புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
92 Posts - 61%
heezulia
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
1 Post - 1%
viyasan
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
19 Posts - 3%
prajai
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரமே மகேசன் Poll_c10மரமே மகேசன் Poll_m10மரமே மகேசன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரமே மகேசன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 15, 2012 6:41 pm


மரங்கள் சூழ்ந்த வனங்களிடையே இறைவன் கோவில் கொண்டிருக்கிறான். நாளடைவில் அவ்வகை மரங்களின் எண்ணிக்கை குறைந்து, அக்கோவில்களில் தல விருட்சமாகப் பாதுகாக்கப்பட்டு, காலம்காலமாக வழிபடப்பட்டு வருகின்றது.

கடம்பவனம் என்று மதுரையும், தில்லைவனம் என்று சிதம்பரமும், முல்லைவனம் என்று திருக்கருக்காவுரும், பாதிரிவனம் என்று அவள்இவள் நல்லூரும், வன்னிவனம் என்று அரதைப்பெரும்பாழி என்றழைக்கப்படும் அரித்துவாரமங்களமும், புள்ளைவனம் எனும் ஆலங்குடியும், வில்வவனம் எனும் திருக்கொள்ளம்புதூரும் இதற்கு உதாரணமாக விளங்குகின்றன.



இறைவனும் அதற்கேற்றாற் போல முல்லைவனேசுவரர், வில்வவனேசுவரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். மரங்களின் அடியில் விநாயகர், கிராம தேவதைகள் போன்றவர்களின் சிலைகளை வைத்து, நாவலடியார், வேம்படியார், பனையடியார் என்றும் ஆங்காங்கே கும்பிடுகிறார்கள்.

சிவபெருமானின் இன்னொரு உருவமான தட்சணாமூர்த்தி சுவாமி கல் ஆன மரத்தின் அடியில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் வேதப் பொருட்களை சின்முத்திரை மூலம் உணர்த்துவதை

`கல்ஆலின் புடையமர்ந்து நான்மறை ஆரங்கம்
முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும்'
என்று

திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதிமுனிவர் கூறுவதுபோல எல்லா சிவன் கோவில் கோஷ்டங்களிலும் தென்முகமாக ஆலமார்ச் செல்வன் என்னும் தட்சணா மூர்த்தி, குருமூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.



மரமே மகேசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 15, 2012 6:43 pm

மரமே மகேசன்

ஆனால், மரமே இறைவனாக, மரத்தின் அடியே மகேசுவரனாக உள்ள இடம் பொய்கை நல்லூர் என்றழைக்கப்படும் பரக்கலக்கோட்டை ஆகும். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து 12 கிலோ மீட்டர் கிழக்கே முத்துப்பேட்டை சாலையில் பாட்டுவனாட்சி ஆற்றின் கீழ்கரையில் தான் இந்த அதிசயத்தலம் உள்ளது.

தலம் என்றதும் பிரமாண்டமான ராஜகோபுரமோ, பெரிய கர்ப்பக்கிரகமோ, கல்மண்டபங்களோ இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம்.

இயற்கையோடு இயைந்த இறைவன் மிகப்பழைய, பரந்து விரிந்த வெள் ஆலமரத்தின் அடியிலேயே இருக்கிறான்.

மரத்தடியில் சிவலிங்கம் போன்ற சிலைகளோ, சாமி உருவங்களோ கிடையாது. ஏனெனில் இங்கு மரமே மூர்த்தி, மரமே கருவறை, மரமே கோவில், மரமே தலவிருட்சம் ஆகிறது.

மரத்தடியில் எழுந்து வளைந்துள்ள வேரிலேயே தற்போது திருவாட்சி அமைத்து லிங்கம் போன்று அலங்கரித்து சிவஉருவம் காட்டியுள்ளனர். அதற்கு முன்னால் பித்தளை தகட்டுடன் கூடிய இரண்டு கதவுகளே அமைக்கப்பட்டுள்ளன. முன்புறம் ஒரு நந்தீசர் சிலை உருவம் வைக்கப்பட்டுள்ளது.

`பொது ஆவுடையார்' என்று தமிழிலும் `மத்திய புரீஸ்வரர்' என்று சமஸ்கிருதத்திலும் வழங்கப்பெறும் இறைவன் இங்கே எழுந்தருளிருப்பது பற்றிய புராணக்கதை ஒன்று வழங்கப்பட்டு வருகிறது.



மரமே மகேசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 15, 2012 6:43 pm

நள்ளிரவில் நடந்த நடுவர் மன்றம்

இல்லறத்தில் இருந்து சிவனை வழிபட்டு வந்தவர் வானுகோபர். துறவு கொண்டு சிவனை வணங்கி வந்தவர் மகாகோபர். இந்த இரு சிவபோகத் துறவிகளும், இறைவனை அடைய இல்லறமே ஏற்றது என்றும், துறவறமே ஏற்றது என்றும் தமக்குள் வாதிட்டுக் கொண்டு தில்லை அம்பலத்தில் நடனமிடும் இறைவனிடம் நீதி வேண்டினர்.

`தெற்கே பொய்கை நல்லூரில் உறங்கும்புளி, உறங்காப்புளி என்ற இரண்டு புளிய மரங்கள் இருக்கின்றன. அங்கே போய்க் காத்திருங்கள்' என்று இறைவன் அசரீரியாக உத்தரவிட்டான். அதன்பின்னர் கார்த்திகை சோமவாரம் என்று சொல்லப்படும் கார்த்திகை மாத திங்கட்கிழமையன்று தில்லையில் பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்ட பிறகு நள்ளிரவில் பொய்கை நல்லூரில் நடராஜப் பெருமாள் ஆலமரம் ஒன்றின் அடியில் தோன்றி வழக்காடு மன்றம் நடத்தினாராம்.

உள்ளத்தூய்மையோடு உண்மையான அன்போடு வழிப்பட்டால் இறைவனை துறவறத்தின் மூலமும் அடையலாம், இல்லறத்தின் மூலமும் அடையலாம் என்று மத்தியஸ்தம் செய்து, பொதுவான தீர்ப்பினை வழங்கிச் சென்றார். எனவே மத்தியபுரீஸ்வரர் என்றும் பொது ஆவுடையார் என்றும் இங்குள்ள இறைவன் வழங்கப்படுகிறார்.

அங்குள்ள திருக்குளத்தின் அருகே வீரசத்தி விநாயகரின் சிறிய கோவிலும், அருகே உள்ள புளியமரத்தடியில் நீலநிற மேனியராக அலங்கார வடிவில் இல்லறத்துறவி வான்கோபரும், சிவந்த மேனியராய் ஜடாமுடியுடன் மகாகோபர் என்ற தவநெறித் துறவியும் காட்சி தரும் சுதை சிற்பங்கள் விளங்குகின்றன.



மரமே மகேசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 15, 2012 6:44 pm

வினோதமான வழிபாட்டு நேரம்

உலகில் உள்ள மற்ற எல்லாக்கோவில் வழிபாட்டு நேரங்களிலும் முறைகளிலும் இருந்து இந்தக்கோவில் வேறுபட்டு விளங்குகிறது. பொதுவாக எல்லாக்கோவில்களிலும் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து பூஜைகளும் வழிபாடும் நடப்பது நாமறிந்த ஒன்று. ஆனால் - இங்கு ஒவ்வொரு சோமவாரமும் (திங்கட்கிழமை) இரவு 12 மணிக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. பிறகு நடை சாத்தப்படும். கார்த்திகை மாத சோமவார இரவு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

சரி, பகலில் வழிபாடு கிடையாதா?... உண்டு. ஆம், வருடத்தில் ஒரே ஒருநாள் அதுவும் சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் மகர சங்கராந்தி தினமான தைப்பொங்கல் அன்று மட்டும் பகலில் கோவில் திறந்திருக்கும் இரவில் பூட்டப்பட்டு விடும். கோவிலுக்கு வந்து கும்பிட்டுவிட்டு வீட்டில் பொங்கல் வைப்பதை பலர் கடமையாகக் கொண்டுள்ளனர்.

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கும் பொது ஆவுடையார் பொதுமக்களுக்கும் அனைத்து ஜீவராசிகட்கும் பொதுவானவர் அல்லவா?. எனவே திங்கட்கிழமை நள்ளிரவில் கூட வானந்திரப்பகுதியாக இருந்தும் இங்கே கூட்டம் அலைமோதுகிறது.

பொங்கலன்று பகல் நேரத்தில் பல கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்யும் மக்களின் அன்புதான் என்னே!

அதுமட்டுமா, ஒவ்வொருவரும் தங்கள் பிரார்த்தனைக்கேற்றப்படி மூட்டை மூட்டையாக நெல்லும், நவதானியங்களும், புளி, மாங்காய், தேங்காய், காய்கறி போன்ற விளைபொருட்களையும், ஆடு, மாடு, கோழிகளையும் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள் என்றால் இறைவனிடத்தில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அளவிட முடியுமா என்ன?

இந்த ஆலமரத்தின் இலைகளையே பிரசாதமாகக் கொண்டு சென்று தன் வீட்டு தானியக்குதிர்களிலும், பணப்பெட்டியிலும் வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.

எவ்வளவு இலைகளைப் பறித்தாலும் மீண்டும் துளிர்த்து விடுவதுதான் இந்த ஆலமரத்தின் அற்புதமாகும். கோவில் கட்டிடங்களுக்குள் கொலுவிருக்கும் கடவுளை விட்டு இயற்கையுடன் இணைந்திருக்கும் இறைவனை ஒருமுறையாவது தரிசித்துப் பேறு பெறலாமே.

தினத்தந்தி



மரமே மகேசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக