புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உங்கள் இடம்..!
Page 3 of 23 •
Page 3 of 23 • 1, 2, 3, 4 ... 13 ... 23
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
இது மிகவும் ஆபத்தான செயல் , ஆனால் அந்த வயசு அப்படி இதையெல்லாம் எதோ பெரிய வீரசெயல் என்று நினைத்து கொள்வார்கள்.அருண் wrote:ஒரு தடவை, ஓப்பனர் தவிர்த்து, பீர் பாட்டிலை திறக்க முயன்றான் நண்பன். "கடக்' என்ற சப்தத்துடன், அவனது பக்கவாட்டு நான்கு மேல் வரிசை பற்கள், ரத்தத்துடன் தெறித்து விழுந்தன. "மாவீரன்' இப்போது<, "ஓட்டைப்பல் சிங்காரம்' ஆகிவிட்டான்.ஆகவே, "குடிமகன்'களே... வாய் தவிர்ப்பீர்; ஓப்பனர் உபயோகிப்பீர்!
இப்படி ஒரு தடவை நான் pepsi பாட்டில் மூடியை திறக்கும் போது மூடியுடன் சேர்த்து பாட்டிலையும் சிறிது கடித்து உடைத்துவிட்டேன். (பிறகு கர்சீப் மூலம் வடிகட்டி அருந்தினோம்)
ராஜா wrote:இது மிகவும் ஆபத்தான செயல் , ஆனால் அந்த வயசு அப்படி இதையெல்லாம் எதோ பெரிய வீரசெயல் என்று நினைத்து கொள்வார்கள்.அருண் wrote:ஒரு தடவை, ஓப்பனர் தவிர்த்து, பீர் பாட்டிலை திறக்க முயன்றான் நண்பன். "கடக்' என்ற சப்தத்துடன், அவனது பக்கவாட்டு நான்கு மேல் வரிசை பற்கள், ரத்தத்துடன் தெறித்து விழுந்தன. "மாவீரன்' இப்போது<, "ஓட்டைப்பல் சிங்காரம்' ஆகிவிட்டான்.ஆகவே, "குடிமகன்'களே... வாய் தவிர்ப்பீர்; ஓப்பனர் உபயோகிப்பீர்!
இப்படி ஒரு தடவை நான் pepsi பாட்டில் மூடியை திறக்கும் போது மூடியுடன் சேர்த்து பாட்டிலையும் சிறிது கடித்து உடைத்துவிட்டேன். (பிறகு கர்சீப் மூலம் வடிகட்டி அருந்தினோம்)
pepsi பாட்டில் மூடியை திறக்கும் போது நம்பிவிட்டேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
"நெருங்கி'னாலும் சொல்லாதீங்க!
கொஞ்சம் நன்றாகப் பேசினாலே போதும்... பெண்கள், தங்கள் மனக் கவலைகளை எல்லாம், கொட்டித் தீர்த்து விடுவர். அதனால், பாதிப்பு ஏற்படும் போது தான், இவரிடம் போய் எல்லாவற்றையும் உளறினோமே என்று மனம் குமுறுவர்.
இப்படித் தான், எங்கள் வீட்டு அருகில் புதிதாக குடியேறினர் அவர்கள். அந்தக் குடும்பத் தலைவிக்கும், அடுத்த வீட்டுப் பெண்ணுக்கும் நட்பு ஏற்பட, குடும்ப விஷயம் உட்பட, பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
சமீபத்தில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, பெண்களுக்கே உரிய ஜாடை பேச்சுகள், அவ்வப்போது அரங்கேறின. ஒரு நாள், "இவ லட்சணம் தெரியாதா... இவ புத்திக்கு தான், இவளோட பொண்ணுக்கு ஒரு லூசு, புருஷனா கிடைச்சிருக்கான்... இப்ப, இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க, வேற மாப்பிள பார்க்கிறா... ' என்று, சுற்றியுள்ள அனைவரும் கேட்கும்படி கூற, இடிந்து போயினர் தாயும், மகளும்.
அதுவரை, கல்லூரி மாணவி போல் தோற்றம் கொண்ட அவரது மகளை, திருமணம் ஆகாதவர் என்றே நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். உண்மை தெரிந்ததும், பலரும் பலவாறு தூற்ற, மனமுடைந்த அந்தப் பெண், "இதை ஏன் இவர்களிடம் கூறினாய்... எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை...' என்று, தன் அம்மாவிடம் சண்டையிட்டு, விடுதிக்கு சென்று விட்டாள்.
தான், சரியாக விசாரிக்காமல், திருமணம் செய்து வைத்ததால் தானே மகளின் வாழ்க்கை, வீணாகிவிட்டது என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த அவளது அம்மா, தற்போது, தன் செயலாலே, மகள் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள் என்பதால், நொந்து, நூடுல்ஸ் ஆகிவிட்டார்.
நட்பு என்ற பெயரில், கண்டவரையும் நம்பி, வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியதால் தானே இந்த பிரச்னை... தேவையா இது?
பெண்களே... குடும்பப் பிரச்னைகளை, பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி, பின், விழி பிதுங்காதீர்கள்!
— ஆஞ்சலா ராஜம், சென்னை.
கொஞ்சம் நன்றாகப் பேசினாலே போதும்... பெண்கள், தங்கள் மனக் கவலைகளை எல்லாம், கொட்டித் தீர்த்து விடுவர். அதனால், பாதிப்பு ஏற்படும் போது தான், இவரிடம் போய் எல்லாவற்றையும் உளறினோமே என்று மனம் குமுறுவர்.
இப்படித் தான், எங்கள் வீட்டு அருகில் புதிதாக குடியேறினர் அவர்கள். அந்தக் குடும்பத் தலைவிக்கும், அடுத்த வீட்டுப் பெண்ணுக்கும் நட்பு ஏற்பட, குடும்ப விஷயம் உட்பட, பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
சமீபத்தில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, பெண்களுக்கே உரிய ஜாடை பேச்சுகள், அவ்வப்போது அரங்கேறின. ஒரு நாள், "இவ லட்சணம் தெரியாதா... இவ புத்திக்கு தான், இவளோட பொண்ணுக்கு ஒரு லூசு, புருஷனா கிடைச்சிருக்கான்... இப்ப, இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க, வேற மாப்பிள பார்க்கிறா... ' என்று, சுற்றியுள்ள அனைவரும் கேட்கும்படி கூற, இடிந்து போயினர் தாயும், மகளும்.
அதுவரை, கல்லூரி மாணவி போல் தோற்றம் கொண்ட அவரது மகளை, திருமணம் ஆகாதவர் என்றே நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். உண்மை தெரிந்ததும், பலரும் பலவாறு தூற்ற, மனமுடைந்த அந்தப் பெண், "இதை ஏன் இவர்களிடம் கூறினாய்... எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை...' என்று, தன் அம்மாவிடம் சண்டையிட்டு, விடுதிக்கு சென்று விட்டாள்.
தான், சரியாக விசாரிக்காமல், திருமணம் செய்து வைத்ததால் தானே மகளின் வாழ்க்கை, வீணாகிவிட்டது என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த அவளது அம்மா, தற்போது, தன் செயலாலே, மகள் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள் என்பதால், நொந்து, நூடுல்ஸ் ஆகிவிட்டார்.
நட்பு என்ற பெயரில், கண்டவரையும் நம்பி, வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியதால் தானே இந்த பிரச்னை... தேவையா இது?
பெண்களே... குடும்பப் பிரச்னைகளை, பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி, பின், விழி பிதுங்காதீர்கள்!
— ஆஞ்சலா ராஜம், சென்னை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவரன்றோ நல்லாசிரியர்!
என் வீட்டில், வெள்ளையடிப்பு நடந்தது. வெள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவரை பார்த்து, பள்ளியில் படிக்கும் என் பேத்தி, வீட்டிற்குள் ஓடினாள். என்னவென்று விசாரித்தேன்.
அதற்கு அவள், "இவர் எங்கள் வகுப்பாசிரியர். என்னை பார்த்தால், அவருக்கு சங்கடமாக இருக்கும்...' என்றாள். இது பற்றி அவரிடம் விசாரித்தேன். அதற்கு அவர், தான் ஒரு எம்.ஏ.,பட்டதாரி என்றும், என் பேத்தி படிக்கும் பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் கூறினார்.
மேலும், "அங்கு தரும் மாத சம்பளம், குடும்பம் நடத்தப் போதாது. அதனால், விடுமுறை நாட்களில், எனக்குத் தெரிந்த பெயின்டிங், வெள்ளை அடிப்பு போன்ற வேலைகளுக்குச் செல்கிறேன். தினமும், 400 ரூபாய் கிடைக்கிறது. இந்தத் தொழில் செய்வதற்காக, நான் வெட்கப்பட வில்லைங்க; செய்யும் தொழில்தானுங்களே தெய்வம்...' என்றார்.
என் பேத்தியை பார்த்தேன், அவள் முகத்தில் ஒரு பெருமிதம். என் உள்ளத்திலும், அவர் ஒரு நல்லாசிரியராக ஏறி அமர்ந்து கொண்டார்.
— களந்தை மைந்தன், நெல்லை.
என் வீட்டில், வெள்ளையடிப்பு நடந்தது. வெள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவரை பார்த்து, பள்ளியில் படிக்கும் என் பேத்தி, வீட்டிற்குள் ஓடினாள். என்னவென்று விசாரித்தேன்.
அதற்கு அவள், "இவர் எங்கள் வகுப்பாசிரியர். என்னை பார்த்தால், அவருக்கு சங்கடமாக இருக்கும்...' என்றாள். இது பற்றி அவரிடம் விசாரித்தேன். அதற்கு அவர், தான் ஒரு எம்.ஏ.,பட்டதாரி என்றும், என் பேத்தி படிக்கும் பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் கூறினார்.
மேலும், "அங்கு தரும் மாத சம்பளம், குடும்பம் நடத்தப் போதாது. அதனால், விடுமுறை நாட்களில், எனக்குத் தெரிந்த பெயின்டிங், வெள்ளை அடிப்பு போன்ற வேலைகளுக்குச் செல்கிறேன். தினமும், 400 ரூபாய் கிடைக்கிறது. இந்தத் தொழில் செய்வதற்காக, நான் வெட்கப்பட வில்லைங்க; செய்யும் தொழில்தானுங்களே தெய்வம்...' என்றார்.
என் பேத்தியை பார்த்தேன், அவள் முகத்தில் ஒரு பெருமிதம். என் உள்ளத்திலும், அவர் ஒரு நல்லாசிரியராக ஏறி அமர்ந்து கொண்டார்.
— களந்தை மைந்தன், நெல்லை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவர்களுமா...?
கல்யாணத்திற்கு காத்திருக்கும், பெண் அல்லது பையனை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோரின் பெரிய தலைவலி, இப்போது யார் தெரியுமா? ஜாதகம் பார்த்து சொல்லும் ஜோதிடர்கள்தான். அவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. ஒரே ஜோதிடரே, இன்று பொருத்தம் என்று எழுதி கொடுத்த ஜாதகத்தை, வேறொருவர் அவற்றை நாளை எடுத்துப் போனால், தொடவே கூடாது; பொருத்தமில்லை என்கின்றனர்.
இந்த ஜோதிடர்களால், பெண் வீட்டாரும், பையன் வீட்டாரும் படும் அவஸ்தைக்கு அளவில்லை. சம்பந்தி ஆகும் முன்னரே சண்டை வந்து விடுகிறது.
என் உறவினருக்கு நடந்த கூத்து என்ன தெரியுமா? பெண் வீட்டார், பொருத்தமாக உள்ள ஜாதகப் பையனை போனில் அணுக, அவர்கள் பொருத்தமே இல்லை என்று, அவருடைய ஜோதிடர் கூறியதாக கூற, வாய்ச்சண்டை வளர்ந்து, "உன் ஜோதிடர் வீட்டுக்கு நான் வருகிறேன்... என் ஜோதிடர் வீட்டுக்கு நீ வா... உண்மையை அறிந்து கொள்ளலாம்...' என்று பேச்சு வளர, கடைசியில் பார்த்தால், இருவரின் ஜோதிடரும் ஒருவரே...
அதே, பெண் - பையனின் ஜாதகத்தை பார்த்து, பெண்வீட்டாரிடம் பொருத்தம் என்று சொல்லி, பையன் வீட்டாரிடம் பொருத்தம் இல்லை... தொடவே கூடாது என்று, ஒரே ஜோதிடரே சொல்லி இருக்கிறார் என்றால், வெவ்வெறு ஜோதிடரிடம் காட்டினால், என்ன கதி என்று சொல்லாமலே தெரியும்!
ஜாதகப் பொருத்தம் பார்க்காமல், திருமணம் செய்ய பயமாக இருக்கிறது...
ஜோதிடர்களே... உங்கள் ஜோதிட சாஸ்திரத்தை, பணமாக்கும் தொழிலாக ஆக்கிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், பலர் வாழ்க்கை பிரச்னை, உங்கள் கையில் என்பதை மறக்காதீர்கள். நியாயமாகவும், நீதியுடனும் நடந்து கொள்ளுங்கள். நேர்மையாக இருந்து, உங்கள் தொழிலுக்கு துரோகம் இழைக்காமல், கூடிய மட்டும் இருக்க முயலுங்கள்.
— ஜே.சங்கீதா, சென்னை.
கல்யாணத்திற்கு காத்திருக்கும், பெண் அல்லது பையனை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோரின் பெரிய தலைவலி, இப்போது யார் தெரியுமா? ஜாதகம் பார்த்து சொல்லும் ஜோதிடர்கள்தான். அவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. ஒரே ஜோதிடரே, இன்று பொருத்தம் என்று எழுதி கொடுத்த ஜாதகத்தை, வேறொருவர் அவற்றை நாளை எடுத்துப் போனால், தொடவே கூடாது; பொருத்தமில்லை என்கின்றனர்.
இந்த ஜோதிடர்களால், பெண் வீட்டாரும், பையன் வீட்டாரும் படும் அவஸ்தைக்கு அளவில்லை. சம்பந்தி ஆகும் முன்னரே சண்டை வந்து விடுகிறது.
என் உறவினருக்கு நடந்த கூத்து என்ன தெரியுமா? பெண் வீட்டார், பொருத்தமாக உள்ள ஜாதகப் பையனை போனில் அணுக, அவர்கள் பொருத்தமே இல்லை என்று, அவருடைய ஜோதிடர் கூறியதாக கூற, வாய்ச்சண்டை வளர்ந்து, "உன் ஜோதிடர் வீட்டுக்கு நான் வருகிறேன்... என் ஜோதிடர் வீட்டுக்கு நீ வா... உண்மையை அறிந்து கொள்ளலாம்...' என்று பேச்சு வளர, கடைசியில் பார்த்தால், இருவரின் ஜோதிடரும் ஒருவரே...
அதே, பெண் - பையனின் ஜாதகத்தை பார்த்து, பெண்வீட்டாரிடம் பொருத்தம் என்று சொல்லி, பையன் வீட்டாரிடம் பொருத்தம் இல்லை... தொடவே கூடாது என்று, ஒரே ஜோதிடரே சொல்லி இருக்கிறார் என்றால், வெவ்வெறு ஜோதிடரிடம் காட்டினால், என்ன கதி என்று சொல்லாமலே தெரியும்!
ஜாதகப் பொருத்தம் பார்க்காமல், திருமணம் செய்ய பயமாக இருக்கிறது...
ஜோதிடர்களே... உங்கள் ஜோதிட சாஸ்திரத்தை, பணமாக்கும் தொழிலாக ஆக்கிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், பலர் வாழ்க்கை பிரச்னை, உங்கள் கையில் என்பதை மறக்காதீர்கள். நியாயமாகவும், நீதியுடனும் நடந்து கொள்ளுங்கள். நேர்மையாக இருந்து, உங்கள் தொழிலுக்கு துரோகம் இழைக்காமல், கூடிய மட்டும் இருக்க முயலுங்கள்.
— ஜே.சங்கீதா, சென்னை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மொபைலை இப்படியும் பயன்படுத்தலாம்!
சமீபத்தில் நானும், என் தோழியும், ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது. பயணம் ஆரம்பித்தது முதலே, தோழியின் மொபைலில், குறுஞ்செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. சிறிது நேரத்தில், பர்சில் வைத்திருந்த மற்றொரு, "சிம்'கார்டை மாற்றினாள். அதிலும், குறுஞ்செய்திகள் வந்தன.
கோபத்தோடு அவளைப் பார்க்க, அவள் தன் மொபைலை என்னிடம் நீட்டினாள். அத்தனை குறுஞ்செய்திகளும், பொது அறிவு வினா - விடைகள். அவளை வியப்போடு நோக்க, அவளே விளக்கினாள். தான் ஒரு வெப்சைட்டை ஆக்ட்டிவேட் செய்துள்ளதாகவும், அதில் இருந்தே, இந்த வினாக்கள் வருவதாகவும் கூறினாள்.
"வெப்சைட்டில் அதிகமான துறைகள் இருக்கும்' எனவும், "நாமே அதில் ஏதாவது பதினைந்து துறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். துறைக்கு இரண்டு கேள்விகள் வீதம், ஒரு நாளைக்கு முப்பது பொது அறிவு வினாக்கள் வரும்...' எனவும் விளக்கினாள்.
மேலும், மாணவர்கள் மொபைலில் வரும் குறுஞ்செய்திகளை மறக்க மாட்டார்கள் என்பதால், இந்த முறையை அறிமுகம் செய்துள்ளதாகவும், இது, அவள் கல்லூரிக்கு பயணம் செய்யும் நேரம் என்பதால், இந்த குறிப்பிட்ட நேரத்தை அதில் கொடுத்துள்ளதாகவும், அவள் குறிப்பிட்ட அந்த ஒரு மணி நேரத்திலேயே, முப்பது குறுஞ்செய்திகளும் வந்துவிடும் எனவும் கூறினாள்.
மொபைலை இப்படியும் உபயோகிக்கலாம் மாணவர்களே...
வெப்சைட் முகவரி: www.upscportal.com
— லக்ஷ்சனா, திண்டுக்கல்.
சமீபத்தில் நானும், என் தோழியும், ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது. பயணம் ஆரம்பித்தது முதலே, தோழியின் மொபைலில், குறுஞ்செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. சிறிது நேரத்தில், பர்சில் வைத்திருந்த மற்றொரு, "சிம்'கார்டை மாற்றினாள். அதிலும், குறுஞ்செய்திகள் வந்தன.
கோபத்தோடு அவளைப் பார்க்க, அவள் தன் மொபைலை என்னிடம் நீட்டினாள். அத்தனை குறுஞ்செய்திகளும், பொது அறிவு வினா - விடைகள். அவளை வியப்போடு நோக்க, அவளே விளக்கினாள். தான் ஒரு வெப்சைட்டை ஆக்ட்டிவேட் செய்துள்ளதாகவும், அதில் இருந்தே, இந்த வினாக்கள் வருவதாகவும் கூறினாள்.
"வெப்சைட்டில் அதிகமான துறைகள் இருக்கும்' எனவும், "நாமே அதில் ஏதாவது பதினைந்து துறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். துறைக்கு இரண்டு கேள்விகள் வீதம், ஒரு நாளைக்கு முப்பது பொது அறிவு வினாக்கள் வரும்...' எனவும் விளக்கினாள்.
மேலும், மாணவர்கள் மொபைலில் வரும் குறுஞ்செய்திகளை மறக்க மாட்டார்கள் என்பதால், இந்த முறையை அறிமுகம் செய்துள்ளதாகவும், இது, அவள் கல்லூரிக்கு பயணம் செய்யும் நேரம் என்பதால், இந்த குறிப்பிட்ட நேரத்தை அதில் கொடுத்துள்ளதாகவும், அவள் குறிப்பிட்ட அந்த ஒரு மணி நேரத்திலேயே, முப்பது குறுஞ்செய்திகளும் வந்துவிடும் எனவும் கூறினாள்.
மொபைலை இப்படியும் உபயோகிக்கலாம் மாணவர்களே...
வெப்சைட் முகவரி: www.upscportal.com
— லக்ஷ்சனா, திண்டுக்கல்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பள்ளி மாணவியரை நடிகைகளாக்காதீர்கள்!
தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், என் நண்பர் ஒருவரின் மகள் படித்து வருகிறாள். பள்ளியில் நடந்த, ஆண்டு விழாவில் கலந்து கொள்ள, என் நண்பருடன் நானும் சென்றிருந்தேன்.
விழாவிற்கு வழக்கம் போல், வி.ஐ.பி.,கள் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆண்டு அறிக்கை, வாழ்த்து, பேச்சு, பரிசளிப்பு என முடிந்த பின், அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பள்ளி மாணவ - மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேல்நிலைக்கல்வி மாணவியரின் ஆட்டத்தின் போது விசில் பறந்தது. கைத்தட்டல் பலமாக இருந்தது. சினிமாவில் எந்த மாதிரியான உடையை நடிகர் - நடிகையர் அணிந்திருப்பரோ அதே போல், உடையணிந்து ஆடினர். அதற்கும் ஒருபடி மேலே போய், மார்பகங்கள், பெரிதாகத் தெரிய, அதற்கு ஏற்றார் போல், மாணவியரை உள்ளாடை அணிய வைத்திருக்கின்றனர் என்பது தான் கொடுமை.
எங்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த, அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மேடையில் ஆடிய சில மாணவியரின் பெயரைக் குறிப்பிட்டு, "அவளுக்கு இவ்வளவு பெரிசா... என் கண்ணையே நம்ப முடியவில்லையே...' என சப்தமாக பேச, அதற்கு சக மாணவன், "இல்லை... இல்லை செயற்கையாக இருக்கும்' என விளக்கம் கொடுத்தான். அதை கேட்க வெறுப்பாக இருந்தது.
பள்ளி நிர்வாகத்தின@ர... விழாவின் போது நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளில், மாணவியரை நடிகைகளாக்கிப் பார்க்காதீர்கள். பார்ப்பவர்கள் ரசிக்கலாம். பெற்றோர் மனம் வருந்துவர். நாசூக்காக அமையட்டும் கலைநிகழ்ச்சிகள்.
— ஆதங்கன், திண்டுக்கல்.
தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், என் நண்பர் ஒருவரின் மகள் படித்து வருகிறாள். பள்ளியில் நடந்த, ஆண்டு விழாவில் கலந்து கொள்ள, என் நண்பருடன் நானும் சென்றிருந்தேன்.
விழாவிற்கு வழக்கம் போல், வி.ஐ.பி.,கள் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆண்டு அறிக்கை, வாழ்த்து, பேச்சு, பரிசளிப்பு என முடிந்த பின், அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பள்ளி மாணவ - மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேல்நிலைக்கல்வி மாணவியரின் ஆட்டத்தின் போது விசில் பறந்தது. கைத்தட்டல் பலமாக இருந்தது. சினிமாவில் எந்த மாதிரியான உடையை நடிகர் - நடிகையர் அணிந்திருப்பரோ அதே போல், உடையணிந்து ஆடினர். அதற்கும் ஒருபடி மேலே போய், மார்பகங்கள், பெரிதாகத் தெரிய, அதற்கு ஏற்றார் போல், மாணவியரை உள்ளாடை அணிய வைத்திருக்கின்றனர் என்பது தான் கொடுமை.
எங்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த, அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மேடையில் ஆடிய சில மாணவியரின் பெயரைக் குறிப்பிட்டு, "அவளுக்கு இவ்வளவு பெரிசா... என் கண்ணையே நம்ப முடியவில்லையே...' என சப்தமாக பேச, அதற்கு சக மாணவன், "இல்லை... இல்லை செயற்கையாக இருக்கும்' என விளக்கம் கொடுத்தான். அதை கேட்க வெறுப்பாக இருந்தது.
பள்ளி நிர்வாகத்தின@ர... விழாவின் போது நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளில், மாணவியரை நடிகைகளாக்கிப் பார்க்காதீர்கள். பார்ப்பவர்கள் ரசிக்கலாம். பெற்றோர் மனம் வருந்துவர். நாசூக்காக அமையட்டும் கலைநிகழ்ச்சிகள்.
— ஆதங்கன், திண்டுக்கல்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
புது வாழ்க்கைக்கு ஒரு பயிற்சி.!
என் கல்லூரி தோழிக்கு, மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்திருந்ததை கேள்விப்பட்டு, அவளை பார்க்க சென்றிருந்தேன். நான், அவள் வீட்டிற்கு சென்றிருந்த சமயம், தோழி படுபிசியாக இருந்தாள். கேஸ் சிலிண்டர் முதல் கேபிள் டிவி, மளிகை சாமான் வரை எல்லாவற்றையும் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னடி... இன்னும் கல்யாணமே முடியல, அதுக்குள்ள இவ்வளவு பிசியாயிட்ட...' என்று கேட்டேன். அதற்கு அவளோ, "இல்லடி... எங்க அம்மாதான் இந்த மூணு மாசம், வீட்டில் வரவு - செலவு கணக்கு வழக்குகளை நீதான் பார்க்கணும். அப்பதான், நீ போகப்போற வீட்டுல எல்லா விஷயங்களும் புரியும். அதோட, எந்த செலவுகளில் சிக்கனமா இருக்கணும்ன்னு, பிராக்டிஸ் எடுத்துக்க சொன்னாங்க. அதுக்காக, என் அப்பா சம்பளத்தை கூட, என் கையில குடுத்திட்டார்..' என்றாள்.
எனக்கு இந்த பயிற்சி புதுமையாகவும், அவசியமானதாகவும் பட்டது. தோழிக்கு வாழ்த்து சொல்லிய கையோடு, அவளது பெற்றோரையும் வியந்து பாராட்டி விட்டு வந்தேன். அதை என் பெற்றோரிடமும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் மிகவும் பெருமையோடு சொன்னேன். இல்லத்தரசியாக போகும் பெண்களுக்கு, ஒரு வகையில் சிறந்த முன்னேற்பாடு தானே!
— எஸ்.ஷன்மதி, மதுரை.
என் கல்லூரி தோழிக்கு, மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்திருந்ததை கேள்விப்பட்டு, அவளை பார்க்க சென்றிருந்தேன். நான், அவள் வீட்டிற்கு சென்றிருந்த சமயம், தோழி படுபிசியாக இருந்தாள். கேஸ் சிலிண்டர் முதல் கேபிள் டிவி, மளிகை சாமான் வரை எல்லாவற்றையும் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னடி... இன்னும் கல்யாணமே முடியல, அதுக்குள்ள இவ்வளவு பிசியாயிட்ட...' என்று கேட்டேன். அதற்கு அவளோ, "இல்லடி... எங்க அம்மாதான் இந்த மூணு மாசம், வீட்டில் வரவு - செலவு கணக்கு வழக்குகளை நீதான் பார்க்கணும். அப்பதான், நீ போகப்போற வீட்டுல எல்லா விஷயங்களும் புரியும். அதோட, எந்த செலவுகளில் சிக்கனமா இருக்கணும்ன்னு, பிராக்டிஸ் எடுத்துக்க சொன்னாங்க. அதுக்காக, என் அப்பா சம்பளத்தை கூட, என் கையில குடுத்திட்டார்..' என்றாள்.
எனக்கு இந்த பயிற்சி புதுமையாகவும், அவசியமானதாகவும் பட்டது. தோழிக்கு வாழ்த்து சொல்லிய கையோடு, அவளது பெற்றோரையும் வியந்து பாராட்டி விட்டு வந்தேன். அதை என் பெற்றோரிடமும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் மிகவும் பெருமையோடு சொன்னேன். இல்லத்தரசியாக போகும் பெண்களுக்கு, ஒரு வகையில் சிறந்த முன்னேற்பாடு தானே!
— எஸ்.ஷன்மதி, மதுரை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பார்க்காதே... ஆனா பாரு!
நான் ஒரு ஏகபத்தினி விரதன். பிற பெண்களை ஏறிட்டும் பார்ப்பது கிடையாது. ஆனால், சில பெண்கள் புடவை அணிகிற அழகைப் பார்த்தால்...
புடவை அணிந்திருக்கும் இவர்கள், தோள்பட்டை ஜாக்கட்டுடன் புடவையை இணைத்து, பின் குத்தியிருப்பர்; முந்தானை ஏறும் இடத்தில், ஒரு பின்; வயிற்றுப்பகுதியை, ஒரு சுற்று புடவையால் சலோபன் பேப்பர் போல் சுற்றியிருப்பர்; அங்கும் இரண்டு, மூன்று இடங்களில் பின் குத்தியிருப்பர்.
மொத்தத்தில், இவர்களது இடுப்பை, வயிற்றை புடவை ஒதுங்கினால், பக்கவாட்டை பார்க்க, உலகத்து ஆண்கள் எல்லாம் அலைவது போலொரு பாதுகாப்பு ஏற்பாடு! தேவையா இது?
எங்களுக்கு வேற வேலையே இல்லையா அல்லது இது பாரா முகத்தினரை பார்க்க வைக்கும் எதிர்மறை உத்தியா? ஜாக்கட்டை சற்று இறக்கமாக, தளர்த்தி தைத்து, தெரியும் வயிற்றுப்பகுதி அகலத்தை, கணிசமாக கண்ணை உறுத்தாமல், குறைக்கலாமே?
— கி.மு.பரந்தாமன், வாணியம்பாடி.
நான் ஒரு ஏகபத்தினி விரதன். பிற பெண்களை ஏறிட்டும் பார்ப்பது கிடையாது. ஆனால், சில பெண்கள் புடவை அணிகிற அழகைப் பார்த்தால்...
புடவை அணிந்திருக்கும் இவர்கள், தோள்பட்டை ஜாக்கட்டுடன் புடவையை இணைத்து, பின் குத்தியிருப்பர்; முந்தானை ஏறும் இடத்தில், ஒரு பின்; வயிற்றுப்பகுதியை, ஒரு சுற்று புடவையால் சலோபன் பேப்பர் போல் சுற்றியிருப்பர்; அங்கும் இரண்டு, மூன்று இடங்களில் பின் குத்தியிருப்பர்.
மொத்தத்தில், இவர்களது இடுப்பை, வயிற்றை புடவை ஒதுங்கினால், பக்கவாட்டை பார்க்க, உலகத்து ஆண்கள் எல்லாம் அலைவது போலொரு பாதுகாப்பு ஏற்பாடு! தேவையா இது?
எங்களுக்கு வேற வேலையே இல்லையா அல்லது இது பாரா முகத்தினரை பார்க்க வைக்கும் எதிர்மறை உத்தியா? ஜாக்கட்டை சற்று இறக்கமாக, தளர்த்தி தைத்து, தெரியும் வயிற்றுப்பகுதி அகலத்தை, கணிசமாக கண்ணை உறுத்தாமல், குறைக்கலாமே?
— கி.மு.பரந்தாமன், வாணியம்பாடி.
- Sponsored content
Page 3 of 23 • 1, 2, 3, 4 ... 13 ... 23
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 23
|
|