Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழி விளக்கம் - Page 3
+9
ராஜா
காதல் ராஜா
ஹர்ஷித்
Kuzhali
krishnaamma
அசுரன்
ஜலஜா சிவகுமார்
சிவா
ரமணி
13 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
பழமொழி விளக்கம் - Page 3
First topic message reminder :
பழமொழி விளக்கம்
001. பழமொழி: கிழவியும் காதம், குதிரையும் காதம்.
பொருள்: கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.
விளக்கம்: கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
*****
002. பழமொழி: குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
பொருள்: குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.
விளக்கம்: குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரைக்குக் கடிவாளம் போடுவது. தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தம்பிரான் தோழர் என்று ஒரு பெயர் உண்டு. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத் தலவர்களைக்குறிக்கும் பட்டம்.
*****
003. பழமொழி: சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.
பொருள்: கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.
விளக்கம்: சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.
மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.
*****
004. பழமொழி: தெய்வம் காட்டும், ஊட்டுமா?
பொருள்: தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?
விளக்கம்: இதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ? இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:
"God helps those who help themselves."
"God gives every bird its food, but does not throw it into the nest."
*****
005. பழமொழி: இல்லது வாராது, உள்ளது போகாது.
பொருள்: நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.
விளக்கம்: இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும்.
*****
பழமொழி விளக்கம்
001. பழமொழி: கிழவியும் காதம், குதிரையும் காதம்.
பொருள்: கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.
விளக்கம்: கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
*****
002. பழமொழி: குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
பொருள்: குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.
விளக்கம்: குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரைக்குக் கடிவாளம் போடுவது. தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தம்பிரான் தோழர் என்று ஒரு பெயர் உண்டு. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத் தலவர்களைக்குறிக்கும் பட்டம்.
*****
003. பழமொழி: சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.
பொருள்: கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.
விளக்கம்: சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.
மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.
*****
004. பழமொழி: தெய்வம் காட்டும், ஊட்டுமா?
பொருள்: தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?
விளக்கம்: இதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ? இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:
"God helps those who help themselves."
"God gives every bird its food, but does not throw it into the nest."
*****
005. பழமொழி: இல்லது வாராது, உள்ளது போகாது.
பொருள்: நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.
விளக்கம்: இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும்.
*****
மாற்றியது நான் தான் சிவா ஆனால் எதையும் அழிக்கவில்லையே! சிரமத்துக்கு மன்னிக்கணும்சிவா wrote:ரமணி wrote:நண்பர் சிவாவுக்கு.
ஆச்சரியம் என்னவென்றாள், நான் என் முதல் அஞ்சலைத் திருத்தவேயில்லை! அந்த ’மாற்றியாச்சி மாற்றியாச்சி’ நான் எழுதியது அல்ல. இந்தச் சொற்றொடரை நான் எழுதியிருந்தால் ’மாத்தியாச்சு’ என்றுதான் எழுதியிருப்பேன். எனவே, அந்தப் மறுமொழியை அப்படியே வைத்துக்கொண்டு என் முதல் அஞ்சலைத் திருத்தியிருக்கிறேன்.
தாங்கள் மாற்றவில்லையா? வேறு யார் மாற்றியது எனப் பார்க்கிறேன் ஐயா! நல்ல வேளை, தனியாக எழுதி வைத்திருந்ததால் மீண்டும் பதிவேற்றிவிட்டீர்கள்!
Last edited by ரமணி on Fri Nov 09, 2012 7:29 am; edited 3 times in total
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: பழமொழி விளக்கம் - Page 3
ஐய்யோ என்ன நடக்குது... நான் சரியா தானே செஞ்சேன்... எதையும் அழிக்கலையே... மீண்டும் இடையூறு ஏற்படுத்தியமைக்காக வருந்துகிறேன்.
மேற்கோள்
மறுமொழி
இவை இரண்டையும் பயன்படுத்தி தான் பதிவிட்டேன். எந்த பதிவையும் அழிக்கவில்லை... என்னையும் அறியாமல் பிழை ஏற்பட்டுவிட்டது.![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
மேற்கோள்
மறுமொழி
இவை இரண்டையும் பயன்படுத்தி தான் பதிவிட்டேன். எந்த பதிவையும் அழிக்கவில்லை... என்னையும் அறியாமல் பிழை ஏற்பட்டுவிட்டது.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பழமொழி விளக்கம் - Page 3
011. பழமொழி: அற்றது பற்றெனில் உற்றது வீடு.
பொருள்: உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் சம்பவிக்கும்/புலப்படும்/உறுதிப்படும்.
விளக்கம்: அற்றது, உற்றது என்ற சொற்களை இறந்தகாலத்தில் பயன்படுத்தியிருப்பதால், பற்று முழுவதும் அற்ற கணமே வீடு நிச்சயம் சித்திக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. (கம்பராமாயணத்தில் உள்ள ’எடுத்தது கண்டார், இற்றது கேட்டார்’ வரி நினைவுக்கு வருகிறது.)
*****
012. பழமொழி: இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது.
பொருள்: இமையின் குறைபாடுகளை அதன் கீழேயே உள்ள கண்ணால் பார்க்கமுடியாது.
விளக்கம்: அதுபோல, நம்மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக்கொண்டிருந்தாலும், நாம் அதன் கசடுகள் நமக்குத் தெரிவதில்லை. இதனையொத்த பிற பழமொழிகள்:
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது.
தன் முதுகு தனக்குத் தெரியாது.
*****
013. பழமொழி: அம்மி மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?
பொருள்: அம்மியில் அரைப்பதன் ஆற்றல் அம்மிக்கல்-குழவியில் உள்ளதா, அரைக்கும் பெண்ணின் வலிமையில் உள்ளதா?
விளக்கம்: மிடுக்கு என்ற சொல்லினை நாம் பொதுவாக இறுமாப்பு, செருக்கு என்றபொருளில் அறிந்தாலும், அதற்கு வலிமை என்றொரு பொருள் உண்டு. ஒரு அழகான பெண் தன் ஆற்றலில் உள்ள கர்வம் தெரிய முழுக்கவனத்துடன் அம்மியில் அரைப்பதை விழுதாக அரைத்துப் பாராட்டுவாங்குவதை இந்தப் பழமொழி அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்தக்காலத்தில் பெண்ணை அம்மையில் அரைக்கச்சொன்னால், சொன்னவர்மேலுள்ள கோபத்தில் அவள் மிடுக்கு--ஆற்றல் அதிகமாவது நிச்சயம்!
*****
014. பழமொழி: இழவு சொன்னவன் பேரிலேயா பழி?
பொருள்: மரணத்தை அறிவிப்பவனைக் குறைசொல்வது தகுமா?
விளக்கம்: ஒரு தூதனிடம் காட்டவேண்டிய கருணையைப் பழமொழி சுட்டுகிறது. ’எய்தவன் இருக்க அம்பை னோவானேன்?’ என்ற பழமொழி இதனின்று சற்று வேறுபட்டது: ஏனென்றால் மரண அறிவிப்பில் மனவருத்தம், அம்பு தைத்ததில் உடல்வருத்தம்.
*****
015. பழமொழி: சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு!
பொருள்: எவ்வளவுதான் தத்ரூபமாக இருந்தாலும் சித்திரமாக வரையப்பட்ட கொக்கினைத் திருடுபோன ரத்தினத்துக்காகக் குற்றம்சாட்ட முடியுமா?
விளக்கம்: ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதியைக் குறித்துச்சொன்னது.
*****
பொருள்: உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் சம்பவிக்கும்/புலப்படும்/உறுதிப்படும்.
விளக்கம்: அற்றது, உற்றது என்ற சொற்களை இறந்தகாலத்தில் பயன்படுத்தியிருப்பதால், பற்று முழுவதும் அற்ற கணமே வீடு நிச்சயம் சித்திக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. (கம்பராமாயணத்தில் உள்ள ’எடுத்தது கண்டார், இற்றது கேட்டார்’ வரி நினைவுக்கு வருகிறது.)
*****
012. பழமொழி: இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது.
பொருள்: இமையின் குறைபாடுகளை அதன் கீழேயே உள்ள கண்ணால் பார்க்கமுடியாது.
விளக்கம்: அதுபோல, நம்மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக்கொண்டிருந்தாலும், நாம் அதன் கசடுகள் நமக்குத் தெரிவதில்லை. இதனையொத்த பிற பழமொழிகள்:
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது.
தன் முதுகு தனக்குத் தெரியாது.
*****
013. பழமொழி: அம்மி மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?
பொருள்: அம்மியில் அரைப்பதன் ஆற்றல் அம்மிக்கல்-குழவியில் உள்ளதா, அரைக்கும் பெண்ணின் வலிமையில் உள்ளதா?
விளக்கம்: மிடுக்கு என்ற சொல்லினை நாம் பொதுவாக இறுமாப்பு, செருக்கு என்றபொருளில் அறிந்தாலும், அதற்கு வலிமை என்றொரு பொருள் உண்டு. ஒரு அழகான பெண் தன் ஆற்றலில் உள்ள கர்வம் தெரிய முழுக்கவனத்துடன் அம்மியில் அரைப்பதை விழுதாக அரைத்துப் பாராட்டுவாங்குவதை இந்தப் பழமொழி அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்தக்காலத்தில் பெண்ணை அம்மையில் அரைக்கச்சொன்னால், சொன்னவர்மேலுள்ள கோபத்தில் அவள் மிடுக்கு--ஆற்றல் அதிகமாவது நிச்சயம்!
*****
014. பழமொழி: இழவு சொன்னவன் பேரிலேயா பழி?
பொருள்: மரணத்தை அறிவிப்பவனைக் குறைசொல்வது தகுமா?
விளக்கம்: ஒரு தூதனிடம் காட்டவேண்டிய கருணையைப் பழமொழி சுட்டுகிறது. ’எய்தவன் இருக்க அம்பை னோவானேன்?’ என்ற பழமொழி இதனின்று சற்று வேறுபட்டது: ஏனென்றால் மரண அறிவிப்பில் மனவருத்தம், அம்பு தைத்ததில் உடல்வருத்தம்.
*****
015. பழமொழி: சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு!
பொருள்: எவ்வளவுதான் தத்ரூபமாக இருந்தாலும் சித்திரமாக வரையப்பட்ட கொக்கினைத் திருடுபோன ரத்தினத்துக்காகக் குற்றம்சாட்ட முடியுமா?
விளக்கம்: ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதியைக் குறித்துச்சொன்னது.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பழமொழி விளக்கம்
நல்லா இருக்கு , தொடருங்கள் உங்கள் பதிவை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழமொழி விளக்கம் - Page 3
பழ மொழியும் விளக்கங்களும், விளங்கும் படி உள்ளது. நன்றி ஐயா.
Kuzhali- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
Re: பழமொழி விளக்கம் - Page 3
016. பழமொழி: மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.
பொருள்: மாமியாரப் பொறுத்தவரை மருமகள் எது சொன்னாலும், செய்தாலும் குற்றம்.
விளக்கம்: மாமியாருக்கு நல்லது சொல்ல மருமகளால் ஆகுமோ? மாமியார்கள் மாறுவதும் உண்டோ?
*****
017 பழமொழி: தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே.
பொருள்: கிணற்றைத் தூர்த்து முடிவிட்டபின், மீண்டும் அதைத் தோண்டித் தூர்வாரினால் பயன் உண்டோ?
விளக்கம்: முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளறுவது குறித்துச் சொன்னது.
*****
018. பழமொழி: உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
பொருள்: ஒருவனது வஞ்சகச் செயல்களால் அவனுக்குள் இருக்கும் உண்மை ஒடுங்கிவிடும்.
விளக்கம்: உருளச்செய்தல் என்ற பொருளில் வரும் உருட்டு என்ற சொல், வார்த்தைகளை உருட்டி ஏமாற்றுவதையும் குறிக்கிறது: "சப்தஜா லத்தால் மருட்டுதல் கபடமென்றுருட்டதற்கோ"--தாயுமானவர், நின்ற.3.
புரட்டு என்ற சொல் மாறுபட்டபேச்சைக் குறிக்கிறது. ’பொய்யும் புராட்டும்’ என்பது பொதுவழக்கு. ’இந்த உருட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்’ என்கிறோம்.
உள்ளது என்பது ஒருவனுக்குள் உள்ள உண்மையை, அதாவது ஆத்மாவைக் குறிக்கிறது. உள்ளம் உண்மையை ஆராயாது கள்ளத்தை ஆராயும்போது, ஆத்மா மேன்மேலும் உள்ளுக்குள் ஒடுங்கிவிடுவதை இந்தப் பழமொழி எளிய சொற்களில் விளக்குகிறது.
*****
019. பழமொழி: இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம்.
பொருள்: இது என் குலத்தின் கட்டுப்பாடு, இது என் வயிற்றின் கட்டுப்பாடு.
விளக்கம்: இந்தப் பழமொழிக்குப் பின்னே ஒரு கதை உண்டு. குயவர்கள் என்றும் வைஷ்ணவர்களாக இருந்ததில்லை. ஆயினும் ஒரு சமயம் ஶ்ரீரங்கத்தில் இருந்த வைஷ்ணவர்கள் அங்கிருந்த குயவர்களை நெற்றியில் நாமம் தரிக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தினர்; இல்லாவிடில் அவர்கள் செய்யும் பானைகளைக் கோவிலுக்கு வாங்கமுடியாது என்றனர். இந்தக் கஷ்டத்தை நீக்க ஒரு புத்திசாலிக் குயவன் தன் நெற்றியில் திருநீறும் வயிற்றில் பெரிய நாமமும் அணிந்தான். வைஷ்ணவர்கள் அவனைக் கடிந்துகொண்டபோது அவன் சொன்ன வார்த்தைகளே இந்தப் பழமொழி.
*****
020. பழமொழி: கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.
பொருள்: ஒருவனைக் கண்டபோது அவன மரியாதைக்கு உரியவனாகவும், காணாதபோது அவன் மடையன் என்றும் சொல்வது.
விளக்கம்: காமாச்சி நாயகர் என்பது அநேகமாக சிவனைக்குறிப்பது; இது புகழ்ச்சியின் எல்லை. காமாட்டி என்பது மண்வெட்டுவோனை, நிலத்தைத் தோண்டுவோனைக் குறிக்கும் சொல், பட்டிக்காட்டான் என்று மறைமுகமாகச் சொல்வது. (’உன் பிள்ளை பரதன் காமாட்டி யானானே’--இராமாயணம், அயோத்.6)
இதுபோல இன்னொரு பழமொழி: கண்டால் முறை சொல்கிறது, காணாவிட்டால் பெயர் சொல்கிறது.
பொருள்: மாமியாரப் பொறுத்தவரை மருமகள் எது சொன்னாலும், செய்தாலும் குற்றம்.
விளக்கம்: மாமியாருக்கு நல்லது சொல்ல மருமகளால் ஆகுமோ? மாமியார்கள் மாறுவதும் உண்டோ?
*****
017 பழமொழி: தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே.
பொருள்: கிணற்றைத் தூர்த்து முடிவிட்டபின், மீண்டும் அதைத் தோண்டித் தூர்வாரினால் பயன் உண்டோ?
விளக்கம்: முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளறுவது குறித்துச் சொன்னது.
*****
018. பழமொழி: உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
பொருள்: ஒருவனது வஞ்சகச் செயல்களால் அவனுக்குள் இருக்கும் உண்மை ஒடுங்கிவிடும்.
விளக்கம்: உருளச்செய்தல் என்ற பொருளில் வரும் உருட்டு என்ற சொல், வார்த்தைகளை உருட்டி ஏமாற்றுவதையும் குறிக்கிறது: "சப்தஜா லத்தால் மருட்டுதல் கபடமென்றுருட்டதற்கோ"--தாயுமானவர், நின்ற.3.
புரட்டு என்ற சொல் மாறுபட்டபேச்சைக் குறிக்கிறது. ’பொய்யும் புராட்டும்’ என்பது பொதுவழக்கு. ’இந்த உருட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்’ என்கிறோம்.
உள்ளது என்பது ஒருவனுக்குள் உள்ள உண்மையை, அதாவது ஆத்மாவைக் குறிக்கிறது. உள்ளம் உண்மையை ஆராயாது கள்ளத்தை ஆராயும்போது, ஆத்மா மேன்மேலும் உள்ளுக்குள் ஒடுங்கிவிடுவதை இந்தப் பழமொழி எளிய சொற்களில் விளக்குகிறது.
*****
019. பழமொழி: இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம்.
பொருள்: இது என் குலத்தின் கட்டுப்பாடு, இது என் வயிற்றின் கட்டுப்பாடு.
விளக்கம்: இந்தப் பழமொழிக்குப் பின்னே ஒரு கதை உண்டு. குயவர்கள் என்றும் வைஷ்ணவர்களாக இருந்ததில்லை. ஆயினும் ஒரு சமயம் ஶ்ரீரங்கத்தில் இருந்த வைஷ்ணவர்கள் அங்கிருந்த குயவர்களை நெற்றியில் நாமம் தரிக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தினர்; இல்லாவிடில் அவர்கள் செய்யும் பானைகளைக் கோவிலுக்கு வாங்கமுடியாது என்றனர். இந்தக் கஷ்டத்தை நீக்க ஒரு புத்திசாலிக் குயவன் தன் நெற்றியில் திருநீறும் வயிற்றில் பெரிய நாமமும் அணிந்தான். வைஷ்ணவர்கள் அவனைக் கடிந்துகொண்டபோது அவன் சொன்ன வார்த்தைகளே இந்தப் பழமொழி.
*****
020. பழமொழி: கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.
பொருள்: ஒருவனைக் கண்டபோது அவன மரியாதைக்கு உரியவனாகவும், காணாதபோது அவன் மடையன் என்றும் சொல்வது.
விளக்கம்: காமாச்சி நாயகர் என்பது அநேகமாக சிவனைக்குறிப்பது; இது புகழ்ச்சியின் எல்லை. காமாட்டி என்பது மண்வெட்டுவோனை, நிலத்தைத் தோண்டுவோனைக் குறிக்கும் சொல், பட்டிக்காட்டான் என்று மறைமுகமாகச் சொல்வது. (’உன் பிள்ளை பரதன் காமாட்டி யானானே’--இராமாயணம், அயோத்.6)
இதுபோல இன்னொரு பழமொழி: கண்டால் முறை சொல்கிறது, காணாவிட்டால் பெயர் சொல்கிறது.
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: பழமொழி விளக்கம் - Page 3
021. பழமொழி: அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்.
பொருள்: ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள்.
விளக்கம்: அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர், நெருப்பு, விறகு.
*****
022. பழமொழி: குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால், என்ன கதி ஆகும்?
பொருள்: குரங்கு என்பது ஒரு நிலையில் நில்லாது மனம் போனபோக்கில் ஆடும் விலங்கு. அது கள்ளும் குடித்து, பின் அதற்குப் பேய் பிடித்து, அதன்பின் அதனைத் தேளும் கொட்டிவிட்டால், குரங்கின் கதி என்ன?
விளக்கம்: நம் மனமே குரங்கு. கள் குடிப்பது ஆணவ மலத்தால் நாம் செய்யும் செயல்கள்; பேய் பிடிப்பது நாம் மாயை என்கிற மலத்தால் அவதியுறுவதைச் சொல்வது; நம்மைத் தேள்கொட்டுவது கன்ம/கரும மலம்: நாம் முன் செய்த வினைகளின் பயன். இந்த மூன்று மலங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு ஜீவாத்மாவின் கதி என்ன ஆகும்?
*****
023. பழமொழி: வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு, பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை.
பொருள்: எவ்வளவோ பானைகள் (என் தலையில்) உடைந்து வீணானதைப் பார்த்துவிட்டேன், ஆனால் தலையில் உடைந்த பானை கழுத்தில் ஆரமாக விழுந்த புதுமையை இன்றுதான் கண்டேன்.
விளக்கம்: மனைவி ஒருத்தி தன் கணவன் செய்த ஒவ்வொரு பத்தாவது தப்புக்கும் அவன் தலையில் ஒரு மண்சட்டியைப் போட்டு உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாளாம். கணவனாலோ தப்புச்செய்யாமல் இருக்கமுடியவில்லை. எனவே அவன் களைத்துப்போய் தன் நண்பன் வீட்டுக்குப்போனபோது நண்பனின் மனைவி தன் கணவன் செய்த ஒவ்வொரு தப்புக்கும் அவன் தலையில் ஒரு சட்டியை உடைத்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு சட்டியின் வாய் எழும்பி இவன் கழுத்தில் ஆரமாக விழுந்தது கண்டு இவ்வாறு கூறினான்.
*****
024. பழமொழி: ஊரார்வீட்டு நெய்யே, என் பெண்சாதி/பெண்டாட்டி கையே.
பொருள்: தன் பொருளைவிட மற்றவர் பொருளை உபயோகிப்பதில் தாராளம்.
விளக்கம்: கணவனும் மனைவியும் ஊரில் ஒரு பொது விருந்துக்குப் போயிருந்தனர். மனவியை விருந்தினர்களுக்கு உணவு பரிமாற அழைத்தனர். அவள் ஒவ்வொரு இலையிலும் நெய் பரிமாறியபோது, கணவன் முறை வந்ததும் வீட்டில் அவனுக்குத் தம்வீட்டில் பரிமாறுவதைவிட அதிக நெய் ஊற்றினாள்; ஏனென்றால் அது ஊரார்வீட்டு நெய்யல்லவா?
*****
025. பழமொழி: கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்.
பொருள்: இவன் தான் வணங்கும் காஞ்சீபுர வரதராஜப் பெருமாளைக்குறித்துச் சொன்னது அங்கிருந்த பிச்சைக்காரன் காதில் அவன் குடிக்கும் கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது.
விளக்கம்: காஞ்சீபுர வரதராஜப் பெருமாள் ஒருமுறை ஊர்வலத்தில் வந்தபோது, ஒரு வைஷ்ணவன் அவரை சேவித்துக்கொண்டே சந்தோஷத்துடன், "கஞ்சி வரதப்பா!" என்று கூவினான். இவர்களுக்குப் பக்கத்தில் நின்றிருந்த பிச்சைக்காரன் அதைத் தவறாகப் பொருள்கொண்டு தான் குடிக்கும் கஞ்சி உற்றுபவர்கள் வருவதாக எண்ணி, "எங்கே வரதப்பா?" என்றான்.
தமிழில் உள்ள பல சிலேடைப் பழமொழிகளில் இது ஒன்று. கஞ்சியும் காஞ்சியும் ஒன்றானால் வரதப்பா என்று வணங்குவது அவர்/அது வருவதைக் குறிப்பதாகவும் ஆகிறதல்லவா?
*****
026. பழமொழி: சுயகாரிய துரந்தரன், சுவாமி காரியும் வழவழ.
பொருள்: தன்காரியத்தில் குறியாயிருந்து அலுக்காமல் சலிக்காமல் அதை வெற்றியுடன் முடிப்பவன், அதுவே கடவுள் சம்பந்தமாக இருக்கும்போது ஏனோதானோ என்று முனைகிறான்.
விளக்கம்: दुरन्त என்ற ஸம்ஸ்கிருத வார்த்தைக்கு ’தீவிர உணர்ச்சியுடன் மிகவும் முயல்வது’ என்றொரு பொருளுண்டு. வழவழவெனல் என்ற தமிழ்ச்சொல்லுக்குத் தெளிவின்றிப் பேசுதல் என்று பொருள். தன்காரியம் எனும்போது (பேச்சின்றி) எண்ணமும் செயலுமாக இருப்பவன், அதுவே சுவாமி காரியம் எனும்போது வெறும் வழவழ பேச்சுடன் நின்றுவிடுவதைப் பழமொழி உணர்த்துகிறது.
*****
027. பழமொழி: குரங்குப்புண் ஆறாது.
பொருள்: குரங்கு தன்மேலுள்ள புண்ணை ஆறவிடுமா?
விளக்கம்: இங்குக் குரங்கு என்றது மனிதவர்க்கத்தைக் குறிக்கிறது. அதுவும் குரங்குபோல அமைதியற்று அலைவது. புண் என்றது மனிதனிடம் உள்ள தீயகுணத்தை. குரங்கு தன் புண்ணை ஆறவிடாது; மனிதனும் தன் தீயகுணத்தை மாறவிடான்.
*****
028. பழமொழி: பழைய பொன்னனே பொன்னன், பழைய கப்பரையே கப்பரை.
பொருள்: (சமீபத்தில் மாறிவிட்ட) பொன்னன் மீண்டும் பழைய பொன்னன் ஆனான், புதிதாகக் கிடைத்த கப்பரையை விட பழைய கிண்ணமே மேல் என்று உணர்ந்தவனாய்.
விளக்கம்: பொன்னன் என்றொரு வேலக்காரன் ஒருநாள் பொற்காசுகள் நிறைந்த புதையல் ஒன்றைக் கண்டான். புதையலைத் தன்வீட்டுக்கு எடுத்துச்செல்லாமல் அங்கேயே அதை மறைத்துவைத்துப் பின் தினமும் அங்கு சென்று அதைக் கவனித்து வந்தான். புதையலைக்கண்ட நாள் முதல் அவன் குணத்தில் மாறுபட்டு சொல்லுக்கு அடங்காத வேலைக்காரன் ஆனான். இதைக்கவனித்த அவன் யஜமானன் ஒருநாள் அவன் அறியாமல் அவனைத்தொடர்ந்து சென்று புதையலைக்கண்டுபிடித்து அதைக் கைப்பற்றிவிட்டான். மறுநாள் புதையல் காணாமல் போயிருந்ததுகண்டு பொன்னன் தன்விதியை நொந்து மீண்டும் பழைய பொன்னன் ஆனான். யஜமானன் அவன் குணத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக்குறித்து வினவியபோது பொன்னன் இவ்வாறு கூறினான்.
*****
029. பழமொழி: கொள்ளை அடித்துத் தின்றவனுக்குக் கொண்டுதின்னத் தாங்குமா?
பொருள்: திருடியே உண்பவன் உணவை வாங்கி உண்பானா?
விளக்கம்: கொள்வது என்றால் வாங்குவது; கொடுப்பது என்பது வாங்கியதற்குரிய பணமோ பொருளோ கொடுத்தல். ’கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூம் குறைகொடாது’ என்று பட்டினப்பாலை வணிகர் வாழ்வுமுறையைப் பற்றிப்பேசுகிறது. எனவே கோண்டு தின்னல் என்பது ஒரு உணவுப்பொருளை வாங்கித்தின்னுதலாகும். இன்றைய அரசியல்வாதிகள் இப்பழமொழியை நினைவூட்டுகின்றனர்.
*****
030. பழமொழி: குழந்தைக் காய்ச்சலும், குண்டன்/குள்ளன் காய்ச்சலும் பொல்லாது.
பொருள்: குழந்தையின் பொறாமையும் குண்டன் அல்லது குள்ளனின் பொறாமையும் எளிதில் தீராது.
விளக்கம்: காய்ச்சல் என்றது வெறுப்பு, பொறாமை, கோபம் என்ற குணங்களைக் குறிக்கும். ’காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே’--அறநெறிச்சாரம் 22.
ஏதேனும் ஒரு காரணத்தால் இக்குணம் மேற்கொண்ட குழந்தை அவ்வளவு எளிதில் அதைக் கைவிடுவதில்லை. இரண்டு குழந்தைகள் ஒருவருக்கொருவர் ’டூ’ விட்டுக்கொண்டால் மீண்டும் ஒன்றுசேர நாளாகிறது.
குண்டன் என்றது இழியகுணம் உடையவனை. குள்ளனும் பொதுவாக நம்பத்தாகாதவன் ஆகிறான் (’கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே’). இவர்களின் வெறுப்பும் பொறாமையும் எளிதில் மாறுவன அல்ல.
*****
பொருள்: ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள்.
விளக்கம்: அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர், நெருப்பு, விறகு.
*****
022. பழமொழி: குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால், என்ன கதி ஆகும்?
பொருள்: குரங்கு என்பது ஒரு நிலையில் நில்லாது மனம் போனபோக்கில் ஆடும் விலங்கு. அது கள்ளும் குடித்து, பின் அதற்குப் பேய் பிடித்து, அதன்பின் அதனைத் தேளும் கொட்டிவிட்டால், குரங்கின் கதி என்ன?
விளக்கம்: நம் மனமே குரங்கு. கள் குடிப்பது ஆணவ மலத்தால் நாம் செய்யும் செயல்கள்; பேய் பிடிப்பது நாம் மாயை என்கிற மலத்தால் அவதியுறுவதைச் சொல்வது; நம்மைத் தேள்கொட்டுவது கன்ம/கரும மலம்: நாம் முன் செய்த வினைகளின் பயன். இந்த மூன்று மலங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு ஜீவாத்மாவின் கதி என்ன ஆகும்?
*****
023. பழமொழி: வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு, பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை.
பொருள்: எவ்வளவோ பானைகள் (என் தலையில்) உடைந்து வீணானதைப் பார்த்துவிட்டேன், ஆனால் தலையில் உடைந்த பானை கழுத்தில் ஆரமாக விழுந்த புதுமையை இன்றுதான் கண்டேன்.
விளக்கம்: மனைவி ஒருத்தி தன் கணவன் செய்த ஒவ்வொரு பத்தாவது தப்புக்கும் அவன் தலையில் ஒரு மண்சட்டியைப் போட்டு உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாளாம். கணவனாலோ தப்புச்செய்யாமல் இருக்கமுடியவில்லை. எனவே அவன் களைத்துப்போய் தன் நண்பன் வீட்டுக்குப்போனபோது நண்பனின் மனைவி தன் கணவன் செய்த ஒவ்வொரு தப்புக்கும் அவன் தலையில் ஒரு சட்டியை உடைத்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு சட்டியின் வாய் எழும்பி இவன் கழுத்தில் ஆரமாக விழுந்தது கண்டு இவ்வாறு கூறினான்.
*****
024. பழமொழி: ஊரார்வீட்டு நெய்யே, என் பெண்சாதி/பெண்டாட்டி கையே.
பொருள்: தன் பொருளைவிட மற்றவர் பொருளை உபயோகிப்பதில் தாராளம்.
விளக்கம்: கணவனும் மனைவியும் ஊரில் ஒரு பொது விருந்துக்குப் போயிருந்தனர். மனவியை விருந்தினர்களுக்கு உணவு பரிமாற அழைத்தனர். அவள் ஒவ்வொரு இலையிலும் நெய் பரிமாறியபோது, கணவன் முறை வந்ததும் வீட்டில் அவனுக்குத் தம்வீட்டில் பரிமாறுவதைவிட அதிக நெய் ஊற்றினாள்; ஏனென்றால் அது ஊரார்வீட்டு நெய்யல்லவா?
*****
025. பழமொழி: கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்.
பொருள்: இவன் தான் வணங்கும் காஞ்சீபுர வரதராஜப் பெருமாளைக்குறித்துச் சொன்னது அங்கிருந்த பிச்சைக்காரன் காதில் அவன் குடிக்கும் கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது.
விளக்கம்: காஞ்சீபுர வரதராஜப் பெருமாள் ஒருமுறை ஊர்வலத்தில் வந்தபோது, ஒரு வைஷ்ணவன் அவரை சேவித்துக்கொண்டே சந்தோஷத்துடன், "கஞ்சி வரதப்பா!" என்று கூவினான். இவர்களுக்குப் பக்கத்தில் நின்றிருந்த பிச்சைக்காரன் அதைத் தவறாகப் பொருள்கொண்டு தான் குடிக்கும் கஞ்சி உற்றுபவர்கள் வருவதாக எண்ணி, "எங்கே வரதப்பா?" என்றான்.
தமிழில் உள்ள பல சிலேடைப் பழமொழிகளில் இது ஒன்று. கஞ்சியும் காஞ்சியும் ஒன்றானால் வரதப்பா என்று வணங்குவது அவர்/அது வருவதைக் குறிப்பதாகவும் ஆகிறதல்லவா?
*****
026. பழமொழி: சுயகாரிய துரந்தரன், சுவாமி காரியும் வழவழ.
பொருள்: தன்காரியத்தில் குறியாயிருந்து அலுக்காமல் சலிக்காமல் அதை வெற்றியுடன் முடிப்பவன், அதுவே கடவுள் சம்பந்தமாக இருக்கும்போது ஏனோதானோ என்று முனைகிறான்.
விளக்கம்: दुरन्त என்ற ஸம்ஸ்கிருத வார்த்தைக்கு ’தீவிர உணர்ச்சியுடன் மிகவும் முயல்வது’ என்றொரு பொருளுண்டு. வழவழவெனல் என்ற தமிழ்ச்சொல்லுக்குத் தெளிவின்றிப் பேசுதல் என்று பொருள். தன்காரியம் எனும்போது (பேச்சின்றி) எண்ணமும் செயலுமாக இருப்பவன், அதுவே சுவாமி காரியம் எனும்போது வெறும் வழவழ பேச்சுடன் நின்றுவிடுவதைப் பழமொழி உணர்த்துகிறது.
*****
027. பழமொழி: குரங்குப்புண் ஆறாது.
பொருள்: குரங்கு தன்மேலுள்ள புண்ணை ஆறவிடுமா?
விளக்கம்: இங்குக் குரங்கு என்றது மனிதவர்க்கத்தைக் குறிக்கிறது. அதுவும் குரங்குபோல அமைதியற்று அலைவது. புண் என்றது மனிதனிடம் உள்ள தீயகுணத்தை. குரங்கு தன் புண்ணை ஆறவிடாது; மனிதனும் தன் தீயகுணத்தை மாறவிடான்.
*****
028. பழமொழி: பழைய பொன்னனே பொன்னன், பழைய கப்பரையே கப்பரை.
பொருள்: (சமீபத்தில் மாறிவிட்ட) பொன்னன் மீண்டும் பழைய பொன்னன் ஆனான், புதிதாகக் கிடைத்த கப்பரையை விட பழைய கிண்ணமே மேல் என்று உணர்ந்தவனாய்.
விளக்கம்: பொன்னன் என்றொரு வேலக்காரன் ஒருநாள் பொற்காசுகள் நிறைந்த புதையல் ஒன்றைக் கண்டான். புதையலைத் தன்வீட்டுக்கு எடுத்துச்செல்லாமல் அங்கேயே அதை மறைத்துவைத்துப் பின் தினமும் அங்கு சென்று அதைக் கவனித்து வந்தான். புதையலைக்கண்ட நாள் முதல் அவன் குணத்தில் மாறுபட்டு சொல்லுக்கு அடங்காத வேலைக்காரன் ஆனான். இதைக்கவனித்த அவன் யஜமானன் ஒருநாள் அவன் அறியாமல் அவனைத்தொடர்ந்து சென்று புதையலைக்கண்டுபிடித்து அதைக் கைப்பற்றிவிட்டான். மறுநாள் புதையல் காணாமல் போயிருந்ததுகண்டு பொன்னன் தன்விதியை நொந்து மீண்டும் பழைய பொன்னன் ஆனான். யஜமானன் அவன் குணத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக்குறித்து வினவியபோது பொன்னன் இவ்வாறு கூறினான்.
*****
029. பழமொழி: கொள்ளை அடித்துத் தின்றவனுக்குக் கொண்டுதின்னத் தாங்குமா?
பொருள்: திருடியே உண்பவன் உணவை வாங்கி உண்பானா?
விளக்கம்: கொள்வது என்றால் வாங்குவது; கொடுப்பது என்பது வாங்கியதற்குரிய பணமோ பொருளோ கொடுத்தல். ’கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூம் குறைகொடாது’ என்று பட்டினப்பாலை வணிகர் வாழ்வுமுறையைப் பற்றிப்பேசுகிறது. எனவே கோண்டு தின்னல் என்பது ஒரு உணவுப்பொருளை வாங்கித்தின்னுதலாகும். இன்றைய அரசியல்வாதிகள் இப்பழமொழியை நினைவூட்டுகின்றனர்.
*****
030. பழமொழி: குழந்தைக் காய்ச்சலும், குண்டன்/குள்ளன் காய்ச்சலும் பொல்லாது.
பொருள்: குழந்தையின் பொறாமையும் குண்டன் அல்லது குள்ளனின் பொறாமையும் எளிதில் தீராது.
விளக்கம்: காய்ச்சல் என்றது வெறுப்பு, பொறாமை, கோபம் என்ற குணங்களைக் குறிக்கும். ’காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே’--அறநெறிச்சாரம் 22.
ஏதேனும் ஒரு காரணத்தால் இக்குணம் மேற்கொண்ட குழந்தை அவ்வளவு எளிதில் அதைக் கைவிடுவதில்லை. இரண்டு குழந்தைகள் ஒருவருக்கொருவர் ’டூ’ விட்டுக்கொண்டால் மீண்டும் ஒன்றுசேர நாளாகிறது.
குண்டன் என்றது இழியகுணம் உடையவனை. குள்ளனும் பொதுவாக நம்பத்தாகாதவன் ஆகிறான் (’கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே’). இவர்களின் வெறுப்பும் பொறாமையும் எளிதில் மாறுவன அல்ல.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: பழமொழி விளக்கம் - Page 3
பதிவிற்கு நன்றி!
அதிகமான பழிமொழிகளே என்னக்கு பரிட்ச்ச்சயமானவை அல்ல!!!!!
அதன் அர்த்தமும் அளித்தமைக்கு மிக்க நன்றி
அதிகமான பழிமொழிகளே என்னக்கு பரிட்ச்ச்சயமானவை அல்ல!!!!!
அதன் அர்த்தமும் அளித்தமைக்கு மிக்க நன்றி
Re: பழமொழி விளக்கம் - Page 3
குள்ள மனிதர்களைப் பற்றிய கருத்துக்கள் உவப்பானதல்ல நண்பரே..
இந்தப் பழமொழியின் காரணம்: குள்ளமாக இருக்கும் மனிதனிடத்திலும், குண்டாக இருக்கும் மனிதனிடத்திலும் காணப்படும் அல்லது ஏற்படுத்தப்பட்ட தாழ்வு மனப்பான்மையினால் அவர்கள் செய்யும் காரியங்கள் அவர்களைக் குற்றவாளிகளாக்கி விடுகிறது..
தாழ்வு மனப்பான்மையில் உழலும் மனிதன் உளவியலில் ஒரு நோயாளியாகவே பார்க்கப் படுகிறான்.. எந்த நேரத்திலும் அவன் குற்றம் செய்யத் தயாராகவே இருக்கிறான் என்பதால் குள்ளனை நம்பாதே என்கிறார்கள்..
இச்சூழ்நிலைக்கு ஒருவகையில் சமூகம்தான் காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை..
இந்தப் பழமொழியின் காரணம்: குள்ளமாக இருக்கும் மனிதனிடத்திலும், குண்டாக இருக்கும் மனிதனிடத்திலும் காணப்படும் அல்லது ஏற்படுத்தப்பட்ட தாழ்வு மனப்பான்மையினால் அவர்கள் செய்யும் காரியங்கள் அவர்களைக் குற்றவாளிகளாக்கி விடுகிறது..
தாழ்வு மனப்பான்மையில் உழலும் மனிதன் உளவியலில் ஒரு நோயாளியாகவே பார்க்கப் படுகிறான்.. எந்த நேரத்திலும் அவன் குற்றம் செய்யத் தயாராகவே இருக்கிறான் என்பதால் குள்ளனை நம்பாதே என்கிறார்கள்..
இச்சூழ்நிலைக்கு ஒருவகையில் சமூகம்தான் காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை..
Re: பழமொழி விளக்கம் - Page 3
031. பழமொழி: கண்ணால் கண்டதை எள்ளுக்காய் பிளந்ததுபோலச் சொல்லவேண்டும்.
பொருள்: எள்ளுக்காய் முற்றிப் பிளக்கும்போது நெடுவாட்டில் சரிபாதியாகப் பிளவுபடும். அதுபோல கண்ணால் கண்டதை நடுநிலையுடன் விவரிக்கவேண்டும்.
விளக்கம்: இது ஒரு வழக்கில் சாட்சிக்குச் சொன்ன ஆலோசனை.
*****
032. பழமொழி: மரத்தாலி கட்டி அடிக்கிறது.
பொருள்: மரத்தால் ஆன தாலியை ஒரு மணமான பெண்ணின் கழுத்தில் கட்டுவைத்துப் பின் அவளை அடிப்பது.
விளக்கம்: இச்செயல் கொடுங்கோன்மையின் உச்சியைக் குறிக்கிறது. முன்னாட்களில் சில கொடுங்கோல் ஆட்சியாளர்கள், மக்களில் சிலர் வரித்தொகையினை சரிவரச் செலுத்தமுடியாதபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணின் தங்கத்தாலியைக் கவர்ந்துகொண்டு, அப்பெண்ணுக்கு ஒரு மரத்தால் ஆன தாலியை அணியச்செய்து, பின் அவளை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
*****
033. பழமொழி: அங்கிடுதொடுப்பிக்கு அங்கு இரண்டு குட்டு, இங்கு இரண்டு சொட்டு.
பொருள்: கோள்சொல்லுவோனுக்கு எங்கும் எப்போதும் பிரச்சினைதான்.
விளக்கம்: அங்கிடுதொடுப்பி என்பது குறளை கூறுவோனை, அதாவது கோள்சொல்லுவோனைக் குறிக்கிறது. தொடுப்பி என்ற சொல்லுக்கே புறங்கூறுவோன் என்ற பொருளிருக்க, அங்கிடு என்ற முற்சேர்க்கையின் பொருள் அகராதியில் இல்லை. ஆயினும், அங்கிட்டோமம் என்ற சொல்லுக்கு அக்கினிட்டோமம் (அக்னிஷ்டோமம்) அன்று பொருள் கூறியிருப்பதால், அங்கி என்ற சொல்லுக்கு அக்னி என்று பொருள்கொள்ள இடமிருக்கிறது. இடுதல் என்றால் வைத்தல் என்பதால், அங்கிடுதொடுப்பி என்பவன் இன்றைய வழக்கில் ’பற்றவைப்பவன்’ ஆகிறான்! (என் விளக்கம்).
சொட்டு என்ற சொல்லுக்குக் குட்டு, அடித்தல் என்ற பொருள்களுண்டு.
*****
034. பழமொழி: குறவழக்கும் இடைவழக்கும் கொஞ்சத்தில் தீராது.
பொருள்: வேடுவர்கள், இடையர்கள் இவர்களின் சர்ச்சைகளை எளிதில் தீர்க்கமுடியாது.
விளக்கம்: குறவன் என்ற சொல் அந்நாளில் குறிஞ்சி நிலத்தில் வசிப்பவன் என்று பொருள்பட்டது. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலைசார்ந்த இடமும். இங்கு வசித்தோரின் உணவு தேனும் தினைமாவும். அவர்களின் முக்கிய தொழில் வேட்டையாடுதல்.
*****
035. பழமொழி: மதுபிந்து கலகம்போல் இருக்கிறது.
பொருள்: துளித்தேனுக்காக சண்டைபோடுவதுபோல் இருக்கிறது.
விளக்கம்: மது, பிந்து என்பவை வடமொழிச்சொற்கள். அவை முறையே தேன், துளி என்று பொருள்படும். துளித்தேனுக்கு அடித்துக்கொள்வது என்பது அற்ப விஷயங்களுக்காக சண்டைபோட்டுக்கொள்வதைக் குறிக்கிறது.
*****
036. பழமொழி: மாரைத்தட்டி மனதிலே வை.
பொருள்: கேட்ட வசைமொழிகளை மார்பைத் தட்டியபடி மனதில் இருத்திக்கொள்வது.
விளக்கம்: இருவருக்கிடையே ஏற்படும் சச்சரவில் வார்த்தைகள் தாறுமாறாகக் கையாளப்பட, வசைமொழி கேட்டவன் தன் மாரைத்தட்டியபடி, ’இதை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்’ என்று அறைகூவுவது இன்றும் நடப்பதைப் பார்க்கிறோம்.
*****
037. பழமொழி: மௌனம் கலகநாசம்.
பொருள்: மௌனமாக இருப்பது கலகம் முடிந்ததுக்கு அறிகுறி.
விளக்கம்: தீர்வு காணாத ஒரு கலகம் இரு சாராரும் மௌனமாகப் போய்விடும்போது பெரும்பாலும் முடிந்துவிடுவதைப் பார்க்கிறோம். எனவே மௌனம் சம்மதத்துக்கு மட்டுமல்ல, கலக முடிவுக்கும் அறிகுறி என்றாகிறது.
*****
038. பழமொழி: ஶ்ரீரங்கத்துக் காக்காயானாலும் கோவிந்தம் பாடுமா?
பொருள்: காக்கை ஶ்ரீரங்கத்தில் பிறந்திருந்தாலும் அது கோவிந்தனைப் பற்றி அறியுமோ?
விளக்கம்: காக்கை எங்கிருந்தாலும் அது காக்கைதான். அதற்கு அந்த ஊரின் ஆன்மீக, கலாசார வழக்கங்கள் பற்றித் தெரியாது. அதுபோலச் சிலர் இருக்கிறார்கள்.
*****
039. பழமொழி: நெல்லு குத்துகிறவளுக்குக் கல்லு பரிக்ஷை தெரியுமா?
பொருள்: நெல்குத்தும் பெண் இரத்தினங்களை இனம்காண அறிவாளா?
விளக்கம்: கல்லு பரிக்ஷை என்பது இரத்தினக் கற்களை பரிசோதித்துத் தரம் பிரிப்பது. இவ்வகை புத்திகூர்மை சார்ந்த தொழில்களை ஒரு எளிய நெல்குத்தும் பெண் செய்யமுடியுமா? சிலர் சில வேலைகளுக்கு மட்டுமே தகுதி உடையவர் ஆகின்றனர், எனவே அவர்களை அவ்வேலைகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது கருத்து.
*****
040. பழமொழி: சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டதுபோல.
பொருள்: சணல்நார் எடுப்பவன் வீட்டுக்கோழி அந்த நார்களில் தானே சிக்கிக்கொண்டதுபோல.
விளக்கம்: சணப்பன் என்ற ஜாதி சணலிலிருந்து நார் எடுக்கும் தொழில் செய்வோரைக் குறித்தது. சணப்பன் வீட்டுக்கோழி என்றது தன்னுடைய முட்டாள்தனத்தால் தனக்கே துன்பங்களை வரவழைத்துக் கொள்பவனைக் குறித்தது.
*****
பொருள்: எள்ளுக்காய் முற்றிப் பிளக்கும்போது நெடுவாட்டில் சரிபாதியாகப் பிளவுபடும். அதுபோல கண்ணால் கண்டதை நடுநிலையுடன் விவரிக்கவேண்டும்.
விளக்கம்: இது ஒரு வழக்கில் சாட்சிக்குச் சொன்ன ஆலோசனை.
*****
032. பழமொழி: மரத்தாலி கட்டி அடிக்கிறது.
பொருள்: மரத்தால் ஆன தாலியை ஒரு மணமான பெண்ணின் கழுத்தில் கட்டுவைத்துப் பின் அவளை அடிப்பது.
விளக்கம்: இச்செயல் கொடுங்கோன்மையின் உச்சியைக் குறிக்கிறது. முன்னாட்களில் சில கொடுங்கோல் ஆட்சியாளர்கள், மக்களில் சிலர் வரித்தொகையினை சரிவரச் செலுத்தமுடியாதபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணின் தங்கத்தாலியைக் கவர்ந்துகொண்டு, அப்பெண்ணுக்கு ஒரு மரத்தால் ஆன தாலியை அணியச்செய்து, பின் அவளை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
*****
033. பழமொழி: அங்கிடுதொடுப்பிக்கு அங்கு இரண்டு குட்டு, இங்கு இரண்டு சொட்டு.
பொருள்: கோள்சொல்லுவோனுக்கு எங்கும் எப்போதும் பிரச்சினைதான்.
விளக்கம்: அங்கிடுதொடுப்பி என்பது குறளை கூறுவோனை, அதாவது கோள்சொல்லுவோனைக் குறிக்கிறது. தொடுப்பி என்ற சொல்லுக்கே புறங்கூறுவோன் என்ற பொருளிருக்க, அங்கிடு என்ற முற்சேர்க்கையின் பொருள் அகராதியில் இல்லை. ஆயினும், அங்கிட்டோமம் என்ற சொல்லுக்கு அக்கினிட்டோமம் (அக்னிஷ்டோமம்) அன்று பொருள் கூறியிருப்பதால், அங்கி என்ற சொல்லுக்கு அக்னி என்று பொருள்கொள்ள இடமிருக்கிறது. இடுதல் என்றால் வைத்தல் என்பதால், அங்கிடுதொடுப்பி என்பவன் இன்றைய வழக்கில் ’பற்றவைப்பவன்’ ஆகிறான்! (என் விளக்கம்).
சொட்டு என்ற சொல்லுக்குக் குட்டு, அடித்தல் என்ற பொருள்களுண்டு.
*****
034. பழமொழி: குறவழக்கும் இடைவழக்கும் கொஞ்சத்தில் தீராது.
பொருள்: வேடுவர்கள், இடையர்கள் இவர்களின் சர்ச்சைகளை எளிதில் தீர்க்கமுடியாது.
விளக்கம்: குறவன் என்ற சொல் அந்நாளில் குறிஞ்சி நிலத்தில் வசிப்பவன் என்று பொருள்பட்டது. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலைசார்ந்த இடமும். இங்கு வசித்தோரின் உணவு தேனும் தினைமாவும். அவர்களின் முக்கிய தொழில் வேட்டையாடுதல்.
*****
035. பழமொழி: மதுபிந்து கலகம்போல் இருக்கிறது.
பொருள்: துளித்தேனுக்காக சண்டைபோடுவதுபோல் இருக்கிறது.
விளக்கம்: மது, பிந்து என்பவை வடமொழிச்சொற்கள். அவை முறையே தேன், துளி என்று பொருள்படும். துளித்தேனுக்கு அடித்துக்கொள்வது என்பது அற்ப விஷயங்களுக்காக சண்டைபோட்டுக்கொள்வதைக் குறிக்கிறது.
*****
036. பழமொழி: மாரைத்தட்டி மனதிலே வை.
பொருள்: கேட்ட வசைமொழிகளை மார்பைத் தட்டியபடி மனதில் இருத்திக்கொள்வது.
விளக்கம்: இருவருக்கிடையே ஏற்படும் சச்சரவில் வார்த்தைகள் தாறுமாறாகக் கையாளப்பட, வசைமொழி கேட்டவன் தன் மாரைத்தட்டியபடி, ’இதை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்’ என்று அறைகூவுவது இன்றும் நடப்பதைப் பார்க்கிறோம்.
*****
037. பழமொழி: மௌனம் கலகநாசம்.
பொருள்: மௌனமாக இருப்பது கலகம் முடிந்ததுக்கு அறிகுறி.
விளக்கம்: தீர்வு காணாத ஒரு கலகம் இரு சாராரும் மௌனமாகப் போய்விடும்போது பெரும்பாலும் முடிந்துவிடுவதைப் பார்க்கிறோம். எனவே மௌனம் சம்மதத்துக்கு மட்டுமல்ல, கலக முடிவுக்கும் அறிகுறி என்றாகிறது.
*****
038. பழமொழி: ஶ்ரீரங்கத்துக் காக்காயானாலும் கோவிந்தம் பாடுமா?
பொருள்: காக்கை ஶ்ரீரங்கத்தில் பிறந்திருந்தாலும் அது கோவிந்தனைப் பற்றி அறியுமோ?
விளக்கம்: காக்கை எங்கிருந்தாலும் அது காக்கைதான். அதற்கு அந்த ஊரின் ஆன்மீக, கலாசார வழக்கங்கள் பற்றித் தெரியாது. அதுபோலச் சிலர் இருக்கிறார்கள்.
*****
039. பழமொழி: நெல்லு குத்துகிறவளுக்குக் கல்லு பரிக்ஷை தெரியுமா?
பொருள்: நெல்குத்தும் பெண் இரத்தினங்களை இனம்காண அறிவாளா?
விளக்கம்: கல்லு பரிக்ஷை என்பது இரத்தினக் கற்களை பரிசோதித்துத் தரம் பிரிப்பது. இவ்வகை புத்திகூர்மை சார்ந்த தொழில்களை ஒரு எளிய நெல்குத்தும் பெண் செய்யமுடியுமா? சிலர் சில வேலைகளுக்கு மட்டுமே தகுதி உடையவர் ஆகின்றனர், எனவே அவர்களை அவ்வேலைகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது கருத்து.
*****
040. பழமொழி: சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டதுபோல.
பொருள்: சணல்நார் எடுப்பவன் வீட்டுக்கோழி அந்த நார்களில் தானே சிக்கிக்கொண்டதுபோல.
விளக்கம்: சணப்பன் என்ற ஜாதி சணலிலிருந்து நார் எடுக்கும் தொழில் செய்வோரைக் குறித்தது. சணப்பன் வீட்டுக்கோழி என்றது தன்னுடைய முட்டாள்தனத்தால் தனக்கே துன்பங்களை வரவழைத்துக் கொள்பவனைக் குறித்தது.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம்
» “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம்
» அக்பரும் பக்கீரும் - பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம்
» “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம்
» அக்பரும் பக்கீரும் - பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|