற சொல்லுக்கு "கொந்தளிப்பு' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும், தமிழ் இலக்கணத்தின் வழி "கடல் கொந்தளிப்பு' என்பது இயல்பு வழக்காகும் என்றும், "ஊர் கொந்தளிப்பு' என்பது தகுதி வழக்காகும் என்றும் குறிப்பிடுகிறார்.

சென்னை வில்லிவாக்கத்திலிருந்து சோலை. கருப்பையா என்பவர், ஒரு கிராமத்திலோ அல்லது சமூகத்திலோ ஏற்படும் டென்சன் "பதட்டம்' என்ற சொல்லாலும், மனோநிலையில் ஏற்படும் டென்சன் "படபடப்பு' என்ற சொல்லாலும் உளவியல் சார்ந்த டென்சன் "மன இறுக்கம், மன அழுத்தம், கொந்தளிப்பு' ஆகிய சொற்களாலும் அழைக்கப்பட்டு ஏற்கனவே புழக்கத்திற்கு வந்துவிட்ட காரணத்தால், நாம் டென்சன் என்ற சொல்லுக்கு ஓர் ஒற்றைச் சொல்லைத் தேடி அலையத் தேவையில்லை என்கிறார்.

புலவர் அடியன்மணிவாசகன், டென்சன் என்ற சொல்லுக்கு அகரமுதலியில் "மனத்தாக்க அழுத்த உணர்வு' என்றும், "உள அழுத்த அலைவு' என்றும் பல பொருள்கள் குறிப்பிடப் பட்டிருப்பதாகவும், மனச்சோர்வு, மனக்களைப்பு, மனஉளைச்சல், மனவலி, மனப்போராட்டம் ஆகிய யாவும் மனதிற்கு சுமையாகி விடுவதால் டென்சன் என்ற சொல்லுக்கு "மனச்சுமை' என்ற பெயர் கொடுக்கலாம் என்கிறார். ""களைப்பின் வாராக் கையறவு உளவோ'' என்று பட்டினத்தார் கூறுவதால் "கையறவு' என்றும் சொல்லும் மனச்சுமை அழுத்தத்திற்குப் பொருந்தும் என்று சொல்லிவிட்டு, இறுதியில் மனச்சுமை, கையறவு, மன அழுத்தம், அகப்பிதுங்கல், அகவேக்காடு, பொறுக்க இயலாமை மனவுறுத்தம், மனச்செறுக்கம் ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

கல்லூரிக் கல்வி மேனாள் இணை இயக்குநர் பேராசிரியர் திருக்குறள் க.பாஸ்கரன், அகரமுதலியிலிருந்து "இழுவிசை' மற்றும் "நெருக்கடி நிலை' ஆகிய சொற்களைச் சுட்டிக்காட்டி, அமைதியின்மை அல்லது இதய இறுக்கம் என்கிற சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

அம்பத்தூரிலிருந்து புலவர் உ.தேவதாசு, பொதுவாக டென்சன் என்ற சொல்லுக்கு மறுகுதல், அலமரல், பதைபதைப்பு, நிலைதிரிதல், ஊசலாட்டம் எனப் பல சொற்களை இணையாகக் கொள்ளலாம் என்றாலும், இத்தகைய நிலை தடுமாறலுக்கு அவரவர் மனநிலை காரணமாக அமைவதால், "மன உளைச்சல்' என்ற சொல் பொருந்தும் என்கிறார். அதற்குச் சான்றாக கம்ப இராமாயணத்திலிருந்து சீதையின் மனநிலையைக் குறிக்கும் ஒரு பாடலையும், இராமனின் மனநிலையைக் குறிக்கும் ஒரு பாடலையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

நங்கநல்லூரிலிருந்து டி.வி. கிருஷ்ணசாமி, மன இறுக்கம் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். ச. இராசதுரை "கொடுநோய்' என்பது பொருந்தும் என்று எழுதுகிறார்.

கிழவன் ஏரியிலிருந்து செ.சத்தியசீலன், திருவாசகத்தில் திருச்சதகப் பகுதியில் வருகின்ற ""மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து'' என்று வருவதை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார். எனவே, டென்சன் நேரத்தில் இருக்கும் மனநிலையைக் குறிக்க "பெருவிதிர்ப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறார்.

புதுச்சேரியிலிருந்து நா.கிருஷ்ணவேலு, டென்சன் என்ற சொல்லுக்கு "கூடுதல் சக்தி' மற்றும் "வலியவிசை' (வலிமையான விசை) என்ற சொற்களையும், புதுச்சேரி தெ.முருகசாமி, டென்சன் என்ற சொல்லுக்கு "பரபரப்பு' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார்கள்.

பாடியிலிருந்து முனைவர் மு.அரங்கசுவாமி, டென்சன் என்ற சொல்லுக்கு தனிமனித அளவில் நிலையழிதல், தடுமாறுதல், மனக்கொதிப்பு, பதறுதல் ஆகிய சொற்களையும் சமூக அளவில் பதற்றம், இறுக்கம், கொந்தளிப்பு ஆகிய சொற்களையும் பயன்படுத்தலாம் என்று கூறி, சேக்கிழார் பெருமானுடைய அப்பூதியடிகள் நாயனார் புராணத்திலிருந்தும், திருவாசகத்திலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

ஆலந்தூர் புலவர் இரா. இராமமூர்த்தி, தொல்காப்பியம் மற்றும் நற்றிணை ஆகியவற்றிலிருந்து " கையறவு' என்ற சொல்லையும், சிவப்பிரகாசர் அருளிய நால்வர் நான்மணிமாலையிலிருந்து "விதிர்விதிர்ப்பு' என்ற சொல்லையும் சிலம்பு மற்றும் புறநானூற்றிலிருந்து "அடர்' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார். அவர் எழுதிய கடிதத்தில் ஒரு அற்புதமான புதுச்சொல்லை நற்றிணையிலிருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறார். அந்தச் சொல், "அஞர்' என்பதாகும். கடற்பயணத்தில் கலம் உடைந்து நீரில் வீழ்ந்தோர் மரப்பலகையைப் பற்றிக் கொள்வதை ""பலர் கொள் பலகைபோல வாங்க வாங்க நின்ற ஊங்கு அஞர் நிலையே'' என்று நற்றிணை விளக்குவதையும், புறநானூற்றில் 238-ஆவது பாடல் ""ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு'' என்று கூறியதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். இறுதியில் டென்சன் என்ற சொல்லுக்கு மருட்கை, ஆரஞர், விதுப்புறுதல், பதுறுதல், படர்மெலிதல் என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார். இந்தக் கடிதத்தில் நம்மை மகிழ்விப்பது தற்போது பேச்சுவழக்கில் இல்லாத "அஞர்' மற்றும் "ஆரஞர்' என்னும் சொற்களாகும்.

இவையெல்லாம் பார்க்கும் போது, டென்சன் என்ற சொல்லுக்கு "கொதிப்பு' என்ற சொல் சரியாக வரும்போல் தெரிகிறது. காரணம், இரத்தத்தில் வரும் கொதிப்பு இரத்தக் கொதிப்பாகவும், சித்தத்தில் ஏற்படும் கொதிப்பு மனக்கொதிப்பாகவும் வழக்கத்திலும் புழக்கத்திலும் வந்துவிட்டதாகப் பலர் எழுதியிருக்கிறார்கள்.

அடுத்த வார சொல் வேட்டைக்கான சொல் - 'Paranoia' பாரநோய


Last edited by சாமி on Thu Jan 03, 2013 10:50 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by Kuzhali Sat Dec 08, 2012 1:49 pm

இந்த வாரம் இந்த வார்த்தைக்கு யாரும் விடை கண்டுபிடிக்க முயலவில்லையா?
Kuzhali
Kuzhali
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி Sun Dec 09, 2012 9:09 pm

ஐந்து)
எடுத்த எடுப்பில் நான் இரு செய்திகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒன்று, நான் கனவிலும் எதிர்பார்க்காத அளவில், இந்தச் சொல் வேட்டை எங்கெங்கோ தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் குறியீடாக இந்த வாரம் புழல் சிறையிலிருந்து ஒரு சிறை வாசி (அவரைக் கைதி என்று சொல்ல மனம் ஒப்பவில்லை) நான்கு சொற்களை எழுதி அனுப்பியிருக்கிறார். நான் நெகிழ்ந்து போனேன். இரண்டாவது, சொல் வேட்டையில் பங்கேற்கும் வாசகர்கள் ஆங்காங்கே அவரவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து வட்டார வழக்காக இருந்து, இன்று வழக்கொழிந்து போன அல்லது போய்க்கொண்டிருக்கும், சொற்களையும் தேடிப்பிடிக்கலாம். உண்மையில் சொல்லப்போனால், வழக்குச் சொற்களுக்கு தமிழ் மொழியில் தனி இடம் உண்டு.

÷கம்பன் தன் காப்பியத்தில் முதலில் பாடிய பாட்டு ""குமுதனிட்ட குலவரைக் கூத்தரில்'' என்றும், அப்பாட்டில் வரும் "துமி' என்ற ஒரு வழக்குச் சொல் ஒரு சர்ச்சையைக் கிளப்பியது என்றும், கலைவாணியின் அருளால் அந்த சர்ச்சை முடிவுற்றது என்றும் ஒரு கதை உண்டு. எனவே, வாசகர்கள் பண்டைய இலக்கியங்களில் வேட்டை நடத்தும்போதே, கூடவே வழக்குச் சொற்களைத் தேடுவதும் நலம் பயக்கும் என்று கருதுகிறேன். இனி இந்த வார வேட்டைக்கு வருவோம்.

÷நான் மேலே கூறியது போல் புழல் சிறையிலிருந்து தே.புதுராஜா, தனது கடிதத்தில் "பாரநோய' என்ற சொல்லுக்கு தன்னிலை அறியாக் குறைபாடு, அவ நம்பிக்கை, தொடர்புத் திறன் குறைபாடு, வேண்டா பயம் குறைபாடு என்னும் நான்கு சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

÷சென்னை சேத்துப்பட்டிலிருந்து மு.கேசவராமன், "பாரநோய' என்ற சொல்லுக்கு மன மாயை, கற்பனை, பொய்த் தோற்றம், கற்பனை நினைப்பு, கானல், எதிர்மறை ஏற்பு, அச்சம், பீதி, மன மயக்கம் ஆகிய சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

÷கிழவன் ஏரியிலிருந்து புலவர் செ.சத்தியசீலன், திருக்குறளைச் சான்றாகக் காட்டி "பாரநோய' என்ற சொல்லுக்கு "மிகை அச்சம்' என்பது பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

÷நங்கநல்லூர் டி.வி. கிருஷ்ணசாமி, "மனப்பிரமை' என்ற சொல்லையும், புதுச்சேரி தே. முருகசாமி, வீண் குழப்பம், தற்சார்பின்மையுடன் கலங்கி மருகுவது ஆகிய சொற்களையும் எடுத்துரைத்துள்ளார்கள்.

÷அண்ணாநகர் ஆனந்தக்கிருஷ்ணன், மனப்பிறழ்வு, மனச்சிதைவு ஆகிய சொற்களையும், திருப்பத்தூர் புலவர் விமலாநந்தன், "கற்பனையான அச்சம்' அல்லது "புதிரான அச்சம்' என்ற சொற்களையும் எழுதியிருக்கிறார்கள்.

பாடியிலிருந்து மு.அரங்கசுவாமி, தமிழ் லெக்சிகன்-இல் "பாரநோய' என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்றும், ""மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'' என்ற பழமொழியை அடியொற்றி பாரநோய என்ற சொல்லுக்கு "மருள்' அல்லது "மருளி' சரியான தமிழ்ச் சொல்லாக அமையும் என்றும் கூறுகிறார்.

÷வில்லிவாக்கம் சோலை.கருப்பையா, கானல் கற்பனை பீதி, கானல் உணர்வு அச்சம் அல்லது கற்பிதவாதம் என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

÷புலவர் அடியன் மணிவாசகன், "பாரநோய' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியிலிருந்து "அறிவுப்பிறழ்ச்சி' அல்லது "தருக்கியல்', "சித்தப்பிரமை' ஆகிய சொற்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், நல்ல மனநலக் குறைவினால் ஏற்படும் நோயாக இது இருப்பதால் "மனநோய்' என்று கூறுவதே மருத்துவத்தை நாடும் அறிவு திரிபுக்கும், மூளை கலக்கத்திற்கும் செயல் மாறாட்டத்திற்கும் பொருந்தி வரும் என்றும் உரைத்திருக்கிறார்.

÷திருச்சி தி.அன்பழகன், தெளிவின்மையைக் குறிக்கும் தமிழ்ச்சொல் "ஆசு' என்பதால், "பாரநோய' என்ற மனநோய் அல்லது மனக்கோளாறை "ஆசுள்ளம்' என்று அழைக்கலாம் என்கிறார்.

÷கோயம்புத்தூர் கோவில்பாளையம் முனைவர் வே.குழந்தைசாமி, திருவருட்பாவில் வள்ளலார் பல இடங்களில் "மருள்' என்ற சொல்லை (மருளுடைய மனப்பேதை நாயினேன்) குறிப்பதாலும், திருவாசகத்தில் மணிவாசகப் பெருமானும் ""மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி'' என்றும், நம்மாழ்வார் ""மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே'' என்றும் கூறுவதால், "மருள்' என்ற சொல் சரியாக இருக்கலாம் என்கிறார். மேலும், திருவருட்பாவில் "மருட்பகை தவிர்த்து' என்ற சொல்லால் மருளையும், பகை அச்சத்தையும் வள்ளலார் சுட்டிக் காட்டுவதால், மருட்பகை அல்லது மருள் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

÷ஆலந்தூரிலிருந்து புலவர் இரா.இராமமூர்த்தி, தியங்குதல்,

வெருவருதல், திகைத்தல் ஆகிய சொற்களையும், வி.ந.ஸ்ரீதரன், மன மயக்கம் அல்லது மதி மயக்கம் என்ற சொற்களையும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இவற்றைப் பார்க்கும்போது சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியில் குறிப்பிட்டிருக்கும் "தருக்கியல்', "சித்தப்பிரமை' என்பது பொருத்தமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதை விட,

"மனப்பிறழ்வு என்பது பொருத்தமாக இருக்கும்.

அடுத்த வார சொல் : OBJECTIVE - SUBJECTIVE (அப்ஜெக்டிவ் - சப்ஜெக்டிவ்)

(வேட்டை தொடரும்)



Last edited by சாமி on Thu Jan 03, 2013 10:51 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி Sun Dec 16, 2012 10:39 pm

ஆறு)
சொல் விளையாட்டு ஒரு சுவையான விளையாட்டே. ஒரே சொல்லுக்கு பல்வேறு பொருள்களும் ஒரே பொருளைக் குறிக்கும் பல்வேறு சொற்களும் நமது அன்னைத் தமிழில் இருப்பது போலவே ஆங்கிலத்திலும் உண்டு. "ஆப்ஜக்ட்' என்ற சொல் ஒரு பொருளையும் குறிக்கலாம். ஒரு இலக்கையும் குறிக்கலாம். அதே போல் "சப்ஜக்ட்' என்பது ஒரு பொருளை அறியும் அல்லது உணரும் ஒன்றையும் குறிக்கலாம். அதே சமயம் ஒரு கூட்டத்திலோ, ஓர் அவையிலோ, விவாதிக்கப்படும் பொருளையும் குறிக்கலாம். எனவே சில சமயங்களில் இவ்விரு சொற்களுமே ஒரே பொருளில் பயன்படுத்தப்படலாம். சில நேரங்களில் ஒன்றுக்கொன்று அப்பாற்பட்ட (எதிர்மறையாகக் கூட) பயன்படுத்தப்படலாம்.

ஆனால் இவ்விரு சொற்களும் அப்ஜக்டிவ்-சப்ஜக்டிவ் என்ற குறிப்பிட்ட வரையறையில் பயன்படுத்தப்படும் போது, இலக்கு, பொருள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மனம்சார்ந்த குறியீடுகளாக இச்சொற்கள் மாறிவிடுகின்றன. இந்த நுணுக்கத்தின் அடிப்படையில் இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

÷புலவர் அடியன் மணிவாசகன் சப்ஜக்டிவ் என்பதை வினைமுதல் என்றும், அப்ஜக்டிவ் என்பதை "எதிர்மறை பொருள்' என்றும் சென்னை பல்கலைகழக அகரமுதலியை அடிப்படையாக வைத்தும், ஆனால் அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டும் எழுதியிருக்கிறார்.

÷வேலூரிலிருந்து புலவர் அரு.சுந்தரேசன், சப்ஜக்டிவ் என்பது "மனதில் தூண்டுதல் இல்லாமல் எழுகிற எண்ணம்' என்றும், அப்ஜக்டிவ் என்பது "நோக்கம், இலக்கு' என்கிற பொருளிலேயும் குறிக்கப்படுவதால் இவ்விரு சொற்களையும் எண்ணம், கருத்து, நோக்கம், இலக்கு என்ற சொற்களால் குறிப்பிடலாம் என்கிறார்.

÷கோவையிலிருந்து வழக்குரைஞர் நந்திவர்மன், அப்ஜக்டிவ் என்ற சொல்லுக்கு அகரமுதலியில் "புறவயமான குறிக்கோள்' மற்றும் "நோக்கம்' என்ற சொற்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், "நோக்கம்' என்ற சொல் சரியாக இருக்கலாம் என்று சிவபுராணத்திலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார். சப்ஜக்டிவ் என்ற சொல்லுக்கு "அக எண்ணம் சார்ந்த' என்ற பொருளை எடுத்தியம்பியுள்ளார்.

÷கடலுர் சத்தியமூர்த்தி, அப்ஜக்டிவ் என்ற சொல்லை "குறிக்கோள்' என்று சொல்லலாம் என்றும், தனிமனித விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிலையில் அச்சொல்லை பயன்படுத்தும் போது முனிவு, கனிவு இன்றி, என்று கூறலாம் என்று சொல்லிவிட்டு அதே போல் சப்ஜக்டிவ் என்பது தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு ஏற்படும் காரணத்தால் அதை "விழைவு வழி' என்று குறிப்பிடலாம் என்றும் எழுதியுள்ளார்.

÷கோவை கோவில்பாளையத்திலிருந்து முனைவர் வே.குழந்தைசாமி, அப்ஜக்டிவ் என்பதை "ஒருதலையன்மை' அல்லது "கோடாத சிந்தை' என்றும், சப்ஜக்டிவ் என்பதை "ஒருதலைச்சிந்தை' அல்லது "மனக்கோட்டம்' என்றும் அழைக்கலாம் என்கிறார்.

÷ஆலந்தூர் புலவர் இரா.ராமமூர்த்தி, அகம், புறம் இந்த இரண்டின் வெளிப்பாடே அனைத்தும் என்பதனால் சப்ஜக்டிவ் என்பதை "அகவயம்' என்றும், அப்ஜக்டிவ் என்பதை "புறவயம்' என்றும் குறிக்கலாம் என்றும் இது அறிவியலுக்கும், அருளியலுக்கும், காதலுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடுகிறார்.

÷திருச்சியிலிருந்து தீ.அன்பழகன், சப்ஜக்டிவ் என்பதை "தன்முனைப்பு' என்றும், அப்ஜக்டிவ் என்பதை "தன்மிதப்பு' என்றும் கூறலாம் என்கிறார்.

÷திருப்பத்தூர் புலவர் ச.மு.விமலாநந்தன், அப்ஜக்டிவ் என்பதை "பயனுறு நோக்கம்' என்றும், சப்ஜக்டிவ் என்பதை "தானாக மனதில் எழுகிற' என்றும் குறிப்பிடலாம் என்கிறார். ஆனால், இவை அனைத்தும் மிகச் சரியான சொற்களாகத் தெரியவில்லை.

÷ஆங்கில அகரமுதலிகள் அப்ஜக்டிவ் என்ற சொல்லை சாதாரண எண்ணங்கள், உணர்வுகளிலிருந்து மாறுபட்டு புறப்பொருள்களை ஒரு சரியான துலாக்கோலில் இட்டு எடைபோடுவது என்று குறிப்பிடுகின்றன. சப்ஜக்டிவ் என்ற சொல்லை ஆங்கில அகரமுதலிகள் மனதில் உதிக்கின்ற அல்லது எண்ணுபவரின் எண்ண ஓட்டத்தைச் சார்ந்த ஒன்றாகக் குறிக்கின்றன. ஆக, தான் என்ன நினைக்கிறோம் என்பதை ஒதுக்கிவிட்டு, அறிவியலின்பாற்பட்டு ஒரு செய்தியையோ, ஒரு நிகழ்வையோ, ஒரு நபரையோ எடை போடுவதை அப்ஜக்டிவ் என்றும்; தான் கொண்ட கொள்கை அல்லது முடிவு அல்லது கருத்துகளின் அடிப்படையிலோ அல்லது அறிவியல் சார்பில்லாமலோ எடைபோடும் முயற்சியை சப்ஜக்டிவ் என்றோ சொல்லலாம்.

÷அந்த வகையில் பார்க்கும் போது வழக்குரைஞர் சேலம் அ.அருள்மொழி தொலைபேசியில் என்னிடம் "அகக்காரணிகளைக் கொண்டு ஒன்றை ஆராய அல்லது எடைபோடப் புகுங்கால், அதை "சப்ஜக்டிவ்' என்று சொல்லலாம் என்றும், புறக்காரணிகளைக் கொண்டு ஆராயும் அல்லது எடைபோடும் முயற்சியை "அப்ஜக்டிவ்' என்றும் சொல்லாமே' என்றார். அந்த வகையில் பார்க்கும்போது, "அப்ஜக்டிவ் - சப்ஜக்டிவ்' என்ற சொற்களுக்கு "புறத்தாய்வு - அகத்தாய்வு' என்றும் சொல்லலாம் என்று கருதுகிறேன்.

"அப்ஜக்டிவ் - சப்ஜக்டிவ்' என்ற சொற்களுக்கான வாசகர்களின் தேர்ந்த முடிவு புறத்தாய்வு - அகத்தாய்வு

-----------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த வார சொல் : INPUT - OUTPUT (இன்புட்-அவுட்புட்)

(வேட்டை தொடரும்)


Last edited by சாமி on Thu Jan 03, 2013 10:51 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி Wed Dec 26, 2012 12:31 pm

ஏழு)
கடந்த ஆறு வாரமாக நடக்கும் சொல் வேட்டை, பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று, எங்கெங்கோ தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் குடத்தில் இட்ட விளக்கு போல், முகவரி தெரியாமல் தங்களை ஒடுக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே. சொல் வேட்டையின் மூலம் புதுச்சொற்களைப் போலவே, அவ்வறிஞர்களும் வெளிக்கொணரப் பட்டால், அது நமக்கு மிகப் பெரிய மகிழ்வைத் தரும். எனவே, சொல் வேட்டையை வாரந்தோறும் படித்து மகிழ்ந்த அல்லது படித்த பின் மாற்றுக் கருத்து கொண்ட அனைவரும், தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய ஒரு மேடையாகவோ, மன்றமாகவோ இத்தொடரைப் பயன்படுத்திக் கொண்டால், அது அவர்கள் செய்யும் மிகப் பெரிய தொண்டாக அமையும். ஆகவே, வாரந்தோறும் தொடர்ந்து நம்மோடு களத்தில் இறங்கும் வாசகர்களைப் போலவே, இன்னும் பலரும் நம்மோடு பயணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு, இந்தவார வேட்டைக்கு வருவோம்.

ஆங்கிலச்சொல் அகராதிகளின் படி, "இன்புட்' என்ற சொல் இரு சொற்களின் கூட்டுச் சேர்க்கை ஆகும். எனவே, அச்சொல் உள்ளே செலுத்தப்படும் அல்லது கொடுக்கப்படும் பொருளையும் குறிக்கலாம் அல்லது கொடுப்பதான செய்கையையும் குறிக்கலாம். இவை தவிர, ஒருவர் மற்றவர்க்கு வழங்கும் கருத்துகளையும், ஆலோசனைகளையும், செய்திகளையும் கூட அச்சொல்லால் குறிக்கலாம். அதேபோல் "அவுட்புட்' என்ற சொல்லும் இரு சொற்களின் சேர்க்கையே. அச்சொல்லும் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் பொருளையோ, அதன் அளவையோ குறிக்கலாம், வெளியேற்றுவதான செய்கையையும் குறிக்கலாம். கணினி மயமாகிவிட்ட இவ்வுலகில், அச்சொல் செய்தித் தொகுப்புகளின் பரிமாற்றத்தையும் குறிக்கலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

தாராபுரத்திலிருந்து பல் மருத்துவர் கந்தவேள், "உட்படுதல் - வெளிப்படுத்துதல் அல்லது உள்ளாக்குதல் - வெளியிடுதல்' என்னும் சொற்களை எழுதியிருக்கிறார். காஞ்சிபுரத்திலிருந்து டி.சிவா, இன்புட்-அவுட்புட் சொற்களை மருத்துவத்தோடு பொருத்திப் பார்த்து "இன்புட்' என்பதற்கு "அகஞ்சேரல்' அல்லது "உள்வாங்கல்' என்றும், "அவுட்புட்' என்பதற்கு "புறந்தள்ளல்' அல்லது "வெளியேற்றல்' என்றும் குறிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.

சென்னை உள்ளகரத்திலிருந்து வி.ந.ஸ்ரீதரன், "உள்ளீர்ப்பு, வெளிக்கொணர்வு' என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார். புலவர் அடியன் மணிவாசகன், "இன்புட்' என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படும் காரணத்தால், "அகநிகழ்வு' என்று கூறலாம் என்றும், அதே போல் "அவுட்புட்' என்பதை "புறநிகழ்வு' என்று குறிப்பிடலாம் என்றும் சொல்கிறார்.

வேலூரிலிருந்து புலவர் அரு.சுந்தரேசன், பொருளியல் மற்றும் வணிகத்தின் அடிப்படையில் "முதலீடு-வருவாய்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தலாம் என்கிறார். பேராசிரியர் க.பாஸ்கரன், "அகபங்களிப்பு-புறவிளைவு' என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

ஆலந்தூர் புலவர் இரா.இராமமூர்த்தி, இன்புட், அவுட்புட் என்னும் சொற்கள் அறிவியல், மின்சாரம், கணினி சார்ந்த சொற்களாக இருப்பதால், இவற்றிற்கு "ஆகாறு - போகாறு, உள்ளீடு - வெளியீடு, உள்ளிறக்கம் - வெளியேற்றம், பெறுதல் - வழங்குதல், தரவு - விளைவு' என்னும் பல்வேறு சொற்களைக் காட்டுகிறார்.

அண்ணா நகரிலிருந்து திரு.ஆனந்தகிருஷ்ணன், உள்ளீடு மற்றும் வெளியீடு என்பவை எல்லோராலும் அறியப்பட்ட சொற்களாக இருப்பதாலும், கருவிகள் மற்றும் இயந்திரங்களின் உற்பத்தியிலும், தொழில்துறையிலும், புழக்கத்தில் இருப்பதாலும் இச்சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

திருச்சி தி.அன்பழகன், தொழில்துறை சார்ந்தும், கணினி சார்ந்தும் இச்சொற்களுக்கு இணைச்சொற்களைக் காண வேண்டுமென்றும், அதனால் இன்புட்-அவுட்புட் என்பதை "உள்ளுட்டம்-வெளிவாட்டம்' என்று அழைக்கலாம் என்றும் கூறுகிறார்.

புதுச்சேரி தே.முருகசாமி, சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லன் சிலம்பை ஆய்ந்த நிலையைக் கருதி இன்புட்-அவுட்புட் ஆகிய சொற்களுக்கு "அகவேலைப்பாடு, புறவேலைப்பாடு' என்பவை பொருத்தமாகும் என்கிறார். கடலூர் என்.ஆர்.சத்தியமூர்த்தி, "இடுவன-தருவன' என்ற சொற்களைத் தந்திருக்கிறார்.

அச்சொற்களுள் "இடுவன-தருவன' என்ற சொற்கள் பொருள் நயமும், ஓசை நயமும் மிக்கவையாக அமைந்திருந்தாலும், அவை "இடுகின்ற-தருகின்ற' பொருளைக் குறிக்குமேயன்றி, "இடுகின்ற-தருகின்ற' செயல்களைக் குறிக்குமா என்பது ஐயமாக இருக்கிறது. தரவு, விளைவு என்ற சொற்கள் கற்றோர் மனதைக் கவரும் வகையில் இருந்தாலும், உள்ளீடு-வெளியீடு என்ற சொற்கள் புழக்கத்தில் வருவதற்கு எளிமையாக இருக்கும் என்ற காரணத்தால் அச்சொற்களைப் பயன்படுத்துவதே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அடுத்த வார சொல்: அக்​ரோ​னிம் (acronym)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி Thu Jan 03, 2013 10:58 pm

எட்டு)
சொல்​வேட்டை,​​ பழைய மற்​றும் புதிய சொற்​களை மட்​டும் நமக்கு அறி​மு​கப்​ப​டுத்​த​வில்லை.​ அதை​யும் தாண்டி,​​ எங்​கெங்கோ இருக்​கும் மொழிப் பற்​றா​ளர்​க​ளை​யும்,​​ அவர்​கள் தங்​க​ளுக்கே உரிய ஆய்​வுப் பார்​வை​யோடு கொண்​டி​ருக்​கும் பல்​வே​று​பட்ட கருத்​து​க​ளை​யும் நமக்கு அறி​மு​கப்​ப​டுத்தி வரு​கி​றது.​ ஒரு சிலர்,​​ கம்​ப​னது காப்​பி​யத்​தில் பொன்​மா​னைப் பற்​றிய ஐயத்​தைக் கிளப்​பிய இலக்​கு​வ​னி​டம்,​​ ""இரா​மன் இல்​லா​தன இல்லை இளங்​கு​மர'' என்று கூறி​ய​தைப் போல்,​​ தமிழ் மொழி​யில் இல்​லாத சொற்​களே இல்லை என்​னும் கருத்​தைக் கொண்​டி​ருக்​கி​றார்​கள்.​ இன்​னும் சிலர்,​​ புதிய பொருள்​க​ளை​யும்,​​ புதிய சூழ்​நி​லை​க​ளை​யும்,​​ புதிய செய்​தி​க​ளை​யும் குறிக்​கும் சொற்​கள் நமக்​குத் தேவை​தானா என்ற ஐயத்​தை​யும்,​​ ஏற்​க​னவே முழு​மை​யாக வளர்ச்​சி​ய​டைந்து,​​ செம்​மொ​ழி​யா​கச் சுடர்​விட்​டுப் பிர​கா​சிக்​கும் நம் மொழிக்கு இவை அவ​சி​ய​மில்லை என்​றும் எண்​ணு​கி​றார்​கள்.​ அவர்​கள் அனை​வ​ரின் கருத்​து​க​ளுக்​கும் நான் தலை​வ​ணங்​கு​கி​றேன்.​

÷அதே நேரத்​தில்,​​ ஒரு கருத்தை அறி​ஞர்​கள் முன் பதிவு செய்ய நான் விழை​கி​றேன்.​ இன்​றைய சூழ்​நி​லை​யில் ஒவ்​வொரு நாளே​டும்,​​ காலத்​தின் கட்​டா​யத்​தி​னால்,​​ நமக்​குத் தேவை​யான,​​ தேவை​யற்ற,​​ விரும்​பு​கிற,​​ விரும்​பாத,​​ மகிழ்ச்​சியை அல்​லது துன்​பத்​தைத் தரும் பல செய்​திக் குப்​பை​களை நம் சிறு மூளைக்​குள் கொண்டு வந்து கொட்​டு​கின்​றன.​ கொஞ்​சம் கொஞ்​ச​மாக நாம் அறிந்தோ,​​ அறி​யா​மலோ,​​ விரும்​பியோ,​​ விரும்​பா​மலோ,​​ குப்​பைத் தொட்​டி​யா​கிப் போய்க்​கொண்​டி​ருக்​கும் நம் மூளைக்​கும்,​​ மன​திற்​கும் ஒரு மாற்​றுப் பயிற்​சியே இச்​சொல் வேட்டை.​ இனி இந்த வார வேட்​டைக்கு வரு​வோம்.​

÷வி​ழுப்​பு​ரத்தி​லி​ருந்து முதல்​நிலை விரி​வு​ரை​யா​ளர் வேல்.சிவ.கேதாரி சிவ​சங்​கர்,​​ "ஒரு மொழி​யின் அனைத்​துச் சொற்​க​ளை​யும் வேறொரு மொழி​யில் மொழி​பெ​யர்ப்​ப​தும் இய​லாது,​​ அது தேவை​யும் அற்​றது என்​றும்,​​ ஆங்​கி​லத்​தில் வரி​வ​டி​வ​மும்,​​ ஒலி​வ​டி​வ​மும் மாறு​ப​டு​வ​த​னால் அக்​ரோ​னிம் கிடைப்​ப​தா​க​வும்,​​ தமிழ் மொழி​யின் இயல்​பின்​படி அக்​ரோ​னிம் கிடை​யாது என்​றும்,​​ அப்​ப​டியே செயற்​கை​யாக உரு​வாக்க வேண்​டு​மா​னால்,​​ அதன் பயன்​பாட்​டைக் குறித்து அக்​ரோ​னிம் என்​பதை "விரி​ப​தம்' என்று குறிப்​பி​ட​லாம்' என்​கி​றார்.​ ஆனால்,​​ அவ​ரது கருத்​தில் ஒரு சிறிய சிக்​கல் இருக்​கி​றது.​ தமி​ழி​லும் சில நேரங்​க​ளில் சில எழுத்​து​கள் அவை பயன்​ப​டுத்​தப்​ப​டும் இடங்​க​ளைப் பொறுத்து மாறு​பட்ட ஒலி​க​ளைக் கொடுக்​கின்​றன.​ ÷எ​டுத்​துக்​காட்​டாக "அச்சு' என்ற சொல்​லில் உள்ள "சு' என்ற எழுத்து உரு​வாக்​கும் ஒலி​யும்,​​ அஞ்சு,​​ நெஞ்சு,​​ பஞ்சு போன்ற சொற்​க​ளில் உள்ள "சு' என்ற எழுத்து உரு​வாக்​கும் ஒலி​யும் மாறு​ப​டு​கின்​றன.​ அதைப்​போல் "விரி​ப​தம்' என்​பது அப்​ரி​வி​யே​ஷன் என்ற சொல்​லுக்கு எதிர்​ம​றை​யான "எக்ஸ்​பான்​ஷன்' என்​ப​தைக் குறிக்​க​லாமே தவிர,​​ அக்​ரோ​னிம் என்​ப​தைக் குறிக்க முடி​யாது.​ அவ்​வா​ச​கரே எடுத்​துக்​காட்​டாக சுரதா,​​ கல்கி போன்ற சொற்​க​ளைக் காட்​டி​யி​ருக்​கி​றார்.​ சுரதா என்​ப​தன் விரி​ப​தம் "சுப்பு ரத்​தின தாசன்' ஆக இருக்க முடி​யுமே தவிர,​​ சுப்பு ரத்​தின தாசன் என்ற பெய​ரின் விரி​ப​த​மாக சுரதா இருக்க முடி​யாது.​

÷நெல்​லையி​லி​ருந்து பெரு​ம​ணல் ராயர் என்​னும் அன்​பர்,​​ "சிநோ​னிம்' என்ற ஆங்​கி​லச் சொல்​லுக்கு அருஞ்​சொல் என்ற சொல்​லும்,​​ "ஆண்​ட​னிம்' என்ற ஆங்​கி​லச் சொல்​லுக்கு எதிர்ச்​சொல் என்ற சொல்​லும் வழங்​கப்​ப​டு​வ​தால்,​​ அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு "குறுஞ்​சொல்' என்ற சொல்​லைப் பயன்​ப​டுத்​த​லாம் என்​கி​றார்.​

÷இ​லந்தை சு.இரா​ம​சாமி,​​ "முதல் எழுத்து வருக்​கம்' என்ற சொல்​லைப் பரிந்​து​ரைக்​கி​றார்.​ பாடியி​லி​ருந்து முனை​வர் மு.அரங்​க​சு​வாமி,​​ சொல்​சு​ருக்​கம்,​​ சொல்​ஒ​டுக்​கம் போன்ற சொற்​கள் பொருந்​து​வது போல் தோன்​றி​னா​லும்,​​ தமிழ் இலக்​க​ணத்​தில் இரண்டு சொற்​க​ளுக்கு இடையே சில உரு​பு​கள் மறைந்து வந்து பொரு​ளைத் தரு​வது "தொகை' என்று அழைக்​கப்​ப​டு​வ​தால்,​​ அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு,​​ சொல் இலக்​க​ணத்தை அடி​யொற்றி "சொற்​தொகை' என்ற சொல்லை உரு​வாக்​க​லாம் என்​கி​றார்.​

÷ஸ்ரீ​ரங்​கத்தி​லி​ருந்து மாதா சம்​பத்,​​ மகா​பா​ர​தப் போரில் ஈடு​பட்ட படை​வீ​ரர்​கள் அக்​ரோ​னி​க​ளா​கப் பிரிக்​கப்​பட்​டி​ருந்த கார​ணத்​தால்,​​ "அக்​ரோனி என்ற சொல்​லுக்​குப் "படை​வீ​ரர்​க​ளின் கூட்​டம்' என்​பது பொரு​ளா​கும் என்​றும்,​​ அதை அடி​யொற்றி அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு "சேர்க்கை' என்று பொருள் கொள்​வது பொருத்​த​மா​ன​தா​கும் என்​றும் குறிப்​பி​டு​கி​றார்.​ ஆனால் இக்​க​ருத்து சரி​யா​ன​தா​கத் தோன்​ற​வில்லை.​ மகா​பா​ர​தப் போரில் ஈடு​பட்ட படை​வீ​ரர்​க​ளின் கூட்​டம் வட மொழி​யில் அெக்ஷ​ள​ஹிணி​ சேனை என்​ற​ழைக்​கப்​பட்​டதே தவிர,​​ அக்​ரோனி என்​ற​ழைக்​கப்​ப​ட​வில்லை.​ ஓர் அùக்ஷ​ள​ஹிணி என்​பது வட​மொ​ழி​யில்,​​ குறிப்​பாக மகா​பா​ர​தத்​தில்,​​ சுமார் 20,000 தேர்​கள்,​​ 20,000 யானை​கள்,​​ 65,000 குதி​ரை​கள் மற்​றும் 1,00,000 காற்​படை வீரர்​கள் அமைந்த ஒரு சேனைக்கு அளிக்​கப்​பட்ட பெய​ரா​கும்.​ இதற்​கும் அக்​ரோனி அல்​லது அக்​ரோ​னிம் என்​ப​தற்​கும் எவ்​வி​தத் தொடர்​பும் இல்லை.​

÷ரா​சப்​பா​ளை​யம் சத்​தி​ரப்​பட்​டியி​லி​ருந்து தமிழ் பேரா​சி​ரி​யர் க.பாண்​டித்​துரை,​​ வேலை ஆயு​த​மாக உடைய முரு​கனை வேல்​மு​ரு​கன் என்​ற​ழைப்​ப​தும்,​​ பாலை உடைய குடத்தை பாற்​கு​டம் என்​ற​ழைப்​ப​தும் தமி​ழில் தொகை எனப்​ப​டும் என்​றும்,​​ தொக்கி ​(மறைந்து)​ நிற்​கும் சொல் தொகு​சொல் ஆகு​மென்​றும்,​​ தொட​ராக விரி​யும் சொல் விரி​சொல் ஆகு​மென்​றும் கூறு​கி​றார்.​ எனவே,​​ அக்​ரோ​னிம் என்​பதை "தொகு​சொல்' என்​ற​ழைக்​க​லாம் என்​கி​றார்.​

÷கல்​லி​டைக் குறிச்​சியி​லி​ருந்து இந்​திய வரு​வாய்ப் ​ பணி​யைச் சேர்ந்த ​(இ.வ.ப.)​ கமால் அப்​துல் நாசர் அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு "குறுஞ்​சொற்​றொ​டர்' என்ற சொல்​லைப் பரிசீ​லிக்​க​லாம் ​ என்​கி​றார்.​

ஆலந்​தூர் புல​வர் இரா.இரா​ம​மூர்த்தி யாப்​ப​ருங் கலக்​கா​ரிகை என்​னும் செய்​யுள் இலக்​கண நூலில்,​​ சீர்,​​ தளை,​​ மா,​​ இனம் ஆகி​ய​வற்​றின் எடுத்​துக்​காட்​டுப் பாடல்​களை அவற்​றின் முதல் அசை​க​ளைத் தொகுத்து,​​ "முதல் நினைப்​புக் காரிகை' என்ற பாட​லில் குறிப்​பி​டு​வ​தா​லும்,​​ நாலா​யிர திவ்​யப் பிர​பந்​தத்​தில் பத்​துப்​பத்து பாடல்​க​ளின் முதல் அசை​களை இறு​தி​யில் "அடி​வ​ரவு' என்ற தலைப்​பில் தொகுத்​த​ளிக்​கும் கார​ணத்​தி​னா​லும் அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு முதல் நினைப்பு,​​ அடி​வ​ரவு,​​ முதல் தொகுப்பு,​​ முதல் எழுத்​துச் சுருக்​கம்,​​ சொற்​சு​ருக்​கம் ஆகிய சொற்​கள் பொருந்​தும் என்​கி​றார்.​

÷சென்னை வழக்​குரை​ஞர் இ.தி.நந்​த​கு​மா​ரன்,​​ முருகா என்​னும் பெயரே முகுந்​தன் ​(திரு​மால்)​,​​ ருத்​ரன் ​(சிவன்)​ மற்​றும் கம​லன் ​(பிரம்​மன்)​ ஆகிய மூவ​ரின் பெயர்​க​ளின் முதல் எழுத்​துச் சேர்க்​கையே ​(மு,​​ ரு,​​ க)​ என்​றும்,​​ சுப்பு ரத்​தின தாசன்,​​ சுரதா ஆனது இவ்​வ​ழியே என்​றும்,​​ இப்​ப​டிச் சுருங்​கக் கூறு​வது தமி​ழில் சுருங்​கச்​சொல் அணி அல்​லது ஓர் அலங்​கா​ரம் என்​ற​ழைக்​கப்​ப​டு​வ​தா​க​வும் எழு​தி​யுள்​ளார்.​ சுட்டி என்ற சொல் சுருங்​கு​வ​தை​யும்,​​ சுட்​டிக்​காட்​டு​வ​தை​யும் குறிப்​ப​தால்,​​ ஒரு சொல்​லின் முதல் எழுத்​து​களை மட்​டும் எடுத்து உரு​வாக்​கப்​ப​டும் இன்​னொரு சொல்லை "சுட்​டி​யம்' என்​ற​ழைக்​க​லாம் என்​றும் கூறு​கி​றார்.​

÷தஞ்​சைத் தமிழ்ப் பல்​க​லைக்​க​ழ​கத்தி​லி​ருந்து முனை​வர் பா.ஜம்பு​லிங்​கம்,​​ தமி​ழில் அக்​ரோ​னிம் பயன்​பாடு இருப்​ப​தா​கத் தெரி​ய​வில்லை என்​றும்,​​ எம்.ஜி.ஆர்.,​​ என்.டி.ஆர்.,​​ எம்.எஸ்.,​​ உ.வே.சா., மு.வ.​ போன்​ற​வர்​க​ளின் பெயர்​கள் மட்​டும்,​​ மரி​யாதை நிமித்​த​மா​கச் சுருக்​கித் தரப்​பட்​ட​தா​க​வும் குறிப்​பிட்​டு​விட்டு,​​ அக்​ரோ​னிம் என்​பது சுருக்​க​மா​கக் குறி​யீட்டு நிலை​யில் அமை​வ​தால் "சுருக்​கக் குறி​யீடு' என்​பது பொருத்​த​மாக இருக்​க​லாம் என்​கி​றார்.​

÷பு​ல​வர் அடி​யன் மணி​வா​ச​கன்,​​ படைப்​பி​யற்​கை​யின் உண்​மை​யி​யல் நாத​மான ஓம் என்​பதே மூன்று சொற்​க​ளின் முதல் எழுத்​து​க​ளின் சேர்க்​கை​யாக அமை​வ​தா​லும்,​​ திவ்​யப் பிர​பந்​தத்​தில் ஒரு பதி​கத்தை நினைவு கூறு​வ​தற்​காக ஒவ்​வொரு பாட்​டின் முதல் சொல்​லை​யும் எடுத்​துத் தொகுத்து,​​ அதை ஈர​டிப்​பாட்​டுப் போல அமைத்து,​​ அதற்கு "அடி​வ​ரவு' என்று பெயர் சூட்​டி​யுள்ள கார​ணத்​தா​லும்,​​ அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு "முதல் எழுத்து ஆக்​கச்​சொல்' அல்​லது "முதல் எழுத்து வரவு' என்ற சொற்​க​ளைப் பயன்​ப​டுத்​த​லாம் என்​கி​றார்.​

இவை அனைத்​தை​யும் அல​சிப்​பார்த்து ஒரு முடி​வுக்கு வரும் முன்,​​ ஒரு செய்​தியை வாச​கர்​கள் அறிய வேண்​டும்.​ அக்​ரோ​னிம் என்ற சொல் ஆங்​கில மொழி​யி​லேயே 20-ஆம் நூற்​றாண்​டில்​தான் பயன்​பாட்​டிற்கு வந்​த​தாக ஒரு கருத்து நில​வு​கி​றது.​ ஒரு சொற்​றொ​ட​ரின் முதல் எழுத்​து​களை மட்​டும் ஒன்று சேர்ப்​ப​தி​னால் வரும் கூட்​டுச்​சேர்க்கை,​​ தனி​யாக நின்று எந்​தப் பொரு​ளை​யும் தரா​த​போது,​​ அது அப்​ரி​வி​யே​ஷன் என்​றும்,​​ அந்​தக் கூட்​டுச்​சேர்க்​கையே ஒரு பொரு​ளைக் குறிக்​கும் சொல்​லாக மாறி​வி​டும்​போது,​​ அது அக்​ரோ​னிம் என்​றும் குறிப்​பி​டப்​ப​ட​லாம்.​ அந்த அடிப்​ப​டையை வைத்​துப் பார்க்​கும்​போது,​​ அக்​ரோ​னிம் என்​பதை "தொகு​சொல்' என்​ற​ழைப்​ப​தும்,​​ அப்​ரி​வி​யே​ஷன் என்​பதை "சொற்​சு​ருக்​கம்' என்​ற​ழைப்​ப​தும்​தான் பொருத்​த​மாக இருக்​கும்.​
அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு,​​ வாச​கர்​கள் தரும் இணைச்​சொல் தொகு​சொல்.​

அடுத்த சொல் வேட்டை​​:கேள்​விக்​குறி,​​ ஆச்​ச​ரி​யக்​குறி,​​ முற்​றுப்​புள்ளி போன்ற குறி​யீ​டு​கள் ஒட்டு மொத்​த​மாக ஆங்​கி​லத்​தில் "பங்க்​சு​வே​ஷன் மார்க்ஸ்' என்​றும்,​​ அவற்​றைப் பயன்​ப​டுத்​தும் நடை​மு​றையை "பங்க்​சு​வே​ஷன்' என்​றும் குறிக்​கின்​ற​னர்.​ இவற்​றுக்கு இணை​யான தமிழ்ச் சொற்​கள் உண்டா?​
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum