Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் காதல், முடியாத அத்யாயம்
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
முதல் காதல், முடியாத அத்யாயம்
First topic message reminder :
இந்த பதிவை எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்
மாலை 3 மணி...
இன்று திருமணமாகி நாளையே
குழந்தை வேண்டும் - என
எப்போதும் கேட்கும் client
இப்போதும் கேட்டான்
பொழுது விடிவதற்குள்
ப்ராஜெக்ட் வேண்டுமென..
அடித்து பிடித்து முடித்து கொடுத்து
அண்ணாந்து பார்த்தேன்...
இந்த முறை,
ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போன
பெரியமுள் ஒன்றைக் காட்ட,
சிறிய முள் இரண்டைக் காட்டியது..
சில அடிகள் அளந்து
வெளியே வந்த நேரம்
லிப்ட் failure...
அடுத்தவனை நம்பாதே என
அப்பா சொன்னது
அப்போது நினைவிற்கு வர..
பதினைந்தாவது மாடியிலிருந்து
பாதங்கள் படிகளை என்ன ஆரம்பித்தது..
களைப்பில், கண்கள் சொல்வதை
கால்கள் கவனிப்பதா யில்லை...
முட்டி மோதி முன் வாசல் அடைந்தேன்..
வீட்டிற்கு போக வண்டியேது மின்றி,
பாதங்கள், இரண்டு மயில் தூரம்
இன்னும் பாதயாத்திரை
செல்ல வேண்டியிருந்தது...
பயணத்தை தொடர்ந்தேன்..
வழியில்...
ஏழைக்கு கூலி தரும் எஜமான் போல
இரு வெள்ளை நாய்கள் எனை
விரோதமாய் பார்த்தது...
பூங்காவில் சில பூக்கள்
புன்னகையை அவிழ்க்க,
அதை கால் கடுக்க காத்திருந்து,
கண்ணடித்து காதலித்து கொண்டிருந்தது
அந்த கரண்ட் மரத்து கண்ணாடி விளக்கு..
பனித்துளி சில மலைதுளியாகி
என் உடலோடு உறவாடிக்
கொண்டிருந்தது...
திடீரென..
எங்கோ இடி விளுந்ததாய் ஒரு சத்தம்..
கண்ணுக் கெட்டும் தூரத்தில்,
காரிருள் நிறத்தில்,
கவிழ்ந்து கிடந்தது
அந்த கார்..
தடம் புரண்ட தண்டவாளமாய்
தவறி நடந்த கால்கள்,
சாரப் பாம்பின் வேகத்தில்
சீறிப் பாய...
சில நொடிகளில் கண்டேன்...
பாதி நினைவில்.,
கை முறிந்த நிலையில்
காருக்கு வெளியே அவன்..
நினை விழந்த மழலையாய்,
உடைந்து விழுந்த சிலையாய்
கார் கண்ணாடி ஓரத்தில் அவள்...
இதை கண்கள் கண்டதும்,
என் இதய துடிப்பின் ஓசையை
ஒவ்வொரு நரம்பும் எடுத்துச்
சொல்லியது...
உதவி வேண்டி உரக்கக்
கத்தினேன்...
கேட்க ஆள் எவருமின்றி
கேட்டது எனக்கு மட்டும்...
மனம் புயலுக்குள் சிக்கிய
பூவாய் தவிக்க,
ஆம்புலன்ஸ் என்னைத் தேடி
என் அழைப்பு அலைக் கற்றையாய்
பறந்தது போனது..
அரை மணி நேரத்தில்
வண்டியும் வந்தது..
ஒருபுற படுக்கையில் அவன்.
மறுபுறம் அவள்..
ஓரத்தில் உட்காந்து
கொண்டேன் நான்...
சுத்தமான காற்று இருந்தும்,
அவளுக்கு சுவாச காற்று
தேவைப் பட்டது...
தலை சற்று சருக்கவே,
அவளை தாங்கிக்கொள்ள
மடி கொடுத்தேன்...
சைரன் பறந்தது...
பௌர்ணமி நாளில்
மடியில் ஒரு நிலவு...
அந்த நிலவிற்கு துணை
கோளாய் நெற்றிப் பொட்டு..
சண்டையிட்டுக் கொள்ளாத,
இரண்டு வில், இரண்டு அம்பு.
அவள் புருவமும் விழிகளும்..
அடர்ந்த காட்டுக்குள்,
அரவணைக்கும்
ஒற்றையடிப் பாதையாய்
தலையில் ஒரு வகிடு..
அதை பாது காக்கும் பூட்டாய்
உச்சி நெற்றியில் குங்குமம்..
பூக்கடையில், பூவிற்கு
தெளிக்கப் பட்ட தண்ணீராய்
வியர்வைத் துளி..
குயிலின் நிறத்தில்,
மின்னும் மயில் தோகையின்
நீளத்தில் கூந்தல்..!
இந்த காட்சிகள் என் கடந்த கால
காதலை கண்ணில் காட்டியது..
என்னோடு சிரித்துப் பேசிய பூக்கள்..
Bye என்று அவள் சொல்லிச் சென்ற பூங்கா..
அவள் அதைச் சொன்னதும்,
வலியில் துடித்த விழிகள்,
வெளியில் கூட சொல்லிக்
கொள்ள வில்லை...
உளி அடித்து பிறந்த வழியை,
சிலை ஊராருக்கு என்று சொல்லியது..!?
உண்மையைச் சொன்னால்...
என் காதல் காவிரியாகவும்,
அவள் காதல் கடலாகவும்
இருந்தது - அந்த
அமெரிக்க மாப்பிளை
ஆட்டத்தைக் கலைக்கும் வரை..
அது,
திருமணமாகாத அமெரிக்க மாப்பிள்ளைகள்
எனக்கு தீவிரவாதிகளாக தெரிந்த காலம்.
அடுத்தவன் காதலியை
கொத்திச் செல்லும் இவர்களுக்கு
கருட புராணத்தில் தண்டனை
உண்டா ? - என
அம்பியிடம் கேட்டு,
அந்நியனிடம் முறையிட நினைத்த காலம்..
ஆனால் எனை ஏமாற்றிச் சென்ற
அவள் மீதி ஏனோ
துளியளவும் துயர மில்லை...
ஹலோ, எனக்கு ஒன்று மில்லையே
என அருகில் இருந்த அவன்
எட்டாவது முறையாக கேட்க,
நிகழ் காலத்திற்கு
நினைவுகள் திரும்பியது..
கட்டிய மனைவியை பற்றி
இதுவரை சற்றும் சிந்திக்காத
கல் நெஞ்சுக் காரனைக் கண்டு
ஆச்சர்யம் அருவியாய் கொட்டியது..
என் விரலில் ஏதோ ஊறுவதாய்
அறிந்து உற்று நோக்கினேன்..
அவள் தலையில் ரத்தம் கசிய,
அதைக் கண்டு நான் கத்திய வேகத்தில்,
கார் hospital வாசலை வந்தடைந்தது..
கருவேலங் காட்டு சில் வண்டின்
சத்தமாய் ICU அலறிக் கொண்டிருந்தது.
அவள் உயிரைக் காக்க
அவர்கள் ரத்தம் கேட்க...
ஒரு பாவமும் அறியாத
எனது O நெகடிவ் ரத்தம்,
HIV டெஸ்டுக்கும் கட்டுப் பட்டு,
அவள் உடலில் ஓட ஆரம்பித்தது..
மருத்துவர் 24 மணி நேரம் கெடு சொல்ல..
நான் வேண்டியவர்களுக்கு
சொல்லி விட்டு,
தனிமையில் நடந்தேன்..
வீடு என்னை வரவழைத்தது.
கட்டில் ஒரு கை கொடுத்தது..
அன்று அந்த பூங்காவில்...
BYE என்று சொல்லி - என்
உயிரை ஊசியால் குத்திச்
சென்றவளின் உடலில்,
இன்று என் உதிரம்
ஓடிக் கொண்டிருகிறது..
என் ஒவ்வொரு செல்களிலும்
இன்றும் வாழும் அவள் உயிர்,
எப்படியும் அவளை
உயிர்பிக்கு மென்ற நம்பிக்கையோடு...
கதவை மூடியது விழிகள்
வழிந்து விழுந்தது சில துளிகள்..
இது என் முதல் காதல்,
முடியாத அத்யாயம்..!
இந்த பதிவை எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்
மாலை 3 மணி...
இன்று திருமணமாகி நாளையே
குழந்தை வேண்டும் - என
எப்போதும் கேட்கும் client
இப்போதும் கேட்டான்
பொழுது விடிவதற்குள்
ப்ராஜெக்ட் வேண்டுமென..
அடித்து பிடித்து முடித்து கொடுத்து
அண்ணாந்து பார்த்தேன்...
இந்த முறை,
ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போன
பெரியமுள் ஒன்றைக் காட்ட,
சிறிய முள் இரண்டைக் காட்டியது..
சில அடிகள் அளந்து
வெளியே வந்த நேரம்
லிப்ட் failure...
அடுத்தவனை நம்பாதே என
அப்பா சொன்னது
அப்போது நினைவிற்கு வர..
பதினைந்தாவது மாடியிலிருந்து
பாதங்கள் படிகளை என்ன ஆரம்பித்தது..
களைப்பில், கண்கள் சொல்வதை
கால்கள் கவனிப்பதா யில்லை...
முட்டி மோதி முன் வாசல் அடைந்தேன்..
வீட்டிற்கு போக வண்டியேது மின்றி,
பாதங்கள், இரண்டு மயில் தூரம்
இன்னும் பாதயாத்திரை
செல்ல வேண்டியிருந்தது...
பயணத்தை தொடர்ந்தேன்..
வழியில்...
ஏழைக்கு கூலி தரும் எஜமான் போல
இரு வெள்ளை நாய்கள் எனை
விரோதமாய் பார்த்தது...
பூங்காவில் சில பூக்கள்
புன்னகையை அவிழ்க்க,
அதை கால் கடுக்க காத்திருந்து,
கண்ணடித்து காதலித்து கொண்டிருந்தது
அந்த கரண்ட் மரத்து கண்ணாடி விளக்கு..
பனித்துளி சில மலைதுளியாகி
என் உடலோடு உறவாடிக்
கொண்டிருந்தது...
திடீரென..
எங்கோ இடி விளுந்ததாய் ஒரு சத்தம்..
கண்ணுக் கெட்டும் தூரத்தில்,
காரிருள் நிறத்தில்,
கவிழ்ந்து கிடந்தது
அந்த கார்..
தடம் புரண்ட தண்டவாளமாய்
தவறி நடந்த கால்கள்,
சாரப் பாம்பின் வேகத்தில்
சீறிப் பாய...
சில நொடிகளில் கண்டேன்...
பாதி நினைவில்.,
கை முறிந்த நிலையில்
காருக்கு வெளியே அவன்..
நினை விழந்த மழலையாய்,
உடைந்து விழுந்த சிலையாய்
கார் கண்ணாடி ஓரத்தில் அவள்...
இதை கண்கள் கண்டதும்,
என் இதய துடிப்பின் ஓசையை
ஒவ்வொரு நரம்பும் எடுத்துச்
சொல்லியது...
உதவி வேண்டி உரக்கக்
கத்தினேன்...
கேட்க ஆள் எவருமின்றி
கேட்டது எனக்கு மட்டும்...
மனம் புயலுக்குள் சிக்கிய
பூவாய் தவிக்க,
ஆம்புலன்ஸ் என்னைத் தேடி
என் அழைப்பு அலைக் கற்றையாய்
பறந்தது போனது..
அரை மணி நேரத்தில்
வண்டியும் வந்தது..
ஒருபுற படுக்கையில் அவன்.
மறுபுறம் அவள்..
ஓரத்தில் உட்காந்து
கொண்டேன் நான்...
சுத்தமான காற்று இருந்தும்,
அவளுக்கு சுவாச காற்று
தேவைப் பட்டது...
தலை சற்று சருக்கவே,
அவளை தாங்கிக்கொள்ள
மடி கொடுத்தேன்...
சைரன் பறந்தது...
பௌர்ணமி நாளில்
மடியில் ஒரு நிலவு...
அந்த நிலவிற்கு துணை
கோளாய் நெற்றிப் பொட்டு..
சண்டையிட்டுக் கொள்ளாத,
இரண்டு வில், இரண்டு அம்பு.
அவள் புருவமும் விழிகளும்..
அடர்ந்த காட்டுக்குள்,
அரவணைக்கும்
ஒற்றையடிப் பாதையாய்
தலையில் ஒரு வகிடு..
அதை பாது காக்கும் பூட்டாய்
உச்சி நெற்றியில் குங்குமம்..
பூக்கடையில், பூவிற்கு
தெளிக்கப் பட்ட தண்ணீராய்
வியர்வைத் துளி..
குயிலின் நிறத்தில்,
மின்னும் மயில் தோகையின்
நீளத்தில் கூந்தல்..!
இந்த காட்சிகள் என் கடந்த கால
காதலை கண்ணில் காட்டியது..
என்னோடு சிரித்துப் பேசிய பூக்கள்..
Bye என்று அவள் சொல்லிச் சென்ற பூங்கா..
அவள் அதைச் சொன்னதும்,
வலியில் துடித்த விழிகள்,
வெளியில் கூட சொல்லிக்
கொள்ள வில்லை...
உளி அடித்து பிறந்த வழியை,
சிலை ஊராருக்கு என்று சொல்லியது..!?
உண்மையைச் சொன்னால்...
என் காதல் காவிரியாகவும்,
அவள் காதல் கடலாகவும்
இருந்தது - அந்த
அமெரிக்க மாப்பிளை
ஆட்டத்தைக் கலைக்கும் வரை..
அது,
திருமணமாகாத அமெரிக்க மாப்பிள்ளைகள்
எனக்கு தீவிரவாதிகளாக தெரிந்த காலம்.
அடுத்தவன் காதலியை
கொத்திச் செல்லும் இவர்களுக்கு
கருட புராணத்தில் தண்டனை
உண்டா ? - என
அம்பியிடம் கேட்டு,
அந்நியனிடம் முறையிட நினைத்த காலம்..
ஆனால் எனை ஏமாற்றிச் சென்ற
அவள் மீதி ஏனோ
துளியளவும் துயர மில்லை...
ஹலோ, எனக்கு ஒன்று மில்லையே
என அருகில் இருந்த அவன்
எட்டாவது முறையாக கேட்க,
நிகழ் காலத்திற்கு
நினைவுகள் திரும்பியது..
கட்டிய மனைவியை பற்றி
இதுவரை சற்றும் சிந்திக்காத
கல் நெஞ்சுக் காரனைக் கண்டு
ஆச்சர்யம் அருவியாய் கொட்டியது..
என் விரலில் ஏதோ ஊறுவதாய்
அறிந்து உற்று நோக்கினேன்..
அவள் தலையில் ரத்தம் கசிய,
அதைக் கண்டு நான் கத்திய வேகத்தில்,
கார் hospital வாசலை வந்தடைந்தது..
கருவேலங் காட்டு சில் வண்டின்
சத்தமாய் ICU அலறிக் கொண்டிருந்தது.
அவள் உயிரைக் காக்க
அவர்கள் ரத்தம் கேட்க...
ஒரு பாவமும் அறியாத
எனது O நெகடிவ் ரத்தம்,
HIV டெஸ்டுக்கும் கட்டுப் பட்டு,
அவள் உடலில் ஓட ஆரம்பித்தது..
மருத்துவர் 24 மணி நேரம் கெடு சொல்ல..
நான் வேண்டியவர்களுக்கு
சொல்லி விட்டு,
தனிமையில் நடந்தேன்..
வீடு என்னை வரவழைத்தது.
கட்டில் ஒரு கை கொடுத்தது..
அன்று அந்த பூங்காவில்...
BYE என்று சொல்லி - என்
உயிரை ஊசியால் குத்திச்
சென்றவளின் உடலில்,
இன்று என் உதிரம்
ஓடிக் கொண்டிருகிறது..
என் ஒவ்வொரு செல்களிலும்
இன்றும் வாழும் அவள் உயிர்,
எப்படியும் அவளை
உயிர்பிக்கு மென்ற நம்பிக்கையோடு...
கதவை மூடியது விழிகள்
வழிந்து விழுந்தது சில துளிகள்..
இது என் முதல் காதல்,
முடியாத அத்யாயம்..!
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: முதல் காதல், முடியாத அத்யாயம்
வந்துட்டேன் கேளம்பிட்டேனு சொல்றிங்களே தவிர கவிதைய பத்தின கருத்து சொல்ல மட்ட்டேன்குறிங்களே பாஸ் ..புரட்சி wrote:பூவன் wrote:யினியவன் wrote:ரொம்ப நீளமா இருக்கு ஆழமா இருக்கு காதலைப் போலவே - வந்து ராத்திரி கவனிக்கிறேன்.
இன்னும் ராத்திரி ஆகவில்லையா ???
நான் வந்துட்டேன் ????
நான் கிளம்பிட்டேன்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: முதல் காதல், முடியாத அத்யாயம்
அரசன் அன்று கொல்வான்
அன்று அரசனாகி கொள்ளத் தவறிய
அவன் அவளை இன்று உதிரத்தில் கொண்டு கொண்டான்
இரண்டு மணி நேர படத்தில் வருவது போன்றே
ஓர் ஜென்மத்து காதலும் சொன்னது நன்று.
நல்ல வேலை ஹீரோ இரட்டை வேடம் என்று சொல்லி
நல்ல ஹீரோ காதலிக்கு நல்ல ரத்தம் குடுத்து காப்பாற்றி
கெட்ட ஹீரோ அவளை அபேஸ் பண்ணியவனை HIV ரத்தம் குடுத்து பழி வாங்கல.
அன்று அரசனாகி கொள்ளத் தவறிய
அவன் அவளை இன்று உதிரத்தில் கொண்டு கொண்டான்
இரண்டு மணி நேர படத்தில் வருவது போன்றே
ஓர் ஜென்மத்து காதலும் சொன்னது நன்று.
நல்ல வேலை ஹீரோ இரட்டை வேடம் என்று சொல்லி
நல்ல ஹீரோ காதலிக்கு நல்ல ரத்தம் குடுத்து காப்பாற்றி
கெட்ட ஹீரோ அவளை அபேஸ் பண்ணியவனை HIV ரத்தம் குடுத்து பழி வாங்கல.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முதல் காதல், முடியாத அத்யாயம்
ஹஹா உங்களால மட்டுதான் இப்டி யோசிக்க முடியும்யினியவன் wrote:அரசன் அன்று கொல்வான்
அன்று அரசனாகி கொள்ளத் தவறிய
அவன் அவளை இன்று உதிரத்தில் கொண்டு கொண்டான்
இரண்டு மணி நேர படத்தில் வருவது போன்றே
ஓர் ஜென்மத்து காதலும் சொன்னது நன்று.
நல்ல வேலை ஹீரோ இரட்டை வேடம் என்று சொல்லி
நல்ல ஹீரோ காதலிக்கு நல்ல ரத்தம் குடுத்து காப்பாற்றி
கெட்ட ஹீரோ அவளை அபேஸ் பண்ணியவனை HIV ரத்தம் குடுத்து பழி வாங்கல.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: முதல் காதல், முடியாத அத்யாயம்
வேணாமா இல்ல வெரட்டி விட்டுட்டாங்களா..?? உண்மையா எனக்கு மட்டும் சொல்லுகண்ணே ..புரட்சி wrote:அட போங்கப்பா காதல் வேணாம் ஒன்னும் வேணாம் , ரெண்டும் வேணாம்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முதல் காதல், முடியாத அத்யாயம்
எங்கா தங்கத்தலைவர் மிஸ்டேக் பண்ணாருன்னு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா..?யினியவன் wrote:நம்ம கிட்ட மிஷ்டேக் இருக்கற மாதிரி சொல்றீகளே அகல்... (இருக்குமோ?)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: முதல் காதல், முடியாத அத்யாயம்
ஐயோ மூச்சடைக்குதே - கண்விழி பிதுங்குதே - சிவா காப்பாத்துங்க - அன்பு மழைல மூழ்கிட்டு இருக்கேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» முடியாத நம் காதல்!
» முடியாத முடிவு என் காதல்
» சொல்ல முடியாத காதல் நீ- கவிதை
» ஒரேவரியில் சொல்ல முடியாத விளக்கம் காதல் !!!!!!!
» முடியாத விளையாட்டுப் போட்டிதான் இந்த காதல்!!
» முடியாத முடிவு என் காதல்
» சொல்ல முடியாத காதல் நீ- கவிதை
» ஒரேவரியில் சொல்ல முடியாத விளக்கம் காதல் !!!!!!!
» முடியாத விளையாட்டுப் போட்டிதான் இந்த காதல்!!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|