புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 15 of 36 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 25 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 27, 2014 5:51 pm

அபாரம் ரமணி ஐயா.. கட்டளைக் கலிவிருத்தத்தின் விதிகள் எழுதியிருக்கிறீர்களா.. கட்டளைக் கலித்துறை முயன்றிருக்கிறேன்.. விருத்தம் முயன்றதில்லை..

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Feb 27, 2014 8:17 pm

வணக்கம் திரு. சின்னக்கண்ணன்.

உங்கள் பாராட்டுக்கு நன்றி. கட்டளைக் கலிவிருத்தம் என்று தனியான கலிப்பாவினம் இல்லை. கலிவிருத்தம் கட்டளையாக--அதாவது ஒவ்வோர் அடியிலும் எழுத்துகளின் எண்ணிக்கை ஒன்றுபோல்--அமைந்தால் அதைக் கட்டளைக் கலிவிருத்தம் எனலாம். அடிகள் நிரையசையில் தொடங்கின் ஒற்றுகள் தவிர்த்து 13 எழுத்துகளும், நேரசையில் தொடங்கின் 12 எழுத்துகளும் வரவேண்டும்.

இந்தப் பாடலின் ஓலிநயத்துக்குக் காரணம் அதன் புஜங்க அமைப்பே. சமஸ்கிருத மொழியில் போன்று தமிழிலும் புஜங்க அமைப்பு ’லகு-குரு-குரு’ என்ற நிரலில் ஒவ்வோர் அடியிலும் நான்கு முறை வரவேண்டும். தமிழில் ’லகு’ என்பது ஒரு குறிலாகக் கொள்ளலாம். ’குரு’ என்பது ஒரு நெடிலாகவோ அல்லது ஒற்றடுத்துவரும் குறிலாகவோ கொள்ளலாம். இப்படி வரும்போது அடிகள் நிரையசையில் தொடங்கி (நேரசையில் தொடங்க முடியாது என்பதை அறிக) ஒவ்வோர் அடியிலும் 12 எழுத்துகளே வரும்.

உதாரணங்கள்:

’அருத்தன் நிருத்தன் கருத்தன் விருத்தன்’ .. குறில்+குறிலொற்று+குறிலொற்று
’நிலாவே யுலாவா னிலாதான மீனே’ - குறில்+நெடில்+நெடில்
’இரந்தே கபாலத்தி லேற்றுண்ணு மீசன்’ - இரு வகைகளும் கலந்து வருவது

இந்தப் பாடலை நான் ஆதி சங்கரரின் சமஸ்கிருத துதி ’கணேஶ புஜங்கம்’ அடிப்படையில் முயன்றேன். மூலத் துதியின் ஆங்கில வடிவமும் பாட்டும் கீழே உள்ள சுட்டிகளில்:

https://www.youtube.com/watch?v=T6WAHTyZwGo
http://dailyslogams.blogspot.in/2013/01/sri-ganesha-bhujanga-stotram.html

நீங்களும் மற்ற அன்பர்களும் புஜங்கம் முயன்று பார்க்கலாமே?

அன்புடன்,
ரமணி

*****


சின்னக் கண்ணன் wrote:அபாரம் ரமணி ஐயா.. கட்டளைக் கலிவிருத்தத்தின் விதிகள் எழுதியிருக்கிறீர்களா.. கட்டளைக் கலித்துறை முயன்றிருக்கிறேன்.. விருத்தம் முயன்றதில்லை..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Mar 02, 2014 10:23 am

அன்பின் ரமணி ஐயா,
விரிவான பதிலுக்கு நன்றி.. விருத்தம் பற்றிய விளக்கத்துக்கும் நன்றி..

புஜங்கமா.. நானா..(டிஆர். மகாலிங்கம் குரலில் வாசிக்கவும் புன்னகை ) இருப்பினும் முயற்சி செய்கிறேன்..

அன்புடன்
சின்னக் கண்ணன்..

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Mar 05, 2014 9:00 am

சிவராத்திரி துதி
(எண்சீரடி விருத்தம்: புளிமாங்காய் மா காய் காய் மா கூவிளம் கூவிளம்)

பகலாகும் சக்தி யிரவாகும் சிவமே
. அவைசேரும் தினமே - அர்த்தநா ரீசிவன்!
புகலாகும் சக்தி வுயிராகும் சிவமே ... [புகல் = உடம்பு]
. உருவாகும் மனிதன் - அர்த்தநா ரீசிவன்!
இகலாகும் நெஞ்சில் ஒன்றாகும் எண்ணத்
. தெளிவாகும் உள்ளம் - அர்த்தநா ரீசிவன்!
உகவாயோ நெஞ்சே உனைநீயும் கொண்டே
. உன்மூலம் காண - அர்த்தநா ரீசிவன்! ... 1

இடமாடும் பாதம் வலமாடும் போது
. எழுலோகம் மாறும் - அர்த்தநா ரீசிவா!
விடையாடப் பிறையோ டலைபாயு மாறும்
. இடையாடும் உரிவை - அர்த்தநா ரீசிவா!
படையாவும் ஆடக் காலங்கள் மாறும்
. பரிணாமம் நேரும் - அர்த்தநா ரீசிவா!
தடையாவும் விள்ளும் பரிமாணம் மாறும்
. சடையாகப் பின்னும் - அர்த்தநா ரீசிவா! ... 2

இறவாத வாழ்வும் பிறவாத நிலையும்
. பெறுவேனோ நானும் - அர்த்தநா ரீசிவா!
குறையாத ஞானம் குன்றாத அன்பில்
. உறைவேனோ நானும் - அர்த்தநா ரீசிவா!
மறையாவும் போற்ற மன்றாடும் தேவா
. மனம்வந்தே ஆடு - அர்த்தநா ரீசிவா!
திறையாவும் தீர்ந்த நிறையாக்கி யென்னைப்
. பிறையாகச் சூடாய் - அர்த்தநா ரீசிவா! ... 3

--ரமணி, 27/02/2014, கலி.15/11/5114
(சிவராத்திரி தினம்)

*****


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 05, 2014 2:39 pm

கஷ்டம் தான்..சின்னதா முயன்றிருக்கிறேன்..
புளிமாங்காய் மா காய் மா
காய் மா  கூவிளம் கூவிளம்


கவிதையிலே சிவத்தை துதித்தீரே அழகாய்
..கருணையுடன் அவனும் கண்திறந் துமது
பவித்திரமாம் அன்பைப் பக்குவமாய் உணர்ந்தே
..பலவாறாய்த் தருவான் நாளிலும் நன்மைகள்
தவிக்கின்ற மனதைத் தயங்காமல் தேற்றி
..தங்கமென ஜொலிக்க ஆரமாய் இங்குதான்
நவின்றிடுவீர் இன்னும் நயங்களுடன் பாடல்
..நலமுடனே தரவும் பொங்குமே இன்பமே


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Mar 05, 2014 6:40 pm

அழகு!

பெரியோர்களிடம் கற்றது மறக்குமா என்ன? நிறைய எழுதுங்கள். சந்தவசந்தம் குழுமத்திலும் வாருங்கள்.

ரமணி

சின்னக் கண்ணன் wrote:கஷ்டம் தான்..சின்னதா முயன்றிருக்கிறேன்..
புளிமாங்காய் மா காய் மா
காய் மா  கூவிளம் கூவிளம்


கவிதையிலே சிவத்தை துதித்தீரே அழகாய்
..கருணையுடன் அவனும் கண்திறந் துமது
பவித்திரமாம் அன்பைப் பக்குவமாய் உணர்ந்தே
..பலவாறாய்த் தருவான் நாளிலும் நன்மைகள்
தவிக்கின்ற மனதைத் தயங்காமல் தேற்றி
..தங்கமென ஜொலிக்க ஆரமாய் இங்குதான்
நவின்றிடுவீர் இன்னும் நயங்களுடன் பாடல்
..நலமுடனே தரவும் பொங்குமே இன்பமே


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 10, 2014 6:41 pm

தெய்வ தரிசனம்: அரங்கன் பஞ்சகம்
(கலிவிருத்தம்)

குரங்காட்ட வாழ்வில் கோணல்கள் தானே?
அரங்காட்டு வாரே அரங்கத்தி லாள ... [அரம் = கூர்மை/கருவி]
உரங்காட்டி எம்மை உய்விப்போர் ஆரே? ... [உரங்காட்டுதல் = அன்பு பாராட்டுதல்]
அரங்காவுன் கண்ணால் ஆட்கொண்ட ருள்வாய்! ... 1

குரங்காயுன் தோழர் வலங்காட்டி மனையாள் ... [வலம் = வெற்றி]
உரங்காட்டிக் காத்தே உன்பாதம் கொண்டார்
சிரங்காளு மேனி சிரஞ்ஜீவி யாமோ?
அரங்காவுன் கழலால் ஆட்கொண்ட ருள்வாய்! ... 2

எரங்காட்டில் வீழ்ந்தே எரியுண்ணும் மேனி ... [எரங்காடு = பாழ்நிலம்]
திரங்காட்டிக் காத்தே தீமைகள் சேர்த்தேன் ... [திரம் = உறுதி]
சிரங்காட்டு மனமுள் சிங்காரம் குன்ற
அரங்காவுன் கையால் ஆட்கொண்ட ருள்வாய்! ... 3

அறங்காட்டும் வழியில் ஆளாகிப் போகேன்
திறங்காட்டி வாழ்வில் தீவாகிப் போனேன்
உறங்காமல் உறங்கி உரகமணை யண்ணல் ... [உரகம் = பாம்பு]
அரங்காவுன் அருகே ஆட்கொண்ட ருள்வாய்! ... 4

சிரங்காட்டிக் கரங்காட்டிக் குரங்காட்டி யாகி
உரங்காட்டி யறங்காட்டி மறங்காட்டி யென்னை
பரங்காட்டித் துரங்காட்டித் துறங்காட்டி யென்றும் ... [துரம் = சுமை/பொறுப்பு; துறம் = துறவு]
அரங்காவுன் னுடனே ஆட்கொண்ட ருள்வாய்! ... 5

--ரமணி, 23/02/2014, கலி.11/11/5114

*****


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 11, 2014 8:59 am

-
மாட்டுக்கு இருப்பது வால், மரத்தை அறுப்பது வாள்
என்று அந்த காலத்திலே பள்ளிக்கூடத்தில் தமிழை
சொல்லிக் கொடுத்தார்கள்...
-
அப்படி படித்தவர்களால்,தமிழை பிழையின்றி எழுதவும்
சங்க இலக்கிய பாடல்களை அர்த்தம் தெரிந்து சுவைக்கவும்
முடிந்தது...
-
அப்படி வார்த்தை சித்துக்களால் கவி புனைந்து ரசிக்க
வைக்கிறீர்கள்...
-
 ரமணியின் கவிதைகள் - Page 15 1571444738 ரமணியின் கவிதைகள் - Page 15 1571444738 
-
ரமணியின் கவிதைகள் - Page 15 2HAWxMU6QmaoDNcPPy2q+god

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 11, 2014 9:27 am

அய்யாசாமி ராம் அவர்களே,

வணக்கம். உங்கள் பாராட்டில் மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

அன்புடன்,
ரமணி


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Mar 11, 2014 10:34 am

ரமணியின் கவிதைகள் - Page 15 1571444738 ரமணியின் கவிதைகள் - Page 15 3838410834  பாடல்கள் வெகு அழகு ரமணி ஐயா..

Sponsored content

PostSponsored content



Page 15 of 36 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 25 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக