ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

+22
முனைவர் ம.ரமேஷ்
krishnaamma
ஜாஹீதாபானு
N.S.Mani
ayyasamy ram
ப்ரியா
கலைவேந்தன்
தண்டாயுதபாணி
இளமாறன்
Manik
BPL
செந்தில்
அப்புகுட்டி
ரூபன்
மீனு
reachegopal
VIJAY
பாலாஜி
thesa
gv.raj
ramesh.vait
சிவா
26 posters

Page 6 of 24 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 24  Next

Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Empty ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?


அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by VIJAY Wed Aug 19, 2009 2:59 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Fri Aug 28, 2009 12:41 am

சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்தில் தமிழ்மொழி எப்படிப் பேசப்பட்டது ? மன்னர்கள் எப்படித் தமிழ் பேசினார்கள் ? எல்லோரும் சாதாரணமாகப் படிக்க முடியுமா ?

இதில் என்ன சந்தேகம்?! எல்லோரும் தமிழில்தான் பேசினார்கள். கரிகால் சோழன் காலத்தில் மேலும் தூய தமிழில் உரையாடி இருக்க வேண்டும். போகப்போக, வடமொழியின் ஊடுருவல் நிகழ்ந்து தமிழில் கலப்படம் ஏற்பட்டது. பிற்காலச் சோழர்கள் தமிழுக்குள் ஊடுருவிவிட்ட சமஸ்க்ருத்தையும் வார்த்தைகள் கலந்த தமிழில் பேசினார்கள் ! ( அட்சரம், ஆகாசம், ஹாஸ்யம் போன்ற சமஸ்க்கருத் தமிழ் வார்த்தைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூடப் பயன்படுத்தப்பட்டன.) எத்தனை தமிழ்ப்பாடல்கள் பண்டைய தமிழ் மன்னர்களைப் போற்றிப் பாடப்பட்டன. சோழர்களின் ஆட்சியில் நடந்த பெருமையான நிகழ்ச்சிகளை விளக்கிச் சொல்லும் ""மெய்க்கீர்த்திகள்'' இனிய தமிழ் அகற்பால்வில்' பொறிக்கப்பட்டதாக தமிழ் வரலாற்று மேதை கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். ஆனால், அகம்-புறம் பாடல்களை இப்போது படிக்கும்போது சாமான்யர்களாகிய நமக்கு அர்த்தம் புரிய சிரமமாகவே இருக்கிறது. கரிகால் சோழனைப் போற்றி ஒரு புலவர் பாடுகிறார்...

குறும்பறை பயற்றுஞ்
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் - ( அகம் )


( அதாவது, மலைகள்மீது ஆடுகளை மேய்க்கும் குறும்பர் குடும்பங்களை கரிகால் சோழன் ஆதரவோடு காப்பாற்றியது பற்றிய பாடல் இது !'' கரிகால் சோழன் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு தலையாட்டினாரா என்று நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Fri Aug 28, 2009 12:43 am

மனைவியே பல பேருக்கு எதிரி போல் வாய்த்து விடுவதற்கு முக்கியக் காரம் என்ன ?

சம்பிரதாய அணுகுமுறைப்படி மனைவியைத் தேர்ந்தெடுப்பது என்பது - தானாகவே நிகழ்கிற, எதிர்பாராத விதியை அல்லது அதிர்ஷ்டத்தைப் பொறுத்த ஒரு விஷயம். ஒரு பெரிய பானையில் வைரங்கள், முத்துக்கள், தேள், பாம்பு எல்லாம் போடப்பட்டு இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு கரண்டியை உள்ளே விட்டு எதையாவது எடுக்க வேண்டும் என்றால், கரண்டியில் வருவது வைரமாகவும் இருக்கலாம், பாம்பாகவும் இருக்கலாம் இல்லையா ?!! ரேண்டம் சாய்ஸ் ! ஆகவேதான், நீங்கள் சொல்வது போல சிலர் அமைந்து விடுகிறார்கள். இது கணவனைத் தேர்வு செய்வதிலும் நிகழலாம். ""தேமே'' என்று சாதுவாகத் தோற்றம் அளிக்கும் மணமகன் ஒரு கொடூரமான ""சாடிஸ்ட்'' என்பது பிற்பாடு தெரிய வருவதும் நிறையவே நடக்கிறது. இல்லையா?!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Fri Aug 28, 2009 12:43 am

இலங்கையை முழுமையாக இதற்கு முன்னர் எந்தத் தமிழ் மன்னராவது அரசாண்டது உண்டா ?

ஆகா ! ராஜராஜசோழனின் புகழ்பெற்ற கப்பற்படை ஈழத்தைச் சுலபமாகவே வென்றது. சிங்கள மன்னன் ( ஐந்தாம் ) மகிந்தன் தப்பி ஓடி காட்டுக்குள் ஒளிந்து கொண்டான். ஈழத்தின் பல கிராமங்களை ( கிபி.1014-ல்) ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலுக்குத் தானமாகக் கொடுத்தார். ஈழத்துக்கு ""மும்மூடிச் சோழ மண்டலம்'' என்று புதிய பெயர் வைக்கப்பட்டது. அனுராதபுரம் அருகில் உள்ள பொலன்னுறுவை என்னும் ஊர் சோழர்களின் தலைநகரம் ஆனது. அங்கே பெரிய சிவாலயம் ஒன்றைக் கட்டினார் ராஜராஜன் (இன்றும் அது உள்ளது ) இருப்பினும், இலங்கையின் தென் கிழக்கில் இருந்த ரோகண நாட்டை மட்டும் ராஜராஜனால் கைப்பற்ற முடியவில்லை.

கிபி.1017-ல் ராஜராஜனின் மகனான ராஜேந்திரன் ஈழ நாட்டை( ரோகணம் உட்பட) முழுவதுமாகக் கைப்பற்றினார். சிங்களர்களின் "" மகாவம்சம்'' கூட இதை ஒப்புக் கொள்கிறது. கூடவே, ""சோழர்களின் படை மிகவும் கொடூரமாக நடந்துகொண்டு எல்லாச் செல்வங்களையும் கொள்ளை அடித்ததாகவும் ""மகாவம்சம்'' குற்றம் சாட்டுகிறது. ( இது எல்லாம் சரி, தமிழ்நாட்டின் பல பகுதிகளை வென்ற சிங்கள மன்னர்கர்களும் உண்டு! )
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Fri Aug 28, 2009 12:45 am

பண்டைய ராஜாக்கள் போரில் ஈடுபடும்போது தொடர்ந்து போரிட்டுக்கொண்டே இருப்பார்களா அல்லது உணவு இடைவேளைக்கு எல்லாம் ப்ரேக் எடுத்துக் கொள்வார்களா ?
.
காலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மன்னர்கள் போரிட்டு இருக்க வாய்ப்பு இல்லை. காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு களத்தில் குதித்து, மாலையில் இருட்டுவதற்குள் அன்றைய போரை முடித்துக் கொண்டு, இரவு கூடாரங்களில் அமர்ந்து நன்றாகச் சாப்பிடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன். போரின் போது குதிரையில் தண்ணீர்ப் பானைகள் கூடவே சென்று இருக்கும். ( கிரிக்கெட் மேட்ச் மாதிரிதான் !) ஆனால், மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் மட்டும் குதிரைகளை தண்ணீர் குடிக்கக்கூட நிறுத்தக் கூடாது என்று தன் வீரர்களுக்கு ஆணையிட்டு இருந்தான். தாகம் எடுத்தால் குதிரையை ஓட்டிக்கொண்டு இருக்கும்போதே அதன் கழுத்தில் லேசாகக் குறுவாளால் கீறி, சுரக்கும் ரத்தத்தை உறிஞ்சி வாயை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Fri Aug 28, 2009 12:46 am

இந்திய அரசியல் ஏன் கூவம் நதி போல் ஆகி விட்டது ?

அரசியல் கூவம் ஒரு காலத்தில் தெளிவாக, நன்றாகத்தான் இருந்தது. பிறகு மெள்ள அசுத்தமான, கழிவுப் பொருட்களான அரசியல்வாதிகள் அதில் கலந்ததால் இப்படி ஒரு கேள்வியை நீங்கள் கேட்கும்படி ஆகிவிட்டது !


சென்னையைச் சுற்றி உள்ள (தாம்பரம், பூந்தமல்லி, வேளச்சேரி ) வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சியா, இல்லை அழிவுக்கான வளர்ச்சியா ?

தவிர்க்க முடியாத வளர்ச்சி, மொகலாயர்கள் ஆண்ட போது நியூடெல்லி கிடையாது. பிற்பாடு கட்டப்பட்டது. அதேபோல ( இடப்பற்றாக்குறை காரணமாக) எதிர்காலத்தில் இரண்டு மூன்று சென்னைகள் உருவாகும். ஆனால், தொடர்ந்து கொசு கடிக்கும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by reachegopal Fri Aug 28, 2009 1:24 am

அன்ப சிவா, உங்களிடம் ஒரு கேள்வி, இது திரைப்படத் தொடர்புடையது. கே.பாலசந்தரின் பட்டிணப்பிரவேசம் என்ற படம் 1977ல் வந்தது, அப்படத்தில் வரும் வான் நிலா பாடல் பிரபலமானது என்பதும் உங்களுக்கு தெரியும். அப்படத்தில் வேறு இரண்டு பாடல்கள் உண்டு, அதில் ஒன்று எம்.ஸ்.விசுவநாதனில் குரலில் இருக்கும் என்று நினைக்கிறேன். அது என்னபாடல் என்றும், அப்பாடல் எங்கு கிடைக்கும் என்றால் உதவியாக இருக்கும். நன்றி.....
avatar
reachegopal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 22/08/2009

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Tue Sep 15, 2009 10:25 am

அளவுக்கு அதிகமாக மழை பெய்தால், ஊர் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சி தருகிறது என்று சொல்கிறார்களே... நாட்டில் மழை பெய்தால் காட்டை ஏன் இழக்க வேண்டும்?

காடு என்பதற்கு அடிப்படையான அர்த்தமே அளவுக்கு அதிகமான (மிகுதி,) என்பதுதான். உதாரணமாக, இறந்தவர்களின் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கும் இடத்தைக்கூட இடுகாடு என்கிறோம்.

காகம் தன் பெயரின் முதல் எழுத்தைச் சொல்லி கா... கா எனக் கத்துகிறது. கிளியும் அவ்விதமே கி.. கி என்றும், கோழி கோ... கோ என்றும், குயில் கு... கு... என்றும் மாடு மா... என்றும் குரல் கொடுக்கிறதே, அது எப்படி?

காகா, கிகி. கோகோ, குகு, மா... மா என்று அதுகள் எழுப்புகிற சத்தத்தை வைத்துத்தானுங்க மனிதன் அப்படிப் பெயர்களையே சூட்டியிருக்க வேண்டும்!


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Tue Sep 15, 2009 10:26 am

அகழ்வாராய்ச்சிகளில் தங்கம், வைரம் போன்றவை கிடைக்காமல், மண்பாண்டங்கள் மட்டுமே அதிகம் கிடைப்பதேன்?

பண்டைய நாகரிங்களில் மனிதர்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தியது, மண்பாண்டங்களைத்தான். தங்கம், வைரம், எல்லாம் குறைவாகத்தான் இருக்கும். ஆகவேதான், எல்லா அகழ்வாராய்ச்சிகளிலும் மண்பாண்டங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. அதுவே 1922ம் ஆண்டு எகிப்திய பாரோ மன்னன் ட்யூடான்கெமனின் கல்லறையை ஹொவார்டு கார்ட்டர் என்கிற அகழ்வாராய்ச்சியாளரின் தலைமையில் ஒரு குழு தோண்டி எடுத்தபோது, தங்கத்தால் இழைக்கப்பட்ட பெட்டியில் ட்யூடான்கெமனின் உடலும், கூடவே மலையளவு தங்க, வைடூரிய முத்து, பவளக் குவியலும் கிடைத்தது. சுத்தத் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட மன்னரின் உடற்கவசம் (2.500 பவுண்டு எடை) கின்னஸ் புத்தகத்தில் தங்கத்தினால் ஆன ஒரே மிகப் பெரிய பொருளாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஸோ எங்கு (அதிர்ஷ்டவசமாக) தோண்டுகிறீர்கள் என்பதில் தான் விஷயம் இருக்கிறது.


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Tue Sep 15, 2009 10:27 am

காதலித்த பெண்ணுக்குத் திருமணம் ஆன பின்பும் அவரோடு நட்பைத் தொடரலாமா?

யாருடன் திருமணம் என்பதைப் பொறுத்தது, உங்களுடன் என்றால், தாராளமாக நட்பைத் தொடரலாம். (நட்பைக் கொச்சைப்படுத்துகிறீர்களே? என்று இளம் வாசகர் பாய வேண்டாம். ஏதோ... கொஞ்சம் பிராக்டிகளாகச் சொன்னேனாக்கும்!)


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 6 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 24 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum