ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புகழ் -635

Go down

திருப்புகழ் -635  Empty திருப்புகழ் -635

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Oct 21, 2012 4:27 pm



அல்லில் நேரு மினது தானும்
அல்ல தாகிய உடல் மாயை
கல்லில் னேரஅ வழிதோறுங்
கையு நானு முலையலாமோ
சொல்லில் நேர்படு முதுசூரர்
தொய்ய வூர்கெட விடும்வேலா
வள்ளி மார் இருபுறமாக
வள்ளி யூருறை பெருமாளே.


இரவில் பளிச்சிடும் மின்னல் இல்லாமல் போய் விடுவதுபோல மிகப்பிரபலமாக தெரியும் இந்த உடல் மாயையாகும் ! அது இல்லாமல் போய்விடும் !
கற்கள் முற்கள் நிறைந்த உலகியல் வாழ்வை சாசுவதம் என்று நம்பி நான் அலைந்துதிரிவதோ ?
அசுரர்களின உபதேச சொல்லுக்கு இணங்கி பாவம் முற்றியவர்கள் அந்த பாவத்தின் பலனை சிட்சையாக அனுபவித்து தொய்வடைகிறார்கள்! அந்த பட்டறிவால் ஞானம் விளைந்து உமது சொல்லுக்கு நேர் படும்படியாக ஞானவேலை விடுகிறீர்கள் !
அதனால் உம்மை பற்றிக்கொண்டவர்கள் இருவகையினர் சதா உம்மை சூழ்ந்திருக்க பக்தர்களின் இதயத்தில் வாசமாயிருக்கும் யுக புருஸனே ! கடவுளால் படைக்க பட்ட அனைத்திற்கும் பெரியவரே ! சற்குருனாதரே !



அல்லில் நேரு மினது தானும்
அல்ல தாகிய உடல் மாயை

இரவில் பளிச்சிடும் மின்னல் மிகுந்த ஆற்றல் மிக்கதாக உள்ளது ! பலருக்கும் அது பிரபலமாக தெரிகிறது ! ஆனால் அது சில வினாடிகளில் இல்லாமல் போகிறது ! அப்படிப்பட்ட தன்மை உடையது மனித உடல் ! அது மிகுந்தசக்தி உள்ள புலன்களை கொண்டிருக்கிறது ! அழிக்க அதனால் முடிகிறது ! ஓரளவு ஆக்கவும் அதனால் முடிகிறது ! கடவுளின் படைப்புகள் அனைத்திலும் மேலானதாக மற்ற படைப்பினங்கள் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த கூடியதாகவும் இருக்கிறது ! ஏதேனும் புதிய வியாதிகள் உண்டானாலும் சில நாளில் அதற்கும் மருந்து கண்டுபிடித்து கடவுளின் அவசியம் இல்லை என்பதாக நிலைனாட்டிக்கொள்ள பார்க்கிறது ! விஞ்ஞானம் பகுத்தறிவு என்று தத்துவங்களை உண்டாக்கி எல்லாவற்றிற்கும் விளக்கத்தையும் அதன் விதிமுறைகளையும் கண்டறிகிறது ! கடவுளின் பரலோகத்திற்கு நிகரான சொர்க்க பூமியாக இவ்வுலகை மாற்றி காண்பிக்க முயலுகிறது ! ஆனாலும் அந்த உடல் அழிவதை அந்த உடலால் தடுக்க இயலவில்லை ! உலகை கலக்கியவர்கள் பலர் இன்று இல்லாமல் போய் விட்டனர் ! உலகப்புகழ் பெற்று அபிமானிகளின் பலரின் பெரியபெரிய கூட்டத்தை உடையவர்களாக இருந்த பலர் இன்று மறக்கபட்டுவிட்டனர் ! உடல் அழியாமல் பாதுகாத்தால் ஒரு நாள் உயிரோடு வந்து விடுவாரோ என்று பிரமீடுகளை உருவாக்கி பாதுகாக்க பட்ட மம்மிகள் இன்றளவும் உயிரோடு எழும்ப முடியவில்லை என்பது நிரூபணமாகிவிட்டது ! அந்த உடல் மாயை !



கல்லில் னேரஅ வழிதோறுங்
கையு நானு முலையலாமோ


அதுதான் அப்படியென்றால் அது வாழும் பூவுலக வாழ்வு என்பது யாருக்கும் நிம்மதியளிப்பதாக இல்லை ! அந்த உடலை ஓம்பவும் அதன் சொந்தபந்தங்களின் கடமைகளை பராமரிக்கவும் பொருளீட்டல் என்ற கடமை அழுத்திக்கொண்டே உள்ளது ! அதுவுமல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்கு மேலாக அந்த உடலின் இச்சைகள் பெருமைகளுக்காக இன்னும் என்னேன்னவோ செய்ய வேண்டியுள்ளது ! நல்லதையும் கெட்டதையும் செய்து தனக்கும் பிறருக்கும் கேடுகள் செய்து ; திருப்தியடையாமல் உழலவேண்டியுள்ளது ! அதனால் ஆத்துமாவில் --மெய்யாகிய நானில் பாவபுண்ணிய கணக்குகள் சேர்ந்து கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது ! பல பிறவிகள் எடுத்து துக்க சாகரத்தில் உழன்று தவிக்கவேண்டியுள்ளது ! அந்த ஊழில் உழலும் ஆத்துமா அதிலிருந்து விடுபட ஏது வழி ? பிறவிப்பெருங்கடலில் நான் தவிக்கிறவனாகவே இருப்பது உமது சித்தமா ?

இந்த கேள்வியை கேட்ட அருணகினாதர் ஆத்துமாக்கள் உய்வடைய கடவுள் வைத்துள்ள வழியின் ரகசியத்தையும் அடுத்து சொல்லுகிறார் !



சொல்லில் நேர்படு முதுசூரர்
தொய்ய வூர்கெட விடும்வேலா


புதிய ஆத்துமாக்கள் உடல்தான் நான் என்று கருதிக்கொண்டு அதன் இச்சைகளை பூர்த்தி செய்வதிலும் அதன் மஹிமையிலும் வீரதீர பிரதாபத்திலும் மஹிழ்ந்திருக்கும் ! பாவம் மிகாததனால் இன்னும் ஆணவம் , கண்மம் , மாயைகளின் வழியாக பல கெடும்பு செய்யும் ! அப்போது அதனை தூண்டிவிடுகிற அசுரர்களின் உபதேசத்தை கேட்டு இன்னும் அதன் பாவங்கள் முற்றவேண்டும் ! ``முது சூரர்`` என்ற வார்த்தை முற்றிய தீயவர்களாக ஆத்துமாக்கள் மாறும் நிலையடைவதை குறிக்கிறது ! பாவம் முற்றாத ஆத்துமாக்கள் நல் உபதேசங்களுக்கு உடன்பட மாட்டார்கள் ! ஆனால் தீய உபதேசங்களுக்கு உடன்படுவார்கள் ! ஆனால் பாவம் முற்றி விட்டாலோ அவர்கள் செய்த செயலுக்கு விளைவுகளை கடவுள் அனுப்பும் போதோ தொய்வடைகிறது ! துண்பத்திலிருந்து விடுபட அது இறைவனை நாட தொடங்குகிறது ! துன்பமே நிறைய ஆத்துமாக்கள் இறை சிந்தனை உள்ளவர்களாக மாற காரணமாக இருக்கிறது ! ஞான வேலானது முது சூரர் தொய்வடையும்படி எய்யப்படுகிறது ! அது அவர்களை வாட்டி வதக்கி பட்டறிவு என்ற ஞானத்தை ஆத்துமாவில் விளையவைக்கிறது ! இறைபயம் என்ற ஞானவித்து ஊண்றப்படுகிறது ! பக்தி என்ற மெய்ஞானம்-- தன்னை அறிதல் , நீதிபரராகிய கடவுளுக்கு கீழ்படிதல் என்பதாக அது படிபடியே பல பிறவிகளில் பெருகத்தொடங்குகிறது ! உடலின் இச்சைகளின் பின் செல்லாமல் அதனுடன் போராடத்தொடங்குகிறது ! அப்படி போராடி உடலின் பிடியிலிருந்து விடுபடவிடுபட ஒவ்வொரு மாயையிலிருந்தும் விடுபட்டு ஞானம் தழைத்தோங்குகிறது ! அப்படிபட்ட ஆத்துமாக்களே சொல்லில் நேர் படுகிற நிலையடைகிறார்கள் !

இங்கு அருணகினாதரின் சொந்த அனுபவமே உதாரணப்படலாம் ! செல்வச்சிறப்புள்ள குடும்பத்தில் பிறந்து பெண் இச்சைக்காக தனது செல்வமனைத்தையும் செலவழித்த பெண்பித்தர் ஒருவர் எப்படி ஒரே நாளில் எதிர்முனையாகிய ஞானத்திற்கு மாற முடியும் ? உடனே அதனை முருகனின் அற்புதம் ; திருவிளையாடல் என புளகாங்கிதம் அடைந்து பக்திபரவசம் அடைவதோடு நிருத்திக்கொள்ளக்கூடாது ! இன்றைக்கும் கோவில்களில் தற்கொலை பலர் செய்தார்களே அவர்கள் நிலை என்ன ? உண்மை என்னவென்றால் அருணகிரியாரின் ஆத்துமா முந்தய பிறவிகளில் பல மாயைகளை கடந்தாலும் பெண் இச்சை என்ற ஒன்றை மட்டும் கடறாதது ! அதனால் இப்பிறவியில் பெண் இச்சையிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமே பிறவியெடுத்தது ! அதனால் அதில் மூழ்கி திளைத்து ஒன்றுமேயில்லாததற்கே இவ்வளவு பாடுபாட்டோமா என வெறுப்படைந்து ; உணர்ந்து தன்னை மாய்த்துக்கொள்ளும் அளவு துனிந்த போது அது பாவமன்னிப்பாகவும் ; ஞான உபதேசமாகவும் அருளாகவும் கிடைக்கபெறுகிறது ! ஞானம் முழுமையடைந்து சித்தியடைகிறது ! அது பல பிறவிகளில் உண்டான வளர்ச்சி ! ஞானமுதிர்ச்சி ! அதுவே இந்த வரிகளில் சித்தரிக்கபடுகிறது ! இத்தகைய ஆத்துமாக்கள் எஞ்சிய நாட்களில் பிறருக்கு ஞான உபதேசம் செய்து உலகம் விழிப்படைய கடவுளால் பயன்படுத்தப்படுவார்கள் ! உபகுருக்கள் எனப்படுவோர் இத்தகையவர்களே ! சரியை என்ற தத்துவத்தில் இதுவே சூரன் ஞானவேல் துளைத்தவுடன் சேவலாக மாறிவிட்டான் எனப்படுவது ! ஞானம் துளைத்து அஞ்ஞானம் மறைந்தவர்கள் உலகை எழுப்பும் சேவலாக மாறிவிடுகிறார்கள் ! ஆனால் அவர்கள் சற்குருவுக்கு அடங்கி அவர்களின் காலில் நின்று சேவகம் செய்பவர்களே ! அல்லது சற்குருவால் பயன்படுத்தப்படுகிற பாத்திரங்களே !

இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல. (மத்தேயு 18:14)
அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். (மத்தேயு 5:45) -- என்பது சற்குருனாதர் இயேசுவின் வரிகள் !



வள்ளி மார் இருபுறமாக
வள்ளி யூருறை பெருமாளே.


``வள்ளி`` என்ற சொல் பற்றிபடறும் கொடியை குறிப்பதாகும் ! பாவங்கள் மிகுந்து துன்பம் பெருகும் போது இறைவனை நாடி அவரவர்கள் தரத்தில் மனித ஆத்துமாக்கள் இறைவனை பற்றிக்கொள்கின்றன ! வாயளவிலேனும் இறைபயம் என்ற சொல்லை பயன்படுத்துவதில் துவங்கி உண்மையிலேயே இறைபயம் உள்ளவர்களாய் ஆத்துமாக்கள் பரிணமிக்கின்றன ! அவர்கள் எல்லோரும் ``வள்ளிமார்களே`` கடவுளை நோக்கி திரும்பிய ஆத்துமாக்கள் அனைத்தும் வள்ளிமார்களே ! இவர்களின் தரத்தை பொருத்து இரண்டு வகையினராக பிரிக்கலாம் !ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஞானம் விளைந்து சுபாவத்தில் நற்குணங்கள் நிறம்பிய -- தெய்வீக இயல்பு அதிகரித்தவர்களை ``தெய்வானை`` என்பதாக பின்னாளில் சிறப்பளித்தார்கள் !ஆனால் ஆதிதமிழுலகமும் அருணகிரியாரும் வள்ளியைப்பற்றி மட்டுமே பேசுகின்றனர் ! இந்த வள்ளிமார்கள் சூழ்ந்திருக்க அவர்களுக்குள்ளேயே வாசமாயிருக்கிறார் ஒருவர் ! அவரே உலகின் சற்குருனாதர் ! அவரே இந்த லோகத்தின் யுகபுருஸன் ! படைக்கபட்ட அனைத்திற்கும் பெரியவர் ! பெருமாள் !

இந்த லோகம் கடவுளால் படைக்க பட்ட போது யார் மூலமாக படைக்க பட்டதோ அவரே யுகபுருஸன் ! பெருமாள் ! படைக்க பட்ட அனைத்தும் அவர் மூலமாகவே படைக்கபட்டது ! அவரே இந்த உலகின் சற்குருனாதராக இருந்து சகலரையும் கடவுளோடு கொண்டு சேர்க்கிறார் ! அதர்மம் பெருகும் போது யுகங்கள் தோறும் பூமிக்கு மனிதரூபத்தில் மாறி (முருகு) வருகிறவரும் அவரே ! அப்படி ராமராகவும் கிருஸ்ணராகவும் இயேசுவாகவும் வந்தவர் ஒருவரே !

அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. (யோவான் 1:2-11)


அவரையே முருகன் என்று தமிழுக்கு போகர் அறிமுகம் செய்தார் ! அவரே கந்தன் ! கந்தன் என்றால் நாம் பற்றிக்கோள்ள வேண்டியவர் -- பற்றுக்கோடு என்று பொருள் ! சமஸ்கிரத ஸ்கந்தபுராணத்தில் இவரே சற்குருனாதராக ``குரு கீதை `` என்ற படலமாக சிவனால் பார்வதிக்கு உபதேசிக்க பட்டுள்ளது ! இந்த குருவின் மூலமாக மட்டுமே மனுக்குலம் கடவுளை அடைய முடியும் என்பதே குருகீதையின் சாரம் ! கடவுள் நாடினால் குருகீதையை தமிழில் விளக்கமளிக்க உத்தேசித்துள்ளேன் !

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. (ஏசாயா 9:2 )
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum