புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 6 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 6 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 6 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
இது உங்கள் இடம்..! - Page 6 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 6 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 6 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 6 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 6 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 6 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 6 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 6 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 6 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 6 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 6 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 6 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
இது உங்கள் இடம்..! - Page 6 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 6 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 6 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 6 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 6 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 6 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
இது உங்கள் இடம்..! - Page 6 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 6 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 6 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 6 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 6 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 6 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 6 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 6 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 6 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
இது உங்கள் இடம்..! - Page 6 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 6 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 6 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!


   
   

Page 6 of 23 Previous  1 ... 5, 6, 7 ... 14 ... 23  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Dec 23, 2012 11:13 am

பக்தி என்பது என்ன?

அண்மையில், நான் என் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, அங்கு தங்கும்படி நேர்ந்தது. அது பழைய காலப்பெரிய வீடு. வீட்டில் கிட்டத்தட்டப் பத்து குடும்பத்தினர், "போர்ஷன்'களில் குடியிருந்தனர். விடியற்காலை 5:00 மணியிருக்கும். மார்கழி மாதமாதலால், ஓரிரு, "போர்ஷன்'களில் வெங்கடேச சுப்ரபாதம் போன்ற பக்திப் பாடல்கள், "டிவி'களிலிருந்து ஒலிக்கத் தொடங்கின. அந்த ஒலி, எல்லாருக்குமே காதை அடைக்கும் அளவுக்கு இருந்தது. சற்று நேரத்திற்குள், கிட்டத்தட்ட எல்லா, "போர்ஷன்'களிலிருந்துமே விதவிதமான பக்திப்பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. இதில், இன்னும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தமான, "டிவி' சேனல்களை போட்டிருந்தனர். கிட்டத்தட்ட வெங்கடேச சுப்ரபாதம், கந்தர் சஷ்டி கவசம், ஐயப்பப் பாடல்கள், சில வேத மந்திரங்கள், மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரம், திருப்பாவை என்று, ஒட்டு மொத்தமாக அலறிக் கொண்டிருந்தது.
இதனால் ஏற்படும் ஒலி அளவு, எந்த அளவுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதை யாருமே உணர்ந்த மாதிரி தெரியவில்லை. இந்த சப்தம் காரணமாக, விடியற்காலையில் எழுந்து படிக்கும் பழக்கம் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு, அந்த பழக்கத்தை, பெற்றோரே இல்லாமல் செய்து விடுவர் போலிருக்கிறது.
இதற்காக, நான் தெய்வ பக்தி இல்லாதவன் என்று அர்த்தம் இல்லை. ஆனால், "டிவி'யில் போட்டால் தான் பக்தி என்பது அல்ல. அதை அவரவர்களுக்கு மட்டும், கேட்கிற மாதிரி வைத்துக் கொள்ளலாமே. அதைவிடச் சிறப்பு, வீட்டில் உள்ளவர்கள், அவரவர்களுக்கு பிடித்த ஸ்தோத்ரங்களையோ, பாடல்களையோ மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பாராயணம் செய்யலாமே!

— எஸ்.ராமசாமி, சென்னை.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 11:49 am

அருண் wrote:விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்!

கடற்கரையில் அமர்ந்திருந்தேன். சிறிது தூரத்தில், இரண்டு இளைஞர்கள் அமர்ந்து, சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். நைசாக காதை நீட்டினேன். ஒருவர், தன் முதலிரவு அனுபவங்களை விலாவரியாக, உற்சாகம் கரைபுரள, சினிமா கதை போல் சொல்லிக் கொண்டிருந்தார். அதில், அவருடைய மனைவியின் உடலழகை விவரித்த போது, பேச்சில் பெருமை தாங்கவில்லை. மற்றவர், "ஜொள்ளு' விட்டு, கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த பேச்சைக் கேட்ட எனக்கு, அருவருப்பாக இருந்தது. எத்தனை அநாகரிகமான பேச்சு இது? குடும்ப அந்தரங்கங்களை இப்படி வெளிச்சம் போட்டு கூறினால், இவர் மனைவியை, நண்பர் பார்க்கும் போது, எப்படி நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கத் தோன்றும்? நண்பர் கூறின வார்த்தைகள் தானே நினைவுக்கு வரும். இது எந்தெந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்!
நீங்கள் இப்படி நண்பர்களிடம் சொல்லும் விஷயம், மனைவிக்கு தெரிந்தால், எத்தனை வேதனைப்படுவார்?
ரோட்டில் செல்லும் போது, உங்கள் மனைவியை, ஆண்கள் சாதாரணமாக பார்த்தால் கூட, எப்படி கோபம் வருகிறது? அப்படியிருக்க, நண்பர் உங்கள் மனைவியை நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா? யோசிங்க புதுமாப்பிள்ளைகளே !

— வீ.குணாளன், புதுவை.

இவரே இவரது வாழ்க்கைக்கு ஓலை வைக்கிறார் போல தோணுது என்ன கொடுமை சார் இது




இது உங்கள் இடம்..! - Page 6 Mஇது உங்கள் இடம்..! - Page 6 Uஇது உங்கள் இடம்..! - Page 6 Tஇது உங்கள் இடம்..! - Page 6 Hஇது உங்கள் இடம்..! - Page 6 Uஇது உங்கள் இடம்..! - Page 6 Mஇது உங்கள் இடம்..! - Page 6 Oஇது உங்கள் இடம்..! - Page 6 Hஇது உங்கள் இடம்..! - Page 6 Aஇது உங்கள் இடம்..! - Page 6 Mஇது உங்கள் இடம்..! - Page 6 Eஇது உங்கள் இடம்..! - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 06, 2013 12:07 pm

காதலர்களே உஷார்...



என் தோழி, ஆண் நண்பருடன், நகரிலுள்ள பூங்கா ஒன்றுக்கு சென்றிருக்கிறாள். இருவரும், அத்துமீறி விளையாடிக் கொண்டிருந்த சமயம், எவனோ ஒரு இளைஞன், தன் கேமரா மொபைலில், அதை படமாக்கி எடுத்திருக்கிறான். சில தினங்களுக்குப் பின், மீண்டும் அதே பூங்காவுக்கு, தோழி, ஆண் நண்பருடன் சென்ற போது, இருவர் தம்மை அறிமுகம் செய்து, முன்பு தாங்கள் எடுத்த படத்தை, பிரின்ட் போட்டு காண்பித்திருக்கின்றனர்.
அதிர்ந்து போன தோழியும், அவளது ஆண் நண்பரும் பதறியபடி, அழுதனர். அவர்களிடம் பேரம் பேசி, தோழியின் இரண்டரை பவுன் செயின், மோதிரம், நண்பரின் செயின், வாட்ச், ரிங், இருவரது மொபைல்போன் உட்பட, பணமும் கணிசமாக பெற்றுக் கொண்டு, படத்தையும் கொடுத்து, மொபைலில் அழித்து விட்டோம் என்று சொல்லி, மொபைலையும், இவர்களிடமே கொடுத்து, "எஸ்கேப்' ஆகியிருக்கின்றனர். வெளியே தெரிந்தால் கேவலம் என்று, மூடி மறைத்துள்ள தோழி, நகையை தொலைத்ததாக கூறியிருக்கிறாள். பெரும் பிரச்னை <உருவாகி, தற்போது தப்பித்து விட்டாள்.
தோழியரே... பொது இடங்களில் கொஞ்சல், குலாவல் என, ஆண் நண்பருடன் வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
காதலர்களே... இவ்விஷயத்தில், உஷா ராய் இருங்கள்.

— எஸ்.மாரியம்மாள், திருநெல்வேலி.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 06, 2013 12:10 pm

கணவர்களை நம்பாத மனைவியர்!

நான் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். காப்பீடு செய்யும் ஒருவர், தன் காப்பீடு தொகைக்கு வாரிசுதாரராக, ஒருவரை நியமனம் செய்ய வேண்டியது நடைமுறை அவசியம். இந்த வகையில், ஆண்கள் காப்பீடு செய்யும் போது, திருமணமான ஆண்களில், 95 சதவீதம் பேர், தங்கள் மனைவியைத்தான் வாரிசுதாரர்களாக பதிவு செய்கின்றனர். அதேசமயம், திருமணமான பெண்கள் காப்பீடு செய்யும் போது, குறைந்தபட்சம், 75 சதவீதம் பெண்கள், கணவனை தவிர்த்து, அண்ணன், அக்கா, அம்மா, அப்பா இப்படி உறவு முறைகளில் உள்ள வேறு யாரையாவது தான், வாரிசுதாரர்களாக பதிவு செய்கின்றனர்.
இந்த நிலைக்கு காரணம்... தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், கிடைக்கும் பணத்தை மனைவி பெற்றுக்கொண்டு, குடும்பத்திற்கு உபயோகமாக, ஏதாவது ஒருவழியில் பயன்படுத்திக் கொள்வாள் என்று, ஒரு ஆண் நம்பிக்கை வைத்து செயல்படுவதைப் போல், மனைவியாகிய ஒரு பெண், காப்பீடு செய்யும்போது, தமக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதற்காக கிடைக்கும் பணம், கணவன் கைக்கு போவதை விரும்பவில்லை என்று தெளிவாகிறது.
இதிலிருந்து தெரியவரும் உண்மை, சமூகத்தில் இன்று, "கணவன் - மனைவி' என, தம்பதியராக குடும்பம் நடத்தி வந்தாலும், பரஸ்பர புரிதலும், நம்பிக்கையும் ஊசலாட்டமாகத்தான் உள்ளதென்பதோடு, பெரும்பாலான கணவன்கள், மனைவியின் நம்பிக்கைக்கு உரியவராக இல்லாமலோ, அதற்கேற்றாற்போல், அவர்களின் நடவடிக்கை இல்லாமல் இருப்பதாகவே தெரிகிறது. இதுபோன்ற போக்கு தொடர்வதென்பது, எதிர்காலத்தில் கணவன் - மனைவி - குடும்பம் என்கிற அமைப்பையே குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு கணவனும், குடும்ப பொறுப்போடும், குறிப்பாக மனைவியின் நம்பிக்கைக்குரியவராகவும் தங்கள் செயல்பாட்டை மாற்றிக் கொள்வதும், சில இடத்தில் கணவன் பொறுப்புணர்வுடன் இருந்தாலும், அதை மனைவி புரிந்துகொள்ளாமல் மனதில், ஒரு அச்சவுணர்வுடனோ, வெறுப்புணர்வுடனோ, சந்தேகப்பார்வையுடனோ கணவனை தவிர்த்து, மற்றவர்கள் மீது நம்பிக்கைக் கொள்ளும் போக்கை மாற்றிக் கொள்வதும் மிக அவசியமானதும், காலத்தின் கட்டாயமுமாகும்.

— ஆர்.ரகுவர்மன், கபிஸ்தலம்.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 06, 2013 12:11 pm

குடிநீர் தர மறுத்த கிராதகன்!

தொலைதூர ரயில் பயணங்களின் போது, நான் சைடு லோயர்பெர்த் ரிசர்வ் செய்து கொள்வேன். இரண்டு லிட்டர் பாட்டிலில் ஜின்னும், இன்னொரு இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டிலில், வோட்காவும் கலந்து வைப்பேன். ஒன்றை பெட்டிக்குள் பத்திரப்படுத்திக் கொண்டு, இன்னொன்றை குடிக்க வைத்துக் கொள்வேன்.
ஒரு வாய் குடிக்க, இருபது பக்கம் வாசிக்க செய்வேன். முழு பாட்டிலும் தீர, நான்கு மணி நேரமாக்குவேன். அந்த இடைவெளியில், நான்கு புத்தகங்களை வாசித்து விடுவேன். ஒரு தடவை என் பெட்டியில், ஒரு கணவன், மனைவி நான்கு வயது மகனும் பயணித்தனர். பொடியன், என் சரக்கு கலந்த வாட்டர் பாட்டிலை கேட்டு, கலாட்டா பண்ண ஆரம்பித்து விட்டான்.
"கொஞ்சுண்டு அவனுக்கு குடிக்க தாங்க சார்...' என்று, கணவன், மனைவி, இதர பயணிகளும், என்னை கெஞ்சினர். குட்டு வெளிப்பட்டு விடும் என்ற பயத்தில், மறுத்தேன்.
தொடர்ந்த களேபரத்தின் ஒரு கட்டத்தில், அம்மாகாரி என் பாட்டிலை பிடுங்கி, சிறிது குடித்து விட்டாள். துப்பவில்லை, வாந்தி எடுக்கவில்லை. கணவனிடம் திரும்பி, "உங்க சனியன் பிடிச்ச வேலையை செஞ்சிருக்கிறார். (மகனிடம் திரும்பி) அச்சுக் குட்டி... அந்த மாமா தண்ணி, ஆயித்தண்ணி. அடுத்த ஸ்டேஷனில் நிக்கட்டும். வேற தண்ணி வாங்கித் தருகிறேன்!' என்றாள்.
அசடு வழிந்தேன். அதன்பின், சரக்கு கலந்த ஒரு பாட்டிலும், சரக்கு கலக்காத ஒரு பாட்டிலும், எடுத்து போக ஆரம்பித்தேன். ஹி...ஹி!

— ஓ.ஜம்புலிங்கம், கோவை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 06, 2013 12:13 pm

ஏ.டி.எம்., கொள்ளையை தடுக்க...

கடன் அட்டைகளுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருந்த ஏ.டி.எம்., வசதி, தற்போது அனைத்து வங்கிப்பணி, பணபரிவர்த்தனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இயந்திரத்தில் கார்டை நுழைத்து, ரகசிய எண்ணை அழுத்தி, பணம் எடுக்கும் சில நொடிகளில், கார்டின் ஜாதகமும், ரகசியக் குறியீட்டு எண்ணும், திருடர்களால் களவாடப்பட்டு, அதன் மூலம் லட்சக்கணக்கில் திருடப்படும் சம்பவங்களும் சமீப காலமாக அதிகரித்துள்ளன.
"சைபர் க்ரைம்' போலீசும் கொள்ளையைத் தடுக்க, "பின் எண்ணை' அவ்வப்போது மாற்றச் சொல்லி அறிவுறுத்துகிறது. ஆனாலும், கொள்ளை சம்பவங்கள் தொடர்கதையாக@வ உள்ளன. இதை முற்றிலும் தடுக்க, ஒரு உபாயம் உள்ளது. மிஷினில் கார்டை நுழைத்து, பின் எண்ணையும் அழுத்திய பின், வந்திருப்பவர் கார்டின் உண்மையான உரிமையாளர் தானா என்பதை அறிய, இயந்திரம் அவரது பிறந்த தேதி மற்றும் தந்தையின் பெயரை மிஷினில் அழுத்தச் சொல்லலாம்.
இதனால், பரிவர்த்தனைக்கு, ஓரிரு நிமிடங்கள் கூடுதலாகலாம். ஆனால், நம்முடைய அட்டையின் ரகசிய எண்ணும், மற்ற விவரங்களும் திருடப்பட்டு, அதன் மூலம் நிகழும் கொள்ளை தவிர்க்கப்படும். வங்கிகளும், காவல் துறையும் கவனத்தில் கொள்ளுமா?

— ஜெ.கும்பகர்ணன், சென்னை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 20, 2013 1:28 pm

மனைவியிடம் எதையும் மறைக்காதீர்!

பிறந்த வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒரு மாதம் தங்க நேர்ந்தது. அதற்குள் என் கணவர், இரண்டுமுறை என்னை வந்து பார்த்துச் சென்றார். வரும்போதேல்லாம் ஆபீஸ் விஷயம் மட்டுமின்றி, நான் இல்லாதபோது வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்வார்.
ஒரு மாதம் முடிந்து வீட்டிற்கு சென்றேன். அவசரத் தேவை என்றால் கூட கதவை சாத்திக் கொள்ளும் பக்கத்து வீட்டுப் பெண்மணி, தானாக வந்து பேசினார். "நீங்கள் இல்லாத போது அலுவலகம் செல்லும் உங்கள் கணவர், இரவில், நேரத்துக்கு வீடு திரும்புவதில்லை. இருமுறை, வீட்டிற்கு இரவு வரவேயில்லை. காலையில் தான் வந்தார்...' என்றாள்.
"நீ இல்லாதபோது, வீட்டிற்கு வர பிடிக்கவில்லை. எனவே, ஓவர்டைம் பார்த்துவிட்டு அதிகாலை 3:00 மணிக்கு தான் வீட்டிற்கு வந்தேன்...' என்று, என் கணவர் என்னிடம் முன்பே சொல்லியிருந்தார். அதற்கேற்றார்போல், அந்த மாத சம்பளமும் அதிகம் கிடைத்தது.
அதனால், அந்த பெண்மணி கூறியதை பொருட்படுத்தவில்லை நான். கணவன் - மனைவியிடையே ஒளிவு மறைவு இல்லாமல் இருந்தால், பிறர் பேச்சை கேட்டு, வீண் சந்தேகம் மற்றும் சண்டை வராமல் தடுக்கலாம்.

— நிர்மலா செந்தில்குமார், சிவகங்கை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 20, 2013 1:31 pm

பஸ்சில் தூங்கும் இளம் பெண்களே!

இரவு நேரத்தில், பேருந்தில் பயணம் செய் தேன். உட்கார இடம் இல்லாததால், நின்று வந்தேன். அப்போது, பலரும் பின்பக்கம் திரும்பி பார்த்த வண்ணம் இருந்தனர். என்னதான் பார்க்கின்றனர் என்று நானும் திரும்பி பார்த்தேன். ஆடை கலைந்த நிலையில், கவர்ச்சி தெரியும்படி, அழகான இளம்பெண் ஒருத்தி தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த காட்சியைத்தான், இமைக்க மறந்து, பார்த்துக் கொண்டிருந்தனர். இதை கண்ட நான் திடுக்கிட்டேன்.
பெண்கள், எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இப்படி தன்னை மறந்த நிலையில் தூங்குவது, ஆண்களை தவறு செய்ய தூண்டும். எனவே, தூக்கம் வரும்போது, தோளைச் சுற்றி சேலையை நன்றாக இழுத்துச் செருகிக் கொண்டு தூங்கலாமே!
சமீபகாலமாக, நாட்டில் நடக்கும் கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களை கேள்விப்பட்ட பிறகாவது, நாமும் கொஞ்சம் உஷாராக இருப்பது அவசியம்.

— வி.மாதவன், திருப்பூர்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 20, 2013 1:32 pm

படித்தால் மட்டும் போதுமா?

சமீபத்தில், வங்கிக்கு சென்று பணம் செலுத்துவதற்கு, சலானை பூர்த்தி செய்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு மாணவி, தயங்கி தயங்கி வந்து, "மேடம் இந்த சலானை கொஞ்சம் எழுதி கொடுக்க முடியுமா?' என்று கேட்டாள். நான், "பொறும்மா, நான் பணத்தை கட்டிவிட்டு, பின் உனக்கு எழுதி தருகிறேன்...' என்றேன்.
பணம் கட்டிவிட்டு வந்து, அந்த மாணவியை அழைத்து, "என்னம்மா படிக்கிறாய்?' என்றேன். பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படிப்பதாக கூறினாள்.
"ஏம்மா... இவ்வளவு படித்துவிட்டு, ஒரு வங்கி சலான் கூட எழுத தெரியாதா... படிச்சு என்னம்மா பயன்? உனக்கும், படிக்காதவங்களுக்கும் என்னம்மா வித்தியாசம்?' என்று கேட்ட உடன், வெட்கத்தோடு சிரித்து, தலையை குனிந்தாள்.
பின், சலானில் உள்ள கேள்விகளை விளக்கி, அவளையே பதில் எழுதச் சொன்னேன்.
இப்படி, வங்கி, தபால் அலுவலகங்கள், அரசு அலுவலகங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாமல், நன்கு படித்தவர்கள் கூட குழப்பத்தோடு முழித்துக் கொண்டு இருப்பதை காணலாம்.
படித்தவர்கள், முடிந்தவரை சலான் மற்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வது நல்லது.

— ஜி.கலாவதி, பொள்ளாச்சி.



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 27, 2013 1:02 pm

முதல் இரவு அறைக்கதவை தட்டியவர்கள்!

நண்பனின் தங்கைக்கு திருமணம் நடந்தது. மாப்பிள்ளையின் நண்பர்கள் ஏழெட்டு பேர் வந்திருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த இளம் பெண்களை, "சைட்' அடித்து, இஷ்டப்படி கிண்டல் செய்தனர். திருமண நாளில் தகராறு வேண்டாம் என்பதால் பொறுத்துக் கொண்டோம்.
அன்று இரவு, முதலிரவு அறைக்குள் மாப்பிள்ளையும், பெண்ணும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின், அளவுக்கு மீறி உற்சாக பானம் அருந்தியதால், சுயநினைவின்றி, முதலிரவு அறைக்கதவை பலமாக தட்டினர் மாப்பிள்ளையின் நண்பர்கள். "டேய் மாப்ள... வெளியே வாடா... வழக்கம்போல் எங்களோடு சேர்ந்து குடிச்சிட்டு, உள்ளே போடா...' என்று கத்தி கலாட்டா செய்தனர். அதுவரையில் பொறுமையோடு இருந்த நாங்கள், ஆத்திரம் தாங்காமல், கட்டை, கம்புகளால் மாப்பிள்ளையின் நண்பர்களை அடித்து விரட்டினோம்.
திருமணத்திற்கு வரும் நண்பர்கள், நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை என்றால் இந்த கதிதான். திருமணம் என்றாலே, நண்பர்களுக்கு மது வாங்கி கொடுக்கும் கலாசாரத்தை நிறுத்தினாலே பாதி பிரச்னை தீரும்.

— எஸ்.எம்.ராமகிருஷ்ணன், மதுரை.

Sponsored content

PostSponsored content



Page 6 of 23 Previous  1 ... 5, 6, 7 ... 14 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக