Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
First topic message reminder :
![நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Tamil_News_large_576145](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_576145.jpg)
நீலம் புயல் குறித்த செய்திகள் படங்கள் கருத்துக்களை இங்கு எழுதுங்கள்!
சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ.,ல் நீலம் புயல்: திருவாரூரில் பலத்த காற்றுடன் கனமழை
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நீலம், சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ.,ல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில், தென் கிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. சென்னைக்கு அருகில், 550 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுவடைந்து, அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது; நேற்று காலை, அது புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "நீலம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சுமார் 40 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றுடன் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் தொடர்பான உதவிக்கு 1077 என்ற இலவச தொலைபேசியை உபயோகிக்க கலெக்டர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட போதிலும், குழந்தைகளை பாதுகாப்பாக காத்துக்கொள்ளும்படியும், ஆடு மாடுகளை மின்கம்பங்களில் கட்ட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இம்மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியை அடுத்த கூண்டுவெளி கிராமத்தைச் சேர்ந்த ஜெகந்நாதன் மகன் ரவி (48). விவசாய கூலியான இவர், இன்று காலை டீ சாப்பிடுவதற்காக வெளியே சென்ற போது, அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
![நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Tamil_News_large_576145](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_576145.jpg)
நீலம் புயல் குறித்த செய்திகள் படங்கள் கருத்துக்களை இங்கு எழுதுங்கள்!
சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ.,ல் நீலம் புயல்: திருவாரூரில் பலத்த காற்றுடன் கனமழை
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நீலம், சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ.,ல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில், தென் கிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. சென்னைக்கு அருகில், 550 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுவடைந்து, அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது; நேற்று காலை, அது புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "நீலம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சுமார் 40 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றுடன் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் தொடர்பான உதவிக்கு 1077 என்ற இலவச தொலைபேசியை உபயோகிக்க கலெக்டர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட போதிலும், குழந்தைகளை பாதுகாப்பாக காத்துக்கொள்ளும்படியும், ஆடு மாடுகளை மின்கம்பங்களில் கட்ட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இம்மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியை அடுத்த கூண்டுவெளி கிராமத்தைச் சேர்ந்த ஜெகந்நாதன் மகன் ரவி (48). விவசாய கூலியான இவர், இன்று காலை டீ சாப்பிடுவதற்காக வெளியே சென்ற போது, அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது நீலம் :5 பேர் பலி பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன
சென்னை: நீலம் புயல் சென்னை மகாபலிபுரம் கடற்கரையில் கரையை கடந்தது , சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மி்ன்சாரம் துண்டிக்கப்பட்டது. நீலம் புயலால் பெருமளவு ரயில்பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புயலால் 5 பேர் பலியாயினர். சென்னை மெரீனாவில் கடல் சீற்றம் இன்னும் குறையவில்லை.
வங்கக்கடலில் உருவான நீலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து ஆந்திரா நோக்கி செல்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்புகின்றன. புயல் கரையை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து புயல் மாமல்லபுரம் அருகே கரைகடந்தது. இதனால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது.
மரங்கள் வேரோடு சாய்ந்தன:
நீலம் புயல் சீற்றம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சார கம்பங்கள் சேதமடைந்தன. இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் இருந்து அடையாறு வரை தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நீலம் புயல் கரையை கடக்கும் சூழலில், இது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, புயல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன், முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் அரசு அலுவலர்கள் மாலை 3 மணியுடன் தங்களது வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பவும், புயல் கரையை கடக்கும் வேளையில், பொதுமக்கள் யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்களை மெதுவாக இயக்க உத்தரவு: சென்னையிலிருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் ரயில்கள் 10 கி.மீ., வேகத்திலேயே இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாலத்தில் செல்லும் போது, 10 கி.மீ.,க்கும் குறைவான வேகத்தில் செல்ல ரயில் டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரயில் பாதைகள் மாற்றம்:
நீலம் புயல் எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களின் போக்குவரத்து பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே முதுநிலை செய்தி தொடர்பாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள மாறுதல் தகவல்களில் குறிப்பிட்டுள்ளதாவது: சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு 31ம் தேதி மாலையில் கிளம்பும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்(16735) ரயில் வழக்கமாக விழுப்புரத்திற்கு பிறகு திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும். தற்போது அந்த ரயில் விழுப்புரத்திற்கு பிறகு விருத்தாச்சலம், அரியலூர் வழியாக திருச்சி சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து சென்னை வரும் 16736 ரயிலும் இதே புதிய வழித்தடத்தில் செல்லும். இதே போல சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் 16702 ரயில் மற்றும் மறுமார்க்கத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் 16701 ரயிலும் வழக்கமான பாதையில் இருந்து மாற்றப்பட்டு விழுப்புரம்-திருச்சி இடையிலான கார்டு ரூட்டில் இயக்கப்படுகிறது. விழுப்புரம்-மயிலாடுதுறை இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீலம் புயல் சென்னை மகாபலிபுரம் கடற்கரையில் கரையை கடந்தது , சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மி்ன்சாரம் துண்டிக்கப்பட்டது. நீலம் புயலால் பெருமளவு ரயில்பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புயலால் 5 பேர் பலியாயினர். சென்னை மெரீனாவில் கடல் சீற்றம் இன்னும் குறையவில்லை.
வங்கக்கடலில் உருவான நீலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து ஆந்திரா நோக்கி செல்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்புகின்றன. புயல் கரையை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து புயல் மாமல்லபுரம் அருகே கரைகடந்தது. இதனால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது.
மரங்கள் வேரோடு சாய்ந்தன:
நீலம் புயல் சீற்றம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சார கம்பங்கள் சேதமடைந்தன. இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் இருந்து அடையாறு வரை தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நீலம் புயல் கரையை கடக்கும் சூழலில், இது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, புயல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன், முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் அரசு அலுவலர்கள் மாலை 3 மணியுடன் தங்களது வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பவும், புயல் கரையை கடக்கும் வேளையில், பொதுமக்கள் யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்களை மெதுவாக இயக்க உத்தரவு: சென்னையிலிருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் ரயில்கள் 10 கி.மீ., வேகத்திலேயே இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாலத்தில் செல்லும் போது, 10 கி.மீ.,க்கும் குறைவான வேகத்தில் செல்ல ரயில் டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரயில் பாதைகள் மாற்றம்:
நீலம் புயல் எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களின் போக்குவரத்து பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே முதுநிலை செய்தி தொடர்பாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள மாறுதல் தகவல்களில் குறிப்பிட்டுள்ளதாவது: சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு 31ம் தேதி மாலையில் கிளம்பும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்(16735) ரயில் வழக்கமாக விழுப்புரத்திற்கு பிறகு திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும். தற்போது அந்த ரயில் விழுப்புரத்திற்கு பிறகு விருத்தாச்சலம், அரியலூர் வழியாக திருச்சி சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து சென்னை வரும் 16736 ரயிலும் இதே புதிய வழித்தடத்தில் செல்லும். இதே போல சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் 16702 ரயில் மற்றும் மறுமார்க்கத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் 16701 ரயிலும் வழக்கமான பாதையில் இருந்து மாற்றப்பட்டு விழுப்புரம்-திருச்சி இடையிலான கார்டு ரூட்டில் இயக்கப்படுகிறது. விழுப்புரம்-மயிலாடுதுறை இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
Re: நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
சென்னையில் நீலம் புயலால் பாதிப்பு
சென்னை: சென்னையில் நீலம் புயலின் தாக்குதலால் பல்வேறு இடங்களில் சாலைகள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. வங்ககடலில் உருவான நீலம் புயல் தமிழகம், புதுசேரி பகுதிகளில் பலத்த தாக்குதலை ஏற்படுத்தியது. சென்னையில் 90 மரங்கள் கனமழையால் சாய்ந்தன, 6 மின்கம்பங்கள் சாய்ந்தன. வன்னாரப்பேட்டை சி.ஏ சாலையில் மின்கம்பம்கங்கள் சாய்ந்தால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் நீலம் புயலின் தாக்குதலால் பல்வேறு இடங்களில் சாலைகள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. வங்ககடலில் உருவான நீலம் புயல் தமிழகம், புதுசேரி பகுதிகளில் பலத்த தாக்குதலை ஏற்படுத்தியது. சென்னையில் 90 மரங்கள் கனமழையால் சாய்ந்தன, 6 மின்கம்பங்கள் சாய்ந்தன. வன்னாரப்பேட்டை சி.ஏ சாலையில் மின்கம்பம்கங்கள் சாய்ந்தால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Re: நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
250 மின்கம்பங்கள் சாய்ந்தன
நாகை : நீலம் புயலால் பெய்த கன மழையால் 250 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது என மின்சார வாரிய தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது: புயலால் பெய்த கன மழையால் டெல்ட்டா பகுதிகளில் மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்துள்ளது. சாய்ந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிதாக மின்கம்பங்கள் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாகை : நீலம் புயலால் பெய்த கன மழையால் 250 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது என மின்சார வாரிய தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது: புயலால் பெய்த கன மழையால் டெல்ட்டா பகுதிகளில் மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்துள்ளது. சாய்ந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிதாக மின்கம்பங்கள் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Re: நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
16 மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை:
நீலம் புயல் காரணமாக 13 கடலோர மாவட்ட மற்றும் 3 உள் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நீலம் புயல் கரையை கடக்கும் நிகழ்வு 3 மணிநேரம் ஆகும் என்பதால், சென்னை கோவளம், மாமல்லபுரத்தின் தாழ்வான பகுதிகளில் 5 ஆயிரம் வெளியேற்றப்பட்டுள்ளனர். தவிர 13 கடலோர மாவட்டங்கள், 3 உள் மாவட்டங்கள் உள்பட 16 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலம் புயல் காரணமாக 13 கடலோர மாவட்ட மற்றும் 3 உள் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நீலம் புயல் கரையை கடக்கும் நிகழ்வு 3 மணிநேரம் ஆகும் என்பதால், சென்னை கோவளம், மாமல்லபுரத்தின் தாழ்வான பகுதிகளில் 5 ஆயிரம் வெளியேற்றப்பட்டுள்ளனர். தவிர 13 கடலோர மாவட்டங்கள், 3 உள் மாவட்டங்கள் உள்பட 16 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Re: நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
புயல் எதிரொலி : ரயில் சேவை ரத்து
சென்னை: நீலம் புயல் பாதிப்பால், நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. நாளை, நாகூர் - பெங்களூரு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில், நாகூர் - விருத்தாச்சலம் இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டுள்ளது.
Re: நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
நீலம் புயல் : மாலுமி பலி
சென்னை : நீலம் புயலில் சிக்கி மாலுமி ஒருவர் பலியாகி உள்ளார். இவரைச் சேர்த்து, இப்புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
Re: நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
நீலம் புயல் : 77 கி.மீ. சாலை சேதம்
நாகப்பட்டினம் : மாமல்லபுரம் அருகே நீலம் புயல் கரையை கடந்து வருகிறது. இந்த புயலில் சிக்கி நாகப்பட்டினம் மாவட்டத்தில், 77 கிலோமீட்டர் அளவிற்கு சாலைகள் சேதமடைந்துள்ளது. 82 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு பயிரிடப்பட்டிருந்த உணவுப்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. பாதிப்பு பகுதிகளில் இருக்கும் மக்கள் 5 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் : மாமல்லபுரம் அருகே நீலம் புயல் கரையை கடந்து வருகிறது. இந்த புயலில் சிக்கி நாகப்பட்டினம் மாவட்டத்தில், 77 கிலோமீட்டர் அளவிற்கு சாலைகள் சேதமடைந்துள்ளது. 82 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு பயிரிடப்பட்டிருந்த உணவுப்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. பாதிப்பு பகுதிகளில் இருக்கும் மக்கள் 5 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Re: நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
நீலம் புயல்:கல்பாக்கம் அணு உலைக்கு எச்சரிக்கை!
நீலம் புயல் தமிழ்நாட்டில் கரையைக் கடக்க இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில் கல்பாக்கம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை அணு மின் நிலைய அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில் நீலம் புயல் விளைவுகள் குறித்து அணு உலை விஷ்யத்தில் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
மேலும் கல்பாக்கம் அணு உலை நிலையம் மணிக்கு 160 கிமீ வேகம் வரையிலான காற்றைத் தாங்கக்கூடிய அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு 55 கிமீ தொலைவில் உள்ள கடற்கரை ஊராகும் கல்பாக்கம். இங்குள்ள அமைப்புகள் அனைத்தும் மணிக்கு 160கிமீ வேகம் வரை வரும் காற்றை எதிர்கொள்ளும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் ராமமூர்த்தி செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
இருப்பினும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் உடனடி நடவடிக்கைக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தன் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
Re: நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
நீலம் புயல் மகாபலிபுரம் அருகில் தான் கரையை கடந்தது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நிவர் புயல் - செய்திகள்
» 'மாண்டஸ்' புயல் - தொடர் செய்திகள்
» தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
» தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு
» 'மாண்டஸ்' புயல் - தொடர் செய்திகள்
» தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
» தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|