புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
21 Posts - 4%
prajai
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Oct 16, 2012 10:18 pm



கூரையை கொளுத்திவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்குவதெல்லாம் லாபமென்கிற நோக்கில் கிடைத்ததையெல்லாம் பிடுங்கிகொண்டு ஓடுபவர்களால் வர வர காதல் களங்கப்பட்டு கொண்டே வருகிறது. அப்படித்தான் அவன் அவளை தன்னிஷ்டம் போல் எரியவிட்டு விட்டு தனக்கு வேண்டியதை மட்டும் பிடுங்கி கொண்டு ஓடினான். போகும்போது வெளிநாடு போவதாய் சொல்லிவிட்டு அதே நகரத்தில் மனைவி குழந்தையென தன் குடும்பத்தை அழகாய் அமைத்து கொண்டான். வெளிநாடு போனவன் திரும்பிவருவானென அவள் களங்கமில்லாமல் நம்பிக்கொண்டிருக்கிறாள். அந்த அவனை அவள் எதிர்பாராமல் சந்தித்தபோது அழுதுகொண்டே சொல்கிறாள் . .

நீயூம் நானும்
இப்படி எதிரெதிரே - இந்த
சந்தை நெரிசலில்
சந்தித்து கொள்வோமென்று
யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
எதிர்பாராத சந்திப்பாய்
எனக்கும் உனக்கும்
இது சேர்ந்தே நிகழ்ந்திருக்கிறது.

மனசெல்லாம்
அதிர்ச்சியிருந்தாலும்
என்மேல் படர்ந்த
உன் பார்வையை
மிக சாவகாசமாய் தட்டிவிட்டு
தன் மனையாளின் பக்கம்
திரும்பி கொள்பவனே!

என்னை நினைவிருக்கிறதா?
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னா;
நானும் நீயும்
காதலர்கள்.

அப்போது
நாம்
பருவத்தின் வாசலில்
பல்லாங்குழி ஆடினோம்.
காதலிலே தொலைந்துபோய்
கண்ணாமூச்சி ஆடினோம்.
இன்னும்
ஆயிரமாயிரம் ஆட்டங்களை
உன்னோடு
சேர்ந்து ஆடியிருக்கிறேன்
நான்.

என்றாலும்
என்னோடு
கடைசியாக நீ ஆடிய
ஆட்டமிருக்கிறதே!
அப்பப்பா . . .!

அன்றொரு சாயங்கால பொழுதில்
ஒரு பச்சை குழந்தையின்
கலப்படமற்ற சிரிப்போடு
நான்
உன்னிடம் ஓடி வந்தேன்.
நீயோ
ஒரு மதம் பிடித்த யானையின்
வெறியோடு
என்னை நெருங்கினாய்.

மன்மதன்
உன் கண்ணங்களில்
ஓங்கி அறைய
நீ
நிலை தடுமாறி
ஓடிவந்து
என்னை
கட்டியணைத்துக்கொண்டாய்.

ஆயிரமாயிரம்
ஆசைவார்த்தைகள் பேசினாய்.
மன்மதனின் பானத்தை
இரக்கமின்றி
என்மேல் வீசினாய்.

நீ
உன் ஆண்மையை
அளந்து பார்த்து கொள்ள
என்னை
அற்புதமாய் பயன்படுத்திக் கொண்டாய்.

உன் மோகம்
தாகம்
வேகம்
அத்துனையும்
எனக்கும்
மெதுவாய் தொற்றிக்கொள்ள . . .

வாழை இலை விரித்து
நான்
விதவிதமாய் விருந்து வைக்க. . .
என் மாராப்பு சீலைக்குள்ளே
மன்மதனாய்
மாறினாய் நீ.

அது
மன்மதனின் பாதங்களில்
ரதிதேவியின் படையல்கள்.
அறையெங்கும்
உடைந்து சிதறன
என் கண்ணாடி வளையல்கள்.

இதயத்தில் வளர்ந்த
ஆசை நெருப்பை
இதழ்களில் ஈரத்தால்
அனைத்தோம்.
வறண்ட பூமியின்
வரப்பினையெல்லாம்
தண்ணீர் பாய்ச்சி
நனைத்தோம்.

அன்று
உன் இளமையை
அர்த்தபடுத்திக்கொள்ள
என்னை
ஏதேதோ செய்தாய்.

காதல் நெருப்பில்
இருவரும்
பற்றிகொண்டு எரிந்து
ஒருவர் சிதையில்
இன்னொருவர்
உடன்கட்டை ஏறினோம்.

ஒருவர் வாசத்தை
ஒருவர் முகர்ந்து . . .
ஒருவர் உஷ்ணத்தை
ஒருவர் பகிர்ந்து . . .

நான்கு இதழ்கள்
ஒன்றாய் சேர்ந்து
சுகத்தை வாசிக்க . . .
இடைவெளியற்ற நெருக்கத்தில்
ஒருவரின் மூச்சுகாற்றை
இன்னொருவர் சுவாசிக்க . . .

அடடா
அன்று
நீ நானென்கிற
இரண்டே வார்த்தைகளின் பின்னலில்
எத்தனை கவிதைகள்
எழுதி முடித்தோம்.

உரசலின் சுகத்தை - நீ
ஒவ்வொன்றாய்
சொல்லி தந்தாய்.
என்னிடமுனக்கு வேண்டியதெல்லாம்
வேண்டியமட்டிலும்
அள்ளிக் கொண்டாய்.

இளமைபோட்ட விடுகதைக்கு
இருவரும் சேர்ந்து
விடைகாண போராடினோம்.
இறுதியில் இருவரும்
ஒன்றாய் சேர்ந்து
தேன்குளத்தில் நீராடினோம்.

உன் இறுகிய அணைப்பால்
என் மூச்சுகாற்று
வெளியேற முடியாமல் நான் திணற . . .
நானே நீயானதை
நீயே நானதை
நாமிருவரும் சேர்ந்து உணர . . .

அப்போது
புனித பட்டுவிட்ட தெம்பில்
இந்த பூவின் வதனத்தில்
பூரண சிலிர்ப்பு.
கதகதவென எரிந்து பின்னா;
காற்றாய் போனது
ரதியின் நெருப்பு.

நாமொருவரை
ஒருவரிடம் தொலைத்துகொள்ள
சுமார் ஒரு மணி நேரம்
போராடியிருப்போம்.
ஒரு மணி நேரத்தில்
எல்லாம் முடிய
உட்கார்ந்து கொண்டோம்
ஆளுக்கொரு மூலையில்

அவசரபட்டு விட்டோமா?
இல்லை
வாழ்வை அர்த்தபடுத்திக்கொண்டோமாயென
அமைதியாய் மனசு
அலசி பார்க்க . . .
அணைத்த பின்பும்
எரியும் நெருப்பாய்
உடலெல்லாம்
ஊற்றாய் வேர்க்க . . .

அது
மன்மதனின் சந்நிதியில்
நாமிருவரும் சேர்ந்து நடத்திய
யாகத்தின் இறுதிகட்டம்.
நாமே நடத்திய
அந்த நாடகத்தின் நாயகர்கள்
நானும் நீயும் மட்டும்.

வேகமாய் இயங்கி
மிருகபசியை தீர்த்துகொண்டதில்
நம்மிருவரின் சரீரங்களிலும்
நதிப்பிரவாகமெடுத்த வேர்வை.
இனி பேசுவதற்கு
என்ன இருக்கிறதுயென்பதுபோல
ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்ட பார்வை.

அது
எல்லாம் கிடைத்த முழுமையா?
இல்லை
எல்லாமிழந்த வெறுமையா?

இவையெல்லாம் முடிந்த
ஏழாவது நாளில்
"நான் வெளிநாட்லயிருந்து
திரும்புனதுமே
நம்ம கல்யாணந்தான்"
என்று சொல்லிப்போனாய்.

வெளிநாட்டிலிருந்து
நீ
திரும்பிவருவாயென
நான்
பைத்தியகாரத்தனமாய்
நம்பிக்கொண்டிருக்க
நீயோ
இந்த ஜனநெரிசலில் ஒருவனாய்
உன் ஆசை மனையாளோடு
இதோ
என்னை
அநாயசமாய்
கடந்து சென்று கொண்டிருக்கிறாய்.
[img][/img]



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 10:21 pm

பாதை பார்த்தே காத்து இருங்கள் உங்கள் அவர் திரும்ப வருவார்கள் ....

பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 16, 2012 10:53 pm

இது உரைநடை போல உள்ளது நண்பரே! மேலும் இவ்வளவு நீளமான ஒரு தன்னிலை விளக்கம் தேவையில்லை.... விசரம் அதிகம் அதை தவிர்த்திருக்கலாம்...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 16, 2012 10:53 pm

பூவன் wrote:பாதை பார்த்தே காத்து இருங்கள் உங்கள் அவர் திரும்ப வருவார்கள் ....
அண்ணே முழுசா படிச்சீங்களா? அவள் ஜனநெரிசலில் சந்தித்தது அவள் காதலனை தான்.. இன்னொருவளுடன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 10:56 pm

அசுரன் wrote:
பூவன் wrote:பாதை பார்த்தே காத்து இருங்கள் உங்கள் அவர் திரும்ப வருவார்கள் ....
அண்ணே முழுசா படிச்சீங்களா? அவள் ஜனநெரிசலில் சந்தித்தது அவள் காதலனை தான்.. இன்னொருவளுடன் புன்னகை

அதையும் படித்தேன் அண்ணா உங்கள் அவர் வருவார் என ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 10:57 pm

பூவன் wrote:
அசுரன் wrote:
பூவன் wrote:பாதை பார்த்தே காத்து இருங்கள் உங்கள் அவர் திரும்ப வருவார்கள் ....
அண்ணே முழுசா படிச்சீங்களா? அவள் ஜனநெரிசலில் சந்தித்தது அவள் காதலனை தான்.. இன்னொருவளுடன் புன்னகை

அதையும் படித்தேன் அண்ணா உங்கள் அவர் வருவார் என ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது .....

முடிந்த பயணங்கள் கூட தொடரும் இந்த காதலில் மட்டுமே ????


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 11:10 pm

சுந்தரபாண்டி wrote:
அது
எல்லாம் கிடைத்த முழுமையா?
இல்லை
எல்லாமிழந்த வெறுமையா?
உணர்சிக் குவியல் புணர்ச்சியில் முடிந்ததில்
எல்லாமிழந்த வெறுமை தான் முடிவில்...

காதெலெனும் நாடகம் அரங்கேற்றியவன்
உடன் அரங்கேறியவளோ அந்தரத்தில்...

நன்று சுந்தரபாண்டியன்.

எங்க ரொம்ப நாளா ஆளக் காணோம்?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Oct 16, 2012 11:46 pm

நண்பர் சுந்தரபாண்டியின் கவிதை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நம் ஈகரையில்...
எப்போதும் இதயம் தொடும்-தூற்றும் கவிதைகளை முன்வைப்பதில் முதன்மையானவர் அவர்...
உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் ஒருங்கே குவித்து அதில் ஊசி செருகி அனுப்பி வைக்கும்
உண்மைக் கவிஞர் அவர்...

இந்தக் கவிதையில் உங்களின் பார்வை சற்று விசாலமானதில் நண்பர்கள் சிலருக்கு
கருத்து முரண்கள் இருக்கலாம்...ஆனால் சற்றே நீண்டதில் வந்ததே அது என்பது என் கருத்து...
ஆயினும் அப்பட்டமாய் சொல்லி ஆதங்கத்தை அறைந்து சொல்லுகிறது எனபதில் ஆதரவு தெரிவிக்கும் அன்பர்களில் அடியேனும் ஒருவன்...

வாழ்த்துகள் நண்பர் சுந்தரபாண்டி....



கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   224747944

கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Rகடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Aகடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Emptyகடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Rகடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 9:46 am

அருமை சுந்தர பாண்டியன் அண்ணே ..

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Oct 17, 2012 11:50 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக