புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
3 Posts - 3%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
401 Posts - 48%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
28 Posts - 3%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 10 of 36 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 1:12 pm

கலைமகள் காப்பு அருமை. கலைமகள் கடாச்சம் இன்றி யாராலும் முன்னுக்கு வரமுடியாது

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Oct 22, 2013 4:18 pm

ஒண்டுக் குடித்தனம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒண்டுக் குடித்தனம் ஒன்றும் குடித்தனம்
நண்டு வளையென பண்டுக் குடித்தனம்!
நடுவில் கிணறும் மாடத் துளசியும்
படுக்க நீண்ட தாழ்வா ரத்துடன்
வீட்டு விலக்கில் தீட்டில் அமர
ஓட்டுத் தாழ்வார மூலையில் இரண்டறை! ... 1

சமையற் கலையும் வாழ்க்கைக் கலையும்
அமைந்தே ஆளும் அறைகள் இரண்டில்!
அன்னை தந்தை தாத்தா பாட்டியும்
சின்னஞ் சிறிய பெரிய குழந்தையர்
செட்டாய் அமைந்து சிறப்பாய் வாழ
எட்டுக் குடும்பம் ஏறிய அரணாம்! ... 2

விடியும் முன்னரே இல்லத் தரசியர்
குடிநீர் பிடித்துக் கிணற்றடி குளித்துத்
துளசியைச் சுற்றி சுவாமி மாட
விளக்கினை யேற்றி வீட்டு வாசலில்
கோலம் போட்டுக் குமுட்டி யடுப்பில்
பாலைக் காய்ச்சப் பலபல விடியலே! ... 3

சமையல் அடுப்பைப் பற்ற வைத்தே
தமரின் அறுசுவை நலன்கள் பேண
அமிர்தம் போலும் சமையல் செய்து
அமர்தல் இல்லா அகத்துக் கடமை
ஆற்றும் இல்லத் தரசியர் அன்பில்
தேற்றம் பெற்றுச் செறிந்த குடும்பமே! ... 4

காலை விடிந்ததும் கடிதின் குளித்து
சாலை யோரம் பசும்பால் வாங்கி
வாழ்வின் அறங்கள் சற்றே ஆற்ற
தாழ்வா ரத்தில் சந்தியைச் செய்து
சூடாய்க் காப்பி குடித்துப் பின்னர்
ஓடாய் உழைக்க ஓடும் தந்தையர்! ... 5

குடும்பம் எங்கணும் பொண்ணும் ஆணும்
வடுவாய் வதுவாய் வலம்வரும் மக்கள்
உலையில் சோறு கொதிக்கும் பொழுதில்
தலையைப் பின்னி ஆடைகள் தேர்ந்து
சின்னஞ் சிறுசுகள் பள்ளிக் கனுப்பிப்
பின்னர் மற்றோர் பேணும் அன்னையர்! ... 6

மூத்தோர் ’காலேஜ்’ பொழுதில் செல்ல
சோத்து மூட்டை கட்டிக் கொடுத்து
ஆத்துக் காரர் ’ஆஃபீஸ்’ செல்லக்
காத்து நிற்க அவரையும் அனுப்பி
இடையில் கணவரின் பெற்றோர் பேணி
இடைசலித் தேங்கும் இல்லறக் காப்பாள்! ... 7

படித்தும் வேலை யமையாப் பொழுதை
தடித்தன மாகத் தள்ளும் யுவர்கள்
நண்பர் குழாத்துடன் அரட்டை யடித்து
பண்பும் பொறுப்பும் பக்கம் ஏக
தெருக்கள் சுற்றிச் சினிமா பார்த்துச்
செருக்கை வளர்க்கும் சில்லறை வாழ்க்கை! ... 8

பூஜை ஜபமும் பூர்த்தி யானதும்
ராஜாங் கம்வரும் மாமியார் கையில்!
துணிகள் பாத்திரம் தோய்த்துத் தேய்த்து
மணியா கிடவே மாற்றுப் பெற்றோர்
உண்டி படைத்தபின் எஞ்சிய துண்டு
நண்டு மெதுவாய் வளையின் வெளிவரும்! ... 9

அதன்பின் காலம் சற்றே உறைய
விதவித மாகப் பேசும் மாமிகள்
தோழிய ராகிச் சூழ்ந்தே அமர
சோழி யாடுதல் போலக் களித்து
குடும்பச் சுவைகள் சுமைகள் அலச
உடும்புப் பிடிகள் ஓய்ந்திடும் நேரமே! ... 10

சற்றே தலையைச் சாய்ப்ப தற்குள்
உற்ற நேரமும் குறைந்தே வாசலில்
நறுக்கெனக் குழந்தைகள் குரல்கள் ஒலிக்க
நொறுக்குத் தீனியைக் கொறிக்கத் தந்து
அவைவிளை யாட அனுப்பு வதற்குள்
இவளது மாற்றுப் பெற்றோர் எழுவரே! ... 11

ஆடியும் ஓடியும் பாடியும் சாடியும்
கூடியும் தேடியும் சுற்றியும் பற்றியும்
பாண்டியும் நொண்டியும் பச்சைக் குதிரை
தாண்டியும் தட்டா மாலை யென்றே
பலவிளை யாட்டில் களிக்கும் குழந்தையர்
கலகலப் பின்னவர் தாத்தா பாட்டி! ... 12

சாயங் காலம் ஆனதும் சிறுவர்
ஓயப் பெரியோர் கோவில் செல்ல
காய்கறி பழங்கள் வாங்கத் தெருவில்
தேய்ந்த செருப்பில் விரையும் அகமுடை!
மளிகை சாமான் மாதக் கடனில்
தளிகை தினமும் நடக்கும் வீட்டில்! ... 13

குழந்தையர் படிக்கும் குரலொலி விரவ
வழக்கம் போலச் சமையற் கட்டில்
அகமுடை யாளும் தஞ்சம் புகவே
தகப்பன் திரும்ப வந்திடும் பொழுதே!
வந்த தகப்பனும் அவசர மாகச்
சந்தி முடித்துச் சற்றே ஓய்வான்! ... 14

பட்டப் படிப்புடன் அலுவலில் உதவத்
தட்டவும் குறுக்கவும் பயில்வரும் எழுத்துகள்
ஆணும் பெண்ணும் காலை மாலை
காணும் பயிலகம் யாவும் சேர்ந்து
வேலை நேர்முகத் தேர்வில் நாளை
ஏலம் எடுபட வேண்டுவர் இறையை. ... 15

ஒன்றே அறையொளிர் குண்டு பல்பது!
இன்று போற்பல விளக்குகள் ஏது?
குழந்தைகள் அதன்கீழ் ஒன்றாய்ப் படிக்க
கிழமை மூதோர் வெளிவா ரத்தில்
காலை நீட்டி மாலை யுருட்டி
வேலை வேண்டுவர் வினைகள் போகவே! ... 16

ஏழை யந்தணர் ஏந்திய அறங்கள்
வாழை யெனவே தழைத்த வளைகள்
காலப் போக்கில் ஏலம் போக
வேலையும் கல்வியும் விளைத்த சூழலில்
அந்தணர் சந்ததி யறங்கள் கைவிட
சந்திகள் தொடர வந்தனம் ஓய்ந்ததே! ... 17

--ரமணி, 21/10/2013, கலி.04/07/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Oct 25, 2013 11:25 am

விற்பனைக் குயில்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

கீரைக்காரி
’அரக்கிரே முளக்கிரே அவுத்திக்கிரே சிறுகிரே!’
குரலில் கூர்த்தே குயில்போல் குழைந்தே
தெருவில் கூவும் கீரைக் காரி!
விரைவில் கட்டுகள் விற்றுப் போகுமே!
காய்ந்த செருப்பொலி தலைச்சும் மாடு
ஆய்ந்த கீரையிற் களையிருக் காதே!

மாநிற மேனி காதினிற் பாம்படம்
காநிறைக் குளிர்வரப் பார்வை அலையும்
சாயம் போன கைத்தறிச் சேலை
வாயில் வெற்றிலைக் காவிப் புன்னகை
தாயு மானவர் ஆலயச் சித்திரம்!
காயும் கனியும் காட்டிய ஔவை!

--ரமணி

*****
(தொடரும்)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 25, 2013 4:51 pm

சிறப்பான கவிதை ..... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Oct 25, 2013 9:09 pm

விற்பனைக் குயில்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அம்மித் தச்சன்

’அம்மிகொத் தலையோ ஆட்டுக்கல் கொத்தலையோ!’
அம்மையர் அம்மியில் ஆட்டுக் கல்லினில்
விழுதாய் அரைத்துத் திரட்டித் தினமும்
கொழித்த சுவைமிகு உணவுகள் செய்ததில்
குழிகள் கல்லினிற் தேய்ந்தே மறைய
குழவி வழுக்கிப் பொருள்மசி யாதே.

எனும்போது

தோளில் சிற்றுளி சுத்தியல் தொங்கும்
ஆளைப் பார்த்தால் ஆதி சிவனே!
மடித்துக் கட்டிய கைலியில் கால்கள்
நடக்கும் மெதுவே கண்கள் அலைய
புருவம் அடர்ந்த முகத்தில் மீசை
இரண்டொரு இல்லம் எதிர்நோக் கிடுமே.


--ரமணி

*****
(தொடரும்)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 25, 2013 9:47 pm

அனைத்தும் அருமை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Oct 26, 2013 4:06 am

பாத்திரத் தச்சர்

’பாத்ரங்க பேர்வெட் டலையோ!’ என்றொரு
பாத்திரம் அன்றைய நாட்களில் உலவிடும்!
பித்தளை வெங்கலம் ’என்றும் வெள்ளி’யும்
எத்தனை யோவகைச் சீர்தருங் காலை
விரல்வழி மென்னுளி இயக்கும் சுத்தியில்
உருவரும் பெயர்கள் புள்ளியி லமைந்தே.

மென்னுளி புள்ளிப் பெயர்கள் பின்னர்
மின்னுளி தீற்றுக் கிறுக்கலாய் மாற
பாத்திரப் பெயர்கள் கடையினில் இன்று
சீத்தலைக் கலையாய்ச் சீரழிந் தனவே
பழந்துணி மாற்றுப் பாத்திரம் மட்டும்
வழிவரும் மரபுத் தச்சருக் கெனவே.


--ரமணி

*****
(தொடரும்)

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Oct 26, 2013 7:02 am

மாநிற மேனி காதினிற் பாம்படம்
காநிறைக் குளிர்வரப் பார்வை அலையும்
சாயம் போன கைத்தறிச் சேலை
வாயில் வெற்றிலைக் காவிப் புன்னகை
தாயு மானவர் ஆலயச் சித்திரம்!
காயும் கனியும் காட்டிய ஔவை!
நல்ல சித்திரிப்பு... பாராட்டுகள்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 26, 2013 1:27 pm

அம்மிகொத் தலையோ ஆட்டுக்கல் கொத்தலையோ!’ அம்மையர் அம்மியில் ஆட்டுக் கல்லினில் விழுதாய் அரைத்துத் திரட்டித் தினமும் கொழித்த சுவைமிகு உணவுகள் செய்ததில் குழிகள் கல்லினிற் தேய்ந்தே மறைய குழவி வழுக்கிப் பொருள்மசி யாதே. wrote:
உண்மைதான் .....ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Oct 27, 2013 10:41 am

அடுப்புக்கரி விற்பவர்

’அம்மணி யிருக்காங் களாஆ?’ காதுறும்
வெம்மைக் குரலில் வெகுண்ட கணவர்
உருவெதிர் நிற்பதை யுற்று நோக்கக்
கரிவிற் பவராம் கதிர்வேல் கண்பட
தனக்குள் எழுந்த நகைப்பை யடக்கி
மனையை விளித்தே நாளிதழ் ஆழ்ந்தார்.

கதிரையும் வேலையும் கரித்தூள் மறைக்க
முதுகில் ஏறிய மூட்டையை யெறிந்து
கரிப்புகை சூழத் தரையில் அமரவும்
உரிய நேரத்தில் உற்றதன் விலையுடன்
இல்லாள் நிறைய நீர்மோர் தந்தே
செல்லாள் செல்லப் பெருக்கினாள் தரையை!


--ரமணி

*****
(தொடரும்)


Sponsored content

PostSponsored content



Page 10 of 36 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக