Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் - 'குபீர்' உண்மைகள்!
+2
ராஜா
பூவன்
6 posters
Page 1 of 1
பெட்ரோல் - 'குபீர்' உண்மைகள்!
பெட்ரோல் பங்க்குளைப் பொறுத்தவரை அவர்களால் நம்மை மூன்றே மூன்று விதங்களில்தான் ஏமாற்ற முடியும் என்கிறார்கள். ஒன்று கலப்படம் செய்வது மூலமாக. இரண்டாவது நம் கவனத்தை திசை திருப்புவது மூலமாக குறைவாகப் போடுவது. மூன்றாவது மிஷினிலேயே அளவை மாற்றிவிடுவது.
கலப்படம்: எப்படி நடக்கிறது..?
பொதுவாக பெட்ரோலில் மண்ணெண்னெய், நாப்தா அல்லது பயன்படாத ஆயிலைக் கலந்து விற்று விடுவார்கள். பெரும்பாலும் ஊருக்கு வெளியே வனாந்திரமாக இருக்கும் பெட்ரோல் பங்க்குகளில்தான் இது போல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் கலப்பட பெட்ரோலுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே!
பாதிப்பு
இத்தகைய கலப்பட பெட்ரோல் போட்டு வாகனத்தை ஓட்டும்போது குறைவான மைலேஜே கிடைக்கும். மைலேஜ் குறைவு என்பதை விட வாகனத்தை ஸ்டார்ட் செய்வதில் பிரச்னை, என்ஜின் கெட்டுப்போதல் என பல வகைகளில் நம் பர்ஸைப் பதம் பார்த்துவிடும். மேலும் சுற்றுச் சூழலும் மாசுபடும்.
எப்படிக் கண்டுபிடித்து தவிர்ப்பது?\
பெட்ரோல் தரத்தை வாடிக்கைய£ளர்கள் யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்க முடியும். இதற்கான உபகரணங்கள் அனைத்தும் பெட்ரோல் பங்க்கிலேயே இருக்கும். காரணம் தினமும் பெட்ரோலின் அடர்த்தியை பங்க் உரிமையாளர்கள் சரி பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வண்டியில் இருந்து பெட்ரோலை இறக்கும் போதே ஹைட்ரோமீட்டர் உதவியுடன் பெட்ரோலின் அடர்த்தியை குறித்து வைத்துக்கொள்வார்கள். நாம் சோதனை செய்யும்போது இரண்டு அடர்த்திக்கும் இடையே அதிக வித்தியாசம் இருந்தால், சந்தேகமே தேவையில்லை அது கலப்பட பெட்ரோல்தான்.
அடுத்தது, வடிதாள் (filter paper) மீது சில சொட்டுகள் பெட்ரோல் விட்டால் தூய்மையான பெட்ரோலாக இருந்தால் எளிதில் ஆவியாகிவிடும். கலப்பட பெட்ரோல் என்றால் சில நிமிடங்கள் ஆகும்.
2. மெஷினிலேயே அளவு குறைவது!
பெட்ரோல் பங்கில் இருக்கும் மெஷின்கள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்து சீல் வைக்கும் பொறுப்பு மத்திய அரசின் கீழ் இயங்கும் எடை மற்றும் அளவு (வெயிட் அண்ட் மெஷர்மென்ட்ஸ்) துறையைச் சேர்ந்தது. இவர்கள் சீல் வைத்த பிறகு அந்த எடையையோ, அளவையோ மாற்றக் கூடாது. ஆனால் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் அதை மாற்றிவிடுகிறார்கள். இதனால் வெளியில் இருந்து பார்க்கும் போது நமக்கு மெஷின் சரியான அளவு காண்பிப்பது போல தெரிந்தாலும், நமக்கு கிடைப்பதென்னவோ குறைந்த அளவு பெட்ரோல்தான்.
3 கவனத்தை திசை திருப்புதல்.
ஜீரோ பார்க்கவிடாமல் 'கார்டா, கேஷா’ என்று கேட்பதில் ஆரம்பித்து பல வழிகளில் நம் கவனத்தை திசை திருப்பிவிடுகிறார்கள். அதேபோல் முக்கால்வாசி போட்டதும் நம் கவனத்தை திசை திருப்பிவிட்டு, 'போட்டாச்சு, வண்டியை முன்னே எடுங்க’ என்பார்கள். நாம் சொன்ன அளவைத்தான் போட்டிருக்கிறார்களா என்று பார்த்தால் அதற்கு முன்பா கவே மீண்டும் ஜீரோ ஆக்கி வைத்து விடுவார்கள்!
இப்படியும் நடக்கலாம்!
பெட்ரோல் குழாய் எப்போதும் மேல்நோக்கியே இருக்கும். காரணம் அந்த குழாயில் சிறிதளவு பெட்ரோல் இருக்கும். மதிய நேரங்களில் வாடிக்கை யாளர்கள் யாரும் வராத சமயத்தில் குழாயை கீழ் நோக்கி வைத்தால் 100 மில்லி வரை பெட்ரோல் அல்லது டீசல் கிடைக்கும். அந்த சமயத்தில் வரும் வாடிக்கையாளருக்கு 100 மில்லி வரை குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளது.
பெட்ரோல் போடும் போது ஏமாறாமல் இருப்பது எப்படி?
ஆரம்பத்தில் ஜீரோ பார்ப்பது மட்டும் போதாது; பெட்ரோல் போடும் வரை கவனத்தை சிதறவிடாமல் இருப்பது நல்லது.
பெட்ரோல் போட்டு முடித்த பிறகே பணம் அல்லது கார்டை கொடுக்கவும்.
கார்டு கொடுப்பதாக இருந்தால் உங்கள் கண் பார்வை படுகிற இடத்திலேயே கார்டை ஸ்வைப் செய்யும்படி கேளுங்கள்.
காருக்கு பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது காருக்குள் உட்கார்ந்திருக்க வேண்டாம். வெளியே வந்து சரியாக பெட்ரோல் போடுகிறார்களா என்று பாருங்கள். கண்ணாடியை துடைக்கிறேன் என்று சொல்லி சிலர் உங்கள் கவனத்தை திருப்பினாலும் மீட்டர் மீது ஒரு கண் வைத்திருங்கள்.
100, 500 என்று ரவுண்டான தொகைக்கு பெட்ரோல் போடாமல் ஐந்து லிட்டர், பத்து லிட்டர் என்கிற கணக்கில் பெட்ரோல் போடுங்கள். இதனால் முழுமையான தொகை உடனே வராது. அது போன்ற சமயங்களில் ஏமாறும் வாய்ப்பும் குறைவு.
ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என குறைந்த அளவில் பெட்ரோல் போட்டால் ஏமாறும் வாய்ப்பு குறைவு. ஆனால் இது சிறிய இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஒரே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் தவறில்லை. அப்போதும் அதிகக் கூட்டம் இல்லாத நேரம் பார்த்துப் போடலாம். எனினும் கவனம் தேவை!
--
மழைக்காகிதம்
கலப்படம்: எப்படி நடக்கிறது..?
பொதுவாக பெட்ரோலில் மண்ணெண்னெய், நாப்தா அல்லது பயன்படாத ஆயிலைக் கலந்து விற்று விடுவார்கள். பெரும்பாலும் ஊருக்கு வெளியே வனாந்திரமாக இருக்கும் பெட்ரோல் பங்க்குகளில்தான் இது போல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் கலப்பட பெட்ரோலுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே!
பாதிப்பு
இத்தகைய கலப்பட பெட்ரோல் போட்டு வாகனத்தை ஓட்டும்போது குறைவான மைலேஜே கிடைக்கும். மைலேஜ் குறைவு என்பதை விட வாகனத்தை ஸ்டார்ட் செய்வதில் பிரச்னை, என்ஜின் கெட்டுப்போதல் என பல வகைகளில் நம் பர்ஸைப் பதம் பார்த்துவிடும். மேலும் சுற்றுச் சூழலும் மாசுபடும்.
எப்படிக் கண்டுபிடித்து தவிர்ப்பது?\
பெட்ரோல் தரத்தை வாடிக்கைய£ளர்கள் யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்க முடியும். இதற்கான உபகரணங்கள் அனைத்தும் பெட்ரோல் பங்க்கிலேயே இருக்கும். காரணம் தினமும் பெட்ரோலின் அடர்த்தியை பங்க் உரிமையாளர்கள் சரி பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வண்டியில் இருந்து பெட்ரோலை இறக்கும் போதே ஹைட்ரோமீட்டர் உதவியுடன் பெட்ரோலின் அடர்த்தியை குறித்து வைத்துக்கொள்வார்கள். நாம் சோதனை செய்யும்போது இரண்டு அடர்த்திக்கும் இடையே அதிக வித்தியாசம் இருந்தால், சந்தேகமே தேவையில்லை அது கலப்பட பெட்ரோல்தான்.
அடுத்தது, வடிதாள் (filter paper) மீது சில சொட்டுகள் பெட்ரோல் விட்டால் தூய்மையான பெட்ரோலாக இருந்தால் எளிதில் ஆவியாகிவிடும். கலப்பட பெட்ரோல் என்றால் சில நிமிடங்கள் ஆகும்.
2. மெஷினிலேயே அளவு குறைவது!
பெட்ரோல் பங்கில் இருக்கும் மெஷின்கள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்து சீல் வைக்கும் பொறுப்பு மத்திய அரசின் கீழ் இயங்கும் எடை மற்றும் அளவு (வெயிட் அண்ட் மெஷர்மென்ட்ஸ்) துறையைச் சேர்ந்தது. இவர்கள் சீல் வைத்த பிறகு அந்த எடையையோ, அளவையோ மாற்றக் கூடாது. ஆனால் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் அதை மாற்றிவிடுகிறார்கள். இதனால் வெளியில் இருந்து பார்க்கும் போது நமக்கு மெஷின் சரியான அளவு காண்பிப்பது போல தெரிந்தாலும், நமக்கு கிடைப்பதென்னவோ குறைந்த அளவு பெட்ரோல்தான்.
3 கவனத்தை திசை திருப்புதல்.
ஜீரோ பார்க்கவிடாமல் 'கார்டா, கேஷா’ என்று கேட்பதில் ஆரம்பித்து பல வழிகளில் நம் கவனத்தை திசை திருப்பிவிடுகிறார்கள். அதேபோல் முக்கால்வாசி போட்டதும் நம் கவனத்தை திசை திருப்பிவிட்டு, 'போட்டாச்சு, வண்டியை முன்னே எடுங்க’ என்பார்கள். நாம் சொன்ன அளவைத்தான் போட்டிருக்கிறார்களா என்று பார்த்தால் அதற்கு முன்பா கவே மீண்டும் ஜீரோ ஆக்கி வைத்து விடுவார்கள்!
இப்படியும் நடக்கலாம்!
பெட்ரோல் குழாய் எப்போதும் மேல்நோக்கியே இருக்கும். காரணம் அந்த குழாயில் சிறிதளவு பெட்ரோல் இருக்கும். மதிய நேரங்களில் வாடிக்கை யாளர்கள் யாரும் வராத சமயத்தில் குழாயை கீழ் நோக்கி வைத்தால் 100 மில்லி வரை பெட்ரோல் அல்லது டீசல் கிடைக்கும். அந்த சமயத்தில் வரும் வாடிக்கையாளருக்கு 100 மில்லி வரை குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளது.
பெட்ரோல் போடும் போது ஏமாறாமல் இருப்பது எப்படி?
ஆரம்பத்தில் ஜீரோ பார்ப்பது மட்டும் போதாது; பெட்ரோல் போடும் வரை கவனத்தை சிதறவிடாமல் இருப்பது நல்லது.
பெட்ரோல் போட்டு முடித்த பிறகே பணம் அல்லது கார்டை கொடுக்கவும்.
கார்டு கொடுப்பதாக இருந்தால் உங்கள் கண் பார்வை படுகிற இடத்திலேயே கார்டை ஸ்வைப் செய்யும்படி கேளுங்கள்.
காருக்கு பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது காருக்குள் உட்கார்ந்திருக்க வேண்டாம். வெளியே வந்து சரியாக பெட்ரோல் போடுகிறார்களா என்று பாருங்கள். கண்ணாடியை துடைக்கிறேன் என்று சொல்லி சிலர் உங்கள் கவனத்தை திருப்பினாலும் மீட்டர் மீது ஒரு கண் வைத்திருங்கள்.
100, 500 என்று ரவுண்டான தொகைக்கு பெட்ரோல் போடாமல் ஐந்து லிட்டர், பத்து லிட்டர் என்கிற கணக்கில் பெட்ரோல் போடுங்கள். இதனால் முழுமையான தொகை உடனே வராது. அது போன்ற சமயங்களில் ஏமாறும் வாய்ப்பும் குறைவு.
ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என குறைந்த அளவில் பெட்ரோல் போட்டால் ஏமாறும் வாய்ப்பு குறைவு. ஆனால் இது சிறிய இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஒரே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் தவறில்லை. அப்போதும் அதிகக் கூட்டம் இல்லாத நேரம் பார்த்துப் போடலாம். எனினும் கவனம் தேவை!
--
மழைக்காகிதம்
Guest- Guest
Re: பெட்ரோல் - 'குபீர்' உண்மைகள்!
பற்றி எரியும் செய்தி ,அன்றாடம் நம்மில் பலரும் ஏமாற்ற படுகிறோம் இப்படிதான் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பெட்ரோல் - 'குபீர்' உண்மைகள்!
எவ்வளவு விபரமாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகள் நேர்மையாக இல்லாதவரைக்கும் ஏமாற்றபட்டுகொண்டு தான் இருப்போம்
Re: பெட்ரோல் - 'குபீர்' உண்மைகள்!
ராஜா wrote:எவ்வளவு விபரமாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகள் நேர்மையாக இல்லாதவரைக்கும் ஏமாற்றபட்டுகொண்டு தான் இருப்போம்
அவர்கள் காரியத்தில் மிகுந்த நேர்மை தான் அண்ணா ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பெட்ரோல் - 'குபீர்' உண்மைகள்!
தற்போது பெற்றோல் இருக்கும் விலையில் கவனிக்கப்படவேண்டிய விடயம்.
நன்றி பகிர்வுக்கு.
நன்றி பகிர்வுக்கு.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பெட்ரோல் - 'குபீர்' உண்மைகள்!
அருமையான பதிப்பு . நன்றி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: பெட்ரோல் - 'குபீர்' உண்மைகள்!
மிகவும் உபயோகமான பதிவாக இருந்தது
பெட்ரோல் பதிவு மிக்க நன்றி
பெட்ரோல் பதிவு மிக்க நன்றி
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» குத்து ரம்யாவுக்கு 'குபீர்' திருமணம்!
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!
» உலக உண்மைகள்
» சில உண்மைகள்
» உண்மைகள்....
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!
» உலக உண்மைகள்
» சில உண்மைகள்
» உண்மைகள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|