புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
1 Post - 1%
viyasan
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
18 Posts - 3%
prajai
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_lcap  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_voting_bar  மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம் பற்றிய என் கவிதைகள் (தொகுப்பு)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 16, 2012 3:56 pm

இவை ஏற்கனவே ஈகரையில் வந்தது. தொகுத்து வைக்கிறேன். மேலும் சில தொகுப்புகள் இதே இழையில் வரும்

1 அழும்வரை சிரிப்பேன்!

மனம்கொண்ட துன்பங்கள் மனமேதா னறிந்தாலும்
மகிழ்வென்ற நிறம்பூசிடும்
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்
தித்திப்பை விழிகாட்டிடும்
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்
வலிதந்து ரணமாக்கிடும்
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி
எழில்போல உருமாற்றிடும்

பணமொன்றும் தீர்க்காது பட்டாடை,பல்லாக்கு
தலைதூக்கி எவராடினும்
பிணமென்று விதிசொல்லிப் பின்வாசல் வழிவந்தால்
பேசாது உயிரோடிடும்
மணமென்றும் மனையென்றும் மக்கள்மற் றுறவென்று
மறந்தேநம் விழிமூடிடும்
கணந்தன்னில் கரியாகிக் காற்றோடு புகையாகிக்
கனவென்ற நிலையாகிடும்

களவாக எமன்வந்து கயிறானதெறிகின்ற
கணந்தன்னில் எதுகூறினும்
விளையாது பயனேதும் விரைந்தோடி உயிர்சென்று
விளையாட்டு முடிவாகிடும்
களையாது தினம்தோறும் கனவோடு உயிர்கொண்டு
புவிமீது நடந்தோடினேன்
வளமான வாழ்வென்று வருந்தாமல் திமிரோடு
பலநூறு பிழை யாற்றினேன்

எனையாளும் இறைவா நீ இதுகால வரைதானு
மிரு என்றாய் புவிமீதிலே
வினைகொண்டு அழுதாலும் வியந்தேபின் சிரித்தாலும்
வாழ்ந்தேனே அதுபோதுமே
சுனையோடு மீன்துள்ளும் சுழன்றோடும், வலைவீச
தெரியாமல் அதில்மாண்டிடும்
நினையாது ஒருநாளில் நிகழ்கின்ற வாழ்வீது
நிழலாக்கி உயிரோடிடும்

அதுபோலும் விதி சொல்லி அகல்கின்றவரை நானும்
மகிழ்வோடு கூத்தாடுவேன்
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்
போலாகி ஒளிவீசுவேன்
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்
அழகாகப் பறந்தோடுவேன்
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனபாடிப்
போகும்வரை ஆடுவேன்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 16, 2012 3:59 pm

2. கண் விழித்துக் கண்ட கனவு


மாலைப் பொழுதினில் ஓர்நாள் - மன
தில் பல எண்ணங்கள் கொண்டு
சாலை வழிதனிற் சென்றேன் - நல்ல
சங்கீதம் கொண்டு குருவிகள் பாட
சோலைமலர் மணம்வீச - நல்ல
சுந்தரத் தென்றல் அதைஅள்ளிப் போக
வேலைமுடிந் தெங்கும் வீடு - செல்லும்
வீறுகொண் டேகும் மனிதர்கள் கண்டேன்.

சீறிச் சினத்தவள் கன்னம் = போல
சிவ்வென்று வண்ணம் எடுத் தடிவானம்
மாறிக் கிடந்தது வெய்யோன் - இந்த
மண்ணில் கொடுமைகள் தன்கதிர் மீறி
தேறிக் கிடக்குதே யென்று - நொந்து
மேலைக் கடலில் உயிர்விடும் நேரம்
பூரிப்பு டன்மனம் துள்ளி - புள்ளி
மானைப் போலக் குதித்தது கண்டேன்.

அந்தி கருகிடும் நேரம் - இருள்
ஆடி, அசைந்து புவி கொள்ளும் நேரம்
மந்த மயங்கியோர் இன்பம் - கள்ளை
உண்டவன்போல உணர்வதைக் கண்டேன்
செந்தமிழில் இசைபாடி - பல
தெய்வத் திருத்தலம் எங்கும் பண்ணோசை
முந்திஎழ, அந்தமேகம், - அதை
முட்ட எழுந்தநற் கோபுரம் கண்டேன்

இத்தனையும் கொண்டு இன்பம் - நெஞ்சில்
எட்டி அலைமோத என்வழி சென்றேன்
எத்தனையோ அழகாக - இந்த
ஊரை உலகைப் படைத்தவன் செய்தான்
வித்தைகள் அன்றோ புரிந்தான் - என்று
வீறுநடை கொண்டு ஏகிடும்போது
பத்தைசிறு மரக்காடு - அதன்
பக்கத்தி லோர்சுடு காட்டினைக் கண்டேன்

நட்ட நடுவினில் வேகும் - மரக்
கட்டையி னுள்ளே கிடந்தது தேகம்
சுட்டெரியும் தீயின் வாயில் - அந்த
சுந்தர தேகம் எரிவது கண்டேன்
இந்த மனிதனும் நேற்று - இந்த
இன்ப உலகினைக் கண்டுகளித்தான்.
இன்று அவன் வெறும் கூடு - அது
மண்ணில் கலந்து மறைந்திடப் போகுது

அத்தனையும் வெறும் மாயை - இங்கு
ஆடும் களிப்பு நடனங்கள் யாவும்
வித்தகன் ஆண்டன் மேடை - தனில்
வேடிக்கைக்காக விளையாடும் பொம்மை
நித்திலம் என்பது இல்லை - இங்கு
நிரந்தரம் என்பதுசற்றேனும் இல்லை
செத்து மடிந்திட சூழும் - இருள்
மட்டும் நிரந்தரம் என்றெண்ணி நொந்தேன்

பொன்னென பூத்த இவ்வானம், - அதில்
போகும்வெள்ளி மலைபோன்ற வெண்மேகம்,
விண்ணில் பறக்கும் குருவி, - இந்த
வீதி,மரம், ஓடிச்செல்லும் மனிதர்
தண்ணீர்க் குளத்தின் அலைகள்,- ஆடும்
அல்லி மலர், கயல்மீன்கள் இவைகள்
கண்மூடும் மட்டுமே தோன்றும் - வெறும்
ஞாலக்கனவுகள் என்பதை கண்டேன்

மாலை முடிந்திருள் கவ்வ - நாம்
பாயிற்படுத்து தூங்கிடக் காண்போம்
காலையில்மீண்டும் எழுந்து - நாம்
கண்ணை விழித்திட இன்னொன்று காண்போம்
யாவும்கனவுகள் கண்டீர் - கண்
மூடித்திறந்தென காண்பது ரண்டு.
ஒன்று விழித்திடப் போகும் - இன்
னொன்று விழிகளை மூடிடப்போகும்

********************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 16, 2012 4:01 pm

3 . அழுது புலம்பி !

எத்தனை நாளிந்த பொன்னெழிற் கட்டிலில்
நித்திரை கொள்ளுவனோ
கத்தும் எருதேறும் காலன் வாசல்தனை
தட்டும் வரைதானே
நித்தம் எழுந்து நான் நிற்பது பூமியா
நிச்சயமா என்று கண்
கொட்டி விழித்து ஓர் பார்வை விட்டுபின்னர்
கட்டிலை விட்டெழுவேன்

எப்ப எழுந்து விழி திறக்க இது
சொர்க்கம் என்றாகுதுவோ
சுற்றி நீள்பல்லொடு சூலம்பிடித்தோர் கை
பற்றி இழுப்பனரோ
செய்த பிழையாவும் பட்டியலிட்டு எனை
சுட்ட எண்ணெய் குளியல்
கத்தையான தொரு பாம்புகிடங்கினில்
கட்டி இறக்கல் என

அத்தனையும் செய்து ஆனந்தமாய் ஆகா
அற்புதம் என்று எமன்
கத்திக் குலுங்கி சிரிக்கும் நாளது
பட்டென்று வந்திடுமோ
என்று மறுகி மனம் சலித்து இந்த
மண்ணில் இருந்துவந்தேன்
எத்தனை நாள் இங்கு விட்டுவைப்பானென
ஏதும் புரியவில்லை

சத்தியமாக என் செத்திடும்நாள் குறி
கேட்டும் தெரியவில்லை
சாத்திரம் சாதகம் ஜோதிடம் என்று
பார்த்தும் பயனொன்றில்லை
இப்படியே பல எண்ணங்களோடு
இங்கிவன் நான் இருக்க
குன்றுமலையென தோள் நிமிர்ந்த ஒரு
மல்லன் என் தோழனவன்

நேற்றைக்குமுன்தினம் நீண்டுபடுத்தவன்
மூச்சை நிறுத்திவிட்டான்
சொத்து பணம் வீடு கட்டியவள் பிள்ளை
அத்தனையும் மறந்தான்
நித்திலம் விட்டுமறைவதுமானிடர்
நிச்சயம் என்பதனால்
செத்த சினேகிதன் எண்ணி ஒருசொட்டு
கண்ணீர் விழவேயில்லை

கண்டவரோ இவன் கல்நெஞ்சனென்று
கணக்கிடலாம் அறியேன்
என் மனதோ நீ முந்திவிட்டாய்
நான் பிந்திவருவேன் என்குது
போவது ஓர் இடம் போவதும் திண்ணம்
பார்ப்பது ஓர்படம்தான்
ரிக்கட் வரிசையில்நீ முந்தி நான்பிந்தி
நிற்பதுபோல் இதுதான்

ஏனழுது புலம்பிக் கதறணும்
வேடிக்கை யாகுமடா
போனவரை பார்த்து போக இருப்பவர்
புலம்பி அழுவதோடா
ஆண்டவன் தந்ததை மீண்டுமெடுக்கிறான்
என்றான் கவியரசன்
மீண்டும்தா என்று மிஞ்சியும் கெஞ்சியும்
மீள்வது அல்ல உயிர்

நீசம் மலிந்திட்ட பூமியை விட்டவர்
செல்லும் இடம் தெரியா
ஆயினும் நிச்சயம் அங்கவர் காண்பது
இவ்வுலகைவிட்டமேல்
போயின கண்டு புலம்பிஅழு தவர்
மேனி விழுதல் விட்டு
ஆம் இவன் மீளா அமைதி கண்டான் என
அஞ்சலி செய்து விடை கொடுப்போம்

*******

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 16, 2012 4:13 pm

4. மரணத்தின் மடி.


தேவன் கோவில்மணி ஒலிக்கின்றது- ஒரு
தீபம் அசைவதங்கு தெரிகிறது
பாவம் கணக்கெழுதி முடிக்கிறது= ஒரு
பாலம் விழி எதிரில் பிறக்கிறது

வாவென்றிரு கரங்கள் அழைக்கிறது- ஒரு
வாசல் திறப்பதங்கு தெரிகிறது
போவென் றெனைவாழ்வு சினக்கிறது- நான்
போகும் பாதை விளக் கொளிர்கிறது

பாசம் விழிகளினை மறைகிறது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கிறது
நேசம் இருந்துவிடக் கேட்கிறது- என்
நெஞ்சம் போராடித் தோற்கிறது

கூடி இருந்த உடல் துடிக்கிறது -அதன்
கோலம் எதை நினைத்து சிரிகிறது
ஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி
இட்டே முழுதும் என முடிக்கிறது

ஓடும்நதி கடலில் கலக்கிறது- அதன்
ஓசைஅடங் கமைதி பிறக்கிறது
வாடும் மனது இனி வசந்தம்மென- தனை
வாட்டும் கடும்துயரைப் பழிக்கிறது

சேரத் திரிந்தநிழல் பிரிகிறது- தினம்
செய்யும் மணியொலியும் சிதைகிறது
தேரும் வழியில் தடம் புரள்கிறது- சென்ற
திக்கில் தெருமுடிந்து கிடக்கிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக