ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..!

4 posters

Go down

1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Empty 1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..!

Post by டார்வின் Wed Oct 24, 2012 6:09 pm

இந்தியாவுடன் நட்புறவுடன் இருந்து வந்த சீனா, 1962_ல் இந்தியா மீது திடீரென்று படையெடுத்தது. இப்படி படையெடுத்ததற்கு பின்னணி என்னவென்றால் சீனாவால் விரட்டி அடிக்கப்பட்ட திபெத் தலைவர் தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததுதான். இந்தியாவின் வட எல்லையில் உள்ள திபெத் 1959_ம் ஆண்டு வரை தனி சுதந்திர நாடாக இருந்து வந்தது.

புத்த மதத் தலைவரான தலாய்லாமா நாட்டின் அதிபராகவும் இருந்து வந்தார். (ஒரு தலாய்லாமா இறந்ததும் திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய்லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்). அதாவது இறந்த தலாய்லாமா மறுபிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். தற்போதைய தலாய்லாமா 1935_ம் ஆண்டு பிறந்தவர். திபெத் நாட்டின் 14_வது தலாய்லாமா.) 1959_ம் ஆண்டு மார்ச் மாதம் திபெத் மீது சீனா படையெடுத்து அந்த நாட்டை சீனாவுடன் சேர்த்துக்கொண்டது. தலாய்லாமா தன் ஆதரவாளர்கள் 9 ஆயிரம் பேருடன் இந்தியாவுக்கு ஓடி வந்தார்.

நேரு தலைமையிலான இந்திய அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. தலாய்லாமாவை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று சீனா கோரியது. அதற்கு நேரு மறுத்துவிட்டதால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தகராறு ஏற்பட்டது. தலாய்லாமாவுக்கு அடுத்த தலைவராக இருந்த பஞ்சன்லாமா சீன ஆட்சிக்கு அடி பணிந்து திபெத்திலேயே தங்கிவிட்டார். இந்த நிலையில் 1962 செப்டம்பர் 19_ந்தேதி இந்தியாவின் வட கிழக்கு எல்லைப்பகுதியிலும் (நேபா) லடாக் பகுதியிலும் சீனப்படைகள் தாக்குதல் நடத்தின. இந்தியா மீது சீனா படையெடுக்கும் என்று கனவிலும் கருதாத நேரு சீனா இப்படி முதுகில் குத்திவிட்டதே என்று மனம் நொந்தார். போர் நடைபெற்ற இடம் இமயமலை அடிவாரம். தரை மட்டத்தில் இருந்து சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் கடும் குளிர் காலத்தில் இப்போர் நடந்தது. இந்திய ராணுவ வீரர்கள் தாய் நாட்டைக் காக்க தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் வீரப்போர் புரிந்தனர்.

சீனா பெரும் படையுடனும் நவீன ஆயுதங்களுடனும் வந்து தாக்கியதால் இரண்டு முனைகளிலும் இந்திய ராணுவம் பின்வாங்க நேரிட்டது. போர் காரணமாக இந்தியாவில் முதல் முறையாக நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்தியாவுக்கு அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பி உதவியது. சீனாவின் படையெடுப்பை உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கண்டித்தன. இதன் காரணமாக சீனா நவம்பர் 21_ந்தேதி போர் நிறுத்தம் செய்வதாகத் தானாகவே அறிவித்தது.

சீனாவின் பகுதிகளை ஏற்கனவே இந்திய ராணுவம் கைப்பற்றி இருந்ததாகவும் அவர்களை பழைய இடத்துக்கு விரட்டுவதே தங்கள் நோக்கம் என்றும் அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது என்றும் சீனா கூறியது. "போரில் பிடித்த இடங்களில் இருந்து சீனப்படைகள் வாபஸ் ஆகிவிடும். அந்தப்பகுதி ராணுவம் இல்லாத சூனியப் பிரதேசமாக இருக்கவேண்டும். (அதாவது இந்தியப்படைகள் கைப்பற்றிக்கொள்ளக் கூடாது) ஆக்கிரமிப்பு செய்தால் திருப்பித் தாக்குவோம்" என்று கூறிவிட்டு படைகளை சீனா வாபஸ் பெற்றது.

இந்தியாவின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து கொண்டிருந்த நேருவின் புகழுக்கு சீனப்படையெடுப்பின்போது இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு களங்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும்.

பாராளுமன்றத்தில் முதன் முதலாக நேரு மந்திரிசபை மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. நேரு ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வற்புறுத்தினர்.

"நட்புடன் இருந்த சீனா நம்பிக்கைத் துரோகம் செய்ததால் நமக்கு இந்தத் தோல்வி ஏற்பட்டது. இனி இத்தகைய நிலை ஏற்படாது. இந்தியாவிடம் எந்த நாடாவது வாலாட்டினால் சரியான பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் பலப்படுத்தப்படும்" என்று நேரு பதிலளித்தார். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்றது.

அதுவரை இந்தியாவை தொழில் துறையில் முன்னேறச் செய்ய பாடுபட்டு வந்த நேரு, ராணுவ பலம் மிக்க நாடாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். "இந்தியாவை வல்லரசு நாடாக்கவேண்டும்" என்று உறுதியுடன் செயல்படலானார். இந்தியாவின் பட்ஜெட்டில் ராணுவத்திற்காக அதிகத் தொகை ஒதுக்கப்பட்டது.

நவீன போர்க்கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. முப்படைகளுக்கும் அதிக வீரர்கள் சேர்க்கப்பட்டனர். "இனி போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு தோல்வி ஏற்படக்கூடாது" என்ற உறுதியுடன் நேரு வகுத்தத் திட்டங்களால் இந்திய ராணுவத்தின் பலம் படிப்படியாக உயர்ந்தது
நன்றி மாலைமலர்,,
1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Sinoindianwar1962300x20

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Empty Re: 1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..!

Post by அகல் Wed Oct 24, 2012 6:40 pm

தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Empty Re: 1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..!

Post by மாணிக்கம் நடேசன் Thu Oct 25, 2012 7:17 am

இனியும் சீனா இந்தியாவிடம் வாலாட்டுமா? அப்படியே வாலாட்டினாலும் ஒட்ட நறுக்கப்படும் என்பது உறுதி.
இந்தியனா கொக்கா, உலகம் முழுவதும் உள்ள எல்லா இந்தியர்கள் இணைய மாட்டார்களா என்ன?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Empty Re: 1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..!

Post by ஹர்ஷித் Wed Jan 23, 2013 3:39 am

சூப்பருங்க
ஜெய்ஹிந்த்...

இந்தியாவைவிட ராணுவ பலத்தில் சீனா பன்மடங்கு பலம் வாய்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.அதே சமயம் தன எல்லையை காக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் கண்ணிமைக்காமல் கருத்துடன் காத்திருக்கிறார்கள்...ஜாக்கிரதை.
கடுகு சிருத்தாலும் காரம் குறையாது.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Empty Re: 1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum