Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும்
5 posters
Page 1 of 1
வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும்
நாட்டில் நடந்த எத்தனையோ ஊழல்கள், யாருக்குமே தெரியாமல் மறைந்துவிட்டன. மக்களின் கவனத்துக்கே பல ஊழல்கள் வெளியே வராமல் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஊழலாக வெளியே வந்துகொண்டிருக்கிறது. `ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் நடந்த குலைநடுங்க வைக்கும் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்' என்று ஒவ்வொன்றாக வெளியே வந்த ஊழல்களின் பட்டியலில், இப்போது, அடுத்தடுத்து மேலும் பல ஊழல்கள் தலைகாட்டத் தொடங்கிவிட்டன. நல்லவேளையாக, இளைய சமுதாயத்துக்கு ஊழல் மீது ஒரு பெரிய வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில், கிராமப்பகுதிகளில், ரஷீதா பகத் என்ற பெண் பத்திரிகையாளர் சுற்றுப்பயணம் செய்து, ஊழல் பற்றி, படிப்பறிவில்லாத ஏழை-எளிய மக்களிடமும் கருத்துக்கேட்டார். `சேற்றிலே முளைத்த செந்தாமரை' போல, அங்குள்ள படித்தவர்களிடமும் அவர் கருத்துக்கேட்டார். அப்போது, விவசாய குடும்பத்தில் பிறந்து, தோட்டக்கலையில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பீம்சிங் என்ற இளைஞர், "ஷாந்த் லஷ்மி மே தோ பைசே ஆரம் சே கானே கோ மில்தே ஹை, அவுர் அஷாந்த லட்சுமி மே சுரேஷ் கல்மாதி ஜெய்சே லாக ஆ ஜதே ஹை'' என்றார். அதாவது, "நேர்மையான வழியில் கொஞ்சம் சம்பாதித்தாலும், அது மன நிறைவோடு மகிழவைக்கிறது. இதற்கு நேர்மாறான வழியில் சென்றால், சுரேஷ் கல்மாதி நிலைதான்'' என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'' என்பதுபோல, இன்றைய இளைஞர் சமுதாயத்தின், ஊழலுக்கு எதிரான உணர்வு, இந்த வாசகத்தில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஊழலுக்கு எதிரான இளைஞர்களின் உணர்வை தூண்டும் வகையில், ஒரு விடிவெள்ளியாக, அன்னா ஹசாரே தோன்றினார். ஆனால், அவர், ஊழலை ஒழிக்க `லோக்பால் மசோதா' வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் பெரிதாக வைத்தாரே தவிர, நாட்டிலே நடக்கும் ஊழல்களை குறிப்பிட்டு வெளியே கொண்டுவரவில்லை.
இந்த நேரத்தில், அவரிடமிருந்து பிரிந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் நெத்தியடியாக, ஒவ்வொரு ஊழலாக பகிரங்கப்படுத்தத்தொடங்கினார். சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சலுகைகள் பெற்றார், மத்திய சட்டமந்திரி சல்மான் குர்ஷித் தலைமையில், அவரது மனைவியால் நடத்தப்படும் டாக்டர் ஜாகீர் உசேன் அறக்கட்டளையில் முறைகேடு நடந்தது என்று புகாராக கூறியது, ஒட்டுமொத்த இந்தியாவையே அவர் பக்கம் திரும்பவைத்தது. போர் முனையில், எதிரே உள்ள 180 டிகிரி கோணத்தில், எல்லா பக்கமும் திரும்பி சுடும் பீரங்கியைப்போல, அவரது குறி, காங்கிரசை மட்டுமல்லாமல், பா.ஜ.க. மீதும் பாய்ந்தது. நிதின் கட்காரி நிறுவனங்கள், மராட்டிய மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி அரசில் பெற்ற சலுகைகளை பட்டியலிட்டது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒவ்வொன்றாக இப்படி ஊழல் வெளியே வந்துகொண்டிருக்கிற நிலையில், அரியானா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்கா, ராபர்ட் வதேரா விஷயத்தில் பிறப்பித்த உத்தரவு, அதிகாரிகள் மட்டத்தையும் அசைத்தது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அரசாங்க அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர், பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு முன்பு ஆஜராகி, "2ஜி ஸ்பெக்ட்ரம் அலை ஒதுக்கீட்டில், நுழைவு கட்டணமாக ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று பிரதமருக்கு நான் கருத்துரு அனுப்பினேன், அவர் கேட்கவில்லை'' என்று சொல்லிவிட்டார். இதேபோல, மராட்டிய மாநிலத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒய்.பி.சிங், சரத்பவார் குடும்பம் பயன்பெறும் வகையில், லவாசா வீட்டுவசதி திட்டத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பெரிய முறைகேடுகள், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் நடந்துள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மங்களூரில், சோனியா காந்தி பேசும்போது, பா.ஜ.க. ஆளும் கர்நாடகா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஷ்கார் மாநிலங்களில், பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக கூறினார். பதிலுக்கு பா.ஜ.க. சார்பில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறார்கள். மக்கள், இப்போது இரு கட்சிகளையும் கேட்பது என்னென்ன ஊழல் நடந்துள்ளது? என்பதை கெஜ்ரிவாலும், மற்றவர்களும் தடாலடியாக சொல்வதுபோல, நீங்களும் சொல்லுங்கள். நீங்கள் இருவருமே கெஜ்ரிவால் போல, அடுத்த கட்சி மீது உள்ள புகார்களை குறிப்பிட்டு சொல்லுங்கள். ஒவ்வொரு ஊழலாக வெளியே வரட்டும், நாங்களும் தெரிந்துகொள்கிறோம் என்கிறார்கள்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும்
வரட்டும் இவனுகளின் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் ஊருக்கே தெரியுது இன்னும் கொஞ்சம் தெரிஞ்ச மக்கள் பொங்கி எழுவாங்க அதில் எந்த சந்தேகமும் இல்லை
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும்
Muthumohamed wrote:வரட்டும் இவனுகளின் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் ஊருக்கே தெரியுது இன்னும் கொஞ்சம் தெரிஞ்ச மக்கள் பொங்கி எழுவாங்க அதில் எந்த சந்தேகமும் இல்லை
மக்கள் புரட்சி இந்தியாவிற்கு அவசியம் தேவைப்படுகிறது! அரசியவாதிகளின் அட்டூழியத்தை அடக்க வேறு வழியில்லை!
Re: வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும்
இந்திய இளைஞர் இந்திய நிலையை புரிந்துகொண்டிருப்பது நன்று .படிக்காதவர்களும் இந்திய சூழலை புரியும் காலம் விரைவில் வரவேண்டும்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும்
தேசத்தை காப்பாற்ற ஒரு அந்நியன் தேவை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும்
இந்தியா முழுவதும் மக்கள் புரட்சி கண்டிப்பாக ஏற்பட்டால் தான் இவர்கள் எல்லாரையும் அடக்க முடியும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» தமிழகத்திலும் வரட்டும் தடை
» புருஷன் வரட்டும்!
» கதவைத் திற… காற்று வரட்டும்!
» கதவைதிற காற்று வரட்டும் -
» ரிசல்ட் வரட்டும், வச்சிக்கிறேன்…!!
» புருஷன் வரட்டும்!
» கதவைத் திற… காற்று வரட்டும்!
» கதவைதிற காற்று வரட்டும் -
» ரிசல்ட் வரட்டும், வச்சிக்கிறேன்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|