புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
31 Posts - 49%
heezulia
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
1 Post - 2%
Abiraj_26
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
1 Post - 2%
mini
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
388 Posts - 58%
heezulia
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
20 Posts - 3%
prajai
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
5 Posts - 1%
mini
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_m10அன்புள்ள அண்ணனுக்கு... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அண்ணனுக்கு...


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 17, 2012 11:45 am

எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்

அண்ணா...
எப்படி இருகிறாய்..?

பார்த்து பேசி பனிரெண்டு
மாதங்கள் ஆகிப்போயின..
நலமாக இருக்கிறாயா..?

சொர்க்கம், நரகம்
என்றெல்லாம்
சொல்கிறார்களே
நீ எங்கு இருகிறாய்..?

ஊருக்கே நல்லவனாயிற்றே
நீ எப்படி நரகத்தில் இருப்பாய்..!?

எத்தனை மருந்திட்டாலும்
எதையும் மறக்க முடியவில்லை
அண்ணா...

உன்னோடு நான் பிறந்த ஊர்
நம் இருவரையும் பெற்றெடுத்த தாய்
இருவரும் சேர்ந்து உணவு
உட்கொண்ட வட்டில்
நாம் ஒன்றாக ஊர்சுற்றிய நாட்கள்

பள்ளிப் பருவத்தில்..
நடந்து என் கால் வலிக்கும் நேரம்,
குதிரையாய் மாறிய நீ
பொதியாய் மாறிய நான்

எனக்கு உடல் நிலை
சரியில்லையாயின்
துடித்துப் போகும்
உன் மனது

எனக்காக மற்றவர்களிடம்
நீ சண்டையிட்ட தருணங்கள்

நாம் இருவரும் போட்டுக்
கொண்ட ஒரு நாள் சண்டை

அதன் விளைவாக
என் உடலோடு இன்றும்
ஒட்டிகொண்டிருக்கும்
ஒற்றைத் தழும்பு

இவ்வுலகில்
நினைவிழந்து நீ வாழ்ந்த
இரண்டு நாட்கள்

உன் உயிர்(என் உயிர்) இந்த உலகைப்
பிரிந்த அந்த கொடிய நொடிப் பொழுது

விறகின் மேல் வீற்றிருந்த நீ..
உனது நெற்றியில்
நான் கொடுத்த கடைசி முத்தம்

உன் உடல் நெருப்பிற்கு
இரையான வேலையில்..,
நான் உருண்டு புரண்ட
அந்த மயானக் காடு

உனைப் பிரிந்த இரவுகளில்
எனது ஓலங்கள்

உனது நினைவுகள் மட்டுமே
நிறைந்து கிடக்கும் நமது வீடு

எதையும் மறக்க
முடியவில்லை அண்ணா..!

ஊமையின் கனவுகளாய்
அத்தனையும் என் நினைவுகளில்..

சிலமுறை காற்றோடு
தேடித் பார்க்கிறேன்
கைகளுக்கு அகப்படுவாயென..!

அந்த கோர விபத்து
நமது வாழ்கையின்
திசைகளைத்
திருப்பிப் போட்டது...

அது ஆயிரம் விடயங்களை
எனக்கு கற்றும் கொடுத்தது..

இவ்வுலகில் விபத்திற்கு
ஏதும் விபத்து வராதா..?

நீ விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து
விமான நிலையம் நோக்கி ஓடிய எனக்கு
திருவிழாக் கூட்டமாய் இருந்த அந்த இடம்,
ஏனோ மேகமில்லா வானமாய்
வெறிச்சோடித்தான் தெரிந்தது

வாழ்க்கையில் இத்தனை
மணிப் பொழுதுகள்
எதற்காகவும் என் கண்ணீர்த்
துளிகள் கரைந்ததாய்
எனக்கு ஞாபகம் இல்லை..

இருந்தும்...

எப்படியும் உனைக் காப்பாற்ற
முடியும் என்ற நம்பிக்கையில்,
விமானம் ஏறி அமர்ந்து விட்டு
அதை இன்னும் வேகமாகச் செல்லச்
சொல்லி மனம் பரிதவித்தது...

தட்டுத் தடுமாறி
உன்னை அடைந்தேன்..

ஆனால்,
நீ என்னைப் பார்க்கமுடியவில்லை
நான் உன்னோடு பேசமுடியவில்லை

நடப்பதறியாது,
மற்றவரோடு பேசாது,
வாழ்நாளில் நீ
மௌனம் காத்த நாட்கள்,
அந்த இரண்டு நாட்களாகத்தான்
இருக்கும்...

இவ்வுலகில்..
தாங்க முடியாத வலிகளில் ஒன்று..,
உயிராய் நேசிப்பவரின் உயிர்
நேசிப்பவர் கண்முன்னே பிரிவது...

அந்த கொடிய வலியையும்
எனக்கு கொடுத்து விட்டாய்..!

உனை...
இந்த மண் எடுத்துக்கொண்ட நாளில்
இனி வாழ்ந்து பயனேது என்றெண்ணி,

தற்கொலை முயற்சிக்கும்
தயாரானேன் - இருந்தும்
தவிர்த்து விட்டேன்..

என்ன செய்வது...

இன்று நீ இல்லை
நம்மைப் பெற்றோருக்கு
என்னை விட்டால்
வேறு நாதி இல்லை...

26 ஆண்டுகள்
உன்னோடு வாழ்ந்த வீட்டில்..,
இன்று 26 நிமிடங்களும்
இமயமாய்ப் போனது...

உனைப் பிரிந்த நாட்களில்
சிரிக்கப் பழகிக் கொண்டேன்.

சொல்லப் போனால்..
உண்மையை மறைக்கப்
பழகிக் கொண்டேன்..

என்னைத் தவிக்க விட்டுப் போனாய்
பரவாயில்லை..
ஒரு பெண்ணையும் தவிக்க
விட்டுப் போனாயே..!

நிரந்தரமாகப் பிரிவைக் கொடுத்து
விட்டோம் என்று - நீ
நினைத்துக் கொள்ளாதே

என் நாடித் துடிப்பின்
கடைசி நொடிப் பொழுதும்
உன் நினைவுகளில் நானிருப்பேன்
என் நிழலிலும் நீ இருப்பாய்

உயிர் பிரிந்த பின்னும்
என் ஆன்மா உன் நினைவுகளை
அசை போட்டிக் கொண்டிருக்கும்..!

மறு ஜென்மம் இருப்பது
உண்மையானால்..,

நீ இப்போதே பிறந்து விடாதே
முதலில் நான் இறந்து விடுகிறேன்..

பின்பு..
அதே வயிற்றில்
மீண்டும் பிறப்போம்

நீ அண்ணனாக
நான் தம்பியாக..!

எனது அன்புச் சகோதரனின் முதலாம் ஆண்டு
நினைவு நாளிற்காக (18/8/12) எழுதியது

அன்புள்ள அண்ணனுக்கு... Brotherr


Photography by Agal



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 17, 2012 11:52 am

அண்ணனை இழந்து தவிக்கும் உங்களுக்கு சமாதான உண்டாகட்டும். வாழ்க்கை என்னும் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போமாக. இழப்பு என்பது இன்றியமையாதது என்பதை மனதில் வைக்கவும்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Oct 17, 2012 12:40 pm

அய்யா சொன்னதுதான் உண்மை...இழப்பு என்பது இயற்கை...தவிர்க்க இயலாதது...
அதே வேளையில் அவ்விழப்பிற்காய் இதயம் துடித்தழுவதும் இயற்கை...இதையும் தவிர்க்க
இயலாது...ஏற்கக் கூடியவர்களுக்கே இறைவன் இழப்பையும் கஷ்டத்தையும் அவன் இஷ்டத்துக்கு ஏற்றுகிறான்...

ஏற்போம்...அவன் ஏற்றும் வரை...ஓர் நாள் அவனே அதை இறக்குவான்...

நல்ல இழப்புணர்வு அகல்...



அன்புள்ள அண்ணனுக்கு... 224747944

அன்புள்ள அண்ணனுக்கு... Rஅன்புள்ள அண்ணனுக்கு... Aஅன்புள்ள அண்ணனுக்கு... Emptyஅன்புள்ள அண்ணனுக்கு... Rஅன்புள்ள அண்ணனுக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:49 pm

வருத்தம் தொனிக்கும் பாச வரிகள்
மனதை கலக்கி விட்டது அகல்

நிலையான உறவு என்று ஒன்றுமே இல்லை
ஏனெனில் நாம் இருப்பதும் நிலை அல்லவே

உங்கள் சோகத்தை பங்கிட நாங்கள் இருக்கிறோம்
அண்ணன் சாதிக்க நினைத்ததை சேர்த்து சாதிக்கும்
பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது - மறக்க வேண்டாம்




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Oct 17, 2012 12:52 pm

உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியிலும்
பிரிவின் வலியை நன்கு உணரமுடிகிறது.


avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 12:54 pm

ரா ரா அண்ணனையும் , இனியவன் அண்ணனையும் , தயாளன் அய்யா சொன்னதையும் வழிமொழிகிறேன்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 17, 2012 2:11 pm

உங்கள் அன்பிற்கு எனது நன்றிகள் ஐயா தயாளன், ரா.ரா, யினியவன், முரளிராஜா, புரட்சி... தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே.. கண்டிப்பாக அந்த பொறுப்பை மறக்கமாட்டேன் இனியன் அண்ணா...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 17, 2012 3:34 pm

மனதை உருக்கி கண்ணில் நீரை வரவைத்து விட்டது இந்த பாச வரிகள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 17, 2012 3:43 pm

நல்ல கவிதை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 17, 2012 7:08 pm

ஜாஹீதாபானு wrote:மனதை உருக்கி கண்ணில் நீரை வரவைத்து விட்டது இந்த பாச வரிகள்
நான் எந்த ஒரு வரியையும் மிகைபடுத்தி எழுதவில்லை.. உங்களின் அன்பிற்கு எனது நன்றிகள் ஜாஹீதாபானு, Manik ...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக