ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

+2
சிவா
nandagopal.d
6 posters

Go down

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Empty பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

Post by nandagopal.d Fri Nov 16, 2012 1:03 pm

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிறநாட்டு நல்லறிஞ்ர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்க்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Empty Re: பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

Post by சிவா Fri Nov 16, 2012 1:06 pm

பாரதியின் கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி நந்தகோபால்!


பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Empty Re: பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

Post by பூவன் Fri Nov 16, 2012 1:22 pm

தமிழ் மொழியை பற்றி அழகாக கூறி இருப்பார் பாரதி அவர்கள்

இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.


பகிர்வுக்கு நன்றி நந்தகோபாலன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Empty Re: பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

Post by jenisiva Fri Nov 16, 2012 1:31 pm

உண்மையிலே இது நல்ல பதிவு . ஏனென்றால் மக்கள் தமிழை நாவளவிளும் நனைப்பதில்ல்லை . மனதளவிலும் நினைப்பதில்லை.
நான் ஒரு நாள் என் தமிழ் ஆசிரியரை சந்தித்தேன் . அப்பொழுது தமிழ் இளங்கலை முடித்திருந்தேன் . என் ஆசிரியர் என்ன செய்கிறாய் என கேட்க , நானும் சந்தோஷமாக மிஸ் உங்களை போலவே தமிழ் படிக்கிறேன் . ஆசிரியராய் இங்கு ஒரு பள்ளியில் வேலை செய்கிறேன் என சொன்னேன் . அதற்கு என் ஆசிரியை கூறியதை நினைத்தால் இன்றும் எனக்கு வருத்தமாக உள்ளது. என்ன தெரியுமா ?
" ஏம்மா நாங்க தமிழ் படிச்சிட்டு வேலை இல்லாமல் கஷ்ட பட்றது பத்தலியா ? வேற ஏதாவது படிக்க வேண்டியது தானே " என்றார் .
என் தாய் மொழி தமிழ் இல்லை . ஆனால் என்னை வளர்த்த மொழி தமிழ் மொழி . இப்படி என் ஆசிரியை வாயால் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் . ஆனால் அவர் மட்டும் இல்லை பெரும்பாலான தமிழர்களின் எண்ணமும் இப்படி தான் உள்ளது. இந்த நிலை என்று மாறுகிறதோ அன்று தான் பாரதியாரின் பாடல்களில் உள்ளதும் நடக்கும்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Empty Re: பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

Post by பூவன் Fri Nov 16, 2012 1:36 pm

நண்பரே உங்களுக்கு மட்டும் அல்ல என்னுடன் இளங்கலை தமிழ் பயின்ற யாருமே அதே துறையில் இல்லை இதில் நானும் அடங்கும் ,படித்தது ஒரு துறை தொழில் புரிவது மற்ற துறை ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Empty Re: பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

Post by jenisiva Fri Nov 16, 2012 1:50 pm

வாங்க எல்லாரும் சேர்ந்து பீல் பண்ணுவோம் . அது தான் நம்மால் முடியும் என்று நினைக்கிறேன்
ஆனால் தமிழிலேயே பீல் பண்ணுவோம் ஓகே வா
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Empty Re: பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

Post by பூவன் Fri Nov 16, 2012 1:53 pm

வருத்தபடுவோம் என தமிழில் சொல்லி இருந்தால் நல்லா இருந்திருக்கும் ..
அந்நிய மொழி ஆக்கிரமித்தது கொஞ்சம் வருத்தம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Empty Re: பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

Post by kirikasan Fri Nov 16, 2012 4:42 pm

தமிழ்மொழியைப் பற்றி பெருமையாக எண்ணுவது பரந்தளவில் மக்களிடமில்லை.இதை மாற்ற அரசாங்கத்தில் தனியான திட்டமிடும் பிரிவு ஆரம்பித்து நல்லவர்களின் கையில் ஒப்படைத்து மிகப்பெரிய தொலைகாட்சி விளம்பரங்களும், சுவரொட்டிகளும் வகுப்புகளும் நடத்தி ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தவேண்டும்.

அண்மையில் ஒரு வானொலியில் உரை கேட்டேன். தமிழன் அடிமையாக வாழ்ந்தே பழக்கபடுத்திவிட்டான். அவன் வெளியே வரும் விருப்பமேயற்று அதைப்பற்றி எண்ணாமலேயே அடிமையாக வாழ்ந்து காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறான். தமிழன் வாழும் எல்லா நாட்டிலும் இதே நிலைதான். அதிலும் இந்தியாவில் மிகவும் நீண்ட காலமாக இந்தநிலை காணப்படுகிறது எனக் கேட்டு அதிர்ச்சியுற்றேன். பின்னர் சிந்தித்துப் பார்த்தபோது சரியாகப்பட்டது.

இந்தநிலை மாறத் தமிழன் தன்நிலையை உணர வேண்டும். தமிழை இழிவாகவும் ஆங்கிலத்தை பெரிதாகவும் எண்ணுவதை நிறுத்த வேண்டும். ஜேர்மனியில் ஒரு அந்நாட்டவன் ஜெர்மனிய பத்திரிகைதான் படிப்பார் அவன் எவ்வளவு பெரிய வைத்தியனாகவோ கணனி பட்டபடிப்பு பெற்றவனாகவோ விரிவுரையாளராக இருந்தாலோ ஆங்கில பத்திரிகை படிக்கமாட்டான் ஆங்கில வானொலி கேட்கமாட்டான்.
ஜேர்மன் மொழியிலியே உரையாடுவான். ஒரு பிரெஞ்சுக்காரன் அப்படியேதான். உலகத்தில் மொழிப்பற்றுள்ள இனம் தலைநிமிர்ந்துநிற்கும். தமிழ்னுக்குள் என்னநடக்கிறது

அடிமையாக வாழ்ந்து பழக்கப்பட்டதால் காட்டிக்கொடுப்பு, இனப்பற்றுஇன்மை, தன்னலம் இவைகள் மூலமாக தன்இனத்தைப் பெரிதாக எண்ணாமல் மீண்டும் மீண்டும் தாழ்ந்து அழிந்து கொண்டு போகிறான் உலகில் தமிழனைவிட எண்ணிக்கைகள் குறைந்த இனங்களுக்கு உலகில் எந்த மூலையிலவது சொந்த நாடு உள்ளது. ஒரு அரசு உள்ளது அவன் இன மக்களுக்கு ஏதாவது உலகப்பரப்பில் எங்காவது அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்கும் உரிமைஉள்ளது. நமக்கு உலகம் முற்றும் பரவி வாழ்ந்தும் எங்கேயும் ஒரு நாடில்லை. அநியாயம் நடந்தால் கேட்க ஆளில்லை. இதோ ஈழத்தில் நடந்ததே அநியாயம் . ஏனென்று கேட்க இந்த உலகத்தில் எந்த தமிழனுக்கும் நாதியில்லை./ எல்லோரும் அடிமைகளே!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Empty Re: பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

Post by காதல் ராஜா Fri Nov 16, 2012 7:07 pm

விழித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய உடனே எப்படி என்று தெரியாததாலோ அல்லது சோம்பல் காரணமாகவோ உடனடியாக மீண்டும் உறங்கி விடுகிறான் தமிழன்..

தமிழினத் துரோகிகள் தலைவர்களாய் இருந்தால் வழிகாட்ட ஆளில்லையென வாய்க்கரிசி கொண்டு வரும் இந்த உலகம்..



காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Empty Re: பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

Post by காதல் ராஜா Fri Nov 16, 2012 7:08 pm

மிக நல்ல பாரதியார் கவிதையொன்றைப் பதிந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் நந்தகோபால்.. புன்னகை



காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Empty Re: பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum