புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2012 12:17 pm

First topic message reminder :

நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Tamil_News_large_576145

நீலம் புயல் குறித்த செய்திகள் படங்கள் கருத்துக்களை இங்கு எழுதுங்கள்!


சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ.,ல் நீலம் புயல்: திருவாரூரில் பலத்த காற்றுடன் கனமழை

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நீலம், சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ.,ல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில், தென் கிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. சென்னைக்கு அருகில், 550 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுவடைந்து, அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது; நேற்று காலை, அது புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "நீலம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சுமார் 40 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றுடன் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் தொடர்பான உதவிக்கு 1077 என்ற இலவச தொலைபேசியை உபயோகிக்க கலெக்டர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட போதிலும், குழந்தைகளை பாதுகாப்பாக காத்துக்கொள்ளும்படியும், ஆடு மாடுகளை மின்கம்பங்களில் கட்ட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இம்மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியை அடுத்த கூண்டுவெளி கிராமத்தைச் சேர்ந்த ஜெகந்நாதன் மகன் ரவி (48). விவசாய கூலியான இவர், இன்று காலை டீ சாப்பிடுவதற்காக வெளியே சென்ற போது, அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2012 12:09 am

மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது நீலம் :5 பேர் பலி பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன

சென்னை: நீலம் புயல் சென்னை மகாபலிபுரம் கடற்கரையில் கரையை கடந்தது , சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மி்ன்சாரம் துண்டிக்கப்பட்டது. நீலம் புயலால் பெருமளவு ரயில்பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புயலால் 5 பேர் பலியாயினர். சென்னை மெரீனாவில் கடல் சீற்றம் இன்னும் குறையவில்லை.

வங்கக்கடலில் உருவான நீலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து ஆந்திரா நோக்கி செல்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்புகின்றன. புயல் கரையை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து புயல் மாமல்லபுரம் அருகே கரைகடந்தது. இதனால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது.

மரங்கள் வேரோடு சாய்ந்தன:

நீலம் புயல் சீற்றம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சார கம்பங்கள் சேதமடைந்தன. இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் இருந்து அடையாறு வரை தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நீலம் புயல் கரையை கடக்கும் சூழலில், இது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, புயல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன், முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் அரசு அலுவலர்கள் மாலை 3 மணியுடன் தங்களது வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பவும், புயல் கரையை கடக்கும் வேளையில், பொதுமக்கள் யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்களை மெதுவாக இயக்க உத்தரவு: சென்னையிலிருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் ரயில்கள் 10 கி.மீ., வேகத்திலேயே இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாலத்தில் செல்லும் போது, 10 கி.மீ.,க்கும் குறைவான வேகத்தில் செல்ல ரயில் டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரயில் பாதைகள் மாற்றம்:

நீலம் புயல் எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களின் போக்குவரத்து பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே முதுநிலை செய்தி தொடர்பாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள மாறுதல் தகவல்களில் குறிப்பிட்டுள்ளதாவது: சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு 31ம் தேதி மாலையில் கிளம்பும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்(16735) ரயில் வழக்கமாக விழுப்புரத்திற்கு பிறகு திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும். தற்போது அந்த ரயில் விழுப்புரத்திற்கு பிறகு விருத்தாச்சலம், அரியலூர் வழியாக திருச்சி சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து சென்னை வரும் 16736 ரயிலும் இதே புதிய வழித்தடத்தில் செல்லும். இதே போல சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் 16702 ரயில் மற்றும் மறுமார்க்கத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் 16701 ரயிலும் வழக்கமான பாதையில் இருந்து மாற்றப்பட்டு விழுப்புரம்-திருச்சி இடையிலான கார்டு ரூட்டில் இயக்கப்படுகிறது. விழுப்புரம்-மயிலாடுதுறை இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2012 12:10 am

சென்னையில் நீலம் புயலால் பாதிப்பு

சென்னை: சென்னையில் நீலம் புயலின் தாக்குதலால் பல்வேறு இடங்களில் சாலைகள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. வங்ககடலில் உருவான நீலம் புயல் தமிழகம், புதுசேரி பகுதிகளில் பலத்த தாக்குதலை ஏற்படுத்தியது. சென்னையில் 90 மரங்கள் கனமழையால் சாய்ந்தன, 6 மின்கம்பங்கள் சாய்ந்தன. வன்னாரப்பேட்டை சி.ஏ சாலையில் மின்கம்பம்கங்கள் சாய்ந்தால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2012 12:10 am

250 மின்கம்பங்கள் சாய்ந்தன

நாகை : நீலம் புயலால் பெய்த கன மழையால் 250 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது என மின்சார வாரிய தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது: புயலால் பெய்த கன மழையால் டெல்ட்டா பகுதிகளில் மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்துள்ளது. சாய்ந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிதாக மின்கம்பங்கள் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2012 12:10 am

16 மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை:

நீலம் புயல் காரணமாக 13 கடலோர மாவட்ட மற்றும் 3 உள் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நீலம் புயல் கரையை கடக்கும் நிகழ்வு 3 மணிநேரம் ஆகும் என்பதால், சென்னை கோவளம், மாமல்லபுரத்தின் தாழ்வான பகுதிகளில் 5 ஆயிரம் வெளியேற்றப்பட்டுள்ளனர். தவிர 13 கடலோர மாவட்டங்கள், 3 உள் மாவட்டங்கள் உள்பட 16 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2012 12:11 am


புயல் எதிரொலி : ரயில் சேவை ரத்து

சென்னை: நீலம் புயல் பாதிப்பால், நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. நாளை, நாகூர் - பெங்களூரு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில், நாகூர் - விருத்தாச்சலம் இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2012 12:12 am


நீலம் புயல் : மாலுமி பலி


சென்னை : நீலம் புயலில் சிக்கி மாலுமி ஒருவர் பலியாகி உள்ளார். இவரைச் சேர்த்து, இப்புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2012 12:13 am

நீலம் புயல் : 77 கி.மீ. சாலை சேதம்

நாகப்பட்டினம் : மாமல்லபுரம் அருகே நீலம் புயல் கரையை கடந்து வருகிறது. இந்த புயலில் சிக்கி நாகப்பட்டினம் மாவட்டத்தில், 77 கிலோமீட்டர் அளவிற்கு சாலைகள் சேதமடைந்துள்ளது. 82 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு பயிரிடப்பட்டிருந்த உணவுப்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. பாதிப்பு பகுதிகளில் இருக்கும் மக்கள் 5 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2012 12:21 am



நீலம் புயல்:கல்பாக்கம் அணு உலைக்கு எச்சரிக்கை!

நீலம் புயல் தமிழ்நாட்டில் கரையைக் கடக்க இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில் கல்பாக்கம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை அணு மின் நிலைய அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில் நீலம் புயல் விளைவுகள் குறித்து அணு உலை விஷ்யத்தில் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் கல்பாக்கம் அணு உலை நிலையம் மணிக்கு 160 கிமீ வேகம் வரையிலான காற்றைத் தாங்கக்கூடிய அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னைக்கு 55 கிமீ தொலைவில் உள்ள கடற்கரை ஊராகும் கல்பாக்கம். இங்குள்ள அமைப்புகள் அனைத்தும் மணிக்கு 160கிமீ வேகம் வரை வரும் காற்றை எதிர்கொள்ளும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் ராமமூர்த்தி செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

இருப்பினும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் உடனடி நடவடிக்கைக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தன் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 01, 2012 12:34 am

நீலம் புயல் மகாபலிபுரம் அருகில் தான் கரையை கடந்தது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக