புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 12 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 12 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 12 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
ரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 12 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 12 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 12 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 12 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
ரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 12 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 12 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 12 of 36 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 24 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed 31 Oct 2012 - 14:52

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri 8 Nov 2013 - 8:04

உள்ளடங்கிய நான்கு பாடல்கள்:

வஞ்சித் துறை
முன்னை வினைகள்
இன்னும் வினைகள்
உன்னத் தெரியேன்
மன்னித் தருள்வீர்! ... 1.

வஞ்சித் துறை
முற்றும் சூழ்வது
இற்றுப் போகவே
சுற்றம் ஆகுவீர்
பற்றை நீக்கியே! ... 2.

வஞ்சி விருத்தம்
குன்றச் செய்வீர் கோமானே!
என்றும் அருள்வீர் பெம்மானே!
துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
நன்மை விளைப்பீர் கங்காளா! ... 3.

கலித் துறை
முற்றும் சூழ்வது குன்றச் செய்வீர் கோமானே!
இற்றுப் போகவே என்றும் அருள்வீர் பெம்மானே!
சுற்றம் ஆகுவீர் துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
பற்றை நீக்கியே நன்மை விளைப்பீர் கங்காளா! ... 4

-- ரமணி

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun 10 Nov 2013 - 10:03

மரபு வித்தகம் 3.
வினா உத்தரம்


இவ்வகைப் பாடல்களில் கேள்விகளும் அவற்றின் விடைகளும் இருக்கும்.
விடைகளை இணைத்தால் செய்யுள் குறிக்கும் பெயராகும்.

எரிவ தெதுவோ விளக்கிலே? மன்னன்
அரிவை இடம்பின் பதமெது? சொல்லெதிர்
’இந்த’வுக் கென்ன? இவற்றோடு ’கன்’சேர
வந்த சிவநா மமே. ... 1.

விடை:
கேள்விகளுக்கு விடை முறையே திரி, (அந்தப்)புரம், அந்த.
இவற்றோடு ’கன்’ விகுதி சேர வந்த சிவநாமம் ’திரிபுராந்தகன்’

*****

இதுபோல் இந்தப் பாடலின் விடையைக் காண்டுபிடியுங்கள்.

வரதுங்க ராமமன்னன் அந்தாதி சொல்லும்
கருவைத் தலமிது! யானையின்னோர் பேரெதுவோ?
அம்மைக்கெப் பக்கமத்தன்? ’போன’ எதிர்ப்பதம்?
செம்மைநல் லூர்சேர்க்க வே. ... 2.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue 12 Nov 2013 - 8:21

சென்ற அஞ்சலில் இரண்டாம் பாட்டு:
கேள்விகளுக்கு விடை முறையே: கரி, வலம், வந்த
கரிவலம்வந்த நல்லூர்

மரபு வித்தகம் 4.
சர-மழை


கனவும் நனவும் உளமே விளையும்
நனவும் மறுநாள் கனவாய் இரியும்
உளமே கனவாய் உருவாய் வரத்து
விளையும் இரியும் வரத்து.

[இரிதல்=கெடுதல், ஓடுதல், விலகுதல், வடிதல், அஞ்சுதல்]

மேலே உள்ள வெண்பாவின் சிறப்பு என்ன?

--ரமணி

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu 14 Nov 2013 - 8:41

மேலுள்ள வெண்பாவின் சிறப்பு:
இடம்-வலம் படித்தாலும், மேல்-கீழ் படித்தாலும் அதுவாகவே அமைந்த வெண்பா.

மரபு வித்தகம் 5.
நிரோட்டம் அல்லது இதழகலி


இனியொரு நிரோட்ட வெண்பா. இதன் சொற்களைப் படிக்கும்போது உதடுகள் ஒட்டாமலோ
குவியாமலோ அமைவதால் இது நிரோட்டம் அல்லது இதழகலி என்று பெயர் பெறும்.

என்னென்ன நானில்லை என்றறியச் செய்தாய்நீ
என்னதான் நானெனக் கேட்டேன்நான் - என்னைநீ
என்றழைக்கா தேநீயே நான்நானே நீதெளி
யென்றானே நெஞ்சி லிறை.

--ரமணி

*****


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 14 Nov 2013 - 16:28

என்னென்ன நானில்லை என்றறியச் செய்தாய்நீ
என்னதான் நானெனக் கேட்டேன்நான் - என்னைநீ
என்றழைக்கா தேநீயே நான்நானே நீதெளி
யென்றானே நெஞ்சி லிறை.
படித்தால் எனக்கு மயக்கம் மட்டுமே வருகிறது!

உதடுகள் ஒட்டவில்லை! அருமை!

இதழகலி என்னும் தமிழ் வார்த்தையை இன்றுதான் முதன் முதலில் அறிந்து கொண்டேன்!

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu 14 Nov 2013 - 17:58

வணக்கம் சிவா.

பாராட்டுக்கு நன்றி.

இன்னொரு உத்தியும் தெரிந்துகொள்ளுங்கள்: இதழுறல் அல்லது இதழுறலி.
அதாவது, ஒவ்வொரு சொல்லிலோ/சீரிலோ உதடுகள் ஒட்டுமாறோ, குவியுமாறோ பாடுவது.

மரபு வித்தகம் 6.
இதழுறல் அல்லது இதழுறலி

ஒவ்வொரு சீரிலும் (குறைந்தது ஓர்) இதழுறல் வருவது:

மானு மழுவு மிருபுஜ மோங்குமே
வானம் புவனமு மாண்டு மழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்புறு மாபதி
மெய்யவன் பாடியே போற்று.

பதம் பிரித்து:
மானு(ம்) மழுவும் இருபுஜம் ஓங்குமே
வானம் புவனமும் ஆண்டும் அழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்பு(று) உமாபதி
மெய்யவன் பாடியே போற்று.

எல்லா எழுத்துகளிலும் இதழுறல் வந்தது:

குப்பம்மா பாப்பா உவப்பது உப்புமா
சுப்பம்மா பூமா உவப்பது உப்புமா
உப்பொடு மாவுமே உப்புமா வாகுமே
உப்புமா போடு உமா!

--ரமணி

*****

தமிழில் உள்ள 247 எழுத்துகளில் இதழுறல்--அதாவது உச்சரிப்பில் இதழ்கள் ஒட்டியோ குவிந்தோ சொல்வது மொத்தம் 119. இவை போக மீதியுள்ள 128 எழுத்துகளும் இதழகலி எழுதப் பயன்படும் எழுத்துகளாகும்.

உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் 12 உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x15 மெய்யுடன்
உறழ்ந்து, (ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.

அன்புடன்,
ரமணி

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun 17 Nov 2013 - 9:17

ரமணியின் கவிதைகள் - Page 12 3198d1384654098-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-prabhudeva-400x300
ரமணியின் கவிதைகள் - Page 12 3199d1384654117-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-bg-dolls-400x300

மெழுகில் உருவாகும் மாயை
(நேரிசை/இன்னிசை வெண்பா)

இறவா உடலே மெழுகுரு என்பர்
பிறவா உடலும் இதுவே - உறவாம்
உயிரின்றி உய்யும் உயிர்ச்சிலை யென்று
துயிலும் மனங்கொள் ளுரு. ... 1

மெய்யிதுவே பொய்யாம் மெழுகதை மேன்மேலும்
மெய்யாக்கும் அல்லது பொய்யாக்கும்! - ஐயா!
உளங்கொள் உருவங்கள் ஒற்றும் மெழுகின்
தளுக்கில் உலவுமே மாசு. ... 2

இரும்புக் கலையம் மெழுகு கொதித்துத்
தருவித்த அச்சுகளில் கால்கைத் தலையாய்
தனியே உறைந்து பசையொட்டித் தைத்துக்
கனவுச் சிலைகை வரும். ... 3

கோலி விழிகளும் கூந்தல் உடற்கூறும்
தோலும் மெழுகிளகித் தோய அனலில்
அலகுகள் ஊசிகள் ஆக்கிடும் பொம்மை
பலவகை ஆடை பெறும். ... 4

புகழுக் கிணையாய்ப் பொருளதுவும் சேர
அகம்கொள்ளும் காட்சியக ஆளுருவம் அல்லாது
வீட்டில் குழந்தை விளையாடும் பொம்மையின்
ஊட்டம் மெழுகின் உரு. ... 5

குழந்தை மரபொம்மைச் சொப்புகள் நாள்போய்
மெழுகு நெகிழி விளையாட்டுச் சாமான்கள்
காற்றுநீர் மேனியும் மாசுறுதல் கண்ணுறாது
போற்றி மகிழும் உலகு. ... 6

--ரமணி, 14/11/2013, கலி.28/07/5114

உதவி:
How to Make Wax Dolls
http://www.ehow.com/how_4728241_make-wax-dolls.html

Environmental Pollution: How Toys Contribute to the Problem
http://www.brighthub.com/environment/green-living/articles/62042.aspx

படங்கள் உதவி:
http://www.pardaphash.com/news/overwhelmed-prabhu-deva-uncovers-his-wax-statue-at-lonavala-wax-museum/721511.html#.UoTeVuWC1CY
https://smalltreasuresdollcollectors.wordpress.com/2013/10/26/complete-history-of-wax-dolls/

*****


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 17 Nov 2013 - 13:08

ரமணி wrote:வணக்கம் சிவா.

பாராட்டுக்கு நன்றி.

இன்னொரு உத்தியும் தெரிந்துகொள்ளுங்கள்: இதழுறல் அல்லது இதழுறலி.
அதாவது, ஒவ்வொரு சொல்லிலோ/சீரிலோ உதடுகள் ஒட்டுமாறோ, குவியுமாறோ பாடுவது.

மரபு வித்தகம் 6.
இதழுறல் அல்லது இதழுறலி

ஒவ்வொரு சீரிலும் (குறைந்தது ஓர்) இதழுறல் வருவது:

மானு மழுவு மிருபுஜ மோங்குமே
வானம் புவனமு மாண்டு மழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்புறு மாபதி
மெய்யவன் பாடியே போற்று.

பதம் பிரித்து:
மானு(ம்) மழுவும் இருபுஜம் ஓங்குமே
வானம் புவனமும் ஆண்டும் அழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்பு(று) உமாபதி
மெய்யவன் பாடியே போற்று.

எல்லா எழுத்துகளிலும் இதழுறல் வந்தது:

குப்பம்மா பாப்பா உவப்பது உப்புமா
சுப்பம்மா பூமா உவப்பது உப்புமா
உப்பொடு மாவுமே உப்புமா வாகுமே
உப்புமா போடு உமா!

--ரமணி

*****

தமிழில் உள்ள 247 எழுத்துகளில் இதழுறல்--அதாவது உச்சரிப்பில் இதழ்கள் ஒட்டியோ குவிந்தோ சொல்வது மொத்தம் 119. இவை போக மீதியுள்ள 128 எழுத்துகளும் இதழகலி எழுதப் பயன்படும் எழுத்துகளாகும்.

உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ்  12 உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x15 மெய்யுடன்
உறழ்ந்து, (ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.

அன்புடன்,
ரமணி

*****
 
நன்றி அண்ணா!

அனைத்தும் புதிதாக உள்ளது! புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun 17 Nov 2013 - 15:15

ரமணியின் கவிதைகள் - Page 12 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 18 Nov 2013 - 8:29

இதழுறல் & இதழகலி....ரமணியின் கவிதைகள் - Page 12 103459460 

Sponsored content

PostSponsored content



Page 12 of 36 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 24 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக