புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச்சொல் வேட்டை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 18, 2012 7:39 am

தமிழ்ச்சொல் வேட்டை - தொடர்பதிவு
ஒன்று)

புதுச் சொற்களை உருவாக்குவதற்கான சொல் வேட்டையில் ஈடுபடும் முன்னால், வாசகர்கள் ஒரு செய்தியை கவனத்தில் கொள்ளுதல் நலம். நீதிமன்றங்களில் சாட்சி விசாரணையின் போது குறியிடப்படும் பத்திரங்களை ஆங்கிலத்தில் எக்சிபிட்(exhibit) என்று சொல்வார்கள். இந்தச் சொல்லுக்கு சரியான மொழிபெயர்ப்பு "காட்சிக்கு வைக்கப்படுவது' என்பதே ஆகும்.

ஆனால், இந்தச் சொல்லை தமிழில் மொழிபெயர்த்த மொழியியல் வல்லுநர்கள் இதைச் "சான்றாவணம்' என்று மொழிபெயர்த்தார்கள். அதற்குக் காரணம், வழக்குகளில் காட்டப்படும் பத்திரங்களை "ஆவணம்' என்று சொல்லும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் இருந்ததுதான்.

இறைவன், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட போது, இறைவனிடம் சுந்தமூர்த்தி நாயனார் கேட்ட கேள்வி:
"ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்றைக் காட்டுக''
என்பதாகும். எனவே, சொல் வேட்டையில் ஈடுபடும்போது, இலக்கியச் சான்றுகளோடு நாம் புதுச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி முடியாதபோது, சொற்களின் வேர்களுக்குப் போய் (root of the word) புதுச் சொற்களை உருவாக்குவதில் தவறில்லை.

சில நேரங்களில், சில மொழிபெயர்ப்புகள் ஒரு காலத்தில் சரியானவையாகவும், பிற்காலத்தில் சரியற்றதாகவும் ஆகிவிட வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு ட்ரெயின் (train) என்கிற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும் போது நீராவி என்ஜினைக் கருத்தில் கொண்டு அது விடும் புகையை மையப்படுத்திப் "புகை வண்டி' என்று மொழிபெயர்த்தார்கள். ஆனால், இன்றைக்கு எந்த ரயில் வண்டியும் புகை விடுவதே இல்லை. எனவே, இனிமேலும் ரயில் வண்டியைப் புகை வண்டி என்று அழைப்பது பொருத்தமாகுமா என்பது தெரியவில்லை. சிலர் இதைத் "தொடர் வண்டி' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், "ட்ரெய்லர்' கூட தொடர் வண்டிதான் என்பதால் ரயிலைத் தொடர்வண்டி என்று அழைப்பது எங்ஙனம் சரியாக இருக்கும்?

"ஃபோபியா' (phobia) என்கிற ஆங்கிலச் சொல் உயரம் குறித்த அச்சம், இருள் குறித்த அச்சம், தனிமை குறித்த அச்சம், தண்ணீர் குறித்த அச்சம் போன்ற பல்வேறு வகையான அச்சங்களைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். ஆங்கிலச் சொல் அகராதிகளில் இந்தச் சொல்லுக்கு "அச்சம்' என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்தால், தமிழில் இந்தச் சொல்லை "அச்சம்' என்றே குறிப்பிடுகிறோம். ஆனால், "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு அச்சம், பயம், நடுக்கம் போன்ற சொற்களைத் தாண்டி வேறு ஒரு பொருள் இருக்கிறது. ஆனால், அதை உணர்த்தும் சரியான தமிழ்ச்சொல் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அடுத்த வாரத்திற்குள் உருவாக்கி வாசகர்கள் அனுப்பி வைக்கலாம்.

முன்பே கூறிய இக்கருத்துகளை மனதிலே கொண்டு, இந்த வாரம் "ஃபோபியா' என்கிற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை நாம் தேடுவோம்.

இனி, அடுத்த வாரம் "ஃபோபியா'வுக்குப் புதிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்த களிப்பில் இன்னொரு புதுச் சொல் வேட்டையில் இறங்குவோம்...

(தொடரும்) (நன்றி-தினமணி-நீதி அரசர் வி.இராமசுப்ரமணியன்)

இதுவரை வேட்டையாடிய சொற்கள்:
ஃபோபியா = வெருளி அல்லது வெருட்சி
அடிக்ட்' = மீளா வேட்கையன்
அடிக்ஷன் = மீளா வேட்கை
டென்சன் = கொதிப்பு
பாரநோய = மனப்பிறழ்வு
அப்ஜக்டிவ் – சப்ஜக்டிவ் = புறத்தாய்வு - அகத்தாய்வு
இன்புட்-அவுட்புட் = உள்ளீடு-வெளியீடு
அக்ரோனிம் = தொகுசொல்.
அப்ரிவியேஷன் = சொற்சுருக்கம்
பங்க்சுவேஷன் மார்க்ஸ் = நிறுத்தற் குறிகள்
அல்யூஷன் = மறை பொருள்
காமன் சென்ஸ் = இயல்பறிவு.
ஆஸ்ட்ரல் = விசும்புருவான' அல்லது "விசும்புரு


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 18, 2012 7:46 am

இரண்டு)
ஃபோபியா என்ற சொல்லை முதற்சொல்லாக வைத்து இந்தச் சொல் வேட்டையைத் "தமிழ்மணி'யில் சென்ற வாரம் தொடங்கியபோது வாசகர்களும், தமிழ்ச் சான்றோரும், மொழியியல் வல்லுநர்களும் என்ன தீர்ப்பு அளிப்பார்களோ என்று எனக்கு ஒரு புதுவகையான ஃபோபியா ஏற்பட்டது. ஆனால், ஆன்றவிந்த சான்றோர் பலர், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருந்தும் கொண்டுவந்து கொட்டியிருக்கும் இணைச்சொற்களைப் பார்க்கும்போது மலைப்பும், வியப்பும் ஏற்பட்டிருக்கிறது.

÷அறந்தாங்கியிலிருந்து மு.சீவானந்தம் என்ற வாசகர் ஃபோபியா என்ற சொல்லுக்கு "அரட்டி' என்ற சொல்லையும், தூத்துக்குடி மெஞ்ஞானபுரத்திலிருந்து அ.ஜெயசிங் என்ற வாசகர் "கற்பனை அச்சம்' என்ற சொல்லையும், தஞ்சாவூரிலிருந்து மருத்துவர் ச.தமிழரசன் "வெறுப்பு' என்ற சொல்லையும், சென்னை வழக்குரைஞர் இ.தி.நந்தகுமார் "பேரச்சம்' என்ற சொல்லையும், மயிலையிலிருந்து ஜி.ஸந்தானம் என்ற வாசகர் "பேரச்சம்'ó அல்லது "தொடரச்சம்' என்ற சொல்லையும், ஃபோபியாவைக் குறிக்கும் சொற்களாக எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.

÷ கோயம்புத்தூர் கோவில்பாளையத்திலிருந்து முனைவர் வே.குழந்தைசாமி, கம்பராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டி, ஃபோபியா என்ற சொல்லுக்கு "வெருள்' அல்லது "வெருட்சி' என்பது சரியான இணைச்சொல்லாக அமையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். புலவர் அடியன்மணிவாசகன் என்னும் அன்பர் மனம் கலங்கிக் குழம்புதலை, "அலமரல்', "தெருமரல்'ó என்றும், அச்சத்தால் மனம் நடுங்குதலை "அதிர்வு', "விதிர்ப்பு' என்றும், மனம் துணுக்குறுதலை "வெருவுதல்' என்றும் இலக்கியச் சான்றோடு சுட்டிக்காட்டியிருக்கிறார். இதைத் தவிர சூழ்நிலை மற்றும் இயற்கைதரும் அச்சத்தை பேம், நாம் மற்றும் உரும் என்ற சொற்களால் நம் இலக்கியங்கள் குறித்திருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

÷திருவண்ணாமலையிலிருந்து புலவர் சி.சம்பந்தன் என்பவர் "நலிதல்', "கலங்குதல்', "அலமரல்' ஆகிய சொற்களை பத்துப்பாட்டு, நெடுநல்வாடையிலிருந்தும், "விதிர் விதிர்ப்பு' என்ற சொல்லை சிவப்பிரகாசர் அருளிய நால்வர் நான்மணி மாலையிலிருந்தும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

÷முத்தாய்ப்பாக, பொன்புதுப்பட்டி சேக்கிழார் சிவநெறிக்கழகத்தைச் சேர்ந்த சைவப்புலவர் தமிழ்ச்செல்வி என்பவர் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையையே அனுப்பியிருக்கிறார். தமிழில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், பண்புச்சொல் என்று பிரிக்கப்பட்டு, அவை மேலும் தெய்வப்பெயர், மக்கள் பெயர், விலங்கு, மரம், இடம், பல்பொருள் பெயர், செயற்கை வடிவம், பண்பு, செயல், ஒலி என்று பிரிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அச்சம் என்ற தமிழ்ச்சொல் பண்புச்சொல் என்றும், பல்வேறு பண்பு நிலைகளில் ஏற்படும் அச்சங்கள் 47 தமிழ்ச் சொற்களால் குறிக்கப்பட்டிருப்பதாகவும் எழுதியிருக்கிறார்.

÷அவை: (1) ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம் தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்துபவை என்றும்; (2) அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும் அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள் அடையாளம் காட்டும் என்றும்; (3) அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படுவதாகவும்; (4) கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுவதாகவும் எழுதியிருக்கிறார்.

÷மேலும், ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தூய தமிழ்ச் சொற்களின் சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்
டியுள்ளார்.

÷அரியலூரிலிருந்து முனைவர் சா.சிற்றரசு என்பவர் கடலால் தோன்றும் அச்சத்தை "நாம்' (நாமநீர் வேலி உலகுக்கு.... சிலம்பு) என்றும், எதிரியால் - பகைவரால் தோன்றும் அச்சத்தை "பேம்' என்றும், ஆட்சியாளரால் - சூரியனின் வெம்மையால் தோன்றும் அச்சத்தை "உரும்' என்றும், தனிமையால் உள்ளத்தில் தோன்றும் அச்சத்தை "உள்நடுங்கல்' என்றும், காட்டில் உண்டாகும் அச்சத்தை "சூர்' என்றும், இலக்கியச் சான்றுகளோடு சுட்டிக்காட்டி, ஃபோபியா என்ற சொல்லை "அச்சம்' என்று குறிப்பிட்டாலே போதும் என்றும் எழுதியிருக்கிறார்.

÷எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் அருள் நடராசன் என்னும் வாசகர் ஃபோபியா என்ற சொல்லுக்கு "வெருளி' என்ற சொல்லை அவர்கள் (மருத்துவர்கள்) பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டு, 128 வகையான ஃபோபியாக்களையும், அவை அனைத்திற்கும் உரிய 128 வகை வெருளிகளையும் பட்டியல் போட்டே அனுப்பி விட்டார்.

÷மூடப்பட்ட இடத்திற்குள் ஏற்படும் க்ளாஸ்ட்ரோஃபோபியாவை "அடைப்பிட வெருளி' என்றும், கம்ப்யூட்டரால் வரும் ஃபோபியாவை "கணினி வெருளி' என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது சுவையாக இருக்கிறது.

÷ஆக, தமிழ்ச் சான்றோர் அனுப்பியுள்ள குறிப்புகளைக் கூர்ந்து நோக்கின், இரண்டு செய்திகள் நமக்குப் புலப்படுகின்றன. ஒன்று, பல்வேறு வகையான அச்சங்களைக் குறிக்கும் சொற்கள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றன என்பது; இரண்டாவது, "வெருளி' அல்லது "வெருட்சி' என்னும் சொல் ஏற்கனவே இலக்கியங்களில் காணப்படுவது மட்டுமன்றி, மருத்துவர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனவே, வெருளி அல்லது வெருட்சி என்னும் சொல் ஃபோபியாவைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளலாம்.

அடுத்த சொல் வேட்டை

அடிக்ட் (ADICT) என்கிற சொல்லுக்கும் பொருத்தமான ஒரு சொல் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. "அடிமை' என்ற சொல் பொருத்தமாக இல்லை. "போதை' என்ற சொல் சரியான தமிழ்ச் சொல்லா என்று தெரியவில்லை. அதைக் குறிக்கும் சரியான தமிழ்ச் சொல்லை (சொற்களை) வாசகர்கள் உருவாக்கி அனுப்பி வைக்கலாம்.

வேட்டை தொடரும்...

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 10:55 am

அருமையாக இருக்கின்றது. தொடருங்கள்.

நாங்கள் எதிர்கொள்ளும் சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் என நினைக்கிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Nov 21, 2012 8:07 pm

நல்ல தொடர் . தொடருங்கள் ...!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 21, 2012 8:25 pm

ஆங்கிலத்தில் 'அடிக்ட்' என்ற சொல்லுக்கு இந்த வார்த்தை : ' விடுதலையறியா ' என்ற வார்த்தையை உபயோகிக்கலாம்.

சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவியிடத்தில் 'விடுதலையறியா விருப்பினனாக' இன்ருந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார்.



கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 21, 2012 10:16 pm

அடிக்ட் (ADICT) என்கிற சொல்லுக்கும் பொருத்தமான ஒரு சொல் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. "அடிமை' என்ற சொல் பொருத்தமாக இல்லை. "போதை' என்ற சொல் சரியான தமிழ்ச் சொல்லா என்று தெரியவில்லை. அதைக் குறிக்கும் சரியான தமிழ்ச் சொல்லை (சொற்களை) வாசகர்கள் உருவாக்கி அனுப்பி வைக்கலாம்.

விடுபடமுடியாத பழக்கம் என்று கூட சொல்லலாமே?

விடுதலையறியா! விடுபடமுடியா! எது சரி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 10:47 pm

addict என்பதற்கான தனித் தமிழ் வார்த்தையை அடிமை மட்டுமே! ஆனால் இதைத் தனியாகக் கூறினால் பல பொருள் தரும் சொல்லாக இருக்கும்.

Drug addiction - போதைக்கு அடிமை!




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 21, 2012 10:54 pm

கணவன் என்றாலும் அடிமை தானே சிவா? புன்னகை

சாமி அருமையான திரி - தொடருங்கள்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 21, 2012 10:55 pm

அடிமை தனியாக கூறினால் பல பொருள் தரும்.... சரி தான் சிவா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 22, 2012 12:38 am

நல்ல திரி...தொடரட்டும் மொழி சேவை...நன்று சாமி...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக