புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதை பழையது Poll_c10புதுக்கவிதை பழையது Poll_m10புதுக்கவிதை பழையது Poll_c10 
5 Posts - 63%
heezulia
புதுக்கவிதை பழையது Poll_c10புதுக்கவிதை பழையது Poll_m10புதுக்கவிதை பழையது Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
புதுக்கவிதை பழையது Poll_c10புதுக்கவிதை பழையது Poll_m10புதுக்கவிதை பழையது Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதை பழையது


   
   
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 01, 2012 4:33 pm

பழந்தமிழில் புதுக்கவிதைகள்

இன்று எழுதப்படும் புதுக்கவிதைகள் பெரும்பாலும் எப்படி எழுதப்படுகின்றன? ஒரு உதாரணம் பார்ப்போம்.

"நிஜங்கள் நிராகரிக்கப்படும்வரை நிழல்கள் நம்பப்படும்."

இப்படி எழுதும்போது இந்த எளிய சொற்றொடரில் இல்லாத பொருட்செறிவுகள், அதே எளிய சொற்றொடரை

"நிஜங்கள்
நிராகரிக்கப்
படும்வரை
நிழல்கள்
நம்பப்படும்."

என்று சொல்வீழ்ச்சியாக எழுதும்போது அது எப்படி ஒரு புதுக்கவிதையாகிறது?

முதலில் இதைக்கவிதை என்று சொல்லமுடியுமா? இலக்கணத்தோடு அமைந்த உரைநடைச் சொற்றொடர்கள் கவிதையாகப் பிரிய முற்படும்போது, உரைநடையின் அந்த எளிமையும் இயற்கையும் மாறாமல் அத்துடன் (இயன்றவரை) கவிதையின் இலக்கணச் செறிவும் சேர்ந்துகொள்ளும்போது அது ஒரு கவிதையாகலாம்.

முதலில் உள்ள சொற்றொடரைவிட அடுத்துள்ள சொல்வீழ்ச்சிக்கு உள்ள ஒரே அனுகூலம், வாக்கியங்களப்பகுத்து வரிகளில் எழுதும்போது வார்த்தைகள் அழுத்தம்பெற்று தனியாகக் கவனிக்கப்பட வாய்ப்பு அதிகம். சான்றாக மேலுள்ள கவிதை வரிகளில் ’நிஜங்கள்’ என்ற சொல் படிப்பவரை நின்று சிந்திக்கவைக்கிறது.

இந்த அனுகூலத்துக்கு மாறாக ஒரு பிரதிகூலமும் உள்ளது: கவிதை இலக்கண அணிகள் இல்லாத இத்தகைய வாக்கியப்பகுப்புகள் மனத்தில் பதிவது அரிது. வார்த்தைகள் ஒரு ’ஃபாஷன் ஷோ’வில் வரும் பெண்களைப்போல் வலம்வரும்போது, அவற்றில் எத்தனை மனதில் நிற்கின்றன?

இன்று நம்மிடையே அதிகமாகப் புழங்கும் புதுக்கவிதை என்ற உத்தி நாம் கண்டுபிடித்த புதியது அல்ல. இத்தகைய புதுக்கவிதைகள் நம் பழைய தமிழ்ப் புலவர்களால் பொருட்செறிவோடும் கவிதை இலக்கணச் செறிவோடும் எழுதப்பட்டன. அக்கவிதைகள் உரைநடை போன்றும் எளிதில் புரிவதாகவும் அமைந்தன. அவற்றில் சிலவற்றை இத்தொடரில் பார்க்கலாம். நம் பிள்ளையார் சுழியை ஔவையாரிலிருந்து தொடங்கலாம்:

001. ஔவையார்

அறம் செய விரும்பு.
ஆறுவது சினம்.
--ஆத்திசூடி

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
--கொன்றை வேந்தன்

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே--அல்லாத
ஈரமில்லா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்.
--மூதுரை

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்--வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்.
--நல்வழி

*****

002. அதிவீரராம பாண்டியன்

எழுத்தறிவித்தவன் இறைவ னாகும்.
கல்விக் கழகு கசடற மொழிதல்.

யானைக்கு இல்லை தானமும் தருமமும்
பூனைக்கு இல்லை தவமும் தயையும்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.

காலையும் மாலையும் நான்மறை யோதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே.
--வெற்றி வேற்கை

*****

003. உலகநாதர்

ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்
--உலக நீதி

*****

004. பெருவாயின் முள்ளியார்

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்*இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.
--ஆசாரக்கோவை (சவலை வெண்பா)

*****

005. கபிலர்

கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி வாழ்த லுயிர்க்கு.
--இன்னா நாற்பது

*****

006. பூதஞ்சேந்தனார்

மான மழிந்தபின் வாழாமை முன்*இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடமை
மானிடவர்க் கெல்லாம் இனிது.
--இனியவை நாற்பது


*****

007. மதுரைக் கூடலூர் கிழார்

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப
ஈரம் உடைமை ஈகையின் அறிப
--முதுமொழிக் காஞ்சி, அறிவுப் பத்து

*****

008. நல்லாதனார்

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் காமுற்ற
பெண்ணுக் கணிகலம் நாணுடமை--நண்ணும்
மறுமைக் கணிகலம் கல்வி இம்மூன்றும்
குறியுடையார் கண்ணே யுள.
--திரிகடுகம்

*****

009. திருவள்ளுவர்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
--திருக்குறள்

*****

010. சமண முனிவர்கள்

விளக்குப் புக*இருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின் முன் நில்லாதாம் பாவம்--விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
--நாலடியார்

*****


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2012 4:46 pm

புதுக்கவிதை என்பது இன்று வந்ததல்ல, பழையதுதான் என்று சிறந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளீர்கள். அருமை ஐயா!

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 02, 2012 9:58 am

011. விளம்பி நாகனார்

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம்.
--நான்மணிக்கடிகை 11

*****

012. நீதிவெண்பா (ஆசிரியர் தெரியவில்லை)

கொம்புளதற்கு ஐந்து; குதிரைக்குப் பத்து முழம்;
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே--வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. 20

பொருள்: தலியில் கொம்புள்ள ஆடு, மாடு போன்ற விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஐந்து முழம் தள்ளி இருந்தால் போதும். யானைக்கு ஆயிரம் முழம். ஆனால் வம்பே தொழிலாக உள்ள தீயோரிடமிருந்து கண்ணுக்குத்தெரியாத தூரம் விலகுவதே நல்லதாகும்.

என்னே கிரேதத்து இரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திரேதத்தில் சானகியே--பின்யுகத்தில்
கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதோறும் கூற்றுவனாமே. 32

*****

013. மூன்றுரை அரையனார்

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப--நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும். 6
[சோழன்=கரிகால் சோழன்]

நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
உணின்றி ஆகாது உயிர்வாழ்க்கை--பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல். 327
[கைத்து=செல்வம் சம்பிரதம்=விளைவு]

*****

ஆன்மீக இலக்கியங்களிலும் புதுக்கவிதையின் உரைநடை எளிமையைப் பாருங்கள்.

014. திருவதிகை மனவாசகங் கடந்தார்

அந்தக் கரணம் அடையவே உரைக்ககேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம்--சிந்தை இவை
பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு
உற்றது சிந்திக்கும் உணர். 17.
--உண்மை விளக்கம், ஆன்ம தத்துவம் பற்றி

*****

015. திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியர்

நானே பிரமம் என்றுரைத்து ஞாலம் பேய்த்தே ரெனஎண்ணி
ஊனே புகுந்து நின்றுயிர்கட் குபதே சங்கள் உரைத்துவரும்
மானா மதிக்கே டனுமாய மாயா வாதி பேயாகித்
தானே உரைக்கும் அந்நூலின் உண்மை தன்னைச் சாற்றுவாம். 220
--மாயாவாத மதம் (அத்வைதம்) பற்றி

ஆதியாய் அருவ மாகி அகண்டபூ ரணமாய் ஞானச்
சோதியாய் நின்ற மாயன் சுவேச்சையாய் உருவு கொண்டு
நீதியார் கருணை யாலே நீள்கடல் துயின்று நூலும்
ஓதினா னென்று பாஞ்ச ராத்திரி உரைப்ப னுற்றே. 264
--சிவஞான சித்தியார், பாஞ்சாராத்திரி மதம் பற்றி

*****

016. கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்

"வாழிதிருத்தொண்டர் புராணத்தை நீரே வாசித்துப் பொருள் அருளிச் செய்வீர்" என்று
சோழர் பெருமான் முதலாம் அடியரெல்லாஞ் சொல்லக்கேட்டு குன்றைமுனி மன்றுளாடும்
தாழ்சடையான் அடிஎடுத்துத்தரத் தாஞ்செய்த சைவக்கதையினை விளங்க விரித்துச்சொல்ல
சூழ*இருந் தம்பலவ ரடியா ரெல்லாம் "சுருதிமொழி இது" எனக்கைதொழுது கேட்டார். 79
--திருத்தொண்டர் புராண வரலாறு

*****

017. சம்பந்தர் தேவாரம்

திருஞான சம்பந்தர் பனையூர் சிவனைத் தொழுதபோது சொன்னார்:

அரவச் சடைமேல் மதிமத்தம் விரவிப் பொலிகின்றவவன் ஊராம்.
நிரவிப் பல தொண்டர்கள் நாளும் பரவிப் பொலியும் பனையூரே.

இந்த எளிய உரைநடை வாக்கியங்களை அவர் செய்யுளாகத் தக்கராகம் பண்ணில் இசைக்கும்வண்ணம் கீழ்க்கண்டவாறு பிரித்துப்பாடினார்:

அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே. 393/1.37.1.

இது வியாழக்குறிஞ்சிப் பண்ணில் திருவல்லம் ஊரில் பாடியது. இன்றும் நாம் பயன்படுத்தும் எளிய சொற்கள்!

எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்
தரித்தவன் கங்கையத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே. 1218/1.113.1

*****

018. அப்பர் தேவாரம்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே. 104/4.11.1

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தெந்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே. 5.90.1

*****

019. சுந்தரர் தேவாரம்

திருவுடை யார்திரு மாலய மானாலும்
உருவுடை யார்*உமை யாளையோர் பாகம்
பரிவுடை யார்*அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்*உறை பூவணம் ஈதோ. 104/7.11.11
--திருப்பூவணத்தில் பாதியது, இந்தளப்பண்

நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே
தலைவா நின்னினையப் பணித்தாய் சலமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திருமேற் றளியுறையும்
மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே. 217/7.21.9
--திருக்கச்சிமேற்றளியில் நட்டராகத்தில் பாடியது

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 239/7.24.1
--திருமழபாடியில் நட்டராகத்தில் பாடியது

*****

020. மாணிக்க வாசகர்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க
--திருவாசகம், சிவபுராணம் 1-5

கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
னெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றமும் முரண் உறுநரகு இடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி
--திருவாசகம், சிவபுராணம் 111-120

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே.
--திருவாசகம், திருச்சதகம், அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 06, 2012 8:04 pm

021. திருவாலியமுதனார்

அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில்தில்லத்
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே. 237
--திருவிசைப்பா

022. திருமூலர் (திருமந்திரம்)

இன்றைய புதுக்கவிதைகளில் ஒரு வாக்கியத்தைப் பல வரிகளில் எழுதுகிறார்கள். திருமூலரின் பெரும்பாலான கவிதைகளிலோ ஒவ்வொரு வரியுமே அவற்றின் ஆன்மீகப் பொருளை எளிதில் விளக்கும் சிறிய, எளிய, வாக்கியம்! ஒருமுறை படித்தாலே மனதில் நின்று, குமிழியிட்டு,, மேலும் சிந்திக்கத் தூண்டும் வரிகள்!

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. 129

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. 139

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினப்பொழிந்தார்களே. 145

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. 250 (தானச் சிறப்பு)

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 270

நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. 320

தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதார் தீரார் பிறப்பே. 1480 (சன்மார்க்கம்)

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே. 2290

மாயை மறைக்க மறைந்த மறைபொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லாற்கட்குக்
காயமும் இல்லை கருத்தில்லை தானே. 2548

*****


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக