ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

5 posters

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 10 Empty இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Thu Nov 01, 2012 5:07 pm

First topic message reminder :

பொது

எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)




Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down


இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 10 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 8:08 pm

அனுமன் பற்றி

பவனவன் புத்திரன் பத்துதலை சத்துரு
தவத்தையே செய்பவன் சுக்ரீவன் மந்திரி
அவத்தினை போக்கிடும் அனுமன் என்பவன்
சிவத்தினை போன்றவன் சிவந்த வாயினன்
நவமான நூலினை நன்றாக பயின்றவன் (91)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 10 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 8:09 pm

வன்மைமிகு கரத்தினன் வேதத்தை கற்றவன்
துன்பத்தை தகர்த்தவன் தூக்கத்தை தவிர்த்தவன்
அன்னைக்கு உகந்தவன் அரசர்க்கு ஏற்றவன்
என்றைக்கும் இருப்பவன் என்மனம் ஆள்பவன்
குன்றுபோல் உயர்ந்தவன் குதித்தாழி சென்றவன் (92)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 10 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 8:09 pm

சென்றவன் திரும்பியே செய்தியைக் கொணர்ந்தவன்
இன்றைக்கும் அரக்கர்க்கு எமனினும் கொடியவன்
பண்புகள் நிறைந்தவன் பூக்களில் மகிழ்பவன்
தொண்டிற்கு உகந்தவன் தோழனாய் வருபவன்
வண்டுபோல் விரைபவன் வில்இராமன் மாணவன் (93)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 10 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 8:09 pm

மாணவன் போன்றுதன் மனதினை வைப்பவன்
காணாமல் போனதனை கொணர்ந்துமே கொடுப்பவன்
கோணாமல் தொழுதிட கொடுப்பினை அமைப்பவன்
பூணாமல் வைத்திட்ட வில்லைப்போல் அமர்ந்தவன்,
பண்பினை கூறவும் பறந்திலங்கை போனவன் (94)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 10 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 8:10 pm

போனவன் வந்தனன் போக்கிடம் அமைத்தனன்
தானவன் இராமனை தன்தோளில் சுமந்தவன்
வானரம் அனைத்திற்கும் வழியமைத் தளித்தவன்
கானகம் தங்கியே கடுந்தவம் புரிந்தவன்
மனதினில் எண்ணினால் மனத்தகத் தமர்பவன் (95)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 10 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 8:10 pm

அமர்ந்தனன் வால்சுற்றி அமைத்தனன் ஆசனம்
தமக்கிணை யாரென இராவணன் பகைத்தனன்
இமையோர்கள் பார்க்கவே இலங்கையை கொளுத்தினன்
சுமையென நினைத்திட்ட சூழ்பகை அழித்தனன்
உமையவள் இருந்திட்ட ஓர்மலை கொணர்ந்தனன் (96)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 10 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 8:10 pm

தனதென இருப்பதை தரணிக்கு ஈந்தவன்
கனமான கற்களை சுமைதவிர் தளித்தவன்
சினமதை கொன்றவன் சத்திய சொல்லினன்
மனமதை அவன்பதம் மாற்றியே வைத்திட்டால்
இனத்துடன் இன்பத்தை ஈந்திடும் இயல்பினன் (97)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 10 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 8:10 pm

நன்றியாய் இராமனின் மனதினில் வசிப்பவன்
ஊன்றிநாம் அறிந்திட ஊழ்வினை அழிப்பவன்
சான்றாக இருப்பவன் சாதனை செய்தவன்
தோன்றா துணையவன் துாயவன் மாயவன்
என்றும் இளமையன் ஏத்திட வேண்டுமே (98)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 10 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 8:11 pm

வேண்டுமே மனமது வானரன் வாழ்த்தினை
ஈண்டுமே யாருளார் இயல்பவன் கொண்டுமே
பண்டுவாழ் முனிவரின் பரம்பரை வந்தவன்
ஆண்டுவாழ் சீதைசூழ் அரக்கரை அழித்தவன்
வேண்டியே பணிந்திட வேதனை அழிப்பவன் (99)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 10 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 8:11 pm

அழித்தனன் எம்பகை அசுரரின் கொட்டத்தை
பழித்தனன் இராவணன் இயல்பதை உரைத்தனன்
ஆழியை கடந்துமே கணையாழி கொணர்ந்தனன்
ஊழியை வென்றுமே உண்மையை அறிந்தனன்
பாழ்வினை போக்கியே அளிப்பையே எளிமையை (100)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 10 Empty Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum