புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 3%
Shivanya
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:54 pm

குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்




ஆன்மீக சிந்தனைகள் Tblanmegamideanews_21722048522

* இறைவனை மனக்கண்ணில் காணும் போது என்னிடமுள்ள தீமைகள் யாவும் நெஞ்சத்திலிருந்து விலகி விடுகின்றன.


* எப்போதும் மனதை எளிமையாகவும், தூய்மையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க விரும்புங்கள். நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், நம் மனப்போக்கினை ஆளக்கற்றுக் கொள்ள வேண்டும்.


* மனிதனுக்கு நேயஉணர்வு அவசியம். எப்படி தன்னிடம் உள்ள பழுத்த பழங்களை மரம் பிறருக்காக கொடுக்கிறதோ, அதுபோல ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுக்கும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும்.


* குழந்தைகளைப் போன்று இருக்க கற்றுக் கொள் ளுங்கள். குழந்தைகள் பயன் இல்லாத விளையாட்டுப் பொருள்களை வைத்துக் கொண்டு உள்ளம் மகிழ்ச்சி கொள்கின்றனர். மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்ததே.


* சிரத்தை இல்லாமல் வழிபாடு செய்வதால் பயன் ஏதும் இருக்காது. தெய்வம் நம்முன்னே உறைந்து இருக்கிறது என்ற எண்ணமுடன் வழிபட வேண்டும்.


- ரவீந்திரநாத் தாகூர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:55 pm

சாதம் பிரசாதம் ஆகட்டும்!





உணவை நல்லமுறையில் சமைப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவ்வுணவு தூய்மையான மனதுடன் செய்ய வேண்டும் என்பதும் ஆகும். சமையல் செய்பவரின் மனோபாவமும் அவர் செய்யும் உணவில் கலந்து விடுவது இயற்கையே. சமைப்பவர் நல்ல குணமும், ஒழுக்கமும் கொண்டவராக இருக்க வேண்டும். மிகவும் தூய்மையை விரும்புபவர்கள் நிச்சயமாக தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று முற்காலத்தில் நம் முன்னோர்கள் நெறிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
நாம் நமக்காக சமைக்கும்போது அதை சாதம் என்று அழைக்கிறோம். அதே உணவினை ஆண்டவனுக்கு படைத்த பின் மீண்டும் நம்மிடம் கொண்டுவரும்போது பிரசாதமாகி விடுகிறது. "பிர' என்றால் "கடவுள் தன்மை'. உணவு என்பது மட்டுமல்ல, கடவுளுக்குப் படைக்கும் எந்தப்பொருளும், மேலும் புனிதம் பெற்று நம் மனதைத் தூய்மைப்படுத்துகிறது. கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவினால்(பிரசாதத்தினால்) நம் உணர்வுகள் மேன்மைபெற்று வாழ்வு அர்ததமுள்ளதாக மாறிவிடுகின்றன.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:57 pm

நாளை என்பது நமக்கில்லை





நாம் செய்ய வேண்டிய செயல்களை தகுந்த சமயத்தில் செய்யாமல் தள்ளிப்போடுகிறோம்.



இல்லாவிட்டால் இன்று சிறிது செய்யலாம்; நாளை அதிகமாகச் செய்யலாம் என்று என்று நினைக்கிறோம். இதையே ஆன்மிகத்திலும் மனிதர்கள் செய்கிறார்கள். இளமையில் வேலை செய்து நிறைய பணம் சம்பாதிப்போம். வயதான பிறகு பகவானை நினைத்து வழிபட்டுக் கொள்ளலாம் என்று எண்ணுகிறோம். முதுமையில் நாம் சரியாக பார்க்கவே முடியாது. காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விடும். பகவானின் நாமங்களை சொல்ல விரும்பினாலும், ஜபிப்பதற்கு சக்தி இல்லாமல் போய் விடும்.


சில மாணவர்களும் இவ்வாறு தான் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் பாடத்தை விட்டுவிட்டு, பொழுதுபோக்குகளில் நேரத்தை கழிக்கிறார்கள். தேர்வு நேரத்தில் படித்தால் போதும் என எண்ணுகிறார்கள். காலத்தை வீணடித்து விட்டு, கடைசி நேரத்தில் படிப்பதால் குழப்பமே மிஞ்சும். தங்கள் சோம்பேறித்தனத்தால், தேர்வில் தோல்வி அடைகிறார்கள்.


மனப்பக்குவம் அடைய விரும்பும் ஒருவன் "நாளை' பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அதற்கான முயற்சிகளை "இன்றே' ஆரம்பிக்க வேண்டும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:58 pm

இதயத்தில் இருக்கும் இறைவன்







* புலனடக்கமும், ஆன்மிக சாதனைகளும் நம் வாழ்வில் இணைந்திருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாத நிலையில் ஆன்மிக அனுபவங்கள் ஏற்படுவதற்கு வழியே இல்லை. வேலை செய்தால் தானே கூலி கிடைக்கும். வேலையே செய்யாத ஒருவன் கூலியை மட்டும் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.


* மனிதன் பிறருக்குப் பரோபகாரமாகவும், நல்லொழுக்கங்களுடன் வாழ்ந்து தவத்தில் சிறந்து விளங்கி, இறுதியில் இறைவனின் திருவடியில் இரண்டறக் கலப்பதே வாழ்வின் நோக்கமாகும்.


* எந்த அளவிற்கு உள்ளம் தூய்மையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவனிடம் மனச்சாட்சியும் விழிப்புடன் இருந்து அவனை நல்வழியில் செலுத்திக் கொண்டிருக்கும். அதனால் மனமே குருவாக இருந்து நமக்கு வழிகாட்ட வேண்டும்.


* ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் அமுத வாக்காகும். வெளியில் ஆலய வழிபாடு செய்வதோடு திருப்தி கொள்ளாமல் இதயத்தில் இருக்கும் கடவுளை அறிவதே நம் பெரியோர்களின் நோக்கமாகும்.


* இறைவனை உள்ளத்தில் உண்மையாகவே ஆராதிக்கத் தொடங்கினால், நான் என்ற அகந்தை எண்ணம் அழிந்து விடும். ஒளி வந்தவுடனேயே இருள் நீங்குவதுபோல, இறைவன் இருக்கும் இடத்தில் தான் என்னும் அகந்தை நிற்க முடியாது.
-சுவாமி கமலாத்மானந்தர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:59 pm

திருப்தி விலைக்கு கிடைக்காது







* அறம் என்னும் நீரில் நீராடி, வாய்மை என்ற வாசனைத் திரவியத்தை பூசிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முகம் பேரொளியால் பிரகாசம் பெற்று விளங்கும்.


* இறைவன் நம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாதவன். முடிவில்லாத பெருமையைக் கொண்டவன். மனம்,வாக்கு,காயத்தால் அறிய இயலாதவன். அவனே நமக்கு அருள் செய்வதற்காக தன்னைக் குறைத்துக் கொள்கிறான்.


* வாய்மை, நீதி தவறாத முறையில் உணவைத் தேடுதல், இறைவனின் பெயரால் தானம் செய்தல், மனத்தூய்மைக்கு முயற்சித்தல், கடவுளை வணங்குதல் ஆகிய ஐந்திற்காகவும் கடவுளை நாளும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.


* ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கவே செய்கிறார்கள். ஆனால் மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதால் மட்டும் இறைவனை அடைய இயலாது.


* நம் மனம் மதம் பிடித்த யானையைப் போன்றது. பந்த பாசங்களினாலும், மரண பயத்தினாலும் உயிர் அலைந்து திரிகிறது. இதிலிருந்து விடுபட இறையருள் ஒன்றே நமக்குத் துணை செய்யும்.


* சாம்ராஜ்யம், செல்வம், அழகு, பெருமை, இளமை இவை ஐந்தும் உயிர் இறை ஞானம் பெற விடமால் தடுக்கும் திருடர்கள் ஆவர்.


* உலகத்தின் செல்வம் முழுவதையும் செலவழித்தாலும் திருப்தியை விலைக்கு வாங்க முடியாது.


-குருநானக்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 4:00 pm

குழந்தைகளுக்கு தெய்வப் பெயரிடுங்கள்







* நாம் விரும்பியதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இறைவனே நம்மை வழி நடத்துபவன். அதனால், பக்தி மார்க்கத்தை விட்டு விலகுதல் கூடாது.அவன் நம் தகுதி அறிந்து நிச்சயம் அருள்செய்வான்.

* கலியுகத்தில் இறைவனின் திருநாமங்களை ஜெபிப்பது மட்டுமே இறைவனை அடையும் வழியாகும். நாமங்களை ஜெபிப்பதற்கு குளிப்பது, பூஜை செய்வது போன்ற எந்த வரையறை எதுவும் தேவை இல்லை.


* பூஜை செய்தாலும், மந்திரங்களை ஜெபித்தாலும் இறைவனை நினைப்பது தான் முக்கியம். இறைவன் நமக்கு துணை செய்கிறான் என்ற நம்பிக்கை மிகவும் தேவை. இதனால், நாம் செய்யும் செயல்கள் சுலபமாகின்றன. மனதில் ஊக்கமும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது.


* குழந்தைகளுக்கு இறைவனின் திருநாமங்களைப் பெயரிடுங்கள். பிள்ளைகளை அன்போடு கூப்பிடும்போது, நம்மையும் அறியாமல் நாமஜபம் செய்த புண்ணிய பலனைப் பெற்றவர்களாகி விடுவோம்.
.
-ஹரிதாஸ்கிரி சுவாமி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 4:01 pm

படித்தால் மட்டும் போதுமா?







* உடலை அடக்கி, நாவை அடக்கி, மனதையும் அடக்கியுள்ள ஞானிகளே உண்மையில் அடக்கம் உடையவர்கள் ஆவர்.

* தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை தவறுதலான வழியில் பயன்படுத்தி தீங்கு செய்பவன் நிச்சயம் வாழ மாட்டான்.


* பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே பகையை வெல்ல முடியும்.


* அறிவும், கல்வியும் மட்டுமே பாராட்டத்தக்கது என்று கருதுபவன் எந்நாளும் தனித்தே தான் வாழ நேரிடும்.


* அநீதி செய்து மற்றவர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் வென்றாக சரித்திரம் இல்லை. அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி.


* நல்லவழியில் செம்மையாக நிர்வகிக்கப்பட்ட மனமே நமக்கு என்றென்றும் உதவி செய்ய தகுதி உடையதாக இருக்கும்.


* நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்கு நன்மையையும், ஆறுதலையும் தருவதாக அமையவேண்டும். ஆனால், மாறாக துன்பத்தை அல்லவா நமக்குத் தருகின்றன.


* ஒருவரின் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்குமானால் அவர் அழகும், சுகந்தமும் நிறைந்த வண்ண மலரைப் போல எல்லோருக்கும் பயன்உடைய மனிதராக இருப்பார்.


-புத்தர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 4:02 pm

கடவுளை தாயாகக் கருதுங்கள்



ஆன்மீக சிந்தனைகள் Tblanmegamideanews_51766604186





* இறைவனின் தரிசனம் சாஸ்திரம் படித்தால் மட்டும் கிடைத்துவிடாது. ஆண்டவன் அருள் இருந்தால் தான் அது கிடைக்கும். அதற்கு மனம் கரைந்து உருகவேண்டும். பக்தியால் மனம் பழுக்க வேண்டும்.



* காலையில் எழும்போது, கொஞ்சம் தியானம் செய்துவிட்டு எழுங்கள். எந்த நிலையில் வேண்டுமானாலும் தியானம் கைகூடும். அதற்கு வேண்டியது உளப்பூர்வமான பக்தி மட்டுமே.



* ""இறைவா! என் உள்ளத்தை காத்தருள்வாயாக. நீ கோயில் கொள்ளத் தகுந்த இடமாக மனத்தூய்மையுடன் இருக்க அருள்புரிவாயாக!'' என்று மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.



* கடவுளைத் தந்தையாக, தாயாக, எஜமானாக, குழந்தை யாக எப்படி வேண்டுமானாலும் கருதி வழிபாடு செய்யலாம். தாயாகக் கருதி வழிபாடு செய்வது மிகவும் உத்தமமானது.



* இரவு தூங்கச் செல்லும்முன், ""இன்று நான் செய்த குற்றங்கள் இத்துடன் தீர்ந்து போகட்டும். இனிமேல் நான் இந்த குற்றத்தைச் செய்ய மாட்டேன்,'' என்று உள்ளம் உருகி வேண்டினால், இறைவன் நிச்சயம் மன்னிப்பான்.


ராஜாஜி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 4:03 pm

வெற்றி பெற பக்தி தேவை



ஆன்மீக சிந்தனைகள் Tblanmegamideanews_22243899107

* "ராமா' என்னும் இனிய நாமத்திற்காக எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். எதை வேண்டு மானாலும் தியாகம் செய்ய ஆயத்தமாய் இருங்கள். வலிமை மிக்க ஆனந்த மயமான ராம நாமத்தில் உங்களைக் கரைத்துக் கொள்ளுங்கள்.


* இறந்த காலத்தை மறந்துவிடுங்கள். எதிர்காலத்தைப் பற்றி பயம் சிறிதும் வேண்டியதில்லை. நிகழ் காலத்தில் ராம சிந்தனையோடு வாழப் பழகுங்கள். அதுதான் பயனுள்ள வாழ்வாகும்.


* இருள் உறையும் இடத்தில் ஒளியையும், துன்பத்திற்கு மாற்றாக இன்பத்தையும், நரகம் உள்ள இடத்தில் சொர்க்கத்தையும், மாயை நிலவுமிடத்தில் கடவுள் அருளையும் கொண்டு சேர்க்கும் ஆற்றல் இறை நாமத்திற்கு உண்டு.


* பக்தியும் அன்பும் கொண்டு இதயப்பூர்வமாக கடவுளை ஜபிக்கும் போது எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும். அப்போது அகங்காரத்திலிருந்து உதயமாகும் அந்தகார இருள் (கும்மிருட்டு) மறையும். நித்யானந்தம் என்னும் ஒளி எங்கும் பரவி ஆனந்தம் உண்டாகும்.


* கடவுள் எங்கும் இருக்கிறார். அவர் நம்முள்ளும் இருக்கிறார். நம்மைச் சுற்றிலும் இருக்கிறார். அவரைத் தேடி நாம் எங்கும் செல்ல வேண்டியதில்லை.


சுவாமி ராமதாஸ்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 4:07 pm

அனாவசிய பேச்சு வேண்டாம்



ஆன்மீக சிந்தனைகள் Tblanmegamideanews_38468569518

* சாதாரண மனிதன் இந்திரியங்கள் எனப்படும் புலன்களுக்கு அடிமையாகிச் சிக்கித் தவிப்பான். ஆனால், விவேகியோ பெரிய காட்டு யானையைப் பிடித்துப் பழக்கித் தன் பணிக்கு ஏவும் யானைப் பாகனைப் போல இருப்பான்.


* நாம் எவ்வளவோ பேசுகிறோம், பார்க் கிறோம். அதன் காரணமாக நமது மனதில் எத்தனையோ மனோ விகாரங்கள் ஏற்படுகின்றன. மனம் அடக்கப்படாத குதிரை போல தறிகெட்டு ஓடுகிறது. ஆனால், தொடர் முயற்சியால் மன அடக்கம் உண்டாகும்.
* மனதை நெறிப்படுத்துவதற்கு விடா முயற்சியும், பயிற்சியும், வைராக்கிய சிந்தனையுமே வழி.


* அனாவசியமான பேச்சும், அவசியமில்லாத பொழுது உண்ணும் உணவும் மனிதனைக் கெடுக்கின்றன. அதனால் தான் திருவள்ளுவர் ""யாகாவாராயினும் நாகாக்க'' என்று குறிப்பிடுகிறார்.


* சுவைக்கு அடிமைப்பட்டு அளவுக்கு அதிகமாக உண்பது கூடாது. உணவில் தூய்மை உண்டாகும் போது, எண்ணங்கள் தூய்மையாகிவிடும். அதன்பின் நம் சொல்லும் செயலும் மேம்பாடு பெறும்.


திருத்தல யாத்திரை செல்வோம்


* திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்வதும் ஆன்மிகப் பயிற்சிகளில் ஒன்று தான். காலம் காலமாக எத்தனையோ அருளாளர்கள் திருத்தலப் பயணங் கள் மேற்கொண்டு, வாழ்வில் மேன்மை அடைந்திருக்கின்றனர். சாதாரண மக்களாகிய நாமும் முடிந்த போதெல்லாம் திருத்தலங்களுக்குச் செல்ல வேண்டும். தல யாத்திரை செல்வது என்பது நமது பாரம்பரிய நடைமுறை. அதை இக்கால சந்ததிக்கும் நாம் பழக்கப்படுத்தி அவர்களையும் யாத்திரை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.

* எந்த அளவிற்கு ஒருவர் மனத்தூய்மையோடு விளங்குகிறாரோ, அந்த அளவுக்கே அவருக்கு தலயாத்திரை மேற்கொள்வதனால் நல்லபலன் உண்டாகும். மனத்தூய்மை இல்லாதவர்கள் தலயாத்திரை மேற் கொள்வதால் பலன்களைப் பெற முடிவதில்லை.

இதனால் தான், அவனவன் செய்த வினைப்பயன்களை அவனவன் தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியை ""காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது'' என்று சொல்லும் வழக்கம் வந்து விட்டது போலும்.

* கோவிலுக்குச் செல்வது, திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வது, புனித நீரில் நீராடுவது, பூஜை செய்து இறைவனை துதிகளால் பூஜிப்பது போன்ற செயல்கள் ஒருவனை ஆன்மிகத்தில் செலுத்தும்.


நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்


* வேடர் குலத்து குகனையும், பறவை குலத்து ஜடாயுவையும், வானர குலத்து சுக்ரீவனையும், அரக்கர் குலத்துவிபீஷணனையும் ஸ்ரீ ராமன் ஏற்று தன்னோடு சேர்த்துக் கொண்டது ஆன்மநேய உணர்வுக்கு நல்ல உதாரணமாகும்.


* மரம், செடி, கொடி, மனிதர், விலங்குகள், பறவைகள், மலை, வானம், பூமி என்று நம் கண்ணுக்குத் தெரிவதும், தெரியாததுமாகிய அனைத்துப் பொருட்களிலும் ஒரே ஆன்மாவே வியாபித்திருக்கிறது.


* அன்பு ஒரு தெய்வீக குணம் என்பதால் தான் "அன்பே சிவம்' என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டார். வள்ளல் பெருமான் "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை' என்று இறைவனின் பெருமையைப் பாடுகிறார்.


* கடவுளுக்காக என்று பிராணிகளைக் கொல்பவர்கள் நெஞ்சில் சிறிதும் ஈரம் இல்லாதவர்கள் ஆவர்.


* தானம், தவம், அன்பு கொண்டவர்கள் புண்ணிய உலகங்களாகிய சொர்க்கத்தை அடைவார்கள். காமம், கோபம், பேராசை போன்ற துர்க்குணங்களை கொண்டவர்கள் துன்பம் தரும் நரக உலகத்தை அடைகிறார்கள்.





கமலாத்மானந்தர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக