புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
21 Posts - 66%
heezulia
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
63 Posts - 64%
heezulia
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 17, 2009 9:00 pm

தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன?
சுவாரசிய பின்னணி


நம் நாட்டில் தீபாவளி பண்டிகையன்று எமதர்மனையும் பெரும்பாலானோர் வழிபடுகிறார்கள். இதன் பின்னணியில் சுவாரசியமான தகவல் இருப்பதை புராணங்கள் கூறுகின்றன.

எமதர்மனை வழிபடும் மக்கள்
இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பண்டிகையாக தீபாவளி விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஸ்ரீகிருஷ்ணர் (நரகாசுரனை வதம் செய்த தினம்) மகாலட்சுமி (லட்சுமி பிறந்தநாள்), ஸ்ரீராமர் (இலங்கையில் இருந்து வெற்றியுடன் திரும்பிய தினம்) போன்ற கடவுளர்களை பின்னணியாகக் கொண்டே இந்த கதைகள் அமைந்திருக்கும்.

இதற்கு மாறாக, இந்தியாவில் சில பகுதிகளில் எமதர்மனை தீபாவளியன்று வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராணக் கதை கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில், வடஇந்திய பகுதியை ஹிமா என்ற பேரரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது 16 வயது மகன், திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறந்துவிடுவான் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தார்கள். இதனால், மன்னன் பயந்துபோனான். இருப்பினும், மனதை தேற்றிக் கொண்டு மகனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தான்.

தங்கத்தால் தடுமாறிய பாம்பு
திருமணமும் வைபோகமாக நடந்தது. மன்னனின் மகனை சாவித்திரி என்ற பெண் திருமணம் செய்து கொண்டாள். இளம் வயது பெண்ணாக இருந்தாலும், புத்திசாதுரியமும், தைரியமும் கொண்டவள் அவள். தன் கணவனை எப்பாடுபட்டாவது, எமதர்மனின் பாசக்கயிற்றினில் சிக்காமல் தப்ப வைக்க

உறுதி பூண்டாள்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. அன்று, தன் கணவனை தூங்கவே அவள் அனுமதிக்கவில்லை. கணவனுடன் தான் இருந்த அறையின் வாயிலில், தகதகக்கும் தங்க, வெள்ளி ஆபரணங்களை கொட்டி வைத்தாள். அரண்மனை என்பதால் தங்கத்துக்கு குறைவா என்ன? அதுமட்டுமின்றி, இரவை பகலாக்கும் வகையில் விளக்குகளையும் எரியவிட்டாள். குறிப்பாக, படுக்கையை சுற்றி அதிக பிரகாசம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்தாள். அதன்பிறகு, தனது இனிய குரலில் பாடத் தொடங்கினாள். கணவன் தூங்காதிருக்க கதை சொல்லவும் தொடங்கினாள்.

ஜோதிடர்கள் சொன்னது போல், அவளது கணவனின் உயிரைப் பறிக்க அந்த அறைக்கு பாம்பும் வந்தது. ஆனால், ஜொலி, ஜொலிக்கும் ஆபரணங்களின் வெளிச்சமும், விளக்குகளின் பிரகாசமும் அதன் கண்களை கூசச் செய்தன. இதனால், தங்க ஆபரணங்களின் மீது தள்ளாடி, தள்ளாடி பாம்பு ஊர்ந்து சென்றது. இதனால், சாவித்திரியின் கணவன் இருக்கும் இடத்தை அதனால் கண்டு பிடிக்க முடியாமல் போனது.

கணவர் நீண்ட ஆயுள் பெற...
இதனால் தங்க ஆபரணக்குவியல் மீது சோர்ந்து படுத்துவிட்டது. இதற்கிடையே, சாவித்திரியின் இனிமையான குரலில் பாட்டை கேட்ட பாம்பு, தங்க ஆபரணக் குவியல் மீது படுத்தபடியே பாட்டை மெய்மறந்து கேட்கத் தொடங்கியதாம். இரவு முழுக்க, சாவித்திரி தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். இப்படியே இரவு கழிந்து பொழுதும் விடிந்தது.
இரவு கடந்து போனதை பார்த்த பாம்பு, எதுவும் செய்யாமல், வந்த வழியாகவே திரும்பிச் சென்றுவிட்டது. இளவரசனும் சாவில் இருந்து தப்பினான். இவ்வாறாக எமதர்மனின் பிடியில் இருந்து கணவனை, அப்பெண் காப்பாற்றினாள்.

இதன்காரணமாகவே, இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை எமதீப தினம் என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அப்பகுதிகளில், இரவு முழுவதும் விளக்குகளும் தொடர்ச்சியாக எரியவிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள், எமதர்மனை நினைத்து வழிபடும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இத்தகைய சுவாரசியமான பின்னணிகளே, பண்டிகைகளை மேலும் உற்சாகத்துடன் கொண்டாட ஊக்குவிப்பதை மறுக்க முடியாது.



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 17, 2009 9:02 pm

இனிய எம தீப வாழ்த்துக்கள் அண்ணா..தெரியாத தகவல்..நன்றிகள் அண்ணா

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள், எமதர்மனை நினைத்து வழிபடும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Icon_eek



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக