புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
69 Posts - 58%
heezulia
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
111 Posts - 60%
heezulia
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் காதல், முடியாத அத்யாயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Oct 15, 2012 4:58 pm

முதல் காதல், முடியாத அத்யாயம் 37854935

இந்த பதிவை எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்

மாலை 3 மணி...

இன்று திருமணமாகி நாளையே
குழந்தை வேண்டும் - என
எப்போதும் கேட்கும் client
இப்போதும் கேட்டான்
பொழுது விடிவதற்குள்
ப்ராஜெக்ட் வேண்டுமென..

அடித்து பிடித்து முடித்து கொடுத்து
அண்ணாந்து பார்த்தேன்...

இந்த முறை,
ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போன
பெரியமுள் ஒன்றைக் காட்ட,
சிறிய முள் இரண்டைக் காட்டியது..

சில அடிகள் அளந்து
வெளியே வந்த நேரம்
லிப்ட் failure...

அடுத்தவனை நம்பாதே என
அப்பா சொன்னது
அப்போது நினைவிற்கு வர..

பதினைந்தாவது மாடியிலிருந்து
பாதங்கள் படிகளை என்ன ஆரம்பித்தது..

களைப்பில், கண்கள் சொல்வதை
கால்கள் கவனிப்பதா யில்லை...

முட்டி மோதி முன் வாசல் அடைந்தேன்..

வீட்டிற்கு போக வண்டியேது மின்றி,
பாதங்கள், இரண்டு மயில் தூரம்
இன்னும் பாதயாத்திரை
செல்ல வேண்டியிருந்தது...

பயணத்தை தொடர்ந்தேன்..

வழியில்...

ஏழைக்கு கூலி தரும் எஜமான் போல
இரு வெள்ளை நாய்கள் எனை
விரோதமாய் பார்த்தது...

பூங்காவில் சில பூக்கள்
புன்னகையை அவிழ்க்க,
அதை கால் கடுக்க காத்திருந்து,
கண்ணடித்து காதலித்து கொண்டிருந்தது
அந்த கரண்ட் மரத்து கண்ணாடி விளக்கு..

பனித்துளி சில மலைதுளியாகி
என் உடலோடு உறவாடிக்
கொண்டிருந்தது...

திடீரென..
எங்கோ இடி விளுந்ததாய் ஒரு சத்தம்..

கண்ணுக் கெட்டும் தூரத்தில்,
காரிருள் நிறத்தில்,
கவிழ்ந்து கிடந்தது
அந்த கார்..

தடம் புரண்ட தண்டவாளமாய்
தவறி நடந்த கால்கள்,
சாரப் பாம்பின் வேகத்தில்
சீறிப் பாய...

சில நொடிகளில் கண்டேன்...

பாதி நினைவில்.,
கை முறிந்த நிலையில்
காருக்கு வெளியே அவன்..

நினை விழந்த மழலையாய்,
உடைந்து விழுந்த சிலையாய்
கார் கண்ணாடி ஓரத்தில் அவள்...

இதை கண்கள் கண்டதும்,
என் இதய துடிப்பின் ஓசையை
ஒவ்வொரு நரம்பும் எடுத்துச்
சொல்லியது...

உதவி வேண்டி உரக்கக்
கத்தினேன்...

கேட்க ஆள் எவருமின்றி
கேட்டது எனக்கு மட்டும்...

மனம் புயலுக்குள் சிக்கிய
பூவாய் தவிக்க,

ஆம்புலன்ஸ் என்னைத் தேடி
என் அழைப்பு அலைக் கற்றையாய்
பறந்தது போனது..

அரை மணி நேரத்தில்
வண்டியும் வந்தது..

ஒருபுற படுக்கையில் அவன்.
மறுபுறம் அவள்..
ஓரத்தில் உட்காந்து
கொண்டேன் நான்...

சுத்தமான காற்று இருந்தும்,
அவளுக்கு சுவாச காற்று
தேவைப் பட்டது...

தலை சற்று சருக்கவே,
அவளை தாங்கிக்கொள்ள
மடி கொடுத்தேன்...

சைரன் பறந்தது...

பௌர்ணமி நாளில்
மடியில் ஒரு நிலவு...

அந்த நிலவிற்கு துணை
கோளாய் நெற்றிப் பொட்டு..

சண்டையிட்டுக் கொள்ளாத,
இரண்டு வில், இரண்டு அம்பு.
அவள் புருவமும் விழிகளும்..

அடர்ந்த காட்டுக்குள்,
அரவணைக்கும்
ஒற்றையடிப் பாதையாய்
தலையில் ஒரு வகிடு..

அதை பாது காக்கும் பூட்டாய்
உச்சி நெற்றியில் குங்குமம்..

பூக்கடையில், பூவிற்கு
தெளிக்கப் பட்ட தண்ணீராய்
வியர்வைத் துளி..

குயிலின் நிறத்தில்,
மின்னும் மயில் தோகையின்
நீளத்தில் கூந்தல்..!

இந்த காட்சிகள் என் கடந்த கால
காதலை கண்ணில் காட்டியது..

என்னோடு சிரித்துப் பேசிய பூக்கள்..
Bye என்று அவள் சொல்லிச் சென்ற பூங்கா..

அவள் அதைச் சொன்னதும்,
வலியில் துடித்த விழிகள்,
வெளியில் கூட சொல்லிக்
கொள்ள வில்லை...

உளி அடித்து பிறந்த வழியை,
சிலை ஊராருக்கு என்று சொல்லியது..!?

உண்மையைச் சொன்னால்...

என் காதல் காவிரியாகவும்,
அவள் காதல் கடலாகவும்
இருந்தது - அந்த
அமெரிக்க மாப்பிளை
ஆட்டத்தைக் கலைக்கும் வரை..

அது,
திருமணமாகாத அமெரிக்க மாப்பிள்ளைகள்
எனக்கு தீவிரவாதிகளாக தெரிந்த காலம்.

அடுத்தவன் காதலியை
கொத்திச் செல்லும் இவர்களுக்கு
கருட புராணத்தில் தண்டனை
உண்டா ? - என
அம்பியிடம் கேட்டு,
அந்நியனிடம் முறையிட நினைத்த காலம்..

ஆனால் எனை ஏமாற்றிச் சென்ற
அவள் மீதி ஏனோ
துளியளவும் துயர மில்லை...

ஹலோ, எனக்கு ஒன்று மில்லையே
என அருகில் இருந்த அவன்
எட்டாவது முறையாக கேட்க,

நிகழ் காலத்திற்கு
நினைவுகள் திரும்பியது..

கட்டிய மனைவியை பற்றி
இதுவரை சற்றும் சிந்திக்காத
கல் நெஞ்சுக் காரனைக் கண்டு
ஆச்சர்யம் அருவியாய் கொட்டியது..

என் விரலில் ஏதோ ஊறுவதாய்
அறிந்து உற்று நோக்கினேன்..

அவள் தலையில் ரத்தம் கசிய,
அதைக் கண்டு நான் கத்திய வேகத்தில்,
கார் hospital வாசலை வந்தடைந்தது..

கருவேலங் காட்டு சில் வண்டின்
சத்தமாய் ICU அலறிக் கொண்டிருந்தது.

அவள் உயிரைக் காக்க
அவர்கள் ரத்தம் கேட்க...

ஒரு பாவமும் அறியாத
எனது O நெகடிவ் ரத்தம்,
HIV டெஸ்டுக்கும் கட்டுப் பட்டு,
அவள் உடலில் ஓட ஆரம்பித்தது..

மருத்துவர் 24 மணி நேரம் கெடு சொல்ல..

நான் வேண்டியவர்களுக்கு
சொல்லி விட்டு,
தனிமையில் நடந்தேன்..

வீடு என்னை வரவழைத்தது.
கட்டில் ஒரு கை கொடுத்தது..

அன்று அந்த பூங்காவில்...

BYE என்று சொல்லி - என்
உயிரை ஊசியால் குத்திச்
சென்றவளின் உடலில்,
இன்று என் உதிரம்
ஓடிக் கொண்டிருகிறது..

என் ஒவ்வொரு செல்களிலும்
இன்றும் வாழும் அவள் உயிர்,
எப்படியும் அவளை
உயிர்பிக்கு மென்ற நம்பிக்கையோடு...

கதவை மூடியது விழிகள்
வழிந்து விழுந்தது சில துளிகள்..

இது என் முதல் காதல்,
முடியாத அத்யாயம்..!



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 5:41 pm

ரொம்ப நீளமா இருக்கு ஆழமா இருக்கு காதலைப் போலவே - வந்து ராத்திரி கவனிக்கிறேன்.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 5:44 pm

காதலின் கருவில் ஒரு நாடகமே நடத்தியது அருமை
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 15, 2012 5:48 pm

அடடே அந்த பெண்த்தான் இந்த பெண்ணா பொழசிட்டாங்கள அகல் நல்லதொரு உரைநடை கவிதை அகல் அதுசரி அந்த அமெரிக்க மாப்ளை என்ன ஆனாருன்னு சொல்லலியே பொழச்சாரா இல்லையா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் முதல் காதல், முடியாத அத்யாயம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Oct 15, 2012 7:52 pm

கரூர் கவியன்பன் wrote:காதலின் கருவில் ஒரு நாடகமே நடத்தியது அருமை
தங்களது பின்னூட்டம் அருமை.. நன்றிகள் பல அன்பர் கரூர் கவியன்பனுக்கு..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Oct 15, 2012 7:56 pm

balakarthik wrote:அடடே அந்த பெண்த்தான் இந்த பெண்ணா பொழசிட்டாங்கள அகல் நல்லதொரு உரைநடை கவிதை அகல் அதுசரி அந்த அமெரிக்க மாப்ளை என்ன ஆனாருன்னு சொல்லலியே பொழச்சாரா இல்லையா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அந்தப்பயல இந்த கவிதையில சாகடிக்கலானும்னு(கவிதையிலயாவது புன்னகை) நெனெச்சேன் பாலா.. ஆனா இதில் வரும் நாயகி மாங்கல்யம் இழப்பாளே.. அதான் அவனப்பத்தி ஏதும் சொல்லமா பொழச்சு போகட்டும்னு விட்டுடே நண்பா புன்னகை...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
Guest
Guest

PostGuest Mon Oct 15, 2012 9:01 pm

அட போங்கப்பா காதல் வேணாம் ஒன்னும் வேணாம் , ரெண்டும் வேணாம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 15, 2012 9:06 pm

யினியவன் wrote:ரொம்ப நீளமா இருக்கு ஆழமா இருக்கு காதலைப் போலவே - வந்து ராத்திரி கவனிக்கிறேன்.

இன்னும் ராத்திரி ஆகவில்லையா ???
நான் வந்துட்டேன் ????

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 15, 2012 9:08 pm

பூவன் wrote:
யினியவன் wrote:ரொம்ப நீளமா இருக்கு ஆழமா இருக்கு காதலைப் போலவே - வந்து ராத்திரி கவனிக்கிறேன்.

இன்னும் ராத்திரி ஆகவில்லையா ???
நான் வந்துட்டேன் ????

நான் கிளம்பிட்டேன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 15, 2012 9:13 pm

கிளம்புங்கள் நாளை சந்திப்போம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக