Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உங்கள் இடம்..!
+19
பூவன்
தளிர் அலை
அசுரன்
Aathira
chinnavan
விஸ்வாஜீ
செம்மொழியான் பாண்டியன்
krishnaamma
Powenraj
ஹர்ஷித்
balakarthik
யினியவன்
ஜாஹீதாபானு
Muthumohamed
றினா
ராஜா
பாலாஜி
சிவா
அருண்
23 posters
Page 20 of 23
Page 20 of 23 • 1 ... 11 ... 19, 20, 21, 22, 23
இது உங்கள் இடம்..!
First topic message reminder :
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
Last edited by அருண் on Mon Oct 29, 2012 1:33 pm; edited 1 time in total
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இது உங்கள் இடம்..!
தனியார் பள்ளி நிர்வாகிகளே...
என் நண்பர் சமீபத்தில், ஒரு பள்ளிக்கு டிரைவர் பணிக்காக, இன்டர்வியூவிற்கு சென்றிருந்தார். இன்டர்வியூவில், முன் அனுபவம், குடும்பநிலை, எதிர்பார்க்கும் சம்பளம் எல்லாவற்றையும் கேட்டறிந்த பள்ளித் தாளாளர், கடைசியாக, ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று, சில பரிசோதனைகளை செய்து, ரிப்போர்ட் கொண்டு வரும்படி கூறியிருக்கிறார்.
அதற்கு நண்பர், "சார், எதற்கு இந்த பரிசோதனைகள்' என்று கேட்டதற்கு, தாளாளர் கூறியது, "உங்கள் உடலில் ஆல்கஹால் அளவு எப்படி உள்ளது, நீங்கள் தினமும் குடிப்பவரா என்பதையெல்லாம், நாங்கள் அறிந்து கொள்வதோடு, உங்களுக்கு தொற்றுநோய் எதுவும் உள்ளதா என்பதும், எங்களுக்கு தெரிய வேண்டும்.
ஏனெனில், சிறு குழந்தைகள் உங்களோடு வண்டியில் வரும்போது, அவர்கள் பாதிக்கப்படக்கூடாது அல்லவா...' என்று தெளிபடுத்தியிருக்கிறார்.
புகைபிடித்தல், மது அருந்துதல், செல்போன் பேசுதல் போன்ற விஷயங்களில் கெடுபிடியாக இருக்கும் பல பள்ளிகள், இது போன்று ஆரோக்கியமான டிரைவர்களை பணி நியமனம் செய்வது, குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அமையும்.
— வேல்மணி ராஜன், மதுரை.
என் நண்பர் சமீபத்தில், ஒரு பள்ளிக்கு டிரைவர் பணிக்காக, இன்டர்வியூவிற்கு சென்றிருந்தார். இன்டர்வியூவில், முன் அனுபவம், குடும்பநிலை, எதிர்பார்க்கும் சம்பளம் எல்லாவற்றையும் கேட்டறிந்த பள்ளித் தாளாளர், கடைசியாக, ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று, சில பரிசோதனைகளை செய்து, ரிப்போர்ட் கொண்டு வரும்படி கூறியிருக்கிறார்.
அதற்கு நண்பர், "சார், எதற்கு இந்த பரிசோதனைகள்' என்று கேட்டதற்கு, தாளாளர் கூறியது, "உங்கள் உடலில் ஆல்கஹால் அளவு எப்படி உள்ளது, நீங்கள் தினமும் குடிப்பவரா என்பதையெல்லாம், நாங்கள் அறிந்து கொள்வதோடு, உங்களுக்கு தொற்றுநோய் எதுவும் உள்ளதா என்பதும், எங்களுக்கு தெரிய வேண்டும்.
ஏனெனில், சிறு குழந்தைகள் உங்களோடு வண்டியில் வரும்போது, அவர்கள் பாதிக்கப்படக்கூடாது அல்லவா...' என்று தெளிபடுத்தியிருக்கிறார்.
புகைபிடித்தல், மது அருந்துதல், செல்போன் பேசுதல் போன்ற விஷயங்களில் கெடுபிடியாக இருக்கும் பல பள்ளிகள், இது போன்று ஆரோக்கியமான டிரைவர்களை பணி நியமனம் செய்வது, குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அமையும்.
— வேல்மணி ராஜன், மதுரை.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இது உங்கள் இடம்..!
அருண் wrote:தனியார் பள்ளி நிர்வாகிகளே...
என் நண்பர் சமீபத்தில், ஒரு பள்ளிக்கு டிரைவர் பணிக்காக, இன்டர்வியூவிற்கு சென்றிருந்தார். இன்டர்வியூவில், முன் அனுபவம், குடும்பநிலை, எதிர்பார்க்கும் சம்பளம் எல்லாவற்றையும் கேட்டறிந்த பள்ளித் தாளாளர், கடைசியாக, ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று, சில பரிசோதனைகளை செய்து, ரிப்போர்ட் கொண்டு வரும்படி கூறியிருக்கிறார்.
அதற்கு நண்பர், "சார், எதற்கு இந்த பரிசோதனைகள்' என்று கேட்டதற்கு, தாளாளர் கூறியது, "உங்கள் உடலில் ஆல்கஹால் அளவு எப்படி உள்ளது, நீங்கள் தினமும் குடிப்பவரா என்பதையெல்லாம், நாங்கள் அறிந்து கொள்வதோடு, உங்களுக்கு தொற்றுநோய் எதுவும் உள்ளதா என்பதும், எங்களுக்கு தெரிய வேண்டும்.
ஏனெனில், சிறு குழந்தைகள் உங்களோடு வண்டியில் வரும்போது, அவர்கள் பாதிக்கப்படக்கூடாது அல்லவா...' என்று தெளிபடுத்தியிருக்கிறார்.
புகைபிடித்தல், மது அருந்துதல், செல்போன் பேசுதல் போன்ற விஷயங்களில் கெடுபிடியாக இருக்கும் பல பள்ளிகள், இது போன்று ஆரோக்கியமான டிரைவர்களை பணி நியமனம் செய்வது, குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அமையும்.
— வேல்மணி ராஜன், மதுரை.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இது உங்கள் இடம்..!
பெண்ணைப் பெற்றவர்கள் என்றால் கேவலமா?
என் மகளை, பெண் பார்த்துவிட்டு போனவர்களிடமிருந்து, ஒரு மாதமாகியும், ஒரு தகவலும் வராமல் இருக்கவே, விசாரிப்பதற்காக வரன் வீட்டுக்குச் சென்றோம். மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில்; உதடுகள் உலர்ந்து, நா வறண்டு கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தான், பேசவே வருமென்ற நிலைமை. அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தோம்.
உள்ளே இருந்தபடியே, எங்களைப் பார்த்துவிட்ட பையனின் அப்பா, கதவை திறக்காமலேயே, "பையனுக்கு வேறு இடத்துல முடிஞ்சிருச்சி; போங்க போங்க...' என்று அடிக்காத குறையாக விரட்டினார். அவமானத்தில் கூசிப் போனோம்.
பிறகு விசாரித்ததில், அவரது மகன் ஏதோ காதல் விவகாரத்தில் சிக்கி, காதலித்த பெண்ணோடு ஓடிப்போன விஷயம் தெரிய வந்தது. அவரது மகன், யாரோ ஒரு பெண்ணோடு ஓடிப் போனதற்கு, நாங்களா பொறுப்பு?
ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து உபசரிக்கும், சாதாரண மனித பண்பு கூட இல்லாத, இது போன்ற பிறவிகளை என்னவென்பது! அடித்துத் துரத்தாத குறையாக எங்களை விரட்டி விட்டவர், ஒரு ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் என்பதுதான் நெருடலான விஷயம். பெண்ணைப் பெற்றவர்கள் என்றால் அவ்வளவு கேவலமா?
— பி.இளங்கோவன், கீழ்க்கட்டளை.
என் மகளை, பெண் பார்த்துவிட்டு போனவர்களிடமிருந்து, ஒரு மாதமாகியும், ஒரு தகவலும் வராமல் இருக்கவே, விசாரிப்பதற்காக வரன் வீட்டுக்குச் சென்றோம். மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில்; உதடுகள் உலர்ந்து, நா வறண்டு கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தான், பேசவே வருமென்ற நிலைமை. அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தோம்.
உள்ளே இருந்தபடியே, எங்களைப் பார்த்துவிட்ட பையனின் அப்பா, கதவை திறக்காமலேயே, "பையனுக்கு வேறு இடத்துல முடிஞ்சிருச்சி; போங்க போங்க...' என்று அடிக்காத குறையாக விரட்டினார். அவமானத்தில் கூசிப் போனோம்.
பிறகு விசாரித்ததில், அவரது மகன் ஏதோ காதல் விவகாரத்தில் சிக்கி, காதலித்த பெண்ணோடு ஓடிப்போன விஷயம் தெரிய வந்தது. அவரது மகன், யாரோ ஒரு பெண்ணோடு ஓடிப் போனதற்கு, நாங்களா பொறுப்பு?
ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து உபசரிக்கும், சாதாரண மனித பண்பு கூட இல்லாத, இது போன்ற பிறவிகளை என்னவென்பது! அடித்துத் துரத்தாத குறையாக எங்களை விரட்டி விட்டவர், ஒரு ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் என்பதுதான் நெருடலான விஷயம். பெண்ணைப் பெற்றவர்கள் என்றால் அவ்வளவு கேவலமா?
— பி.இளங்கோவன், கீழ்க்கட்டளை.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இது உங்கள் இடம்..!
அருண் wrote:பெண்ணைப் பெற்றவர்கள் என்றால் கேவலமா?
என் மகளை, பெண் பார்த்துவிட்டு போனவர்களிடமிருந்து, ஒரு மாதமாகியும், ஒரு தகவலும் வராமல் இருக்கவே, விசாரிப்பதற்காக வரன் வீட்டுக்குச் சென்றோம். மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில்; உதடுகள் உலர்ந்து, நா வறண்டு கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தான், பேசவே வருமென்ற நிலைமை. அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தோம்.
உள்ளே இருந்தபடியே, எங்களைப் பார்த்துவிட்ட பையனின் அப்பா, கதவை திறக்காமலேயே, "பையனுக்கு வேறு இடத்துல முடிஞ்சிருச்சி; போங்க போங்க...' என்று அடிக்காத குறையாக விரட்டினார். அவமானத்தில் கூசிப் போனோம்.
பிறகு விசாரித்ததில், அவரது மகன் ஏதோ காதல் விவகாரத்தில் சிக்கி, காதலித்த பெண்ணோடு ஓடிப்போன விஷயம் தெரிய வந்தது. அவரது மகன், யாரோ ஒரு பெண்ணோடு ஓடிப் போனதற்கு, நாங்களா பொறுப்பு?
ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து உபசரிக்கும், சாதாரண மனித பண்பு கூட இல்லாத, இது போன்ற பிறவிகளை என்னவென்பது! அடித்துத் துரத்தாத குறையாக எங்களை விரட்டி விட்டவர், ஒரு ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் என்பதுதான் நெருடலான விஷயம். பெண்ணைப் பெற்றவர்கள் என்றால் அவ்வளவு கேவலமா?
— பி.இளங்கோவன், கீழ்க்கட்டளை.
இழுத்து வச்சு 4 அறை விட்டிருக்கனும் அவனுங்களை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இது உங்கள் இடம்..!
ஜாஹீதாபானு wrote:
இழுத்து வச்சு 4 அறை விட்டிருக்கனும் அவனுங்களை
கண்டிப்பாக செய்துருக்கணும் என்ன ஜென்மம் அவர்கள்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இது உங்கள் இடம்..!
நடைப்பயிற்சி அணி!
சமீபத்தில், என் அத்தை வீட்டில் இரவில் தங்க வேண்டியிருந்தது. காலை விடிந்ததும், 50 வயதுள்ள என் அத்தை, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். நான், என்னவென்று விசாரித்த போது, "வாக்கிங்' செல்வதாக சொன்னார். நான் அதை கண்டுகொள்ளாமல், "சரி போய்ட்டு வாங்க...' என்று கூறி, உள்ளே சென்று விட்டேன்.
வாக்கிங் செல்வதாக கூறிக் கிளம்பிய அத்தை, வாசலிலேயே, 10 நிமிடம் நிற்க, "என்ன அத்தே... இன்னும் இங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க?' என்றேன். அதற்கு அத்தை என்னிடம், "எங்க டீம் வருவாங்க, அவங்களோடு சேர்ந்துதான் போவேன்...' என்றார். "அது என்ன... டீம்?' என்று கேட்டேன்.
அவர் கூறியது: தன்னந்தனியாக, "வாக்கிங்' போறப்போ, சிலர் வேகமாகவும், சிலர் மெதுவாகவும் நடப்பாங்க. ஒரு சிலர், "வாக்கிங்' பற்றிய, முறை தெரியாம இருப்பாங்க. ஆனால், குழுவா சேர்ந்து, "வாக்கிங்' போனா ஒரே சீரா நடப்போம்; சிரமம் தெரியாது. அதோட நகை திருடர்கள், நாய் தொல்லை, எதுவும் கிடையாது. திரும்பி வரும் போது, பால் பாக்கெட், பேப்பர் வாங்கிட்டு வருவோம். அதோட பலரோடு பழகும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்...' என்றார்.
தனியாக மைதானத்திற்கோ, மாடியிலோ, "வாக்கிங்' செல்வதை விட, இதுபோன்று தெருவாசிகளோடு, ஓர் அணியாக, "வாக்கிங்' செல்வது புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். உங்கள் பகுதியிலும் இதுபோல சிலர் இணைந்து செயல்படலாமே!
— எஸ்.கோதை, மதுரை.
சமீபத்தில், என் அத்தை வீட்டில் இரவில் தங்க வேண்டியிருந்தது. காலை விடிந்ததும், 50 வயதுள்ள என் அத்தை, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். நான், என்னவென்று விசாரித்த போது, "வாக்கிங்' செல்வதாக சொன்னார். நான் அதை கண்டுகொள்ளாமல், "சரி போய்ட்டு வாங்க...' என்று கூறி, உள்ளே சென்று விட்டேன்.
வாக்கிங் செல்வதாக கூறிக் கிளம்பிய அத்தை, வாசலிலேயே, 10 நிமிடம் நிற்க, "என்ன அத்தே... இன்னும் இங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க?' என்றேன். அதற்கு அத்தை என்னிடம், "எங்க டீம் வருவாங்க, அவங்களோடு சேர்ந்துதான் போவேன்...' என்றார். "அது என்ன... டீம்?' என்று கேட்டேன்.
அவர் கூறியது: தன்னந்தனியாக, "வாக்கிங்' போறப்போ, சிலர் வேகமாகவும், சிலர் மெதுவாகவும் நடப்பாங்க. ஒரு சிலர், "வாக்கிங்' பற்றிய, முறை தெரியாம இருப்பாங்க. ஆனால், குழுவா சேர்ந்து, "வாக்கிங்' போனா ஒரே சீரா நடப்போம்; சிரமம் தெரியாது. அதோட நகை திருடர்கள், நாய் தொல்லை, எதுவும் கிடையாது. திரும்பி வரும் போது, பால் பாக்கெட், பேப்பர் வாங்கிட்டு வருவோம். அதோட பலரோடு பழகும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்...' என்றார்.
தனியாக மைதானத்திற்கோ, மாடியிலோ, "வாக்கிங்' செல்வதை விட, இதுபோன்று தெருவாசிகளோடு, ஓர் அணியாக, "வாக்கிங்' செல்வது புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். உங்கள் பகுதியிலும் இதுபோல சிலர் இணைந்து செயல்படலாமே!
— எஸ்.கோதை, மதுரை.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இது உங்கள் இடம்..!
குழந்தை வளர்ப்பில் கவனம் தேவை!
சமீபத்தில், என் உறவினர் ஒருவர், ஏழாம் வகுப்பு படிக்கும் தன் மகன் மற்றும் மனைவியோடு, என் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்கள், தங்கள் மகன் பள்ளியில், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் பரிசுகள் வாங்குவதை, பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தனர்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய மகன் டாய்லெட் போக வேண்டுமென்று, தன் அம்மாவிடம், "சிக்னல்' காட்டினான். அந்த சிக்னலுக்கான அர்த்தம், அந்த பெண்மணி, மகனைப் பின் தொடர்ந்து சென்றதும் தான் எனக்கு புரிந்தது. ஆச்சரியத்துடன், உறவினரை பார்த்தேன்.
"ஒரே பிள்ளை... செல்லமா வளர்த்துட்டோம். அம்மா ஊட்டி விட்டால்தான் சாப்பிடுவான்; இரவில், அம்மா பக்கத்தில் தான் தூங்குவான்; டாய்லெட் போகும்போது கூட, அம்மா அவன் பக்கத்தில் நிற்க வேண்டும். அவள்தான், அவனுக்கு இன்றுவரை கழுவி விடுகிறாள்...' என்று பெருமையாக சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக மாறியது.
இம்மாதிரி...கட்டுப்பெட்டியாக வளரும் குழந்தைகள், பிற்காலத்தில் மண வாழ்க்கையில், அம்மாதிரி முழு ஆதரவு கிடைக்காத பட்சத்தில், மனநிலை பாதிக்கப்படும் அபாயம் காத்திருக்கிறது என்பதை, பெற்றோர் உணர வேண்டும்.
பெற்றோர்களே...படிப்பு மட்டும், ஒருவனை முழு மனிதனாக ஆக்கிவிட முடியாது. ஒரே குழந்தையாக இருந்தாலும், பருவத்துக்கு ஏற்றபடி, அவர்களை சுதந்திரமாக வளர விடுங்கள். இல்லையென்றால், வீட்டிற்கும், நாட்டிற்கும் தீமைதான் விளையும்!
— எஸ்.ராமன், சென்னை.
சமீபத்தில், என் உறவினர் ஒருவர், ஏழாம் வகுப்பு படிக்கும் தன் மகன் மற்றும் மனைவியோடு, என் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்கள், தங்கள் மகன் பள்ளியில், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் பரிசுகள் வாங்குவதை, பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தனர்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய மகன் டாய்லெட் போக வேண்டுமென்று, தன் அம்மாவிடம், "சிக்னல்' காட்டினான். அந்த சிக்னலுக்கான அர்த்தம், அந்த பெண்மணி, மகனைப் பின் தொடர்ந்து சென்றதும் தான் எனக்கு புரிந்தது. ஆச்சரியத்துடன், உறவினரை பார்த்தேன்.
"ஒரே பிள்ளை... செல்லமா வளர்த்துட்டோம். அம்மா ஊட்டி விட்டால்தான் சாப்பிடுவான்; இரவில், அம்மா பக்கத்தில் தான் தூங்குவான்; டாய்லெட் போகும்போது கூட, அம்மா அவன் பக்கத்தில் நிற்க வேண்டும். அவள்தான், அவனுக்கு இன்றுவரை கழுவி விடுகிறாள்...' என்று பெருமையாக சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக மாறியது.
இம்மாதிரி...கட்டுப்பெட்டியாக வளரும் குழந்தைகள், பிற்காலத்தில் மண வாழ்க்கையில், அம்மாதிரி முழு ஆதரவு கிடைக்காத பட்சத்தில், மனநிலை பாதிக்கப்படும் அபாயம் காத்திருக்கிறது என்பதை, பெற்றோர் உணர வேண்டும்.
பெற்றோர்களே...படிப்பு மட்டும், ஒருவனை முழு மனிதனாக ஆக்கிவிட முடியாது. ஒரே குழந்தையாக இருந்தாலும், பருவத்துக்கு ஏற்றபடி, அவர்களை சுதந்திரமாக வளர விடுங்கள். இல்லையென்றால், வீட்டிற்கும், நாட்டிற்கும் தீமைதான் விளையும்!
— எஸ்.ராமன், சென்னை.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இது உங்கள் இடம்..!
கணவரை பங்கு போடும் தோழி!
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
— யாழ் நிலா, கழனிவாசல்.
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
— யாழ் நிலா, கழனிவாசல்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இது உங்கள் இடம்..!
நண்பர்களுக்கு தண்டச் சோறு போடுகிறீர்களா?
நல்ல வேலையிலிருக்கும் நான், என் நண்பன் ஒருவனுக்கு சாப்பாடு போட்டு, என் அறையில் கூடவே வைத்து பராமரித்து வந்தேன். அவனும் என்னை தெய்வமாக மதித்து, மற்றவர்களிடம் பெருமையாக புகழ்ந்து வந்தான்.
எனக்கு திருமணமாகியது. என் மனைவியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி போனேன். என் நண்பனுக்கு செலவு செய்ய தடை போட்டு விட்டாள் மனைவி. ஓசி சோறில், உடல் வளர்த்து சோம்பேறி ஆகிவிட்ட நண்பன், வேலைக்கு போகாமலும், வேலைக்குச் சென்றால் ஒரு மாதம் கூட நிலைத்து நிற்காமல் சும்மாகவே சுற்றித் திரிகிறான்.
ஓசி சோறு கிடைக்காததால் நான், நட்புக்கு துரோகம் செய்து விட்டதாக, இப்போது சேற்றை வாரி இறைத்து வருகிறான். அவன் பெற்றோரோ... தங்கள் மகனை நான் வேலைக்கு போக விடாமல் தடுத்து, எனக்கு எடுபிடியாக வைத்துக் கொண்டு, அவன் எதிர்காலத்தை பாழாக்கி விட்டதாக பழி சொல்கின்றனர்.
நண்பர்களுக்கு செலவு செய்து மகிழும் நட்பு திலகங்களே... நண்பர்களுக்கு நீங்கள் போடும் சோறு, உங்களுக்கு கெட்ட பெயரை கொண்டு வருவதோடு, உங்கள் நண்பனின் எதிர்காலத்தையும் பாதிக்கும், என்பதை உணருங்கள்!
—கோ. பிரசன்னா, கோவை.
நல்ல வேலையிலிருக்கும் நான், என் நண்பன் ஒருவனுக்கு சாப்பாடு போட்டு, என் அறையில் கூடவே வைத்து பராமரித்து வந்தேன். அவனும் என்னை தெய்வமாக மதித்து, மற்றவர்களிடம் பெருமையாக புகழ்ந்து வந்தான்.
எனக்கு திருமணமாகியது. என் மனைவியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி போனேன். என் நண்பனுக்கு செலவு செய்ய தடை போட்டு விட்டாள் மனைவி. ஓசி சோறில், உடல் வளர்த்து சோம்பேறி ஆகிவிட்ட நண்பன், வேலைக்கு போகாமலும், வேலைக்குச் சென்றால் ஒரு மாதம் கூட நிலைத்து நிற்காமல் சும்மாகவே சுற்றித் திரிகிறான்.
ஓசி சோறு கிடைக்காததால் நான், நட்புக்கு துரோகம் செய்து விட்டதாக, இப்போது சேற்றை வாரி இறைத்து வருகிறான். அவன் பெற்றோரோ... தங்கள் மகனை நான் வேலைக்கு போக விடாமல் தடுத்து, எனக்கு எடுபிடியாக வைத்துக் கொண்டு, அவன் எதிர்காலத்தை பாழாக்கி விட்டதாக பழி சொல்கின்றனர்.
நண்பர்களுக்கு செலவு செய்து மகிழும் நட்பு திலகங்களே... நண்பர்களுக்கு நீங்கள் போடும் சோறு, உங்களுக்கு கெட்ட பெயரை கொண்டு வருவதோடு, உங்கள் நண்பனின் எதிர்காலத்தையும் பாதிக்கும், என்பதை உணருங்கள்!
—கோ. பிரசன்னா, கோவை.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இது உங்கள் இடம்..!
அருண் நான் மேலுள்ள இரண்டு செய்திகள் மற்றும் ஒன்று ஏற்கனவே போட்டுவிட்டேன்
இதோ லிங்க் http://www.eegarai.net/t102241-topic
இதோ லிங்க் http://www.eegarai.net/t102241-topic
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 20 of 23 • 1 ... 11 ... 19, 20, 21, 22, 23
Similar topics
» இது உங்கள் இடம்
» இது உங்கள் இடம்!
» உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.
» தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்!
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» இது உங்கள் இடம்!
» உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.
» தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்!
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
Page 20 of 23
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|