ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை

5 posters

Go down

இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Empty இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை

Post by சிவா Wed Oct 17, 2012 9:50 pm

இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Tamil_News_large_567634

"போராட்டம் நடத்துவதற்காக என் தொகுதிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சென்றால் திரும்பி வர முடியாது. இதுவரை பேனாவை பயன்படுத்தி தான் அமைச்சர் என்ற அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். இனி ரத்தத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலை வரப் போகிறது,'' என்று, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், கோபம் கொப்பளிக்க பேசியுள்ளார்.

மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து, கொலை மிரட்டல் விடுவது போல குர்ஷித் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய சட்ட அமைச்சர், சல்மான்குர்ஷித், உ.பி., மாநிலம் பரூக்காபாத்தில், தன் மனைவியுடன் இணைந்து அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு, உபகரணங்கள் வாங்கித் தரும் உதவிகளை செய்து வந்தனர்.

போராட்டம்

மத்திய சமூக நலத்துறை அமைச்சகத்திடம், 71 லட்ச ரூபாயை நிதியாக பெற்று, ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் செய்தி சேனல் ஒன்று, இந்த ஊழலை அம்பலப்படுத்தியது. ஊழலுக்கு எதிராக போராடி வரும் அரவிந்த் கெஜ்ரிவாலும், இந்த பிரச்னையை கையில் எடுத்து பிரச்னையை ஊதி பெரிதாக்கி விட்டார்.இதற்காக கடந்த வாரம் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்த கெஜ்ரிவால், மூன்று நாட்களுக்குள் முடித்துக் கொண்டார். இதே போராட்டத்தை, சல்மான் குர்ஷித்தின் சொந்த மாவட்டமான பரூக்காபாத்தில் மீண்டும் தொடரப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது.டில்லி குஷக் சாலையில் உள்ள தன் இல்லத்தில் அமைச்சர் சல்மான் குர்ஷித், நேற்று முன் தினம் இரவு தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அதில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவேசமாக பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:என் தொகுதியான பரூக்காபாத்திற்கு செல்ல, நான் விசா அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும் 300 கி.மீ., தூரத்தில் தான் உள்ளது. அங்கு போய், அரவிந்த் கெஜ்ரிவால் தாராளமாக ஆர்ப்பாட்டம் நடத்தட்டும். ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்... பரூக்காபாத்தில் இருந்து, திரும்பவும் டில்லிக்கு வர வேண்டும். இதை மறந்து விட வேண்டாம்.இதுவரைக்கும், நான் பேனாவை வைத்து பணி செய்து அமைச்சர் என்ற அளவுக்கு, வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறேன். இனி நான் ரத்தத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படப்போகிறது. இதுவரை நீ (அரவிந்த் கெஜ்ரிவால்) கேள்விகளாகவே கேட்டுக் கொண்டிருந்தாய். நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம். இனிமேல், நான் சொல்வதை கேட்டுக் கொண்டு பேசாமல் செல்ல வேண்டும். கேள்வி கேட்க வேண்டுமென்ற நினைப்பே, உனக்கு வரக் கூடாது.இவ்வாறு குர்ஷித் பேசினார்.

தன் இல்லத்தில் குர்ஷித் பேசியது, "மொபைல்போன்' கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படக்காட்சியை, "சகாரா' இந்தி சேனலிடம் கிடைத்து, அது ஒளிபரப்பானதும், பரபரப்பு பற்றிக் கொண்டது. மற்ற, "டிவி' சேனல்கள் அனைத்தும் நேற்று மதியத்துக்கு மேல், இந்த பேச்சை ஒளிபரப்பு செய்தன.

பரபரப்பு

ஏற்கனவே, இம்மாதம் 14ம் தேதி, டில்லியில் நிருபர்கள் சந்திப்பை குர்ஷித் நடத்தினார். அதுவும், பரபரப்பை ஏற்படுத்தியது.அறக்கட்டளை விவகாரத்தை ரகசிய கேமராவில் பதிவு செய்து அம்பலப்படுத்திய, "டிவி' சேனலை குர்ஷித் கடுமையாக எச்சரித்தார். குறிப்பிட்ட கேள்வியை முன்வைத்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் மிகவும் கோபப்பட்டார். ஒருகட்டத்தில் எழுந்து நின்று விட்டார்."நீங்கள், "பிரஸ் மீட்' நடத்துகிறீர்களா; இல்லை, நான் பிரஸ் மீட் நடத்துகிறேனா' எனக் கேட்டார். மிகுந்த விரக்தியில் இருந்த குர்ஷித், சம்பந்தப்பட்ட நிருபரை, "கெட் அவுட் ' என கூறினார். அவரது ஆதரவாளர்கள், நிருபர்களை மிரட்டினர்; ஏளனம் செய்தனர். கிட்டத்தட்ட முழுமையாக நடக்காமலேயே, நிருபர்கள் சந்திப்பு முடிந்தது. தற்போது,கோபத்தின் உச்சகட்டமாக, சல்மான் குர்ஷித் பேசியது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, குர்ஷித் பேச்சு பற்றி கூறுகையில், "இந்த பேச்சு மிகவும் ஆபத்தானது. இவ்வாறு சட்ட அமைச்சர் பேசியிருந்தால், அது மிகவும் கண்டனத்திற்குரியது,'' என்றார்.

"பயப்படமாட்டோம்':

தனக்கு மிரட்டல் விடுத்து, அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியது குறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்," சட்ட அமைச்சர் என்பதை, சல்மான் குர்ஷித் மறந்துவிட்டார்; இது நாட்டிற்கு நல்லதல்ல. சாதாரண மக்கள் மத்தியில் நிலவும் கோபத்தை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் உள்ளது என்பதையே, குர்ஷித்தின் பேச்சு காட்டுகிறது. நாங்கள் எதற்கும் பயப்படப் போவதில்லை. அறிவித்தபடி, நவம்பர் 1ம் தேதி, பரூக்காபாத்திற்கு சென்று, ஆர்ப்பாட்டம் நடத்துவோம்; இது உறுதி,'' என்றார்.

தினமலர்


இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Empty Re: இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை

Post by ramkumark5 Wed Oct 17, 2012 9:56 pm

அரசியல்'ல இதெல்லாம் சகஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... நாளைக்கு இவுங்களே கூட்டணி வச்சுக்கிட்டாலும் ஆச்சர்யபடுவதர்க்கில்லை...


உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Empty Re: இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை

Post by பிளேடு பக்கிரி Thu Oct 18, 2012 10:54 am

இப்படி தான் அமைச்சர் இருக்கணும்.. நாடு விளங்கிடும்



இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Empty Re: இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை

Post by அருண் Thu Oct 18, 2012 1:21 pm

சட்டத்துறை அமைச்சர் பேசுற பேச்சா இது..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Empty Re: இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை

Post by ALAGAPPANPALANIAPPAN Thu Oct 18, 2012 4:46 pm

சட்டம் வேடிக்கை பார்க்கிறதா?கொலை மிரட்டலில் வழக்கு பதிவு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ALAGAPPANPALANIAPPAN
ALAGAPPANPALANIAPPAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Empty Re: இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாக்களிக்க பணம்: கேஜரிவால் பேச்சால் சர்ச்சை
» விவசாயிகள் தற்கொலை ஃபேஷனாகிவிட்டது! பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை
» பரம்பரை குடிகாரர்கள் யார்? பா.ஜ., மந்திரி பேச்சால் சர்ச்சை
» ஹிந்துக்கள் 4 குழந்தைகள் பெற வேண்டும்! : ஹரித்வார் மடாதிபதி பேச்சால் சர்ச்சை
» ஆண்கள் டிஷ்யூ பேப்பர் மாதிரி! சோனா பேச்சால் சர்ச்சை!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum