ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!

+19
பூவன்
தளிர் அலை
அசுரன்
Aathira
chinnavan
விஸ்வாஜீ
செம்மொழியான் பாண்டியன்
krishnaamma
Powenraj
ஹர்ஷித்
balakarthik
யினியவன்
ஜாஹீதாபானு
Muthumohamed
றினா
ராஜா
பாலாஜி
சிவா
அருண்
23 posters

Page 14 of 23 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 18 ... 23  Next

Go down

இது உங்கள் இடம்..! - Page 14 Empty இது உங்கள் இடம்..!

Post by அருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.


Last edited by அருண் on Mon Oct 29, 2012 1:33 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


இது உங்கள் இடம்..! - Page 14 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by பாலாஜி Sun Mar 24, 2013 2:31 pm

நல்ல தொடர் பதிவு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 14 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by அருண் Mon Apr 01, 2013 1:35 pm

புது மாப்பிள்ளைகளே....!

பக்கத்து வீட்டு பையனுக்கு, கிராமிய சூழலில் வளர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து, சில தினங்களாகியும், புது மணப்பெண், "மூட் - அவுட்'டாகவே இருந்திருக்கிறாள்.

மாப்பிள்ளையிடமும் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. தகவலறிந்து, ஊரிலிருந்து வந்த பெண் வீட்டார், "யாரோ பில்லி சூன்யம் செய்து விட்டனர்...' என புலம்பினர்.
இதற்கிடையே, புதுமண தம்பதியரை, மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து போய் காண்பித்திருக்கின்றனர்.
அங்கு, இருவருக்கும் தனித்தனியே கவுன்சிலிங் நடத்திய பிறகே, புதுமணப் பெண், கணவனோடு தேனிலவு செல்ல சம்மதித்திருக்கிறாள்.
இதற்கு காரணம், மாப்பிள்ளையின் தவறான அணுகுமுறைதான்...

மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர், "முதல் இரவில் வீரமாக செயல்படும் புருஷனையே, பெண்கள் அதிகம் விரும்புவர். மனதை அலைபாய விட மாட்டார்கள்...' என்றெல்லாம் கூறி, குழப்பியிருக்கின்றனர். மாப்பிள்ளை பையனும், தன் இளம் மனைவியை அசத்தி விட வேண்டுமென்ற வெறியில், முதலிரவில் சற்று முரட்டுத்தனமாகவே நடந்திருக்கிறார்.

அதிர்ச்சியுற்ற அந்த கிராமத்துப் பெண், இப்படித்தான் ஒவ்வொரு நாள் இரவுப் பொழுதும் இருக்குமோ என அஞ்சி, "அந்த' விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் விலகியே சென்றிருக்கிறாள். புது மாப்பிள்ளைகளே... பூவை போன்று மென்மையான பெண்
களிடம் இரவில் மென்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.

— பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகர்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 14 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by அருண் Mon Apr 01, 2013 1:38 pm

இப்படியும் ஒரு எதிர்பார்ப்பா?

என் நெருங்கிய நண்பருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நண்பர், சமீபத்தில் தன் மகனுக்கு, சென்னையில் விமரிசையாக திருமணம் செய்து வைத்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களால், திருமண வைபவத்திற்கு நான் செல்லவில்லை.
ஒரு விடுமுறை நாளில், சென்னைக்கு சென்று, நண்பரின் குடும்பத்தினரையும், புது மணமக்களையும் சந்தித்து, வாழ்த்துகள் கூறி, பரிசு வழங்கினேன்.

நண்பர், தன் மகளுக்கும் கூடிய விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும், நல்ல குடும்ப சூழ்நிலையில், படித்த மாப்பிள்ளை ஜாதகம் வந்தால், தன்னிடம் சொல்லும்படியும் கேட்டுக் கொண்டார். அப்போது சமையலறையிலிருந்து வெளியே வந்த நண்பரின் மகள், தனக்கு வரப்போகும் கணவரும், அவருடைய குடும்ப சூழ்நிலையும், எப்படியிருக்க வேண்டும் என்று, என்னிடம் பட்டியலிட்டு கூறிய போது, அதிர்ந்து போனேன்.

அவளது எதிர்பார்ப்பு என்னவென்றால்...

* மாப்பிள்ளை, வியாபாரமோ, சொந்த தொழிலோ செய்யக் கூடாது.
* இன்ஜினியரிங் படித்து, ஐ.டி., கம்பெனியில் வேலை செய்ய வேண்டும்.
* வெளிநாட்டிற்கு செல்லவோ அல்லது அங்கேயே தங்கியிருக்கவோ வாய்ப்புகள் இருக்க வேண்டும்.
* மாமனார் மாமியாருடன் இல்லாமல், தனிக்குடித்தனமாக இருக்க வேண்டும்.
* மிக முக்கியமாக, மாப்பிள்ளைக்கு சகோதரிகள் இருக்கவே கூடாது.

இவற்றைக் கேட்ட நான், நண்பரின் முகத்தை பார்த்தேன். தன் கட்டுப்பாட்டிற்கு மீறிய விஷயம் இது என்று வருத்தத்துடன் கூறினார்.

நண்பரின் மகள் எதிர்பார்ப்பது போல், அவளது அண்ணி, தன் பெற்றோரிடம் இப்படி கண்டிஷன் போட்டிருந்தால், எப்படி திருமணம் நடந்திருக்கும். ஒவ்வொரு பெண்ணும், தனக்கு நாத்தனார் இல்லாத வீட்டில் தான் திருமணமாக வேண்டும் என்று மேற்கூறிய கண்டிஷன்கள் போட்டால், பெண்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று, என்னால் யோசிக்க முடியவில்லை.

பெண்கள் பொறுமைசாலிகள் எனும் கருத்தை, இந்த காலத்து படித்த பெண்களில் சிலர் பொய்யாக்கிக் கொண்டு இருக்கின்றனரே!

— எஸ்.கே.நாகேந்திரன், மதுரை.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 14 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by அருண் Mon Apr 01, 2013 1:43 pm

வளர்க்கலாமா வன்முறையை?

ஒரு ஞாயிற்றுக்கிழமை, என் அம்மாவுடன் பக்கத்து ஊர் சந்தைக்கு (வாடிப்பட்டி) சென்றிருந்தேன். தேசிய நெடுஞ்சாலை சந்திப்பின் அருகே முக்கிய பிரமுகரின் குழந்தைகளுக்கு காதணி விழாவை முன்னிட்டு, பிரமாண்டமான கட்-அவுட் நிறுத்தப்பட்டிருந்தது. அதில், ஒருபுறம் அபிமான நடிகர் ஒருவரின் படமும், மற்றொரு ஓரத்தில் ஜாதி தலைவர் ஒருவரின் படமும், நடுவில் குடும்பத்தினர் படங்களும் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால்...

நடுவில் காதணி விழாவிற்கான இரண்டு மற்றும் மூன்று வயது இரு குழந்தைகளின் கையில், அரிவாள் மற்றும் வாள் பிடித்தவாறு அச்சிடப்பட்டு, அதன் அருகே வீரம் சம்பந்தப்பட்ட வசனமும் இடம் பெற்றிருந்தது. இதைக் கண்டு முதலில் அதிர்ந்து போன என் அம்மா, என்னிடம் காட்டி, "இந்த வயசிலேயே இந்த குழந்தைகளுக்கு ஆயுதத்தை பிடிக்கச் செய்து, வன்முறையை வளர்க்கின்றனரே...' என்று வருத்தப்பட்டார்.

சினிமா, வீடியோ கேம், இன்டர்நெட் போன்றவற்றில் வன்முறை தலை விரித்தாடுவது போதாதென்று, வீரம் என்ற பெயரில், ஆயுத கலாசாரத்தை குழந்தை களுக்கு புகுத்தலாமா? அன்பு வழியில், அறவழியில் செல்வது, இக்காலத்தில் அநாகரிகம் போல் ஆகிவிட்டதே என, மனதிற்குள் நொந்து போனேன்.

— பி.போத்திராஜா, எஸ்.பெருமாள்பட்டி.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 14 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by அருண் Mon Apr 01, 2013 1:48 pm

உலோகங்களால் உபத்திரவம்!

நண்பர் வீட்டுக்குச் சென்றபோது, என்னை வரவேற்ற பின், ஒரு பாத்திரம் நிறைய சில்லரைக் காசுகளைப் போட்டு, அதில் ஒரு பாட்டிலில் இருந்த நீரை ஊற்றி, கைகளால் அந்தக்காசுகளை அலசி, பின் சிறிய துணியால், ஒவ்வொன்றாக நன்கு துடைத்து, மற்றொரு பையில் போட்டு கொண்டிருந்தார்.

நான் அன்றைய தினசரிகளைப் படித்தவாறு, அவரது செய்கையையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவரது வேலை முடிந்த பின், என் பக்கம் திரும்பி, நான் விளக்கம் கேட்பதற்கு முன், அவராகவே துவங்கினார்.

"வேறொன்றுமில்லை நமக்கு வரும் சில்லரைக் காசுகள் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்றன. உதாரணமாக மீன், இறைச்சிக்கடைகள், எண்ணெய் மற்றும் பலகாரம் விற்கும் கடைகள் போன்றவைகளும் அடக்கம். இந்தக் காசுகளில், அந்தந்த வியாபாரத்திற்கான பொருட்களின் துகள்கள் ஒட்டிக் கொண்டிருக்கும்.

அது மட்டுமல்லாமல் தற்போது பெரும் சில்லரைத் தட்டுபாடும் நிலவுவதால், பல இடங்களில் பிச்சைக்காரர்களிடமிருந்து, 95 ரூபாய் வாங்கி கொண்டு, 100 கொடுக்கும் கமிஷன் வியாபாரமும் நடக்கிறது. அவர்களில் பெரும் வியாதிக்காரர்களும் உண்டு.

பணத்தைக் கொடுத்து பொருள் வாங்கிய பின், மீதி சில்லரை வாங்குவோர், இது பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. பையில் போட்டு சென்று விடுகின்றனர்.

உலோகங்கள் மூலம் தோல் வியாதிகள் பரவுவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஒரு மருத்துவக் குறிப்பு மூலம் அறிந்தேன். அதுவும் இப்படி உலோகங்கள் மூலம் தீவிரமடையும் வாய்ப்புள்ளது என்றும் படித்தேன். அதற்குப் பின், இப்படிப்பட்ட பாதுகாப்பான வழியை நாடுகிறேன்...' என்றார்.

"அது சரி... இதென்ன, பாட்டிலில் ஏதோ பினாயில் வாசனை வருகிறதே...' என்றேன்.
"பினாயில்தான், அத்துடன் இரண்டு ஸ்பூன் பிளீச்சிங் பவுடர், நான்கு சொட்டு டெட்டால், இரண்டு லிட்டர் தண்ணீர் எல்லாம் கலந்துள்ளேன்...' என்று, "டிவி' சமையல் குறிப்பு போல் விளக்கினார்.

நண்பரின் செயல், சற்று வித்தியாசமாகத் தெரிந்தாலும், பார்ப்பவர்கள் பின்பற்ற நினைக்கும் வகையில், அவரது நுட்பமான எச்சரிக்கை உணர்வு என்னை வியக்க வைத்தது.
— எஸ்.ஸ்ரீதர், புதுபெருங்களத்தூர்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 14 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by ஜாஹீதாபானு Mon Apr 01, 2013 1:49 pm

அருண் wrote:இப்படியும் ஒரு எதிர்பார்ப்பா?

என் நெருங்கிய நண்பருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நண்பர், சமீபத்தில் தன் மகனுக்கு, சென்னையில் விமரிசையாக திருமணம் செய்து வைத்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களால், திருமண வைபவத்திற்கு நான் செல்லவில்லை.
ஒரு விடுமுறை நாளில், சென்னைக்கு சென்று, நண்பரின் குடும்பத்தினரையும், புது மணமக்களையும் சந்தித்து, வாழ்த்துகள் கூறி, பரிசு வழங்கினேன்.

நண்பர், தன் மகளுக்கும் கூடிய விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும், நல்ல குடும்ப சூழ்நிலையில், படித்த மாப்பிள்ளை ஜாதகம் வந்தால், தன்னிடம் சொல்லும்படியும் கேட்டுக் கொண்டார். அப்போது சமையலறையிலிருந்து வெளியே வந்த நண்பரின் மகள், தனக்கு வரப்போகும் கணவரும், அவருடைய குடும்ப சூழ்நிலையும், எப்படியிருக்க வேண்டும் என்று, என்னிடம் பட்டியலிட்டு கூறிய போது, அதிர்ந்து போனேன்.

அவளது எதிர்பார்ப்பு என்னவென்றால்...

* மாப்பிள்ளை, வியாபாரமோ, சொந்த தொழிலோ செய்யக் கூடாது.
* இன்ஜினியரிங் படித்து, ஐ.டி., கம்பெனியில் வேலை செய்ய வேண்டும்.
* வெளிநாட்டிற்கு செல்லவோ அல்லது அங்கேயே தங்கியிருக்கவோ வாய்ப்புகள் இருக்க வேண்டும்.
* மாமனார் மாமியாருடன் இல்லாமல், தனிக்குடித்தனமாக இருக்க வேண்டும்.
* மிக முக்கியமாக, மாப்பிள்ளைக்கு சகோதரிகள் இருக்கவே கூடாது.

இவற்றைக் கேட்ட நான், நண்பரின் முகத்தை பார்த்தேன். தன் கட்டுப்பாட்டிற்கு மீறிய விஷயம் இது என்று வருத்தத்துடன் கூறினார்.

நண்பரின் மகள் எதிர்பார்ப்பது போல், அவளது அண்ணி, தன் பெற்றோரிடம் இப்படி கண்டிஷன் போட்டிருந்தால், எப்படி திருமணம் நடந்திருக்கும். ஒவ்வொரு பெண்ணும், தனக்கு நாத்தனார் இல்லாத வீட்டில் தான் திருமணமாக வேண்டும் என்று மேற்கூறிய கண்டிஷன்கள் போட்டால், பெண்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று, என்னால் யோசிக்க முடியவில்லை.

பெண்கள் பொறுமைசாலிகள் எனும் கருத்தை, இந்த காலத்து படித்த பெண்களில் சிலர் பொய்யாக்கிக் கொண்டு இருக்கின்றனரே!

— எஸ்.கே.நாகேந்திரன், மதுரை.

இப்படியும் தான் இருக்காங்க... என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 14 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by அருண் Mon Apr 01, 2013 2:16 pm

இதற்கும் சட்டம் வேண்டும்!

சமீபத்தில், என் ஆபீஸ் நண்பர் ஒருவரை, சாலை ஓரமாய் போய் கொண்டிருக்கும் போதே, கார் ஒன்று இடித்து கீழே தள்ளிவிட்டது. காரை ஓட்டி வந்தது எழுபது வயது மதிக்கத்தக்க முதியவர். தடிமனான கண்ணாடியணிந்த அவர், கீழே விழுந்த என் நண்பரின் காலில் விழாத குறை. "நான் வயதானவன், கண் சரியாக தெரியவில்லை...' என்று கெஞ்சி இருக்கிறார். நண்பர், கை மற்றும் கால்களில் அடிபட்ட நிலையிலும், போனால் போகிறது என்று விட்டுவிட்டார்.

ஒன்று மட்டும் புரியவில்லை. பதினெட்டு வயதுக்கு கீழ் வண்டி ஓட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. அது போல, அறுபத்தைந்து வயதுக்கு மேல் வண்டி ஓட்ட கூடாது என்று ஏன் சட்டம் போடக்கூடாது? பஞ்சடைத்த பார்வையுடனும், டமார காதுகளுடனும் நிறைய வயதான வம்பர்கள், கார்களையும், பைக்குகளையும் ஜம்பமாக ஓட்டி, பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி கொண்டிருக் கின்றனர்.

— எம்.ஆர்.ஆனந்த், சென்னை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 14 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by balakarthik Mon Apr 01, 2013 2:28 pm

குறிப்பிட்ட வயது வரைக்கும் ஓட்டுனர் உரிமம் 20 ஆண்டுகள் கொடுப்பாங்க வயதானவர்களுக்கு அது 4 வருசமோ இல்ல 2 வருசம்மோ ஏதோ ஒரு சட்டம் இருக்கு அருண் அதை நம்ம கட்டிங் காவலர்கள் கவனிப்பதில்லை என்று நினைக்கிறேன் காச வாங்கிகிட்டு இல்லாத ஆளுக்கே நம்மாளுங்க லயிசன்ஸ் கொடுப்பாங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் இது உங்கள் இடம்..! - Page 14 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 14 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by யினியவன் Mon Apr 01, 2013 2:39 pm

balakarthik wrote:குறிப்பிட்ட வயது வரைக்கும் ஓட்டுனர் உரிமம் 20 ஆண்டுகள் கொடுப்பாங்க வயதானவர்களுக்கு அது 4 வருசமோ இல்ல 2 வருசம்மோ ஏதோ ஒரு சட்டம் இருக்கு அருண் அதை நம்ம கட்டிங் காவலர்கள் கவனிப்பதில்லை என்று நினைக்கிறேன் காச வாங்கிகிட்டு இல்லாத ஆளுக்கே நம்மாளுங்க லயிசன்ஸ் கொடுப்பாங்களே
அட வண்டியே இல்லாம இருந்தும் பெட்ரோல் போட முடியாம எம்புட்டு பேரு லைசென்ஸ் வச்சிருக்கோம் - வச்சிட்டு போவட்டும் பாலா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 14 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by பாலாஜி Mon Apr 01, 2013 4:20 pm

யினியவன் wrote:
balakarthik wrote:குறிப்பிட்ட வயது வரைக்கும் ஓட்டுனர் உரிமம் 20 ஆண்டுகள் கொடுப்பாங்க வயதானவர்களுக்கு அது 4 வருசமோ இல்ல 2 வருசம்மோ ஏதோ ஒரு சட்டம் இருக்கு அருண் அதை நம்ம கட்டிங் காவலர்கள் கவனிப்பதில்லை என்று நினைக்கிறேன் காச வாங்கிகிட்டு இல்லாத ஆளுக்கே நம்மாளுங்க லயிசன்ஸ் கொடுப்பாங்களே
அட வண்டியே இல்லாம இருந்தும் பெட்ரோல் போட முடியாம எம்புட்டு பேரு லைசென்ஸ் வச்சிருக்கோம் - வச்சிட்டு போவட்டும் பாலா


சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 14 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 23 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 18 ... 23  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum