Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதையில் யாப்பு
+13
அசுரன்
mbalasaravanan
yarlpavanan
dhilipdsp
ச. சந்திரசேகரன்
jenisiva
கா.ந.கல்யாணசுந்தரம்
அச்சலா
kirikasan
T.N.Balasubramanian
ரா.ரா3275
சதாசிவம்
ரமணி
17 posters
Page 24 of 29
Page 24 of 29 • 1 ... 13 ... 23, 24, 25 ... 29
கவிதையில் யாப்பு
First topic message reminder :
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: கவிதையில் யாப்பு
பயிற்சி 4. குறட்பாவில் நிரல்வரும் சீர்கள்
கீழ்வரும் சீர்நிரல் தன்னில் அமையக்
குறட்பா எழுதிப் பழகு.
ஓரெது கையும் பொழிப்பினில் மோனையும்
நேர்வர வேண்டுமிங் கே.
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
தேமா புளிமா மலர்/பிறப்பு
சான்று
தீதும் நலனும் பிறர்தர வாகுமோ
ஏதும் செயல்ந மதே.
முன்னோர் மொழிகள் மனம்பட வாழ்ந்திடத்
தன்னால் பெருகும் தகவு.
***
புளிமா கருவிளம் கூவிளம் தேமா
புளிமா கருவிளம் நாள்/காசு
சான்று
விழிமுன் தெரிவதே வேண்டுவன் என்றால்
வழியில் துயரமே தான்.
இலையின் பனித்துளி செஞ்சுடர் பட்டு
கலைகள் விழிப்படும் காடு.
***
கருவிளம் கூவிளம் தேமா புளிமா
கருவிளம் கூவிளம் நாள்/காசு
சான்று
கதவுகள் மூடிடும் காலம் பொறுத்தால்
உதவிகள் தேடிவ ரும்.
அலர்மக ரந்தமே கால்கள் பிடிக்க
மலர்வலம் வந்திடும் வண்டு.
***
கூவிளம் தேமா புளிமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்/பிறப்பு
சான்று
காடுதான் மீண்டும் எனவந் திடும்சுழல்!
வீடுதான் கூடு மெவண்?
கார்முகில் வானம் கனிந்தே பொழிந்திட
ஊர்தனில் உள்ளக் களிப்பு.
***
உதவி:
தமிழில் தட்டெழுத
http://kandupidi.com/editor/
பாவகை ஆய்ந்து சரிபார்க்க
http://www.virtualvinodh.com/avalokitam-download
*****
கீழ்வரும் சீர்நிரல் தன்னில் அமையக்
குறட்பா எழுதிப் பழகு.
ஓரெது கையும் பொழிப்பினில் மோனையும்
நேர்வர வேண்டுமிங் கே.
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
தேமா புளிமா மலர்/பிறப்பு
சான்று
தீதும் நலனும் பிறர்தர வாகுமோ
ஏதும் செயல்ந மதே.
முன்னோர் மொழிகள் மனம்பட வாழ்ந்திடத்
தன்னால் பெருகும் தகவு.
***
புளிமா கருவிளம் கூவிளம் தேமா
புளிமா கருவிளம் நாள்/காசு
சான்று
விழிமுன் தெரிவதே வேண்டுவன் என்றால்
வழியில் துயரமே தான்.
இலையின் பனித்துளி செஞ்சுடர் பட்டு
கலைகள் விழிப்படும் காடு.
***
கருவிளம் கூவிளம் தேமா புளிமா
கருவிளம் கூவிளம் நாள்/காசு
சான்று
கதவுகள் மூடிடும் காலம் பொறுத்தால்
உதவிகள் தேடிவ ரும்.
அலர்மக ரந்தமே கால்கள் பிடிக்க
மலர்வலம் வந்திடும் வண்டு.
***
கூவிளம் தேமா புளிமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்/பிறப்பு
சான்று
காடுதான் மீண்டும் எனவந் திடும்சுழல்!
வீடுதான் கூடு மெவண்?
கார்முகில் வானம் கனிந்தே பொழிந்திட
ஊர்தனில் உள்ளக் களிப்பு.
***
உதவி:
தமிழில் தட்டெழுத
http://kandupidi.com/editor/
பாவகை ஆய்ந்து சரிபார்க்க
http://www.virtualvinodh.com/avalokitam-download
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: கவிதையில் யாப்பு
பயிற்சி 5. குறட்பாவில் நிரல்வரும் காய்ச்சீர்கள்
ஓரெது கையும் பொழிப்பினில் மோனையும்
சீர்வரும் காய்ச்சீர் இனி.
இவ்வகைச் சீர்கள் இனிதே அமைந்திடச்
செவ்வியப் பாக்கள் எழுது.
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு
சான்று
தென்காற்றில் காற்றாலை மென்சுற்றும் கம்பீரம்
முன்செலுமே தார்ச்சாலைப் பாம்பு.
வானத்தில் வெண்மேகம் ஐராவ தம்போல
மௌனத்தில் வீசும்தென் றல்.
***
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு
சான்று
வான்வழியே தேனமுதாய்க் காலிறங்கும் மென்துளிகள்
யானுமொரு நீர்த்துளியே தான்.
வான்வழியே தேனமுதாய்க் காலிறங்கும் மென்துளிகள்
கானமிசைக் கும்கூரை மீது.
***
ஓரெது கைவரும் போது உயிர்மெய்யும்
ஒற்றும் எதுகையா காது.
ஒற்றுடன் ஒற்றதே சேரும் உயிர்மெய்
வருக்கக் குறில்நெடி லாய்.
கீழ்வரும் பாக்குறள் ஓரெது கையல
ஒற்றோ டுயிர்மெய் வர.
மாட்டின் மடியினில் பால்மிகக் கோனாரும்
பாடியே பால்கறப் பார்.
இதனால் இனிவரும் காய்ச்சீர் நிரல்கள்
எதுகையில் ஒன்றாய் வராது.
கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு.
கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு.
புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு.
புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு.
***
இயற்சீரும் காய்ச்சீரும் சேரும் வகைகள்
பயில்வது பற்பல வாய்.
இயற்சீர் தமக்குள் வகைகள் பலவாய்
இயன்று வருவ தியல்பு.
திருக்குறள் யாப்பைத் திருத்தமாய்க் நோக்க
வரும்வகைக் கண்படும் நன்கு.
*****
ஓரெது கையும் பொழிப்பினில் மோனையும்
சீர்வரும் காய்ச்சீர் இனி.
இவ்வகைச் சீர்கள் இனிதே அமைந்திடச்
செவ்வியப் பாக்கள் எழுது.
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு
சான்று
தென்காற்றில் காற்றாலை மென்சுற்றும் கம்பீரம்
முன்செலுமே தார்ச்சாலைப் பாம்பு.
வானத்தில் வெண்மேகம் ஐராவ தம்போல
மௌனத்தில் வீசும்தென் றல்.
***
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு
சான்று
வான்வழியே தேனமுதாய்க் காலிறங்கும் மென்துளிகள்
யானுமொரு நீர்த்துளியே தான்.
வான்வழியே தேனமுதாய்க் காலிறங்கும் மென்துளிகள்
கானமிசைக் கும்கூரை மீது.
***
ஓரெது கைவரும் போது உயிர்மெய்யும்
ஒற்றும் எதுகையா காது.
ஒற்றுடன் ஒற்றதே சேரும் உயிர்மெய்
வருக்கக் குறில்நெடி லாய்.
கீழ்வரும் பாக்குறள் ஓரெது கையல
ஒற்றோ டுயிர்மெய் வர.
மாட்டின் மடியினில் பால்மிகக் கோனாரும்
பாடியே பால்கறப் பார்.
இதனால் இனிவரும் காய்ச்சீர் நிரல்கள்
எதுகையில் ஒன்றாய் வராது.
கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு.
கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு.
புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு.
புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு.
***
இயற்சீரும் காய்ச்சீரும் சேரும் வகைகள்
பயில்வது பற்பல வாய்.
இயற்சீர் தமக்குள் வகைகள் பலவாய்
இயன்று வருவ தியல்பு.
திருக்குறள் யாப்பைத் திருத்தமாய்க் நோக்க
வரும்வகைக் கண்படும் நன்கு.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: கவிதையில் யாப்பு
6.25. குறள்வெண்பா வித்தகங்கள்
வித்தகம் பற்பலவாய் விந்தைக் குறள்வெண்பா
உத்தி பலவா றுள.
ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
இரட்டைச் சிறப்பெனத் தேறு.
உத்தி 1. முதற்சீர் இரண்டெழுத்து முடிவில் வருதல்
ரமணி:
தாத்தா தடியெடுத்தால் தண்டல ராவாரோ?
ஆத்தா தடியெடுத் தா. ... 1
வாசிவாசி யென்று மனதில் முணுமுணுத்தால்
பேசுமொழி யாகும் சிவா. ... 2.
சுவாசப் பயிற்சிகளில் தேர்ந்து மனதை
சுவாசத்தால் கட்டினான் வாசு. ... 3
சுகாதாரம் சிங்கார வஸ்துகள் அல்ல
விகாரம் விளைப்பதே காசு. ... 4
வாசிக்கப் பேப்பரைக் கேட்டதுதான் தாமதம்
ஓசியா என்றான் சிவா. ... 5
புன்னகை இன்முகம் போதாது வேண்டுவது
தன்னல மில்லாத அன்பு. ... 6
திரமுள்ள பக்தியில் தீராது நின்றால்
உறவாவார் பார்த்’சா ரதி. ... 7
புரிந்து செயலாற்றின் போய்விடும் அச்சம்
அறியுமோ வாழ்வில் இரிபு? ... 8
[இரிபு=தோல்வி, வெறுப்பு]
குலவும் கலியில் கலித்துக் களித்துப்
பலவிதமாய் வாழும் உலகு. ... 9
விரல்களில் மோதிரம் மின்னிடத் தொக்கா
நிரல்களைச் செய்தார் ரவி. ... 10
[தொக்கா=தொலைக்காட்சி என்பதன் சுருக்கம்.]
மேலும் பாக்களுக்கு:
https://groups.google.com/forum/#!searchin/santhavasantham/முடிபிறழ்$௨0அடி/santhavasantham/EZ0mnRh32rE/tdgMtULMJjUJ
https://groups.google.com/forum/#!searchin/santhavasantham/முடிபிறழ்$௨0அடி/santhavasantham/9dmhNUiaULw/NywyN0xsYkAJ
பயிற்சி
இந்த வகைவரும் விந்தைக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.
*****
வித்தகம் பற்பலவாய் விந்தைக் குறள்வெண்பா
உத்தி பலவா றுள.
ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
இரட்டைச் சிறப்பெனத் தேறு.
உத்தி 1. முதற்சீர் இரண்டெழுத்து முடிவில் வருதல்
ரமணி:
தாத்தா தடியெடுத்தால் தண்டல ராவாரோ?
ஆத்தா தடியெடுத் தா. ... 1
வாசிவாசி யென்று மனதில் முணுமுணுத்தால்
பேசுமொழி யாகும் சிவா. ... 2.
சுவாசப் பயிற்சிகளில் தேர்ந்து மனதை
சுவாசத்தால் கட்டினான் வாசு. ... 3
சுகாதாரம் சிங்கார வஸ்துகள் அல்ல
விகாரம் விளைப்பதே காசு. ... 4
வாசிக்கப் பேப்பரைக் கேட்டதுதான் தாமதம்
ஓசியா என்றான் சிவா. ... 5
புன்னகை இன்முகம் போதாது வேண்டுவது
தன்னல மில்லாத அன்பு. ... 6
திரமுள்ள பக்தியில் தீராது நின்றால்
உறவாவார் பார்த்’சா ரதி. ... 7
புரிந்து செயலாற்றின் போய்விடும் அச்சம்
அறியுமோ வாழ்வில் இரிபு? ... 8
[இரிபு=தோல்வி, வெறுப்பு]
குலவும் கலியில் கலித்துக் களித்துப்
பலவிதமாய் வாழும் உலகு. ... 9
விரல்களில் மோதிரம் மின்னிடத் தொக்கா
நிரல்களைச் செய்தார் ரவி. ... 10
[தொக்கா=தொலைக்காட்சி என்பதன் சுருக்கம்.]
மேலும் பாக்களுக்கு:
https://groups.google.com/forum/#!searchin/santhavasantham/முடிபிறழ்$௨0அடி/santhavasantham/EZ0mnRh32rE/tdgMtULMJjUJ
https://groups.google.com/forum/#!searchin/santhavasantham/முடிபிறழ்$௨0அடி/santhavasantham/9dmhNUiaULw/NywyN0xsYkAJ
பயிற்சி
இந்த வகைவரும் விந்தைக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: கவிதையில் யாப்பு
உத்தி 2. முதல் ஒலிபிறழ மாறும் முடிவு
முதற்சீர் எழுத்து இரண்டிலோ மேலோ
அதனொலி மாறிவரும் ஈற்று.
எழுத்திடம் மாறுவதால் மாறும் ஒலியே
எழுத்தின் வகையைப் பொறுத்து.
ராம்-எனும் சொல்மாற மார்-என ஆகுமே
கூத்து திரும்பினால் தூக்கு.
மேலும் சில காட்டுகள்
சாவி-வாசி, குருவி-உருகி, கப்பல்-பக்கல்,
வேதம்-தேவம், காதம்-தாகம், வேதனை-தேவனை
ராம்ராம் வடநாட்டில் ராமா தமிழிலே
ராமாஞ்ச நேயரனு மார். ... 1
ரோம்நாட்டில் அன்று குடிமக்கள் சாப்பாட்டில்
யாம்கண்ட தில்லையே மோர். ... 2
ரவைதரும் உப்புமா சட்னியுடன் ஆகா!
சுவைப்போமே உள்ள வரை! ... 3
வார்த்திகம் எய்தியதில் ஆளே உருமாற
யாரெனும் கேள்வியில் ராவ். ... 4
குச்சுவீட்டில் ஏதுவழி காப்பிக்கு? காலையில்
பச்சரிசிக் கஞ்சியில் சுக்கு. ... 5
தலாரூபாய் நூறுதர முந்நூறு தந்தாள்
கலாவின் மகளாம் லதா. ... 6
சாவுபல தீவிபத்தில் மாண்டோர் கணக்கிலே
பாவம்நம் தீயணையர் வாசு. ... 7
காத்துப் பயனில்லை மாற்றானின் பாசறையை
ராத்திரியில் சூழ்ந்துநின்று தாக்கு. ... 8
தூக்கிக் கழிநுனியில் ஊசலாட வைப்பானே
ஊக்கில் எழும்கழைக் கூத்து. ... 9
தோப்புவழிச் சென்றபோது தோன்றித் தலையுயர்த்த
கூப்பிட்ட தேவோர்செம் போத்து. ... 10
பயிற்சி
இந்த வகையிலே சொந்தக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.
*****
முதற்சீர் எழுத்து இரண்டிலோ மேலோ
அதனொலி மாறிவரும் ஈற்று.
எழுத்திடம் மாறுவதால் மாறும் ஒலியே
எழுத்தின் வகையைப் பொறுத்து.
ராம்-எனும் சொல்மாற மார்-என ஆகுமே
கூத்து திரும்பினால் தூக்கு.
மேலும் சில காட்டுகள்
சாவி-வாசி, குருவி-உருகி, கப்பல்-பக்கல்,
வேதம்-தேவம், காதம்-தாகம், வேதனை-தேவனை
ராம்ராம் வடநாட்டில் ராமா தமிழிலே
ராமாஞ்ச நேயரனு மார். ... 1
ரோம்நாட்டில் அன்று குடிமக்கள் சாப்பாட்டில்
யாம்கண்ட தில்லையே மோர். ... 2
ரவைதரும் உப்புமா சட்னியுடன் ஆகா!
சுவைப்போமே உள்ள வரை! ... 3
வார்த்திகம் எய்தியதில் ஆளே உருமாற
யாரெனும் கேள்வியில் ராவ். ... 4
குச்சுவீட்டில் ஏதுவழி காப்பிக்கு? காலையில்
பச்சரிசிக் கஞ்சியில் சுக்கு. ... 5
தலாரூபாய் நூறுதர முந்நூறு தந்தாள்
கலாவின் மகளாம் லதா. ... 6
சாவுபல தீவிபத்தில் மாண்டோர் கணக்கிலே
பாவம்நம் தீயணையர் வாசு. ... 7
காத்துப் பயனில்லை மாற்றானின் பாசறையை
ராத்திரியில் சூழ்ந்துநின்று தாக்கு. ... 8
தூக்கிக் கழிநுனியில் ஊசலாட வைப்பானே
ஊக்கில் எழும்கழைக் கூத்து. ... 9
தோப்புவழிச் சென்றபோது தோன்றித் தலையுயர்த்த
கூப்பிட்ட தேவோர்செம் போத்து. ... 10
பயிற்சி
இந்த வகையிலே சொந்தக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: கவிதையில் யாப்பு
[mention]முதற்சீர் எழுத்து இரண்டிலோ மேலோ அதனொலி மாறிவரும் ஈற்று. எழுத்திடம் மாறுவதால் மாறும் ஒலியே எழுத்தின் வகையைப் பொறுத்து.
ராம்-எனும் சொல்மாற மார்-என ஆகுமே கூத்து திரும்பினால் தூக்கு. மேலும் சில காட்டுகள் சாவி-வாசி, குருவி-உருகி, கப்பல்-பக்கல், வேதம்-தேவம், காதம்-தாகம், வேதனை-தேவனை[/mention] wrote:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கவிதையில் யாப்பு
உத்தி 3. முதற்சீரில் வரும் சொல் முடிவில் வேறு பொருளில் வருதல்
நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு.
கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு.
உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு?
குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி.
படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி.
தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர்.
அக்கரைக்கு இக்கரை பச்சை குடியிருப்பு
இக்கரையேன் பின்னக் கறை?
தலைப்பு அறிவிக்கப் பாட எழுந்த
கலைக்கையில் சேலைத் தலைப்பு.
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]
கதையால் துரியோத னைவீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை.
அரிச்சுவடி மேற்படிப்பு எல்லாம் சரிதான்
அரிசி அரிச்சு வடி.
உத்தி 3. முதற்சீரில் வரும் சொல் முடிவில் வேறு பொருளில் வருதல்
நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு.
கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு.
உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு?
குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி.
படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி.
தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர்.
அக்கரைக்கு இக்கரை பச்சை குடியிருப்பு
இக்கரையேன் பின்னக் கறை?
தலைப்பு அறிவிக்கப் பாட எழுந்த
கலைக்கையில் சேலைத் தலைப்பு.
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]
கதையால் துரியோத னைவீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை.
அரிச்சுவடி மேற்படிப்பு எல்லாம் சரிதான்
அரிசி அரிச்சு வடி.
பயிற்சி
இந்த வகையிலே சொந்தக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.
*****
நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு.
கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு.
உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு?
குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி.
படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி.
தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர்.
அக்கரைக்கு இக்கரை பச்சை குடியிருப்பு
இக்கரையேன் பின்னக் கறை?
தலைப்பு அறிவிக்கப் பாட எழுந்த
கலைக்கையில் சேலைத் தலைப்பு.
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]
கதையால் துரியோத னைவீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை.
அரிச்சுவடி மேற்படிப்பு எல்லாம் சரிதான்
அரிசி அரிச்சு வடி.
உத்தி 3. முதற்சீரில் வரும் சொல் முடிவில் வேறு பொருளில் வருதல்
நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு.
கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு.
உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு?
குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி.
படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி.
தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர்.
அக்கரைக்கு இக்கரை பச்சை குடியிருப்பு
இக்கரையேன் பின்னக் கறை?
தலைப்பு அறிவிக்கப் பாட எழுந்த
கலைக்கையில் சேலைத் தலைப்பு.
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]
கதையால் துரியோத னைவீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை.
அரிச்சுவடி மேற்படிப்பு எல்லாம் சரிதான்
அரிசி அரிச்சு வடி.
பயிற்சி
இந்த வகையிலே சொந்தக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: கவிதையில் யாப்பு
6.30. நேரிசை இன்னிசை வெண்பாக்கள்
குறள்வெண்பா நீக்கி இதர வகைகள்
இரண்டு விதத்தில் இயற்றப் படுவன
நேரிசை இன்னிசை யென்று.
நேரிசை இன்னிசை வெண்பா வகையென
பேரும் இலக்கணம் பெற்று வருதல்
அளவியல் வெண்பா கருதியே என்று
உளத்தில் இருத்தவேண் டும்.
சீரது நான்கில் இரண்டாம் அடிவரும்
நேரிசை வெண்பாச் சிறப்பாம் தனிச்சொல்லே
நேரிசை வெண்பாக் குறி.
6.31. நேரிசை வெண்பா என்பது
வெண்பா விலக்கணம் பெற்று அடியிரண்டின்
ஈற்றில் தனிச்சொல் ஒரூஉ எதுகையாக
நேரிசை வெண்பா வரும்.
அடியிரண்டின் ஒன்றாம்சீர் நான்காம்சீர் மற்றும்
அடியொன்றின் ஒன்றாம்சீர் ஓரெதுகை யென்பது
நேரிசை வெண்பா மரபு.
அதாவது சீரொன்றும் சீரைந்தும் எட்டும்
பொதுவில் எதுகைகள் ஒன்றாய் அமைவது
நேரிசை வெண்பா மரபு.
அளவியல் நேரிசை வெண்பா வருமே
அளவடி நான்கிலும் ஓர்விகற்ப மல்லது
முன்னீ ரடிகள் விகற்பம் ஒருவகை
பின்னீர் ரடிகள் விகற்பம் ஒருவகை
என்று எதுகையி ரண்டு.
ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா சான்று
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12
இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா சான்று
உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப -- நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.
---முன்றுரையரையனார், பழமொழி நானூறு 6
*****
குறள்வெண்பா நீக்கி இதர வகைகள்
இரண்டு விதத்தில் இயற்றப் படுவன
நேரிசை இன்னிசை யென்று.
நேரிசை இன்னிசை வெண்பா வகையென
பேரும் இலக்கணம் பெற்று வருதல்
அளவியல் வெண்பா கருதியே என்று
உளத்தில் இருத்தவேண் டும்.
சீரது நான்கில் இரண்டாம் அடிவரும்
நேரிசை வெண்பாச் சிறப்பாம் தனிச்சொல்லே
நேரிசை வெண்பாக் குறி.
6.31. நேரிசை வெண்பா என்பது
வெண்பா விலக்கணம் பெற்று அடியிரண்டின்
ஈற்றில் தனிச்சொல் ஒரூஉ எதுகையாக
நேரிசை வெண்பா வரும்.
அடியிரண்டின் ஒன்றாம்சீர் நான்காம்சீர் மற்றும்
அடியொன்றின் ஒன்றாம்சீர் ஓரெதுகை யென்பது
நேரிசை வெண்பா மரபு.
அதாவது சீரொன்றும் சீரைந்தும் எட்டும்
பொதுவில் எதுகைகள் ஒன்றாய் அமைவது
நேரிசை வெண்பா மரபு.
அளவியல் நேரிசை வெண்பா வருமே
அளவடி நான்கிலும் ஓர்விகற்ப மல்லது
முன்னீ ரடிகள் விகற்பம் ஒருவகை
பின்னீர் ரடிகள் விகற்பம் ஒருவகை
என்று எதுகையி ரண்டு.
ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா சான்று
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12
இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா சான்று
உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப -- நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.
---முன்றுரையரையனார், பழமொழி நானூறு 6
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: கவிதையில் யாப்பு
தமிழ் ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறப்பான திரி ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 24 of 29 • 1 ... 13 ... 23, 24, 25 ... 29
Similar topics
» யாப்பு
» அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
» சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !
» கவிதையில்...
» சீத்தாப்பழம்....கவிதையில் .
» அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
» சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !
» கவிதையில்...
» சீத்தாப்பழம்....கவிதையில் .
Page 24 of 29
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|