ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்

+28
வேல்முருகன்
T.N.Balasubramanian
M.Saranya
Dr.S.Soundarapandian
Ponmudi Manohar
bparthasarathi
கிருஷ்ணா
ந.க.துறைவன்
myimamdeen
சின்னக் கண்ணன்
KINGUMAR
சிவா
ayyasamy ram
அப்துல்
முனைவர் ம.ரமேஷ்
M.M.SENTHIL
பாலாஜி
mbalasaravanan
ராஜு சரவணன்
அசுரன்
Ahanya
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
றினா
அச்சலா
சதாசிவம்
ஜாஹீதாபானு
ரமணி
32 posters

Page 5 of 36 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 20 ... 36  Next

Go down

ரமணியின் கவிதைகள் - Page 5 Empty ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


ரமணியின் கவிதைகள் - Page 5 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Tue Feb 12, 2013 1:09 pm

24. உத்திக் கவிதைகள்

1. வினை-பெயர் அடுத்து இருபொருள் படவரும் எண்ணும்மைகள்
(இருவிகற்ப அறுசீர் விருத்தம்)

முள்ளும் மலரும் மலரும் காயும் காயும் கனியுமே
பள்ளும் பறையும் பறையும் ஒலியும் ஒலியும் ஒளியுமே
காகமும் கரையும் கரையும் உடையும் உடையும் கிழியுமே
தாகமும் குறையும் குறையும் மறையும் மறையும் நிறையுமே.

கல்லும் கரையும் கரையும் அணையும் அணையும் உடையுமே
சொல்லும் விளக்கும் விளக்கும் இருளும் இருளும் மருளுமே
காற்றும் அலையும் அலையும் சுழலும் சுழலும் கழலுமே
நாற்றும் தழையும் தழையும் ஆடும் ஆடும் மேயுமே.

[ஒலிதல்=தழைத்தல்; கிழி=பரிசு; மறை=வேதம்]

இதுபோல் அமைத்தெழுத வேறென்ன எண்ணும்மைகள் பயன்படும்?

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 5 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Sun Mar 24, 2013 8:03 pm

25. சிலேடை வெண்பாக்கள்

01. குரங்கு மனமா மனக் குரங்கா?

(இன்னிசை வெண்பா)
ஓடிடும் ஆடிடும் ஊரெலாம் தேடிடும்
நாடியது கைப்படின் நாராய்க் கிழிக்கும்
வனம்வாழ் குரங்குமனம் மானிடமோ அன்றி
மனிதன் மனமோ குரங்கு?

02. ஆவினமும் பாவினமும்

(இன்னிசை வெண்பா)
அசைபோடச் சீராகும். கட்டித் தளைக்க
இசையும். அடிவைத்து மேயும். தொடையிற்
பொசிந்து செழித்திடும் வெண்பாற் றருவதால்
ஆவினமே பாவினமாய்ப் பாடு.

--ரமணி, 05/03/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 5 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Sun Apr 14, 2013 9:36 am

26. விஜய வருஷ சங்கல்பம்
(குறளடி வஞ்சிப்பா)

விஷுபுண்ணிய தினப்பிறப்பில்
விஷாலாக்ஷியின் அருட்பார்வையில்
விஜயவருஷம் பிறந்தெழுந்தது
விஷ்வரூபமாய் வளர்ந்தாளவே
தீவினையெலாம் தீப்பட்டு
நல்வினைகள் எழுந்தோங்கி
வல்லமைகள் பலசேர்ந்து
நலங்கள்பல விளைந்திடவே
பலவகைகளில் வணங்கிடுவோம்
இவ்வாண்டில்
ஊமைகள் பேசி உண்மைகள் வெளிவர
ஆமைகள் முயலாகி ஆற்றல் காட்டிடத்
தீமைகள் விலகி நன்மைகள் பெருகவே
பாமரர் பண்டிதர் யாவரும் நலம்பெறத்
தாமத மின்றிப் பூமகள் அருள்பெற
நாமெலாம் உழைப்போம் நம்பிக்கை யுடனே.

--ரமணி, 01/01/5114 | 14/04/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 5 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Thu Apr 18, 2013 10:13 am

ஹாஸ்யக் குறட்பாக்கள்: மணவாழ்வு அன்று

மதுரை சிதம்பரம் வீட்டிலே ஒன்ற
விதவித மாகுமே வாழ்வு. ... 11

மதுரை சிதம்பரம் ஒன்றாக ஆகிவிட்டால்
மாமியார் என்னா வது? ... 12

மாமியார் மெச்சிய மாட்டுப்பெண் உண்டோசொல்?
சாமியாலும் ஆகாத வொன்று. ... 13

கணவனவன் அம்மாக்கோண்(டு) ஆகிவிட்டால் அந்தோ
மனைவியின் வாழ்க்கை நரகு. ... 14

மாமனார் வாயில்லாப் பூச்சியாகி விட்டாலோ
மாமியார் ராச்சியம் தான். ... 15

பணமும் நகையும் படைத்தாயின் வாழ்க்கை
மணமகள் கைவசம் தான். ... 16

பற்றிடும் கொம்பு புளியமரக் கொம்பாயின்
வற்றாத செல்வத்தில் வாழ்வு. ... 17

கொண்டாட்டம் சம்பளம் வந்து ஒருவாரம்
திண்டாட்டம் மீதிவாரம் மூன்று. ... 18

கடனேதும் கிட்டாது போனால் உடனே
அடகுக்கு இல்லாள் நகை. ... 19

பட்டுப் புடவைக்கே வக்கில்லை வாழ்க்கையில்
கிட்டுவ தெங்கே நகை? ... 20

--ரமணி, 18/04/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 5 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Thu Apr 18, 2013 9:01 pm

வங்கிக் குறட்பாக்கள்

வாடிக்கை யாளர்கள் வேடிக்கை வஸ்துவல்ல
பாடியாடப் பால்தரும் மாடு. ... 21

சங்கநிதி வேண்டாம் பதுமநிதி தேவையில்லை
வங்கியின் வைப்பே நிதி. ... 22

பற்றுக பற்றுள்ளார் பற்றினை அப்பற்றைப்
பற்றாது விட்டாலோ பாடு. ... 23

வங்கிக் கடன்தொகை வாராது போனாலோ
மங்குமே வங்கிப் புகழ். ... 24

உள்ளத்தில் மென்மை உதவாது தோழனே
கள்ளநோட் டாயிது காண். ... 25

அங்கொரு கண்ணுடன் இங்கொரு கண்ணுமே
வங்கியில் வேண்டுமே காண். ... 26

அகச்சுற்றுக் கேமரா ஆகாது மாற்று
புறச்சுற்றுக் காவலே மேல். ... 27

கணிணிமயம் ஆகியும் தாமத மாகிப்
பணியெல்லாம் ஊர்வது ஏன்? ... 28

கிளையில் அலுவலர் ஓர்குடும்பம் ஆயின்
விளையும் பயன்கள் பல. ... 29

தலைமையைப் போற்றித் தலைமையும் போற்ற
நிலைமையில் கேடு வராது. ... 30

--ரமணி, 18/04/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 5 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Wed Jun 05, 2013 7:14 am

27. உருத்திரன் மகிமை
(அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா)


தரவு (எட்டடி)
உருத்திரரே உம்முடைய சினத்திற்கென் தலைதாழும்
உருத்திரரே உம்முடைய வில்லிற்கென் தலைதாழும்
கயிலைமலை உறைபவரே காப்பாற்றும் எம்குலத்தை
கயவர்கள் மீதெறியும் சரங்களைநீர் சாந்தமாக்கும்.
அனைத்துலகிற் கதிபதியே அமரர்கள் இறையம்சமே
வினைகளெனும் பிணிதீர்க்கும் வைத்தியரே பக்தர்களின்
குற்றங்கள் பொறுத்தருளி குணங்களைக்கொண் டாடும்நீர்
மற்றெல்லா வகைகளிலும் மலமறுத்து முக்திதாரும்.

தாழிசை
கருநீலக் கழுத்துடையார் கதிரவனாய் வெளிக்கிளம்பி
இருள்நீக்கி மருள்நீக்கி இனியவைகள் அருளட்டும்
சடைதரித்த ஒப்பற்ற சிவனாரின் அருளமுதில்
அடியார்கள் உளமகிழ்ந்து அருள்வோனைப் போற்றட்டும். ... 1

வணங்குகிறேன் பகவானை வியனுலக நாயகனை
குணக்குன்றாம் மகாதேவன் கண்முன்று உடையோனை
முப்புரங்கள் எரித்தவனை முத்தழல்கள் மறைத்தவனை
எப்பொழுதும் சிவமாகி எமனையே ஜெயித்தவனை. ... 2

பச்சிலைகள் கூந்தலாகப் பசுமரங்கள் வடிவமாக
இச்சககத்தில் பிராணிகளை இரட்சிக்கும் பெருமானே
உணவுகளின் அதிபதியே உலுத்தர்களை வதைப்பவனே
வணங்குகிறேன் உமதுருவை வரமளித்தே அருள்புரிவீர். ... 3

அம்போதரங்கம்
(நாற்சீரீரடி: பேரெண்: 2)


காண்பதெல்லாம் உமதுகண்ணாய்க் கண்ணாயிரம் படைத்தவரே
வேண்டுவதை அளித்தருளும் வித்தகனே வணங்குகிறேன். ... 1

புடைசூழும் சேனைகளைப் படைத்திருந்தும் முன்னின்று
அடியார்கள் நலங்காக்கும் விடையோனை வணங்குகிறேன். ... 2

(நாற்சீரோரடி: அளவெண்: 4)
சம்சார விருட்சத்தைச் சேதிக்கும் ஆயுதமே ... 1
அம்புகளால் பகைவர்கள் அவதியுறச் செய்பவரே ... 2
மங்கலத்தின் உறைவிடமே மரஞ்செடிகள் அதிபதியே ... 3
எங்களைநீர் இரட்சித்து ஏற்றமுறச் செயவேண்டும். ... 4

(முச்சீர் ஓரடி: இடையெண்: 8)
அமைச்சனும் வணிகனும் நீ ... 1
அழவைத்துக் காப்பவன் நீ ... 2
கள்வர்கள் தலைவனும் நீ ... 3
கொள்ளைகள் அடிப்பவன் நீ ... 4
உறங்குவோன் விழித்திருப்போன் நீ ... 5
உறைபவன் ஓடுபவன் நீ ... 6
அவையோரும் அவைத்தலையும் நீ ... 7
உமைதுர்க்கை உருவமும் நீ. ... 8

(இருசீர் ஓரடி: சிற்றெண்: 16)
வலியோன் நீ, மெலியோன் நீ, ... 1-2
குயவன் நீ, தச்சன் நீ, ... 3-4
கருமான் நீ, வேடன் நீ, ... 5-6
சிறியோன் நீ, பெரியோன் நீ, ... 7-8
மலைகள் நீ, அலைகள் நீ, ... 9-10
ஒலியும் நீ, எதிரொலியும் நீ, ... 11-12
நாதன் நீ, தூதன் நீ ... 13-14
வஸ்துகள் நீ, வாஸ்துவும் நீ, ... 15-16

தனிச்சொல்
என்வாங்கு

சுரிதகம் (நேரிசை ஆசிரியம்)
எல்லாம் நீயென எழுந்து நின்று
பல்லா யிரமுயிர் படைத்து அழிக்கும்
உருத்திர கணங்களின் உள்ளுறை நாயக!
விருத்திகள் யாவும் வேண்டுவ தளித்து
இம்மையும் மறுமையும் சிறக்க
உம்மையே நாடுவோம் அம்மை யப்பரே!

--ரமணி, 05/06/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 5 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Wed Jun 26, 2013 5:59 pm

29. செய்திக் கவிதைகள்:
இந்தியத் தந்தி சேவைக்கு இறுதி நாள் 15 Jul 2013


[160 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி’ சேவைக்கு மூடு விழா: தினமணி 13 Jun 2013]

(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
கட்டுக் கடகட வென்று கடிதிலே
விட்டொலித்துச் சென்றுசேர்ந்து வீடுகளில் சேதிசொன்ன
தந்தியின் சேவைக்(கு) அடுத்தமாத மத்தியில்
அந்திமக் காலமென இந்திய அஞ்சலகம்
நூற்றைம் பதுவருடம் ஆற்றிய சேவையின்
ஊற்றை அடைத்திடச் செய்தது தீர்மானம்.
கம்பியில்லாத் தந்திச் செயல்பா(டு) உயர்வதில்
கம்பிசெலும் தந்திகளின் அஞ்சல் அறுவது
என்றேனும் நேரத்தான் வேண்டுவ(து) என்றாலும்
அன்போ(டு) அளிப்போம் விடை.

--ரமணி, 26/06/2013

தந்தியின் குரல்கேட்க இங்கே சொடுக்கவும்:
http://www.pond5.com/sound-effects/1/telegram.html

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 5 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Sat Jul 06, 2013 9:25 am

30. பயணக் கவிதைகள்

பேரூர் பட்டீஸ்வரக் கோவிலில் அரிய காட்சிகள்
(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)

1. அன்னாசி காலடியில் ஆர்த்திருக்கப் பேரூரில்
சன்னமாகத் தன்துதிக்கை யால்துழாவி - சின்னதான
வன்னப் பசுஞ்சிகை வெட்டியே உண்டிடும்
கன்னப் பொறியின் களிறு.


[ஆர்த்தல்=நிறைதல்; வன்னம்=நிறம்; பசுஞ்சிகை=பசுமை இலைக் கொண்டை; கன்னப்பொறி=கோவில்]

2. கூரையிலே ஆவுடையார்க் கூத்தனாக நின்றுநம்மைத்
தேரைபோல் பார்ப்பான் திசையெங்கும் - ஆரகனாய்க்
காரைகள் நீக்கிக் கனலினை மேடுறுத்தும்
பேரூர்ப் பரமேச் வரன்.


[ஆரகன்=அழிப்போன், கள்வன், கபடன்]

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 5 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Tue Jul 09, 2013 9:13 am

மாலைக் காட்சிகள்: ஹைக்கூ பாணியில் வெண்பா

வெண்கதிர் செங்கதிராய் வீழும். மிகநீளும்.
கண்வழியும். காதொலிக்கும் பண்ணோசை. - விண்ணகரம்.
தண்ணெனத் தென்காற்று. விண்வெளியில் வண்ணங்கள்.
மண்ணில் மனிதனின் மாசு.

மஞ்சுகள் சித்திர வண்ணங்கள். மௌனநிழல்
சஞ்சரிக்கும். குன்றிழியும் செஞ்சோதி. - துஞ்சிடும்.
குஞ்சரம் காணும் குழந்தைகள். கோவில்முன்
குஞ்சுகள் பின்னே குருகு.

--ரமணி, 09/07/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 5 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Mon Jul 15, 2013 10:02 am

உத்திப் பாக்கள்: ஒருவிகற்ப நேரிசை வெண்பா
ஒரு சொல் திரிபுறாமல் திரும்புதல்


சொல்லொன்று கேட்டொருவர் சீர்மிக்க வாழ்வடைந்தார்
சொல்லொன்று கேட்டொருவர் செத்துவீழ்ந்தார் -- சொல்லிய
சொல்லொன்று கேட்டொருவர் முக்தியும் பெற்றதுண்டு
சொல்லொன்று சொல்லவேண்டும் அன்பு.

ஒருநாள் மகிழ்ச்சி ஒருநாள் துயரம்
ஒருநாள் இழவென ஓடும் - திருநாள்
ஒருநாள் வெருவு ஒருநாள் துணிபு
ஒருநாள் எனவுயிர் வாழ்வு.

ஒருநாள் சிரிப்பு ஒருநாள் சிலிர்ப்பு
ஒருநாள் சினமுடன் ஓய்வாள் - திருநாள்
ஒருநாள் வசவு ஒருநாள் நெருக்கம்
ஒருநாள் எனமனையாள் வாழ்வு.

*****

ஒரு சொல் திரிபுடன் திரும்புதல்

அஞ்சிட வேண்டுவதை அஞ்சும் மனமுடன்
அஞ்சு புலன்களும் அஞ்சிநின்று - அஞ்செழுத்தை
அஞ்சாமல் துஞ்சாமல் நெஞ்சி லிருத்தினால்
அஞ்சுடன் ஆறும் மனம்.

கண்ணுறும் துன்பங்கள் கண்ணோட்டம் ஆற்றிடக்
கண்போல் பிறர்நலன் காண்போரை(க்) - கண்ணிமைபோல்
கண்ணுதல் ஈசனே கண்ணருளிக் காத்திடக்
கண்கூடாய் நீங்குமேகண் கட்டு.

கண்ணுதல் ஈசனை நண்ணுதல் நன்மைதரும்
எண்ணுதல் பூசனை திண்மைதரும் - உண்ணுதல்
பண்ணுதல் அண்ணுதல் பற்பலவும் கைவந்தால்
ஒண்ணுதல் தேவிநம் மோடு.

நம் சென்னை பாஷையில் இன்னொன்று:

இன்னா விளைத்தார்க்கு இன்னா விளைந்தாலும்
இன்மையில் செய்திடும் இன்னாவே - தன்மையென்றேன்.
இன்னாநான் செய்யணும்? இன்னாநீ சொல்றது?
இன்னாதான் மண்டையோஎன் றான்!

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 5 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 36 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 20 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum