Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழி விளக்கம் - Page 3
+9
ராஜா
காதல் ராஜா
ஹர்ஷித்
Kuzhali
krishnaamma
அசுரன்
ஜலஜா சிவகுமார்
சிவா
ரமணி
13 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
பழமொழி விளக்கம் - Page 3
First topic message reminder :
பழமொழி விளக்கம்
001. பழமொழி: கிழவியும் காதம், குதிரையும் காதம்.
பொருள்: கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.
விளக்கம்: கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
*****
002. பழமொழி: குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
பொருள்: குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.
விளக்கம்: குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரைக்குக் கடிவாளம் போடுவது. தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தம்பிரான் தோழர் என்று ஒரு பெயர் உண்டு. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத் தலவர்களைக்குறிக்கும் பட்டம்.
*****
003. பழமொழி: சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.
பொருள்: கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.
விளக்கம்: சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.
மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.
*****
004. பழமொழி: தெய்வம் காட்டும், ஊட்டுமா?
பொருள்: தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?
விளக்கம்: இதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ? இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:
"God helps those who help themselves."
"God gives every bird its food, but does not throw it into the nest."
*****
005. பழமொழி: இல்லது வாராது, உள்ளது போகாது.
பொருள்: நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.
விளக்கம்: இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும்.
*****
பழமொழி விளக்கம்
001. பழமொழி: கிழவியும் காதம், குதிரையும் காதம்.
பொருள்: கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.
விளக்கம்: கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
*****
002. பழமொழி: குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
பொருள்: குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.
விளக்கம்: குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரைக்குக் கடிவாளம் போடுவது. தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தம்பிரான் தோழர் என்று ஒரு பெயர் உண்டு. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத் தலவர்களைக்குறிக்கும் பட்டம்.
*****
003. பழமொழி: சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.
பொருள்: கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.
விளக்கம்: சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.
மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.
*****
004. பழமொழி: தெய்வம் காட்டும், ஊட்டுமா?
பொருள்: தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?
விளக்கம்: இதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ? இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:
"God helps those who help themselves."
"God gives every bird its food, but does not throw it into the nest."
*****
005. பழமொழி: இல்லது வாராது, உள்ளது போகாது.
பொருள்: நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.
விளக்கம்: இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும்.
*****
மாற்றியது நான் தான் சிவா ஆனால் எதையும் அழிக்கவில்லையே! சிரமத்துக்கு மன்னிக்கணும்சிவா wrote:ரமணி wrote:நண்பர் சிவாவுக்கு.
ஆச்சரியம் என்னவென்றாள், நான் என் முதல் அஞ்சலைத் திருத்தவேயில்லை! அந்த ’மாற்றியாச்சி மாற்றியாச்சி’ நான் எழுதியது அல்ல. இந்தச் சொற்றொடரை நான் எழுதியிருந்தால் ’மாத்தியாச்சு’ என்றுதான் எழுதியிருப்பேன். எனவே, அந்தப் மறுமொழியை அப்படியே வைத்துக்கொண்டு என் முதல் அஞ்சலைத் திருத்தியிருக்கிறேன்.
தாங்கள் மாற்றவில்லையா? வேறு யார் மாற்றியது எனப் பார்க்கிறேன் ஐயா! நல்ல வேளை, தனியாக எழுதி வைத்திருந்ததால் மீண்டும் பதிவேற்றிவிட்டீர்கள்!
Last edited by ரமணி on Fri Nov 09, 2012 7:29 am; edited 3 times in total
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: பழமொழி விளக்கம் - Page 3
184. பழமொழி: கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.
பொருள்: ஒரு சின்ன அளவை ஒரே தடவையில் பெரிய அளவை கொண்ட கொள்கலத்தைப் போல அதிக அளவு அளக்க முடியாது.
விளக்கம்: குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு. பதக்கு, இரண்டு மரக்கால். ஒரே தடவையில் குறுணி நாழியில் பதக்கு நாழியளவு நெல்லினை அளக்கமுடியுமா? கொட்டிக் கொட்டி அளந்தால் முடியுமே என்று தோன்றலாம். அப்படியானால் பழமொழி தப்பா? குறுணியில் கொட்டிக் கொட்டி பதக்கு அளவு அளக்கும்போது பத்க்கால் கொட்டி அளந்தால் எவ்வளவு அளக்கலாம்? எனவே சிறியோர் என்றும் பெரியோர் ஆகார் என்பது செய்தி.
*****
185. பழமொழி: ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.
பொருள்: ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய செயல் எம்மாத்திரம்?
விளக்கம்: அம்மை என்றால் தாய், பாட்டி. அம்மையார் என்றால் பாட்டிதான். அதாவது, அனுபவத்தில் பழுத்தவர். சுண்டாங்கி என்றால் கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம், இன்றைய வழக்கில் மசாலா. அனுபவத்தில் பழுத்து ஆனையையே விழுங்கிக் காட்டிய அம்மையாருக்கு ஒரு பூனையை விழுங்குவது கறியோடு சேர்த்த மசாலாவை உண்பது போலத்தானே?
*****
186. பழமொழி: உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
பொருள்: உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா?
விளக்கம்: உடையார்பாளையம் என்பது வன்னியகுல க்ஷத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பது செய்தி.
*****
187. பழமொழி: சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?
பொருள்: சோறு உண்ணும்போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்துவிட்டு உண்ண முனையாதவன் எப்படி ஞானம் என்பது என்னவென்று அறியமுடியும்?
விளக்கம்: சோற்றில் உள்ள சின்னக் கல்லுக்கும் ஞானத்துக்கும் என்ன தொடர்பு? சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும், தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத்துன்பம். அதை முழுவதும் நீக்கவேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் நான்றாகக் கற்கள் பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்கவேண்டும். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக்கூட நீக்காமல் சோறை முழுங்கும் ஒருவன் எப்படி சோற்றில் கல்போன்று தினசரி வாழிவில் நாம் வரவழைத்துக்கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தை அறிந்து களைவதால் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழிபிறக்கும் என்பதை உணரமுடியும் என்பது செய்தி.
*****
188. பழமொழி: கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
பொருள்: ஒரு குட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுதும் நின்றுகொண்டு பொழுது போக்குவது, கழுதைக்குப் புனித யாத்திரை போவது போல.
விளக்கம்: குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது.
*****
189. பழமொழி: வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா?
பொருள்: மற்ற வரவேண்டிய கடன்களைப் பற்றிக் கவலைப்படாமல் திவாலானவன் ஒருவனிடம் கடன் வசூலிப்பதில் வீரம் காட்டும் ஒரு பற்றாளரைக் குறித்துச் சொன்னது. முதலில் வரவேண்டியதை ஒழுங்காக வசூல் செய்துவிட்டுப் பின் வராத கடன்களைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பது செய்தி.
விளக்கம்: அது என்ன வலக்காட்டு ராமா? வலம் என்றால் வலிமை, கனம், ஆணை. ராமன் என்பது ஒருவனைக் குறிக்கும் பொதுச்சொல். வலம் காட்டும் ராமன் என்பது வலக்காட்டு ராமனாகி யிருக்கலாம். வேறு விளக்கம் தெரிந்தால் எழுதலாம்.
*****
190. பழமொழி: சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
பொருள்: முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள்.
விளக்கம்: இதுதான் பழமொழியின் பொருள் என்பது எப்படி? ஒரு பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த அது கெட்டுவிடும் என்பதல்லவோ இதன் நேரடி விளக்கம்? அல்லது அமைதி நிலவியபோது ஒருவன் வலுச்சண்டைக்குப் போய் அமைதியைக் கெடுத்தானாம் என்பது இன்னொரு செய்தியாகக் கொள்ளலாம். பின்னால் உள்ள கதையை நோக்கிட விளங்கும்.
ஆண்டி என்பது ஒரு சிவனடியார் பெயர். அவன் காலையில் எழுந்ததும் சேகண்டியை அடித்துச் சங்கினை ஊதிக்கொண்டு உணவுக்காகப் பிச்சை எடுக்கக் கிளம்புவான். இளைப்பாறக் கோவில் திண்ணை அல்லது மடம். இப்படி ஓர் ஆண்டியை இரண்டு திருடர்கள் ஒருநாள் இரவு கூட்டாகச் சேர்த்துக்கொண்டு ஆடு திருடச் சென்றனர். ஆட்டுக்கிடையில்க் கீதாரிகள் என்றும் கீலாரிகள் என்றும் அழைக்கப்படும் இடையர் தலைவர் இருவர் காவல் காத்துக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். இரண்டு திருடர்களும் ஆளுக்கு ஒரு ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டார்கள். ஆடுகள் ’மே’ என்று கத்த ஒரு திருடன், ’சங்கைப் பிடிடா ஆண்டி’ என்று சொன்னான். அவன் சொன்ன சங்கு ஆட்டின் கழுத்து. ஆண்டி பழக்க தோஷத்தில் தன் சங்கை எடுத்து ஊத, கீலாரிகள் விழித்துக்கொண்டு திருடர்களைப் பிடித்துவிட, ஆண்டி தப்பித்தான்!
பழமொழியின் பின் ஒரு புராணக் கதையும் இருக்கிறது. ’வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி’ பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த கதை. ஆண்டி எனும் பெயர் சிவனையும் குறிக்கும். அவர்தான் பிக்ஷாண்டி ஆயிற்றே? வாசுகி கக்கிய நஞ்சை எடுத்து விழுங்க முற்பட்டுப் பார்வதி சிவனின் சங்கைப் பிடிக்க அவர் தன் கழுத்து ஊதி (வீங்கி) நீலகண்டனாகிச் சும்மா கிடந்த தன் சங்கைக் கெடுத்துக் கொண்டார் என்பது பழமொழியின் இன்னொரு குறிப்பு.
*****
பொருள்: ஒரு சின்ன அளவை ஒரே தடவையில் பெரிய அளவை கொண்ட கொள்கலத்தைப் போல அதிக அளவு அளக்க முடியாது.
விளக்கம்: குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு. பதக்கு, இரண்டு மரக்கால். ஒரே தடவையில் குறுணி நாழியில் பதக்கு நாழியளவு நெல்லினை அளக்கமுடியுமா? கொட்டிக் கொட்டி அளந்தால் முடியுமே என்று தோன்றலாம். அப்படியானால் பழமொழி தப்பா? குறுணியில் கொட்டிக் கொட்டி பதக்கு அளவு அளக்கும்போது பத்க்கால் கொட்டி அளந்தால் எவ்வளவு அளக்கலாம்? எனவே சிறியோர் என்றும் பெரியோர் ஆகார் என்பது செய்தி.
*****
185. பழமொழி: ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.
பொருள்: ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய செயல் எம்மாத்திரம்?
விளக்கம்: அம்மை என்றால் தாய், பாட்டி. அம்மையார் என்றால் பாட்டிதான். அதாவது, அனுபவத்தில் பழுத்தவர். சுண்டாங்கி என்றால் கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம், இன்றைய வழக்கில் மசாலா. அனுபவத்தில் பழுத்து ஆனையையே விழுங்கிக் காட்டிய அம்மையாருக்கு ஒரு பூனையை விழுங்குவது கறியோடு சேர்த்த மசாலாவை உண்பது போலத்தானே?
*****
186. பழமொழி: உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
பொருள்: உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா?
விளக்கம்: உடையார்பாளையம் என்பது வன்னியகுல க்ஷத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பது செய்தி.
*****
187. பழமொழி: சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?
பொருள்: சோறு உண்ணும்போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்துவிட்டு உண்ண முனையாதவன் எப்படி ஞானம் என்பது என்னவென்று அறியமுடியும்?
விளக்கம்: சோற்றில் உள்ள சின்னக் கல்லுக்கும் ஞானத்துக்கும் என்ன தொடர்பு? சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும், தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத்துன்பம். அதை முழுவதும் நீக்கவேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் நான்றாகக் கற்கள் பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்கவேண்டும். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக்கூட நீக்காமல் சோறை முழுங்கும் ஒருவன் எப்படி சோற்றில் கல்போன்று தினசரி வாழிவில் நாம் வரவழைத்துக்கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தை அறிந்து களைவதால் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழிபிறக்கும் என்பதை உணரமுடியும் என்பது செய்தி.
*****
188. பழமொழி: கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
பொருள்: ஒரு குட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுதும் நின்றுகொண்டு பொழுது போக்குவது, கழுதைக்குப் புனித யாத்திரை போவது போல.
விளக்கம்: குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது.
*****
189. பழமொழி: வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா?
பொருள்: மற்ற வரவேண்டிய கடன்களைப் பற்றிக் கவலைப்படாமல் திவாலானவன் ஒருவனிடம் கடன் வசூலிப்பதில் வீரம் காட்டும் ஒரு பற்றாளரைக் குறித்துச் சொன்னது. முதலில் வரவேண்டியதை ஒழுங்காக வசூல் செய்துவிட்டுப் பின் வராத கடன்களைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பது செய்தி.
விளக்கம்: அது என்ன வலக்காட்டு ராமா? வலம் என்றால் வலிமை, கனம், ஆணை. ராமன் என்பது ஒருவனைக் குறிக்கும் பொதுச்சொல். வலம் காட்டும் ராமன் என்பது வலக்காட்டு ராமனாகி யிருக்கலாம். வேறு விளக்கம் தெரிந்தால் எழுதலாம்.
*****
190. பழமொழி: சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
பொருள்: முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள்.
விளக்கம்: இதுதான் பழமொழியின் பொருள் என்பது எப்படி? ஒரு பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த அது கெட்டுவிடும் என்பதல்லவோ இதன் நேரடி விளக்கம்? அல்லது அமைதி நிலவியபோது ஒருவன் வலுச்சண்டைக்குப் போய் அமைதியைக் கெடுத்தானாம் என்பது இன்னொரு செய்தியாகக் கொள்ளலாம். பின்னால் உள்ள கதையை நோக்கிட விளங்கும்.
ஆண்டி என்பது ஒரு சிவனடியார் பெயர். அவன் காலையில் எழுந்ததும் சேகண்டியை அடித்துச் சங்கினை ஊதிக்கொண்டு உணவுக்காகப் பிச்சை எடுக்கக் கிளம்புவான். இளைப்பாறக் கோவில் திண்ணை அல்லது மடம். இப்படி ஓர் ஆண்டியை இரண்டு திருடர்கள் ஒருநாள் இரவு கூட்டாகச் சேர்த்துக்கொண்டு ஆடு திருடச் சென்றனர். ஆட்டுக்கிடையில்க் கீதாரிகள் என்றும் கீலாரிகள் என்றும் அழைக்கப்படும் இடையர் தலைவர் இருவர் காவல் காத்துக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். இரண்டு திருடர்களும் ஆளுக்கு ஒரு ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டார்கள். ஆடுகள் ’மே’ என்று கத்த ஒரு திருடன், ’சங்கைப் பிடிடா ஆண்டி’ என்று சொன்னான். அவன் சொன்ன சங்கு ஆட்டின் கழுத்து. ஆண்டி பழக்க தோஷத்தில் தன் சங்கை எடுத்து ஊத, கீலாரிகள் விழித்துக்கொண்டு திருடர்களைப் பிடித்துவிட, ஆண்டி தப்பித்தான்!
பழமொழியின் பின் ஒரு புராணக் கதையும் இருக்கிறது. ’வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி’ பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த கதை. ஆண்டி எனும் பெயர் சிவனையும் குறிக்கும். அவர்தான் பிக்ஷாண்டி ஆயிற்றே? வாசுகி கக்கிய நஞ்சை எடுத்து விழுங்க முற்பட்டுப் பார்வதி சிவனின் சங்கைப் பிடிக்க அவர் தன் கழுத்து ஊதி (வீங்கி) நீலகண்டனாகிச் சும்மா கிடந்த தன் சங்கைக் கெடுத்துக் கொண்டார் என்பது பழமொழியின் இன்னொரு குறிப்பு.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: பழமொழி விளக்கம் - Page 3
191. பழமொழி: ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
பொருள்: தந்தை தொழிலும் பழக்கமும் மகனுக்கு எளிதில் வரும்.
விளக்கம்: ’குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்ற பழமொழியும் இக்கருத்தில் அமைந்ததாகும்.
*****
192. பழமொழி: கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
பொருள்: ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி.
விளக்கம்: ’கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவிபாடும்’ என்பது இப்பழமொழியின் இன்னொரு வழக்கு. வெள்ளாட்டி என்பவள் வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரி.
’கட்டுத் தறி’ என்பது என்ன? தறி என்றால் நெசவு என்பதால் கம்பர், வள்ளுவர் போல நெசவுத் தொழில் செய்துவந்த குலத்தைச் சேர்ந்தவரா? கம்பரின் வரலாற்றைப் பற்றி உள்ள கட்டுக் கதைகளில் அவர் நெசவாளர் என்ற செய்தி இல்லை. சிலர் ’கட்டுத் தறி’ என்றால் பசுமாட்டைக் கட்டும் முளைக்கோல் என்று பொருள் கொள்கின்றனர். எனக்கென்னவோ ’கட்டுத் தறி’ என்றதன் சரியான பொருள் ’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட ஓலைச் சுவடிகள்’ என்றே படுகிறது. புலவர்கள் வீட்டில் பாட்டெழுத நறுக்கிய ஓலைச் சுவடிகள் இருப்பது வழக்கம்தானே? எனவே, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது.
*****
193. பழமொழி: சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?
பொருள்: மாணிக்கவாசகர் இயற்றிய திருவெண்பா சிதம்பரம் சிவன் கோவில் அம்பலத்திலும் ஊரிலும் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்போது, ’கற்றலிற் கேட்டலே நன்று’ என்பதற்கேற்ப அந்த ஊரில் பிறந்த குழந்தைகூட எளிதில் திருவெண்பாவை எளிதில் கற்றுக்கொள்ளும் என்பது செய்தி.
விளக்கம்: இன்றைய சிதம்பரத்தில் வெண்பாடுவதை விட வன்பாடுவதே அதிகம் என்பதால், இன்று அங்குப் பிறக்கும் குழந்தைகள் கேள்விஞானத்தில் திருவெண்பா கற்றுக்கொள்வது எங்கே?.
*****
பொருள்: தந்தை தொழிலும் பழக்கமும் மகனுக்கு எளிதில் வரும்.
விளக்கம்: ’குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்ற பழமொழியும் இக்கருத்தில் அமைந்ததாகும்.
*****
192. பழமொழி: கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
பொருள்: ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி.
விளக்கம்: ’கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவிபாடும்’ என்பது இப்பழமொழியின் இன்னொரு வழக்கு. வெள்ளாட்டி என்பவள் வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரி.
’கட்டுத் தறி’ என்பது என்ன? தறி என்றால் நெசவு என்பதால் கம்பர், வள்ளுவர் போல நெசவுத் தொழில் செய்துவந்த குலத்தைச் சேர்ந்தவரா? கம்பரின் வரலாற்றைப் பற்றி உள்ள கட்டுக் கதைகளில் அவர் நெசவாளர் என்ற செய்தி இல்லை. சிலர் ’கட்டுத் தறி’ என்றால் பசுமாட்டைக் கட்டும் முளைக்கோல் என்று பொருள் கொள்கின்றனர். எனக்கென்னவோ ’கட்டுத் தறி’ என்றதன் சரியான பொருள் ’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட ஓலைச் சுவடிகள்’ என்றே படுகிறது. புலவர்கள் வீட்டில் பாட்டெழுத நறுக்கிய ஓலைச் சுவடிகள் இருப்பது வழக்கம்தானே? எனவே, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது.
*****
193. பழமொழி: சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?
பொருள்: மாணிக்கவாசகர் இயற்றிய திருவெண்பா சிதம்பரம் சிவன் கோவில் அம்பலத்திலும் ஊரிலும் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்போது, ’கற்றலிற் கேட்டலே நன்று’ என்பதற்கேற்ப அந்த ஊரில் பிறந்த குழந்தைகூட எளிதில் திருவெண்பாவை எளிதில் கற்றுக்கொள்ளும் என்பது செய்தி.
விளக்கம்: இன்றைய சிதம்பரத்தில் வெண்பாடுவதை விட வன்பாடுவதே அதிகம் என்பதால், இன்று அங்குப் பிறக்கும் குழந்தைகள் கேள்விஞானத்தில் திருவெண்பா கற்றுக்கொள்வது எங்கே?.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: பழமொழி விளக்கம் - Page 3
194. பழமொழி: எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும்.
பொருள்: திருடனும் தன்வீட்டில் திருடமாட்டான் என்பது மறை பொருள்.
விளக்கம்: கன்னக்கோல் போட்டுச் சுவரில் துளைசெய்து திருடும் திருடன் தன் கன்னக்கோலை வைக்க ஒரு இடம் அவன் வீடு. எப்படிப்பட்ட தீயவரும் போற்றும் பொருள் உண்டு என்பது செய்தி.
*****
195. பழமொழி: வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.
பொருள்: என்னால் தான் உனக்கு உருவும் பேரும் என்று ஒரு மனிதன் தன்னை அண்டியிருப்பவனை நோக்கிச் சொன்னது.
விளக்கம்: கடவுள் என்பதே மனிதன் தன் மனதில் ஒரு உருவமும் பெயரும் கொடுத்து உருவாக்கியது; அதனால்தான் அந்த உருவைச் சாணிக்குச் சமமாக இந்தப் பழமொழி வைத்துள்ளது; சாணியை வழித்து எறிவதுபோல் மனதில் இருந்து கடவுளின் உருவையும் பெயரையும் மனிதன் வழித்து எறிந்துவிட்டால் அப்புறம் ஏது கடவுள்? என்று நாத்திகர்கள் இந்தப் பழமொழிக்கு விளக்கம் தரலாம்.
கடவுள் எனும் உண்மை ஒன்றே, அதுவே நாம் ஆத்மா என்பதால் என்றேனும் ஒருநாள் சாதகன் சாணியை வழித்து எறிவதுபோல் நாமரூபத்தை உள்ளத்திலிருந்து வழித்து எறிந்துவிட முடிந்தால்தான் பிறவிலா முக்தி கிட்டும் என்பது போல் ஆன்மிக விளக்கமும் தரப்படலாம்.
பழமொழி குறிக்கும் சாணிப் பிள்ளையார் மார்கழி மாதம் பெண்கள் வீட்டு வாசலில் விரிவாகக் கோலமிட்டு அதன் நடுவில் சாணியைப் பிடித்துவைத்து அதற்கு ஒரு பூசணிப் பூவையும் சூட்டும் வழக்கத்தை. ஒவ்வொரு அதிகாலையும் ஒரு புது சாணிப்பிள்ளையாரை வைக்கும்போது பழைய பிள்ளையாரை எறிந்துவிடத்தானே வேண்டும்?
கோவிலில் இருக்கும் பிள்ளையார் உருவம் தவிர நாம் வீட்டில் பூஜையிலும் பண்டிகைக் காலங்களிலும் பயன்படுத்தும் மஞ்சள் பிள்ளையார், களிமண் பிள்ளையார் போன்று பொதுஜன பிள்ளையார் உருவங்கள் நாம் மறுசுழற்சியில் அப்புறப்படுத்தும் மூலப்பொருளை வைத்தே செய்யப்படுவதைப் பழமொழி சுட்டுகிறது எனலாம்.
*****
196. பழமொழி: எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.
பொருள்: அருஞ்செயல் ஆற்றுபவர்கள் உண்டு ஆனால் ஈகைக் குணமுடையோரைக் காணுதல் அரிது.
விளக்கம்: மழு என்பது பழுக்கக் காய்ச்சிய இரும்பு. அதையும் கையால் பிடிப்பவர் உண்டு; புலியைத் தடுப்பார் உண்டு, ஆனால் எல்லோருக்கும் செயலில் எளிதாக உள்ள ஈகைக் குணம் மட்டும் காண்பது முன்சொன்ன அருஞ்செயல் ஆற்றுபவர்களை விட அரிதாக உள்ளது என்பது செய்தி.
*****
197. பழமொழி: உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
பொருள்: உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.
விளக்கம்: அது யார் உப்பிட்டவர்? உணவில் உப்பு சேர்த்துச் சமைப்பவரா? உப்பிலாப் பண்டம் குப்பையிலே என்பதனால் இவர் முக்கியத்துவம் பெறுகிறாரா? காஞ்சி பரமாசாரியார் அவர்கள் இந்தப் பழமொழிக்கு அருளிய விளக்கம் கீழே.
"உப்புத்தான் கொஞ்சம் ஏற-இறங்க இருந்தாலும் ஒரே கரிப்பு, அல்லது ஒரே சப்பு. ’உவர்ப்பு’ என்கிறதைப் பேச்சில் ’கரிப்பு’ என்றே சொல்லுகிறோம். இலக்கண சுத்தமான வார்த்தையாக ’உவர்ப்பு’க்குக் ’கார்ப்பு’ என்றும் பெயர் இருக்கிறது. அதுதான் பேச்சு வழக்கில் ’கரிப்பு’ ஆகிவிட்டது. ’உப்புக் கரிக்க’ என்கிறோம். அப்படி, உப்புப் போட்ட வியஞ்ஜனங்களில் அது கொஞ்சம் ஏறினாலும் ஒரே கரிப்பு, கொஞ்சம் குறைந்தாலும் ஒரே சப்பு என்று ஆகிவிடுகிறது. உப்பு ஏறிப் போய்விட்டால் ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். க்ஷணத்திலே அது கரைந்து ஸரிப் பண்ணிவிடும். நாம் ஆஹாரத்தில் ருசித் தப்பு நேர்ந்தால் மூல வஸ்துவை நேராகச் சேர்த்து, உடனே தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான். ஆனபடியால் அந்த ஒரு குறைபாட்டை, சாப்பிடுபவர் தங்களிடம் சொல்லி, தாங்கள் பல பேருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காக்கவைத்து, அல்லது அவர்களுக்காக பிறத்தியாரைக் காக்கவைத்து, அவர்களுக்குப் போடுவதாக இருக்க வேண்டாமென்று நம்முடைய பூர்வகால முப்பாட்டிப் புத்திசாலி க்ருஹலக்ஷ்மிகள் நினைத்திருக்கிறார்கள். அதனால் சாப்பிடுபவரே உப்புப் போதாத குறையை நிவர்த்தி பண்ணிக்கொள்ள வசதியாக இலையில் மற்ற வ்யஞ்ஜனங்கள் பரிமாறுகிறதற்கு முந்தி முதலிலேயே கொஞ்சம் உப்புப்பொடி வைத்துவிடுவார்கள். அதைக் குறிப்பாக மனஸில் கொண்டுதான் நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோது ’உப்பிட்டவர உள்ளளவும் நினை’ என்றார்கள்."
ஆதாரம்: ’சொல்லின் செல்வர் ஶ்ரீ காஞ்சி முனிவர்’, ரா.கணபதி, பக்.264-265.
*****
பொருள்: திருடனும் தன்வீட்டில் திருடமாட்டான் என்பது மறை பொருள்.
விளக்கம்: கன்னக்கோல் போட்டுச் சுவரில் துளைசெய்து திருடும் திருடன் தன் கன்னக்கோலை வைக்க ஒரு இடம் அவன் வீடு. எப்படிப்பட்ட தீயவரும் போற்றும் பொருள் உண்டு என்பது செய்தி.
*****
195. பழமொழி: வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.
பொருள்: என்னால் தான் உனக்கு உருவும் பேரும் என்று ஒரு மனிதன் தன்னை அண்டியிருப்பவனை நோக்கிச் சொன்னது.
விளக்கம்: கடவுள் என்பதே மனிதன் தன் மனதில் ஒரு உருவமும் பெயரும் கொடுத்து உருவாக்கியது; அதனால்தான் அந்த உருவைச் சாணிக்குச் சமமாக இந்தப் பழமொழி வைத்துள்ளது; சாணியை வழித்து எறிவதுபோல் மனதில் இருந்து கடவுளின் உருவையும் பெயரையும் மனிதன் வழித்து எறிந்துவிட்டால் அப்புறம் ஏது கடவுள்? என்று நாத்திகர்கள் இந்தப் பழமொழிக்கு விளக்கம் தரலாம்.
கடவுள் எனும் உண்மை ஒன்றே, அதுவே நாம் ஆத்மா என்பதால் என்றேனும் ஒருநாள் சாதகன் சாணியை வழித்து எறிவதுபோல் நாமரூபத்தை உள்ளத்திலிருந்து வழித்து எறிந்துவிட முடிந்தால்தான் பிறவிலா முக்தி கிட்டும் என்பது போல் ஆன்மிக விளக்கமும் தரப்படலாம்.
பழமொழி குறிக்கும் சாணிப் பிள்ளையார் மார்கழி மாதம் பெண்கள் வீட்டு வாசலில் விரிவாகக் கோலமிட்டு அதன் நடுவில் சாணியைப் பிடித்துவைத்து அதற்கு ஒரு பூசணிப் பூவையும் சூட்டும் வழக்கத்தை. ஒவ்வொரு அதிகாலையும் ஒரு புது சாணிப்பிள்ளையாரை வைக்கும்போது பழைய பிள்ளையாரை எறிந்துவிடத்தானே வேண்டும்?
கோவிலில் இருக்கும் பிள்ளையார் உருவம் தவிர நாம் வீட்டில் பூஜையிலும் பண்டிகைக் காலங்களிலும் பயன்படுத்தும் மஞ்சள் பிள்ளையார், களிமண் பிள்ளையார் போன்று பொதுஜன பிள்ளையார் உருவங்கள் நாம் மறுசுழற்சியில் அப்புறப்படுத்தும் மூலப்பொருளை வைத்தே செய்யப்படுவதைப் பழமொழி சுட்டுகிறது எனலாம்.
*****
196. பழமொழி: எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.
பொருள்: அருஞ்செயல் ஆற்றுபவர்கள் உண்டு ஆனால் ஈகைக் குணமுடையோரைக் காணுதல் அரிது.
விளக்கம்: மழு என்பது பழுக்கக் காய்ச்சிய இரும்பு. அதையும் கையால் பிடிப்பவர் உண்டு; புலியைத் தடுப்பார் உண்டு, ஆனால் எல்லோருக்கும் செயலில் எளிதாக உள்ள ஈகைக் குணம் மட்டும் காண்பது முன்சொன்ன அருஞ்செயல் ஆற்றுபவர்களை விட அரிதாக உள்ளது என்பது செய்தி.
*****
197. பழமொழி: உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
பொருள்: உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.
விளக்கம்: அது யார் உப்பிட்டவர்? உணவில் உப்பு சேர்த்துச் சமைப்பவரா? உப்பிலாப் பண்டம் குப்பையிலே என்பதனால் இவர் முக்கியத்துவம் பெறுகிறாரா? காஞ்சி பரமாசாரியார் அவர்கள் இந்தப் பழமொழிக்கு அருளிய விளக்கம் கீழே.
"உப்புத்தான் கொஞ்சம் ஏற-இறங்க இருந்தாலும் ஒரே கரிப்பு, அல்லது ஒரே சப்பு. ’உவர்ப்பு’ என்கிறதைப் பேச்சில் ’கரிப்பு’ என்றே சொல்லுகிறோம். இலக்கண சுத்தமான வார்த்தையாக ’உவர்ப்பு’க்குக் ’கார்ப்பு’ என்றும் பெயர் இருக்கிறது. அதுதான் பேச்சு வழக்கில் ’கரிப்பு’ ஆகிவிட்டது. ’உப்புக் கரிக்க’ என்கிறோம். அப்படி, உப்புப் போட்ட வியஞ்ஜனங்களில் அது கொஞ்சம் ஏறினாலும் ஒரே கரிப்பு, கொஞ்சம் குறைந்தாலும் ஒரே சப்பு என்று ஆகிவிடுகிறது. உப்பு ஏறிப் போய்விட்டால் ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். க்ஷணத்திலே அது கரைந்து ஸரிப் பண்ணிவிடும். நாம் ஆஹாரத்தில் ருசித் தப்பு நேர்ந்தால் மூல வஸ்துவை நேராகச் சேர்த்து, உடனே தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான். ஆனபடியால் அந்த ஒரு குறைபாட்டை, சாப்பிடுபவர் தங்களிடம் சொல்லி, தாங்கள் பல பேருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காக்கவைத்து, அல்லது அவர்களுக்காக பிறத்தியாரைக் காக்கவைத்து, அவர்களுக்குப் போடுவதாக இருக்க வேண்டாமென்று நம்முடைய பூர்வகால முப்பாட்டிப் புத்திசாலி க்ருஹலக்ஷ்மிகள் நினைத்திருக்கிறார்கள். அதனால் சாப்பிடுபவரே உப்புப் போதாத குறையை நிவர்த்தி பண்ணிக்கொள்ள வசதியாக இலையில் மற்ற வ்யஞ்ஜனங்கள் பரிமாறுகிறதற்கு முந்தி முதலிலேயே கொஞ்சம் உப்புப்பொடி வைத்துவிடுவார்கள். அதைக் குறிப்பாக மனஸில் கொண்டுதான் நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோது ’உப்பிட்டவர உள்ளளவும் நினை’ என்றார்கள்."
ஆதாரம்: ’சொல்லின் செல்வர் ஶ்ரீ காஞ்சி முனிவர்’, ரா.கணபதி, பக்.264-265.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: பழமொழி விளக்கம் - Page 3
ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்...இது ஒரு பழமொழி... ஆனால்... இது ஒரு மருத்துவக் குறிப்பு.
இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது...
பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள்:
நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்...தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், தினதந்திபழமொழி
முகனூல்
இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது...
பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள்:
நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்...தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், தினதந்திபழமொழி
முகனூல்
Re: பழமொழி விளக்கம் - Page 3
மேற்கோள் செய்த பதிவு: 1204899மதுமிதா wrote:ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்...இது ஒரு பழமொழி... ஆனால்... இது ஒரு மருத்துவக் குறிப்பு.
இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது...
பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள்:
நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்...தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், தினதந்திபழமொழி
முகனூல்
இது சம்பந்தமாக எந்தன் ஈகரை பதிவு , மே 18,2011 வருடத்தியது .
Re: நெய்யின் பயன்கள்
Post by T.N.Balasubramanian on Wed May 18, 2011 6:18 pm
நல்ல பயனுள்ள செய்தி. நெய் ஒரு LUBRICATION மாதிரி. அதனால் தான் முதலில் சாப்பிடும் சாம்பார் / கொழம்பு சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டு உணவு பாதையை சிறிதே இறுக்கம் இல்லாத பாதை யாக்கி விடுவர்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதே போல் அதிக நெய் கலந்துண்டால் கொழுப்பு சத்து கூடும். அதை கரைக்க தேன் கலந்த சூரணம் சாப்பிட வேண்டும் .
இதை தழுவி வந்த பழமொழி தான், பிறகு திரிந்து " யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்" உண்மையில் பழமொழி இதுதான் " ஆ (பசு) நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு (தேனுக்கு) ஒரு காலம் வரும்." நெய் அதிகம் உண்டு கொழுப்பு நோய் வந்தால் அதை தீர்க்க "தேன்" அவசியம் ஆகும் என்பதே.
ரமணீயன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பழமொழி விளக்கம் - Page 3
மேற்கோள் செய்த பதிவு: 1204907அமர்களம் அப்பாT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204899மதுமிதா wrote:ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்...இது ஒரு பழமொழி... ஆனால்... இது ஒரு மருத்துவக் குறிப்பு.
இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது...
பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள்:
நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்...தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், தினதந்திபழமொழி
முகனூல்
இது சம்பந்தமாக எந்தன் ஈகரை பதிவு , மே 18,2011 வருடத்தியது .
Re: நெய்யின் பயன்கள்
Post by T.N.Balasubramanian on Wed May 18, 2011 6:18 pm
நல்ல பயனுள்ள செய்தி. நெய் ஒரு LUBRICATION மாதிரி. அதனால் தான் முதலில் சாப்பிடும் சாம்பார் / கொழம்பு சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டு உணவு பாதையை சிறிதே இறுக்கம் இல்லாத பாதை யாக்கி விடுவர்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதே போல் அதிக நெய் கலந்துண்டால் கொழுப்பு சத்து கூடும். அதை கரைக்க தேன் கலந்த சூரணம் சாப்பிட வேண்டும் .
இதை தழுவி வந்த பழமொழி தான், பிறகு திரிந்து " யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்" உண்மையில் பழமொழி இதுதான் " ஆ (பசு) நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு (தேனுக்கு) ஒரு காலம் வரும்." நெய் அதிகம் உண்டு கொழுப்பு நோய் வந்தால் அதை தீர்க்க "தேன்" அவசியம் ஆகும் என்பதே.
ரமணீயன்
ரமணியன்
Re: பழமொழி விளக்கம் - Page 3
மேற்கோள் செய்த பதிவு: 1204917மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204907அமர்களம் அப்பாT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204899மதுமிதா wrote:ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்...இது ஒரு பழமொழி... ஆனால்... இது ஒரு மருத்துவக் குறிப்பு.
இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது...
பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள்:
நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்...தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், தினதந்திபழமொழி
முகனூல்
இது சம்பந்தமாக எந்தன் ஈகரை பதிவு , மே 18,2011 வருடத்தியது .
Re: நெய்யின் பயன்கள்
Post by T.N.Balasubramanian on Wed May 18, 2011 6:18 pm
நல்ல பயனுள்ள செய்தி. நெய் ஒரு LUBRICATION மாதிரி. அதனால் தான் முதலில் சாப்பிடும் சாம்பார் / கொழம்பு சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டு உணவு பாதையை சிறிதே இறுக்கம் இல்லாத பாதை யாக்கி விடுவர்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதே போல் அதிக நெய் கலந்துண்டால் கொழுப்பு சத்து கூடும். அதை கரைக்க தேன் கலந்த சூரணம் சாப்பிட வேண்டும் .
இதை தழுவி வந்த பழமொழி தான், பிறகு திரிந்து " யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்" உண்மையில் பழமொழி இதுதான் " ஆ (பசு) நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு (தேனுக்கு) ஒரு காலம் வரும்." நெய் அதிகம் உண்டு கொழுப்பு நோய் வந்தால் அதை தீர்க்க "தேன்" அவசியம் ஆகும் என்பதே.
ரமணீயன்
ரமணியன்
நன்றி ,மது , நாம் பதிவிட்டது , நமக்கு நிச்சயமாக மறக்காது . சிறிய தேடல் .கிடைத்து விட்டது
அதான் மறுபதிவு செய்தேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பழமொழி விளக்கம் - Page 3
மேற்கோள் செய்த பதிவு: 1204961T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204917மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204907அமர்களம் அப்பாT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204899மதுமிதா wrote:ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்...இது ஒரு பழமொழி... ஆனால்... இது ஒரு மருத்துவக் குறிப்பு.
இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது...
பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள்:
நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்...தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், தினதந்திபழமொழி
முகனூல்
இது சம்பந்தமாக எந்தன் ஈகரை பதிவு , மே 18,2011 வருடத்தியது .
Re: நெய்யின் பயன்கள்
Post by T.N.Balasubramanian on Wed May 18, 2011 6:18 pm
நல்ல பயனுள்ள செய்தி. நெய் ஒரு LUBRICATION மாதிரி. அதனால் தான் முதலில் சாப்பிடும் சாம்பார் / கொழம்பு சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டு உணவு பாதையை சிறிதே இறுக்கம் இல்லாத பாதை யாக்கி விடுவர்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதே போல் அதிக நெய் கலந்துண்டால் கொழுப்பு சத்து கூடும். அதை கரைக்க தேன் கலந்த சூரணம் சாப்பிட வேண்டும் .
இதை தழுவி வந்த பழமொழி தான், பிறகு திரிந்து " யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்" உண்மையில் பழமொழி இதுதான் " ஆ (பசு) நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு (தேனுக்கு) ஒரு காலம் வரும்." நெய் அதிகம் உண்டு கொழுப்பு நோய் வந்தால் அதை தீர்க்க "தேன்" அவசியம் ஆகும் என்பதே.
ரமணீயன்
ரமணியன்
நன்றி ,மது , நாம் பதிவிட்டது , நமக்கு நிச்சயமாக மறக்காது . சிறிய தேடல் .கிடைத்து விட்டது
அதான் மறுபதிவு செய்தேன்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1204961நாம் படித்து பிடித்து போனவற்றை தான் நமது ஈகரையில் பதிவிடுகிறோம் கண்டிப்பாக மறக்காது ...T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204917மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204907அமர்களம் அப்பாT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204899மதுமிதா wrote:ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்...இது ஒரு பழமொழி... ஆனால்... இது ஒரு மருத்துவக் குறிப்பு.
இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது...
பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள்:
நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்...தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், தினதந்திபழமொழி
முகனூல்
இது சம்பந்தமாக எந்தன் ஈகரை பதிவு , மே 18,2011 வருடத்தியது .
Re: நெய்யின் பயன்கள்
Post by T.N.Balasubramanian on Wed May 18, 2011 6:18 pm
நல்ல பயனுள்ள செய்தி. நெய் ஒரு LUBRICATION மாதிரி. அதனால் தான் முதலில் சாப்பிடும் சாம்பார் / கொழம்பு சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டு உணவு பாதையை சிறிதே இறுக்கம் இல்லாத பாதை யாக்கி விடுவர்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதே போல் அதிக நெய் கலந்துண்டால் கொழுப்பு சத்து கூடும். அதை கரைக்க தேன் கலந்த சூரணம் சாப்பிட வேண்டும் .
இதை தழுவி வந்த பழமொழி தான், பிறகு திரிந்து " யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்" உண்மையில் பழமொழி இதுதான் " ஆ (பசு) நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு (தேனுக்கு) ஒரு காலம் வரும்." நெய் அதிகம் உண்டு கொழுப்பு நோய் வந்தால் அதை தீர்க்க "தேன்" அவசியம் ஆகும் என்பதே.
ரமணீயன்
ரமணியன்
நன்றி ,மது , நாம் பதிவிட்டது , நமக்கு நிச்சயமாக மறக்காது . சிறிய தேடல் .கிடைத்து விட்டது
அதான் மறுபதிவு செய்தேன்
ரமணியன்
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம்
» “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம்
» அக்பரும் பக்கீரும் - பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம்
» “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம்
» அக்பரும் பக்கீரும் - பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|