ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_m10திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா?

4 posters

Go down

திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Empty திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா?

Post by சிவா Wed Nov 07, 2012 4:29 pm

‘அதிதி தேவோ பவ” என்பது வேதத்தில் குறிப்பிடத்தக்க வாசகம். ‘விருந்தாளிகள் கடவுளுக்கு சமம் என்பது அதன் பொருள். அதனால் தானோ என்னவோ கடவுள் சோதிப்பதுபோல், விருந்தினர்களும் திடீரென வந்து, சில நேரங்களில் திண்டாட வைத்துவிடுவார்கள்.

முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமுறை இருந்தது. குடும்பத்தில் நிறைய பேர் இருந்தனர். அனைத்து வேலைகளையும் நான், நீ என பகிர்ந்து இழுத்துப்போட்டு செய்வார்கள். அதனால் எந்த நேரத்தில், எந்த விருந்தாளி வந்தாலும் அது விருந்தாளிக்கும், அவர்களை வரவேற்கும் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. அப்போதெல்லாம் குடும்பங்களில் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. பள்ளி விடுமுறைக்கு யார் வீட்டுக்காவது போய் கொட்டமடிப்பதும் வழக்கமாக இருந்தது. பெண்கள் வீட்டில் இருந்தபடியே குடும்ப நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்தபோது இதெல்லாம் பெரிய சுமையாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது நிலைமையே வேறு.

கணவன் மனைவி இருவரும் பணிக்குச் சென்றுவிட்டு திரும்புவதால் இருவருமே வீடு திரும்பும்போது களைத்து விடுகிறார்கள். அலுவலகம் & வீடு இரண்டிலும் மாறி மாறி பொறுப்புகளை சுமப்பதால் வாரமுடிவில் ஓய்வு என்பது அவர்களுக்கு கட்டாயமாகிறது. அன்று ஓய்வு எடுத்து, அடுத்த ஒரு வாரத்திற்கான ஓட்டத்திற்கு அவர்கள் தயாராக வேண்டும். அந்த ஓய்வு நேரத்தில் எந்த முன்அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று வந்து நிற்கும் விருந்தாளிகளை பார்த்தால், முகம் சிரித்தாலும் அகம் எரிச்சல்படத்தானே செய்யும்! விருந்தோம்பல் என்பது ஒரு நல்ல பண்பு. தமிழ் பெண்கள் இன்றும் விருந்தோம்பலில் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் வந்தாரை வரவேற்கும் மனநிலையில் அவர்களும் இருக்கவேண்டும் அல்லவா!

முந்தைய காலங்களில் தகவல் தொடர்புகள் போது மானதாக இல்லை. அதனால் அறிவித்துவிட்டு வரமுடியாது. இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை. அதனால் எங்கு செல்ல விரும்பினாலும், முன்னறிவிப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் திடீரென்று போய் நிற்பது அவ்வளவு நல்லதல்ல! எதிர்பார்க்காத நேரத்தில் மற்றவர்கள் வீடுகளில் போய் நிற்பது, வேண்டாத முகச்சுளிப்பை உருவாக்குகிறது. முகச்சுளிப்பு இல்லாத நிலைதான் அன்பை வளர்த்து மேம்படுத்தும்.

வேலைக்கு போகும் குடும்பத் தலைவியான நிஷா கூறுகிறார்..

“நான் வாரம் முழுவதும் அவசர அவசரமாக வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் ஓடி ஓடி ஓய்ந்து போய் வார முடிவில் களைத்து உட்கார்ந்து விடுவேன். அன்று பார்த்து என் நாத்தனார், தனது பிள்ளைகளை என் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு போய்விடுவார். எங்களால் மறுப்பு எதுவும் சொல்ல முடிவதில்லை. அந்த குழந்தைகளின் வருகையால், எங்கள் தனிமை பாதிக்கப்படும். எங்கள் தாம்பத்ய வாழ்க்கையும் நெருக்கடிக்குள்ளாகி விடுகிறது. நானும், என் கணவரும் வேலைக்கு செல்வதால் சனிக்கிழமைதான் ஆறஅமர உட்கார்ந்து பேசுவோம். வீட்டு விஷயம், அலுவலக விஷயம் எதுவானாலும் அன்று தான் பேசி முடிவெடுப்போம். மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதால் இரவு வெகு நேரம் கண்விழித்து பேசிக் கொண் டிருப்போம். நாத்தனாரின் பிள்ளைகள் இருவரும் எங்கள் பக்கத்தில் படுத்துக் கொள்வதால் எங்களுடைய அன்யோன்யம் குறைந்து, இருவருக்கும் இடையே இடைவெளி தோன் றுகிறது. இதனை யாரிடம் சொல்வதென்றே தெரிய வில்லை” என்று, விருந்தாளிகளால் நெருக்கடிக்குள்ளான தன் வாழ்க்கையைப் பற்றி நிஷா கூறுகிறார்.

விருந்தாளிகளுக்கு வகை வகையாக சமைத்துப் போடுவது ஒரு பக்கமிருந்தாலும் அவர்களோடு உட்கார்ந்து பேச வேண்டும். நலம் விசாரிக்க வேண்டும் என்பது ஒரு வழக்கம். இல்லையென்றால் அதற்கொரு முணுமுணுப்பு ஏற்படும். ‘இவங்க வீட்டு சாப்பாட்டுக்கா நாம வந்தோம். முகம் கொடுத்து கூட பேச மாட்டேன்கிறார்களே’ என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள்.

‘அதற்கெல்லாம் எங்களுக்கு ஏது நேரம்? எங்கள் வயிற்றுக்கு சமைத்து சாப்பிடுவதற்கே போதுமான நேரம் கிடைப்பதில்லை. அதனால் ‘திடீர் உணவுகளை’த் தேடி நாங்கள் அலைகிறோம். உண்மை இப்படி இருக்க, விருந்தாளிகளை முகம் கோணாமல் கவனித்து உபசரிப்பது என்பது எங்களுக்கு கஷ்டமான அனுபவம்தான்’ என்கிறார்கள், சில குடும்பத் தலைவிகள்.

வீடு தேடி வருபவர்கள் அத்தனை பேரும் விருந்தாளிகள் தான். இதில் வேண்டியவர், வேண்டாதவர் என்று யாரும் இல்லை. நம் வீடு தேடி வருபவரை நல்ல முறையில் கவனித்து அனுப்புவதுதான் நம் பண்பு.

அதற்கு என்ன செய்யலாம்?

* திடீர் விருந்தாளிகளுக்கு நம் நிலைமையை தெளிவாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். அவர்களை முழுமையாக வரவேற்று உபசரிக்கும் சூழ்நிலையில் நாம் இல்லை என்பதை அவர்களுக்கு எடுத்து சொல்லலாம். அப்படி எடுத்துச் சொன்னால், அவர்கள் நம்மை பற்றி மற்றவர்களிடம் தப்பாக பேசி கெட்ட பெயர் வாங்கித் தருவதை தவிர்த்துவிடலாம்.

* தங்கள் பிள்ளைகளை மற்றவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு போகும் விருந்தாளிகள், அந்தக் குழந்தைகளை கவனிக்கும் உறவினர்கள் படும் அவதியை புரிந்துகொள்ளவேண்டும். வேலைக்குப் போகும் பெண்கள், வார இறுதி நாட்களை டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறவோ, முக்கியமான வேலைகளுக்கு வெளியே செல்லவோ திட்டமிட்டு ஒதுக்குகிறார்கள். அந்த நாட்களில் உறவினர்களின் குழந்தைகளோ, நண்பரின் குழந்தைகளோ அவர்களது பொறுப்பில் விடப்படும்போது, அவர்களால் திட்டமிட்ட வேலைகளை பார்க்க முடியாது. அதனால் டாக்டரை சந்திக்க முடியாமல் நாட்களை தள்ளிப்போட்டு நோயால் அவதிப்படும் பெண்களும் இருக்கிறார்கள். அதனால் குழந்தைகளை அடுத்தவர்கள் பொறுப்பில் விடும் தாய்மார்கள், அந்த குடும்பத்தினருக்கு அதனால் ஏதாவது கஷ்டங்கள் ஏற்படுமா என்று கேட்டு முடிவு செய்ய வேண்டும்.

* சிலருக்கு மற்றவர்களுக்கு நாம் எந்த அளவிற்கு இடைஞ்சல் தருகிறோம் என்பது புரியாமலே இருக்கும். அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் குறைபடுவதைவிட, அவர்களிடம் நேரடியாகவே தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை சொல்லிவிடலாம்.

* உபசரிக்கும் நிலைமையில் நாம் இல்லை என்றாலும், உறவுகளை இழக்க முடியாது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விற்கும் உறவுகள் அவசியம். அதனால் சிரமப்பட்டாலும் திடீர் விருந்தாளிகளுக்கு நம்மால் இயன்ற வரவேற்பு கொடுப்பதே சிறந்தது.

தினத்தந்தி


திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Empty Re: திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா?

Post by T.N.Balasubramanian Wed Nov 07, 2012 6:30 pm

எப்படி திடிர் விருந்தாளியாக சென்று மற்றவர்களை கஷ்டபடுத்த விரும்புவதில்லையோ அதேபோல் திடிர் விருந்தாளிகள் வருவதை நாகரீகமாக கருதுவது இல்லை.
மேலும் என் வீட்டிற்கு, தங்கள் வருகையை சொல்லாமல் வந்து , நாங்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றவர் உண்டு.
phone பண்ணிவிட்டு வந்திருக்கலாமே என்றதற்கு, ஒரு போன் கால் வீணடிக்க வேண்டாமே என்றார். போன் கால் ஒரு ரூபாய்.ஆனால் இவர் வந்து சென்ற விதத்தில் செலவழித்தது அதிகம். இது எப்படி இருக்கு!

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Empty Re: திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா?

Post by அசுரன் Wed Nov 07, 2012 6:38 pm

திடீர் விருந்தாளியை வெறுக்கக் கூடாது.. ஆனால் நல்லா போட்டு வறுக்கலாம்...ஹி ஹி

எங்கள் குழந்தையை மற்றவர்கள் வீட்டில் விட்டு செல்வதை தவிர்க்க எங்கள் வீட்டில் ஒரு தாதியை வைத்து இருக்கிறோம். அதனால்தேவையில்லாமல் உறவினர்களுக்கு தொல்லைகொடுப்பது தவிர்க்கப்படுகிறது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Empty Re: திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா?

Post by கரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 7:46 pm

நல்ல கட்டுரை அண்ணா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா? Empty Re: திடீர் விருந்தாளிகளை வெறுக்கலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum