புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 19 of 36 •
Page 19 of 36 • 1 ... 11 ... 18, 19, 20 ... 27 ... 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 7.
வைகாசி 2
இன்று காஞ்சிபுரம் ஶ்ரீவரதராஜப் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்துடன் புறப்பாடு
கோயில் விவரம்:
http://temple.dinamalar.com/New.php?id=633
http://www.hinduspritualarticles.blogspot.in/2013/01/blog-post_9.html
மோகினித் திருக்கோலம்:
http://thiruvarangan.blogspot.in/2009/12/1_3074.html
(இன்னிசை வெண்பா)
அயன்யாகம் தோன்றி அருள்செய்த மாயோன்
அயர்ச்சியில் ஆழ்குளத்தில் அத்தி வரதனாய்
ஏகமாத் தூங்க எழுந்த கனவிலின்று
மோகினியாய் ஊரலைந்தா னோ? ... 1
பராங்குச மங்கை பரகால மங்கை
இராப்பகல் பாரா(து) இறுக்கிய காதலெழும்
தாகத்தைத் துய்த்திடும் ஆசையில் மாதவனும்
மோகினியாய் ஊரலைந்தா னோ? ... 2
முன்கதை ஏதோ முகுந்தனவன் இற்றைநாள்
முன்னழகும் பின்னழகும் முட்டவே கண்ணெதிரில்
மோகினியாய் ஊர்வலமாம்! மோகவுளம் பக்தியின்
தாகத்தில் ஆழும் தழைந்து! ... 3
--ரமணி, 16/05/2014, கலி.02/02/5115
*****
வைகாசி 2
இன்று காஞ்சிபுரம் ஶ்ரீவரதராஜப் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்துடன் புறப்பாடு
கோயில் விவரம்:
http://temple.dinamalar.com/New.php?id=633
http://www.hinduspritualarticles.blogspot.in/2013/01/blog-post_9.html
மோகினித் திருக்கோலம்:
http://thiruvarangan.blogspot.in/2009/12/1_3074.html
(இன்னிசை வெண்பா)
அயன்யாகம் தோன்றி அருள்செய்த மாயோன்
அயர்ச்சியில் ஆழ்குளத்தில் அத்தி வரதனாய்
ஏகமாத் தூங்க எழுந்த கனவிலின்று
மோகினியாய் ஊரலைந்தா னோ? ... 1
பராங்குச மங்கை பரகால மங்கை
இராப்பகல் பாரா(து) இறுக்கிய காதலெழும்
தாகத்தைத் துய்த்திடும் ஆசையில் மாதவனும்
மோகினியாய் ஊரலைந்தா னோ? ... 2
முன்கதை ஏதோ முகுந்தனவன் இற்றைநாள்
முன்னழகும் பின்னழகும் முட்டவே கண்ணெதிரில்
மோகினியாய் ஊர்வலமாம்! மோகவுளம் பக்தியின்
தாகத்தில் ஆழும் தழைந்து! ... 3
--ரமணி, 16/05/2014, கலி.02/02/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 8.
வைகாசி 3
இன்று சங்கடஹர சதுர்த்தி நாள்.
சங்கடஹர சதுர்த்தித் துதி:
இரண்டாம் சுதந்திரமாக அருள்!
(அளவியல் இன்னிசை வெண்பா)
பாரதம் பண்டைநெறிப் பண்பினில் ஆழ்ந்ததன்
வேரது மீண்டும் விளைய கணேசா!
உலகினில் முன்னோடும் உன்னத நாடாய்
வலம்வரச் செய்திடு வாய். ... 1
இரண்டாம்சு தந்திரமாய் எல்லாரும் தேவ!
இரண்டென நின்றும் இணைந்திடும் அன்பில்
வருநாளில் பாடுபட்டு வல்லரசாய் இந்தத்
திருநா(டு) இலங்கவருள் செய். ... 2
வெறுக்கையர் உள்ள வெறுமை யகல ... [வெறுக்கை = செல்வம்]
சிறுவர் சிறுமியர் செம்மையில் வாழ
இளையோர் அறத்தில் இழைய கணேசா!
வளமுறச் செய்திடு வாய். ... 3
*ஐங்கரனே நம்மக்கள் ஐம்புலன் கட்டுண்டே
ஐங்குரவர் சொல்கேட்டே ஐம்பாலோர் நன்மைபேணி
ஐந்தருவின் வாசமுறும் வாழ்வறம் துலங்கிடவே
ஐந்திணையும் காத்தருள் வாய். ... 4
"எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் ஓர்நிறை" யென்றே விநாயக!
இல்லார் குறைதீர்த் திருப்பார் நிறைசெய்ய
அல்லலின்றி வாழ வருள். ... 5
--ரமணி, 17/05/2014, கலி.03/02/5115
பாடல் 4 பற்றிய குறிப்பு:
ஐங்கரன் = பிள்ளையார்; ஐங்குரவர் = அரசன், ஆசான், அன்னை, தந்தை, மூத்த சகோதரன்;
ஐம்பாலோர் = ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் வகைப்படும் உயிர்கள்;
ஐந்தரு = சந்தானம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம், அரிசந்தனம் ஆகிய தேவலோக மரங்கள்;
ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்கள்.
*****
வைகாசி 3
இன்று சங்கடஹர சதுர்த்தி நாள்.
சங்கடஹர சதுர்த்தித் துதி:
இரண்டாம் சுதந்திரமாக அருள்!
(அளவியல் இன்னிசை வெண்பா)
பாரதம் பண்டைநெறிப் பண்பினில் ஆழ்ந்ததன்
வேரது மீண்டும் விளைய கணேசா!
உலகினில் முன்னோடும் உன்னத நாடாய்
வலம்வரச் செய்திடு வாய். ... 1
இரண்டாம்சு தந்திரமாய் எல்லாரும் தேவ!
இரண்டென நின்றும் இணைந்திடும் அன்பில்
வருநாளில் பாடுபட்டு வல்லரசாய் இந்தத்
திருநா(டு) இலங்கவருள் செய். ... 2
வெறுக்கையர் உள்ள வெறுமை யகல ... [வெறுக்கை = செல்வம்]
சிறுவர் சிறுமியர் செம்மையில் வாழ
இளையோர் அறத்தில் இழைய கணேசா!
வளமுறச் செய்திடு வாய். ... 3
*ஐங்கரனே நம்மக்கள் ஐம்புலன் கட்டுண்டே
ஐங்குரவர் சொல்கேட்டே ஐம்பாலோர் நன்மைபேணி
ஐந்தருவின் வாசமுறும் வாழ்வறம் துலங்கிடவே
ஐந்திணையும் காத்தருள் வாய். ... 4
"எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் ஓர்நிறை" யென்றே விநாயக!
இல்லார் குறைதீர்த் திருப்பார் நிறைசெய்ய
அல்லலின்றி வாழ வருள். ... 5
--ரமணி, 17/05/2014, கலி.03/02/5115
பாடல் 4 பற்றிய குறிப்பு:
ஐங்கரன் = பிள்ளையார்; ஐங்குரவர் = அரசன், ஆசான், அன்னை, தந்தை, மூத்த சகோதரன்;
ஐம்பாலோர் = ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் வகைப்படும் உயிர்கள்;
ஐந்தரு = சந்தானம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம், அரிசந்தனம் ஆகிய தேவலோக மரங்கள்;
ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்கள்.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 9.
வைகாசி 4
கீழைத் திருப்பதி ஶ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதி எதிரில்
ஶ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.
அனுமன் திருமஞ்சனம்
(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
ஆழியைத் தாண்டி அருந்தொண்டு செய்தவன்
கீழைத் திருப்பதிக் கேசவன் ஆலயத்தில்
வீழுநீ ராடிடும் வீரன் அனுமனால்
ஏழை மனங்குளிரு மே. ... 1
அரனம்சன் அஞ்சனை மைந்தனவன் யோகி
உருவெளியன் ராமனின் தூதன் சிறிய
திருவடி மூலம் திருமால் அருளால்
இருள்நீங்கி வாழ்தல் எளிது. ... 2
புத்தி பலமும் புகழும் துணிகரமும்
சத்திய ஞானம் சரீரநலம் சொல்வன்மை
அத்தனையும் கைகூடும் அச்சமற்ற வாழ்வெனும்
அத்தம் அனுமனால் ஆம். ... 3
[அத்தம் = அருநெறி]
--ரமணி, 18/05/2014, கலி.04/02/5115
*****
வைகாசி 4
கீழைத் திருப்பதி ஶ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதி எதிரில்
ஶ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.
அனுமன் திருமஞ்சனம்
(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
ஆழியைத் தாண்டி அருந்தொண்டு செய்தவன்
கீழைத் திருப்பதிக் கேசவன் ஆலயத்தில்
வீழுநீ ராடிடும் வீரன் அனுமனால்
ஏழை மனங்குளிரு மே. ... 1
அரனம்சன் அஞ்சனை மைந்தனவன் யோகி
உருவெளியன் ராமனின் தூதன் சிறிய
திருவடி மூலம் திருமால் அருளால்
இருள்நீங்கி வாழ்தல் எளிது. ... 2
புத்தி பலமும் புகழும் துணிகரமும்
சத்திய ஞானம் சரீரநலம் சொல்வன்மை
அத்தனையும் கைகூடும் அச்சமற்ற வாழ்வெனும்
அத்தம் அனுமனால் ஆம். ... 3
[அத்தம் = அருநெறி]
--ரமணி, 18/05/2014, கலி.04/02/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 10.
வைகாசி 5
சங்கரன்கோவில் ஶ்ரீகோமதியம்மன் தரிசனம்.
கோவில் விவரம்: http://temple.dinamalar.com/New.php?id=174
கோமதியம்மன் தரிசனம்
(சமனிலைச் சிந்து)
சங்கனும் பதுமனும் தம்முள் - தாயே
. சர்ச்சை புரிந்தது நன்றே
சங்கர நாரணன் என்றே - தாயே
. சர்ச்சையைத் தீர்த்துவைத் தாயே! ... 1
சந்திர ஒளிமுகம் கொண்டே - தாயே
. தவமிருந் தாயொரு காலில்
இந்திர தேவரும் உன்னைத் -தாயே
. நிரையுரு தாங்கியே காண! ... 2
கோமதி பேரினைக் கொண்டாய் - தாயே
. கோவிலில் மேவிய மர்ந்தாய்
சேமமுன் நாமமும் தருமே - தாயே
. சேவடி பணிந்தே வாழ்வோம்! ... 3
திங்களில் தங்கபா வாடை - தாயே
. திருவுரு தரிசனம் காண்போம்
மங்கைநீ புட்பபா வாடை - தாயே
. மங்கல வெள்ளியில் காண்போம்! ... 4
நோயுடன் தோஶமும் போகத் - தாயே
. உன்கழல் போற்றியே வாழ்வோம்
சேயென எம்மைக் காத்தே - தாயே
. சீர்பெறும் வகையருள் வாயே! ... 5
--ரமணி, 19/05/2014, கலி.05/02/5115
*****
வைகாசி 5
சங்கரன்கோவில் ஶ்ரீகோமதியம்மன் தரிசனம்.
கோவில் விவரம்: http://temple.dinamalar.com/New.php?id=174
கோமதியம்மன் தரிசனம்
(சமனிலைச் சிந்து)
சங்கனும் பதுமனும் தம்முள் - தாயே
. சர்ச்சை புரிந்தது நன்றே
சங்கர நாரணன் என்றே - தாயே
. சர்ச்சையைத் தீர்த்துவைத் தாயே! ... 1
சந்திர ஒளிமுகம் கொண்டே - தாயே
. தவமிருந் தாயொரு காலில்
இந்திர தேவரும் உன்னைத் -தாயே
. நிரையுரு தாங்கியே காண! ... 2
கோமதி பேரினைக் கொண்டாய் - தாயே
. கோவிலில் மேவிய மர்ந்தாய்
சேமமுன் நாமமும் தருமே - தாயே
. சேவடி பணிந்தே வாழ்வோம்! ... 3
திங்களில் தங்கபா வாடை - தாயே
. திருவுரு தரிசனம் காண்போம்
மங்கைநீ புட்பபா வாடை - தாயே
. மங்கல வெள்ளியில் காண்போம்! ... 4
நோயுடன் தோஶமும் போகத் - தாயே
. உன்கழல் போற்றியே வாழ்வோம்
சேயென எம்மைக் காத்தே - தாயே
. சீர்பெறும் வகையருள் வாயே! ... 5
--ரமணி, 19/05/2014, கலி.05/02/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 11.
வைகாசி 6
ஶ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு.
சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
பெருமாள் தரிசனம்
(நேரிசை வெண்பா)
பெரிய பெருமாள் பெயர்கொள் அரங்கன்
கருவறை நீங்கி வருவன் - பெரியாழ்வார்
வல்லியைக் கொண்டரங்க மன்னார் புறப்பாடு
வில்லிபுத் தூரினில் இன்று.
தோளுக் கினியானால் தூக்க உலாவரும்
தாளைப் பணிந்தால் தகவுறும் - மூளும்
வினையெலாம் சாத்தூரின் வேங்கடவன் ஆளும்
கனிவில் மறையும் கரைந்து.
--ரமணி, 20/05/2014, கலி.06/02/5115
*****
வைகாசி 6
ஶ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு.
சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
பெருமாள் தரிசனம்
(நேரிசை வெண்பா)
பெரிய பெருமாள் பெயர்கொள் அரங்கன்
கருவறை நீங்கி வருவன் - பெரியாழ்வார்
வல்லியைக் கொண்டரங்க மன்னார் புறப்பாடு
வில்லிபுத் தூரினில் இன்று.
தோளுக் கினியானால் தூக்க உலாவரும்
தாளைப் பணிந்தால் தகவுறும் - மூளும்
வினையெலாம் சாத்தூரின் வேங்கடவன் ஆளும்
கனிவில் மறையும் கரைந்து.
--ரமணி, 20/05/2014, கலி.06/02/5115
*****
அழகழகான கருத்துரு பா க்கள் - பாராட்டுகள்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 12.
வைகாசி 7
திருப்பதி ஶ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்
நாரணன் நீராட்டு
(அறுசீர் விருத்தம்: காய் மா மா ... விளம் மா மா)
ஆகாய கங்கைத் தீர்த்தம்
. ஆயிரம் கலசம் கொண்டே
மாகாயம் மீது வார்க்க
. மஞ்சனம் ஆடும் மாயன்
காகோதம் மீது துயிலும் ... ... [காகோதம் = காகோதரம் = பாம்பு]
. கடல்வணன் கோலம் காண
மோகத்தைக் கொன்றே வாழ்வில்
. யோகமே அருள்செய் வானே.
கோவிந்தன் மூல உருவில்*
. கோவணம் அணிந்து காலை
ஆவிந்த னப்பால் கொண்டே
. ஆடுவான் அதன்பின் மேனிக்
காவந்த மாய்ப்ப ரிமளக் ... ... [காவந்து = காபந்து = பாதுகாப்பு]
. காப்பினை யணிந்த பின்னர்
ஆவிந்தன் தீர்த்த மாடி ... ... [ஆவிந்தன் = ஆவினம் மேய்க்கும் இடையன்]
. அலங்கர ணம்கொண் டருள்வான்.
[* http://prabanjaveliyil.blogspot.com/2014/02/blog-post_5843.html]
கௌமாரி வைண விதேவி*
. கவிந்ததோர் ஆற்ற லின்-கோ
வைமாமன் மருகன் உறவின்
. ஐக்கிய மாக உறைய
மாமாங்கம் ஆண்பெண் இருவர் .. ... [மாமாங்கம் = மாமாவான மாலின் மேனி]
. வாமமும் வலமும் காணும்
தேமாவாம் சீனி வாசன் ... ... [தேமா = தித்திப்பு மாமரம்]
. திருமலை அருள்வான் பேறே.
[* http://mahaperiyavaa.wordpress.com/2013/10/16/திருப்பதி-முருகன்-தலமா-த/]
--ரமணி, 21/05/2014, கலி.07/02/5115
*****
வைகாசி 7
திருப்பதி ஶ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்
நாரணன் நீராட்டு
(அறுசீர் விருத்தம்: காய் மா மா ... விளம் மா மா)
ஆகாய கங்கைத் தீர்த்தம்
. ஆயிரம் கலசம் கொண்டே
மாகாயம் மீது வார்க்க
. மஞ்சனம் ஆடும் மாயன்
காகோதம் மீது துயிலும் ... ... [காகோதம் = காகோதரம் = பாம்பு]
. கடல்வணன் கோலம் காண
மோகத்தைக் கொன்றே வாழ்வில்
. யோகமே அருள்செய் வானே.
கோவிந்தன் மூல உருவில்*
. கோவணம் அணிந்து காலை
ஆவிந்த னப்பால் கொண்டே
. ஆடுவான் அதன்பின் மேனிக்
காவந்த மாய்ப்ப ரிமளக் ... ... [காவந்து = காபந்து = பாதுகாப்பு]
. காப்பினை யணிந்த பின்னர்
ஆவிந்தன் தீர்த்த மாடி ... ... [ஆவிந்தன் = ஆவினம் மேய்க்கும் இடையன்]
. அலங்கர ணம்கொண் டருள்வான்.
[* http://prabanjaveliyil.blogspot.com/2014/02/blog-post_5843.html]
கௌமாரி வைண விதேவி*
. கவிந்ததோர் ஆற்ற லின்-கோ
வைமாமன் மருகன் உறவின்
. ஐக்கிய மாக உறைய
மாமாங்கம் ஆண்பெண் இருவர் .. ... [மாமாங்கம் = மாமாவான மாலின் மேனி]
. வாமமும் வலமும் காணும்
தேமாவாம் சீனி வாசன் ... ... [தேமா = தித்திப்பு மாமரம்]
. திருமலை அருள்வான் பேறே.
[* http://mahaperiyavaa.wordpress.com/2013/10/16/திருப்பதி-முருகன்-தலமா-த/]
--ரமணி, 21/05/2014, கலி.07/02/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 13.
வைகாசி 8
சுவாமிமலை ஶ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
பத்தனென ஆட்கொள்வாய் சுப்பையா!
(தரவு கொச்சகக் கலிப்பா)
அப்பனுக்குப் ஓங்காரப் பாடம்சொன்ன சுப்பையா!
அப்பொருளின் ஆதார அதிர்வெனக்கே எப்பய்யா?
ஒப்பில்லாத சுவாமிமலை ஒண்பொருளே சுப்பையா!
எப்பவுமே நான்செய்யும் எத்தனமேன் தப்பய்யா?
சத்திமகன் சத்திமூன்று சமையுமந்த வயிரவேல்!
நத்தகத்தின் எண்ணமதில் நின்றொளிரும் ஞானவேல்! ... [நத்தகம் = நத்தும் அகம் = விழையும் மனம்]
வித்தகத்தின் தத்துவமாய் வீற்றிருக்கும் வெற்றிவேல்!
பித்தகத்தன் என்றனுக்கோ எத்தனையோ கருமுள்வேல்!
அத்தன்சேய் நத்தாயோ மத்தனெனை முருகையா!
வித்தமெனக் காண்பதெலாம் வீணான சருகையா!
சித்த-மதில் உன்வேலால் சிதைப்பதுதான் எப்பய்யா?
பத்தனென ஆட்கொள்வாய் பரிவுடனே சுப்பையா!
--ரமணி, 22/05/2014, கலி.08/02/5115
*****
வைகாசி 8
சுவாமிமலை ஶ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
பத்தனென ஆட்கொள்வாய் சுப்பையா!
(தரவு கொச்சகக் கலிப்பா)
அப்பனுக்குப் ஓங்காரப் பாடம்சொன்ன சுப்பையா!
அப்பொருளின் ஆதார அதிர்வெனக்கே எப்பய்யா?
ஒப்பில்லாத சுவாமிமலை ஒண்பொருளே சுப்பையா!
எப்பவுமே நான்செய்யும் எத்தனமேன் தப்பய்யா?
சத்திமகன் சத்திமூன்று சமையுமந்த வயிரவேல்!
நத்தகத்தின் எண்ணமதில் நின்றொளிரும் ஞானவேல்! ... [நத்தகம் = நத்தும் அகம் = விழையும் மனம்]
வித்தகத்தின் தத்துவமாய் வீற்றிருக்கும் வெற்றிவேல்!
பித்தகத்தன் என்றனுக்கோ எத்தனையோ கருமுள்வேல்!
அத்தன்சேய் நத்தாயோ மத்தனெனை முருகையா!
வித்தமெனக் காண்பதெலாம் வீணான சருகையா!
சித்த-மதில் உன்வேலால் சிதைப்பதுதான் எப்பய்யா?
பத்தனென ஆட்கொள்வாய் பரிவுடனே சுப்பையா!
--ரமணி, 22/05/2014, கலி.08/02/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 14.
வைகாசி 8
தத்தாத்திரய ஜயந்தி
(பொதுவாக தத்தரின் ஜயந்தி மார்கழிப் பௌர்ணமியை ஒட்டியே வந்தாலும்
இன்றைய நாளும் அதைக் காட்டுவதால், அவரை விட்டுவைப்பானேன்?)
தத்தரின் உண்டோ குரு!
(வெண்பா)
கணபதி துதி
உந்தை மலரவன் உம்பியின் மாமனார்
தந்தருட் செல்வமாய் அத்திரி பத்தினி
உந்தியில் தோன்றிய உண்மைக் குருவினை
வந்தனம் செய்ய வருள். ... 1
தத்தர் துதி
மூவராம் தேவரின் கூறென வந்தவர்
யாவரும் நாடிடும் மாநெறி தந்தவர்
யாவுமே வாழ்வினில் ஆசான் எனக்கொளின்
ஆவதில் லாதெதென் றார். ... 2
இருபத்து நான்கு இனமாய் விளங்கும்
உருவைத் தமது குருவெனக் கொண்டவர்
தத்தர் நமக்குத் தருவரே சாதனை
இத்தரை வாழ்வினி லே. ... 3
அஞ்செனும் பூதமும் சந்திரன் சூரியன்
கொஞ்சும் புறவினம் குன்றுறும் கட்செவி
தேன்தரும் தேனீயும் தேன்கொளும் கள்வனும்
மீனொடு மானும் இரைகொள் பருந்தும்
விலைமகள் விட்டில் வலைகொள் சிலந்தி
சிலீமுகம் செய்வனும் சிந்துரம் பாம்பும்
குளவி குழந்தை குமரி கடலென்
றுளவுரு யாவும் குரு. ... 4
தத்தரின் லீலையில் தாழ்வுறும் மாயையே
தத்தரின் நாமம் தரணியில் நல்வழி
தத்தரைப் போற்றத் தளையெலாம் நீங்கியே
முத்தியை உள்ளும் மனம். ... 5
--ரமணி, 23/05/2014, கலி.09/02/5115
*****
வைகாசி 8
தத்தாத்திரய ஜயந்தி
(பொதுவாக தத்தரின் ஜயந்தி மார்கழிப் பௌர்ணமியை ஒட்டியே வந்தாலும்
இன்றைய நாளும் அதைக் காட்டுவதால், அவரை விட்டுவைப்பானேன்?)
தத்தரின் உண்டோ குரு!
(வெண்பா)
கணபதி துதி
உந்தை மலரவன் உம்பியின் மாமனார்
தந்தருட் செல்வமாய் அத்திரி பத்தினி
உந்தியில் தோன்றிய உண்மைக் குருவினை
வந்தனம் செய்ய வருள். ... 1
தத்தர் துதி
மூவராம் தேவரின் கூறென வந்தவர்
யாவரும் நாடிடும் மாநெறி தந்தவர்
யாவுமே வாழ்வினில் ஆசான் எனக்கொளின்
ஆவதில் லாதெதென் றார். ... 2
இருபத்து நான்கு இனமாய் விளங்கும்
உருவைத் தமது குருவெனக் கொண்டவர்
தத்தர் நமக்குத் தருவரே சாதனை
இத்தரை வாழ்வினி லே. ... 3
அஞ்செனும் பூதமும் சந்திரன் சூரியன்
கொஞ்சும் புறவினம் குன்றுறும் கட்செவி
தேன்தரும் தேனீயும் தேன்கொளும் கள்வனும்
மீனொடு மானும் இரைகொள் பருந்தும்
விலைமகள் விட்டில் வலைகொள் சிலந்தி
சிலீமுகம் செய்வனும் சிந்துரம் பாம்பும்
குளவி குழந்தை குமரி கடலென்
றுளவுரு யாவும் குரு. ... 4
தத்தரின் லீலையில் தாழ்வுறும் மாயையே
தத்தரின் நாமம் தரணியில் நல்வழி
தத்தரைப் போற்றத் தளையெலாம் நீங்கியே
முத்தியை உள்ளும் மனம். ... 5
--ரமணி, 23/05/2014, கலி.09/02/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 15.
வைகாசி 10
திருநள்ளாறு ஶ்ரீசனீஸ்வரபகவான் சிறப்பு ஆராதனை
நள்ளாற்று நீலன்
(கலிவிருத்தம்: விளம் மா விளம் மா)
சனையெனில் மெதுவாம் சரமெனில் அசைவாம்
மனிதரின் வாழ்வில் மந்தனாய் ஊர்ந்தே
வினைகளை விதைத்தே விளைத்தபின் யருளும்
சனியவன் ஆட்சி சர்வமும் கொளுமே. ... 1
கார்வண நீலன் காக்கைய மர்ந்தே
ஊர்பவன் அச்சத் துருவனாய்க் காண்போம்
சூர்யனின் மைந்தன் சூழ்வினை செய்தே
சோர்வுறச் செய்வன் சுகமினி வரவே. ... 2
நளன்தனைப் பிடித்து நலிவுறச் செய்தே
திளைசனி விட்ட திருநள ஆற்றில்
குளித்தபின் சிவன்பால் குனிதலைச் செய்தே
நிளுதனம் விளைக்கும் நீலனைப் நாடி ... 3 ... [நிளுதனம் = அழிக்கை]
தரிசனம் செய்து தயையினை வேண்டக்
கரிசனம் கொண்டே கதிர்மகன் அருளும்
பரிவினில் தீமை பற்றுதல் நிற்க
வருவது எல்லாம் ஆகுமே நன்மை. ... 4
--ரமணி, 24/05/2014, கலி.10/02/5115
*****
வைகாசி 10
திருநள்ளாறு ஶ்ரீசனீஸ்வரபகவான் சிறப்பு ஆராதனை
நள்ளாற்று நீலன்
(கலிவிருத்தம்: விளம் மா விளம் மா)
சனையெனில் மெதுவாம் சரமெனில் அசைவாம்
மனிதரின் வாழ்வில் மந்தனாய் ஊர்ந்தே
வினைகளை விதைத்தே விளைத்தபின் யருளும்
சனியவன் ஆட்சி சர்வமும் கொளுமே. ... 1
கார்வண நீலன் காக்கைய மர்ந்தே
ஊர்பவன் அச்சத் துருவனாய்க் காண்போம்
சூர்யனின் மைந்தன் சூழ்வினை செய்தே
சோர்வுறச் செய்வன் சுகமினி வரவே. ... 2
நளன்தனைப் பிடித்து நலிவுறச் செய்தே
திளைசனி விட்ட திருநள ஆற்றில்
குளித்தபின் சிவன்பால் குனிதலைச் செய்தே
நிளுதனம் விளைக்கும் நீலனைப் நாடி ... 3 ... [நிளுதனம் = அழிக்கை]
தரிசனம் செய்து தயையினை வேண்டக்
கரிசனம் கொண்டே கதிர்மகன் அருளும்
பரிவினில் தீமை பற்றுதல் நிற்க
வருவது எல்லாம் ஆகுமே நன்மை. ... 4
--ரமணி, 24/05/2014, கலி.10/02/5115
*****
- Sponsored content
Page 19 of 36 • 1 ... 11 ... 18, 19, 20 ... 27 ... 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 36
|
|