புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
59 Posts - 50%
heezulia
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
3 Posts - 3%
Shivanya
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
12 Posts - 2%
prajai
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
9 Posts - 2%
Guna.D
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
4 Posts - 1%
Jenila
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
4 Posts - 1%
jairam
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நண்பனே உன் சமத்து Poll_c10நண்பனே உன் சமத்து Poll_m10நண்பனே உன் சமத்து Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனே உன் சமத்து


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 03, 2012 11:09 am

“பொறுப்பு என்பது
ஒரு குரங்கு.
குரங்கு யார் தோளில்
உள்ளதோ, அவர்கள் தான்
அந்தப் பொறுப்பை ஏற்று
பிரச்சனைக்குத் தீர்வு
காண வேண்டும்.”


குரங்கு ஒன்று என் நண்பனின் சட்டைப்பையில் ஏறிவிட்டது. அவன் தவித்துக் கொண்டிருந்தான். அதைப்பார்த்து நான் என் நண்பனிடம் கவலைப்பட வேண்டாம், குரங்கை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அவன் சட்டைப் பையில் இருக்கும் குரங்கை நான் பையில் ஏற்றிக் கொண்டேன். குழப்பமாக உள்ளதா? உங்கள் குழப்பத்தை தெளிவாக்க மேலும் படியுங்கள்.

ஒருநாள் காலையில் சாலையில் நடந்து செல்லும் சூர்யா, தனது நண்பன் ஈஸ்வரனைக் காண்கிறான். அவனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகிறான் சூர்யா. பள்ளிப் பருவத்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் காணப்பட்டவன், இப்போது மிகவும் தளர்ந்து போய் சோர்வாகக் காணப்பட்டான். 35 வயது ஈஸ்வர் 50 வயது ஆளைப்போல் தோற்றமளித்தான். அவன் முகத்தில் சுறுக்கம், பேச்சில் தடுமாற்றம், உடம்பில் தளர்ச்சி.

ஈஸ்வருக்கு அப்படி என்னதான் பிரச்சனை என்று கேட்கிறான் சூர்யா. அவனிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் தனக்காக நேரம் செலவிட முடியவில்லை, எப்பொழுதும் அடுத்தவருக்காக வேலை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது என்கிறான் ஈஸ்வர். ஈஸ்வரிடம் விளக்கமாக அவனது பிரச்சனையைக் கூறச் சொல்கிறான் சூர்யா.

ஈஸ்வருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் கிரிக்கெட் விளையாடுவதில் கெட்டிக்காரன். அவனை தினமும் காலை 6ல் இருந்து 7 வரை கிரிக்கெட் பயிற்சிக்கு கூட்டிச் செல்ல வேண்டும். அங்கு அவனுக்குத் தேவையான Glucose, Cricket Set வாங்கிக் கொடுத்து ஜெயித்தால் அவனுக்குப் பரிசும், தோற்றால் அவனை அரவணைத்து ஆறுதலும் கூற வேண்டும்.
இது முடிந்து வீட்டிற்கு வந்தபின்னர் மனைவியை ஆபிஸ் அழைத்துச் செல்ல வேண்டும். மனைவியை ஆபிஸில் விட்டுவிட்டு, ஈஸ்வர் தன் அலுவலகம் செல்ல வேண்டும். ஈஸ்வரின் ஆபிஸ் 9 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் அவருடைய மனைவியின் ஆபிஸ் 8 மணிக்கு என்பதால் அவருடைய மனைவியை ஆபிஸில் விட்டுவிட்டு தன் ஆபிஸிற்கு 45 நிமிடங்கள் முன்னதாகவே போய்விடுகிறார். வீட்டில் எஹள் தீர்ந்துவிட்டது என்று மனைவி கூறினால், ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பார் ஈஸ்வர். அதேபோல் அவருடைய மகனுக்கு ஸ்கூலில் பிரச்சனை என்றாலும் ஈஸ்வர் சென்று பார்த்துக் கொள்வார்.
ஈஸ்வர் பணிபுரியும் ஆபிஸில் அவர் ஒரு மானேஜர். ஈஸ்வரிடம் வேலைசெய்யும் பியூன் வந்து File ரெடியாகவில்லை. எனக்கும் கிளார்க்குக்கும் பிரச்சனை என்பான். உடனே ஈஸ்வர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இப்படி அவரிடம் வேலை செய்யும் யாருக்கும் பிரச்சனை என்றால், உடனே நான் பார்த்துக் கொள்கிறேன் என்பார் ஈஸ்வர்.
அதேபோல் ஈஸ்வரின் நண்பன் சாய், ஈஸ்வரை தொலைபேசியில் விளித்து, தனக்கு கலெக்டர் ஆபிஸில் ஒரு வேலை இருக்கிறது, அதை யாரைக் கொண்டு செய்ய வேண்டும் என்று கேட்கிறான். அதற்கும் ஈஸ்வர், ‘விடு இந்தப் பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறுகிறான்.

இப்படியாக அலுவலகத்திலும், குடும்பத்திலும், நண்பர்களிடமும் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தான் தீர்வு காண முயற்சிப்பதால்தான், அவருக்கு என்று செலவிட நேரமில்லை என்ற முடிவுக்கு வருகிறார் சூர்யா. இதற்கு ஒரு தீர்வும் சொல்கிறான் சூர்யா.

பொறுப்பு என்பது ஒரு குரங்கு. குரங்கு யார் தோளில் உள்ளதோ, அவர்கள் தான் அந்த பொறுப்பை ஏற்று பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். இந்தக் குரங்கை மற்றவர் தோளில் ஏற்றும் பல மனிதர்கள் கெட்டிக்காரர்கள். குரங்கைத் தன் தோளில் ஏற்றுக்கொண்டு, பிரச்சனைக்குத் தீர்வு காண படாதபாடுபடும் மனிதர்கள் ஈஸ்வரனைப் போல் பல பேர் இருக்கிறார்கள்.
இதற்கு முதல் எடுத்துக்காட்டு, ஈஸ்வர் சிறுவயதில் இருக்கும்போது அவனுடைய வேலையை அவன் செய்ய அவன் அப்பா கற்றுக்கொடுத்து இருக்கிறார். சிறுவயதில் விளையாடச் செல்ல வேண்டும் என்றால் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு தானே விளையாடச் செல்வார். வெற்றி பெற்றால் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வார். தனக்கு வேண்டியதைத் தானே வாங்கிக் கொள்வார். இப்படித் தன்னுடைய வேலைகளைத் தானே செய்ய ஈஸ்வரின் அப்பா கற்றுக்கொடுத்திருக்கிறார். அதனால் ஈஸ்வருக்கு அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் பற்றி நன்றாகவே தெரியும்.

ஆனால் ஈஸ்வரோ, தன் மகன் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்து, அவனுடைய வேலைகள் அனைத்தையும் தானே செய்கிறார். அதாவது தன் மகனுடைய குரங்கைத் தன் தோளில் ஏற்றிக் கொள்கிறான். ‘முதலில் அந்தக் குரங்கை மகனின் தோளில் ஏற்றிவை, அவனுடைய வேலைகளை அவனையே செய்யப் பழக்கு’ என்று கூறுகிறான் சூர்யா.
அடுத்ததாக, அவனுடைய மனைவி. ‘வீட்டுப் பொறுப்பில் உள்ள வேலைகளில் பாதியை நீ செய், மீதியை உன் மனைவியைச் செய்யச்சொல்’. வீடு, வேலை என்பது இருவருக்கும் பொதுவான விஷயம். அதனால் கணவன், மனைவி இருவரும் தங்களது வேலைகளைப் பகிர்ந்து தானே செய்தால் ஒருவருக்கு மட்டும் வேலைப்பளு அதிகம் ஆகாது. அவரவர் குரங்கை அவரவர் தோளில் ஏற்றிக் கொள்ளவேண்டும். அதைவிட்டுவிட்டு எல்லாக் குரங்கையும் உன் தோளில் ஏற்றினால் உனக்குத்தான் கஷ்டம்’ என்று கூறுகிறான் சூர்யா.

அடுத்ததாக அலுவலகம், பியூன்-கிளர்க் பிரச்சனையை எல்லாம் தன் தோளில் ஏற்றக்கூடாது. அவர்களுடைய பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த உதவியை மட்டுமே செய்ய வேண்டும். பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி, அந்தக் குரங்கை நம் தோளில் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
அதேபோல் ஈஸ்வரின் நண்பன் அழைத்து தனக்கு பிரச்சனை என்று கூறினால், பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று அறிவுரை கூற வேண்டும். அந்தக் குரங்கையும் உன் தோளில் ஏற்றினால் நண்பனுக்கு தனது வேலையைத் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணமே வராது.

இதுபோன்ற அநாவசிய வேலைகளை அதாவது அடுத்தவர் குரங்கை எடுத்து தன் தோளில் விட்டுக் கொண்டால் தனக்கு வேண்டிய வேலைகளை சரியாக செய்ய முடியாது. தனக்கு என்று நேரமும் ஒதுக்க முடியாது.
நாம் அனைவரும் ஒரு நாளைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அட்டவணைப்படுத்த வேண்டும். அதில் எதையெல்லாம் அடுத்தவருக்காக செய்யப் போகிறோம் என்பதை ஆராய்ந்த பின்னரே பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா, இல்லையா என்ற முடிவுக்கு வர வேண்டும்.

ஒரு குதிரையின் தாகம் தீர்ப்பதற்கு நாம் குதிரைக்கு தண்ணீர்த்தொட்டி எங்கு உள்ளது என்று காட்ட வேண்டுமே தவிர, தண்ணீரையே கொண்டுவந்து குதிரைக்குக் கொடுக்கக்கூடாது. தண்ணீர்த் தொட்டியிடம் செல்லும் பொறுப்பை குதிரையிடமே கொடுக்க வேண்டும். இப்படி மற்றவர்களுக்கு அவர்களின் வேலையை அவர்களே செய்ய உதவுதல் மூலம், நாம் அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி மற்றும் நேரம் சேமித்தல் போன்ற நற்பண்புகள் வரை உதவுகிறோம். நம்முடைய வேலையை சிறப்பாக செய்ய நிறைய நேரம் கிடைக்கும். வாழ்க்கை இன்பமாக அமையும்.


நண்பனே, இதைக்கடைபிடித்து வெற்றி காண்பது உன் சமத்து.

நன்றி:- தன்னம்பிக்கை



ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பனே உன் சமத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 03, 2012 11:23 am

நல்ல பகிர்வு பாலா.

இந்தக் குரங்கு என்கிட்டே வந்தா வண்டலூர்ல விட்டுடறேன்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 03, 2012 11:42 am

நன்றி கிங் காங் அண்ணாச்சி சூப்பருங்க அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பனே உன் சமத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sat Oct 13, 2012 2:14 pm

நல்ல பகிர்வு
எப்போதாவது மற்றவர்கள் குரங்கை நம் தோளில் சுமப்பது தவறல்ல. அனால் எப்போதுமே என்றால் அது நமக்குத்தான் சுமை. தொடருங்கள் பாலாகார்த்திக் .



''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
நண்பனே உன் சமத்து 961517
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 13, 2012 2:19 pm

மிக்க நன்றி கோபாலன் புன்னகை புன்னகை அருமையிருக்கு நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பனே உன் சமத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 13, 2012 3:08 pm

அந்த குரங்கை என்னிடம் கொடுங்கள் .....


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 13, 2012 3:11 pm

பூவன் wrote:அந்த குரங்கை என்னிடம் கொடுங்கள் .....

குடும்ப பாசம் அழைக்கிறதா



ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பனே உன் சமத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 13, 2012 3:13 pm

இருக்காதா என்ன பழைய நம்மின் பழைய பாசமும் அதுதானே >>>

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sat Oct 13, 2012 3:22 pm

இந்த காலத்துல இப்படி யாராவது இருப்பாங்களா என்ன ?????

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 13, 2012 3:44 pm

ருக்மணி wrote:இந்த காலத்துல இப்படி யாராவது இருப்பாங்களா என்ன ?????

யாரை கேக்குறிங்க அந்த நண்பனையா இல்ல குரங்கையா



ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பனே உன் சமத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக