புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10கவிதையில் யாப்பு - Page 26 Poll_m10கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10 
366 Posts - 49%
heezulia
கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10கவிதையில் யாப்பு - Page 26 Poll_m10கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10கவிதையில் யாப்பு - Page 26 Poll_m10கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10கவிதையில் யாப்பு - Page 26 Poll_m10கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10கவிதையில் யாப்பு - Page 26 Poll_m10கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10 
25 Posts - 3%
prajai
கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10கவிதையில் யாப்பு - Page 26 Poll_m10கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10கவிதையில் யாப்பு - Page 26 Poll_m10கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10கவிதையில் யாப்பு - Page 26 Poll_m10கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10கவிதையில் யாப்பு - Page 26 Poll_m10கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10கவிதையில் யாப்பு - Page 26 Poll_m10கவிதையில் யாப்பு - Page 26 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 26 of 29 Previous  1 ... 14 ... 25, 26, 27, 28, 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 28, 2013 9:25 am

6.58. பலவிகற்ப இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகவினிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்னினிதே
எள்துணை யானும் இரவாது தானீதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
---பூதஞ்சேந்தனார், இனியவை நாற்பது 16


வெண்பாவின் ’மாணமிக’ ஒப்புகள் நோக்கிப்
பொருளறியக் கீழ்வரும் பா.

கற்றார்நம் கல்வியைச் சோதித்தல் நல்லது.
கற்றாரைச் சேர்தல் அதனினும் நல்லது.
எள்ளளவும் கேட்காது தான்கொடுத்தல் நன்றிவற்றை
எவ்வளவும் செய்வது நன்று.

கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்குந் - தோமில்
தவக்குட்டந் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும்.
--விளம்பி நாகனார், நான்மணிக்கடிகை 16


குட்டம் எனும்பதம் ஆழமும் போழ்வர்
பிளப்பதும் பாய்மா விரைகுதிரை தோமில்
குறையற்ற தன்னுடையான் உள்ளம் அடக்கியோன்
என்றும் பொருள்பெறும் காண்.

மாலுமி ஆழ்கடல் வீரன் படைக்கடல்
தன்மனம் கட்டத் தவக்கடல் கற்றான்
அவைக்கடல் என்று எளிதில் கடப்பார்கள்
என்பது பாடல் பொருள்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Nov 30, 2013 5:57 pm

6.59. தனிச்சொல் பெற்ற இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

நினைவிற் கொள்ள:
தனிச்சொல் வருகிற இன்னிசை வெண்பாத்
தனிச்சொல் அடியிரண்டில் இன்றிவே றெங்கோ
தனிச்சொல்லாய் ஒன்றுபல வென்றோ வரலாம்
தனிச்சொல் அடிதோறும் என்று வரலாம்
தனிச்சொல் அடியிரண்டில் வந்தால் விகற்பம்
இரண்டினும் மிக்கு வரும்.

தனிச்சொல் அடியிரண்டில் வந்து விகற்பத்தில்
ஒன்றோ இரண்டோ வருவதெலாம் நேரிசை
வெண்பா வகைப்படு மே.

தனிச்சொல் முதல் அடியில்
குன்றம் கவினும் குறிஞ்சியிலே -- நின்றபிரான்
வென்றி வடிவேற்கை வீரன் மயிலேறும்
அண்ணல் முருகன் அவனடியே தஞ்சமென
நண்ணுவார்க் கெய்தும் நலம்.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.88

தனிச்சொல் இரண்டாம் அடியில்
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.
---நாலடியார் 151

அலகிலா வானத்தில் தண்ணொளி வீசும்
நிலவும் பெரியோரும் ஒன்று -- நிலவு
களங்கம் பொறுக்கும் பெரியோர் மனம்கலங்கித்
தேய்வர் வரப்பெற்றால் மாசு.

காவிரிசூழ் மோகைநகர்க் காந்தமலை மேயபிரான்
பூவிரிதாழ் போற்றுகின்ற புண்ணியர்க்கு -- நாவிரியும்
பல்புகழும் நீளும் பரந்த பொருளடையும்
ஏற்றமன்றித் துன்பம் இலை.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.89

தனிச்சொல் மூன்றாம் அடியில்
கொல்லிமலை வேளுக் குறிச்சியிலே கோழியினை
மெல்லத் துடையிடுக்கி வேட்டுவக்கோ லங்கொண்டு
வல்ல முருகன் வருமெழிலை -- நல்லபடி
பார்த்தார் உளம்போம் பறி.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.88

தனிச்சொல் அடிதோறும்
மழையின்றி மாநிலத்தார்க் கில்லை -- மழையும்
தவமிலா ரில்வழி யில்லைத் -- தவமும்
அரசிலா ரில்வழி யில்லை -- அரசனும்
இல்வாழ்வி ரில்வழி இல்.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.88

மேல்வந்த சான்றுகளில் எல்லாம் தனிச்சொல்
எதுகை அதனடியின் சீரொன் றுடனும்
பெரும்பாலும் முன்பின் அடியெது கையுடனும்
ஒன்றி வருவது காண்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 03, 2013 7:08 pm

6.60. முடுகு வெண்பா

கீழுள்ள செய்யுளினை வாய்விட்டு வாசித்துச்
ஓசையிலே மூவசைச்சீர் நோக்கப் பயின்றிடும்
உத்தி எதுவென் றுணர்.

அத்தனத்தன் தத்தனத்தன் நர்த்தனத்தை எத்தனிக்க
மத்தளத்தை மொத்தெனத்தன் சத்தனைத்தும் - ஒத்திசைக்க
எத்திறத்தும் இத்தரத்தை ஒத்திருக்க மத்தொருத்தன்
இத்தலத்தும் எத்தலத்தும் இல்.
---இலந்தை ராமசாமி

https://groups.google.com/forum/#!msg/santhavasantham/01QgwhYFNg4/dysRJZeSfxIJ

[அத்தனத்தன் - சிவன், தத்தெனத்தன் - தத்தன எனத் தன்
மத்தளத்தை - நந்தி தனது திறமையெலாம் கூட்டி மத்தளத்தை ஹ்மொத்து மொத்து என்று
மொத்தி வாசிக்க
இந்த நடனத்துக்கு ஈடாக ஆட மற்றொருவர் எந்த உலகிலும் இல்லை]

முடுகுவது என்றால் விரைவது ஆகும்.
முடுகிவரும் ஓசை இருகுறில் சேர்ந்துவர.
வெண்பாவில் மூவசைச்சீர் மையம் பெரும்பாலும்
வண்ணம் முடுக்கி வரும். ... [வண்ணம் = இனிய ஓசை]

காய்ச்சீர் நடுவண் குறிலிணை வந்துநிரை
யாகிடக் கேட்கும் முடுகு.

அடிகள் இறுதியும் ஈற்றயலும் ஓசை
முடுகி வருவது பின்முடுகு; முற்றும்
முடுக முழுமுடுகு; முன்னால் இரண்டு
முடுகிட முன்முடுகு ஆம்.


அத்தனத்தன் வெண்பா அனைத்துச்சீர் கள்வரும்
சத்தம் முடுகிவர அஃது முழுமுடுகு
வெண்பா எனும்பேர் பெறும்.

பின்முடுகு முன்முடுகுச் சான்று முறையேகாண்
பின்வரும் வெண்பாக் களில்.

தேரோடும் வீதியெலாஞ் செங்கயலும் சங்கினமும்
நீரோடு லாவிவரும் நெல்லையே! - காரோடும்
கந்தரத்த ரந்தரத்தர் கந்தரத்த ரந்தரத்தர்
கந்தரத்த ரந்தரத்தர் காப்பு!
---வேம்பத்தூர் பெருமாளையர், ’நெல்லை வருக்கக் கோவை’


[காரோடும் = கருமையான
கந்தரத்தர் = கழுத்து உடையவர்
அந்தரத்தர் = ஆகாயத்தில் உள்ளவர்
கந்து அரத்தர் = முடியில் நீர் அணிந்தவர்
அம் தரத்தர் = உயர்வான தரத்தையுடையவர்
கந்தர் அத்தர் = முருகனுக்குத் தந்தை
அந்தரத்தர் = ஆகாயத்தை மேனியாகக் கொண்டவர்]
https://groups.google.com/forum/#!msg/santhavasantham/01QgwhYFNg4/dysRJZeSfxIJ

ஞானவயில் வேலிறைவ நாகமயி லேறிறைவ
வானவர்பி ரானிறைவ மாலிறைவ -- கோலிறைவ
என்றுதுதித் திப்பா ரிருமையு மேல்வாழ்க்கை
ஒன்றுவ ருள்ளே வுணர்.
---பாம்பன் சுவாமிகள்


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 08, 2013 7:49 am

6.62. பஃறொடை வெண்பா

வெண்பா விலக்கணம் பெற்றே அடிகளில்
நண்ணும் விகற்பம் பலவென ஒன்றென
சிற்றெல்லை ஐந்தடி பேரெல்லை பன்னிரண்டு
பெற்றுவரும் நேரிசை அல்லது இன்னிசை
வெண்பாவே பஃறொடை யென்று.

இரண்டடிக் கோர்தனிச்சொல் பெற்றவ் வடிகள்
இரண்டிலும் வந்த எதுகை தனிச்சொல்லும்
பெற்று வருவது நேரிசை; இஃதல்லாப்
பஃறொடை வெண்பாக்கள் யாவுமே இன்னிசைப்
பஃறொடை வெண்பா வென.


இரண்டடிக் கேற்ற தனிச்சொல் அமைய
இரட்டைப் படையெண் அடிகளில் வந்திடும்
ஆறடி எட்டடி பத்தடி பன்னிரண்
டாகும் அடிகளில் மட்டும் வருவதாம்
நேரிசைப் பஃறொடை யே.

பலதொடை பெற்றதால் பஃறொடை யாகிப்
பலவடி நீள்வதால் பஃறொடை வேண்டித்
தனிச்சொல் எதுகை பொறுத்திவை நேரிசை
இன்னிசைப் பஃறொடை யாக வருவதுடன்
இன்னிசைப் பஃறொடை யேதும் தனிச்சொல்லே
இன்றியும் வந்திடு மே.

*****

6.63. நேரிசைப் பஃறொடை வெண்பாச் சான்றுகள்

ஆறடி, ஒரு விகற்பம்
கண்முன்னே காண்பதெல்லாம் கண்விழி யுட்போக
உண்மை உணருமோ உள்ளமிது? - கண்காணும்
வண்ணம் பலவற்றில் வாலறிவு சுட்டிடும்
தண்ணொளி யாகத் தகைப்பதெது? - வெண்மையே!
வெண்மையே ஆதியாம் வெண்மையே அந்தமாம்
வெண்மையே ஈசன் வெளி.
--ரமணி


ஆறடி, பல விகற்பம்
ஆய்ந்தறிந்து கல்லாதான் கல்வியும் ஆறறிவில்
தோய்ந்தறிந்து சொல்லாதான் சொற்பெருக்கும் - தீந்தமிழின்
சொல்லிருக்க வன்கடுஞ்சொற் சொல்வதூஉம் தன்னனையான்
இல்லிருக்க வேறில் இரப்பதூஉம் - நெல்லிருக்கக்
கற்கறித்து மண்தின்று காய்த்துக் களத்தடித்த
புற்கறித்து வாழ்வதனைப் போன்ம்.
--புலவர் குழந்தை

எட்டடி
ஒன்றெனவே நின்றுள் ளுயிர்க்கும் பரம்பொருளை
நன்றா யுணர்வதே ஞானமாம் - என்றுதான்
இவ்வுணர்வு வாய்க்கும் எனிலே உயிரினைக்
கவ்வுமகங் காரமெனக் கண்டறிந்தே - ஒவ்வா
அதனை அறவே அகற்றும் பணியில்
முதலாவ தாக, உடலே - சிதைவதாம்
ஆன்மாவே என்றுமுள தாமென் றறியுமனப்
பான்மைவர வேண்டுமப் பா.
--ரமணி

பத்தடி
மேனி படித்தபின் மேவுமனம் நோக்கவது
தேனனாய்க் கள்ளமெலாம் தேக்கியே - ஏனோ
பதுங்கியும் ஓடியும் பாய்ந்தும் இருளில்
ஒதுங்கிச் செயல்பட்டு ஓய்ந்தே - கதவு
திறக்க முனைந்துத் திரும்பித் திறம்பி
வெறுப்புடன் கோபமும் ஏற - அறம்பிறழ்ந்தே
வாழ்வின் பொருளென்று யாதொன்றும் ஓராதே
தாழ்வே சிறப்பாய்த் தழைக்கவே - வீழ்ந்து
வினைபல ஆற்றி வினைகளைச் சேர்த்தே
முனைய முதுமை யுறும்.

[தேனன் = திருடன்]
--ரமணி

*****

பன்னிரண்டடி
வெளிச்செல்லும் உள்ளம் வினைபற் றுவதால்
அளித்தாட் கொளவே கடவுள் - விளிப்பதில்
போற்றுவதில் தெய்வத்தை யுன்னவே தெய்வமும்
ஆற்றி அளிக்கும்மெய் ஞானமே - ஊற்றெனப்
பொங்கிப் பெருகியே பொல்லா வினைகளின்
பங்கினை மட்டுறுத்த ஆன்மவொளி - தங்கியே
உள்ளம் உறுதியாக்கி உண்மை தெளிவுறுத்தி
வெள்ளொளி உள்விளை வித்திடவே - உள்ளம்
உடலினைக் கட்ட உணரும் பொறிகள்
அடங்கியே செல்லும் அறத்தில் - திடவுள்ளம்
முக்தி விழைய முனைவழி முற்படியாய்
பக்தியில் வைக்குமே பற்று.
--ரமணி


*****

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 08, 2013 9:31 am

கவிதையில் யாப்பு - Page 26 3838410834 கவிதையில் யாப்பு - Page 26 3838410834 

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Dec 12, 2013 10:14 am

6.65. வெண்பா நுணுக்கங்கள்:
அடிகளில் இயற்சீர் நிரல்கள்


காய்முன் நிரையும் விளம்முன்னே நேரசையும்
ஆய்ந்தால் இயற்சீரின் வெண்டளை யாவதால்
வெண்பா அடியின் இயற்சீர் நிரல்வருதல்
கண்படுமே கீழுள்ள வாறு.

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
சாமான் யமாகத் தெரியும் நிரலே
ஒருசீர் அடியில் ஒருமுறை யென்றே
உறழ்ந்து இறுதியில் ஒவ்வொரு சீராய்ப்
பிறழ்ந்தே வரலாம் புளிமா கருவிளம்
கூவிளம் தேமா வென.

சான்றுகள்
நீயோ அவளோ இருவரும் வந்திட
நாயும் வருமே யுடன்.

அவர்கள் இருவரும் வந்திட நாயும்
உவந்தே யுடன்வரு மே.

இருவரும் வந்திட நாயும் வருமே
அரியதோர் நண்பனா க.

வந்திடும் நாயும் இருவர் முதுகுபின்
சந்துபொந் தெல்லாம் நுழைந்து.


*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 14, 2013 11:28 am

6.66. வெண்பா நுணுக்கங்கள்: காய்ச்சீர் நிரல்கள்

நிரைமுதல் காய்ச்சீர் புளிமாங்காய் மற்றும்
கருவிளங்காய் வந்தால் அடிமுதலே; எல்லாமே
காய்ச்சீராய் வந்தால் அடிகளின் ஈற்றிலே
மாச்சீர் வரவேண்டு மாம்.


நிரைமுதல் காய்ச்சீர் இடைவாரா காய்முன்
நிரைவரா தென்பதா லே.

சான்று: புளிமாங்காய் முதற்சீரில்
திரைபின்னே உள்ளதெலாம் திண்ணமுறைப் பார்யார்?
வரையாலே கட்டுண்ண வாட்டமெவண் போகும்?
புரைநீங்கிப் பொன்னாகப் போற்றிடவே ஈசன்
கரைநீக்கி யாட்கொள்வா னாம்.

சான்று: கருவிளங்காய் முதற்சீரில்
திரையிதன்பின் உள்ளதெலாம் திண்ணமுறைப் பார்யார்?
வரையிதுவே கட்டாக வாட்டமெவண் போகும்?
புரையறவே பொன்னாகப் போற்றிடவே ஈசன்
கரையறவே ஆட்கொள்வா னாம்.


***

தேமாங்காய் கூவிளங்காய்ச் சீர்கள் இரண்டுமே
ஆமாம் வரலாம் அடுத்தடுத்தே ஆயின்
இடையில் இயற்சீர்கள் சேர்ந்தே பெரிதும்
நடைபயின் றாலஃ தழகு.


சான்று: தேமாங்காய் கூவிளங்காய் நிரல்
எல்லாமே ஓர்பொருளாம் என்றேநம் உள்வரவே
அல்லல்கள் இல்லையென அற்றுப்போய் - பல்வகையில்
பேர்பெற்றே வாழுமுயிர் எல்லாமே நம்முறவாய்
நேர்காண்போம் அன்பொழுக வே.


சான்று: காய்ச்சீர் இயற்சீர் அழகுற வந்தது
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12


*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 15, 2013 11:47 am

6.70. வெண்பா இன்று

புதுக்கவிதைத் தாக்கம் புரையோடும் இன்று
பொதுவாக யாப்பின் மரபினில் வெண்பா
புனைவதில் ஈடுபாடு குன்றாது கொண்டு
முனைவோர் இணையத்தில் உண்டு.

பலவே மரபினில் பாக்கள் முனைவோர்
பலரின்று உள்ளபோதும் வெண்பா வடிவமே
பாவலர் மேற்கொளும் பாவென் றிருந்திட
ஆவலுடன் நாடுவோ ராம்.

வெண்பா புலவர் புலியெனச் சொன்னதின்று
நண்பர்கள் வீட்டில் வலம்வரும் பாரதியின்
வெண்ணிறமும் சாம்பலும் சாந்தும் கலந்தபல
வண்ணத்தில் பூனையாயிற் றாம்.

மரபில் கவிமுனைவோர் பற்பலர் என்று
தெரியும் எளிதிலே கூகிள் வகைத்த
வலைதேடும் மென்பொருள் எந்திரம் மூலம்
வலையில் விளையும் மரபு.

மரபுக் கவிதை யெனத்தமிழில் தட்டி
உருவில் யுனிகோடாய் மாற்றியே தேட
ஒருலட்சம் மேற்பட்ட மின்பக்கம் காண
மரபின் விளங்கும் முனைப்பு.

அறன்பொருள் இன்பம் வழியுரைத்த வெண்பா
மறமோங்கும் இந்நாள் அகிலத்தின் சாதனைகள்
போதனைகள் வேதனைகள் போக்குகள் பூசல்கள்
பேதங்கள் பேசுமே இன்று.

மரபில் எழுதி அனுபவம் பெற்றோர்
பரவிக் கிடந்திடும் பாவலர் ஆக்கிய
வெண்பாக்கள் பார்ப்போம் சில.

*****

1. குறள் வெண்பா இன்று
அகரம் அமுதா
பேணும் பெருங்கற்பே பெண்டிற்(கு) எழிலாகும்
ஆணுக்கும் அஃதே அழகு!

வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை
நம்புகையில் வீழும் நலம்!

நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல்
தகையில்லை வேண்டும் தடை!

***

சுந்தரராஜ் தயாளன்
பிறவிக் குருடர்கள் பற்றி
இருளில் இருந்தோ இறைவன் படைத்தான்
கருவில் உருவாகாக் கண்.

குறைசொல்வோர் கூறிடுவார் குற்றம், குணத்தில்
நிறைவடையார் நில்லார் நிலைத்து.

இடத்துக் கிடம்மாறும் இங்கிருக்கும் அங்கே
படரும், பதுங்கும் பணம்.

*****

கேளிக்கைக் குறள்வெண்பா

மனமகிழ் பாக்குறள் யாப்பதும் உண்டு
சனரஞ் சகமா கவே.

முதற்சொல்லை வைத்து முடிவு அமைப்பர்
அதற்குவேறு அர்த்தம் வர.

இலந்தை ராமசாமி
உடைந்துள்ள கண்ணாடி உட்கதவின் பின்னாடி
உள்ளதே என்றன் உடை.

கடைசியில் தேடிநான் கண்டு பிடித்துவிட்டேன்
கண்ணாடி விற்கும் கடை.

ஓட்டுக்கள் போட்டும் உதவாத பேர்வழியை
ஊருக்குள் வாராமல் ஓட்டு.

***

தங்கமணி
நாடுன் தவமன்றோ நாளுமதன் மேன்மையை
நாடும் தகவினை நாடு.

கொடுப்பினை என்றால் கொடுத்தின்பம் கொள்ளல்
கொடுப்பதை அன்பாய்க் கொடு.

***

வி.சுப்பிரமணியன்
கல்லென்றும் கல்லார் சில(ர்)அவர் வாழ்வினில்
செல்லும் வழியெங்கும் கல்.

கடனென்று வாங்கியதைக் காலம் தவறா(து)
அடைத்தல் ஒருவர் கடன்.

*****

பக்திக் குறள்வெண்பா

வி.சுப்பிரமணியன்
இலையோ மலரோ இறைவனுக்(கு) இட்டால்
நலம்பெறலாம்; துன்பம் இலை.

இருகரம் கூப்பி இறைவனைப் போற்றி
ஒருகுறை இன்றி இரு. ... [’ஒருகுறையும்’ என்றிருந்தால் இன்னும் சிறக்குமே?]

நச்(சு)அரவை நல்ல அரைநாணாக் கட்டிய
பிச்சனை நெஞ்சேநீ நச்சு.

கூடுவிட்டுப் போம்முன்னே கூன்பிறையைச் சூடிநடம்
ஆடும் இறைவனைக் கூடு.

விடையேறும் ஈசனை வேண்டினால் ஈவான்
அடைந்தார்க்கு நல்ல விடை.

கழலா வினையும் கழலும் மனமே
விழைவாய் இறைவன் கழல்.

ஓடுநதி ஆடுமர வோடுபிறை சென்னிமிசை
சூடுமிறை கையினிலோர் ஓடு.

ஆற்றுச் சடையான் அணிமதி சூடியைப்
போற்றி நிதம்திருத்தொண்(டு) ஆற்று.

பரவும் சடைமேல் பனிநிலாச் சூடும்
பரமனைப் பாடிப் பரவு.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 22, 2013 10:08 am

2. சிந்தியல் வெண்பா இன்று
அகரம் அமுதா.
நல்லார் உறவால் நலம்பெருகும் நாடோறும்
அல்லார் உறவால் அறந்தேயும் - பொல்லார்
தொடர்விடுதல் மேலாந் துணை!

அன்புற் றெவர்க்கும் அறனல்ல செய்யாது
தென்புற்று நன்குஞற்றுஞ் செம்மைத் திருவுடையார்
இன்புற்று வாழ்வ ரினது!

விசய பாரதி ந.வீ.
தெள்ளுதமிழ்ச் சொத்தெமக்கு; சிந்தனைக்கு நல்லறிவை
அள்ளியள்ளி ஊட்டும் அமுதமழை - வெள்ளமது
வள்ளுவமோர் முப்பால் மது.

3. நேரிசை அளவியல் வெண்பா இன்று
இக்பால்
அருளிருந்தால் சொர்க்கம் அடையலாம் என்பார்
பொருளின்றி வாழ்க்கையுண்டோ பூமேல்? - திருவே
வருமானம் தேவைக்கு வந்துவிட்டால் எல்லா
இருளும் வெளிச்சம் எனக்கு.

துன்பத்தைக் கண்டு துவண்டு மருளாதே
இன்னல் விலகலாம் எக்கணமும் - அன்புள்ளாய்
தோயும் இருள்விலக்கித் தோன்றுவான் சூரியன்
காயில் இருக்கும் கனி.

குறிப்பிட்ட வேளையில் கூட்டம் தொடங்கி
வெறுஞ்சடங்கு எல்லாம் விலக்கி - நறுந்தமிழில்
கற்றார் உரையாற்றுங் காலத்தில் அல்லவோ
வெற்றி பெறும்நம் விழா!

தன்னை மறைக்கும் தவஞானி வேராவார்
புன்னகை செய்பவர் பூக்களாம் - இன்புறவே
அள்ளிக் கொடுப்பார் அருங்கனி; கைவிரித்து
இல்லையெனச் சொல்வார் இலை.

தந்தை,தாய் நல்லுயிர்; தாரம் சுடர்விழி
கந்தம் கமழ்பிள்ளை கைநமக்கு - சொந்தபந்தம்
கால்கள்; துயரம் களையப் பறந்துவரும்
தோழன் சுமைதாங்கும் தோள்.

ஜெயபாரதன் சி.
ஈழத்தில் இட்டதீ சீதைக்(கு)! எழில்மதுரை
சூழத்தீ இட்டது கண்ணகிக்கு! - வாழாது
மீண்டும் நகைச்சண்டை!  மேனியில்தீ தங்கைக்கு!
வேண்டாம் வரதட் சணை!

4. இன்னிசை அளவியல் வெண்பா இன்று
இக்பால்
உழைப்புக்குத் தக்கபடி ஊதியம்நல் காமல்
பிழைக்கும் பணந்தேடிப் பேய்கள் - கிளியேகேள்
ஆறாமல் ஏழை அழுது வடித்தகண்
நீரும் நெருப்புக்கு நேர்.

ஜெயபாரதன் சி.
பிறப்பும், இறப்பும், பெருமையும், தாழ்வும்
துறப்பும், பிணைப்பும் தொடரும் - எரியும்
நெருப்பும், பனியும்  நிலையாது மாறும்
இருளும், வெளிச்சம் எனக்கு.

5. கேளிக்கை வெண்பாக்கள்
மாதவச் சிவஞான யோகிகள்
சற்றே துவையலரை தம்பியோர் பச்சடிவை
வற்றலே தேனும் வறுத்துவை - குற்றமிலை
காயமிட்டுக் கீரைகடை கம்மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி.

காளமேகப் புலவர் பற்றிய செவிவழிச் செய்தி
புலவர் ’பாக்குத்...நன்நாக’ வரை எழுதிப் பாதியில் விட்ட வெண்பாவை வேறு ஒருவர் முடித்தது:

பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு
நாக்கு தமிழுரைக்கும் நன்நாகை - மூக்குமுட்ட
உண்ணும் உணவை உருட்டி விழுங்கிடின்
தொண்டையில் விக்குமே  சோறு.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் ராயகோபுரக் கல்வெட்டில் நேரிசை வெண்பா
(காளமேகம் தன்னைப்பற்றி எழ்திக்கொண்ட வெண்பா என்று கருதப் படுகிறது)

மண்ணில் இருவர் மணவாளர் மண்ணளந்த
கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்
அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே
இவனுக்கூர் எண்ணா யிரம்.

*****

இக்பால்
சீர்விளங்கும் காதற் செழுமலரைக் கைபிடித்தேன்
பேர்விளங்கும் பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன் - ஊர்மதிக்கும்
பொன்னும் மணியும் புகழும் மிகப்பெற்றேன்
என்னதான் வேண்டும் இனி?

வேதனை எல்லாம் விதிப்பயன் என்றுசொல்லிப்
பேதலிப்பார் நெஞ்சின் பிழைதிருந்தப் - போதிப்பேன்
வாடும் மனிதர் வளம்பெற்று வாழ்ந்திடவே
பாடுவேன் பைந்தமிழ்ப் பா.

கன்னலும் பாலும் கனிச்சாறும் செந்தேனும்
உண்ணத் தெவிட்டலாம் ஓர்நாளில் - பைந்தமிழ்
அன்றாடம் தேடியே அள்ளியள்ளி உண்டாலும்
தின்னத் தெவிட்டாத தேன்?

சுரேஷ் பாபு
கண்கள் நறுங்குவளை, கன்னங்கள் வெண்ரோசா,
நுண்நாசி எள்ளின்பூ, வெண்பற்கள் மல்லிகை, ...
பூவை விரும்புகிறாள் என்றியற்கை வைத்தானோ!
பூவைமேல் எத்தனைப் பூ!
[நுண்நாசி எள்ளின்பூ, மல்லிகை - வெண்பற்கள், என்று வந்திருந்தால் நேரிசை வெண்பா]

நிரஞ்ஜன் பாரதி எழுதியதை இலந்தை ராமசாமி திருத்தியது
தாயவளின் பொற்கரத்தால் தங்கமாய் வந்துதித்துச்
சேயவனின் நெஞ்சத்தைச் சேகரித்து - வாயதனில்
அக்கறை கொண்டென்றன் அம்மா  கனிந்தூட்டும்
சக்கரைப் பொங்கல் தனி.

ஜெயபாரதன் எஸ்.
வயிற்றுக்குச் சோறில்லை, வாங்கிடக் காசே(து)?
அயர்ச்சியில் சோர்வாய் அறிவு - மயங்கிடினும்
நாடுவேன் வெண்பாவை, நாள்தோறும் சிந்தித்துப்
பாடுவேன் பைந்தமிழ்ப் பா.

அரையுடையில் தோற்றம்! அறுபதுபேர் ஆட்டம்!
திரையிலே தேவையற்ற கூத்தா? - அரங்கத்தில்
புல்லரின் எந்திரப் பொம்மைகள் பேயாட்டம்
கல்லாதான் ஆக்கும் கலை.

[Ref:https://groups.google.com/group/anbudan/browse_thread/thread/fc8c416a2b42f73a/df7b25420646f165?hl=ka%CF%9Ba95bbc19f1759&]

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 28, 2013 11:54 am

6.64. சவலை வெண்பா

இருகுறள் சேர்ந்தே தனிச்சொல் விடுத்து
வருமே சவலைவெண் பாவாம்
அடியிரண்டில் சீர்மூன்றே வந்துவெண் பாப்போல்
முடியும் இலக்கணம் பெற்று.

முழுமையாய் வெண்பா இலக்கணம் இன்றி
எழுமே சவலைவெண்பா என்றாலும்
இருகுறள் வெண்பா இணைவதால் மட்டும்
வருவதென் றாகா தது.

அறுவகை யிலக்கணம் சொல்வதிலிருந்து:
(ஆசிரியர்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

முதற்குறள் ஈற்றுச்சீர் ஓரசை யல்லா(து)
அதுவேவெண் பாக்குறிய ஏனைய
சீர்களில் ஒன்றாய் இருந்து தனிச்சொல்லை
ஏராது நிற்கு மிது.

வேறோர் வகையில் இலக்கணம் சொன்னாலோ
நேரிசை வெண்பாத் தனிச்சொல்லை
நீக்கச் சவலை; தனிச்சொல் இதனுடன்
சேர்க்க வரும்நே ரிசை.


அரிதே பயிலும் சவலைவெண் பாவைப்
பெரிதாய்ப் புலவர் இயற்றிட
வில்லை யெனவே இதுவே பொதுவாக
இல்லை வழக்கிலென் போம்.

சான்றுகள்
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசந்து
சுட்டாலும் வெண்மை தரும்.
--ஔவையார், மூதுரை 4.

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவரிவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.
--பெருவாயின் முள்ளியார், ஆசாரக் கோவை 16.

அவமிருந்தோ ராயிரம்நீத் தாண்டுகொண்ட தன்றிச்
சிவன்விழிநீ யென்றுமுரை செய்தாய்
பவமொழியச் சற்றருட்கண் பாராய் பழனித்
தவகுலவே டக்குருநா தா.
--பழனிக் கலம்பகம் 61.

*****


Sponsored content

PostSponsored content



Page 26 of 29 Previous  1 ... 14 ... 25, 26, 27, 28, 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக