Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
+28
வேல்முருகன்
T.N.Balasubramanian
M.Saranya
Dr.S.Soundarapandian
Ponmudi Manohar
bparthasarathi
கிருஷ்ணா
ந.க.துறைவன்
myimamdeen
சின்னக் கண்ணன்
KINGUMAR
சிவா
ayyasamy ram
அப்துல்
முனைவர் ம.ரமேஷ்
M.M.SENTHIL
பாலாஜி
mbalasaravanan
ராஜு சரவணன்
அசுரன்
Ahanya
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
றினா
அச்சலா
சதாசிவம்
ஜாஹீதாபானு
ரமணி
32 posters
Page 14 of 36
Page 14 of 36 • 1 ... 8 ... 13, 14, 15 ... 25 ... 36
ரமணியின் கவிதைகள்
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
இறை வண்ணம் இசை வண்ணம்
1. கணபதி
(தத்தன தனதன தனதான)
அத்தனின் முதல்மக னடிபேண
. அப்பிடும் வினைமல மகலாதோ?
மத்தள வயிறனும் மனமார
. மப்புறு மனமது தெளியாதோ?
வித்தகன் பெயர்புகழ் விரவாது
. எத்தனை பொழுதுகள் செலவாகும்
நித்தமும் கரிமுகன் நினைவோடு
. நித்தில மனம்பெற விழைவேனே. ... 1
--ரமணி, 21/12/2012
*****
1. கணபதி
(தத்தன தனதன தனதான)
அத்தனின் முதல்மக னடிபேண
. அப்பிடும் வினைமல மகலாதோ?
மத்தள வயிறனும் மனமார
. மப்புறு மனமது தெளியாதோ?
வித்தகன் பெயர்புகழ் விரவாது
. எத்தனை பொழுதுகள் செலவாகும்
நித்தமும் கரிமுகன் நினைவோடு
. நித்தில மனம்பெற விழைவேனே. ... 1
--ரமணி, 21/12/2012
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
சிவத்துதிக் குறும்பாக்கள்
செஞ்சடையில் கொப்பளிக்கும் ஆறு
நஞ்சரவு மேனியெலாம் நீறு
. . பாதவிணை பற்றிடவே
. . வேதனைகள் இற்றிடுமே
அஞ்செழுத்தில் வந்திடுமே ஏறு. ... 1
மான்மழுவே தீக்கரமே சூலம்
கான்நடமே கூளிகளின் ஓலம்
. . இருவடியைப் பணிந்திடுவோம்
. . திருநீற்றை யணிந்திடுவோம்
தான்நீக்கும் நாதனவன் கோலம். ... 2
வாழவைக்கும் தேவனவன் சிவனே
ஏழைகளின் இறையாவான் அவனே
. . வேதவொலி முழங்கிடவே
. . பேதமெலாம் கழன்றிடவே
பாழியதில் போற்றிடுவோ மவனை. ... 3
[பாழி=கோவில்]
--ரமணி, 24/01/2014
*****
செஞ்சடையில் கொப்பளிக்கும் ஆறு
நஞ்சரவு மேனியெலாம் நீறு
. . பாதவிணை பற்றிடவே
. . வேதனைகள் இற்றிடுமே
அஞ்செழுத்தில் வந்திடுமே ஏறு. ... 1
மான்மழுவே தீக்கரமே சூலம்
கான்நடமே கூளிகளின் ஓலம்
. . இருவடியைப் பணிந்திடுவோம்
. . திருநீற்றை யணிந்திடுவோம்
தான்நீக்கும் நாதனவன் கோலம். ... 2
வாழவைக்கும் தேவனவன் சிவனே
ஏழைகளின் இறையாவான் அவனே
. . வேதவொலி முழங்கிடவே
. . பேதமெலாம் கழன்றிடவே
பாழியதில் போற்றிடுவோ மவனை. ... 3
[பாழி=கோவில்]
--ரமணி, 24/01/2014
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
பிரதோஷத் துதி 5.
தேட்டளவில் வேற்றுமையே!
(குறும்பா)
கருவறையில் அபிடேக மூலவன்
பிரகாரம் உலவுகையில் மேலவன்
. . பாதந்தோள் அழுத்திடவே
. . வேதவொலி வழுத்திடவே
வருவானே மேனியிரு பாலவன். ... 1
பாற்கடலில் ஓங்கியெழு நஞ்சினை
நாற்கரத்தில் ஓர்கரத்தில் பஞ்சென
. . ஏந்தியவன் உண்டிடவே
. . ஏந்திழையாள் கண்டிடவே
மேற்கழுத்தில் வடுநிற்கும் பிஞ்சென. ... 2
நந்தியிரு கொம்பிடையே ஆடுவான்
பந்தமெலாம் நலிந்திடவே சாடுவான்
. . திருமறைகள் போற்றியவன்
. . அருமறைகள் ஆற்றியவன்
சந்தியிலே ஊர்வலமும் நாடுவான். ... 3
வானவரும் காணாத பிரமமாம்
நானிலத்தை இயக்குகின்ற தருமமாம்
. . கருமபல தாதனவன்
. . உருவுலக நாதனவன்
மானிடர்க்கோ விளங்காத மருமமாம். ... 4
ஏட்டளவில் மனதினிலே ஏற்றியுமே
பாட்டளவில் எழுதியுமே போற்றியுமே
. . காற்றினிலே போனதுவாய்
. . நேற்றெனவே ஆனதுவாய்
தேட்டளவில் தெரிவதெலாம் வேற்றுமையே. ... 5
--ரமணி, 28/01/2014
*****
தேட்டளவில் வேற்றுமையே!
(குறும்பா)
கருவறையில் அபிடேக மூலவன்
பிரகாரம் உலவுகையில் மேலவன்
. . பாதந்தோள் அழுத்திடவே
. . வேதவொலி வழுத்திடவே
வருவானே மேனியிரு பாலவன். ... 1
பாற்கடலில் ஓங்கியெழு நஞ்சினை
நாற்கரத்தில் ஓர்கரத்தில் பஞ்சென
. . ஏந்தியவன் உண்டிடவே
. . ஏந்திழையாள் கண்டிடவே
மேற்கழுத்தில் வடுநிற்கும் பிஞ்சென. ... 2
நந்தியிரு கொம்பிடையே ஆடுவான்
பந்தமெலாம் நலிந்திடவே சாடுவான்
. . திருமறைகள் போற்றியவன்
. . அருமறைகள் ஆற்றியவன்
சந்தியிலே ஊர்வலமும் நாடுவான். ... 3
வானவரும் காணாத பிரமமாம்
நானிலத்தை இயக்குகின்ற தருமமாம்
. . கருமபல தாதனவன்
. . உருவுலக நாதனவன்
மானிடர்க்கோ விளங்காத மருமமாம். ... 4
ஏட்டளவில் மனதினிலே ஏற்றியுமே
பாட்டளவில் எழுதியுமே போற்றியுமே
. . காற்றினிலே போனதுவாய்
. . நேற்றெனவே ஆனதுவாய்
தேட்டளவில் தெரிவதெலாம் வேற்றுமையே. ... 5
--ரமணி, 28/01/2014
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
தெய்வ தரிசனம்: எண்கண் சுப்ரமண்ய சுவாமி
(விவரம்: http://temple.dinamalar.com/New.php?id=741)
(குறும்பா)
எண்கண்ணூர் சுப்ரமண்ய சுவாமியே
நண்ணுவோரை நல்லறத்தில் நேமியே ... [நேமித்தல்=நியமித்தல்]
. . மயில்போலே மனையொன்று
. . குயில்போலே இனுமொன்று
அண்ணலவன் அன்னையவள் வாமியே. ... 1 ... [வாமி=பார்வதி]
பிரணவத்தின் பொருளறியா திருளினால்
பிரமனிடம் படைத்தலையே உருவினாய்
. . எண்கண்ணன் வழிபடவே ... [என்கண்ணன் = பிரம்மன்]
. . எண்தோளன் வழிவிடவே ... [எண்டோளன் = சிவன்]
பிரணவமும் படைத்தலுமே அருளினாய். ... 2
ஆறுமுகன் மூலவனின் சிற்பமதே
வேறெங்கும் காணாத அற்புதமே
. . வேலவனின் எடைமுழுதும்
. . கோலமயில் இடையழுந்தும்
ஓர்காலில் மயிலதுவும் நிற்பதுவே. ... 3
முன்புறமும் பின்புறமும் மூன்றுமுகம்
பன்னிருகை ஆயுதங்கள் தோன்றுமுகம்
. . வேலுடனே சக்கரமும்
. . சூலமும்சே வற்கொடியும்
உன்னடியார் உள்நிறைந்தே யூன்றுமுகம். ... 4
சிக்கலெட்டுக் குடியெண்கண் மூவிடமே ... [சிக்கல், எட்டுக்குடி, எண்கண் என்ற மூன்று தலங்கள்]
தக்கணனின் மகன்நீயும் மேவிடவே ... [தக்கணன் = தட்சிணாமூர்த்தி]
. . ஒருசிற்பி ஓரமைப்பில்
. . திருவுருவைச் சீரமைக்க
சக்திமகன் அருளும்வழி கோலிடுமே. ... 5
இரண்டாவது குலோத்துங்கச் சோழனுமே
அரன்கோவில் என்றமைத்த பாழியிதே
. . எண்டோளன் அரனனெனினும்
. . எண்கண்ணூர் அரன்மகனே
பிரதானம் வழிவந்த வாழையென. ... 6
பிருகுமுனி சாபத்தினால் கொற்றவனும்
உருவத்தில் சிம்மமுகம் பெற்றனனே
. . தைத்திங்கள் அருதினமுன்
. . கைத்தலமும் தரிசனமும்
அரசனவன் தன்முகமும் பெற்றனனே. ... 7
உறுகோளாய் உருத்துவரும் வேதனையா?
அறுமுகனுக் கபிஷேகா ராதனையே
. . இளநீரும் சந்தனமும்
. . உளமாறும் வந்தனையில்
குறைநீங்கி உள்ளோங்கும் சாதனையே. ... 8
பன்னிருகை வேலவனின் தாள்பணிந்தே
அன்னவனின் நலம்விளைக்கும் நீறணிந்தே
. . விரதமுடன் வழிபடவே
. . வருவினைகள் வழிவிடுமே
உன்னதமாய் உயர்ந்திடுவோ மேதுணிந்தே. ... 9
தக்கணனின் மகனெனவே தேவனிவன்
தெக்குநோக்கி யருள்செய்யும் வேதமகன்
. . அறிவாயுள் உடல்நலனும்
. . செறிஞானம் திடமனமும்
எக்கணமும் நலம்வரவே ஓதுவமே. ... 10
--ரமணி, 05/02/2014, கலி.23/10/5114
*****
(விவரம்: http://temple.dinamalar.com/New.php?id=741)
(குறும்பா)
எண்கண்ணூர் சுப்ரமண்ய சுவாமியே
நண்ணுவோரை நல்லறத்தில் நேமியே ... [நேமித்தல்=நியமித்தல்]
. . மயில்போலே மனையொன்று
. . குயில்போலே இனுமொன்று
அண்ணலவன் அன்னையவள் வாமியே. ... 1 ... [வாமி=பார்வதி]
பிரணவத்தின் பொருளறியா திருளினால்
பிரமனிடம் படைத்தலையே உருவினாய்
. . எண்கண்ணன் வழிபடவே ... [என்கண்ணன் = பிரம்மன்]
. . எண்தோளன் வழிவிடவே ... [எண்டோளன் = சிவன்]
பிரணவமும் படைத்தலுமே அருளினாய். ... 2
ஆறுமுகன் மூலவனின் சிற்பமதே
வேறெங்கும் காணாத அற்புதமே
. . வேலவனின் எடைமுழுதும்
. . கோலமயில் இடையழுந்தும்
ஓர்காலில் மயிலதுவும் நிற்பதுவே. ... 3
முன்புறமும் பின்புறமும் மூன்றுமுகம்
பன்னிருகை ஆயுதங்கள் தோன்றுமுகம்
. . வேலுடனே சக்கரமும்
. . சூலமும்சே வற்கொடியும்
உன்னடியார் உள்நிறைந்தே யூன்றுமுகம். ... 4
சிக்கலெட்டுக் குடியெண்கண் மூவிடமே ... [சிக்கல், எட்டுக்குடி, எண்கண் என்ற மூன்று தலங்கள்]
தக்கணனின் மகன்நீயும் மேவிடவே ... [தக்கணன் = தட்சிணாமூர்த்தி]
. . ஒருசிற்பி ஓரமைப்பில்
. . திருவுருவைச் சீரமைக்க
சக்திமகன் அருளும்வழி கோலிடுமே. ... 5
இரண்டாவது குலோத்துங்கச் சோழனுமே
அரன்கோவில் என்றமைத்த பாழியிதே
. . எண்டோளன் அரனனெனினும்
. . எண்கண்ணூர் அரன்மகனே
பிரதானம் வழிவந்த வாழையென. ... 6
பிருகுமுனி சாபத்தினால் கொற்றவனும்
உருவத்தில் சிம்மமுகம் பெற்றனனே
. . தைத்திங்கள் அருதினமுன்
. . கைத்தலமும் தரிசனமும்
அரசனவன் தன்முகமும் பெற்றனனே. ... 7
உறுகோளாய் உருத்துவரும் வேதனையா?
அறுமுகனுக் கபிஷேகா ராதனையே
. . இளநீரும் சந்தனமும்
. . உளமாறும் வந்தனையில்
குறைநீங்கி உள்ளோங்கும் சாதனையே. ... 8
பன்னிருகை வேலவனின் தாள்பணிந்தே
அன்னவனின் நலம்விளைக்கும் நீறணிந்தே
. . விரதமுடன் வழிபடவே
. . வருவினைகள் வழிவிடுமே
உன்னதமாய் உயர்ந்திடுவோ மேதுணிந்தே. ... 9
தக்கணனின் மகனெனவே தேவனிவன்
தெக்குநோக்கி யருள்செய்யும் வேதமகன்
. . அறிவாயுள் உடல்நலனும்
. . செறிஞானம் திடமனமும்
எக்கணமும் நலம்வரவே ஓதுவமே. ... 10
--ரமணி, 05/02/2014, கலி.23/10/5114
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
பிரதோஶத் துதி: குஞ்சிதபாதன் பஞ்சகம்
(தனத்தன தானன தானன தனந்தனதானா)
புனற்சடை யாறது போகமும் புரந்தருளாதோ?
அனற்கர சோதியு மேகமுஞ் கரந்தரளாதோ?
கனற்றிடும் பார்வையே காதலுஞ் சுரந்தருளாதோ?
வனத்தினி லாடிடும் வானவன் நிரந்தருள்வானே. ... 1
தனத்தன தானன தானன தன்னனதன்ன
இடப்புற மாதவ ளீதலு மன்னையைவிஞ்சும்
சடைத்தலை மேவிடுந் தானவன் வின்னமென்றெஞ்சும்
மிடற்றினில் நீலவன் மேவிட வென்மனம்கெஞ்சும்
விடைப்புற மேறிடும் வேடனும் முன்னுறுநெஞ்சம். ... 2
தனத்தன தானன தானன தன்னனதான
உருத்திரன் மேனியி லூர்வது நஞ்சரவாகும்
குருத்துவ மாள்பவன் கோபதி பிஞ்ஞகனாவன்
தரித்திடும் நீறினில் தாபமு மெஞ்சிலதாகும்
சிரித்தவன் மூவெயி லேமனே குஞ்சிதபாதன். ... 3
தகித்திடும் தீயுட னாடிடும் நஞ்சுணிநாமம்
அகத்தினி லேறிடி லாடுமே குஞ்சிதபாதம்
இகத்தினில் வேறெதும் வேண்டல நெஞ்சினராகில்
பகுத்திடும் ஞானமும் பாய வெஞ்சினம்போமே. ... 4
தத்தன தானன தானன தாந்தனதானா
இத்தனை காலமு மீசனை யோர்ந்திலனானேன்
அத்தனின் பாதமு மாரவே சேர்ந்திலனானேன்
மத்தமும் போகவே மாதவள் சேர்ந்திடும்தேனே
சித்தினுள் ளையன் சேவடி நேர்ந்தருள்வாயே. ... 5
--ரமணி, 10-12/02/2014, கலி.30/10/5114
*****
பதம் பிரித்து:
பிரதோஶத் துதி: குஞ்சிதபாதன் பஞ்சகம்
(தனத்தன தானன தானன தனந்தனதானா)
புனற்சடை ஆறது போகமும் புரந்து-அருளாதோ?
அனற்கர சோதியும் ஏகமும் கரந்து-அரளாதோ? ... [ஏகம்=முக்தி, வீடு]
கனற்றிடும் பார்வையே காதலும் சுரந்து-அருளாதோ?
வனத்தினில் ஆடிடும் வானவன் நிரந்து-அருள்வானே. ... 1
தனத்தன தானன தானன தன்னனதன்ன
இடப்புற மாதவள் ஈதலும் அன்னையைவிஞ்சும்
சடைத்தலை மேவிடும் தானவன் வின்னமென்று-எஞ்சும் ... [தானவன்=சந்திரன்]
மிடற்றினில் நீலவன் மேவிட என்மனம்கெஞ்சும்
விடைப்புறம் ஏறிடும் வேடனும் முன்னுறுநெஞ்சம். ... 2 ... [விடைப்புறம்=எருதின் முதுகு]
தனத்தன தானன தானன தன்னனதான
உருத்திரன் மேனியில் ஊர்வது நஞ்சரவு-ஆகும்
குருத்துவம் ஆள்பவன் கோபதி பிஞ்ஞகன்-ஆவன் ... [குருத்துவம்=ஆசாரியத்தன்மை]
தரித்திடும் நீறினில் தாபமும் எஞ்சு-இலது-ஆகும்
சிரித்தவன் மூவெயில் ஏமனே குஞ்சிதபாதன். ... 3 ... [ஏமன்=எமன்]
தகித்திடும் தீயுடன் ஆடிடும் நஞ்சுணிநாமம்
அகத்தினில் ஏறிடில் ஆடுமே குஞ்சிதபாதம்
இகத்தினில் வேறெதும் வேண்டல நெஞ்சினர்-ஆகில்
பகுத்திடும் ஞானமும் பாய வெஞ்சினம்போமே. ... 4
தத்தன தானன தானன தாந்தனதானா
இத்தனை காலமும் ஈசனை ஓர்ந்திலன்-ஆனேன்
அத்தனின் பாதமும் ஆரவே சேர்ந்திலன்-ஆனேன்
மத்தமும் போகவே மாதவள் சேர்ந்திடும்தேனே ... [மத்தம்=மயக்கம்]
சித்தினுள் ஐயன் சேவடி நேர்ந்து-அருள்வாயே. ... 5
--ரமணி, 10-12/02/2014, கலி.30/10/5114
*****
(தனத்தன தானன தானன தனந்தனதானா)
புனற்சடை யாறது போகமும் புரந்தருளாதோ?
அனற்கர சோதியு மேகமுஞ் கரந்தரளாதோ?
கனற்றிடும் பார்வையே காதலுஞ் சுரந்தருளாதோ?
வனத்தினி லாடிடும் வானவன் நிரந்தருள்வானே. ... 1
தனத்தன தானன தானன தன்னனதன்ன
இடப்புற மாதவ ளீதலு மன்னையைவிஞ்சும்
சடைத்தலை மேவிடுந் தானவன் வின்னமென்றெஞ்சும்
மிடற்றினில் நீலவன் மேவிட வென்மனம்கெஞ்சும்
விடைப்புற மேறிடும் வேடனும் முன்னுறுநெஞ்சம். ... 2
தனத்தன தானன தானன தன்னனதான
உருத்திரன் மேனியி லூர்வது நஞ்சரவாகும்
குருத்துவ மாள்பவன் கோபதி பிஞ்ஞகனாவன்
தரித்திடும் நீறினில் தாபமு மெஞ்சிலதாகும்
சிரித்தவன் மூவெயி லேமனே குஞ்சிதபாதன். ... 3
தகித்திடும் தீயுட னாடிடும் நஞ்சுணிநாமம்
அகத்தினி லேறிடி லாடுமே குஞ்சிதபாதம்
இகத்தினில் வேறெதும் வேண்டல நெஞ்சினராகில்
பகுத்திடும் ஞானமும் பாய வெஞ்சினம்போமே. ... 4
தத்தன தானன தானன தாந்தனதானா
இத்தனை காலமு மீசனை யோர்ந்திலனானேன்
அத்தனின் பாதமு மாரவே சேர்ந்திலனானேன்
மத்தமும் போகவே மாதவள் சேர்ந்திடும்தேனே
சித்தினுள் ளையன் சேவடி நேர்ந்தருள்வாயே. ... 5
--ரமணி, 10-12/02/2014, கலி.30/10/5114
*****
பதம் பிரித்து:
பிரதோஶத் துதி: குஞ்சிதபாதன் பஞ்சகம்
(தனத்தன தானன தானன தனந்தனதானா)
புனற்சடை ஆறது போகமும் புரந்து-அருளாதோ?
அனற்கர சோதியும் ஏகமும் கரந்து-அரளாதோ? ... [ஏகம்=முக்தி, வீடு]
கனற்றிடும் பார்வையே காதலும் சுரந்து-அருளாதோ?
வனத்தினில் ஆடிடும் வானவன் நிரந்து-அருள்வானே. ... 1
தனத்தன தானன தானன தன்னனதன்ன
இடப்புற மாதவள் ஈதலும் அன்னையைவிஞ்சும்
சடைத்தலை மேவிடும் தானவன் வின்னமென்று-எஞ்சும் ... [தானவன்=சந்திரன்]
மிடற்றினில் நீலவன் மேவிட என்மனம்கெஞ்சும்
விடைப்புறம் ஏறிடும் வேடனும் முன்னுறுநெஞ்சம். ... 2 ... [விடைப்புறம்=எருதின் முதுகு]
தனத்தன தானன தானன தன்னனதான
உருத்திரன் மேனியில் ஊர்வது நஞ்சரவு-ஆகும்
குருத்துவம் ஆள்பவன் கோபதி பிஞ்ஞகன்-ஆவன் ... [குருத்துவம்=ஆசாரியத்தன்மை]
தரித்திடும் நீறினில் தாபமும் எஞ்சு-இலது-ஆகும்
சிரித்தவன் மூவெயில் ஏமனே குஞ்சிதபாதன். ... 3 ... [ஏமன்=எமன்]
தகித்திடும் தீயுடன் ஆடிடும் நஞ்சுணிநாமம்
அகத்தினில் ஏறிடில் ஆடுமே குஞ்சிதபாதம்
இகத்தினில் வேறெதும் வேண்டல நெஞ்சினர்-ஆகில்
பகுத்திடும் ஞானமும் பாய வெஞ்சினம்போமே. ... 4
தத்தன தானன தானன தாந்தனதானா
இத்தனை காலமும் ஈசனை ஓர்ந்திலன்-ஆனேன்
அத்தனின் பாதமும் ஆரவே சேர்ந்திலன்-ஆனேன்
மத்தமும் போகவே மாதவள் சேர்ந்திடும்தேனே ... [மத்தம்=மயக்கம்]
சித்தினுள் ஐயன் சேவடி நேர்ந்து-அருள்வாயே. ... 5
--ரமணி, 10-12/02/2014, கலி.30/10/5114
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
அன்புடையீர்!
வெகுநாட்களாக இந்தத் துதியைத் தமிழில் முயலும் ஆர்வமிருந்ததில்
கணபதி அருளால் இன்று அது நிறைவேறியது.
அறிஞர்களும் அன்பர்களும் கருத்துரைக்க வேண்டுகிறேன்.
அன்புடன்,
ரமணி
*****
5. தெய்வ தரிசனம்: ஸங்கடநாசன கணேச ஸ்தோத்திரம்
(நாரதமுனி அருளிச்செய்த மூலத்தின் தமிழாக்கம்)
(குறும்பா)
தலைசாய்த்தே முதல்வணங்க வானவனே
மலைமகளின் மகனாம்வி நாயகனே
. . பத்தருளம் கொண்டவனை
. . நித்தியமும் அண்டிடுவோம்
நிலையாயுள் விழைபொருளும் ஈபவனே. ... 1
முதற்பேரே வளைதுதிக்கை யன்னாக
அதற்கடுத்து ஒருகோடன் என்றாக
. . மூன்றாவது கறைபழுவாய்த் ... [கறைபழு = கரும்பழுப்பு]
. . தோன்றுகின்ற கருவிழியன்
அதன்பின்னே ஆனைமுகன் என்றாகும். ... 2
பகடுவயி னென்பதுவே ஐந்தாம்பேர்
பகடுடல னென்பதுவே ஆறாம்பேர்
. . ஊறுகளை வேரறுக்கும்
. . ஊறழிமன் ஆறடுத்தே ...
புகைவண்ணன் என்பதுவே எட்டாம்பேர். ... 3
[பகடு = பெருமை, பரப்பு, வலைமை; வயின் = வயிறு;
ஊறு = இடையூறு; மன் = மன்னன்]
ஒன்பதாகும் பேரெனவே பிறைநுதலோன்
ஒன்பதின்பின் பத்தெனவே குறைகளைவோன்
. . கணக்குழுமம் அதிபதியாம்
. . கணபதிபேர் பதினொன்றாம்
பன்னிரண்டாம் பேராகும் கறையடிவாய். ... 4
[கறையடி = (உரல் போன்ற அடியுடைய) யானை]
பன்னிரண்டு பெயர்களுடன் முச்சந்தியில்
நன்முறையில் துதிப்போர்க்கே இச்சந்தகம்
. . இடையூறு பயமின்றி
. . இடையில்லா நயமென்றே
உன்னுவதும் உவப்பதுமே நிச்சந்தகும். ... 5
[முச்சந்தி = காலை, உச்சி, மாலை என்னும் மூன்று பொழுதுகள்;
இச்சந்தகம் = இந்த மகிழ்ச்சி; நிச்சம் = நிச்சயம்]
அறிவிழைவோர் பெற்றிடுவார் அறிவெல்லாம்
வெறுக்கையெனில் உறும்செல்வச் செறிவெல்லாம்
. . புத்திரனை விழைந்திடிலோ
. . அத்திறமும் தழைந்திடுமே
பிறவன்றி முத்திவேண்டிற் பரமெல்லாம். ... 6
[அறி = அறிவு; வெறுக்கை = செல்வம்; அத்திறம் = அத்தகைய மேன்மை, குலம்;
பரமெல்லாம் = எல்லாவற்றிலும் மேலான பரம் என்னும் முக்தி]
கணபதியின் துதியிதுவே ஆறுமாதம்
உணவெனவே கொண்டிடவே ஊறுபோகும்
. . ஒருவருடம் வேண்டிடினே
. . விரும்புவதே ஆண்டுவரும்
திணமாக வேதுமையக் கூறேகும். ... 7
[திணமாக = திண்ணியமாக; ஏதும்-ஐயக்கூறு = எதேனும் ஐயத் தன்மை]
எவரொருவர் இத்துதியை எழுத்தாலே
சிவம்விழையும் எட்டுபேர்க்கே அளித்தாலே ... [சிவம் = மங்களம், நன்மை]
. . நீக்கமற நிறைந்திருக்கும்
. . ஆக்கம்வர அறிந்திருப்பர்
சிவமைந்தன் கணபதியின் அருளாலே. ... 8
--ரமணி, 18/02/2014, கலி.06/11/5114
குறிப்பு:
மூல ஸ்தோத்திரம் குறிக்கும் பன்னிரண்டு கணபதி பெயர்களும் தமிழாக்கமும் (முறையே):
01. வக்ரதுண்ட: = வளைதுதிக்கையன்
02. ஏகதந்த: = ஒருகோடன்
03. கிருஶ்ணபிங்காக்ஷ: = கரும்பழுவிழியன்
04. கஜவக்த்ர: = ஆனைமுகன்
05. லம்போதர: = பகடுவயினன்
06. விகட: = பகடுடலன்
07. விக்னராஜா = ஊறழிமன்
08. தூம்ரவர்ண: = புகைவண்ணன்
09. பாலசந்த்ர: = பிறைநுதலோன்
10. விநாயக: = குறைகளைவோன்
11. கணபதி = கணபதி
12. கஜானன: = கறையடிவாய்
ஸமஸ்கிருத மூலம்:
http://www.greenmesg.org/mantras_slokas/sri_ganesha-sankata_nashak_stotra.php
http://blog.practicalsanskrit.com/2011/08/shri-ganesha-stotram.html
*****
வெகுநாட்களாக இந்தத் துதியைத் தமிழில் முயலும் ஆர்வமிருந்ததில்
கணபதி அருளால் இன்று அது நிறைவேறியது.
அறிஞர்களும் அன்பர்களும் கருத்துரைக்க வேண்டுகிறேன்.
அன்புடன்,
ரமணி
*****
5. தெய்வ தரிசனம்: ஸங்கடநாசன கணேச ஸ்தோத்திரம்
(நாரதமுனி அருளிச்செய்த மூலத்தின் தமிழாக்கம்)
(குறும்பா)
தலைசாய்த்தே முதல்வணங்க வானவனே
மலைமகளின் மகனாம்வி நாயகனே
. . பத்தருளம் கொண்டவனை
. . நித்தியமும் அண்டிடுவோம்
நிலையாயுள் விழைபொருளும் ஈபவனே. ... 1
முதற்பேரே வளைதுதிக்கை யன்னாக
அதற்கடுத்து ஒருகோடன் என்றாக
. . மூன்றாவது கறைபழுவாய்த் ... [கறைபழு = கரும்பழுப்பு]
. . தோன்றுகின்ற கருவிழியன்
அதன்பின்னே ஆனைமுகன் என்றாகும். ... 2
பகடுவயி னென்பதுவே ஐந்தாம்பேர்
பகடுடல னென்பதுவே ஆறாம்பேர்
. . ஊறுகளை வேரறுக்கும்
. . ஊறழிமன் ஆறடுத்தே ...
புகைவண்ணன் என்பதுவே எட்டாம்பேர். ... 3
[பகடு = பெருமை, பரப்பு, வலைமை; வயின் = வயிறு;
ஊறு = இடையூறு; மன் = மன்னன்]
ஒன்பதாகும் பேரெனவே பிறைநுதலோன்
ஒன்பதின்பின் பத்தெனவே குறைகளைவோன்
. . கணக்குழுமம் அதிபதியாம்
. . கணபதிபேர் பதினொன்றாம்
பன்னிரண்டாம் பேராகும் கறையடிவாய். ... 4
[கறையடி = (உரல் போன்ற அடியுடைய) யானை]
பன்னிரண்டு பெயர்களுடன் முச்சந்தியில்
நன்முறையில் துதிப்போர்க்கே இச்சந்தகம்
. . இடையூறு பயமின்றி
. . இடையில்லா நயமென்றே
உன்னுவதும் உவப்பதுமே நிச்சந்தகும். ... 5
[முச்சந்தி = காலை, உச்சி, மாலை என்னும் மூன்று பொழுதுகள்;
இச்சந்தகம் = இந்த மகிழ்ச்சி; நிச்சம் = நிச்சயம்]
அறிவிழைவோர் பெற்றிடுவார் அறிவெல்லாம்
வெறுக்கையெனில் உறும்செல்வச் செறிவெல்லாம்
. . புத்திரனை விழைந்திடிலோ
. . அத்திறமும் தழைந்திடுமே
பிறவன்றி முத்திவேண்டிற் பரமெல்லாம். ... 6
[அறி = அறிவு; வெறுக்கை = செல்வம்; அத்திறம் = அத்தகைய மேன்மை, குலம்;
பரமெல்லாம் = எல்லாவற்றிலும் மேலான பரம் என்னும் முக்தி]
கணபதியின் துதியிதுவே ஆறுமாதம்
உணவெனவே கொண்டிடவே ஊறுபோகும்
. . ஒருவருடம் வேண்டிடினே
. . விரும்புவதே ஆண்டுவரும்
திணமாக வேதுமையக் கூறேகும். ... 7
[திணமாக = திண்ணியமாக; ஏதும்-ஐயக்கூறு = எதேனும் ஐயத் தன்மை]
எவரொருவர் இத்துதியை எழுத்தாலே
சிவம்விழையும் எட்டுபேர்க்கே அளித்தாலே ... [சிவம் = மங்களம், நன்மை]
. . நீக்கமற நிறைந்திருக்கும்
. . ஆக்கம்வர அறிந்திருப்பர்
சிவமைந்தன் கணபதியின் அருளாலே. ... 8
--ரமணி, 18/02/2014, கலி.06/11/5114
குறிப்பு:
மூல ஸ்தோத்திரம் குறிக்கும் பன்னிரண்டு கணபதி பெயர்களும் தமிழாக்கமும் (முறையே):
01. வக்ரதுண்ட: = வளைதுதிக்கையன்
02. ஏகதந்த: = ஒருகோடன்
03. கிருஶ்ணபிங்காக்ஷ: = கரும்பழுவிழியன்
04. கஜவக்த்ர: = ஆனைமுகன்
05. லம்போதர: = பகடுவயினன்
06. விகட: = பகடுடலன்
07. விக்னராஜா = ஊறழிமன்
08. தூம்ரவர்ண: = புகைவண்ணன்
09. பாலசந்த்ர: = பிறைநுதலோன்
10. விநாயக: = குறைகளைவோன்
11. கணபதி = கணபதி
12. கஜானன: = கறையடிவாய்
ஸமஸ்கிருத மூலம்:
http://www.greenmesg.org/mantras_slokas/sri_ganesha-sankata_nashak_stotra.php
http://blog.practicalsanskrit.com/2011/08/shri-ganesha-stotram.html
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
4. தெய்வ தரிசனம்: ஐயப்பன் துதி
(விவரம்: http://www.ayyappatemple.in/)
(குறும்பா)
சபரிமலை நாயகனே ஐயப்பா
உபரியெலாம் நீங்கவருள் செய்யப்பா ... [உபரி = ஆன்மாவைப் பற்றியுள்ள உடல், மனம் போன்றன]
. . பதினெட்டாம் படிநிற்கும்
. . மதிமட்டும் உடன்நிற்க
உபநிடதச் சொல்லுணர வையப்பா. ... 1 ... [உபநிடதச் சொல் = ’தத்வமஸி’]
மகிடாசுர மர்த்தினியே சிரம்பெற்றாள்
மகிடியவள் தவவலிமை உரம்பெற்றாள்
. . ஹரிஹரனது மகனாகில்
. . ஒருகாலது தகவாகில்
உகந்திடுவேன் மரணமென வரம்பெற்றாள். ... 2
ஹரிஹரனின் புத்திரனாய் மணிகண்டா
உருவெடுத்தாய் அவதாரப் பணிகொண்டே
. . பந்தளவம் சத்தினிலே
. . வந்துதித்த சத்தெனவே
அரக்கிவதம் செய்தவளின் பிணிகொண்டாய். ... 3
ஹரிஹரனின் ஐக்கியமாம் தத்துவமாய்
உருவெடுத்தே சேர்க்குமந்த உத்தமமே
. . சாதிமதம் எதுவெனினும்
. . பாதவிணை பொதுவெனவே
தருமமுறச் செய்யுமொரு வித்தகமே. ... 4
குந்திநீயும் நோக்கவந்த முகமேதான்
சிந்தனையை யீர்க்கும்பக்தர் அகமேதான்
. . சின்முத்தி ரைதாங்கி
. . தன்னலத்தை யேவாங்கித்
தந்தருள்வாய் ஞானமிந்த இகமேதான். ... 5
மெய்யடியார் உளமேறும் அச்சநமன் ... [நமன் = யமன்]
ஐயனாராய் சாஸ்தாவாய் அச்சனுமாய்
. . துச்சமென நீக்கிடுவாய்
. . இச்சைகளைப் போக்கிடுவாய்
மெய்யுணர்வைத் தந்திடுவாய் உச்சமென. ... 6
பிரம்மசர்ய கோலத்திலே ஆடவனும்
இருமனையாள் கோலத்திலே ஆடவளும் ... [ஐயப்பனின் இரு மனைவியர் பூரணா, புஶ்கலா]
. . தரிசனமும் பெற்றிடவே
. . திரிசமமும் வற்றிடுமே
இருமுனைகள் நீங்கிடவே தேடுமுளம். ... 7
இருமுடியும் ஒருமுடியில் சூட்டினரே
பருவுடலும் பலதினுசாய் வாட்டினரே
. . நாடுதலைக் கடந்தாரே
. . காடுமேடு நடந்தாரே
ஒருமண்டல விரதமென நாட்டினரே. ... 8
நெய்யபிடே கத்தினிலே தேவனுடன்
மெய்யடியார் சேர்ந்தனரே சீவனுடன்
. . தானென்பது குன்றிடவே
. . ஆன்மவொளி நின்றிடவே
பொய்நீங்க வேட்டனரே ஆவலுடன். ... 9
சபரிமலை சென்றதிலை ஐயப்பா
கபடவழி நின்றதிலை ஐயப்பா
. . நல்லகதி பெற்றிடவே
. . வல்வினைகள் அற்றிடவே
அபலையெனக் கொண்டருள்வாய் மெய்யப்பா. ... 10
--ரமணி, 07-10/02/2014, கலி.28/10/5114
*****
(விவரம்: http://www.ayyappatemple.in/)
(குறும்பா)
சபரிமலை நாயகனே ஐயப்பா
உபரியெலாம் நீங்கவருள் செய்யப்பா ... [உபரி = ஆன்மாவைப் பற்றியுள்ள உடல், மனம் போன்றன]
. . பதினெட்டாம் படிநிற்கும்
. . மதிமட்டும் உடன்நிற்க
உபநிடதச் சொல்லுணர வையப்பா. ... 1 ... [உபநிடதச் சொல் = ’தத்வமஸி’]
மகிடாசுர மர்த்தினியே சிரம்பெற்றாள்
மகிடியவள் தவவலிமை உரம்பெற்றாள்
. . ஹரிஹரனது மகனாகில்
. . ஒருகாலது தகவாகில்
உகந்திடுவேன் மரணமென வரம்பெற்றாள். ... 2
ஹரிஹரனின் புத்திரனாய் மணிகண்டா
உருவெடுத்தாய் அவதாரப் பணிகொண்டே
. . பந்தளவம் சத்தினிலே
. . வந்துதித்த சத்தெனவே
அரக்கிவதம் செய்தவளின் பிணிகொண்டாய். ... 3
ஹரிஹரனின் ஐக்கியமாம் தத்துவமாய்
உருவெடுத்தே சேர்க்குமந்த உத்தமமே
. . சாதிமதம் எதுவெனினும்
. . பாதவிணை பொதுவெனவே
தருமமுறச் செய்யுமொரு வித்தகமே. ... 4
குந்திநீயும் நோக்கவந்த முகமேதான்
சிந்தனையை யீர்க்கும்பக்தர் அகமேதான்
. . சின்முத்தி ரைதாங்கி
. . தன்னலத்தை யேவாங்கித்
தந்தருள்வாய் ஞானமிந்த இகமேதான். ... 5
மெய்யடியார் உளமேறும் அச்சநமன் ... [நமன் = யமன்]
ஐயனாராய் சாஸ்தாவாய் அச்சனுமாய்
. . துச்சமென நீக்கிடுவாய்
. . இச்சைகளைப் போக்கிடுவாய்
மெய்யுணர்வைத் தந்திடுவாய் உச்சமென. ... 6
பிரம்மசர்ய கோலத்திலே ஆடவனும்
இருமனையாள் கோலத்திலே ஆடவளும் ... [ஐயப்பனின் இரு மனைவியர் பூரணா, புஶ்கலா]
. . தரிசனமும் பெற்றிடவே
. . திரிசமமும் வற்றிடுமே
இருமுனைகள் நீங்கிடவே தேடுமுளம். ... 7
இருமுடியும் ஒருமுடியில் சூட்டினரே
பருவுடலும் பலதினுசாய் வாட்டினரே
. . நாடுதலைக் கடந்தாரே
. . காடுமேடு நடந்தாரே
ஒருமண்டல விரதமென நாட்டினரே. ... 8
நெய்யபிடே கத்தினிலே தேவனுடன்
மெய்யடியார் சேர்ந்தனரே சீவனுடன்
. . தானென்பது குன்றிடவே
. . ஆன்மவொளி நின்றிடவே
பொய்நீங்க வேட்டனரே ஆவலுடன். ... 9
சபரிமலை சென்றதிலை ஐயப்பா
கபடவழி நின்றதிலை ஐயப்பா
. . நல்லகதி பெற்றிடவே
. . வல்வினைகள் அற்றிடவே
அபலையெனக் கொண்டருள்வாய் மெய்யப்பா. ... 10
--ரமணி, 07-10/02/2014, கலி.28/10/5114
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: ரமணியின் கவிதைகள்
கணினி போற்றுதும் கவிதை சிறப்பு. பாராட்டுகள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ரமணியின் கவிதைகள்
பிரதோஷ/சிவராத்திரித் துதி: விரிசடைக் கடவுள் புஜங்கம்
(கட்டளைக் கலிரிவிருத்தம்)
(புஜங்க அமைப்பு: லகு-குரு-குரு x 4)
பனிச்செஞ் சடைதன்னி லாறொன்று மேவும்
கனித்தவ் வுடல்மேற்க ரித்தோலி னாடை
அனித்தம் வழிந்தோடு மாடும்நீ ரோடும்
மனித்தப் பிறப்பேகும் மாதேவ னாலே. ... 1
சிரித்தே எயில்மூன்றின் சீர்தன்னைச் சாய்த்தான்
உரித்தே வியாளத்தின் தோல்கொண்ட ணிந்தான்
விரத்தன் மருந்தீசன் விண்ணோர்க ளேத்தும்
வரித்தே மனங்கொள்ள மாளாத வாழ்வே. ... 2
இரந்தே கபாலத்தி லேற்றுண்ணு மீசன்
புரந்தே வரர்லோகப் புன்மைகள் தீர்ப்பான்
கரந்தே அருள்செய்து காத்தாள வேண்டின்
வரந்தந் துரந்தந்த றந்தந்த ருள்வான். ... 3
களித்தா டுமைபாகன் காலங்க டந்தான்
அளித்தே கழித்தேய ழித்தேவி ழிப்பான்
சுளித்தே வரைகொண்ட வுச்சங்கள் சாய்த்தான்
விளித்தே மனம்கொள்ள விண்டேகும் கேடே. ... 4
எருத்தக் கறையோட வேழ்ஞாலம் காத்தான்
விருத்தன் விடங்கொண்டு விண்ணோரை யாண்டான்
நிருத்தன் விடைமீது நின்றாடி யீர்த்தான்
வருத்தும் துயர்நீக்கும் மாதேவன் தாளே. ... 5
கடல்மா லயன்காண ழல்தோற்ற மானான்
வடங்கீ ழமர்யோகி யாசானு மானான்
உடல்தன் னிலோர்மாது கூறென்று கொண்டான்
திடம்காத் தருள்செய்யு மீசன்வே றில்லை. ... 6
சவக்காட் டுறைபேய்க ளின்நாத னாவான்
தவம்கொண் டுதன்மூலம் சார்வார்க்க ருள்வான்
தவித்தே யவன்நாட வித்தேய ருள்வான்
பவம்நீங் கவம்நீங்க வன்றாளே நெஞ்சே. ... 7
அரன்சங் கரன்சூலி ஆலால முண்டான்
அராவேந் திமாதேவ னண்ணல்பு ராணன்
பரஞ்சோ திகாமாரி யீசந்த போதன்
அருட்கூத் தனண்டன்கி ரீசன்பி ரானே. ... 8
முதல்வன் சடையோனு மைபாகன் பித்தன்
சதுர்வே தியேகம்ப னைந்தாடி யத்தன்
நுதற்கண் ணருட்சோதி மூலன்தி ருத்தன்
பதம்தே டிநாமங்க ளாடிப்பு கழ்வோம். ... 9
பதத்தோ டுகாலோடி டையோடு மார்பும்
இதந்தோள் கரத்தோடு கில்லம்மு கத்தின்
சிதம்நீ றுகேசப்பி றைகங்கை யாறும்
நிதம்தர் சனம்செய்ய வெஞ்சும்வி னைபோம். ... 10
அலங்கா ரவெண்ணீற ணிந்தேய ருள்வான்
நலம்வந் திலந்வந்த லம்நீங்கி யோடும்
வலம்வந்து மன்றாட மாயைய றுப்பான்
தலம்சேர்ந் தவன்றாட்ட லைதாழு வோர்க்கே. ... 11
--ரமணி, 21-26/02/2014, கலி.14/11/5114
*****
பதம் பிரித்து
பிரதோஷ/சிவராத்திரித் துதி: விரிசடைக் கடவுள் புஜங்கம்
பனிச்செஞ்சடை தன்னில் ஆறு-ஒன்று மேவும்
கனித்த-அவ் உடல்மேல் கரித்தோலின் ஆடை
அனித்தம் வழிந்தோடும் ஆடும்நீர் ஓடும் ... [அனித்தம் = சந்தனம்]
மனித்தப் பிறப்பு-ஏகும் மாதேவ னாலே. ... 1
சிரித்தே எயில்மூன்றின் சீர்தன்னைச் சாய்த்தான்
உரித்தே வியாளத்தின் தோல்கொண்டு அணிந்தான் ... [வியாளம் = புலி]
விரத்தன் மருந்தீசன் விண்ணோர்கள் ஏத்தும் ... [விரத்தன் = பற்றற்றான்]
வரித்தே மனங்கொள்ள மாளாத வாழ்வே. ... 2
இரந்தே கபாலத்தில் ஏற்றுண்ணும் ஈசன்
புரந்தே வரர்லோகப் புன்மைகள் தீர்ப்பான்
கரந்தே அருள்செய்து காத்தாள வேண்டின்
வரந்தந்து அரந்தந்து அறந்தந்து அருள்வான். ... 3 ... [அரம் = கூர்மை, இங்குக் கூர்மதி]
களித்தாடும் உமைபாகன் காலம் கடந்தான்
அளித்தே கழித்தே அழித்தே விழிப்பான்
சுளித்தே வரைகொண்ட உச்சங்கள் சாய்த்தான் ... [உச்சம் = தலை]
விளித்தே மனம்கொள்ள விண்டு-ஏகும் கேடே. ... 4
எருத்தக் கறையோட ஏழ்ஞாலம் காத்தான் ... [எருத்தம் = கழுத்து; ஏழ்ஞாலம் = ஏழுலகம்]
விருத்தன் விடங்கொண்டு விண்ணோரை ஆண்டான்
நிருத்தன் விடைமீது நின்றாடி ஈர்த்தான்
வருத்தும் துயர்நீக்கும் மாதேவன் தாளே. ... 5
கடல்மால் அயன்காண் அழல்தோற்றம் ஆனான்
வடங்கீழ் அமர்யோகி ஆசானும் ஆனான்
உடல்தன்னில் ஓர்மாது கூறென்று கொண்டான்
திடம்காத்து அருள்செய்யும் ஈசன் வேறில்லை. ... 6
சவக்காட்டு உறைபேய்களின் நாதன் ஆவான்
தவம்கொண்டு தன்மூலம் சார்வார்க்கு அருள்வான்
தவித்தே அவன்நாட அவித்தே அருள்வான்
பவம்நீங்க அவம்நீங்க அவன்றாளே நெஞ்சே. ... 7
அரன்சங்கரன் சூலி ஆலாலம்-உண்டான்
அராவேந்தி மாதேவன் அண்ணல் புராணன்
பரஞ்சோதி காமாரி ஈசன் தபோதன்
அருட்கூத்தன் அண்டன் கிரீசன் பிரானே. ... 8
முதல்வன் சடையோன் உமைபாகன் பித்தன்
சதுர்வேதி ஏகம்ப்ன் ஐந்தாடி அத்தன்
நுதற்கண் ணருட்சோதி மூலன் திருத்தன் ... [திருத்தன் = தூய்மையான கடவுள்]
பதம்தேடி நாமங்கள் ஆடிப் புகழ்வோம். ... 9
பதத்தோடு காலோடு இடையோடு மார்பும்
இதந்தோள் கரத்தோடு கில்லம் முகத்தின் ... [கில்லம் = தொண்டைக்குழி, கழுத்து]
சிதம்நீறு கேசப் பிறைகங்கை ஆறும் ... [சிதம் = வெண்மை]
நிதம்-தர்சனம் செய்ய எஞ்சும் வினைபோம். ... 10
அலங்கார வெண்ணீறு அணிந்தே அருள்வான்
நலம்வந்து இலந்வந்து அலம்நீங்கி ஓடும் ... [இலம் = இல்லறம்; அலம் = துன்பம், சஞ்சலம்]
வலம்வந்து மன்றாட மாயை அறுப்பான்
தலம்சேர்ந்து அவன்றாள் தலைதாழுவோர்க் கே. ... 11
--ரமணி, 21-26/02/2014, கலி.14/11/5114
*****
(கட்டளைக் கலிரிவிருத்தம்)
(புஜங்க அமைப்பு: லகு-குரு-குரு x 4)
பனிச்செஞ் சடைதன்னி லாறொன்று மேவும்
கனித்தவ் வுடல்மேற்க ரித்தோலி னாடை
அனித்தம் வழிந்தோடு மாடும்நீ ரோடும்
மனித்தப் பிறப்பேகும் மாதேவ னாலே. ... 1
சிரித்தே எயில்மூன்றின் சீர்தன்னைச் சாய்த்தான்
உரித்தே வியாளத்தின் தோல்கொண்ட ணிந்தான்
விரத்தன் மருந்தீசன் விண்ணோர்க ளேத்தும்
வரித்தே மனங்கொள்ள மாளாத வாழ்வே. ... 2
இரந்தே கபாலத்தி லேற்றுண்ணு மீசன்
புரந்தே வரர்லோகப் புன்மைகள் தீர்ப்பான்
கரந்தே அருள்செய்து காத்தாள வேண்டின்
வரந்தந் துரந்தந்த றந்தந்த ருள்வான். ... 3
களித்தா டுமைபாகன் காலங்க டந்தான்
அளித்தே கழித்தேய ழித்தேவி ழிப்பான்
சுளித்தே வரைகொண்ட வுச்சங்கள் சாய்த்தான்
விளித்தே மனம்கொள்ள விண்டேகும் கேடே. ... 4
எருத்தக் கறையோட வேழ்ஞாலம் காத்தான்
விருத்தன் விடங்கொண்டு விண்ணோரை யாண்டான்
நிருத்தன் விடைமீது நின்றாடி யீர்த்தான்
வருத்தும் துயர்நீக்கும் மாதேவன் தாளே. ... 5
கடல்மா லயன்காண ழல்தோற்ற மானான்
வடங்கீ ழமர்யோகி யாசானு மானான்
உடல்தன் னிலோர்மாது கூறென்று கொண்டான்
திடம்காத் தருள்செய்யு மீசன்வே றில்லை. ... 6
சவக்காட் டுறைபேய்க ளின்நாத னாவான்
தவம்கொண் டுதன்மூலம் சார்வார்க்க ருள்வான்
தவித்தே யவன்நாட வித்தேய ருள்வான்
பவம்நீங் கவம்நீங்க வன்றாளே நெஞ்சே. ... 7
அரன்சங் கரன்சூலி ஆலால முண்டான்
அராவேந் திமாதேவ னண்ணல்பு ராணன்
பரஞ்சோ திகாமாரி யீசந்த போதன்
அருட்கூத் தனண்டன்கி ரீசன்பி ரானே. ... 8
முதல்வன் சடையோனு மைபாகன் பித்தன்
சதுர்வே தியேகம்ப னைந்தாடி யத்தன்
நுதற்கண் ணருட்சோதி மூலன்தி ருத்தன்
பதம்தே டிநாமங்க ளாடிப்பு கழ்வோம். ... 9
பதத்தோ டுகாலோடி டையோடு மார்பும்
இதந்தோள் கரத்தோடு கில்லம்மு கத்தின்
சிதம்நீ றுகேசப்பி றைகங்கை யாறும்
நிதம்தர் சனம்செய்ய வெஞ்சும்வி னைபோம். ... 10
அலங்கா ரவெண்ணீற ணிந்தேய ருள்வான்
நலம்வந் திலந்வந்த லம்நீங்கி யோடும்
வலம்வந்து மன்றாட மாயைய றுப்பான்
தலம்சேர்ந் தவன்றாட்ட லைதாழு வோர்க்கே. ... 11
--ரமணி, 21-26/02/2014, கலி.14/11/5114
*****
பதம் பிரித்து
பிரதோஷ/சிவராத்திரித் துதி: விரிசடைக் கடவுள் புஜங்கம்
பனிச்செஞ்சடை தன்னில் ஆறு-ஒன்று மேவும்
கனித்த-அவ் உடல்மேல் கரித்தோலின் ஆடை
அனித்தம் வழிந்தோடும் ஆடும்நீர் ஓடும் ... [அனித்தம் = சந்தனம்]
மனித்தப் பிறப்பு-ஏகும் மாதேவ னாலே. ... 1
சிரித்தே எயில்மூன்றின் சீர்தன்னைச் சாய்த்தான்
உரித்தே வியாளத்தின் தோல்கொண்டு அணிந்தான் ... [வியாளம் = புலி]
விரத்தன் மருந்தீசன் விண்ணோர்கள் ஏத்தும் ... [விரத்தன் = பற்றற்றான்]
வரித்தே மனங்கொள்ள மாளாத வாழ்வே. ... 2
இரந்தே கபாலத்தில் ஏற்றுண்ணும் ஈசன்
புரந்தே வரர்லோகப் புன்மைகள் தீர்ப்பான்
கரந்தே அருள்செய்து காத்தாள வேண்டின்
வரந்தந்து அரந்தந்து அறந்தந்து அருள்வான். ... 3 ... [அரம் = கூர்மை, இங்குக் கூர்மதி]
களித்தாடும் உமைபாகன் காலம் கடந்தான்
அளித்தே கழித்தே அழித்தே விழிப்பான்
சுளித்தே வரைகொண்ட உச்சங்கள் சாய்த்தான் ... [உச்சம் = தலை]
விளித்தே மனம்கொள்ள விண்டு-ஏகும் கேடே. ... 4
எருத்தக் கறையோட ஏழ்ஞாலம் காத்தான் ... [எருத்தம் = கழுத்து; ஏழ்ஞாலம் = ஏழுலகம்]
விருத்தன் விடங்கொண்டு விண்ணோரை ஆண்டான்
நிருத்தன் விடைமீது நின்றாடி ஈர்த்தான்
வருத்தும் துயர்நீக்கும் மாதேவன் தாளே. ... 5
கடல்மால் அயன்காண் அழல்தோற்றம் ஆனான்
வடங்கீழ் அமர்யோகி ஆசானும் ஆனான்
உடல்தன்னில் ஓர்மாது கூறென்று கொண்டான்
திடம்காத்து அருள்செய்யும் ஈசன் வேறில்லை. ... 6
சவக்காட்டு உறைபேய்களின் நாதன் ஆவான்
தவம்கொண்டு தன்மூலம் சார்வார்க்கு அருள்வான்
தவித்தே அவன்நாட அவித்தே அருள்வான்
பவம்நீங்க அவம்நீங்க அவன்றாளே நெஞ்சே. ... 7
அரன்சங்கரன் சூலி ஆலாலம்-உண்டான்
அராவேந்தி மாதேவன் அண்ணல் புராணன்
பரஞ்சோதி காமாரி ஈசன் தபோதன்
அருட்கூத்தன் அண்டன் கிரீசன் பிரானே. ... 8
முதல்வன் சடையோன் உமைபாகன் பித்தன்
சதுர்வேதி ஏகம்ப்ன் ஐந்தாடி அத்தன்
நுதற்கண் ணருட்சோதி மூலன் திருத்தன் ... [திருத்தன் = தூய்மையான கடவுள்]
பதம்தேடி நாமங்கள் ஆடிப் புகழ்வோம். ... 9
பதத்தோடு காலோடு இடையோடு மார்பும்
இதந்தோள் கரத்தோடு கில்லம் முகத்தின் ... [கில்லம் = தொண்டைக்குழி, கழுத்து]
சிதம்நீறு கேசப் பிறைகங்கை ஆறும் ... [சிதம் = வெண்மை]
நிதம்-தர்சனம் செய்ய எஞ்சும் வினைபோம். ... 10
அலங்கார வெண்ணீறு அணிந்தே அருள்வான்
நலம்வந்து இலந்வந்து அலம்நீங்கி ஓடும் ... [இலம் = இல்லறம்; அலம் = துன்பம், சஞ்சலம்]
வலம்வந்து மன்றாட மாயை அறுப்பான்
தலம்சேர்ந்து அவன்றாள் தலைதாழுவோர்க் கே. ... 11
--ரமணி, 21-26/02/2014, கலி.14/11/5114
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Page 14 of 36 • 1 ... 8 ... 13, 14, 15 ... 25 ... 36
Similar topics
» ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
» ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
» ரமணியின் கதைகள்
» ரமணியின் சிறுகதைகள்: திருட்டுப் பட்டம்
» ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய்
» ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
» ரமணியின் கதைகள்
» ரமணியின் சிறுகதைகள்: திருட்டுப் பட்டம்
» ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய்
Page 14 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|