Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
+28
வேல்முருகன்
T.N.Balasubramanian
M.Saranya
Dr.S.Soundarapandian
Ponmudi Manohar
bparthasarathi
கிருஷ்ணா
ந.க.துறைவன்
myimamdeen
சின்னக் கண்ணன்
KINGUMAR
சிவா
ayyasamy ram
அப்துல்
முனைவர் ம.ரமேஷ்
M.M.SENTHIL
பாலாஜி
mbalasaravanan
ராஜு சரவணன்
அசுரன்
Ahanya
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
றினா
அச்சலா
சதாசிவம்
ஜாஹீதாபானு
ரமணி
32 posters
Page 23 of 36
Page 23 of 36 • 1 ... 13 ... 22, 23, 24 ... 29 ... 36
ரமணியின் கவிதைகள்
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 19 - 03/07/2014, கலி.19/03/5115
செய்தி:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் ரதம்.
http://natarajadeekshidhar.blogspot.in/2010/06/blog-post.html
தேரோடக் காரோடும்!
(குறும்பா)
ஆனித்திரு மஞ்சனத்தின் ஒன்பதாம்நாள்
மேனிநீறன் தேர்வலத்தில் மன்பதையாய்த்
. தில்லையதே திரண்டுநிற்கத்
. தொல்லையெலாம் மருண்டுநிற்கக்
கானத்துடன் வழிபடுவர் மன்பதமே. ... 1
[மன்பதை = மக்கட்பரப்பு; மன்பதம் = நிலைபெற்ற பாதம்]
நடராசர் திருத்தேர்நாள் விடியலிலே
மடவனமாய்ச் சிவகாமி நடைபயில
. அலங்காரத் திருக்கோலம்
. அகங்காரம் செறுக்கோலம்
முடிவில்லான் தேர்வலமோர் படையலென. ... 2
[மடவனம் = இளமையான அன்னம்]
அணித்தேரின் அமைப்பினிலே சிற்பக்கலை
கணிப்பேதும் தவறாத நுட்பவலை
. தேர்ப்பரப்பும் தேர்ச்சுற்றும்
. தேர்க்கூம்பும் தேர்ச்சிற்பமும்
மணிகண்டன் தேர்மிக்கோர் பொற்புமிலை! ... 3
[பொற்பு = பொலிவு, அழகு]
தேர்நடுவே நடராசர் ஊசலிலே
ஊர்முழுதும் நோக்கும்தேர் வாசலையே
. ஆராதனை தேரினிலே
. பாராதவர் சேறினிலே
வார்சடையன் தரிசனத்தில் காசினியே. ... 4
[ஊசல் = ஊஞ்சல்; வார்சடை = நீண்ட சடை; காசினி = பூமி]
அருமறையின் ஏற்றிறக்கம் தண்ணொலிக்கும்
திருமுறையும் ஒருசேர்ந்தே பண்ணொலிக்கும்
. சேந்தனாரின் பல்லாண்டு
. ஏந்திவரும் சொல்லாண்டு
இருநாகச் சுரமொலியோ விண்ணொலிக்கும்! ... 5
வலுமேவும் தவிலொலியும் வந்துறவே
உலுக்குமரம் தேர்தன்னை உந்திடுமே
. உற்சாகம் தேரோடும்
. தற்சிவமே வேரோடும்
எலும்பணியர் எழிலொன்றே முந்துறுமே! ... 6
[உலுக்குமரம் = நெம்புகட்டை; தற்சிவம் = முதற்கடவுள்]
நடராசர் திருவாடல் நாளமெனக்
கொடிஞ்சியிலே மணிகளெல்லாம் தாளமிடும்
. மின்னலிடும் முன்னழகே
. பின்னிவரும் பின்னழகே
உடையானின் ஊர்வலமே நீளுறுமே. ... 7
[நாளம் = உள்துளை; கொடிஞ்சி = தேர்;
உடையான் = உரிமைக்காரன், கடவுள்]
கருநிறத்தேர் இரண்டினிலே அம்மையப்பன்
இருயானை போலசையும் இம்மையப்பன்
. நண்பகலில் மீனவரின்
. மண்டகப்படி ஆனவுடன்
திரும்பும்தேர் நிலையுறுத்தும் செம்மையப்பா! ... 8
தில்லைத்தேர் நேர்நோக்கத் தொலைநோக்கத்
தொல்லையெலாம் சிவனருளால் தொலைவேக
. அம்மையப்பன் தரிசனமே
. நன்மையுறும் பரிசனமே
அல்லலற வாழ்வமைதி நிலையாமே. ... 9
[தொலைநோக்க = தொலைக்காட்சி, இணையம் முதலிய சாதனங்கள்
மூலம் தரிசித்தல்; பரிசனம் = தொடுதல், உறவு]
--ரமணி, 03/07/2014, கலி.19/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 19 - 03/07/2014, கலி.19/03/5115
செய்தி:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் ரதம்.
http://natarajadeekshidhar.blogspot.in/2010/06/blog-post.html
தேரோடக் காரோடும்!
(குறும்பா)
ஆனித்திரு மஞ்சனத்தின் ஒன்பதாம்நாள்
மேனிநீறன் தேர்வலத்தில் மன்பதையாய்த்
. தில்லையதே திரண்டுநிற்கத்
. தொல்லையெலாம் மருண்டுநிற்கக்
கானத்துடன் வழிபடுவர் மன்பதமே. ... 1
[மன்பதை = மக்கட்பரப்பு; மன்பதம் = நிலைபெற்ற பாதம்]
நடராசர் திருத்தேர்நாள் விடியலிலே
மடவனமாய்ச் சிவகாமி நடைபயில
. அலங்காரத் திருக்கோலம்
. அகங்காரம் செறுக்கோலம்
முடிவில்லான் தேர்வலமோர் படையலென. ... 2
[மடவனம் = இளமையான அன்னம்]
அணித்தேரின் அமைப்பினிலே சிற்பக்கலை
கணிப்பேதும் தவறாத நுட்பவலை
. தேர்ப்பரப்பும் தேர்ச்சுற்றும்
. தேர்க்கூம்பும் தேர்ச்சிற்பமும்
மணிகண்டன் தேர்மிக்கோர் பொற்புமிலை! ... 3
[பொற்பு = பொலிவு, அழகு]
தேர்நடுவே நடராசர் ஊசலிலே
ஊர்முழுதும் நோக்கும்தேர் வாசலையே
. ஆராதனை தேரினிலே
. பாராதவர் சேறினிலே
வார்சடையன் தரிசனத்தில் காசினியே. ... 4
[ஊசல் = ஊஞ்சல்; வார்சடை = நீண்ட சடை; காசினி = பூமி]
அருமறையின் ஏற்றிறக்கம் தண்ணொலிக்கும்
திருமுறையும் ஒருசேர்ந்தே பண்ணொலிக்கும்
. சேந்தனாரின் பல்லாண்டு
. ஏந்திவரும் சொல்லாண்டு
இருநாகச் சுரமொலியோ விண்ணொலிக்கும்! ... 5
வலுமேவும் தவிலொலியும் வந்துறவே
உலுக்குமரம் தேர்தன்னை உந்திடுமே
. உற்சாகம் தேரோடும்
. தற்சிவமே வேரோடும்
எலும்பணியர் எழிலொன்றே முந்துறுமே! ... 6
[உலுக்குமரம் = நெம்புகட்டை; தற்சிவம் = முதற்கடவுள்]
நடராசர் திருவாடல் நாளமெனக்
கொடிஞ்சியிலே மணிகளெல்லாம் தாளமிடும்
. மின்னலிடும் முன்னழகே
. பின்னிவரும் பின்னழகே
உடையானின் ஊர்வலமே நீளுறுமே. ... 7
[நாளம் = உள்துளை; கொடிஞ்சி = தேர்;
உடையான் = உரிமைக்காரன், கடவுள்]
கருநிறத்தேர் இரண்டினிலே அம்மையப்பன்
இருயானை போலசையும் இம்மையப்பன்
. நண்பகலில் மீனவரின்
. மண்டகப்படி ஆனவுடன்
திரும்பும்தேர் நிலையுறுத்தும் செம்மையப்பா! ... 8
தில்லைத்தேர் நேர்நோக்கத் தொலைநோக்கத்
தொல்லையெலாம் சிவனருளால் தொலைவேக
. அம்மையப்பன் தரிசனமே
. நன்மையுறும் பரிசனமே
அல்லலற வாழ்வமைதி நிலையாமே. ... 9
[தொலைநோக்க = தொலைக்காட்சி, இணையம் முதலிய சாதனங்கள்
மூலம் தரிசித்தல்; பரிசனம் = தொடுதல், உறவு]
--ரமணி, 03/07/2014, கலி.19/03/5115
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 20 - 04/07/2014, கலி.20/03/5115
செய்தி:
ஆனி உத்திர தரிசன விழா
http://natarajar.blogspot.in/2009/06/blog-post.html
அம்பலத்தரசன் ஆனித் தரிசனம்
(குறும்பா)
ஆனிமாத உத்திரைமீன் வருநாளே
ஆனந்தத் தாண்டவனின் திருநாளே
. அதிகாலைத் திருமஞ்சனம்
. பொதுமன்றத் துறுதரிசனம்
ஞானமுடன் ஆனந்தமும் தருநாளே. ... 1
நடராச தரிசனத்திற் களனாகும்
கடலாழ உண்மைகளே புலனாகில்
. ஞானவழித் திணையேக
. மோனமொழிப் புணையாக
கடைத்தேற வரமென்றே பலனாகும். ... 2
[திணை - அகம்-புற ஒழுக்கம்; புணை = தெப்பம்]
திருவடியே ஐந்தெழுத்து மந்திரமாம்
திருப்பாதம் நகரமாக உந்தியதாம்
. மகரமாகத் தோளதுவாம்
. சிகரமாகத் தாழ்முகமாம்
திருமுடியாம் வகரயகர ரந்திரமாம். ... 3
[ரந்திரம் = ரகசியம், வெளி]
சிகரமாகும் உடுக்கையதே வலதுகரம்
வகரமாகித் தாள்சுட்டும் அபயகரம்
. யகரமாகும் அனலிகரம்
. நகரமாகும் முயலகனே
மகரமாகி மும்மலம்கொள் சரணவரம். ... 4
[அனலி = நெருப்பு]
தோற்றுவித்தல் துடியாலுறும் தொழிலெனவாம்
ஆற்றுவித்தல் அபயகரத் தொழிலெனவாம்
. தோன்றுமக்னி அழிதொழிலாம்
. ஊன்றுபதம் மறைதொழிலாம்
தேற்றியருள் தூக்குந்தாள் தொழிலெனவே. ... 5
திருவாசி பிரணவமாம் ஓங்காரம்
திருமுடியே ஞானத்தின் ரீங்காரம்
. மருள்நீக்கும் வீசுகரம்
. அருட்களியாய்த் தூக்குபதம்
திருவடியை ஊன்றப்போம் ஆங்காரம். ... 6
[ரீங்காரம் = வண்டொலி, இங்கு ஓங்கார அதிர்வொலி]
ஆகாயம் பொலிவுறுமே முகத்தினிலே
தீக்காயும் நெற்றிக்கண் அகத்தினிலே
. விரிசடையே நீரெனவாம்
. விரிமூக்கே மாருதமாம்
மேற்காயும் நிலமதுவாம் முகமெனவே. ... 7
கண்ணிடமே சந்திரனிச் சாசக்தி
கண்வலமே சூரியனாம் ஞானசக்தி
. செவிக்குழையே சக்தியம்சம்
. செவித்தோடே சிவனம்சம்
கண்ணுதலே கழுமுனையாம் க்ரியாசக்தி. ... 8
காற்சிலம்பின் கேளாவொலி அருமறையாம்
காற்றாங்கும் கமலநெஞ்சத் திருமலராம்
. காற்கழலே நமன்கேடு
. கார்க்கண்டம் சமன்பாடு
தோற்றமெனும் உலகமெலாம் உருவிலரே. ... 9
[நமன்கேடு = நமனுறாவண்ணம் பிறப்பறுத்தல்;
சமன்பாடு = அமரத்துவம்]
இருகண்ணும் தரிசனத்தில் உருநோக்கும்
ஒருமனமோ தரிசனத்தின் கருநோக்கும்
. சிவசக்தி தரிசனமே
. பவரோகத் தெரிவனமே
திருவருளால் மும்மலத்தின் மருணீக்கம்! ... 10
--ரமணி, 05/07/2014, கலி.21/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 20 - 04/07/2014, கலி.20/03/5115
செய்தி:
ஆனி உத்திர தரிசன விழா
http://natarajar.blogspot.in/2009/06/blog-post.html
அம்பலத்தரசன் ஆனித் தரிசனம்
(குறும்பா)
ஆனிமாத உத்திரைமீன் வருநாளே
ஆனந்தத் தாண்டவனின் திருநாளே
. அதிகாலைத் திருமஞ்சனம்
. பொதுமன்றத் துறுதரிசனம்
ஞானமுடன் ஆனந்தமும் தருநாளே. ... 1
நடராச தரிசனத்திற் களனாகும்
கடலாழ உண்மைகளே புலனாகில்
. ஞானவழித் திணையேக
. மோனமொழிப் புணையாக
கடைத்தேற வரமென்றே பலனாகும். ... 2
[திணை - அகம்-புற ஒழுக்கம்; புணை = தெப்பம்]
திருவடியே ஐந்தெழுத்து மந்திரமாம்
திருப்பாதம் நகரமாக உந்தியதாம்
. மகரமாகத் தோளதுவாம்
. சிகரமாகத் தாழ்முகமாம்
திருமுடியாம் வகரயகர ரந்திரமாம். ... 3
[ரந்திரம் = ரகசியம், வெளி]
சிகரமாகும் உடுக்கையதே வலதுகரம்
வகரமாகித் தாள்சுட்டும் அபயகரம்
. யகரமாகும் அனலிகரம்
. நகரமாகும் முயலகனே
மகரமாகி மும்மலம்கொள் சரணவரம். ... 4
[அனலி = நெருப்பு]
தோற்றுவித்தல் துடியாலுறும் தொழிலெனவாம்
ஆற்றுவித்தல் அபயகரத் தொழிலெனவாம்
. தோன்றுமக்னி அழிதொழிலாம்
. ஊன்றுபதம் மறைதொழிலாம்
தேற்றியருள் தூக்குந்தாள் தொழிலெனவே. ... 5
திருவாசி பிரணவமாம் ஓங்காரம்
திருமுடியே ஞானத்தின் ரீங்காரம்
. மருள்நீக்கும் வீசுகரம்
. அருட்களியாய்த் தூக்குபதம்
திருவடியை ஊன்றப்போம் ஆங்காரம். ... 6
[ரீங்காரம் = வண்டொலி, இங்கு ஓங்கார அதிர்வொலி]
ஆகாயம் பொலிவுறுமே முகத்தினிலே
தீக்காயும் நெற்றிக்கண் அகத்தினிலே
. விரிசடையே நீரெனவாம்
. விரிமூக்கே மாருதமாம்
மேற்காயும் நிலமதுவாம் முகமெனவே. ... 7
கண்ணிடமே சந்திரனிச் சாசக்தி
கண்வலமே சூரியனாம் ஞானசக்தி
. செவிக்குழையே சக்தியம்சம்
. செவித்தோடே சிவனம்சம்
கண்ணுதலே கழுமுனையாம் க்ரியாசக்தி. ... 8
காற்சிலம்பின் கேளாவொலி அருமறையாம்
காற்றாங்கும் கமலநெஞ்சத் திருமலராம்
. காற்கழலே நமன்கேடு
. கார்க்கண்டம் சமன்பாடு
தோற்றமெனும் உலகமெலாம் உருவிலரே. ... 9
[நமன்கேடு = நமனுறாவண்ணம் பிறப்பறுத்தல்;
சமன்பாடு = அமரத்துவம்]
இருகண்ணும் தரிசனத்தில் உருநோக்கும்
ஒருமனமோ தரிசனத்தின் கருநோக்கும்
. சிவசக்தி தரிசனமே
. பவரோகத் தெரிவனமே
திருவருளால் மும்மலத்தின் மருணீக்கம்! ... 10
--ரமணி, 05/07/2014, கலி.21/03/5115
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 22 - 06/07/2014, கலி.22/03/5115
செய்தி:
திருத்தங்கல் ஶ்ரீநின்ற நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம்.
http://temple.dinamalar.com/New.php?id=687
திருக்கோளக்குடி ஶ்ரீகோளபுரீஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி.
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=517
நீலவண்ணன் தரிசனம்
(எண்சீர் விருத்தம்: அனைத்தும் காய்ச்சீர்கள்)
ஆலமரம் தவம்செய்தே தங்கால மலையாக
. அலைமகளும் தவம்செய்தே அவள்பெருமை நிலையாக
நீலவண்ணன் இருதவமும் உவந்தருளித் திருத்தங்கல்
. நின்றவிடம் ஆழ்வாரின் பாவண்ணம் பரவிடவே
கோலம்கொள் பெருமாளின் கருவறையில் பதினொருபேர்
. கொலுவிருக்கும் சிறப்புடனே கோவிந்தன் அருள்செய்ய
ஞாலவாழ்வில் நன்மைகளால் நலிவுறுதல் நீங்கிடவே
. நாரணனின் தாள்பற்ற நலமோங்கும் வாழ்வுறுமே.
நீலகண்டன் தரிசனம்
(முதற்சீர் கனிச்சீர், பிற காய்ச்சீர்)
கோலக்குடி குடவரையாம் கோவிலிலே
. கோளநாதர் ஆனிவிழா காணவரும்
கோலாகலம் பத்துநாள் மலையடியில்!
. கொடியேற்றம் அபிஷேகம் ஆரத்தி
சாலைத்தெரு வழியேகும் பரிவாரத்
. தரிசனமாம் கல்யாணம் தேரோட்டம்
ஆலந்தரு அடியமர்ந்து அருள்செய்யும்
. அம்மையப்பன் தாள்பணியத் துயரிலையே.
--ரமணி, 06/07/2014, கலி.22/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 22 - 06/07/2014, கலி.22/03/5115
செய்தி:
திருத்தங்கல் ஶ்ரீநின்ற நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம்.
http://temple.dinamalar.com/New.php?id=687
திருக்கோளக்குடி ஶ்ரீகோளபுரீஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி.
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=517
நீலவண்ணன் தரிசனம்
(எண்சீர் விருத்தம்: அனைத்தும் காய்ச்சீர்கள்)
ஆலமரம் தவம்செய்தே தங்கால மலையாக
. அலைமகளும் தவம்செய்தே அவள்பெருமை நிலையாக
நீலவண்ணன் இருதவமும் உவந்தருளித் திருத்தங்கல்
. நின்றவிடம் ஆழ்வாரின் பாவண்ணம் பரவிடவே
கோலம்கொள் பெருமாளின் கருவறையில் பதினொருபேர்
. கொலுவிருக்கும் சிறப்புடனே கோவிந்தன் அருள்செய்ய
ஞாலவாழ்வில் நன்மைகளால் நலிவுறுதல் நீங்கிடவே
. நாரணனின் தாள்பற்ற நலமோங்கும் வாழ்வுறுமே.
நீலகண்டன் தரிசனம்
(முதற்சீர் கனிச்சீர், பிற காய்ச்சீர்)
கோலக்குடி குடவரையாம் கோவிலிலே
. கோளநாதர் ஆனிவிழா காணவரும்
கோலாகலம் பத்துநாள் மலையடியில்!
. கொடியேற்றம் அபிஷேகம் ஆரத்தி
சாலைத்தெரு வழியேகும் பரிவாரத்
. தரிசனமாம் கல்யாணம் தேரோட்டம்
ஆலந்தரு அடியமர்ந்து அருள்செய்யும்
. அம்மையப்பன் தாள்பணியத் துயரிலையே.
--ரமணி, 06/07/2014, கலி.22/03/5115
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 23 - 07/07/2014, கலி.23/03/5115
செய்தி:
சொக்கலிங்கப்புதூர் நகர சிவாலய வருஷாபிஷேகம்.
http://www.dinamani.com/edition_madurai/article626732.ece
நகரத்தார் கோவிலிலே...
(ஆசிரியத்துறை)
நகரத்தார் வடிவமைத்த நஞ்சுண்டான் கோவிலிதே
தகனமுறும் வனமாடும் தாழ்சடையன்
சிகைவீழ்ந்தே தாள்வழியும் திருப்பொழிவின் தரிசனத்தில்
பகையாவும் நேசமாகிப் பற்றறில்லா வாழ்வுறுமே.
சொக்கலிங்கப் புதூர்மேவும் சுந்தரரின் கோவிலிலே
சக்திமீ னாட்சியவள் தாள்பற்றும்
தக்கார்க்குத் தகவுறுமே தகவிலர்க்குத் தீதுறுமே
எக்கணமும் சிந்தையுற எல்லையிலா இன்புறுமே.
--ரமணி, 07/07/2014, கலி.23/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 23 - 07/07/2014, கலி.23/03/5115
செய்தி:
சொக்கலிங்கப்புதூர் நகர சிவாலய வருஷாபிஷேகம்.
http://www.dinamani.com/edition_madurai/article626732.ece
நகரத்தார் கோவிலிலே...
(ஆசிரியத்துறை)
நகரத்தார் வடிவமைத்த நஞ்சுண்டான் கோவிலிதே
தகனமுறும் வனமாடும் தாழ்சடையன்
சிகைவீழ்ந்தே தாள்வழியும் திருப்பொழிவின் தரிசனத்தில்
பகையாவும் நேசமாகிப் பற்றறில்லா வாழ்வுறுமே.
சொக்கலிங்கப் புதூர்மேவும் சுந்தரரின் கோவிலிலே
சக்திமீ னாட்சியவள் தாள்பற்றும்
தக்கார்க்குத் தகவுறுமே தகவிலர்க்குத் தீதுறுமே
எக்கணமும் சிந்தையுற எல்லையிலா இன்புறுமே.
--ரமணி, 07/07/2014, கலி.23/03/5115
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 24 - 08/07/2014, கலி.24/03/5115
செய்தி:
கானாடுகாத்தான் ஶ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.
http://veludharan.blogspot.in/2014/05/chettinad-kanadukathan-shiva-and.html
கானாடி காப்பான்!
(அறுசீர் விருத்தம்)
கயிலாய நாதருக்குக் கல்யாணம்
. கானாடு காத்தானூர்க் கோவிலிலே
கயல்விழியாள் சவுந்தரிய நாயகியைக்
. கைப்பிடித்தே குடும்பத்தன் ஆனாராம்!
அயராத உழைப்பொன்றே மூலதன
. மாய்க்கொண்ட நகரத்தார் கோவிலிதே
துயரெல்லாம் நீங்கிடுமே அருட்செயலால்
. துடியேந்தி தாள்தன்னைப் பற்றிடவே.
மூன்றடுக்கில் ஒங்குராச கோபுரமாம்
. உமையன்னை சிவனாரின் சன்னிதிமுன்
சான்றெனசிற் பக்கலையின் மாட்சிமைக்கே
. ஆங்காங்கே தூணெல்லாம் எழிலுருவம்
தான்தோன்றி மூலவராம் கருவறையில்
. சப்பரத்தில் தெய்வங்கள் ஊர்வலமாம்
ஈன்றானை இத்தலத்தில் தரிசித்தே
. இகவாழ்வில் ஏற்றங்கள் பெறுவோமே.
--ரமணி, 08/07/2014, கலி.24/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 24 - 08/07/2014, கலி.24/03/5115
செய்தி:
கானாடுகாத்தான் ஶ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.
http://veludharan.blogspot.in/2014/05/chettinad-kanadukathan-shiva-and.html
கானாடி காப்பான்!
(அறுசீர் விருத்தம்)
கயிலாய நாதருக்குக் கல்யாணம்
. கானாடு காத்தானூர்க் கோவிலிலே
கயல்விழியாள் சவுந்தரிய நாயகியைக்
. கைப்பிடித்தே குடும்பத்தன் ஆனாராம்!
அயராத உழைப்பொன்றே மூலதன
. மாய்க்கொண்ட நகரத்தார் கோவிலிதே
துயரெல்லாம் நீங்கிடுமே அருட்செயலால்
. துடியேந்தி தாள்தன்னைப் பற்றிடவே.
மூன்றடுக்கில் ஒங்குராச கோபுரமாம்
. உமையன்னை சிவனாரின் சன்னிதிமுன்
சான்றெனசிற் பக்கலையின் மாட்சிமைக்கே
. ஆங்காங்கே தூணெல்லாம் எழிலுருவம்
தான்தோன்றி மூலவராம் கருவறையில்
. சப்பரத்தில் தெய்வங்கள் ஊர்வலமாம்
ஈன்றானை இத்தலத்தில் தரிசித்தே
. இகவாழ்வில் ஏற்றங்கள் பெறுவோமே.
--ரமணி, 08/07/2014, கலி.24/03/5115
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 25 - 09/07/2014, கலி.25/03/5115
செய்தி:
மதுரை மீனாட்சி ஊஞ்சலில் காட்சியருளல்.
அங்கயற்கண்ணி அருள்வாயே!
(தரவு கொச்சகக் கலிப்பா)
துரகதம் நரியாக்கித் துலக்கமுறச் செய்பவனாய்
உரகதம் மேனியுற உய்விக்கும் வெண்ணீறன் ... ... ... ... [உரகதம் = பாம்பு]
தருகதிகொள் சக்திதரும் தாயவளாய்த் தாங்குவதே
மரகதப் பாவையவள் மதுரையங் கயற்கண்ணே.
உடலுடனே உயிர்சேரந்தே உளமூஞ்சல் ஆடுதற்போல்
இடப்பக்கல் மடுத்தேநீ சிவசக்தி என்றாகிக்
கடம்பவனக் கோவிலிலே கன்னூஞ்சல் ஆடுவையோ?
குடமுடைந்து உயிர்செலுமுன் ஊசலெனக் கில்லாமோ?
இடவலமாய் மேற்கீழாய் இகவாழ்வே ஊசலாடும்
மடமையெலாம் மாண்பென்னும் மாயையிலே தேசலாகும்
சடங்கெல்லாம் உய்வென்னும் சாதனையே வேசமாகும்
கடம்பவன நாயகியே காத்தருள்வாய்க் காசினியே.
--ரமணி, 09/07/2014, கலி.25/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 25 - 09/07/2014, கலி.25/03/5115
செய்தி:
மதுரை மீனாட்சி ஊஞ்சலில் காட்சியருளல்.
அங்கயற்கண்ணி அருள்வாயே!
(தரவு கொச்சகக் கலிப்பா)
துரகதம் நரியாக்கித் துலக்கமுறச் செய்பவனாய்
உரகதம் மேனியுற உய்விக்கும் வெண்ணீறன் ... ... ... ... [உரகதம் = பாம்பு]
தருகதிகொள் சக்திதரும் தாயவளாய்த் தாங்குவதே
மரகதப் பாவையவள் மதுரையங் கயற்கண்ணே.
உடலுடனே உயிர்சேரந்தே உளமூஞ்சல் ஆடுதற்போல்
இடப்பக்கல் மடுத்தேநீ சிவசக்தி என்றாகிக்
கடம்பவனக் கோவிலிலே கன்னூஞ்சல் ஆடுவையோ?
குடமுடைந்து உயிர்செலுமுன் ஊசலெனக் கில்லாமோ?
இடவலமாய் மேற்கீழாய் இகவாழ்வே ஊசலாடும்
மடமையெலாம் மாண்பென்னும் மாயையிலே தேசலாகும்
சடங்கெல்லாம் உய்வென்னும் சாதனையே வேசமாகும்
கடம்பவன நாயகியே காத்தருள்வாய்க் காசினியே.
--ரமணி, 09/07/2014, கலி.25/03/5115
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
பிரதோஷப் பாடல்
கடலி லெழுவிடம் நத்தியே...
(திருப்புகழ்ப் பாடல் ’நினது திருவடி சத்திம யிற்கொடி’ சந்தம்)
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன ... தனதான
கடலி லெழுவிடம் நத்தியெ டுத்தவர்
. கருதி யமுதென வுட்கொளு மக்கணம்
. கதறி விமலைக ரத்தைய ழுத்திட ... இழியாதே
விடமும் சம்புக ழுத்திலி றுத்திட
. விமலை யுளமதி லச்சம யக்கமும்
. விலக அமரரும் விக்கிவ ழுத்திட ... வினையேகி
விடப மிசைவரு மத்தன கத்தினி
. லிளகி யிமையவர் தற்பரை மற்றிரு
. இறையின் விநயம னத்துந ளிப்புற ... விடையேறி
விடப நவிரம ருப்பிடை நுட்பத
. விகசி தவிததி விக்னம றுக்கும்
. விககம் வதிசடை நர்த்தகன் பொற்பதம் ... மருந்தாமே.
மனதி லெழுவிடம் நத்தியெ டுத்திவன்
. மயலி லமுதென வுட்கொளு மக்கணம்
. மலையி னரவுக ழுத்திலி றுக்குத ... லறியாதே
கனவு நனவென வியத்திலு ளத்தினில்
. கரமி துபரவி முற்றிய பற்றினில்
. கரண விகதன நித்திய வித்தக ... னெனவானான்
மனதி லுருவரும் வருணனை விற்பனம்
. மரண முறுகணம் வெற்றென வுற்றது
. வருபி றவிதனி லுற்றிடு வற்கட ... மெனவாகும்
சனன மரணமு ழற்சியில் வற்றுதல்
. அகல அனல்விழி விச்சைவி தைத்தருள்
. சடையன் திருமணி நித்திய நர்த்தக ... நடராசா!
பதம் பிரித்து:
கடலில் எழுவிடம் நத்தி எடுத்து-அவர்
. கருதி அமுதென உட்கொளும் அக்கணம்
. கதறி விமலை கரத்தை அழுத்திட ... இழியாதே
விடமும் சம்பு கழுத்தில் இறுத்திட
. விமலை உளமதில் அச்ச மயக்கமும்
. விலக அமரரும் விக்கி வழுத்திட ... வினை-ஏகி
விடப மிசைவரும் அத்தன் அகத்தினில்
. இளகி இமையவர் தற்பரை மற்றிரு
. இறையின் விநய மனத்து நளிப்புற ... விடையேறி
விடப நவிர மருப்பிடை நுட்பத
. விகசித விததி விக்னம் அறுக்கும்
. விககம் வதிசடை நர்த்தகன் பொற்பதம் ... மருந்தாமே.
[நத்தி = விரும்பி; இழியாதே = இறங்காதே; இறுத்திட = தங்கிட;
தற்பரை = உமை; மற்றிரு இறை = அரியும் அயனும்;
விநயமனம் = பணியும் மனம்; நளிப்பு = செறிவு = தன்னடக்கம்;
நவிரம் = தலை, உச்சி; மருப்பு = கொம்பு;
விகசித விததி = மலர்ச்சியின் விரிவு; விககம் = சந்திரன்]
மனதில் எழுவிடம் நத்தி எடுத்து-இவன்
. மயலில் அமுதென உட்கொளும் அக்கணம்
. மலையின் அரவு கழுத்தில் இறுக்குதல் ... அறியாதே
கனவு நனவென வியத்தில் உளத்தினில்
. கரமிது பரவி முற்றிய பற்றினில்
. கரண விகதன நித்திய வித்தகன் ... என-ஆனான்
மனதில் உருவரும் வருணனை விற்பனம்
. மரணம் உறுகணம் வெற்றென உற்று-அது
. வரு பிறவிதனில் உற்றிடு வற்கடம் ... என-ஆகும்
சனன மரணம் உழற்சியில் வற்றுதல்
. அகல அனல்விழி விச்சை விதைத்தருள்
. சடையன் திருமணி நித்திய நர்த்தக ... நடராசா!
[மயலில் = மயக்கத்தில்; வியத்தில் = உடலில்; கரம் = விடம்;
கரண விகதன நித்திய வித்தகன் = இந்திரியத்தால் உறும்
அறிவைப் புகுழந்து அதுவே பெருமை என்பவன்; வருணனை = கற்பனை;
வற்கடம் = வறுமை; உழற்சி = அலைக்கழிப்பு, சுழற்சி;
விச்சை = வித்தை = விதையை]
--ரமணி, 23/07/2014, கலி.07/04/5115
*****
கடலி லெழுவிடம் நத்தியே...
(திருப்புகழ்ப் பாடல் ’நினது திருவடி சத்திம யிற்கொடி’ சந்தம்)
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன ... தனதான
கடலி லெழுவிடம் நத்தியெ டுத்தவர்
. கருதி யமுதென வுட்கொளு மக்கணம்
. கதறி விமலைக ரத்தைய ழுத்திட ... இழியாதே
விடமும் சம்புக ழுத்திலி றுத்திட
. விமலை யுளமதி லச்சம யக்கமும்
. விலக அமரரும் விக்கிவ ழுத்திட ... வினையேகி
விடப மிசைவரு மத்தன கத்தினி
. லிளகி யிமையவர் தற்பரை மற்றிரு
. இறையின் விநயம னத்துந ளிப்புற ... விடையேறி
விடப நவிரம ருப்பிடை நுட்பத
. விகசி தவிததி விக்னம றுக்கும்
. விககம் வதிசடை நர்த்தகன் பொற்பதம் ... மருந்தாமே.
மனதி லெழுவிடம் நத்தியெ டுத்திவன்
. மயலி லமுதென வுட்கொளு மக்கணம்
. மலையி னரவுக ழுத்திலி றுக்குத ... லறியாதே
கனவு நனவென வியத்திலு ளத்தினில்
. கரமி துபரவி முற்றிய பற்றினில்
. கரண விகதன நித்திய வித்தக ... னெனவானான்
மனதி லுருவரும் வருணனை விற்பனம்
. மரண முறுகணம் வெற்றென வுற்றது
. வருபி றவிதனி லுற்றிடு வற்கட ... மெனவாகும்
சனன மரணமு ழற்சியில் வற்றுதல்
. அகல அனல்விழி விச்சைவி தைத்தருள்
. சடையன் திருமணி நித்திய நர்த்தக ... நடராசா!
பதம் பிரித்து:
கடலில் எழுவிடம் நத்தி எடுத்து-அவர்
. கருதி அமுதென உட்கொளும் அக்கணம்
. கதறி விமலை கரத்தை அழுத்திட ... இழியாதே
விடமும் சம்பு கழுத்தில் இறுத்திட
. விமலை உளமதில் அச்ச மயக்கமும்
. விலக அமரரும் விக்கி வழுத்திட ... வினை-ஏகி
விடப மிசைவரும் அத்தன் அகத்தினில்
. இளகி இமையவர் தற்பரை மற்றிரு
. இறையின் விநய மனத்து நளிப்புற ... விடையேறி
விடப நவிர மருப்பிடை நுட்பத
. விகசித விததி விக்னம் அறுக்கும்
. விககம் வதிசடை நர்த்தகன் பொற்பதம் ... மருந்தாமே.
[நத்தி = விரும்பி; இழியாதே = இறங்காதே; இறுத்திட = தங்கிட;
தற்பரை = உமை; மற்றிரு இறை = அரியும் அயனும்;
விநயமனம் = பணியும் மனம்; நளிப்பு = செறிவு = தன்னடக்கம்;
நவிரம் = தலை, உச்சி; மருப்பு = கொம்பு;
விகசித விததி = மலர்ச்சியின் விரிவு; விககம் = சந்திரன்]
மனதில் எழுவிடம் நத்தி எடுத்து-இவன்
. மயலில் அமுதென உட்கொளும் அக்கணம்
. மலையின் அரவு கழுத்தில் இறுக்குதல் ... அறியாதே
கனவு நனவென வியத்தில் உளத்தினில்
. கரமிது பரவி முற்றிய பற்றினில்
. கரண விகதன நித்திய வித்தகன் ... என-ஆனான்
மனதில் உருவரும் வருணனை விற்பனம்
. மரணம் உறுகணம் வெற்றென உற்று-அது
. வரு பிறவிதனில் உற்றிடு வற்கடம் ... என-ஆகும்
சனன மரணம் உழற்சியில் வற்றுதல்
. அகல அனல்விழி விச்சை விதைத்தருள்
. சடையன் திருமணி நித்திய நர்த்தக ... நடராசா!
[மயலில் = மயக்கத்தில்; வியத்தில் = உடலில்; கரம் = விடம்;
கரண விகதன நித்திய வித்தகன் = இந்திரியத்தால் உறும்
அறிவைப் புகுழந்து அதுவே பெருமை என்பவன்; வருணனை = கற்பனை;
வற்கடம் = வறுமை; உழற்சி = அலைக்கழிப்பு, சுழற்சி;
விச்சை = வித்தை = விதையை]
--ரமணி, 23/07/2014, கலி.07/04/5115
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
பாரதியின் பாப்பா!
இந்தச் சின்னஞ் சிறு கிளியின் பாட்டைக் கேளுங்கள்!
http://tamilmani.wordpress.com/2009/12/07/சின்னஞ்சிறு-கிளியே-கண்ண/
ரமணி
இந்தச் சின்னஞ் சிறு கிளியின் பாட்டைக் கேளுங்கள்!
http://tamilmani.wordpress.com/2009/12/07/சின்னஞ்சிறு-கிளியே-கண்ண/
ரமணி
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
பிரதோஷப் பாடல்
வையம் உய்ய அருள்வானே!
(திருப்புகழ்ப் பாடல்கள் 660. ’கள்ள முள்ள வல்ல வல்லி’
661. ’தொய்யில் செய்யில் நொய்யர் கையர்’ இவற்றின் சந்தம்)
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய ... தனதான
தைய லையன் மெய்யி லுய்யச்
. சையங் கொள்ளு ... மருளாள
னையங் கொள்ள வில்ல முள்ளி
. யல்லல் கொள்ளு ... மடலேறின்
மெய்யில் வெள்ளி யுவ்வி வெள்ளம்
. வெய்ய னல்லற் களைவோனாய்
மையற் றள்ளி ஐயந் தெள்ளி
. வைய முய்ய வருள்வானே!
வெள்க டல்மி சைதி ரள்மை
. வெய்து யிர்விண் ணவர்காத்தே
வெள்வி டைமி சைநி லையம்
. மெய்யன் பர்தம் முயிரார்வர்
உள்ளங் கொள்ளுங் கள்ளந் தள்ள
. உய்வ னல்லன் எனவேயிக்
குள்ள னுய்வை யுள்ளி வெய்த
. உள்ளன் வள்ள லருள்வாயே!
பதம் பிரித்து:
தையல் ஐயன் மெய்யில் உய்யச்
. சையம் கொள்ளும் ... அருளாளன்
ஐயம் கொள்ள இல்லம் உள்ளி
. அல்லல் கொள்ளும் ... அடலேறின்
மெய்யில் வெள்ளி யுவ்வி வெள்ளம்
. வெய்யன் அல்லல் களைவோனாய்
மையல் தள்ளி ஐயம் தெள்ளி
. வையம் உய்ய அருள்வானே!
[சையம் = மலை; ஐயம் = பிச்சை;
மெய்யில் வெள்ளி = மேனியில் வெண்ணீறு;
உவ்வி வெள்ளம் = தலையில் (கங்கை) வெள்ளம்;
வெய்யன் = விருப்பமுள்ளோன், தீக்கடவுள், சூரியன்]
வெள்கடல் மிசை திரள் மை
. வெய்துயிர் விண்ணவர் காத்தே
வெள்விடை மிசை நிலையம்
. மெய்யன்பர் தம் உயிர்-ஆர்வர்
உள்ளம் கொள்ளும் கள்ளம் தள்ள
. உய்வன் அல்லன் எனவே-இக்
குள்ளன் உய்வை உள்ளி எய்த
. உள்ளன் வள்ளல் அருள்வாயே!
[வெள்-கடல் = வெள்ளிய கடல், இங்கு பாற்கடல்;
மை = இருள், களங்கம், இங்கு ஆலகால விடம்;
வெய்துயிர்த்தல் = வெம்மையால், துன்பத்தால் மூச்சுவிட்டு உயிர்த்தல்;
வெள்-விடை = வெண்ணிற எருது; நிலையம் = கூத்து, ஆடல்;
உள்ளன் = உள்ளிருப்பவன், உற்றவன்]
--ரமணி, 06-08/08/2014, கலி.23/04/5115
*****
வையம் உய்ய அருள்வானே!
(திருப்புகழ்ப் பாடல்கள் 660. ’கள்ள முள்ள வல்ல வல்லி’
661. ’தொய்யில் செய்யில் நொய்யர் கையர்’ இவற்றின் சந்தம்)
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய ... தனதான
தைய லையன் மெய்யி லுய்யச்
. சையங் கொள்ளு ... மருளாள
னையங் கொள்ள வில்ல முள்ளி
. யல்லல் கொள்ளு ... மடலேறின்
மெய்யில் வெள்ளி யுவ்வி வெள்ளம்
. வெய்ய னல்லற் களைவோனாய்
மையற் றள்ளி ஐயந் தெள்ளி
. வைய முய்ய வருள்வானே!
வெள்க டல்மி சைதி ரள்மை
. வெய்து யிர்விண் ணவர்காத்தே
வெள்வி டைமி சைநி லையம்
. மெய்யன் பர்தம் முயிரார்வர்
உள்ளங் கொள்ளுங் கள்ளந் தள்ள
. உய்வ னல்லன் எனவேயிக்
குள்ள னுய்வை யுள்ளி வெய்த
. உள்ளன் வள்ள லருள்வாயே!
பதம் பிரித்து:
தையல் ஐயன் மெய்யில் உய்யச்
. சையம் கொள்ளும் ... அருளாளன்
ஐயம் கொள்ள இல்லம் உள்ளி
. அல்லல் கொள்ளும் ... அடலேறின்
மெய்யில் வெள்ளி யுவ்வி வெள்ளம்
. வெய்யன் அல்லல் களைவோனாய்
மையல் தள்ளி ஐயம் தெள்ளி
. வையம் உய்ய அருள்வானே!
[சையம் = மலை; ஐயம் = பிச்சை;
மெய்யில் வெள்ளி = மேனியில் வெண்ணீறு;
உவ்வி வெள்ளம் = தலையில் (கங்கை) வெள்ளம்;
வெய்யன் = விருப்பமுள்ளோன், தீக்கடவுள், சூரியன்]
வெள்கடல் மிசை திரள் மை
. வெய்துயிர் விண்ணவர் காத்தே
வெள்விடை மிசை நிலையம்
. மெய்யன்பர் தம் உயிர்-ஆர்வர்
உள்ளம் கொள்ளும் கள்ளம் தள்ள
. உய்வன் அல்லன் எனவே-இக்
குள்ளன் உய்வை உள்ளி எய்த
. உள்ளன் வள்ளல் அருள்வாயே!
[வெள்-கடல் = வெள்ளிய கடல், இங்கு பாற்கடல்;
மை = இருள், களங்கம், இங்கு ஆலகால விடம்;
வெய்துயிர்த்தல் = வெம்மையால், துன்பத்தால் மூச்சுவிட்டு உயிர்த்தல்;
வெள்-விடை = வெண்ணிற எருது; நிலையம் = கூத்து, ஆடல்;
உள்ளன் = உள்ளிருப்பவன், உற்றவன்]
--ரமணி, 06-08/08/2014, கலி.23/04/5115
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
கவிதையில் செழுமையும் ,கருத்தினில் செறிவும் மிகுந்திருக்கின்றன .
Ponmudi Manohar- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 23/07/2014
Page 23 of 36 • 1 ... 13 ... 22, 23, 24 ... 29 ... 36
Similar topics
» ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
» ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
» ரமணியின் கதைகள்
» ரமணியின் சிறுகதைகள்: திருட்டுப் பட்டம்
» ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய்
» ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
» ரமணியின் கதைகள்
» ரமணியின் சிறுகதைகள்: திருட்டுப் பட்டம்
» ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய்
Page 23 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|