ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணியாரம் சாப்பிட்டு விட்டு...

4 posters

Go down

 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Empty பணியாரம் சாப்பிட்டு விட்டு...

Post by சிவா Sun Nov 11, 2012 1:45 am

முன்னொரு காலத்தில் ரத்தினபுரி நாட்டை ஆண்டு வந்த அரசர், தன் மந்திரி வர்ணனிடம் பேசிக் கொண்டு இருந்தார். அவர்களின் பேச்சு அறிவுக்கூர்மை பற்றி இருந்தது.

""அறிவுக்கூர்மை உடையவர்களால் எதையும் செய்து முடிக்க முடியும். அவர்களால் செய்ய இயலாத செயலே இல்லை,'' என்று கூறினான் மந்திரி.

அவன் கருத்தை அரசர் ஒப்புக் கொள்ளவில்லை.

""அரசே! செய்ய இயலாத செயல் ஒன்றைச் சொல்லுங்கள்... நான் அதைச் செய்து காட்டுகிறேன்,'' என்றான் மந்திரி!

""மந்திரியே! நீ ஏதேனும் வீரச் செயல் செய்யப் போவதாகச் சொல்ல வேண்டும். அதற்காக மக்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதைச் செய்யாமல் அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும். உன்னால் முடியுமா?'' என்றார் அரசர்.

""அரசே! மிக எளிய செயலைத்தான் சொல்லி இருக்கிறீர்!'' என்றான் மந்திரி.

""மந்திரியாரே! நீ நினைப்பது போல் இது எளிய செயல் அல்ல. வீரச் செயல் செய்வதாகச் சொல்லி, மக்களின் கூட்டத்தைக் கூட்டுவது எளிது. பிறகு அதைச் செய்யாவிட்டால், அந்தக் கூட்டம் உன்னைத் தப்பிக்க விடாது. நீ அவமானப்படத்தான் போகிறாய்,'' என்றார்.

""அரசே! இதில் எனக்கு எந்த அவமானமும் ஏற்படாது. பொறுத்திருந்து பாருங்கள்,'' என்ற மந்திரி அங்கிருந்து சென்றான்.

சில நாட்கள் சென்றன-

மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதைப் பார்த்தார் அரசர்.

வியப்படைந்த அவர் தன் வேலையாட்களிடம், ""மக்கள் கூட்டமாக எங்கே செல்கின்றனர்?'' என்று கேட்டார்.

""அரசே! எல்லோரும் கோயிலை நோக்கிச் செல்கின்றனர். அங்கே கோபுரத்தின் உச்சியில் மந்திரி நின்று கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் கீழே குதிக்கப் போகிறேன் என்று கத்திக் கொண்டிருக்கிறார். அதை வேடிக்கை பார்க்கத்தான் எல்லாரும் சென்று கொண்டிருக்கின்றனர்,'' என்றான்.

தான் வைத்த சோதனையின் முதல் பகுதியை செய்துவிட்டான். இதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கப் போகிறான்? அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது.

என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்க்க அவரும் அருகே சென்றார்.

கோபுரத்தின் உச்சியில் மந்திரி நின்றிருந்தான்.

""இன்னும் சிறிது நேரத்தில் கீழே குதிக்கப் போகிறேன். இப்படி யாரும் இதுவரை செய்தது இல்லை,'' என்று கத்திக் கொண்டிருந்தான்.

அவன் குதிப்பதை வேடிக்கை பார்க்க நகர மக்கள் எல்லாரும் அங்கே வந்திருந்தனர்.

""நான் ஒன்று, இரண்டு என்று பத்து வரை எண்ணப் போகிறேன். பத்து என்று சொன்னதும், கீழே குதிக்கப் போகிறேன். நான் பேச்சு தவற மாட்டேன். என் வீரச் செயலைப் பார்க்கத்தான் போகிறீர்கள்,'' என்ற அவன் ஒன்று, இரண்டு என்று எண்ணத் தொடங்கினான்.

என்ன நடக்கப் போகிறதோ என்று ஆர்வத்துடன் மக்கள் பார்த்துக் கொண்டிந்தனர்.

ஒன்று, இரண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தான் மந்திரி. அவன் கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடின... தான் தேடியவன் வந்திருப்பதை அறிந்து, தொடர்ந்து எண்ணத் தொடங்கினான்.

அவன் ஒன்பது என்று எண்ணினான்.

கூட்டத்திலிருந்து ஒரு குரல், ""எண்ணுவதை நிறுத்தி விட்டுக் கீழே வாருங்கள்,'' என்று கேட்டது.

யார் குரல் கொடுத்தது என்று எல்லாரும் பார்த்தனர்.

அங்கே மந்திரியின் மகன் கையில் ஒரு பாத்திரத்துடன் நின்றிருந்தான்.

உரத்த குரலில் அவன், ""தந்தையே! உங்களுக்கு மிகவும் பிடித்தமான பணியாரம், அம்மா ஆசையாக உங்களுக்காகச் செய்தது. கீழே இறங்கி வந்து இதைச் சாப்பிடுங்கள். பிறகு குதியுங்கள் மீண்டும் இதைச் சாப்பிடுவீர்களோ, இல்லையோ... யார் கண்டது!'' என்றான்.

""எனக்கு மிகவும் பிடித்த பணியாரத்தை என் மகன் கொண்டு வந்திருக்கிறான். நீங்கள் அனுமதி தந்தால் அதைச் சாப்பிட்டு விட்டுப் பிறகு குதிக்கிறேன். நீங்கள் அனுமதி தருவீர்களா?'' என்று கேட்டான்.

எல்லாரும் தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்தனர்.

""பணியாரத்தைச் சாப்பிட்டு விட்டுக் கீழே குதி,'' என்று அவர்களில் ஒருவர் குரல் கொடுத்தார்.

கீழே இறங்கி வந்தான் மந்திரி. தன் மகனின் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கினான். அதிலிருந்த பணியாரத்தைச் சுவைத்துச் சாப்பிட்டான். அப்படியே மயங்கி விழுந்தான்.

இதைப் பார்த்த கூட்டத்திலிருந்த சிலர், ""அதிர்ச்சியில் மயக்கமாகி விட்டான்,'' என்றனர்.

மற்றும் சிலர், ""உயிர் தப்புவதற்காக மயக்கம் வந்தது போல நடிக்கிறான்,'' என்றனர்.

அரண்மனை மருத்துவர் அங்கு வந்தார்.

மந்திரியை சோதித்த அவர், ""உண்மையிலேயே மயக்கமாகி விட்டான். மயக்கம் தெளிய ஏழெட்டு மணி நேரம் ஆகும்,'' என்றார்.

மந்திரியை, அவர் வீட்டிற்குத் தூக்கிச் சென்றனர்.

""ஐயோ! இப்படியாகி விட்டதே!'' என்று பேசிக் கொண்டே கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.

மறுநாள் அரசரைச் சந்தித்தான் மந்திரி.

""நீங்கள் சொன்னது போல வீரச் செயல் செய்வதாக பெரிய கூட்டத்தைக் கூட்டினேன். அவர்கள் எதிரிலேயே அந்தச் செயலைச் செய்யாமல் வந்து விட்டேன். எப்படி என் திறமை?'' என்று கேட்டான்.

""அப்போது உன் மகன் பணியாரங்களுடன் வரவில்லையானால் உன் நிலை, என்னவாகி இருக்கும்?'' என்று கேட்டார் அரசர்.

""அரசே! அந்தப் பணியாரங்களுக்குள் மயக்க மருந்து கலந்து எடுத்து வரச் சொன்னதே நான்தான். எல்லாம் என் திட்டப்படி நடந்தது,'' என்றான் மந்திரி.

""அறிவுக்கூர்மை உள்ளவர்களை யாராலும் வெற்றி பெற முடியாது என்பதை உன் மூலம் புரிந்து கொண்டேன்,'' என்று அவனைப் பாராட்டினார் அரசர்.

***

சிறுவர் மலர்


 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Empty Re: பணியாரம் சாப்பிட்டு விட்டு...

Post by மாணிக்கம் நடேசன் Mon Nov 12, 2012 7:51 am


இப்படித்தான் பல தலவைகள் என் மனைவியை நான் ஏமாற்றி இருக்கிறேன்.
என்னைப் போலவேதான் அந்த மந்திரியும், அந்த அளவுக்கு புத்திசாலி.
தலையில முடி இல்லேன்னா மூளை கூடவா இல்லாம போயிடும்.
எந்த மூலையில் இருந்தாலும், மின்னல் வேகத்துல யோசிப்போமில்ல.

நன்றி மாமா அங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Empty Re: பணியாரம் சாப்பிட்டு விட்டு...

Post by றினா Mon Nov 12, 2012 1:20 pm

மாணிக்கம் நடேசன் wrote:
இப்படித்தான் பல தலவைகள் என் மனைவியை நான் ஏமாற்றி இருக்கிறேன்.
என்னைப் போலவேதான் அந்த மந்திரியும், அந்த அளவுக்கு புத்திசாலி.
தலையில முடி இல்லேன்னா மூளை கூடவா இல்லாம போயிடும்.
எந்த மூலையில் இருந்தாலும், மின்னல் வேகத்துல யோசிப்போமில்ல.

நன்றி மாமா அங்கள்.

அதுசரி, உங்க மனைவியோட போன் நம்பரைக் கொடுக்கமுடியுமா?

Spoiler:


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Empty Re: பணியாரம் சாப்பிட்டு விட்டு...

Post by ஜாஹீதாபானு Mon Nov 12, 2012 5:00 pm

http://www.eegarai.net/t91188-topic இது ஏற்கனவே உள்ளது...




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Empty Re: பணியாரம் சாப்பிட்டு விட்டு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எலி பேஸ்ட்டை சாப்பிட்டு விட்டு.. ஆஸ்பத்திரியில் தானே அட்மிட் ஆன பெண் போலீஸ்..
» மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» [b]வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் . [/b]

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum