புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 22 of 36 •
Page 22 of 36 • 1 ... 12 ... 21, 22, 23 ... 29 ... 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 09 - 23/06/2014, கலி.09/03/5115
கூர்ம ஜயந்தி.
திருப்போரூர் ஶ்ரீமுருகப்பெருமான் அபிஷேகம்.
திருவண்ணாமலை ஶ்ரீரமனாஸ்ரமத்தில் மாத்ருபூதேஸ்வரர் பூஜை.
மாமன் மருகன் அருணைமுனி
(அம்மானை)
வடவரையாற் பாற்கடலை மத்தனம் செய்யுங்கால்
தடமுதுகில் ஆமையாய்த் தாங்கினார் அம்மானை!
தடமுதுகில் ஆமையாய்த் தாங்கினார் என்றேதான்
உடல்மல்லாக் காய்க்கடலில் தூங்குவரோ அம்மானை?
உறக்கமிலை யோகத்தின் ஓர்வழியே அம்மானை!
போரூர் முருகன் பொழிநீர்த் திருமுழுக்கில்
பாரடி நீர்வகை பற்பலவே அம்மானை?
பாரடி நீர்வகை பற்பலவே ஆமாகில்
ஆருக்கென் றித்தனை ஆடுவர் அம்மானை?
நம்பாவம் போகவே நன்முழுக் கம்மானை!
அன்னையின் நெஞ்சவள் ஆவி இருத்தியே
இன்சித்தி தந்தார் இரமணர் அம்மானை!
இன்சித்தி தந்தார் இரமணர் ஆமாகில்
அன்னையின் பந்தம் அகன்றதோ அம்மானை?
தன்னையறிந் தார்க்குத் தளையிலை அம்மானை!
--ரமணி, 23/06/2014, கலி.09/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 09 - 23/06/2014, கலி.09/03/5115
கூர்ம ஜயந்தி.
திருப்போரூர் ஶ்ரீமுருகப்பெருமான் அபிஷேகம்.
திருவண்ணாமலை ஶ்ரீரமனாஸ்ரமத்தில் மாத்ருபூதேஸ்வரர் பூஜை.
மாமன் மருகன் அருணைமுனி
(அம்மானை)
வடவரையாற் பாற்கடலை மத்தனம் செய்யுங்கால்
தடமுதுகில் ஆமையாய்த் தாங்கினார் அம்மானை!
தடமுதுகில் ஆமையாய்த் தாங்கினார் என்றேதான்
உடல்மல்லாக் காய்க்கடலில் தூங்குவரோ அம்மானை?
உறக்கமிலை யோகத்தின் ஓர்வழியே அம்மானை!
போரூர் முருகன் பொழிநீர்த் திருமுழுக்கில்
பாரடி நீர்வகை பற்பலவே அம்மானை?
பாரடி நீர்வகை பற்பலவே ஆமாகில்
ஆருக்கென் றித்தனை ஆடுவர் அம்மானை?
நம்பாவம் போகவே நன்முழுக் கம்மானை!
அன்னையின் நெஞ்சவள் ஆவி இருத்தியே
இன்சித்தி தந்தார் இரமணர் அம்மானை!
இன்சித்தி தந்தார் இரமணர் ஆமாகில்
அன்னையின் பந்தம் அகன்றதோ அம்மானை?
தன்னையறிந் தார்க்குத் தளையிலை அம்மானை!
--ரமணி, 23/06/2014, கலி.09/03/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 11 - 25/06/2014, கலி.11/03/5115
சிதம்பரம், ஆவுடையார் கோவில் இத்தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
ஆவுடையார் சேவடியே காப்பு!
(வெண்பா)
ஆவுடையார்க் கோவிலிலே ஆனித் திருநானம்
பாவுடையார்க் காகப் பரிகொணர்ந்த - சேவடியை
நாவுடைத்துப் பாடிய நால்வரில் ஓரடியார்
தேவுடையா ராய்நிற்கும் சேர்வு.
[ஆவுடையார் = பசுக்களாகிய ஆன்மாக்களை உடையார், பசுபதி;
திருநானம் = திருமஞ்சனம்; தேவுடையார் = தெய்வத்தன்மை
உடையார்; சேர்வு = ஊர்]
உருவற்ற ஆவுடையார் மூலம் குருத்தம்
அருவுருவ லிங்கமென் றாகத் - திருவாத
வூரரே அத்தன் உருவெனக் காணுந்
திருவூர் பெருந்துறை யே.
தில்லைநட ராசர் திருநானம் ஆனியில்
எல்லையில்லாப் பத்துநாள் இன்பமே - தொல்லை
அறுந்தடியார் தேர்வலம் கண்டு திளைக்க
உறங்கும் உயிர்க்கே உயர்வு.
--ரமணி, 25/06/2014, கலி.11/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 11 - 25/06/2014, கலி.11/03/5115
சிதம்பரம், ஆவுடையார் கோவில் இத்தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
ஆவுடையார் சேவடியே காப்பு!
(வெண்பா)
ஆவுடையார்க் கோவிலிலே ஆனித் திருநானம்
பாவுடையார்க் காகப் பரிகொணர்ந்த - சேவடியை
நாவுடைத்துப் பாடிய நால்வரில் ஓரடியார்
தேவுடையா ராய்நிற்கும் சேர்வு.
[ஆவுடையார் = பசுக்களாகிய ஆன்மாக்களை உடையார், பசுபதி;
திருநானம் = திருமஞ்சனம்; தேவுடையார் = தெய்வத்தன்மை
உடையார்; சேர்வு = ஊர்]
உருவற்ற ஆவுடையார் மூலம் குருத்தம்
அருவுருவ லிங்கமென் றாகத் - திருவாத
வூரரே அத்தன் உருவெனக் காணுந்
திருவூர் பெருந்துறை யே.
தில்லைநட ராசர் திருநானம் ஆனியில்
எல்லையில்லாப் பத்துநாள் இன்பமே - தொல்லை
அறுந்தடியார் தேர்வலம் கண்டு திளைக்க
உறங்கும் உயிர்க்கே உயர்வு.
--ரமணி, 25/06/2014, கலி.11/03/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 12 - 26/06/2014, கலி.12/03/5115
செய்திகள்:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் பவனி.
சுவாமிமலை ஶ்ரீமுருகப்பெருமான் வைரவேல் தரிசனம்.
ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.
சீர்காழி ஶ்ரீதிருஞானசம்பந்தர் அபிஷேகம் (பாம்பு பஞ்சாங்கம்).
கோவில்: ஏரல் அருணாசல சுவாமி
http://temple.dinamalar.com/New.php?id=682
நால்வகை தரிசனம்
(வெண்பா)
ஆனித் திருமுழுக் காடும் நடராசர்
சானித்யம் வீதியில் சந்திர ஊர்தியில்
வெள்ளித் திருவாசி இந்நாள் வலம்வந்தே
அள்ளித் தருவர் அருள். ... 1
வைரவேல் காட்டியே வைராக்யம் ஊட்டிடும்
பைரவர் சேய்சாமி நாத! - உயிரவை
எல்லா வகையும் இனிதாகி முன்னேற
பொல்லார்க் கருளைப் பொழி. ... 2
[உயிரவை = உலகின் உயிர்த்தொகுதி]
தன்மரணம் சோதரர்க்குத் தானே அறிவித்து
மன்பதை வாழ வழிதந்த - இன்முனி
ஏரலரு ணாசலர் இந்நாள் விழாக்காண
ஊரினில் பொங்கும் உவப்பு. ... 3
சித்தம் தெளிவுறச் சீக்கு குணமுற
நித்தம் அருள்செய் நிமலனாம் - பத்திவழி
யோகியாம் ஏரல் ஒளியரு ணாசலர்
ஆகிவந்த காப்பென வாம். ... 4
அன்னையிடம் ஞான அமுதுண்ட காழியர்கோன்
அன்னை செவித்தோடும் அப்பன் பிறைநிலவும்
மூன்றே வயதினில் முன்னுறப் பாடிய
ஆன்றார் திருமுழுக்கிஞ் ஞான்று. ... 4
--ரமணி, 26/06/2014, கலி.12/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 12 - 26/06/2014, கலி.12/03/5115
செய்திகள்:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் பவனி.
சுவாமிமலை ஶ்ரீமுருகப்பெருமான் வைரவேல் தரிசனம்.
ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.
சீர்காழி ஶ்ரீதிருஞானசம்பந்தர் அபிஷேகம் (பாம்பு பஞ்சாங்கம்).
கோவில்: ஏரல் அருணாசல சுவாமி
http://temple.dinamalar.com/New.php?id=682
நால்வகை தரிசனம்
(வெண்பா)
ஆனித் திருமுழுக் காடும் நடராசர்
சானித்யம் வீதியில் சந்திர ஊர்தியில்
வெள்ளித் திருவாசி இந்நாள் வலம்வந்தே
அள்ளித் தருவர் அருள். ... 1
வைரவேல் காட்டியே வைராக்யம் ஊட்டிடும்
பைரவர் சேய்சாமி நாத! - உயிரவை
எல்லா வகையும் இனிதாகி முன்னேற
பொல்லார்க் கருளைப் பொழி. ... 2
[உயிரவை = உலகின் உயிர்த்தொகுதி]
தன்மரணம் சோதரர்க்குத் தானே அறிவித்து
மன்பதை வாழ வழிதந்த - இன்முனி
ஏரலரு ணாசலர் இந்நாள் விழாக்காண
ஊரினில் பொங்கும் உவப்பு. ... 3
சித்தம் தெளிவுறச் சீக்கு குணமுற
நித்தம் அருள்செய் நிமலனாம் - பத்திவழி
யோகியாம் ஏரல் ஒளியரு ணாசலர்
ஆகிவந்த காப்பென வாம். ... 4
அன்னையிடம் ஞான அமுதுண்ட காழியர்கோன்
அன்னை செவித்தோடும் அப்பன் பிறைநிலவும்
மூன்றே வயதினில் முன்னுறப் பாடிய
ஆன்றார் திருமுழுக்கிஞ் ஞான்று. ... 4
--ரமணி, 26/06/2014, கலி.12/03/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 13 - 27/06/2014, கலி.13/03/5115
செய்திகள்:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் ஆனித்திருமஞ்சனம் மூன்றாவது நாள்:
. தங்க சூர்ய பிரபை வாகனத்தில் ஊர்வலம்.
ஆவுடையார் கோவில் ஶ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி.
கீழ்த்திருப்பதி ஶ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன ஸேவை.
ஶ்ரீபெரும்புதூர் சுவாமி உடையவர் கூட புறப்பாடு.
அரன்-அரி ஆனித்திருமஞ்சனம்
(கலிவிருத்தம்: தேமாங்கனி புளிமாங்கனி கூவிளம் மா)
ஆனித்திருப் பொழிவாடிடும் அம்பலத் தரசே!
பானுத்தம னியவாகனப் பாங்கினில் வருவீர்
ஈனத்தினில் இகம்வாழ்ந்திடும் என்னுயிர்க் காழ்ந்த
மோனத்தினில் நிலைகொண்டிடும் உத்தியைத் தருவீர்! ... 1
[பானுத் தமனிய வாகனம் = தங்க சூர்யபிரபை வாகனம்]
ஆனித்திருப் பொழிவாடிடும் ஆவுடை யார்கோன்
கானத்துடன் வலம்வீதியில் காண்பவர் ஆத்ம
ஞானத்துடன் இனிவாழ்ந்திட நாயகன் அருளி
ஈனத்தினைக் களைவானெனும் ஈர்ப்பினில் வாழ்வார்! ... 2
கோவிந்தனின் திருமஞ்சனக் கோலம தேநம்
பாவந்தனைக் கருவில்கொளும் பாங்குள தாகும்
நாவற்பழ நிறமார்ந்திடும் நாரணன் தாளே
காவல்தரும் இகவாழ்வினில் காழ்ப்பினைத் தருமே. ... 3
[காழ்ப்பு = மனவயிரம்]
பூதக்குழு சிவசாபவி மோசனம் பெறவே
பூதந்தொழும் பெருமாளவர் ஊர்வலக் கோலம்
பாதம்தொழு உடையாரவர் பக்கநின் றேதான்
வீதித்திரு வலங்கொள்ளவே வீழ்வினை யாமே. ... 4
[உடையார் = இராமானுசர்]
--ரமணி, 26/06/2014, கலி.12/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 13 - 27/06/2014, கலி.13/03/5115
செய்திகள்:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் ஆனித்திருமஞ்சனம் மூன்றாவது நாள்:
. தங்க சூர்ய பிரபை வாகனத்தில் ஊர்வலம்.
ஆவுடையார் கோவில் ஶ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி.
கீழ்த்திருப்பதி ஶ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன ஸேவை.
ஶ்ரீபெரும்புதூர் சுவாமி உடையவர் கூட புறப்பாடு.
அரன்-அரி ஆனித்திருமஞ்சனம்
(கலிவிருத்தம்: தேமாங்கனி புளிமாங்கனி கூவிளம் மா)
ஆனித்திருப் பொழிவாடிடும் அம்பலத் தரசே!
பானுத்தம னியவாகனப் பாங்கினில் வருவீர்
ஈனத்தினில் இகம்வாழ்ந்திடும் என்னுயிர்க் காழ்ந்த
மோனத்தினில் நிலைகொண்டிடும் உத்தியைத் தருவீர்! ... 1
[பானுத் தமனிய வாகனம் = தங்க சூர்யபிரபை வாகனம்]
ஆனித்திருப் பொழிவாடிடும் ஆவுடை யார்கோன்
கானத்துடன் வலம்வீதியில் காண்பவர் ஆத்ம
ஞானத்துடன் இனிவாழ்ந்திட நாயகன் அருளி
ஈனத்தினைக் களைவானெனும் ஈர்ப்பினில் வாழ்வார்! ... 2
கோவிந்தனின் திருமஞ்சனக் கோலம தேநம்
பாவந்தனைக் கருவில்கொளும் பாங்குள தாகும்
நாவற்பழ நிறமார்ந்திடும் நாரணன் தாளே
காவல்தரும் இகவாழ்வினில் காழ்ப்பினைத் தருமே. ... 3
[காழ்ப்பு = மனவயிரம்]
பூதக்குழு சிவசாபவி மோசனம் பெறவே
பூதந்தொழும் பெருமாளவர் ஊர்வலக் கோலம்
பாதம்தொழு உடையாரவர் பக்கநின் றேதான்
வீதித்திரு வலங்கொள்ளவே வீழ்வினை யாமே. ... 4
[உடையார் = இராமானுசர்]
--ரமணி, 26/06/2014, கலி.12/03/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 13 - 27/06/2014, கலி.13/03/5115
பாம்புப் பஞ்சாங்கச் செய்தி:
மயிலம் பொம்மபுர ஆதீனம் முதல்பட்ட குருமுதல்வர்
. ஶ்ரீபாலசித்தர் குருபூஜை
பாலசித்தர் பற்றிய செய்திகள்:
http://ta.wikipedia.org/wiki/மயிலம்_பொம்மபுர_ஆதீனம்
http://santhipriyaspages.blogspot.in/2013/10/bommapura-adeenam-5.html
http://jnanabhoomi.blogspot.in/2010/01/blog-post_9471.html
பாலசித்தர் குருபூஜை
(குறும்பா)
சங்குகன்னர் என்பதாயோர் சிவகணமே
அங்கணனால் பெற்றாரே தவகுணமே
. கருவழியே தோன்றாதே
. திருநீறணி ஆன்றாராய்
இங்குற்றார் பாலசித்தர் தவமணியாய். ... 1
கமனசித்தர் ககனவழிச் செலவினிலே
உமைகூறன் வீரசைவம் நிலைபெறவே
. பெருமுக்கல் வரைகளிலே
. ஒருமித்தார் நெறியினையே
நமன்கொண்ட உயிர்மீட்ட வலுவுடையார். ... 2
[கமனசித்தர் = வான்வழியே நினைத்தவிடம் செல்லும் சித்தி பெற்றவர்;
ககனம் = வான், வளிமண்டலம்]
முருகனுடன் போர்புரிந்தே பாலசித்தர்
அரன்மகனின் அருள்பெற்ற சாலவித்தர்
. குருபூஜையில் பொம்மபுரம்
. குருவருளால் விம்மலற
முருகருளால் எரியுண்ணும் பாவவித்தே. ... 3
[விம்மல் = துன்பம், ஏக்கம், கலக்கம்]
--ரமணி, 27/06/2014, கலி.13/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 13 - 27/06/2014, கலி.13/03/5115
பாம்புப் பஞ்சாங்கச் செய்தி:
மயிலம் பொம்மபுர ஆதீனம் முதல்பட்ட குருமுதல்வர்
. ஶ்ரீபாலசித்தர் குருபூஜை
பாலசித்தர் பற்றிய செய்திகள்:
http://ta.wikipedia.org/wiki/மயிலம்_பொம்மபுர_ஆதீனம்
http://santhipriyaspages.blogspot.in/2013/10/bommapura-adeenam-5.html
http://jnanabhoomi.blogspot.in/2010/01/blog-post_9471.html
பாலசித்தர் குருபூஜை
(குறும்பா)
சங்குகன்னர் என்பதாயோர் சிவகணமே
அங்கணனால் பெற்றாரே தவகுணமே
. கருவழியே தோன்றாதே
. திருநீறணி ஆன்றாராய்
இங்குற்றார் பாலசித்தர் தவமணியாய். ... 1
கமனசித்தர் ககனவழிச் செலவினிலே
உமைகூறன் வீரசைவம் நிலைபெறவே
. பெருமுக்கல் வரைகளிலே
. ஒருமித்தார் நெறியினையே
நமன்கொண்ட உயிர்மீட்ட வலுவுடையார். ... 2
[கமனசித்தர் = வான்வழியே நினைத்தவிடம் செல்லும் சித்தி பெற்றவர்;
ககனம் = வான், வளிமண்டலம்]
முருகனுடன் போர்புரிந்தே பாலசித்தர்
அரன்மகனின் அருள்பெற்ற சாலவித்தர்
. குருபூஜையில் பொம்மபுரம்
. குருவருளால் விம்மலற
முருகருளால் எரியுண்ணும் பாவவித்தே. ... 3
[விம்மல் = துன்பம், ஏக்கம், கலக்கம்]
--ரமணி, 27/06/2014, கலி.13/03/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 14 - 29/06/2014, கலி.14/03/5115
செய்திகள்:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் வீதியுலா
பத்ராச்சலம் இராமபிரான் புறப்பாடு
அம்பலத்தரசன் ஆனிமஞ்சனம்: நான்காம் நாள்
(நேரிசை அகவல்)
’புதுநலங் கனிந்த பூத புராணம்’*
முதலோன் கணங்கள் மூரி யுரைக்க
அம்பலத் தரசன் ஆனி முழுக்கில்
கம்பீ ரத்துடன் கணபூ தமொன்று
கதைவாள் கேடயம் கரங்களிற் றாங்கி
அதிருங் கழலோன் அருவுரு தூக்க
நான்காம் நாளில் நான்மறை யாளன்
தேன்மலர்த் தாரணி திருவெண் ணீறனாய்
ஊர்வலம் வந்திடும் உன்னதம்
ஓர்மனம் ஆன்ம ஒளியைப் பெறுமே.
[மூரி = வலிமை, பெருமை, பழமை]
குறிப்பு:
*மூன்று தமிழ்ச் சங்கங்கள் பற்றி உவேசா பதிப்பித்த
ஓர் ஓலைச்சுவடியில் உள்ள பாடல் வரியின் மேற்கோள்:
http://www.tamilartsacademy.com/journals/volume27/articles/article3.xml
*****
இராமநாமம் தரும் உய்வே
(குறள் வெண்செந்துறை)
இராமநாமம் உறாமனம் இராமனம் பெறாமனம்
வராமனம் கூறாமனம் அராமியின் மனமெனவே ... [அராமி = கொடியன்]
கல்யாண சீதா ராஜா சுந்தர
கோசல தசரத கோதண்ட ஶ்ரீஜய
ரகுசிவ அனந்த ஶ்ரீராம ஜயமென
உகப்பினிற் றுதித்தே உய்வோம் நாமே.
குறிப்பு:
இங்குள்ள பல்வேறு ராமநாமங்கள் கவிஞர் கண்ணதாசனின்
திரைப்பாடல் ஒன்றில் வருவன:
http://kannansongs.blogspot.in/2007/03/41.html
--ரமணி, 28/06/2014, கலி.14/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 14 - 29/06/2014, கலி.14/03/5115
செய்திகள்:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் வீதியுலா
பத்ராச்சலம் இராமபிரான் புறப்பாடு
அம்பலத்தரசன் ஆனிமஞ்சனம்: நான்காம் நாள்
(நேரிசை அகவல்)
’புதுநலங் கனிந்த பூத புராணம்’*
முதலோன் கணங்கள் மூரி யுரைக்க
அம்பலத் தரசன் ஆனி முழுக்கில்
கம்பீ ரத்துடன் கணபூ தமொன்று
கதைவாள் கேடயம் கரங்களிற் றாங்கி
அதிருங் கழலோன் அருவுரு தூக்க
நான்காம் நாளில் நான்மறை யாளன்
தேன்மலர்த் தாரணி திருவெண் ணீறனாய்
ஊர்வலம் வந்திடும் உன்னதம்
ஓர்மனம் ஆன்ம ஒளியைப் பெறுமே.
[மூரி = வலிமை, பெருமை, பழமை]
குறிப்பு:
*மூன்று தமிழ்ச் சங்கங்கள் பற்றி உவேசா பதிப்பித்த
ஓர் ஓலைச்சுவடியில் உள்ள பாடல் வரியின் மேற்கோள்:
http://www.tamilartsacademy.com/journals/volume27/articles/article3.xml
*****
இராமநாமம் தரும் உய்வே
(குறள் வெண்செந்துறை)
இராமநாமம் உறாமனம் இராமனம் பெறாமனம்
வராமனம் கூறாமனம் அராமியின் மனமெனவே ... [அராமி = கொடியன்]
கல்யாண சீதா ராஜா சுந்தர
கோசல தசரத கோதண்ட ஶ்ரீஜய
ரகுசிவ அனந்த ஶ்ரீராம ஜயமென
உகப்பினிற் றுதித்தே உய்வோம் நாமே.
குறிப்பு:
இங்குள்ள பல்வேறு ராமநாமங்கள் கவிஞர் கண்ணதாசனின்
திரைப்பாடல் ஒன்றில் வருவன:
http://kannansongs.blogspot.in/2007/03/41.html
--ரமணி, 28/06/2014, கலி.14/03/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 15 - 29/06/2014, கலி.15/03/5115
செய்தி:
இராமநாதபுரம் ஶ்ரீகோதண்டராம ஸ்வாமி உற்சவாரம்பம்.
தோளுக்கினியானில் பவனி வரும் காட்சி.
சிவ ராம துதி
(வெண்பா)
ஆனித் திருமுழுக் கைந்தாம் தினத்திலே
ஞானத் தழலுரு நீள்சடையன் வானுயர்ந்தே
வீதி யடைக்க விரிரதம் ஸ்கோபுர
ஊர்தி யெழுந்தருள் ஊர்வலக் கோலத்தில்
கார்மணிப் பாம்பணிக் கண்டன் தரிசனம்
நேர்வரப் போம்வினை யே.
திருவாறை ஈசன் திருவருள் செய்ய*
உருவான வில்லாகும் கோதண்டம் மேல்முனையில்
கோதண்ட ராமனின் கோல முகமென்பர்
பாதமே கீழ்முனை யாம்.
கோவெனில் மன்னன் ஒறுத்தலே தண்டமாம்
கோவின் தருமம் கொடியோரை தண்டித்தல்
இப்படிக் கோதண்டம் தீதழிக்கும் வன்மையைச்
செப்புதல் வில்லின் சிறப்பு.
கோதண்ட ராமரின் கோவிலில் உற்சவம்
மாதண்டம் ஏகியே மானிடர் தெய்வமாய்
தோளுக் கினியானால் தூக்க உலாவரும்
தாளைப் பணியத் தகவு.
[மாதண்டம் = இராசவீதி; தோளுக்கினியான் = எளிதில் தூக்கும் வாகனவகை;
தகவு = அருள், நன்மை, தகுதி, வலிமை]
--ரமணி, 29/06/2014, கலி.15/03/5115
குறிப்பு:
திருவாறைத் தலம் இன்று கயத்தாறு என்னும் பெயரில் விளங்குகிறது.
ஈசன் கோதண்டம் அருளிய செய்தி:
http://vallipuram-temple.blogspot.in/2009/06/blog-post.html
கோதண்டம் மகிமை:
http://jeevagv.blogspot.in/2012/12/blog-post_18.html
*****
கலி-ஜய வருடம் ஆனி 15 - 29/06/2014, கலி.15/03/5115
செய்தி:
இராமநாதபுரம் ஶ்ரீகோதண்டராம ஸ்வாமி உற்சவாரம்பம்.
தோளுக்கினியானில் பவனி வரும் காட்சி.
சிவ ராம துதி
(வெண்பா)
ஆனித் திருமுழுக் கைந்தாம் தினத்திலே
ஞானத் தழலுரு நீள்சடையன் வானுயர்ந்தே
வீதி யடைக்க விரிரதம் ஸ்கோபுர
ஊர்தி யெழுந்தருள் ஊர்வலக் கோலத்தில்
கார்மணிப் பாம்பணிக் கண்டன் தரிசனம்
நேர்வரப் போம்வினை யே.
திருவாறை ஈசன் திருவருள் செய்ய*
உருவான வில்லாகும் கோதண்டம் மேல்முனையில்
கோதண்ட ராமனின் கோல முகமென்பர்
பாதமே கீழ்முனை யாம்.
கோவெனில் மன்னன் ஒறுத்தலே தண்டமாம்
கோவின் தருமம் கொடியோரை தண்டித்தல்
இப்படிக் கோதண்டம் தீதழிக்கும் வன்மையைச்
செப்புதல் வில்லின் சிறப்பு.
கோதண்ட ராமரின் கோவிலில் உற்சவம்
மாதண்டம் ஏகியே மானிடர் தெய்வமாய்
தோளுக் கினியானால் தூக்க உலாவரும்
தாளைப் பணியத் தகவு.
[மாதண்டம் = இராசவீதி; தோளுக்கினியான் = எளிதில் தூக்கும் வாகனவகை;
தகவு = அருள், நன்மை, தகுதி, வலிமை]
--ரமணி, 29/06/2014, கலி.15/03/5115
குறிப்பு:
திருவாறைத் தலம் இன்று கயத்தாறு என்னும் பெயரில் விளங்குகிறது.
ஈசன் கோதண்டம் அருளிய செய்தி:
http://vallipuram-temple.blogspot.in/2009/06/blog-post.html
கோதண்டம் மகிமை:
http://jeevagv.blogspot.in/2012/12/blog-post_18.html
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 17 - 01/07/2014, கலி.17/03/5115
செய்தி:
தேரழுந்தூர் ஶ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு.
இராமநாதபுரம் ஶ்ரீகோதண்டராம ஸ்வாமி ஹனுமார் வாகனத்தில் புறப்பாடு.
சிவ னடியார் ராம துதி
(வெண்பா)
அம்பலத்தே கூத்தாடி ஆனித் திருமுழுக்
கைந்திரண்டாம் நாளினில் அற்புதக் காட்சியாய்
தங்கக் கயிலைமலை யைத்தூக்க யத்தனித்தே
மங்கையோர் பங்கினர்கால் வல்விர லாலழுத்த
அங்கம் அழுந்தி அரற்றிய ராவணன்
வெள்ளி யுருவில் விடையோனின் வாகனமாய்
உள்ளம் களிததும்ப ஒன்பது உச்சியால்
ஐயனைத் தூக்கித்தன் பத்தாம் தலயினைக்
கையுறு வீணைத் தலையாய் அமைத்துப்பண்
காம்போதி மீட்டவே காளகண்டன் கேட்டுமை
யாம்பான் அருள்செயும் அற்புதக் காட்சியில்
தேம்பா திருப்பார்யா ரே!
[உச்சி = தலை; ஆம்பான் = கணவன்]
பிள்ளைசம் பந்தர்க்குப் பிள்ளையார் சுட்டவே
கள்வனாய் உள்ளம் கவர்ந்திடும் தேரழுந்தூர்
வள்ளலை யிங்ஙனம் வாழ்த்தினார் பிள்ளை:
’கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே எழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழுமா மடமே வினையே’
இறைவனின் பிள்ளையவர் தேரழுந் தூரில்
மறையின் கொழுந்தாய் வலம்.
யோகி அனுமனவன் கோதண்ட ராமர்க்கு
வாகனமாய் இன்று வருநாள் - விவேகம்
குதிர்ந்து செயல்படக் கோதண்ட ராம்தாள்
துதித்தே வழிபடு வோம்.
--ரமணி, 01/07/2014, கலி.17/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 17 - 01/07/2014, கலி.17/03/5115
செய்தி:
தேரழுந்தூர் ஶ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு.
இராமநாதபுரம் ஶ்ரீகோதண்டராம ஸ்வாமி ஹனுமார் வாகனத்தில் புறப்பாடு.
சிவ னடியார் ராம துதி
(வெண்பா)
அம்பலத்தே கூத்தாடி ஆனித் திருமுழுக்
கைந்திரண்டாம் நாளினில் அற்புதக் காட்சியாய்
தங்கக் கயிலைமலை யைத்தூக்க யத்தனித்தே
மங்கையோர் பங்கினர்கால் வல்விர லாலழுத்த
அங்கம் அழுந்தி அரற்றிய ராவணன்
வெள்ளி யுருவில் விடையோனின் வாகனமாய்
உள்ளம் களிததும்ப ஒன்பது உச்சியால்
ஐயனைத் தூக்கித்தன் பத்தாம் தலயினைக்
கையுறு வீணைத் தலையாய் அமைத்துப்பண்
காம்போதி மீட்டவே காளகண்டன் கேட்டுமை
யாம்பான் அருள்செயும் அற்புதக் காட்சியில்
தேம்பா திருப்பார்யா ரே!
[உச்சி = தலை; ஆம்பான் = கணவன்]
பிள்ளைசம் பந்தர்க்குப் பிள்ளையார் சுட்டவே
கள்வனாய் உள்ளம் கவர்ந்திடும் தேரழுந்தூர்
வள்ளலை யிங்ஙனம் வாழ்த்தினார் பிள்ளை:
’கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே எழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழுமா மடமே வினையே’
இறைவனின் பிள்ளையவர் தேரழுந் தூரில்
மறையின் கொழுந்தாய் வலம்.
யோகி அனுமனவன் கோதண்ட ராமர்க்கு
வாகனமாய் இன்று வருநாள் - விவேகம்
குதிர்ந்து செயல்படக் கோதண்ட ராம்தாள்
துதித்தே வழிபடு வோம்.
--ரமணி, 01/07/2014, கலி.17/03/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 18 - 02/07/2014, கலி.18/03/5115
செய்தி:
திருநெல்வேலி நெல்லையப்பர் உற்சவாரம்பம்.
ஐயமேன் ஐயனே!
(வெண்பா)
ஆனித் திருமுழுக்கின் நாளெட்டில் தில்லையில்
ஆனந்தக் கூத்தன்பிச் சாடனர்க் கோலம்
நரைதிரை மூப்பால் நலிவுறும் முன்னே
அரனருள் வேண்ட நலம்.
(எழுசீர் விருத்தம்: தேமா விளம் விளம் மா
. தேமா மா காய்)
அன்ன பூரணி உம்மிடம் இருக்க
. ஐயம் கேட்டே அலைவானேன்?
முன்னர் ஆரணன் ஐம்முக உருவில்
. உம்பர் முகமே உளமாக
உன்னும் செருக்கினில் உலகியற் றித்தன்
. மூலத் திறையை மறந்திடநீர்
சென்னி ஒன்றினைக் கொய்திட அதுவும்
. செங்கை யொட்டிச் சேர்ந்ததுவே!
[ஆரணன் = பிரம்மன்; உம்பர் = ஆகாயம்; மூலத்திறை = விஷ்ணுவும் சிவனும்]
சேர்ந்த வெண்டலை யோடினை யேந்தி
. ஏற்றல் வேண்டி யலைந்தீரோ?
ஆர்யை பூரணி உம்மிடம் இருந்தும்
. ஐயம் பாவ மகன்றிடவோ?
பார்வை மறைத்திடும் செருக்கது வேநீர்
. பாகம் கேட்ட உணர்வுறினே
யார்தன் அகந்தையைத் தருவரோ அவர்க்கே
. மாயை யகலச் செய்வீரே!
(வெண்பா)
ஆந்தை விழிகள் அகலத் திறந்துநாம்
பேந்த விழித்திடும் பேரிருள் வாழ்வினில்
காந்திமதி நாதனின் கால்பிடித் தாலுறும்
சாந்தம் எனவறிந் தான்றவர் நெல்லையின்
வேந்தனை நாடுவ ரே.
--ரமணி, 02/07/2014, கலி.18/03/5115
*****
கலி-ஜய வருடம் ஆனி 18 - 02/07/2014, கலி.18/03/5115
செய்தி:
திருநெல்வேலி நெல்லையப்பர் உற்சவாரம்பம்.
ஐயமேன் ஐயனே!
(வெண்பா)
ஆனித் திருமுழுக்கின் நாளெட்டில் தில்லையில்
ஆனந்தக் கூத்தன்பிச் சாடனர்க் கோலம்
நரைதிரை மூப்பால் நலிவுறும் முன்னே
அரனருள் வேண்ட நலம்.
(எழுசீர் விருத்தம்: தேமா விளம் விளம் மா
. தேமா மா காய்)
அன்ன பூரணி உம்மிடம் இருக்க
. ஐயம் கேட்டே அலைவானேன்?
முன்னர் ஆரணன் ஐம்முக உருவில்
. உம்பர் முகமே உளமாக
உன்னும் செருக்கினில் உலகியற் றித்தன்
. மூலத் திறையை மறந்திடநீர்
சென்னி ஒன்றினைக் கொய்திட அதுவும்
. செங்கை யொட்டிச் சேர்ந்ததுவே!
[ஆரணன் = பிரம்மன்; உம்பர் = ஆகாயம்; மூலத்திறை = விஷ்ணுவும் சிவனும்]
சேர்ந்த வெண்டலை யோடினை யேந்தி
. ஏற்றல் வேண்டி யலைந்தீரோ?
ஆர்யை பூரணி உம்மிடம் இருந்தும்
. ஐயம் பாவ மகன்றிடவோ?
பார்வை மறைத்திடும் செருக்கது வேநீர்
. பாகம் கேட்ட உணர்வுறினே
யார்தன் அகந்தையைத் தருவரோ அவர்க்கே
. மாயை யகலச் செய்வீரே!
(வெண்பா)
ஆந்தை விழிகள் அகலத் திறந்துநாம்
பேந்த விழித்திடும் பேரிருள் வாழ்வினில்
காந்திமதி நாதனின் கால்பிடித் தாலுறும்
சாந்தம் எனவறிந் தான்றவர் நெல்லையின்
வேந்தனை நாடுவ ரே.
--ரமணி, 02/07/2014, கலி.18/03/5115
*****
- Sponsored content
Page 22 of 36 • 1 ... 12 ... 21, 22, 23 ... 29 ... 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 36
|
|