புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
21 Posts - 84%
heezulia
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
2 Posts - 8%
viyasan
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
213 Posts - 42%
heezulia
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
21 Posts - 4%
prajai
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_m10  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா.....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 9:49 pm




அதிமுக தொண்டர்களைக் காப்பாற்ற தம்முடைய வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். தன்னிடம் சத்திய வாக்கினை பெற்றார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. 41-வது ஆண்டு தொடக்க விழாவை கோலாகலமாக கொண்டாட வேண்டுகோள் விடுத்து,அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதி உள்ள மடலில் கூறியிருப்பதாவது:

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!

நம் பொன்மனச் செம்மல் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40 ஆண்டுகள் நிறைவடைந்து, 41-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சியான தருணத்தில் இந்த மடல் வழியாக உங்களை சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அறநெறி சார்ந்த வாழ்வினை கைக்கொள்ளவேண்டும்; அடுத்தவர்களுக்கு பயன் தரும் வாழ்வை மேற்கொள்ளவேண்டும்; இயன்ற பொழுதில் எல்லாம், இயன்ற வகைகளில் எல்லாம் எளியோர்க்கு உதவ வேண்டும்; ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று தன் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்தே கொள்கை உறுதி கொண்டு வாழ்ந்த ஒப்பற்ற மனிதராம் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அன்புச் செல்வம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏன் தோற்றுவித்தார் என்பதை ஒரு நிமிடம் எண்ணிப் பார்ப்போம். பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்போடு தமிழக மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியாக, அவரை நம்பி திமுக-விற்கு தந்த தேர்தல் வெற்றியை, ஆட்சிப் பொறுப்பை, ஒரு சுயநலக் கும்பலின் தலைவனாகிய ஒரு தீய சக்தி தன் மனம் போனபடி ஆயுதமாக்கிக் கொண்டு தமிழகத்தை தனது வேட்டைக் காடாக மாற்றியது.

அண்ணா அவர்கள் தோற்றுவித்த இயக்கத்தை குடும்பச் சொத்தாக மாற்றிக் கொண்டது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து தூக்கி எறிந்தது. ஆனால், தமிழக மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை தங்கள் இதயத்தில் ஏந்திக் கொண்டார்கள்.


புதிய இயக்கம் கண்டு தங்களை வழிநடத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அனைத்துத் தரப்பினரும் விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்று 1972 -ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17-ஆம் நாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார்.

ஐந்து ஆண்டுகளில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை வென்றெடுத்தது. தன்னுடைய இயக்கமும், ஆட்சியும், மக்கள் இட்ட கட்டளையால் உருவான வரலாற்று நிகழ்வுகள் என்பதையும், இவற்றைக் கொண்டு தமிழக மக்களுக்கு எந்நாளும் பணியாற்ற வேண்டும் என்பதையும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தன் வாழ்நாள் முழுவதும் மனதில் கொண்டிருந்தார்.

திராவிட இயக்கக் கொள்கைகளை காக்கவும், அண்ணாவின் அரசியல் பணிகளை தொடர்ந்திடவும், தமிழக மக்கள் மீது தான் கொண்ட பேரன்பை செயல் வடிவில் காட்டி அவர்களுக்கான பணிகளை ஆற்றிடவும், தனக்கு பின் இயக்கத்தைக் கட்டிக் காக்கவும் ஒருவர் வேண்டும் என்பதற்காக என்னிடம், இந்த இயக்கத்திற்கு தலைமையேற்கும் தியாக உணர்வை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வளர்த்தார்.

தன்னுடைய தொண்டர்களைக் காப்பாற்ற நான் என்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் வைத்த கோரிக்கையாக இருந்தது. அதற்கான சத்திய வாக்கினை என்னிடம் அவர் பெற்றார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி இருந்த காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவருடைய உதவியாலும், கருணையாலும் வாழ்வும், வளமும் பெற்றவர்கள், தீயசக்திக்கு ஆதரவாகவும், இந்த இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். என்னை அழித்திடத் துடித்தனர்.

கழக உடன்பிறப்புகளாகிய உங்களை புரட்சித் தலைவரின் காலத்திற்கு பிறகு கட்டிக் காக்கவேண்டும்என்பதற்காகவே நான் என்னுடைய வாழ்வை கழகத்திற்காக, உங்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. இது நெருப்பாறு. இது வஞ்சகமும், சூழ்ச்சியும் கொண்டு நன்றி மறந்த பலரும் எழுதும் திரைக்கதை வசனங்கள் நிறைந்தது. இருப்பினும் இவைகளுக்கு அஞ்சி இந்தக் கடமையை கைவிட்டுவிடக்கூடாது என்பதை நான் பொது வாழ்வின் தொடக்கத்திலேயே புரிந்து கொண்டேன்.

புரட்சித் தலைவருக்கு நான் அளித்த வாக்குறுதியை என் மனசாட்சிக்கு சரியென்று தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றி வந்திருக்கிறேன் என்ற மன நிறைவும், நிம்மதியும் இந்த நாளில் எனக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது, தமிழகம் இந்திய அளவில் தலை நிமிர்ந்து முதலிடம் பெறும் நோக்கில் எண்ணற்ற திட்டங்களை நான் நிறைவேற்றி வருகிறேன்.

தமிழ்நாட்டில் புரட்சித் தலைவரும், உங்கள் அன்புச் சகோதரியாகிய நானும் அமல்படுத்திய பல திட்டங்கள் இன்றைக்கு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. ‘மக்கள் பணியே மகேசன் பணி’ என்ற அண்ணாவின் அறிவுரையின்படி ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத் திட்டங்களை நான் செயல்படுத்தி வருகிறேன். எனக்கு எந்த சுயநல நோக்கமும் கிடையாது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன்.

எனவேதான் ‘உங்களுக்காக நான், உங்களால் நான்’ என்பதை என் வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கிறேன். இந்த நாட்டையே சூறையாடும் வண்ணம் பல்வேறு துறைகளில் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்தவர்களையும், தேச அரங்கில் தமிழகம் தலைகுனியும் வகையில் வரலாறு கண்டிராத ஊழல்களில் ஈடுபட்டவர்களையும், முன்னேற்றப் பாதையில் தமிழகம் செல்ல முடியாத வகையில் முட்டுக்கட்டை போட்டவர்களையும் மக்கள் தேர்தல் களத்தில் புறக்கணித்தார்கள்.

மக்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பிலும், பேராசையிலும் தீய சக்திகள் மீண்டும் தலை தூக்க முயற்சிக்கின்றன. தமிழக மக்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்த உண்மை.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகளையும், மக்கள் நலப் பணிகளையும் மனதில் கொண்டு மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை தமிழக மக்கள் என்னிடம் வழங்கி இருக்கின்றார்கள். இன்னும் பல வெற்றிப் பரிசுகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை நன்றியோடு உணர்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் சத்துணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி உதவி, பல லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம், ஏழை எளிய பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற நலத் திட்டங்கள், பசுமை வீடுகள் திட்டம், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புரட்சிகர திட்டங்கள், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தை எல்லோரும் பெற்றிட உலக அதிசயமாய் விலையில்லா மடிக்கணினி என்று பல முன்னோடித் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இது தொடரும்;

இவற்றின் வழியாக தமிழக மக்களின் வாழ்வு மலரும்; அதற்கு என்னுடைய ஆட்சி எந்நாளும் துணை நிற்கும் என்ற உறுதிமொழியை இந்த நல்ல நாளில் உங்கள் வாயிலாக தமிழக மக்களுக்கு அளிக்கிறேன். இந்த நன்னாளில் ஈட்டிய வெற்றிகளின் எண்ணிக்கையையும், நாம் எதிர் கொண்டு சாய்த்திட்ட எதிரிகளின் கணக்கையும் கூட்டிப்பார்த்து பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், இந்த ஒப்பற்ற இயக்கத்தின் வளர்ச்சிக்காக தங்கள் வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி உழைத்திட்ட செயல்வீரர்களையும், வீராங்கனைகளையும், கழகத் தொண்டாற்றிய காலத்திலேயே தங்கள் விலை மதிப்பற்ற உயிரையும் நீத்திட்ட உத்தமத் தொண்டர்களின் உயரிய தியாகங்களையும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்கிறேன்.

எத்தகைய உயர்ந்த நோக் கங்களுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டதோ; எத்தகைய எதிர்பார்ப்புகளோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரித்து வளர்த்து வருகின்றார்களோ; அவற்றிற்கு உண்மையாக விளங்கும் வகையில் தொடர்ந்து கழக உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகளே!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 41-ஆவது ஆண்டு தொடக்க விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி அளவிலும்; இவைகளுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டங்களிலும் ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கொடிக் கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி கழகக் கொடியினை ஏற்றி வைத்து, விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நன்றி தமிழ் source

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 17, 2012 8:50 am

வாழ்க அம்மா ஜெயல்லிதா,
வாத்தியார மறக்காமல் இருக்க இப்படி ஒரு பிட்டை போட்டதற்கு மிக்க நன்றி.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 1:42 pm

என்னத்த சொல்ல ..போங்கப்பா போரடிக்குது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Oct 17, 2012 2:30 pm

ஒருத்தருக்கு இந்த முதல்வர் பதவி முள் கிரீடம்...
இப்ப இவருக்கு ஒரு பொண்ணா ஏராளமான கஷ்டமாம்...
யாரு உங்கள வீட்டுக்கு வந்து வெத்தல பாக்கு வெச்சு அழைச்சாங்க?...
சும்மா...ஆ ஊ -ன்னா அப்படியே பெர்பார்மன்ச போட்டு இந்த இளிச்சவாய் ஜனங்கள ஏச்சிப் பொழைக்கிறதே வேலையா போச்சு...
இந்த மானம் கெட்ட ஜென்மங்களுக்கும் இது பழகிப் போச்சு...
அட போங்கப்பா.... அநியாயம் என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ!




  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... 224747944

  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... R  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... A  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Empty  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... R  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2012 3:01 pm

ரா.ரா3275 wrote:ஒருத்தருக்கு இந்த முதல்வர் பதவி முள் கிரீடம்...
இப்ப இவருக்கு ஒரு பொண்ணா ஏராளமான கஷ்டமாம்...
யாரு உங்கள வீட்டுக்கு வந்து வெத்தல பாக்கு வெச்சு அழைச்சாங்க?...
சும்மா...ஆ ஊ -ன்னா அப்படியே பெர்பார்மன்ச போட்டு இந்த இளிச்சவாய் ஜனங்கள ஏச்சிப் பொழைக்கிறதே வேலையா போச்சு...
இந்த மானம் கெட்ட ஜென்மங்களுக்கும் இது பழகிப் போச்சு...
அட போங்கப்பா.... அநியாயம் என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ!

உங்கள் கோபம் சரியானதே!



  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Oct 17, 2012 3:37 pm

  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... Obama20vs20jayalalitha

  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா..... 2011rj



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக