Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதையில் யாப்பு
+13
அசுரன்
mbalasaravanan
yarlpavanan
dhilipdsp
ச. சந்திரசேகரன்
jenisiva
கா.ந.கல்யாணசுந்தரம்
அச்சலா
kirikasan
T.N.Balasubramanian
ரா.ரா3275
சதாசிவம்
ரமணி
17 posters
Page 4 of 29
Page 4 of 29 • 1, 2, 3, 4, 5 ... 16 ... 29
கவிதையில் யாப்பு
First topic message reminder :
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: கவிதையில் யாப்பு
விரும்புகிறேன் உங்கள் கவிதைகளை தொடருங்கள் ....
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கவிதையில் யாப்பு
3.11. துள்ளல் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. விடை
படியளக்கப் பெருமாளின் வரம்தரும்கை இருக்கிறதே!
அடிநோக்க நதிகங்கா அமுதூற்றாய்ப் பொழிகிறதே!
படி/யளக்/கப் பெரு/மா/ளின் வரம்/தரும்/கை இருக்/கிற/தே!
அடி/நோக்/க நதி/கங்/கா அமு/தூற்/றாய்ப் பொழி/கிற/தே!
நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நிரைநிரைநேர்
நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர்
சீர்கள் அனைத்திலும் பயில்வது காய்-முன்-நிரை வந்த கலித்தளை.
இரண்டு அடிகளுக்கு இடையேயும் கலித்தளை பயில்வது காண்க.
பயிற்சி 2. விடை
வானத்தின் பரப்பினிலே முகிலேதும் சுவடில்லை!
சூரியனே தெரியாத வெளியெங்கும் நிறம்நீலம்!
இந்த அடிகள் சீரிடை மட்டும் தளைப்பது காண்க.
பயிற்சி 3. விடை
சிதைந்துபோன மனையினிலே சிலந்திகளின் வலையாவும்
உறைந்தெங்கும் கிடக்கின்ற இருள்தனிலே நுழைந்திட்டால்
முகத்தினிலே படிந்திறங்கி விழியினையே மறைத்துநிற்க
அகத்தினிலே உதயமாகும் இனம்புரியாத் திகிலொன்று.
பயிற்சி 4. விடை
பனிக்காலப் பருவத்தில் அதிகாலை எழுந்தவுடன்
தனியாக நகரத்தின் தெருக்களிலே உலாவந்து
மணிகண்டன் கடையினிலே ஒருகோப்பை இலைத்தேநீர்
பருகிநின்று உரையாடிக் களித்தநாட்கள் இனிவருமோ?
பயிற்சி 1. விடை
படியளக்கப் பெருமாளின் வரம்தரும்கை இருக்கிறதே!
அடிநோக்க நதிகங்கா அமுதூற்றாய்ப் பொழிகிறதே!
படி/யளக்/கப் பெரு/மா/ளின் வரம்/தரும்/கை இருக்/கிற/தே!
அடி/நோக்/க நதி/கங்/கா அமு/தூற்/றாய்ப் பொழி/கிற/தே!
நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நிரைநிரைநேர்
நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர்
சீர்கள் அனைத்திலும் பயில்வது காய்-முன்-நிரை வந்த கலித்தளை.
இரண்டு அடிகளுக்கு இடையேயும் கலித்தளை பயில்வது காண்க.
பயிற்சி 2. விடை
வானத்தின் பரப்பினிலே முகிலேதும் சுவடில்லை!
சூரியனே தெரியாத வெளியெங்கும் நிறம்நீலம்!
இந்த அடிகள் சீரிடை மட்டும் தளைப்பது காண்க.
பயிற்சி 3. விடை
சிதைந்துபோன மனையினிலே சிலந்திகளின் வலையாவும்
உறைந்தெங்கும் கிடக்கின்ற இருள்தனிலே நுழைந்திட்டால்
முகத்தினிலே படிந்திறங்கி விழியினையே மறைத்துநிற்க
அகத்தினிலே உதயமாகும் இனம்புரியாத் திகிலொன்று.
பயிற்சி 4. விடை
பனிக்காலப் பருவத்தில் அதிகாலை எழுந்தவுடன்
தனியாக நகரத்தின் தெருக்களிலே உலாவந்து
மணிகண்டன் கடையினிலே ஒருகோப்பை இலைத்தேநீர்
பருகிநின்று உரையாடிக் களித்தநாட்கள் இனிவருமோ?
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: கவிதையில் யாப்பு
பயிற்சி 5. துள்ளல் வரத் திருத்துதல்
கீழ்வரும் புகழ்பெற்ற திரையிசைப் பாடலின்
வரிகள் யாவும் கலித்தளை பயின்று
துள்ளல் ஓசை கேட்க எழுதுக.
நினைததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
பயிற்சி 6. கலைந்த சொற்களிலிருந்து காய்-முன்-நிரையென முழுவதும் கலித்தளை வரும் துள்லல்
கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
நான்கு அடிகளில் கலித்தளை பயின்று
துள்லல் ஓசை கேட்க எழுதுக.
விரல்களிலே அபிநயித்து அகத்தினிலே முகத்தினிலே விழிகளிலே நடையினிலே அதிமின்னல் சுடரொளியாள்
ஜதியன்னம். நினைத்ததெல்லாம் விழிகளிலே நடனமாடும் தருவித்து விழிவீச்சில் பரதமங்கை முழுமதியாள்
பயிற்சி 7. ஓசையும் தளைக்கும் சீர்களும்
கீழ்வரும் அடிகளில் சீரிடை அடியிடைக்
கலித்தளையே வந்தாலும் அடியொன்றும் இரண்டும்
ஓசையில் வேறுபடும் காரணம் ஆய்க.
படித்ததொன்று கிடைத்ததொன்று நினைத்ததொன்று நடந்ததொன்று
அடிகளிலே அகப்பட்ட உதைபந்து உழல்கின்றேன்.
கீழ்வரும் புகழ்பெற்ற திரையிசைப் பாடலின்
வரிகள் யாவும் கலித்தளை பயின்று
துள்ளல் ஓசை கேட்க எழுதுக.
நினைததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
பயிற்சி 6. கலைந்த சொற்களிலிருந்து காய்-முன்-நிரையென முழுவதும் கலித்தளை வரும் துள்லல்
கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
நான்கு அடிகளில் கலித்தளை பயின்று
துள்லல் ஓசை கேட்க எழுதுக.
விரல்களிலே அபிநயித்து அகத்தினிலே முகத்தினிலே விழிகளிலே நடையினிலே அதிமின்னல் சுடரொளியாள்
ஜதியன்னம். நினைத்ததெல்லாம் விழிகளிலே நடனமாடும் தருவித்து விழிவீச்சில் பரதமங்கை முழுமதியாள்
பயிற்சி 7. ஓசையும் தளைக்கும் சீர்களும்
கீழ்வரும் அடிகளில் சீரிடை அடியிடைக்
கலித்தளையே வந்தாலும் அடியொன்றும் இரண்டும்
ஓசையில் வேறுபடும் காரணம் ஆய்க.
படித்ததொன்று கிடைத்ததொன்று நினைத்ததொன்று நடந்ததொன்று
அடிகளிலே அகப்பட்ட உதைபந்து உழல்கின்றேன்.
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: கவிதையில் யாப்பு
பயிற்சி 5. விடை
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் கடவுளென்று எதுவுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் மனதிலென்றும் அமைதியில்லை
பயிற்சி 6. விடை
முகத்தினிலே முழுமதியாள் விழிகளிலே சுடரொளியாள்
அகத்தினிலே நினைத்ததெல்லாம் விரல்களிலே அபிநயித்து
விழிகளிலே தருவித்து நடனமாடும் பரதமங்கை
விழிவீச்சில் அதிமின்னல் நடையினிலே ஜதியன்னம்.
பயிற்சி 7. விடை
படித்ததொன்று கிடைத்ததொன்று நினைத்ததொன்று நடந்ததொன்று
அடிகளிலே அகப்பட்ட உதைபந்தாய் உழல்கின்றேன்.
படித்/ததொன்/று கிடைத்/ததொன்/று நினைத்/ததொன்/று நடந்/ததொன்/று
அடி/களி/லே அகப்/பட்/ட உதை/பந்/தாய் உழல்/கின்/றேன்.
நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நிரைநிரைநேர்
நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர்
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
கருவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
இரண்டு அடிகளிலும் சீர்கள் அனைத்தும் நிரைமுதல் வருவதாயினும்
அடியொன்றில் நிரையசை மிகுந்தும் அடியிரண்டில் நேரசை மிகுந்தும் வருவதால்,
முழுவதும் கலித்தளையே பயின்றாலும் ஓசையில் வேறுபாடு கேட்கலாம்.
தவிர, இவ்விரு அடிகளில் ’படித்ததொன்று’, ’அடிகளிலே’ எனும் முதற்சீர்களில்
அசைகள் நிரைநிரைநேர் என்றே வந்தாலும் ’அடிகளிலே’ எனும் சீர்
’படித்ததொன்று’ எனும் சீரைவிடக் குறைந்த நேரத்தில் ஒலிக்கிறது.
இவற்றால் அறியும் நடைமுறை உண்மைகள்:
ஒரு செய்யுளில் பயிலும் ஓசையை நிர்ணயிப்பதில் அதில் பயிலும்
1. தளைகளுக்கே இலக்கணத்தில் முன்னுரிமை என்றாலும்
2. சீர்கள் தாம் ஒலிக்கும் நேரத்தாலும்
3. எதுகை, மோனை, இயைபு போன்ற தொடைகளாலும்
4. சொற்கள் தம்முள் கொண்ட வல்லின மெல்லின இடையின எழுத்துகளாலும்
ஓசையில் மாற்றங்கள் உண்டுபண்ணலாம்.
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் கடவுளென்று எதுவுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் மனதிலென்றும் அமைதியில்லை
பயிற்சி 6. விடை
முகத்தினிலே முழுமதியாள் விழிகளிலே சுடரொளியாள்
அகத்தினிலே நினைத்ததெல்லாம் விரல்களிலே அபிநயித்து
விழிகளிலே தருவித்து நடனமாடும் பரதமங்கை
விழிவீச்சில் அதிமின்னல் நடையினிலே ஜதியன்னம்.
பயிற்சி 7. விடை
படித்ததொன்று கிடைத்ததொன்று நினைத்ததொன்று நடந்ததொன்று
அடிகளிலே அகப்பட்ட உதைபந்தாய் உழல்கின்றேன்.
படித்/ததொன்/று கிடைத்/ததொன்/று நினைத்/ததொன்/று நடந்/ததொன்/று
அடி/களி/லே அகப்/பட்/ட உதை/பந்/தாய் உழல்/கின்/றேன்.
நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நிரைநிரைநேர்
நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர்
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
கருவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
இரண்டு அடிகளிலும் சீர்கள் அனைத்தும் நிரைமுதல் வருவதாயினும்
அடியொன்றில் நிரையசை மிகுந்தும் அடியிரண்டில் நேரசை மிகுந்தும் வருவதால்,
முழுவதும் கலித்தளையே பயின்றாலும் ஓசையில் வேறுபாடு கேட்கலாம்.
தவிர, இவ்விரு அடிகளில் ’படித்ததொன்று’, ’அடிகளிலே’ எனும் முதற்சீர்களில்
அசைகள் நிரைநிரைநேர் என்றே வந்தாலும் ’அடிகளிலே’ எனும் சீர்
’படித்ததொன்று’ எனும் சீரைவிடக் குறைந்த நேரத்தில் ஒலிக்கிறது.
இவற்றால் அறியும் நடைமுறை உண்மைகள்:
ஒரு செய்யுளில் பயிலும் ஓசையை நிர்ணயிப்பதில் அதில் பயிலும்
1. தளைகளுக்கே இலக்கணத்தில் முன்னுரிமை என்றாலும்
2. சீர்கள் தாம் ஒலிக்கும் நேரத்தாலும்
3. எதுகை, மோனை, இயைபு போன்ற தொடைகளாலும்
4. சொற்கள் தம்முள் கொண்ட வல்லின மெல்லின இடையின எழுத்துகளாலும்
ஓசையில் மாற்றங்கள் உண்டுபண்ணலாம்.
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: கவிதையில் யாப்பு
பயிற்சி 8. வல்லின மெல்லின இடையினம் பயிலும் அடிகள்
கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
முதலடியில் வல்லினம் அடியிரண்டில் மெல்லினம்
அடிமூன்றில் இடையின எழுதுக்கள் மிகுவந்து
சீர்களிடை மட்டும் கலித்தளை பயின்று
துள்லல் ஓசை கேட்க எழுதுக.
வாழ்வினிலே
சுடுபேச்சு
உயர்ந்தாலும்
எஞ்ஞான்றும்
முகத்தோற்றம்
உதட்டினிலே
மணமுறிவு
கடுகடுக்கும்
நிழல்வாழ்வு.
தசந்தேகம்
மனம்நீங்கா
வளமில்லா
பயிற்சி 9. ஓசையில் மோனையும் எதுகையும்
கீழ்வரும் செய்யுளை அளவிட்டுப் பயிலும்
தளைகள் எதுகை மோனையும் குறித்து
தளைபிற விரவியும் துள்ளல் பயின்று
செய்யுளில் வந்திடும் வழிவகை அறிக
மீன்துள்ளும் குளத்தினிலே கயல்விழியாள் துள்ளுவதும்
மான்துள்ளும் வனத்தினிலே மறியெனவே துள்ளுவதும் ... [மறி = மான்குட்டி]
ஊன்துள்ளும் உடல்துள்ளப் பதம்துள்ள ஆடுவதை
மனம்துள்ள நாத்துள்ள நானுரைக்க நாணுவதேன்?
பயிற்சி 10. உரைநடைப் பொருளிலிருந்து துள்ளல்
புகைவண்டி வேகமாச் செல்லும்போது எழும் ஒலிக்குழப்பத்தில் மனம் கலங்குவதும்
வண்டி மெல்லச் செல்லும்போது எழும் ஒலியிசைவில் மகிழ்வதையும் நான்கு வரிகளில்
எதுகை மோனை அமைத்துக் கலித்தளை பெரிதும் வந்து துள்ளல் ஒலி கேட்க எழுக.
[உதவி: புகைவண்டியின் செல்லும்போது எழும் ஒலிக்குழப்பம் சுட்ட வல்லினம் மிகும் சீர்களையும்
ஒலியிசைவுக்கு இடையினம் மெல்லினம் மிகும் சீர்களையும் பயன்படுத்தவும்.]
*****
கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
முதலடியில் வல்லினம் அடியிரண்டில் மெல்லினம்
அடிமூன்றில் இடையின எழுதுக்கள் மிகுவந்து
சீர்களிடை மட்டும் கலித்தளை பயின்று
துள்லல் ஓசை கேட்க எழுதுக.
வாழ்வினிலே
சுடுபேச்சு
உயர்ந்தாலும்
எஞ்ஞான்றும்
முகத்தோற்றம்
உதட்டினிலே
மணமுறிவு
கடுகடுக்கும்
நிழல்வாழ்வு.
தசந்தேகம்
மனம்நீங்கா
வளமில்லா
பயிற்சி 9. ஓசையில் மோனையும் எதுகையும்
கீழ்வரும் செய்யுளை அளவிட்டுப் பயிலும்
தளைகள் எதுகை மோனையும் குறித்து
தளைபிற விரவியும் துள்ளல் பயின்று
செய்யுளில் வந்திடும் வழிவகை அறிக
மீன்துள்ளும் குளத்தினிலே கயல்விழியாள் துள்ளுவதும்
மான்துள்ளும் வனத்தினிலே மறியெனவே துள்ளுவதும் ... [மறி = மான்குட்டி]
ஊன்துள்ளும் உடல்துள்ளப் பதம்துள்ள ஆடுவதை
மனம்துள்ள நாத்துள்ள நானுரைக்க நாணுவதேன்?
பயிற்சி 10. உரைநடைப் பொருளிலிருந்து துள்ளல்
புகைவண்டி வேகமாச் செல்லும்போது எழும் ஒலிக்குழப்பத்தில் மனம் கலங்குவதும்
வண்டி மெல்லச் செல்லும்போது எழும் ஒலியிசைவில் மகிழ்வதையும் நான்கு வரிகளில்
எதுகை மோனை அமைத்துக் கலித்தளை பெரிதும் வந்து துள்ளல் ஒலி கேட்க எழுக.
[உதவி: புகைவண்டியின் செல்லும்போது எழும் ஒலிக்குழப்பம் சுட்ட வல்லினம் மிகும் சீர்களையும்
ஒலியிசைவுக்கு இடையினம் மெல்லினம் மிகும் சீர்களையும் பயன்படுத்தவும்.]
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: கவிதையில் யாப்பு
மிகச் சிறப்பான பதிவு. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: கவிதையில் யாப்பு
3.12. தூங்கல் ஓசை
நித்திரை மயக்கம் பயின்று வருமாம்
வஞ்சித் தளையில் தூங்கல் ஓசையில்.
தூங்கலில் வருவது தளைகள் இரண்டு.
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியில்,
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியில்.
தூங்கலை விளக்கும் கீழ்வரும் வஞ்சிப்பா:
வஞ்சித்தளை ஒன்றாமலும் பொருந்தியும்வரும்
தூங்கல்ஒலி ஓரடியினில் முடிவுறுவது வஞ்சிப்பா.
தூங்கலோசை கேட்கிறதா இந்தப்பாவில்?
மாகத்தினர் மாண்புவியினர்
யோகத்தினர் உரைமறையினர்
ஞானத்தினர் நயஆகமப்
பேரறிவினர் பெருநூலினர்
காணத்தகு பல்கணத்தினர்
. . என்றே
---கி.வா.ஜ.
மரபு சார்ந்த உரைகளில் கூறுவர்:
அகவல், செப்பல் இரண்டும் வருமே
செய்யுள் உரைநடை இரண்டு வடிவிலும்;
எனினும், துள்ளல், தூங்கல் இரண்டும்
செய்யுளில் மட்டுமே வருவன. தவிர,
அகவல், செப்பல் அடியிடைத் தளைக்கும்;
துள்ளல், தூங்கல் அடிகளில் மட்டுமே.
3.13. தூங்கல் முயற்சி
நாமும் தூங்கல் புனைந்திடு வோமா?
தூங்கல் ஓசையின் தேவைகள் என்ன?
கனிமுன் நிரையோ நேரோ வரவேண்டும்
கனிச்சீர் மூவசை, நிரையில் முடியும்.
ஆரியபவன் நெய்ரோஸ்ட்டினில் பொய்மணக்குமே!
பிரியாணியில் காய்கறிகளைத் தேடவேண்டுமே!
இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
ஆ/ரிய/பவன் நெய்/ரோஸ்ட்/டினில் பொய்/மணக்/குமே!
பிரி/யா/ணியில் காய்/கறி/களைக் தே/டவேண்/டுமே!
நேர்-நிரை-நிரை நேர்-நேர்-நிரை நேர்-நிரை-நிரை
நிரை-நேர்-நிரை நேர்-நிரை-நிரை நேர்-நிரை-நிரை
தூங்கல் ஓசை இங்கே எப்படி?
தூங்கல் ஓசையில் பாட்டின் விஷயம்
தூங்குவது பற்றி என்பது அல்ல.
அகவலு மின்றிச் செப்பலு மின்றித்
துள்ளலு மின்றி ஒலிகளில் மயக்கம்,
மந்தம், ஓய்வு, ஏக்கம் வந்திடத்
தூங்கல் ஓசை தளைகளில் கேட்கும்!
நித்திரை மயக்கம் பயின்று வருமாம்
வஞ்சித் தளையில் தூங்கல் ஓசையில்.
தூங்கலில் வருவது தளைகள் இரண்டு.
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியில்,
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியில்.
தூங்கலை விளக்கும் கீழ்வரும் வஞ்சிப்பா:
வஞ்சித்தளை ஒன்றாமலும் பொருந்தியும்வரும்
தூங்கல்ஒலி ஓரடியினில் முடிவுறுவது வஞ்சிப்பா.
தூங்கலோசை கேட்கிறதா இந்தப்பாவில்?
மாகத்தினர் மாண்புவியினர்
யோகத்தினர் உரைமறையினர்
ஞானத்தினர் நயஆகமப்
பேரறிவினர் பெருநூலினர்
காணத்தகு பல்கணத்தினர்
. . என்றே
---கி.வா.ஜ.
மரபு சார்ந்த உரைகளில் கூறுவர்:
அகவல், செப்பல் இரண்டும் வருமே
செய்யுள் உரைநடை இரண்டு வடிவிலும்;
எனினும், துள்ளல், தூங்கல் இரண்டும்
செய்யுளில் மட்டுமே வருவன. தவிர,
அகவல், செப்பல் அடியிடைத் தளைக்கும்;
துள்ளல், தூங்கல் அடிகளில் மட்டுமே.
3.13. தூங்கல் முயற்சி
நாமும் தூங்கல் புனைந்திடு வோமா?
தூங்கல் ஓசையின் தேவைகள் என்ன?
கனிமுன் நிரையோ நேரோ வரவேண்டும்
கனிச்சீர் மூவசை, நிரையில் முடியும்.
ஆரியபவன் நெய்ரோஸ்ட்டினில் பொய்மணக்குமே!
பிரியாணியில் காய்கறிகளைத் தேடவேண்டுமே!
இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
ஆ/ரிய/பவன் நெய்/ரோஸ்ட்/டினில் பொய்/மணக்/குமே!
பிரி/யா/ணியில் காய்/கறி/களைக் தே/டவேண்/டுமே!
நேர்-நிரை-நிரை நேர்-நேர்-நிரை நேர்-நிரை-நிரை
நிரை-நேர்-நிரை நேர்-நிரை-நிரை நேர்-நிரை-நிரை
தூங்கல் ஓசை இங்கே எப்படி?
தூங்கல் ஓசையில் பாட்டின் விஷயம்
தூங்குவது பற்றி என்பது அல்ல.
அகவலு மின்றிச் செப்பலு மின்றித்
துள்ளலு மின்றி ஒலிகளில் மயக்கம்,
மந்தம், ஓய்வு, ஏக்கம் வந்திடத்
தூங்கல் ஓசை தளைகளில் கேட்கும்!
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: கவிதையில் யாப்பு
பயனுள்ள பதிவு, தெளிவான ஓடை நீர்போல் அழகாகச் செல்கிறது.
தொடருங்கள்...
தொடருங்கள்...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கவிதையில் யாப்பு
தமிழ் , தமிழன் என்று பேசி திரிந்தாலும் இலக்கியம் , இலக்கணம் பற்றி அறிய முயற்சித்தது இல்லை ... இப்போது அறிய ஆவல் உருவாகிறது .. மிக்க நன்றி
Guest- Guest
Page 4 of 29 • 1, 2, 3, 4, 5 ... 16 ... 29
Similar topics
» யாப்பு
» அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
» சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !
» கவிதையில்...
» சீத்தாப்பழம்....கவிதையில் .
» அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
» சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !
» கவிதையில்...
» சீத்தாப்பழம்....கவிதையில் .
Page 4 of 29
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|