புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10 
284 Posts - 45%
heezulia
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னுமா இருக்கிறது காதல்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sun Oct 14, 2012 7:01 pm

First topic message reminder :

இன்னுமா இருக்கிறது காதல்


காதல்..
மிக சிறிய சொல்,
பிரம்மாண்டமான சக்தி,
புராதன வேட்கை
வினோத சித்தபிரம்மை,
விந்தையான மனஎழுச்சி,
ஆதி உணர்வு,

நாகரிக மாற்றத்தை எதிர்த்து நம்மிடையே எஞ்சியிருக்கும் பழமைகளில் ஓன்று, அது ஒருவருக்குள் ஒருவரை அடிமைப்படுத்தும்....

உலகம் திறந்து வைத்த
முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல் தான்...

இப்படி பலவாறாக காதலை எழுதாத கவிஞர்கள் உண்டோ?? பாடாத பாடகர்களும் உண்டோ?? இவற்றையெல்லாம் கேட்கும் போதே காதலின்றி வாழ்தல் சாத்தியமோ என்ற கேள்வி எல்லோருக்கும் வரும்...

ஹார்மோன் மாற்றமே:

காதல் ஒரு ஹார்மோன் மாற்றமே!! இதனால் கண்டதும் காதல் வயப்படும் வாய்ப்பும் உண்டு. கண்டவர்கள் மீதும் காதல் வயப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த காதல் நீடிக்குமா ?? என்பதில் தான் ஐயமே... இளைய சமுதாயத்தினர் தங்கள் டீன் ஏஜ் பருவத்தை கடக்கும் முன்னரே இந்த மாய வலையில் தங்களை சிக்க வைத்துக் கொள்கின்றனர். காதலுக்கும் எதிர் பாலின கவர்ச்சிக்கும் வித்தியாசத்தை அவர்கள் அறிவதில்லை. இந்த வகையான காதலில் சிக்கல் உண்டு. தன் காதலனை(காதலியை) விட அழகானவனோ, அல்லது இதர திறமைகளில் சிறந்தவனை பார்க்கும் போது இவர்கள் காதல் மாறும் வாய்ப்பும் உண்டு. இதை பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல்? எனத் தோன்றுகிறது.

இன்றைய சமூக நிலை:

வயது வந்த பின்னர் ஒருவரையொருவர் புரிந்து வரும் காதல் என்பது தற்போது மிக குறைவே. இன்றைய சமூகத்தில் எந்த ஒரு ஆணும் உண்மையாய் காதலுக்காக ஏங்கி தேவதாஸ் ஆவதுமில்லை. எந்த ஒரு பெண்ணும் முன் பின் தெரியாத ஒருவனை நம்பி ஏமாறுவதுமில்லை. ஒத்து வராத காதலர்கள் கை குலுக்கி நண்பர்களாக பிரிகின்றனர். சேது சீயானையும், காதல் முருகனையும் படங்களில் மட்டுமே காண முடியும்.

காதல்:

காதல் ஒரு வித சித்த பிரம்மை. தன் நிலை மறந்து துணையை பற்றியே சிந்திக்க தூண்டும். உணவு உறக்கம் மறந்து வாழும் நிலை வரும். கனவு உலகம் மட்டுமே பிடிக்கும். அடிக்கடி பொய் சொல்ல வைக்கும்.

ஒரு தலை காதல்:

முன்னாளில் ஒரு தலை காதலில் தங்களை தாங்களே துன்புறுத்திக் கொண்டனர். காதல் நிறைவேறாத, ஏற்காத பட்சத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தாங்களே தொலைத்தனர். பெற்றோர்களின் கண்ணீரை பொருட்படுத்தாமல் தங்கள் வாழ்வே அந்த பெண்ணுடனே முடிந்தது என்பது போல செயல்பட்டனர்.

இந்நாளில் ஒரு தலை காதலில் பலர் வன்முறையை ஆயுதமாக எடுக்கின்றனர். ஒரு பெண் தன் காதலை ஏற்காத பட்சத்தில் அவள் மீது திராவகம் வீசுவது, கொலை செய்வது என காதல் என்ற பெயரில் வெறியோடு நடக்கின்றனர். தினம் தினம் செய்தி தாள்களில் இது போன்ற பல செய்திகள் வருவதை யாராலும் மறுக்க முடியாது.

மற்றுமொரு ரக ஒரு தலை காதலும் உண்டு. தங்கள் காதல் ஏற்கப்படாத பட்சத்தில் தங்கள் காதலையே மாற்றிக் கொள்கின்றனர். “திரிஷா இல்லைனா திவ்யா” என்ற கொள்கையோடு இருக்கின்றனர். இது முன்னர் கூறிய காதலை விட மேல் என்றாலும் இவற்றையெல்லாம் பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல் எனத் தோன்றுகிறது.

முறையற்ற காதல்:

இந்த கலியுகத்தில் முறையற்ற காதல்களும் பெருகி கொண்டு தான் இருக்கின்றன. ஒரே பாலின காதல்களும் தற்போது ஏற்படுகிறது. இது இயற்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று. சமூகத்தால் ஏற்கப்படாத ஒன்று. இதை தவிர முறையற்ற உறவுகளுக்கு இடையேயும் காதல் ஏற்படுகிறது.. இதுவும் சமூகம் ஏற்க முடியாத ஒன்றே. இன்றைய திரைப்படங்களும் தவறான உதாரணங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது. வயதில் மூத்த பெண்ணை காதலித்தல், அல்லது உங்கள் கல்லூரி பேராசிரியர் (பேராசிரியை) காதலித்தல் இவையெல்லாம் உங்கள் அபிமான நாயகன் உங்களுக்கு கற்று தரும் பாடம். இது திரையுலகில் மட்டும் அல்ல.. நிஜ வாழ்க்கையிலும் நடக்கின்றது.

இருதலை காதல்:

இரு தரப்பினரும் பேசி பழகி வரும் காதல் மட்டும் எல்லா வகையிலும் யோக்கியமா என்று கேட்காதீர்கள்!! காதலை தெரிவிக்கும் முன்னோ, காதலை தெரிவிக்கும் போதோ காதலனோ, காதலியோ செய்யும் சின்ன விஷயத்தை கூட பாராட்டும் மனம் காதலின் போதோ, கல்யாணத்தின் பின்னோ மாறி விடும்.அது போலத் தான் காதலிக்கும் போது செய்யும் பெரிய தவறை கூட மறந்து மன்னிக்கும் குணம் பின்னாளில் மறைந்து விடும்.

ஒவ்வொன்றுக்கும் விவாதம் வைக்கும். விட்டுக் கொடுக்கும் மனம் காணாமல் போய்விடும். தான் வெற்றி பெற வேண்டும் என நினைத்து இருவரும் வாழ்வில் தோல்வியை சந்திக்கின்றனர். தன் துணை தானாகவே முன் வந்து விட்டு கொடுக்க தோன்றும். காதல் திருமணங்கள் செய்ய அவசர அவசரமாக பதிவு திருமண அலுவலக வாயிலில் நின்றவர்கள் இன்று அதை விட அவசரமாக நீதிமன்ற வாயிலில் விவகாரத்திற்கு நிற்கின்றனர்.

காதலர்களிடையேயும் திருமணமானவர்களிடையேயும்‌ துணை தனக்கே சொந்தமானவள் என்ற எண்ணம் அதிகப்படையாக இருக்கிறது. தனக்கானவன், தனக்கானவள் என்ற உரிமை இருப்பதில் தவறில்லை. அதுவே விலங்காக மாறி துணையை கட்டி போடாமல் இருந்தால் சரி. நம்பிக்கை வாழ்வின் மிக முக்கிய அடித்தளம். இது இருந்தால் போதுமே தனக்கானவள் என்ற எண்ணம் வேண்டிய இடத்தில் மட்டும் இருக்குமே. ஆனால் பலர் அதை மறந்து அதீத அன்பினால் துணையை நோகடிக்கின்றனர். சந்தேகத்தினால் தாங்களும் நிம்மதி இழக்கின்றனர். இவற்றை பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல் எனத் தோன்றுகிறது.

பெற்றோர் நிச்சயித்த திருமணம்:

பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களும் முக்கியத்துவம் கொடுப்பது ஜாதி, மதம், படிப்பு, தொழில், அந்தஸ்து இவற்றுக்கே. மனங்கள் இணைவது இரண்டாம் பட்சமே.

பெற்றோருக்காக பிடிக்காத வாழ்வை ஏற்போர் சிலர். இவர்கள் திருமணம் என்ற சடங்கை வேண்டுமானால் பெற்றோருக்காக ஏற்கலாம். அதன் மூலம் வரும் உறவை ஏற்க சிரம படுவர். வாழ்க்கையில் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து வாழலாம். ஆனால் வாழ்க்கையையே விட்டுக் கொடுத்து வாழ முடியாது.

இரண்டாம் ரகத்தினர் எந்த வித எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் இல்லாமல் வாழ்வை ஏற்போர். இவர்களை தங்கள் வாழ்க்கை துணையால் தங்களுக்கு ஏற்றபடி மாற்ற முடியும். சில நாட்களிலேயே அவர்கள் தங்கள் வாழ்வை, வாழ்க்கை துணையை விரும்ப ஆரம்பித்து விடுவர்.

கடைசி ரகத்தினர் பல வித எதிர்பார்ப்புகள், ஆசைகளுடன் திருமண வாழ்வில் அடி எடுத்து வைப்பவர்கள். இவர்களின் வாழ்க்கை துணை எதிர்பார்ப்புகள், ஆசைகளை நிறைவேற்றும் பட்சத்தில் இவர்கள் வாழ்வும் மகிழ்ச்சியாகவே அமையும். இல்லையேல் ஏமாற்றத்தினால் இவர்கள் வாழ்வு விரக்தி அடையும். இன்னொரு துணையை நாடவும் வாய்ப்பு உண்டு. இவற்றை எல்லாம் பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல் எனத் தோன்றுகிறது.

அப்படினா காதலே இல்லையா என்று தானா கேட்கிறீர்கள்?? இருக்கு.. ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே ஏற்படுவது என்றே பலரும் எண்ணி கொண்டிருக்கிறோம். முதலில் காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு இல்லை. இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துமே காதலித்து கொண்டு தான் இருக்கிறது. அன்பே கடவுள் என்று சிலர் கூறுகின்றனர். அன்பும் காதலின் ஒரு வகையான வெளிப்பாடு தான் என்பதால் காதலும் கடவுளும் ஒன்றே தான் என்று கூட கூறலாம். காதலின் சின்னம் என்றால் பலரும் தாஜ்மகாலை தான் கூறுவார்கள். ஒரு கணவன் தன் மனைவியின் மீது வைத்திருந்த உன்னதமான காதலின் சின்னமே தாஜ்மஹால். நம்மில் பல தம்பதிகள் தங்கள் துணையின் மீது அளவில்லா காதலை கொண்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களை போற்றும் சின்னமே ஆக்ராவில் அமைந்துள்ள அந்த சின்னம்.

முடிவுரை:

அழகை பார்த்து காதல் வந்தால் அது இன கவர்ச்சி. படிப்பு, தொழில் பார்த்து காதல் வந்தால் அது சுயநலம். தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற எண்ணம். திறமையை பார்த்து காதல் வந்தால் அது அந்த கலையின் மீது ஏற்படும் நாட்டமே அன்றி காதல் அல்ல. இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவருக்கொருவர் பேசி புரிந்து கடைசி வரை ஒத்து வாழ்வதே காதல். இதற்கு இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள், கருத்துக்கள், விருப்பங்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. ஒருவர் மற்றவரின் எண்ணங்களுக்கு, கருத்துக்களுக்கு, ஆசைகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்தாலே போதும்.

சின்ன சின்ன ஆசைகள், சின்ன சின்ன சந்தோஷங்கள், சின்ன சின்ன ஆச்சரியங்கள், சின்ன சின்ன சண்டைகள், சின்ன சின்ன மன்னிப்பு, சின்ன சின்ன சமாதானம் இவைகள் தான் வாழ்வை இனிமையாக்கும். காதல் என்ற உணர்வு கடைசி மூச்சு வரை நம்முடன் இருக்கும். “இன்னுமா இருக்கிறது காதல்?” என்ற கேள்விக்கும் அவசியம் இருக்காது.



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 17, 2012 2:34 pm

இதுக்கு விளக்கம் சொல்லி அறுக்க விரும்பவில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 2:35 pm



balakarthik wrote:இதுக்கு விளக்கம் சொல்லி அறுக்க விரும்பவில்லை

நானும் இதை மறுக்க விரும்பல ???

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Oct 17, 2012 3:51 pm

முதற்கண் நேர்த்தியாய், பிழையின்றி குறிஞ்சிப்பூ போன்ற பதிவு பதிந்தமைக்கு நன்றி. சூப்பருங்க

முடிவுரையை தான் ஏற்க இயலவில்லை.

காதல் அன்றிலிருந்து இன்றுவரை ஏதோ ஒரு ஈர்ப்புடன் தான் ஆரம்பம் ஆகிறது. இந்த ஈர்ப்பு உருவம், குணம், திறமை, வசதி என்ற ஏதோ ஒன்றில் இருந்து தான் உருவாகிறது. கடவுளையும் காதலிப்பது, மதிப்பது அவருக்கு சொல்லப்பட்ட குணங்களால் தான். இதனால் தான் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் அடுத்த மதத்தில் இருக்கும் கடவுளை ஏற்கவோ, காதலிக்கவோ இயலுவதில்லை. காரணம் அவர்களுக்கு கடவுள் என்ற தத்துவத்திற்கு போதிக்கப்பட்ட குணங்களும், உருவங்களும் வேறாக இருப்பது தான்.

இந்நிலையில் எந்த ஈர்ப்பும் இன்றி, கொள்கைகளில், கருத்துகளில் பல்வேறு மாறுபாடு இருந்தாலும் ஒருவரை காதலிக்க இயலுமா தெரியவில்லை.

இன்றைக்கு பலநேரங்களில் காதல் ஒத்து வராது என்று தெரியும் போது அது இனக்கவர்ச்சியாக நமக்கு நாமே அடையாளம் காட்டப்படுகிறது அல்லது நண்பர்களால், பெற்றோர்களால் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் இது இனக்கவர்ச்சியல்ல.

இப்படி பார்த்தால் நமக்கு தற்காலிகமாகப் பிடிக்கும் அனைத்தும் போலியானவை என்று உணர்வே மேலோங்கும். ஒருவரை புலம்பவும், வருத்தப்படச் செய்யும் உணர்வுகள் அனைத்தும் மதிப்படவேண்டியவை. இனக்கவர்ச்சி என்று அடையாளம் காட்டப்படும் காதல் உட்பட.

ஓரினம், முறையற்ற காதலும், காதல் தான். அது இந்தியச் சமுகத்திற்கு மாறானது, தவறானது ஆனால் இயற்கைக்கு மாறானது அல்ல. இயற்கையில் தினம் பூக்கும் ஆயிரம் மலர்கள் இருப்பினும், என்றோ ஒரு நாள் மட்டுமே பூக்கும் மலர்களும் இப்பூமியில் உள்ளன. பறக்கும் பறவைகள் இருந்தாலும், பறக்காத பறவையும் இங்குண்டு. ஆகையால் தான் மேலைநாடுகளில் உள்ள சமூகப் பின்னணியில் இவ்வகை காதல் காதலாக ஏற்கின்றனர். நம்மால் ஏற்க இயலவில்லை.






சதாசிவம்
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Wed Oct 17, 2012 6:06 pm

இந்த காதலை பற்றி சொல்லனும்னா கண்டிப்பா நேரம் பத்தாது
இருந்தாலும் சிம்பிளா சொல்லனும்னா
இந்த காலத்தில் நிறைய காதல் கூடுவதில்லை
ஆனால் ஜெய்க்கிறது


avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 6:10 pm

அருமை சதாசிவம் நல்ல கருத்து தெளிவு வரிகள் ..

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக