Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன?
Page 1 of 1
டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன?
""தமிழகத்தில், கடந்த 10 நாட்களில், டெங்குவால் 5 பேர் மட்டுமே இறந்துள்ளனர். 200 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் கூறியுள்ளார். ஆனால், தமிழகம் முழுவதும் வரும் தகவல்கள் வேறுமாதிரியாக உள்ளன.
சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில்,நிருபர்களிடம் அமைச்சர் விஜய் கூறியதாவது: டெங்குவால் கடந்த 10 நாட்களில் வேலூரில் இருவர், மதுரையில் ஒருவர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருவர் என, 5 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 120 பேர் குழந்தைகள், 80 பேர் பெரியவர்கள் அவர்களுக்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளே காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
ஸ்டான்லியில் 16 பேர்:
ஸ்டான்லியில் இரண்டு ஆண்கள் உட்பட ஆறு பெரியவர்களும் குழந்தைகள் பத்து பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தகுந்த சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.டெங்கு தொடர்பாக, வீண் பீதியை கிளப்பி வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் ரத்த அணுக்கள் சேகரிப்பு உள்ளிட்ட அனைத்து போதிய வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறன்றன. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், டெங்குவால் உயிரிழந்தார் என்ற நிலை இல்லை; அதற்கு நான் பொறுப்பு.இவ்வாறு விஜய் கூறினார்.
சென்னையில்:
சின்னகாஞ்சிபுரம், சி.என். செட்டி தெருவைச் சேர்ந்தவர் ஜெயினுல்லா பாதீன். வேலூர் மாவட்டம், ஒச்சேரியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் பவுசியா, 7. காய்ச்சல் காரணமாக, இம்மாதம், 12ம் தேதி, சென்னை, எழும்பூர், குழந்தைகள் நல மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, சிறுமி பவுசியா, நேற்று காலை இறந்தார்.சிறுமியின் இறப்பு குறித்து, மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ""சிறுமிக்கு, "டெங்கு' அறிகுறிகள் இருந்ததால், அதை உறுதிபடுத்துவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் முடிவுகள் இன்று(நேற்று) தெரியவரும். அதன்பின் தான், சிறுமியின் இறப்புக்கான காரணத்தை கூற முடியும்,'' என்றனர்.பவுசியாவுடன் சேர்த்து, கடந்த ஒரு வாரத்தில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, நான்கு பேர் இறந்துள்ளனர். இவர்களில் இருவர், சிறுமியர்.
நல்லகண்ணு மனைவிக்கு டெங்கு?
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு. இவரின் மனைவி ரஞ்சிதம், 77. காய்ச்சல் காரணமாக, சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில், நேற்று, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, டெங்கு காய்ச்சலை உறுதி செய்தவற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம், கூடலூர் காந்திநகரை சேர்ந்தனர் ராமய்யா,50. இவர், கடந்த மாதம் 20ம் தேதி,கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, 24ம் தேதி கூடலூர் திரும்பியுள்ளார். அவருக்கு, கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. சிகிச்சைக்காக, கூடலூர் தேவர்சோலை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர், கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில், ராமய்யாவுக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ராமய்யா, அங்கிருந்த டாக்டர்களின் அறிவுரைப்படி, கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில், 69 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, கிராமப்புறங்களில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார் மேற்பார்வையில், வீடு, வீடாக சென்று, "அபெட்' எனும், கொசு ஒழிப்பு மருந்து வழங்கப்படுகிறது. மேலும், கொசு ஒழிப்பு மிஷின் மூலம், கொசு உற்பத்தியாகும் இடங்களில் மருந்து புகை அடிக்கப்படுகிறது.டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ள நபர்களின் விபரங்களை சேகரித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் வசம் தெரிவிக்க வேண்டும் என, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு, துணை இயக்குனர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், கமிஷனர் உத்தரவின் பேரில், கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
மதுரை:
""மதுரை மாவட்டத்தில், 12 பேர் "டெங்கு' காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், "டெங்கு' குறித்து பொது மக்கள் பீதியடையத் தேவையில்லை,'' என கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.
"டெங்கு' தாக்கி இருவர் பலியாகி உள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடைசியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜபிரியா, இடையமேலூர் மோகனப்பிரியா ஆகிய இருவர் இறந்தனர். உரிய காலத்தில் இங்கு சிகிச்சைக்கு வந்திருந்தால் உயிர் இழப்பை தடுத்திருக்க முடியும்' என, அன்சுல்மிஸ்ரா தெரிவித்தார்.
12 பேர் "அட்மிட்':
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்றுவரை, கோவை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட , ஆறு குழந்தைகள் உட்பட மொத்தம், 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க கோவை மாநகராட்சியும், சுகாதார துறையும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன?
தலையங்கம் :
டெங்கு 40 பேர் பலி
பயப்பட தேவை இல்லை முதல்வர்
டெங்கு 40 பேர் பலி
பயப்பட தேவை இல்லை முதல்வர்
Guest- Guest
Re: டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன?
தலையங்கம் :
டெங்கு 40 பேர் பலி
பயப்பட தேவை இல்லை முதல்வர்
டெங்கு 40 பேர் பலி
பயப்பட தேவை இல்லை முதல்வர்
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி
» தமிழகம் முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவுகிறது அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை 2,500 பேருக்கு சிகிச்சை
» தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை
» தமிழகம் முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவுகிறது அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை 2,500 பேருக்கு சிகிச்சை
» தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|