ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_m10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10 
ayyasamy ram
என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_m10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10 
mohamed nizamudeen
என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_m10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10 
VENKUSADAS
என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_m10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10 

Top posting users this month
heezulia
என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_m10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10 
ayyasamy ram
என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_m10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10 
mohamed nizamudeen
என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_m10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10 
VENKUSADAS
என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_m10என் வாழ்க்கை ஒரு பார்வை!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கை ஒரு பார்வை!!

+10
கரூர் கவியன்பன்
அப்துல்
அருண்
சிவா
பூவன்
sathy
அசுரன்
ஜலஜா சிவகுமார்
T.N.Balasubramanian
அச்சலா
14 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! Empty என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by அச்சலா Wed Oct 31, 2012 11:40 pm

பாகம்-1:

என் பெயர் அச்சலா. என் வீட்டில் என்னை அச்சு குட்டி என்றே அழைப்பார்கள்..
நான் என் வீட்டில் மொத்தம் நான்கு குழந்தைகள்; அதில்
என் பெற்றோர் பெயர்:ராஜா,ராணி
என் கூட பிறந்தவர்கள் அனைவரும சகோதரிகளே.. எனக்கு அண்ணன் ,தம்பி கிடையாது..
என் வீட்டில் நான் தான் மூத்த பிள்ளை; அதனால் என் வீட்டில் சாப்பிட்டுக்கே பஞ்சமாக இருந்தது..
என் அப்பா ஒரு கூலி தொழிலாளி..
அம்மா வீட்டில் வேலை செய்வார்கள்..
நான் பிறந்தபோது வறுமை தழைவிரித்து ஆடியது..
என் அப்பா ஒரு கொத்தனார் வேலை..
அவர் வெளியில் சென்று பணம் கொண்டு வந்தால்தான் வீட்டில் உலை கொதிக்கும்..
நான் படித்தது பத்தாவது தான் அதற்கு மேல் ஒரே ஒரு கம்பியூட்டர் கோர்ஸ் மட்டுமே என் வாழ்வில் நான் படிக்க கடவுள் அருளியது.. நானும் படிக்க நினைத்தால் முடியுமா என்றே யோசிக்க தோன்றியது ..காரணம் என் சகோதரிகளை நினைத்து நினைத்து தினமும் வீட்டில் அழுவதும்..எனக்கு நானே ஆறுதல் கூறி..
நான் அழுதால் யார் அவர்களுக்கு ஆறுதல் மற்றும் உற்ற துணையும் கூட..நான் இல்லையின்றால் சாப்பாடு கூட சாப்பிட மாட்டார்கள் என் சகோதரிகள்..
அவர்கள் பெயர் நளினி,கீதா,சீதா
நான் படித்த காலம் 1980-ல் எனது பத்தாவது தேர்வு எழுதினேன்..
நான் ஒன்றும் படிப்பில் கெட்டிகாரி இல்லை ..எனக்கு என் டிச்சர் ஒருவர் உதவுவார். மிகவும் நல்லவரும்,கண்டிப்பானாவரும் கூட..
அவர் பள்ளியில் நுழைந்தால் வகுப்பறையே அமைதியாகிவிடும்..
என் ஊர் தஞ்சை மாவட்டம் ; ஒரத்தநாடு வட்டம்
ஈச்சங்கோட்டைதான் என் ஊர்..அது ஒரு சிறிய கிராமம் கூட..
கிராமம் என்றால் கடைகள் இரண்டும்,ஒரு பள்ளியும் சில வீடுகளும் தவிர தஞ்சையின் வழியாக காவரி நீர் பாசனம் தான் என் ஊரை செழுமை படுத்தியது..
நான் எனது பள்ளி படிப்பை முதலில் என் பால்வாடி என்கிற சிறு கூடாம் போட்ட அரசாங்க கூடம்..
அதில் நிறைய என்னை போன்ற ஏழை குழைந்தைகள் படித்து வந்தனர்.
பள்ளீக்கு வருவதோ காரணமமும் உண்டு . வீட்டில் சாப்பிட உணவு கிடையாது.. அதனால் மதிய உணவு கிடைக்குமே.. அதில் சனி மற்றும் புதன் கிழமை முட்டை என்பதால் சில மாணவர்கள் அன்று மட்டுமே வருவார்கள்.அப்போது என் வயது 5 இருக்கும். நான் மற்றவர்கள் போல என்னால் பள்ளிக்கு போக முடியல..என் அம்மாவிற்கு சில மயக்கம் வரும் அந்த சமயம் என் பாட்டி மற்றும் தாத்தாதான் வீட்டில் இருந்து பார்த்துக்கொள்வார்கள்..நான் பள்ளி போக பயந்து விளையாட போகிவிடுவேன்..என் அப்பா என்றால் எனக்கு பயம் ..காரணம் அவர் கண்டிப்பானவர்..கோபக்காரரும் கூட..
என் சிறுவயதில் ஒரு நாள் என் அம்மாவிற்கு உடம்புக்கு முடியல ..எனக்கு ஒன்றும் தெரியாத வயதும் கூட எப்ப பார்த்தாலும் விளையாட்டு ,ஆற்றில் குளிப்பதும் வழக்கம்..
அப்படி ஆற்றில் குளித்து அன்று சயங்காலம் வீடு திரும்பினேன் . அப்போது வயது 12. என் அப்பா மாட்டை அடிக்கும் சாட்டையே கையில் வைத்துக்கொண்டு எனக்காக் வரவேற்று இருந்தார்..
நான் ஏதாவது போய் சொல்லி சமாளிப்போம் என்று அன்று வீட்டில் நடக்க இருந்ததை அறியாமல்..
என் அப்பா “எங்க போன கழுதை “ என்று கேட்டார்..நான் “அது வந்து விளையாட போனேன்” என்று சொல்லி முடிப்பற்க்குள் ஒரு பளார் அடி..
”அப்பா நான் இனி விளையாட போக மாட்டேன்” என்று அழுதேன்..
அவர்” ஒரு பொம்புல புள்ளை விளையாட போன வீட்டுல யாரு வேலை செய்யுறது” என்று கத்தினார்...
..
இந்த பகுதில் வரும் பெயர்கள் உண்மையல்ல ..
பெயர் மாற்றப்பட்டுள்ளது..


Last edited by அச்சலா on Wed Nov 21, 2012 4:22 pm; edited 2 times in total


என் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by அச்சலா Wed Oct 31, 2012 11:41 pm

பாகம் -௨:
அப்பாவின் கண்டிப்பு என்னை ஒருகணம் என்னை சிந்திக்க வைக்கும்..காரணம் நாங்கள் ஏழை என்பதாலா..அப்படியென்றால் என்னை போன்று எத்தனை எழை குழந்தைகளை அரசாங்க பள்ளிகளில் படித்தனர்..நான் என்னை சமாதணம் செய்துக்கொண்டு பள்ளிக்கு செல்வேன்..
அந்த காலத்தில் சில கண்டிப்பான ஆசிரியரும்,சில நடத்தை க்குறைவாக நடத்தும் ஆசிரியரும் இருக்கதான் செய்தனர்,..
என்னை மிகவும் கவர்ந்தவர் சுலோச்சனா மேடம்தான்..
அவர் மிகவும் கண்டிப்பானவர் அதிலும் நேர்மையானவரும் கூட..
நான் பள்ளிக்கு கிழிந்த ஆடைகளை அணிந்து செல்வேன்..
அப்போது ஆறாவது அரசு உயர் நிலை பள்ளியில் படித்தேன்..
என் வீட்டில் நல்ல துணிமணிகள் கூட வாங்கி தர வசதி கிடையாது..
என் தந்தை செய்வது கொத்து வேலை..அதாவது கொத்தானார் என்று சொன்னேன் அல்லவா..
ஆமாம் ,அவர் சம்பாதியத்தில்தான் அன்றைய உலை பொங்கும்..
என் தாய் கூலி வேலைக்கு செல்வார்..
நான் பள்ளியில் சேர்ந்த விசியமே ஆச்சிரியம்தான்..
அதாவது என் ஐந்தாவது முடித்து என்னுடைய சர்டிவிக்கேட்(Certificates)எல்லாமே வீட்டில் உள்ள மாடு தின்று விட்டது..
நான் அழுது புலம்பிதான் பள்ளியில் சேர்ந்தேன்..
என் தாயும்,தந்தையும் என்ன செய்வது என்று திகைத்தனர்..
அப்போது எனக்கு உதவியவர் நான் குறிப்பிட்ட மேடம் தான்..
அவர்தான் நான் படிக்க பொருப்பு எடுத்து என் ரேசன் கார்டு கொண்டு என் பிறந்த தேதியே பள்ளியில் சேர்த்தனர்..
என் பெற்றோர் கல்வி அறியாதவர்கள் என்பதால் என்னை படிக்க வைக்க பல கஸ்டம் பட்டனர்..
அது கொஞ்சம் நெஞ்சம் அல்ல..
என் பள்ளியில் என் மேடம் என் மீது காட்டிய அந்த நிகழ்ச்சிகள் என்னால் எப்பவும் மறக்க முடியாது..
பள்ளியில் அவரது பாடம் கணிதம் மற்றும் ஆங்கிலம் .அதற்கு தனி வகுப்பு சனி ,ஞாயிறு போன்ற தினங்களில் தவறாமல் நடக்கும். அதற்கு தவறிய மாணவர்கள் இப்போது கஸ்டபடுகிறார்கள் என்று சொல்லாம்..
அவர் தனது சொந்த செலவில் எங்கள் அனைவருக்கும் ஸ்வீட் வாங்கி தருவார்..அவரது உங்கள் ஊக்கம் அனைவரையும் நிகிழ செய்யும்..
என் பள்ளி வாழ்க்கையில் இப்படியாக பத்தாவது பொது தேர்வை எழுதினேன்..
அதில் ஒரு பாடம் தேர்ச்சி அடையவில்லை..
ஆனால் மதிப்பெண் மற்ற பாடங்களில் 40 மேல் அறிவியலில் 29 மார்க் வாங்கி வீட்டில் சில நாள் சொல்லாமல் என் பாட்டி வீட்டிற்கு சென்றேன்..
என் அம்மாவும்,அப்பாவும் என்னை படிக்க வைக்க படும் காட்சிகள் இப்போது நினைத்தால் கண்ணீர் வரும்....
அப்போது விளையாட்டு புத்திதான் அதிகம்..
அதனால் நான் அறிவியலில் தவறினேன்...என் மார்க் லிஸ்டே பெறும்போது என் ஆசிரியர் (அறிவியல்)மற்றும் மேடம் சுலோச்சாவும் இருந்தனர்..
நான் பயத்தோடு வந்தேன்..எனக்கு அவர் செய்த அந்த பழைய ஞாபகம் வந்தது..
”சாரி மேடம் ” என்று சொன்னேன். அவர்கள் என்னை தட்டி கொடுத்து ”நீ பத்தாவது வரை படித்தே மிக பெரிய வெற்றி ”என்றார்..
பின்பு என்னை மறுபடியும் தேர்ச்சி விட்ட பாடத்தில் தனியார் நிலையத்தில் எழுத சொன்னார்.
அப்போது பயத்தில் சில எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது ..
தீராத ஜூரம் ,காய்ச்சல் என அடுக்காக வந்தது..
என்னால் கல்வியே தொடர முடியல..
எனக்கு படிப்பு வேண்டாம் என்று என் பெற்றோர் சொன்னர்..
என் பெற்றோர் என்னை விட படிப்பு முக்கியம் வேண்டாம் என்று சொல்லி என் உடல் நிலைதேர கடன் வாங்கி மருத்துவரை பார்த்தனர்..
அதனால் கடன் மிகுதியால் நான் பள்ளிக்கு போகாமல் என் அம்மாவுடன் வயல் வேலைக்கு சென்றேன்..
அப்படியே என் பள்ளி படிப்பு முற்றும் பெற்றது..
தொடரும்...


என் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by அச்சலா Wed Oct 31, 2012 11:44 pm

சம்பவம்-1


என் வாழ்வில் மறக்க முடியாத பல விசிங்கள்...
நான் அதை பகிர்ந்துக்கொள்ள ஆசையாக உள்ளது..
நான் சிங்கைக்கு வேலைக்கு செல்லும் முதல் நாள் அந்நாளை என்னால் மறக்க முடியாது..
காரணம் நான் வேலைக்கு சிங்கைக்கு அழைத்து சென்று வேலை கிடையாது என்று..
மறுநாளே அனுப்பிவிட்டார்கள்..(இந்தியாவிற்க்கு)
நான் என்ன செய்வேன்..
நான் கட்டிய பணம் எல்லாமே ஏஸெண்ட் எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டான்..
விபரமாக இப்போது தருகிறேன்,... அது மற்றவருக்கு எச்சரிக்கையாக இருக்கட்டுமே...

இதோ சில நிகழ்ச்சிகள்


பள்ளி படிப்பை பாத்தியில் விட்ட நான் பிழைப்பிற்காக வெளிநாடு செல்லும் ஆசையில் என் மாமாவிற்கு தெரிந்த இடைதரகரை நாடினேன்..அதனால் அவரிடம் என் முழு விபரம் அடங்கிய பாஸ்போட் மற்றும் இதர ஆவனங்குடன் தேடி சென்றோம்..
அப்போது ஏஸெண்ட் மூலம் சிங்கைக்கு பணிப்பெண்ணாக போகும் வாய்ப்பு கிடைத்தது..
பணத்தை என் அம்மாவின் தம்பி(என் முறை மாமன்)எங்கோ அலைந்து திரிந்து பணத்தை கட்டினார்..
என் வாழ்நாளில் நான் ஒரு தினமும் கூட முழு சோறு தின்றது கிடையாது..
அப்படிப்பட்ட நிலையில் இந்த வாய்ப்பு எனக்கும்,குறிப்பாக என் சகோதரிகளுக்கு ஒரு படிப்பு செலவும்,,அம்மாவின் மருத்துவ செலவையும் பார்க்க கடவுள் கொடுத்த வாய்ப்பாக கருதினேன்..
அந்த தினமும் வந்தது; அதாவது நான் சிங்கை செல்ல இடைதரகர் சொன்ன நாளும் வந்தது..
என்னை சென்னை ஏர்ப்போட்டில் என் மாமன் மற்றும் என் அப்பாவும் வழியனுப்ப என் எஸெண்ட் முழு பணத்தை பெற்றுக்கொண்டு என் டிக்கெட்டையும்,பாஸ்போர்ட்டையும் ஒரு சாரிடம் கொடுத்து வழியனுப்பினர்..
எனக்கோ பல கனவுகள் இருந்தன. என் பிடித்த அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று என் மனதில் பல நாள் துக்கம் விளகியதாக உணர்ந்தேன். அந்த சந்தோசம் நீண்ட நேரம் நிலைக்க வில்லை.. அன்று இரவு மணி 12.05 விமான நிலையத்தில் உள்ளே சென்றேன்..ஒரு கணம் என் அப்பாவிற்க்கு நீங்கா வணக்கம் செய்து டிக்கேட் வாங்கி என்னை போன்று சில பணிபெண்கள் சென்றிக்க கூடும்.. அவர்கள் பின்னால் சென்று விமானத்திற்க்குள் நிழைந்தேன்..
அப்போது என் வாழ்க்கையில் விமானத்தை பார்த்தது கூட கிடையாது.. ஆனால் நான் இருப்பது விமானத்திலா ஆச்சிரியமாக இருந்த்தது.. பயமும் தொற்றிக்கொண்டது..
சில படங்களில் விமானம் வெடிப்பதை பார்த்த ஞாபகம் வந்து சென்றத்து..
ஒருவழியாக மறுநாள் நான் சிங்கை சாங்கி விமான நிலையம் அடைந்தேன்....
என்ன நடக்கும் என்று பெருமூச்சுடன் அனைத்து செக்கிங் முடித்து வெளியில் ஒரு வண்டியில் சிலர் என்னையும் என்னை போன்ற இதர பணிபெண்களையும் அழைத்து சென்றனர்...
வண்டி ஒரு பெரிய கட்டிடம் கண்டேன்..அந்த பயணம் என்னுடன் வந்த அனைவருக்கும் புது என்று நினைக்கிறேன்..
அனைவரும் Maid Agenciesயில் அடுக்காக கொண்ட இடம் தான் அது..
அந்த இடம் புக்கி திமா என்று பெயர் .
அப்போது என்ன இடம் என்றே தெரியாது..
அங்கு பல நாட்டு பணிபெண்கள் இருந்தனர். அதில் பிளிப்பென்ஸ்(Philphens),இந்தோனோசியா,இந்தியா மற்றும் சீன பெண்களும் இருந்தனர்.
எனக்கு தமிழ் தவிர ஆங்கிலம் சில வார்த்தைதான் தெரியும்..
அதனால் என் மனத்தில் மொழிப்பிரச்சனையும்,யார் நம்மை அழைத்து செல்வார்கள் என்று கவலையும்,பயமும் வந்தது..
மறுநாள் காலையில் பல நாட்டு வீட்டு உரிமையாளர்கள் வந்தனர்..
அவர்கள் எங்களை ஒரு துணிகடையில் உள்ள பொம்மையே போல் கருதி என் ஜாதகத்தை அதாங்க என் முழு விபரம் ,மற்ற திறமைகளியும் பார்த்தனர்..
அதற்கு அரைநாள் பயிற்ச்சியும் அளித்தனர்..
அதில் கலந்துக்கொண்டும் பிறகு என்னை ஒரு இந்திய குடும்பம் அழைத்து சென்றனர்,,.
அவர்கள் கார் மூலம் வீட்டை அடைந்தேன்..
வீடு போட்டோம் பாசிரில் இருந்தது..
அடுத்தது...
தொடரும்...

குறிப்பு:

சிங்கைக்கு நான் வருவதும் ,போவதும் இது புதிதல்ல..
நான் இது என் வாழ்வில் நான்காவது தடவையாக சிங்கையில் அடி வைக்கிறேன்..
அதில் நான் முதல் வேலை மூன்று மாதம் தான் இருக்க முடிந்தது...
அது என் துரதஸ்டத்தை தான் குறிக்கிறது..
மூன்று மாதம் இருந்து எதோ ஒரு காரணம் என வந்து என் பர்மீட் காலாவதி ஆகிடும்..
அந்த காரணம் தொடரும்..


என் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by அச்சலா Wed Oct 31, 2012 11:45 pm

என்னை ஒரு இந்திய குடும்பம் பணிப்பெண்ணாக அழைத்து தன் வீட்டிற்கு உள்ளே நுழைந்தோம்..
அந்த வீடு மிக பெரிய ஐந்து ரூம் பிளாட் என்று நினைக்கிறேன்..
அதில் அவர்கள் தன் வேலை உண்டு .வீடுயுண்டு இருக்கவே மாட்டார்கள்..
இங்காவது சென்று வீடு திருப்புவது இரவு 12 கூட ஆகும்..
அதுவரை நான் சிலநாட்கள் காத்திருந்தேன்..அவர்கள் என்னை ஒரு வேலைகாரி அதிகம் உரிமைகிடையாது என்று ஏழனமாக நடத்தினர்..
எனக்கு ஒரு ஐந்து நிபந்தனைகள் போட்டனர்..
அதில் வீட்டை விட்டு எந்தகாரணம் கொண்டு வெளியில் போக கூடாது..
தங்க ஒரு மூளையில் சிறிய இடம் ...எனக்கும் அது போதும் என்றே தோன்றியது...
வேலை எந்த வேலையும் முடித்துதான் தூங்க வேண்டும்..
காலையில் ஆறு மணிக்கு சமைக்கனும்,ஒரு வயது கைகுழந்தையும்,ஒரு வயதான தாத்தாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும்..
செலவு எதனை செய்ய கூடாது...உணவுகள் செய்ய பட்டியல் முன்னதாகவே கொடுக்க வேண்டும் என்று நீண்டுக் கொண்டே...
நான் அப்போது ஒரு வாரம் எந்த வித பிரச்சனையின்றி சென்றது..
வீட்டின் முதியவர் ஒரு நாள் காணாம போகவே எனக்கு பயமும் ,பதற்றமும் அதிகரித்து என்ன செய்வது என்று கைகுழந்தையோடு வீட்டில் இருந்தேன்..
அவர்கள் போன் மேல் போன் நான் எங்கு கண்டு தேடுவது,..
நான் எப்படி முதியவரை தேடுவேன்.. அன்று இரவு முதியவர் வீடுத்திரும்பினார்..
அப்போதுதான் எனக்கு மூச்சே வந்தது..அதுவரை என் வேலை போயிடுமே என்று அழுது புலம்பினேன்..
கடவுள் என் பக்கம் இருந்தார் போல..
அவர்கள் வந்தவுடன் முதயவரை கேட்டதற்கு லாட்ரி(TOTO) சீட் வாங்க சென்றதாக சொன்னார்..
வீட்டில் என்னையே குறைகூறினார்கள்..ஏன் அவரை பார்த்துக்கொள்ளவில்லையென்று..
நான் சொல்வதை கேட்டவேயில்லை யாருமே..
உடனே என் ஏஸென்சிக்கு போன் அடித்து உடனடியாக மாற்ற சொன்னார்கள்..
அந்த வீட்டின் அப்பா என்னை இப்படி இனி நடக்க கூடாது என்று எனக்கு சாதகமாக சொன்னார்..நானும் தலையாட்டினேன்..
அதற்கு அப்பரம் இரண்டு மாதம் சென்றது..மூன்றாவது மாத துவக்கத்திலே மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்தது.
அந்த வீட்டில் பணம் காணாம போயிருந்தால் எல்லாரும் வீட்டில் கூட்டும் போது நான் எடுத்திருப்பேன் என்று அனைவரும் ஒருவர்மேல் ஒருவராக குற்றம் சாட்டினர்..
நான் என் விதியெ நினைத்து நொந்து அழுதேன்..
எடுக்கவேயில்லை என்று சத்தியம் செய்யும் அளவிற்க்கு போயிவிட்டேன்..
உடனே அந்த மாதயிறுதில் என் வேலையே முடிக்கும் முடிவே என்னை கேட்காமாலே ஏஸெண்டும்,உரிமையாளரும் அழைத்து என்னை ஏஜெண்ட் ஆபிஸில் விட்டு நாளை பயணம் நீ ரெடியாக விமான நிலையம் செல்ல வேண்டும் கூறி அனுப்பினர்..
அதோடு என் முதல் வேலை ஒரு முடிவிற்க்கு வந்தது..
நான் என்ன குற்றம் செய்தவளா..
அடுத்த தினம் ஊரை அடைந்தேன்..
அதற்கு பிறகு ......
தொடரும்.................


என் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by அச்சலா Wed Nov 14, 2012 11:22 pm

மீண்டும் எழுத நினைக்கிறேன்..
உங்கள் கருத்து என்ன...


என் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by T.N.Balasubramanian Thu Nov 15, 2012 8:10 am

நெஞ்சு பொறுக்குதில்லையே.! அதிர்ச்சி

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by ஜலஜா சிவகுமார் Thu Nov 15, 2012 1:47 pm

தங்கள் வாழ்கையை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள எவரும் யோசிப்பார் . ஆனால் நீங்கள் தைரியமாக செய்கிறீர்கள். இதுவே நீங்கள் ஒரு தைரியமான பெண் என்பதை தெரியபடுத்துகின்றது . கஷ்டங்களை இஷ்டங்களாக ஏற்று வாழ்கிறீர்கள். உங்களுக்கு இனி நஷ்டங்கள் வராமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன் . தொடருங்கள் காத்திருக்கிறோம்
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by அச்சலா Sun Nov 18, 2012 10:05 am

வாழ்க்கையின் குறிப்பை மற்றவர்கள் பார்க்க திறப்பது பாராபக்தி...


என் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by அசுரன் Sun Nov 18, 2012 10:36 am

வாழ்வில் பல சோதனைகளை கடந்து வந்த தங்களுக்கு இனி எந்த சிக்கலும் இருக்காது.... மீதியை எப்போது தொடருவீர்கள் அக்கா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by அச்சலா Sun Nov 18, 2012 10:39 am

வெல்வது நிஜம்; தொடர்வது உறுதி; மற்றவருக்கு அனுவப பாடம்..


என் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xzஎன் வாழ்க்கை ஒரு பார்வை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என் வாழ்க்கை ஒரு பார்வை!! Empty Re: என் வாழ்க்கை ஒரு பார்வை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum