புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமலர் அந்துமணி
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சு.சமுத்திரம் எழுதிய, "எனது கதைகளின் கதைகள்' என்ற நூலை படிக்க நேர்ந்தது.
அதில் —
மதுரைக்கு அருகே, கிடாரிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே நிலச்சீர்திருத்தச் சட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மிகுதி நில வினியோகம் பற்றி கண்டறிய, வானொலி சார்பாக சென்றபோது, ஒரு ரசமான செய்தி கிடைத்தது. அந்த கிராமத்திலும், அதன் சுற்றுப்புற வட்டாரத்திலும், முக்குலத்தோரில், கள்ளர் பிரிவினர் அதிகம். இதற்கு அடுத்தப்படியாக முஸ்லிம்கள் இடம் பெறுகின்றனர். நாடார்கள், மூப்பனார்கள் ஆகியோரும் உள்ளனர்.
பொதுவாக, இந்த பகுதியில் ஜாதிச்சண்டை கிடையாது; சமயச் சண்டையும் கிடையாது; அதுவும் இந்து - முஸ்லிம் என்ற பேதமே எள்ளளவும் இல்லை. இதற்குக் காரணம், "குடிகள்ளன்' என்ற ஒரு முறைமை, அந்தப் பக்கம் இன்னமும் புழக்கத்தில் இருக்கிறது.
அதாவது, சிறுபான்மையினரான ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும், ஒரு கள்ளர் குடும்பம், அதன் நல்லது, கெட்டதுகளை கவனித்துக் கொள்ளும். இதற்குக் குடிகள்ளன் குடும்பம் என்று பெயர். இந்தக் குடும்பத்திற்கும், சம்பந்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்திற்கும் சகோதர பந்தம் உண்டு. இந்த முறை, இத்தகைய இரு குடும்பங்களுக்கிடையே காலங்காலமாக இருந்து வருகிறது.
உதாரணமாக, ஒரு முஸ்லிம் குடும்பத்து பெண்ணை, வெளியூரில் கட்டிக் கொடுத்து, அங்கே அவள் பல இன்னல்களுக்கு ஆளானபோது, அவளுடைய சொந்த ஊர் குடிகள்ளன், தன் சகாக்களோடு அவளது புகுந்த வீட்டிற்குப் போய், அவளை துன்புறுத்தியவர்களை மரத்தில் கட்டி வைத்து விட்டார்.
ஒரு முஸ்லிமிற்கும், ஒரு கள்ளருக்கும் ஏதோ தகராறு வந்தால், முஸ்லிம் பக்கமே நிற்பார் இந்த குடிகள்ளன். இவருடைய கல்யாணத்தில், அந்த முஸ்லிம் வீட்டிற்கு முதல் வெற்றிலை; அந்த முஸ்லிம் வீட்டுக் கல்யாணத்தில் இவருக்கு முதல் பாக்கு.
இந்த செய்தி, தமிழகத்தில் பெரும்பாலோருக்கு, குறிப்பாக, நம் எழுத்தாளர்களுக்கு நிச்சயம் தெரியாது...
— இதைப் படித்து முடித்த போது, இந்தியா முழுக்க, "குடிகள்ளன்' முறைமை இருந்திருக்கக் கூடாதா... போனது போகட்டும்... இப்போதாவது இந்த முறைமை தழைக்க, நாமெல்லாம் பாடுபடுவோமே என்று எண்ணினேன்!
சு.சமுத்திரம் எழுதிய அதே நூலின் இன்னொரு அத்தியாயத்தில், பலே பேர்வழி ஒருவர் பற்றி தமாஷ் குறிப்பு ஒன்று தருகிறார். இதோ, அது —
கர்நாடக மாநிலத்தில், மத்திய அரசு விளம்பரத்துறை தலைமை அதிகாரியாக பெங்களூரில் இருந்தேன். அப்போது அங்குள்ள தலைமை கணக்காயர் அலுவலகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு ஆடிட்டரை மங்களூருக்கு, "டூர்' அனுப்பினர். அவர் ஒரு மாதமாக அந்த ஊரிலிருந்து வரவில்லை; ஒரு வாரத்தில் வர வேண்டியவர்!
அதிகாரிகள் குழம்பிப் போய் நின்றபோது, ஒரு நாள், அவர்கள் முன் தோன்றினார் அந்த ஆடிட்டர். ஒரு வாரத்திற்குள் திரும்பாமல், ஒரு மாதத்திற்குப் பின் வந்ததற்கு அவரிடம், எழுத்து மூலம் விளக்கம் கேட்கப்பட்டது.
உடனே அந்த சூரர், தனக்கு இலாகாவிலிருந்து, "டூர் அட்வான்ஸ்' எனப்படும் முன்பணம் அனுப்பப்படவில்லை என்றும், கையில் காசில்லாததால் ஒரு வாரகாலப் பணியை முடித்து விட்டு, மங்களூருக்கும், பெங்களூருக்கும் இடையேயுள்ள, 300 கி.மீ., தூரத்தை, 22 நாட்களாக நடந்து வந்ததாக எழுதிக் கொடுத்தார்.
இதற்கு தனக்கு, "நடை அலவன்ஸ்' கொடுக்க வேண்டும் என்றும், ஒரு சட்ட விதியையும் குறிப்பிட்டார். அதிகாரிகளால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் கையைக் காலைப் பிடித்து, ஐந்து நாட்கள் நடந்ததாகவும், எஞ்சிய நாட்களில் விடுமுறையில் இருந்ததாகவும் எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டனர்.
அவரும் போனால் போகட்டும் என்பது போல் எழுதிக் கொடுத்தார். இதை, "நடந்தது' என்ற தலைப்பில் கல்கியில் சிறுகதையாக எழுதினேன்.
— அரசாங்க ஊழியர்கள் பலே பேர்வழிகள் என்பதற்கு, இது இன்னொரு உதாரணம்!
***
மதுக்கடைகளுடன் இணைந்து, "பார்' வைத்துக் கொள்ள அனுமதி அளித்து அரசு அறிவிப்பு வந்த சமயம் அது... ஜெ., ஆட்சியின் ஆரம்பக் கட்டம்... மதுக்கடை அதிபர்கள், குடிகாரர்கள் என தொடர்புடையவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பரோ, இல்லையோ... லென்ஸ் மாமா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
"பார் வேண்டும்' என்பதற்கான நியாயங்களை புட்டுப் புட்டு வைப்பார்... அது தொடர்பான செய்திகளை எழுதும்படி, தன் நண்பர்களான நிருபர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வார். நம் நாளிதழ் துவங்கி, ஹிந்து பேப்பர் வரை, ஆசிரியருக்கு கடிதங்கள் பகுதிக்கு, தன் மைத்துனர் பெயரில் கடிதக் கணைகள் விடுவார்...
இப்படி ஒருபுறம் லென்ஸ் மாமா மகிழ்ந்து கொண்டிருக்க, "மாமூல் போச்சே...' என்ற சோகத்தில் போலீஸ்கார நண்பர்கள் இருப்பரோ என்ற எண்ணத்தில், நெருக்கமான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன்...
"எங்களுக்கு எதுக்குப்பா சோகம்... எங்க வருமானத்துக்கு ஒரு நாளும் பங்கம் வராது... வர விட மாட்டோம்... ஒயின்ஷாப்காரர்கள் இப்போ மாமூல் தர மறுப்பாங்க... "சரி'ன்னு ஒரு வாரம், பத்து நாள் விட்டுருவோம்...
"அப்புறம், வேலையக்காட்ட ஆரம்பிப்போம்... குடித்துவிட்டு, பாரில் இருந்து வெளிவரும், "குடிமகன்'கள் தம், டூ-வீலரை எடுக்கும் போது, "டிரங்கன் டிரைவ்'ன்னு வரிசையா கேஸ், "புக்' பண்ணுவோம்...
"அப்புறம், அந்த பாருக்கு ஒரு, "குடிமகன்' தைரியமா வருவான்றே... வியாபாரம், "டல்' ஆகும்... மறுபடி எங்ககிட்டே ஒயின் ஷாப் ஓனர் சரண்டர்... எப்படி ஐடியா...' என்றார்.
"அடப்பாவிகளா...' என, மனதில் நினைத்துக் கொண்டேன். இந்த இடத்தில், "இலக்கிய பீடம்' இதழில், பூவண்ணன் எழுதியது நினைவுக்கு வந்தது... களவும், கொலையும் போல, ஒரு கடுமையான குற்றம், கள்ளுண்டு மயங்குதல். பண்பாட்டின் சிகரமாக விளங்கிய சங்ககாலத் தமிழ் சமுதாயம் கள் உண்ணலைக் கைக் கொண்டிருந்தது.
மதிப்புக்குரியவரை வரவேற்கும் வைபவத்தில் கள்ளுக்கு இடம் இருந்தது; மன்னனும், மாசறக் கற்றோனும் குடிப்பதை நேசித்தனர். "சிறிய கள் பெறின் எமக்குத் தருவான். நிறைய கள் பெறின், யாம் பாட, தான் பருகுவான்!' எனும் அதியமானைப் பற்றிய அவ்வை வாக்கு இதை உணர்த்துகிறது.
கள்ளுண்ணும் தீமையைக் கண்டித்து, கைவிடக் கோரிய முதல் புலவன் வள்ளுவனே. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவர் அதில் ஒரு காட்சியை எழுதுகிறார். அதாவது, வயலில் வேலை முடிந்ததும், உழவர்கள் கழனியை விட்டு நிலத்துக்கு வருகின்றனர். வந்தவர்கள், தாகம் போகவும், உழைத்த உடலின் சோகம் போகவும் கள் குடிக்கின்றனர்.
பெருங்குடங்களில் கள்ளை நிறைத்து, வயலில் வைத்திருக்கின்றனர். உழைத்துக் களைத்து, கள்ளைப் பருக வருகின்றனர். வளைக்கரத்து வனிதையர், வந்தவர்களுக்கு கள் வார்க்கின்றனர். ஒரு குடுவையில் முகந்து கள் ஊற்ற, வந்தவர் இரு கரங்களால் பாத்திரம் போல் இணைத்து, வாயருகே வைத்துக் கொள்ள, அந்த கைகளில் மழை போல கள் கொட்டுகிறது.
கள், கை நிறைந்து வழிந்து, நிலத்தில் விழுந்து பரவுகிறது. அந்த இடமே ஒரு குளம் போலத் தெரிகிறது. உழவர்களும், கள்ளை ஊற்றியவர்களும் தம் வேலை முடிந்து புறப்படுகின்றனர்.
அங்கே ஒரு அன்னம் வருகிறது. அது, அனுபவப்பட்ட அன்னம். அங்கே நிலத்தில் தேங்கி நின்ற கள்ளை குடிக்கிறது. குடிக்கக் குடிக்க அதன் அறிவு குறைகிறது. அந்த மயக்கத்தில் அருகே நிற்கும் இளமை மிகுந்த நாரையைப் பார்க்கிறது. "அது தன் இனமன்று... நாரை!' என்பதை உணரும் அறிவு இல்லாமல், கள் மயக்கத்தால் நாரைஉடன் சென்றது .
பாலில் கலந்திருக்கும் நீரையும் பகுத்தறியும் திறம் வாய்ந்த அன்னம், நாரைக்கும், அன்னத்துக்கும் வேறுபாடு அறியாதபடி மயங்கிப் போய் விட்டது. அதை அப்படி மயக்கியது, அது பருகிய கள்! அன்னம், கள்ளைப் பருகியதையும், நாரைஉடன் சென்றது சிறிது தூரத்தில் நின்றிருந்த ஆணும், பெண்ணுமான இரண்டு மயில்கள் காண்கின்றன.
ஆண் மயிலைப் பார்க்கிறது பெண்மயில்... "பார்த்தாயா, பகுத்தறியும் திறம் பெற்ற ஆண் அன்னம், குடி போதையில் மயங்கி, கன்னி நாரைஉடன் சென்றது . நீயும் கள்ளைப் பருகினால், இப்படித்தான் மதி மயங்கி, செய்யத் தகாத செயலைச் செய்வாய், தெரிகிறதா?' என்று அந்தப் பார்வை மூலமே எச்சரிக்கிறதாம் பேடை மயில்...
— இப்படி எழுதியுள்ளார் திருத்தக்க தேவர். திருத்தக்க தேவர் எழுதியதை, "குடிமகன்'களிடம் கூறினால், திருந்தவா போகின்றனர்?
தினமலர்
அதில் —
மதுரைக்கு அருகே, கிடாரிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே நிலச்சீர்திருத்தச் சட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மிகுதி நில வினியோகம் பற்றி கண்டறிய, வானொலி சார்பாக சென்றபோது, ஒரு ரசமான செய்தி கிடைத்தது. அந்த கிராமத்திலும், அதன் சுற்றுப்புற வட்டாரத்திலும், முக்குலத்தோரில், கள்ளர் பிரிவினர் அதிகம். இதற்கு அடுத்தப்படியாக முஸ்லிம்கள் இடம் பெறுகின்றனர். நாடார்கள், மூப்பனார்கள் ஆகியோரும் உள்ளனர்.
பொதுவாக, இந்த பகுதியில் ஜாதிச்சண்டை கிடையாது; சமயச் சண்டையும் கிடையாது; அதுவும் இந்து - முஸ்லிம் என்ற பேதமே எள்ளளவும் இல்லை. இதற்குக் காரணம், "குடிகள்ளன்' என்ற ஒரு முறைமை, அந்தப் பக்கம் இன்னமும் புழக்கத்தில் இருக்கிறது.
அதாவது, சிறுபான்மையினரான ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும், ஒரு கள்ளர் குடும்பம், அதன் நல்லது, கெட்டதுகளை கவனித்துக் கொள்ளும். இதற்குக் குடிகள்ளன் குடும்பம் என்று பெயர். இந்தக் குடும்பத்திற்கும், சம்பந்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்திற்கும் சகோதர பந்தம் உண்டு. இந்த முறை, இத்தகைய இரு குடும்பங்களுக்கிடையே காலங்காலமாக இருந்து வருகிறது.
உதாரணமாக, ஒரு முஸ்லிம் குடும்பத்து பெண்ணை, வெளியூரில் கட்டிக் கொடுத்து, அங்கே அவள் பல இன்னல்களுக்கு ஆளானபோது, அவளுடைய சொந்த ஊர் குடிகள்ளன், தன் சகாக்களோடு அவளது புகுந்த வீட்டிற்குப் போய், அவளை துன்புறுத்தியவர்களை மரத்தில் கட்டி வைத்து விட்டார்.
ஒரு முஸ்லிமிற்கும், ஒரு கள்ளருக்கும் ஏதோ தகராறு வந்தால், முஸ்லிம் பக்கமே நிற்பார் இந்த குடிகள்ளன். இவருடைய கல்யாணத்தில், அந்த முஸ்லிம் வீட்டிற்கு முதல் வெற்றிலை; அந்த முஸ்லிம் வீட்டுக் கல்யாணத்தில் இவருக்கு முதல் பாக்கு.
இந்த செய்தி, தமிழகத்தில் பெரும்பாலோருக்கு, குறிப்பாக, நம் எழுத்தாளர்களுக்கு நிச்சயம் தெரியாது...
— இதைப் படித்து முடித்த போது, இந்தியா முழுக்க, "குடிகள்ளன்' முறைமை இருந்திருக்கக் கூடாதா... போனது போகட்டும்... இப்போதாவது இந்த முறைமை தழைக்க, நாமெல்லாம் பாடுபடுவோமே என்று எண்ணினேன்!
சு.சமுத்திரம் எழுதிய அதே நூலின் இன்னொரு அத்தியாயத்தில், பலே பேர்வழி ஒருவர் பற்றி தமாஷ் குறிப்பு ஒன்று தருகிறார். இதோ, அது —
கர்நாடக மாநிலத்தில், மத்திய அரசு விளம்பரத்துறை தலைமை அதிகாரியாக பெங்களூரில் இருந்தேன். அப்போது அங்குள்ள தலைமை கணக்காயர் அலுவலகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு ஆடிட்டரை மங்களூருக்கு, "டூர்' அனுப்பினர். அவர் ஒரு மாதமாக அந்த ஊரிலிருந்து வரவில்லை; ஒரு வாரத்தில் வர வேண்டியவர்!
அதிகாரிகள் குழம்பிப் போய் நின்றபோது, ஒரு நாள், அவர்கள் முன் தோன்றினார் அந்த ஆடிட்டர். ஒரு வாரத்திற்குள் திரும்பாமல், ஒரு மாதத்திற்குப் பின் வந்ததற்கு அவரிடம், எழுத்து மூலம் விளக்கம் கேட்கப்பட்டது.
உடனே அந்த சூரர், தனக்கு இலாகாவிலிருந்து, "டூர் அட்வான்ஸ்' எனப்படும் முன்பணம் அனுப்பப்படவில்லை என்றும், கையில் காசில்லாததால் ஒரு வாரகாலப் பணியை முடித்து விட்டு, மங்களூருக்கும், பெங்களூருக்கும் இடையேயுள்ள, 300 கி.மீ., தூரத்தை, 22 நாட்களாக நடந்து வந்ததாக எழுதிக் கொடுத்தார்.
இதற்கு தனக்கு, "நடை அலவன்ஸ்' கொடுக்க வேண்டும் என்றும், ஒரு சட்ட விதியையும் குறிப்பிட்டார். அதிகாரிகளால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் கையைக் காலைப் பிடித்து, ஐந்து நாட்கள் நடந்ததாகவும், எஞ்சிய நாட்களில் விடுமுறையில் இருந்ததாகவும் எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டனர்.
அவரும் போனால் போகட்டும் என்பது போல் எழுதிக் கொடுத்தார். இதை, "நடந்தது' என்ற தலைப்பில் கல்கியில் சிறுகதையாக எழுதினேன்.
— அரசாங்க ஊழியர்கள் பலே பேர்வழிகள் என்பதற்கு, இது இன்னொரு உதாரணம்!
***
மதுக்கடைகளுடன் இணைந்து, "பார்' வைத்துக் கொள்ள அனுமதி அளித்து அரசு அறிவிப்பு வந்த சமயம் அது... ஜெ., ஆட்சியின் ஆரம்பக் கட்டம்... மதுக்கடை அதிபர்கள், குடிகாரர்கள் என தொடர்புடையவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பரோ, இல்லையோ... லென்ஸ் மாமா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
"பார் வேண்டும்' என்பதற்கான நியாயங்களை புட்டுப் புட்டு வைப்பார்... அது தொடர்பான செய்திகளை எழுதும்படி, தன் நண்பர்களான நிருபர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வார். நம் நாளிதழ் துவங்கி, ஹிந்து பேப்பர் வரை, ஆசிரியருக்கு கடிதங்கள் பகுதிக்கு, தன் மைத்துனர் பெயரில் கடிதக் கணைகள் விடுவார்...
இப்படி ஒருபுறம் லென்ஸ் மாமா மகிழ்ந்து கொண்டிருக்க, "மாமூல் போச்சே...' என்ற சோகத்தில் போலீஸ்கார நண்பர்கள் இருப்பரோ என்ற எண்ணத்தில், நெருக்கமான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன்...
"எங்களுக்கு எதுக்குப்பா சோகம்... எங்க வருமானத்துக்கு ஒரு நாளும் பங்கம் வராது... வர விட மாட்டோம்... ஒயின்ஷாப்காரர்கள் இப்போ மாமூல் தர மறுப்பாங்க... "சரி'ன்னு ஒரு வாரம், பத்து நாள் விட்டுருவோம்...
"அப்புறம், வேலையக்காட்ட ஆரம்பிப்போம்... குடித்துவிட்டு, பாரில் இருந்து வெளிவரும், "குடிமகன்'கள் தம், டூ-வீலரை எடுக்கும் போது, "டிரங்கன் டிரைவ்'ன்னு வரிசையா கேஸ், "புக்' பண்ணுவோம்...
"அப்புறம், அந்த பாருக்கு ஒரு, "குடிமகன்' தைரியமா வருவான்றே... வியாபாரம், "டல்' ஆகும்... மறுபடி எங்ககிட்டே ஒயின் ஷாப் ஓனர் சரண்டர்... எப்படி ஐடியா...' என்றார்.
"அடப்பாவிகளா...' என, மனதில் நினைத்துக் கொண்டேன். இந்த இடத்தில், "இலக்கிய பீடம்' இதழில், பூவண்ணன் எழுதியது நினைவுக்கு வந்தது... களவும், கொலையும் போல, ஒரு கடுமையான குற்றம், கள்ளுண்டு மயங்குதல். பண்பாட்டின் சிகரமாக விளங்கிய சங்ககாலத் தமிழ் சமுதாயம் கள் உண்ணலைக் கைக் கொண்டிருந்தது.
மதிப்புக்குரியவரை வரவேற்கும் வைபவத்தில் கள்ளுக்கு இடம் இருந்தது; மன்னனும், மாசறக் கற்றோனும் குடிப்பதை நேசித்தனர். "சிறிய கள் பெறின் எமக்குத் தருவான். நிறைய கள் பெறின், யாம் பாட, தான் பருகுவான்!' எனும் அதியமானைப் பற்றிய அவ்வை வாக்கு இதை உணர்த்துகிறது.
கள்ளுண்ணும் தீமையைக் கண்டித்து, கைவிடக் கோரிய முதல் புலவன் வள்ளுவனே. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவர் அதில் ஒரு காட்சியை எழுதுகிறார். அதாவது, வயலில் வேலை முடிந்ததும், உழவர்கள் கழனியை விட்டு நிலத்துக்கு வருகின்றனர். வந்தவர்கள், தாகம் போகவும், உழைத்த உடலின் சோகம் போகவும் கள் குடிக்கின்றனர்.
பெருங்குடங்களில் கள்ளை நிறைத்து, வயலில் வைத்திருக்கின்றனர். உழைத்துக் களைத்து, கள்ளைப் பருக வருகின்றனர். வளைக்கரத்து வனிதையர், வந்தவர்களுக்கு கள் வார்க்கின்றனர். ஒரு குடுவையில் முகந்து கள் ஊற்ற, வந்தவர் இரு கரங்களால் பாத்திரம் போல் இணைத்து, வாயருகே வைத்துக் கொள்ள, அந்த கைகளில் மழை போல கள் கொட்டுகிறது.
கள், கை நிறைந்து வழிந்து, நிலத்தில் விழுந்து பரவுகிறது. அந்த இடமே ஒரு குளம் போலத் தெரிகிறது. உழவர்களும், கள்ளை ஊற்றியவர்களும் தம் வேலை முடிந்து புறப்படுகின்றனர்.
அங்கே ஒரு அன்னம் வருகிறது. அது, அனுபவப்பட்ட அன்னம். அங்கே நிலத்தில் தேங்கி நின்ற கள்ளை குடிக்கிறது. குடிக்கக் குடிக்க அதன் அறிவு குறைகிறது. அந்த மயக்கத்தில் அருகே நிற்கும் இளமை மிகுந்த நாரையைப் பார்க்கிறது. "அது தன் இனமன்று... நாரை!' என்பதை உணரும் அறிவு இல்லாமல், கள் மயக்கத்தால் நாரைஉடன் சென்றது .
பாலில் கலந்திருக்கும் நீரையும் பகுத்தறியும் திறம் வாய்ந்த அன்னம், நாரைக்கும், அன்னத்துக்கும் வேறுபாடு அறியாதபடி மயங்கிப் போய் விட்டது. அதை அப்படி மயக்கியது, அது பருகிய கள்! அன்னம், கள்ளைப் பருகியதையும், நாரைஉடன் சென்றது சிறிது தூரத்தில் நின்றிருந்த ஆணும், பெண்ணுமான இரண்டு மயில்கள் காண்கின்றன.
ஆண் மயிலைப் பார்க்கிறது பெண்மயில்... "பார்த்தாயா, பகுத்தறியும் திறம் பெற்ற ஆண் அன்னம், குடி போதையில் மயங்கி, கன்னி நாரைஉடன் சென்றது . நீயும் கள்ளைப் பருகினால், இப்படித்தான் மதி மயங்கி, செய்யத் தகாத செயலைச் செய்வாய், தெரிகிறதா?' என்று அந்தப் பார்வை மூலமே எச்சரிக்கிறதாம் பேடை மயில்...
— இப்படி எழுதியுள்ளார் திருத்தக்க தேவர். திருத்தக்க தேவர் எழுதியதை, "குடிமகன்'களிடம் கூறினால், திருந்தவா போகின்றனர்?
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![தினமலர் அந்துமணி 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![தினமலர் அந்துமணி 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![தினமலர் அந்துமணி Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![தினமலர் அந்துமணி Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|