ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:19 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு

+13
அசுரன்
mbalasaravanan
yarlpavanan
dhilipdsp
ச. சந்திரசேகரன்
jenisiva
கா.ந.கல்யாணசுந்தரம்
அச்சலா
kirikasan
T.N.Balasubramanian
ரா.ரா3275
சதாசிவம்
ரமணி
17 posters

Page 29 of 29 Previous  1 ... 16 ... 27, 28, 29

Go down

கவிதையில் யாப்பு - Page 29 Empty கவிதையில் யாப்பு

Post by ரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


கவிதையில் யாப்பு - Page 29 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Sun May 04, 2014 7:38 am

7.23. நிலைமண்டில ஆசிரியப்பா

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மண்டிலம் எனும்சொல் வட்டம் எனப்பொருள்
மண்டிலம் மையம் இருந்து புறப்படும்
தண்டுகள் யாவும் அளவினில் சமம்போல்
மண்டில அகவற் பாவடி அனைத்தும்
அளவடி யென்று நாற்சீர் நிலைக்க
நிலைமண் டிலவா சிரியப் பாவே.

அகவலின் இலக்கணம் தகவுற அமைந்தே
வகையில் அடிகள் அளவடி யாகி
அகவலின் முடிவினை ஈற்றசை பெறவரும்
வகையே நிலைமண்டில ஆசிரியப் பாவே.

நிலமண் டிலத்தின் இன்னொரு சிறப்பாம்
நிலைபெறும் அளவடி அமைப்பின் நடுவில்
யாப்பில் சேராது பொருளினை விரித்தோ
மாற்றியோ வருகிற தனிச்சொல் என்பதே.
நிலைமண்டில அகவற் பாவகைத் தனிச்சொல்
நிலைமண் டிலத்தில் அருகியே வருமே.

கவிஞனின் மனமே மையம் என்றால்
கவிஞன் சொற்களில் அளவடி அமைந்து
கவிதை மண்டிலம் போலப் பரவிக்
கவிதைச் சக்கரம் சுழன்று சுழன்று
கவினுறச் செய்நிலை மண்டில அகவலே.

7.24. நிலைமண்டில ஆசிரியப்பா சான்றுகள்

சான்று 1.
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
---கபிலர், குறுந்தொகை 18

விளக்கம் (கலிவிருத்தம்)
தலைவனின் களவில் தலைவியின் காதல்
அலைபோ லெழுந்தே ஆவியை வதைக்கத்
தலைவனிடம் தோழி தலைவியை மணம்கொளத்
தலைப்படு மாறு தெளிவுறுத் தினளே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் என்பது மலைவிளை மூங்கில்
சாரல் என்பது மலையினைக் குறிக்கும்
வேரல் மரமே வேர்ப்பலா வேலியாகும்
சாரல் நாட! செவ்விய மதியுடன்
வரைக தலைவியை மணத்தில்! ஏனெனில்
வேர்ப்பலா காம்பென அவளுயிர் சிறிது
வேர்ப்பலா போன்றவள் காதல் பெரிது
பழமது மிகவும் பழுத்து விழுந்தால்
உழன்றிடும் உயிரே நீங்கிடும் அன்றோ?

சான்று 2.

ஆக்கப் படுக்கு(ம்) அருந்தளைவாய்ப் பெய்விக்கும்
போக்கப் படுக்கும் புலைநரகத் துய்விக்கும்
காக்கப் படுவன விந்திரிய மைந்தினும்
நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே
---வளையாபதி 13.

பொருள்:
ஆக்கம் தந்திடும் காவலில் தள்ளிடும்
ஊக்கத் துய்த்திடும் நரகத் துழல்விக்கும்
காக்க வேண்டிய கரணம் ஐந்தில்
நாக்கின் அளவு எதுவும் இல்லையே.

சான்று 3.
தனிச்சொல் பெற்றுவந்த நிலைமண்டில ஆசிரியப்பா

வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
கற்றவ ராலே உலகுகாப் புற்றது;
...
இற்றைநாள்
பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
...
கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே.
---பாரதியார், பாரத மாதா நவரத்தின மாலை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகள் தோறும் அகவற் பாவில்
ஈரடிக் கொருமுறை எதுகை வருதல்
செய்யுள் ஓசை சிறக்க உதவுமே.
அத்துடன்
அகவற் பாவின் அடிகள் தன்னின்
தகவுற மோனை சீரொன்றில் மூன்றில்
வந்திடச் செய்யுளின் ஓசை சிறக்கும்
அந்த வகையில் அமைவது இன்றேல்
சீர்கள் ஒன்றிலும் மூன்றிலும் எதுகை
நேர்வர மோனைக் குறைவு நீங்கும்
இப்படி அமைந்த சான்றுகள் கீழே.

சான்று 3.

வருணன் சேர்ப்பன் விரிதிரைப் புலம்பன்
பரும அல்குற் பரத்தி நுளைச்சி
நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர்
அளவர் அளத்தியர் அலைகடற் காக்கை
சுறவம் பாக்கம் பெறலரும் பட்டினம்
உவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல்
கண்டகக் கைதை முண்டகம் அடம்பு
கண்டல் புன்னை வண்டிமிர் ஞாழல்
புலவ மீனுப்பு விலைகளிற் பெற்றன
நளிமீன் கோட்பறை நாவாய்ப் பம்பை
விளரியாழ் செவ்வழி மீனுப்புப் படுத்தல்
உணங்கவை விற்றன்மீன் உணக்கல்புள் ளோப்பல்
நெடுங்கட லாடல் நெய்தற்கருப் பொருளே.
--நெய்தலின் கருப்பொருள் நிரல்,
அகப்பொருள் விளக்கம், நாற்கவிராச நம்பி

கபிலர், குறிஞ்சிப் பாட்டு:
விரிமல ராவிரை வேரல் சூரல்
குரீ‌இப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்த
றாழை தளவ முட்டாட் டாமரை .... 80

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 29 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Thu May 15, 2014 6:13 pm

7.26. அடிமறிமண்டில ஆசிரியப்பா

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
மறித்தல் என்றால் தடுத்தல் திரும்புதலே
நிலைமண் டிலத்தில் நிலைத்த அடிகளே
அடிமறி மண்டிலம் எவ்வடி எங்குமே.

அகவலின் இலக்கணம் தகவுற அமையுமே
அகவலின் முடிவினை ஈற்றசை பெறுமே
அடிகள் யாவும் அளவடி யாகுமே
அடிகள் எதுவும் எங்கும் வருமே
அடிகள் மாறினும் பொருள்மா றாதே
அடிகள் மாறினும் ஒலிவழு வாதே
அடிகள் எதுகையில் ஒன்றுதல் சிறப்பே
அடிகளில் பொழிப்பு மோனை சிறப்பே.

சான்று 1.
சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
சாரல் நாட நீவரல் ஆறே
வாரல் எனினே யானஞ் சுவளே.
--யா.கா.மேற்கோள்

சான்று 2.
தீர்த்த மென்பது சிவகங் கையே
மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே
ஏத்த ருந்தல மெழிற் புலியூரே.
--குமரகுருபரர், சிதம்பர செய்யுட் கோவை 26

7.27. அடிமறிமண்டில ஆசிரியப்பா முயற்சி

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
அடிமறி மணிடில அகவல் புனையவே
அடிகள் தோறும் பொருளது முடியுமே
அடிகள் எதுகையில் ஒன்றுதல் சிறப்பே.

முயற்சி 1.
ஆடல் நாயகன் தோடுடைச் செவியனே
கூடல் மாநகர்க் கூத்தன் பித்தனே
தேடல் ஓயத் திருவருள் செய்வனே
பாடிப் பரவுவோம் பரமன் புகழையே

முயற்சி 2.
நாளை நடப்பதை யாரே அறிவார்
காளை மாடு கன்றுகள் ஈனலாம்
பாளை பிளைந்து பாறை தோன்றலாம்
கூளம் யாவும் காஞ்சனம் ஆகலாம்

முயற்சி 3.
மழுவும் மானும் மகேச்சுரன் கையிலே
பழுதையும் பாம்பும் பரமன் உருவாம்
கழுதையும் கூடக் கடவுள் வடிவமே
கொழுகொம் பாவது கூத்தனின் அடியே

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 29 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Sat Jul 05, 2014 12:18 pm

7.30. ஆசிரியப்பா இனங்கள்

(ஆசிரியத்துறை)
அடிகள் மூன்றாய் அளவொத் தாகியும்
அடிகள் நான்காய் இடைகுறைந்தும்
அடிகள் கழிநெடில் நான்கள வொத்தும்
அடிகள் பயிலின் அகவல் இனமே.

(ஆசிரியத் தாழிசை)
அடிகளின் சீரெண் எதுவும் ஆகலாம்
அடிகளில் பொதுவாய் எதுகை ஒன்றே
அடிகள் இவ்வகை அகவல் இனமே.

7.31. ஆசிரியத்துறை
(ஆசிரியத்துறை)

அடிகளில் ஈற்றயல் குறைந்தும், அடிகள் இடையிடை குறைந்தும்,
அடிகளில் ஈற்றயல் குறைந்தே இடைமடக் காகியும்,
இடையிடை குறைந்தே இடைமடக் காகியும்,
அடித்தொகை நான்கென ஆசிரி யத்துறை நால்வகை வருமே

அடிகள் நான்காம் ஆசிரி யத்துறை இருவகை
அடியொன் றேதன் அளவிற் குறைந்தே
அடிபிற அளவொத் தமைந்தால் ஆசிரிய நேர்த்துறை யாமே
அடியொன் றின்மேல் குறைதல் ஆசிரிய இணைக்குறள் துறையே.

அடிகள் நான்கும் அளவிற் குறையும்
அடிகள் முதலில் வரலாம்
அடிகள் இடையில் வரலாம்
அடிகள் ஈற்றயல் இறுதியும் வரலாம்.

சான்றுகள் (யாப்பருங்கலம், காரிகை)
ஈற்றயலடி (மட்டும்) குறைந்தது

கரைபொருங் கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருவீ ராயின்
அரையிருள் யாமத் தடுபுலியே றும்மஞ்சி யகன்று போக
நரையுறு மேறு நுங்கைவே லஞ்சும் நும்மை
வரையர மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வார லையோ.

ஈற்றயலடி (மட்டும்) குறைந்த இடைமடக்கு

வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவே போலத்
தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோன் யாரே?
தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி வந்துநம்
பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து படர்ந்தோ னன்றே?’

இடையிடை குறைந்தது

கோடல் விண்டு கோபம் ஊர்ந்த கொல்லைவாய்
மாடு நின்ற கொன்றை ஏறி மௌவல் பூத்த பாங்கெலாம்
ஆடல் மஞ்ஞை அன்ன சாயல் அஞ்சொல் வஞ்சி மாதராய்
வாடல் மைந்தர் தேரும் வந்து தோன்றுமே.

இடையிடை குறைந்த இடைமடக்கு

இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா
வரங்க மணிபொழிலா வாடும் போலு மிளவேனி
லரங்க மணிபொழிலா வாடு மாயின்
மரங்கொன் மணந்தகன்றார் நெஞ்ச மென்செய்த திளவேனில்.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 29 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Tue Jul 29, 2014 9:26 am

7.32. ஆசிரியத்துறை முயற்சி

நவரச நாடகம்
(ஆசிரியத்துறை)

நகை:
மணியடிக்க நேரம் ஆகிட வகுப்பா சிரியர்
தணிகா சலம்கேட்டார்: சந்தேகம் உண்டா?
பணிவுடன் எழுந்தே பார்த்தான் பின்பெஞ்ச்
மணிகண்டன்: உங்கள் மகளின் பேரென்ன சாரே!

அழுகை:
ஆறிலும் சாவென்று ஆர்தான் சொன்னாரோ? உண்மையாச்சே!
நூறு வயசு உனக்குன்னு சொன்னேனே முந்தாநாள்!
நூறு வயசிந்த லோகத்ல வேணாம்னு...
ஆறு வயசிலே அய்யாவுன் ஆயுள் முடிஞ்சதோ?

இளிவரல்:
படிக்கும் காலம் படியாது ஊர்ச்சுற்றி யானேன்
அடித்த தந்தையை ஆசானைத் தூற்றினேன்
பிடிப்பென்றோர் கைத்தொழில் ஏதும் கற்றேன் இல்லை
வெடிகளைக் கட்டும் அடிமை வேலையே இன்று.

மருட்கை (மயக்கம், வியப்பு):
மருளும் கண்களில் மயக்கமும் வியப்பும் கண்டேன்!
பொருளை விடவும் பெரிது காதலின்
அருமை யென்றென் அழைப்பில் வந்ததில்
பெருமை யெனினும் பெருவியப்பே! என்செய் வேனோ?!

அச்சம்:
’சட்டச்சட சட்டச்சட டட்டா!’
விட்டம் அதிரும் இடியோசை, மீண்டும் மின்னல், மழைவெள்ளம்!
பொட்டில் அடித்தாற்போல் பொறிகலங்கத் தாவியென் கழுத்தைக்
கட்டிக் கொண்டாளென் ஆறு வயதுக் கருவிழிச் சிறுமகளே!

பெருமிதம்:
தாலாட்டுப் பாடினாள் அன்னை, பிள்ளையைத் தூங்க வைக்க;
காலாட்டிக் கூடவே பாடியது பிள்ளை!
கால்மொழி அரைமொழிக் காதுற அன்னை
கால்வலி மறந்தே களிப்புடன் தூக்கி முத்தமிட் டாளே!

வெகுளி (சினம், வெறுப்பு):
நெருங்கிய நண்பனே நெரித்தான் கழுத்தை எதிர்பார்க்க வில்லை!
இருவரும் சேர்ந்தே செய்த தொழிலின்
வருவாய் முழுதும் வற்றச் சுரண்டி நீட்டினான் கம்பி!
எருமை யேறுகாலா! எத்தனுயிர் கொள்வாய் விரைவிலே!

உவகை:
இளங்காலை நேரம்; சில்லெனும் கற்பாவு கோவில் வெளிச்சுற்றில்;
தளிர்க்கால் வைத்துத் தந்தை விரல்பிடித்தே
தளிர்க்கால் வைத்ததில் தடுமாறி நின்றும்
ஒளிமுகம் இழையச் சுற்றிலும் பார்த்தும் குழந்தை வலம்வருமே!

அமைதி:
மாலை நேர மாருதம்; வானவண்ணம், புள்ளினக் கூட்டம்;
ஆலய மணியோசை; ஆரத்தி சோதி;
காலசைவில் தலையசையக் காதசையக் கழுத்துறும் சதையசைய ஆவினம்;
ஓலமனம் தூங்க புத்திவிழித் தின்புறும் பேசாதே.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 29 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Mon Sep 15, 2014 7:04 pm

7.33. ஆசிரியத் தாழிசை
(ஆசிரியத் தாழிசை)

அடிகளின் சீரெண் தளைவகை எதுவும்
அடிகள் மூன்றில் ஒன்றாம் எதுகை
அடிகள் இங்ஙனம் அகவற் றாழிசை.

அகவற் றாழிசையாம் ஆசிரியத் தாழிசை
தகவுறும் மூன்று அடிகளில் தனித்தோ
புகலும் பொருள்மேல் மூன்றடுக்கி யோவரும்.

மூன்றடுக்கி வந்தால் முற்றும் சிறப்பென்றும்
மூன்றில்லாத் தனித்தது சற்றே சிறப்பென்றும்
ஆன்றோர் உரைகள் ஆமுறை சொலுமே. ... [ஆமுறை = ஆகும் முறை]

சான்றுகள்
மூன்றடுக்கி, வெண்டளை

கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்
இன்றுநம் மானுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ!

கொல்லியஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்
எல்லைநம் மானுற் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ!
--சிலப்பதிகாரம், ம.கா., ஆய்ச்.குர.

தனித்தே, ஆசிரியத்தளை

வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை
பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்.
--யாப்பருங்கலம்

தனித்தே, கலித்தளை

நீடற்க வினையென்று நெஞ்சின் உள்ளி
. நிறைமலரஞ் சாந்தமொடு புகையும் நீவி
வீடற்குந் தன்மையினான் விரைந்து சென்று
. விண்ணோடு மண்ணினிடை நண்ணும் பெற்றி
பாடற்கும் பணிதற்கும் தக்க தொல்சீர்ப்
. பகவன்றன் அடியிணையைப் பயிறும் நாமே.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 29 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Mon Nov 17, 2014 9:39 am

7.34. ஆசிரியத் தாழிசை முயற்சி

கணநாதன் துதி
(ஆசிரியத் தாழிசை: வெண்டளை, அளவடி, ஒருபொருள் மூன்றடுக்கி)

ஐங்கரத்தான் ஓங்காரன் அம்பிகையின் முன்னவனாய்
ஆங்காங்கே எழுந்தருளி அருள்செய்யும் கணநாதன்
கைங்கரியம் செய்தேநாம் கள்ளமற்று வாழ்வோமே.

கரிமுகத்தான் ஏரம்பன் கண்ணுதலான் கங்கைசுதன்
பெருவயிறன் ஏகதந்தன் பேர்சொல்லி வழிபட்டே
அருச்சனையும் செய்தேநாம் ஆயுளுடன் வாழ்வோமே.

மும்மதனாம் இறைமகனாம் முக்கண்வி நாயகனே
நம்மனதில் தங்கிநின்று நல்வாழ்வு தந்திடவே
செம்மையுளம் கொள்ளவரும் சிறப்புடனே வாழ்வோமே.

*****

மாலைக் காட்சி
(ஆசிரியத் தாழிசை: ஆசிரியத்தளை, ஒரு பொருள் மூன்றடுக்கி)

பொன்னொளிர் ஞாயிறு புகுந்திடும் மலையுளே
மன்னும் அமைதியில் மகிழும் சூழல்
இன்னும் இன்னும் என்றென் இதயமே.

கண்களில் வழிந்திடும் கதிரவன் ஒளியில்
மண்ணிது மறைய வான்வரும் ஒளித்திரள்
எண்ணம் இன்னும் என்றே நாடுமே.

மாலைத் தென்றலின் மலர்மணம் நுகர்ந்தே
சோலை வழிச்செலும் சுகத்திலென் மனமே
காலை வருடும் காற்றினும் விழையுமே.

*****

தனித்தே, கலித்தளை, எழுசீரடி

நடந்ததுவும் நடப்பதுவும் நலமொன்று விளைவதற்கே
. நமதுவசம் எதுவுமிலை எனவாழ்ந்தால்
கடந்ததுவும் கடப்பதுவும் கவலையினைத் தருவதெனில்
. கலக்கமெதும் கொளவேண்டாம் எனுமுணர்வில்
திடம்படவே வருவதெல்லாம் எதிர்கொண்டே அனுபவிக்கும்
. திறமுற்றே துணிவுடனே தினவாழ்வே.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 29 Empty Re: கவிதையில் யாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 29 Previous  1 ... 16 ... 27, 28, 29

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum