ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக வாழ்க்கை

+3
மீனு
Manik
mdkhan
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உலக வாழ்க்கை - Page 2 Empty உலக வாழ்க்கை

Post by mdkhan Mon Oct 12, 2009 12:41 pm

First topic message reminder :

பிறர் மீது அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவி செய்தல், தம்மைப் போன்றுதான் பிறருக்கும் இன்பத்தை பெறத்துடிக்கும் ஆசையும், துன்பத்தை தாங்க முடியாத தவிப்பும் இருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல் போன்ற மனித பன்புகள் மூலம் நம் மனதை நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

நாம் சம்பாதிக்கும் பணம் நம் ஒருவனுக்காக மட்டும் இறைவன் தருவதில்லை. நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி நம்மை எதிர்பார்த்து எத்தனையோ குடும்பங்கள் காத்திருக்கின்றன என்பதை மனதில் கொண்டு அப்படிப்பட்ட மணிதர்களை தேடிப்பார்க்க முயற்ச்சி செய்தல். அவர்களுக்கு உதவி செய்தல். அதில் சந்தோசம் கான தெரிந்துகொள்ளுதல், பிறரிடம் இருந்து பெறுவது மட்டும் தான் சந்தோசம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் பிறருக்கு கொடுத்து உதவும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோசம் தான் மிகப் பெரிய சந்தோசம் என்ற தத்துவத்தை வாழ்க்கையில் புரிந்துகொள்ளுதல் போன்ற விசயங்களின் மூலம் நாம் இந்த உலகத்தில் பணத்தின் மீது நமக்கு உள்ள ஆசையில் இருந்து சிறிது விலகி நிற்க முடியும்.

நம்மிடம ஒருவர் உதவி கேட்டு வருகிறார்கள் என்றால் (அது பண உதவியாக இருந்தாலும் சரி அல்லது அல்லது அது நம் உடல் உழைப்பான உதவியாக இருந்தாலும் சரி) அது இறைவன் நமக்கு அளித்த பாக்கியம் என்று நினைத்து நம்மால் முடிந்தால் மற்றவர் உதவி செய்வதற்க்கு முன்பாக நாம் அந்த உதவியை செய்து அவர் துன்பத்தை துடைக்கவேண்டும் என்று நினைப்பதன் மூலம் நம் மனதை நம்மால் தூய்மையாக எப்பொழுதும் வைத்துக்கொள்ள முடியும்.

நமக்கு முன்னால் பல மன்னாதி மன்னரெல்லாம் வாழ்ந்த பூமி இது அவர்கள் சேர்க்காத செல்வம் இல்லை. அவர்கள் வாழாத வாழ்க்கை இல்லை. இன்று அவர்கள் எங்கே அந்த செல்வம் எங்கே. வாழ்ந்த வாழ்க்கை எங்கே. இந்த அற்ப வாழ்வில் எது நிரந்தரம். இன்று இந்த உலகில் உள்ள இதே பரபரப்பும் சுறுசுறுப்பும் நாளை நாம் இந்த உலகத்தில் இல்லாத அந்த நாளிலும் இருக்கத்தான் செய்யும். நமக்காக நம் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட வருடக்கணக்கில் சாப்பிடாமல் தூங்காமல் கவலைப்படப்போவதில்லை. நாம் வாழும் காலத்தில் பிறருக்காக நாம் செலவிடும் நேரமும் பிறர் நலனுக்காக நாம் செலவிடும் பொருளும் மட்டுமே இந்த உலகத்தில் நம்மை நிரந்தரமாக வாழ வைக்கும்.

என்ன ? தத்துவமெல்லாம் ரெம்ப ஜாஸ்தியா இருக்கேன்னு பாக்கிறீங்களா ? இது என்னோட 200 ஆவது பதிவு அதனால ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சிறு உபதேசம்.


உலக வாழ்க்கை - Page 2 Eegaraitkmkhan
உலக வாழ்க்கை - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down


உலக வாழ்க்கை - Page 2 Empty Re: உலக வாழ்க்கை

Post by nandhtiha Tue Oct 13, 2009 11:30 am

அன்புச் சகோதரர் கான்
வணக்கம்

உங்களுக்கெல்லா இருவகை மின் சக்தி பற்றித்தான் தெரியும், ஒன்று ஏசி மற்றது டிசி, தமிழகத்தில் இருப்பவர்களுக்கு மூன்றாவது முன்சக்தியும் தெரியும், அது ஏவி (ஆற்காடு வீராசாமி) மின் சக்தி, அது எப்போது
வரும் எப்போது போகும் என்பதனை ஈசனும் அறியார், ஆதலால் உடன் பதிவு செய்ய முடியவில்லை, தாங்கள்
எழுதிய உலக வாழ்க்கை என்னும் தத்துவ வரிகளுக்கு என் மொழியாக எழுதியவற்றுக்குப் பொருளை ஈகரையில் பதிவு செய்யட்டுமா அல்லது தனியாக மின்னஞ்சலில் அனுப்பட்டுமா

அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

உலக வாழ்க்கை - Page 2 Empty Re: உலக வாழ்க்கை

Post by mdkhan Tue Oct 13, 2009 11:33 am

வணக்கம்
நன்றிகள்
இந்த பதிவிலேயே பதியுங்கள் அக்கா.......


உலக வாழ்க்கை - Page 2 Eegaraitkmkhan
உலக வாழ்க்கை - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

உலக வாழ்க்கை - Page 2 Empty Re: உலக வாழ்க்கை

Post by பாலாஜி Tue Oct 13, 2009 11:35 am

வணக்கம் சகோதரி நலமா
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலக வாழ்க்கை - Page 2 Empty Re: உலக வாழ்க்கை

Post by யமுனாஸ் Tue Oct 13, 2009 11:44 am

காலை வணக்கம் பாலாஜி அண்ணா
யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

உலக வாழ்க்கை - Page 2 Empty Re: உலக வாழ்க்கை

Post by nandhtiha Tue Oct 13, 2009 11:48 am

வணக்கம்
மனந்தனை அடக்க மகமதுகான் என்னும்

எனதுடன் பிறந்தான் எடுத்துரைத்த பொன்மொழியைத்
தினந்தோறும் கைக்கொள்ளத் தீதொழிந்து மனித
இனமெல்லாம் இன்பம் இந்நிலத்தில் எய்திடுமே

அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவென்று
இன்புற்று ஈதலா லலெய்து மிரும்பூது
என்றைக்கும் நம்மை இமைபோல் காக்கின்ற
தன்னிகரில்லா இறைநல்கு மினியசுவரக்கம் போலாகும்

செத்தால் சிலநேரம் அழுதுவிட்டு சிறுபோதில் மறந்திடுவர்
எத்தால் இவ்வுலகத்தில் எந்நாளும் இருந்திடுவோம்?
மெத்தப் படித்தவரும் மேதினியை ஆண்டவரும்
சொத்துமிக சேர்த்தவரும் சுடுகாட்டில் போய்மறைந்தார்

பசித்திருப்பான் வயிறார பாசமுடன் சோறிட்டுப்
புசித்திருப்பான் சுவனத்தைப் பூமியிலே வரவழைப்பான்
இசைபெற்று வாழ்ந்திடவே இறைவனருள் ரஹ்மத்தால்
வசையிலா வாழ்வு பெற இம்மாமணியை வாழ்த்துதுமே

பொருள் வேண்டுமாயின் எழுதுக

பொருள்


மனம் என்பது மாயப்பிசாசு உலக இன்பம் துய்ப்பார்க்கு. அம்மனமோ யோகியர்க்கு ஆத்மா என்னும் இரதத்தை இறைவன் என்னும் இலக்கு நோக்கி இழுத்துச் செல்லும் இந்த்ரியங்களாகிய குதிரைகளை
அடக்கியாளும் கடிவாளம் என்கிறது கடோபனிஷத்


ஆத்மானம் ரதினம் வித்தி சரீரரம் ரதமேவ து
புத்திம் சாரதிம் வித்தி மன:ப்ரக்ரஹமேவ ச

பொருள்
ஆத்மாவை ரதத்தில் செல்பவனாகவும் இவ்வுடல் ரதமாகவும் அறிவை இரதத்தை ஓட்டுபவனாகவும், இந்திரியங்களாகிற குதிரைகளைக் கட்டுப் படுத்தும் கடிவாளமாகவும் நினைத்து வாழ்க்கையை நடத்து என்றது


யோகியர்க்கு ஒரு மூலமாய் நின்ற திருமூலர் தமது ஏழாம் தந்திரத்தில்

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கின் அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. 3 (ஏழாம் தந்திரம் பாடல் என் 2033)

அறிவில்லாதவர்கள் ஐந்து இந்திரியங்களையும் அடக்கு என்பர். மண்ணோர் முதல் விண்ணொர் வரை இந்த ஐந்தையும் அடக்கியவர் எவருமிலர். அவ்வாறு அடக்கிடில் சடப் பொருளாகி விடுவோம் என்பதனை இவர்கள் உணரவில்லை. ஆனால் நான் அந்த ஐந்தையும் அடக்காமல் வசப் படுத்தும் அறிவினைப் பெற்றேன்
என்கிறார்.


அந்த அறிவு திரு முகம்மது கான் அவர்களின் முதல் பாட்டில் விளக்கப் படுகிறது. தன்னுயிர் போல் மன்னுயிர்
நினத்து அவற்றை மதித்து வாழும் பண்பே மனிதப் பண்பு. இந்தப் பண்பினைக் கை கொண்டால் வெறிக் குணங்கள் அடங்கி மனம் நம் வசப் படும் என்கிறார். பெருக்கமான ஒரு விடயத்தைச் சுருக்கித் தந்த பெருமை திரு கானுக்கே சேரும்.


நீதி ஸ்லோகம் கூறுகிறது

பரோபகாராய வஹந்தி நத்ய; பரோபகாராய துஹந்தி காவ:
பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா: பரோபகாரார்த்தம் இதம் சரீரம்

ஒரு நதி தன் ஓட்டத்தினால் உலகைச் செழிக்க வைக்கிறது. பாலைப் பொழிந்து தரும் பசுக்கள் பலர் உயிரைக்
காக்கிறது, ஒரு சிறு விதைக்காகப் பெரிய பழத்தைத் தந்து மரங்கள் பரோபகாரம் செய்கின்றன. ஏ!அறிவுள்ள மனிதா உன் உடல் உள்ளம் உயிர் மூன்றும் பரோபகாரத்துக்காகவே படைக்கப் பட்டன என்று உலகத்தார் மேற்கொள்ள வேண்டிய பற்றில்லாப் பற்றினை எப்படி அடைவது என்று அகமது திறக்கிறார் நமது மகமது
கான் தனது இரண்டாவது பாராவினால்.


நிலையாமையைப் பற்றித் திருவள்ளுவர்

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு" என்றார்

இந்த உலக்குக்கு உள்ள பெருமையாவது நேற்று இருந்தான் இன்றில்லை என்பதேயாகும்

திருமூலர் ஒருபடி மேலே போய்

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை மாற்றிப் பிணமென்று பேரிட்டு
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே

முடிதரித்த மன்னரெல்லாம் பிடிசாம்பர் ஆனார்கள், தேடிவத்த செல்வம் ஓடிவிட்டது, நிரந்தரமற்ற தன்மையே
நிரந்தரமானது. இறைவன் திருவருளால் பெற்ற செல்வத்தைப் பிறருக்கும் ஈவார் இறந்தும் இறவாதாரே என்பதை திரு கானின் மூன்றாவது பாரா விளக்குகிறது.



திருக்குர் ஆனிலிருந்தும் தக்க பொருள் கொடுக்க முடியும். தத்துவம் சார்ந்த விடயங்களை நாம் எடுத்தாள மூல மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரபு மொழியில் பரிச்சயம் இல்லை.மொழி பெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் கருத்துக்களத் திணித்து விட முடியும். ஆதலால் திருக்குர் ஆனிலிருந்து
மேற்கோள் காட்ட வில்லை



தத்துவங்கள அள்ளித் தெளிக்கும் இந்த வித்தக மனிதர் பல்லாண்டு வாழ்க
அன்புடன்

குறிப்பு
ரஹ்மத் என்ற சொல்லுக்கு அருட் கொடை என்றனர் இஸ்லாமிய நண்பர்கள்



நந்திதா
குற்றம் இருப்பின் என்னை மன்னித்து அதனைத் திருத்தும் உரிமை உங்களுக்கே


Last edited by nandhtiha on Tue Oct 13, 2009 11:50 am; edited 1 time in total
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

உலக வாழ்க்கை - Page 2 Empty Re: உலக வாழ்க்கை

Post by பாலாஜி Tue Oct 13, 2009 11:49 am

yamuna wrote:காலை வணக்கம் பாலாஜி அண்ணா
யமுனா


காலை வணக்கம் தங்காச்சி.............
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலக வாழ்க்கை - Page 2 Empty Re: உலக வாழ்க்கை

Post by nandhtiha Tue Oct 13, 2009 8:49 pm

வணக்கம்
திரு கான் அவர்கள்
பல வித சிக்கல்களுக்கு இடையில் தாங்கள் எழுதியதற்கு என் மொழிகள் என்று எழுதி இருந்தேன், அதற்குப் பொருள் எழுத மீண்டும் வேண்டினீர்கள், அதனையும் எழுதினேன், ஆனால் தாங்கள் படித்ததாகவே தெரியவில்லையே? பிடிக்கவில்லை என்றால் நடத்துனரிடம் முறையிட்டு அழிக்கச் சொல்லி விடுங்கள்.என்னுடைய நேரம் எனக்கு மிக முக்கியமானது
அன்புடன்
நந்திதா


Last edited by nandhtiha on Tue Oct 13, 2009 8:53 pm; edited 1 time in total (Reason for editing : BECAUSE OF NO RESPONSE)
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

உலக வாழ்க்கை - Page 2 Empty Re: உலக வாழ்க்கை

Post by kirupairajah Tue Oct 13, 2009 9:10 pm

கான் உங்களுக்கு மிகவும் அவசியமான விடயம் என்றால் மட்டும் அக்காவிடம் கேழுங்கள், அவர்களின் நேரத்தை தயவு செய்து வீணாக்க வேண்டாம்


உலக வாழ்க்கை - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

உலக வாழ்க்கை - Page 2 Empty Re: உலக வாழ்க்கை

Post by Manik Tue Oct 13, 2009 9:19 pm

அக்கா மிகவும் அருமையான விளக்கத்தை அளித்துள்ளீர்கள் ஆனால் கான் நண்பர் படிக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம் என்னைப்போல் நிறைய தம்பிகள் படித்திருப்பார்கள் உங்களின் முயற்சி நன்மைக்கே அக்கா வருத்தம் வேண்டாம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலக வாழ்க்கை - Page 2 Empty Re: உலக வாழ்க்கை

Post by mdkhan Tue Oct 13, 2009 9:29 pm

வணக்கம்
நன்றிகள் நந்திதா அக்கா அவர்களுக்கு.........

அக்கா என் பதிவிற்க்கு நீங்கள் கொடுத்து இருக்கும் எளிய விளக்கத்தை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதற்க்கு ஒரு நீண்ட பதிலும் எழுதினேன் அதை போஸ்ட் செய்யும்போது ஏனோ தெரியவில்லை பேஜ் எரர் வந்துவிட்டது போஸ்ட் ஆகவில்லை. மன்னிக்கவும்.

கூடிய சீக்கிரம் உங்களின் இந்த அழகிய விளக்கத்திற்க்கு பதில் எழுதி பதிவிடுகிறேன்.

அன்பு நன்பர்கள் கிருபை ராஜ் நீங்கள் என் பதிவை படித்தீர்களா....... ஏனென்றால் இந்த என் பதிவு எல்லோருக்கும் பொதுவான முக்கியமான பதிவுதான் அதனால்தான் நான் அக்காவிடம் பதில் விளக்கம் எழுதச்சொன்னேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி அன்பு நந்திதா அக்கா மற்றும் நன்பர் கிருபைராஜ், மாணிக்.


உலக வாழ்க்கை - Page 2 Eegaraitkmkhan
உலக வாழ்க்கை - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

உலக வாழ்க்கை - Page 2 Empty Re: உலக வாழ்க்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum