புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாததை அறிவோம் Poll_c10அறியாததை அறிவோம் Poll_m10அறியாததை அறிவோம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
அறியாததை அறிவோம் Poll_c10அறியாததை அறிவோம் Poll_m10அறியாததை அறிவோம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அறியாததை அறிவோம் Poll_c10அறியாததை அறிவோம் Poll_m10அறியாததை அறிவோம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாததை அறிவோம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 15, 2012 8:36 pm

காய்ந்த நிலத்தில் மழை பொழிந்த உடன் ஒரு மணம் வெளிப்படுகின்றது. இதனை மண் வாசனை என்பர். இது எப்படி ஏற்படுகின்றது?
நிலத்தில் ஸ்ட்ராப்டோமைசிஸ் (Stretomyces),, ஆக்டினோமைசிஸ் (Actinomyces) போன்ற எண்ணற்ற பாக்டீரியாக்களும், பிற நுண்ணுயிர்களும் உள்ளன. இவை வறண்ட நிலத்தில் அதிக அளவு உள்ளன. ஒரு கிராம் நிலத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. வறண்ட நிலத்தில் மழை பொழிந்தவுடன் இந்த நுண்ணுயிர்கள் ஜியோஸ்மின் (Geosmine) மற்றும் டை - மிதைல் ப்ரோமியால் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வேதியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதியல் பொருட்கள் காரணமாகவே, காய்ந்த நிலத்தில் மழை பொழிந்தவுடன் மணம் கிளம்புகின்றது.

தண்ணீர் மேலிருந்து கீழ்நோக்கிப் பாய்கின்றது. அதேபோன்று, மேல்நோக்கி எறியப்படும் பொருட்களும் கீழ்நோக்கியே விழுகின்றன. ஆனால் தீப்பிழம்பு மேல் நோக்கி எரிகின்றது. ஏன் இந்த வேறுபாடு?


உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுமே, புவி ஈர்ப்பின் காரணமாக பூமியின் மையம் நோக்கி இழுக்கப்படுகின்றன. மேலும் நீரின் அடர்த்தி காற்றின் அடர்த்தியைவிட மிக அதிகம். இதன் காரணமாக, தண்ணீர் மேல் நிலையிலிருந்து கீழ் நோக்கிப் பாய்கின்றது.

ஆனால், தீப்பிழம்பு என்பது ஒளிவீசுகின்ற சூடாக்கப்பட்ட வாயுக்களால் ஆனது. சூடாக்கப்பட்ட வாயுக்களின் அடர்த்தி, சாதாரண காற்றின் அடர்த்தியைவிட மிகக் குறைவு. இதன் காரணமாகவே தீப்பிழம்பு மேல்நோக்கி எரிகின்றது.


நாய், உட்கார அல்லது படுக்கும் முன் அந்த இடத்தை இரண்டு அல்லது மூன்றுமுறை சுற்றி வந்த பிறகே, அவ்விடத்தில் அமர்கின்றது. இந்த வினோதமான நிகழ்ச்சியின் காரணம் என்ன?


நாய் ஒரு இடத்தைச் சுற்றும்போதே காற்று எந்த திசையிலிருந்து வீசுகிறது என்பதை உணர்கிறது. அதைத் தொடர்ந்து காற்று வீசும் திசைக்கு எதிராக உட்கார்கிறது; அல்லது படுக்கிறது. இச்செயல் மூலம், நாய் தன் அற்புதமான முகரும் திறன் காரணமாக தன் எதிரிகளின் நடமாட்டத்தை விரைவில் உணர்ந்து கொள்கிறது. அதனால் எதிரியின் தாக்குதலில் இருந்து எளிதில் தப்பிக்கவும் முடிகிறது.

நண்பனா?எதிரியா?
உயிர் வாழ தண்ணீர் அவசியம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. தாகத்தை தண்ணீரால் மட்டும்தான் தீர்க்க முடியும்.



தண்ணீரைப்போல, மின்சாரமும் இன்றைய உலகில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றுதான். மின்சாரத்தை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், அதன் பயன்பாடு நம்முடன் கலந்திருக்கிறது.ஆனால், தண்ணீரும் மின்சாரமும் ஒன்றாகக் கலந்தால்? அது ஆபத்தோ ஆபத்து.


வேடிக்கை என்னவென்றால், தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஒருபுறம் அணைக்கட்டுகளிலிருந்து; மறுபுறம் கடலிலிருந்து. ஆனாலும் தண்ணீரும், மின்சாரமும் எதிரிகள்தான். மின்சாரம் பாய்ந்து இருவர் பலி என்பதுபோன்ற செய்திகளை நாம் அவ்வப்போது படிக்கிறோம். மழைக் காலங்களில், அறுந்து தொங்கும் மின்சாரக் கம்பிகளைத் தவறுதலாகத் தொடும்போது, மின்சாரம் பாய்ந்து இறப்பு ஏற்பட்டு விடுகிறது.

மின்சாரத்தைக் கடத்துவதில் தண்ணீர் ரொம்ப வேகம். தண்ணீர்த் தொட்டிளில், ஷவர் பாத்தில், குளியல் அறையில் மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகள் அநேகம். அதிலிருந்து காத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அமெரிக்காவில் விற்கப்படும் HAIR DRYERகளில், பெரிய எச்சரிக்கை வாசகங்கள் - ‘தண்ணீர் அருகில் இதைப் பயன்படுத்தாதீர்கள்’ என்று.

எல்லாவிதமான தண்ணீரிலும் மின்சாரம் பாயுமா? தண்ணீரில் மின்சாரம் பாயத்தான் செய்யும். அதற்காக கடலில், ஒரு சிறிய மின் ஒயரைப் போட்டால், கடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து, அதில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்த அளவிலான தண்ணீரில் மின்சாரம் பாயும்போது, மின்சாரத்தை அந்தத் தண்ணீர் கடத்தும். குறைந்த சக்தியிலான மின்சாரம், ஒரு கடலளவு தண்ணீரில் பாயாது.

தவிர, மிகவும் சுத்தமான தண்ணீரில் மின்சாரம் பாயாது. அதாவது, பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரைப் போல, பலமடங்கு சுத்தமான தண்ணீரில் மின்சாரம் பாயாது.

ஏன் தெரியுமா?

இரு மடங்கு ஹைட்ரஜனும் ஒரு மடங்கு ஆக்சிஜனும் என்ற விகிதத்தில் உள்ளது தண்ணீர். சாதாரண தண்ணீரில், அயனிகள் எனப்படும் மின்காந்தத் துகள்கள் இருக்கும். மேலும், அதில் எலக்ட்ரான்களும் இருக்கும். அணுத்துகள்களில் உள்ள எலக்ட்ரான்கள், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பாயும்போது, மின்சாரம் ஏற்படும். மிகவும் சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரில், எலக்ட்ரான்கள் இருப்பதில்லை என்பதால், அவை மின்சாரத்தைக் கடத்துவதில்லை. அத்தகைய சுத்தமான தண்ணீரில் சிறுதுளி உப்பைக் கலந்தால் அது மின்சாரத்தைக் கடத்தும்.

எனவே தண்ணீர் படும் இடங்களில், மின்சாதனப் பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தவறுதலாக, மின்சாரம் தண்ணீரில் பாய்ந்தால், மின் ஒயரையோ, பிளக்கையோ, அந்தத் தண்ணீரையோ தொடக்கூடாது. வேகமாகச் சென்று, மெயின் ஃப்யூஸ் கேரியரை பிடுங்கிவிட வேண்டும்.


* சாப்பிடாமல் ஒரு மாதம் வரை கூட உயிர் வாழலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு வாரம் தாண்டி உயிர்வாழ முடியாது.

* உறைந்த நீர் சாதாரண நீரை விட ஒன்பது சதவிகிதம் குறைவான எடை கொண்டது. அதனால்தான் தண்ணீரில் ஐஸ் கட்டி மிதக்கிறது.

* மனித மூளையில் 75 சத விகிதம் தண்ணீர்தான். எலும்புகளில் உள்ள நீரின் அளவு 25 சதவிகிதம்.

* ஒரு லிட்டர் தண்ணீரின் எடை 1.01 கிலோ கிராம்.

* உலகம் தொடக்கத்தில் எவ்வளவு தண்ணீரைக் கொண்டிருந்ததோ அதே அளவு தண்ணீரைத்தான் இப்போதும் கொண்டிருக்கிறது.

உலகில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நாடு எது?
சிம்பாவே என்ற ஆபிரிக்க நாடு தான். ஏன் தெரியுமா? அந்த நாட்டில் தவறான பொருளாதாரக் கொள்கையால் பண வீக்கம் அதிகரித்த நிலையில் மில்லியன்,ரில்லியன் என பண நோட்டுக்களை அடித்துள்ளார்கள்.ஆனாலும் அதன் பெறுமதியோ,ஐயோ பாவம்.ஒரு 500 மில்லியன் டாலரில் மூன்று இட்லியும் ஒரு காப்பியும் தான் வாங்க முடியும்.

http://malaikakitham.blogspot.in/2011/05/blog-post.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறியாததை அறிவோம் 1357389அறியாததை அறிவோம் 59010615அறியாததை அறிவோம் Images3ijfஅறியாததை அறிவோம் Images4px
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 16, 2012 8:41 am

அருமையான அறியவேண்டிய பல விஷயங்கள், K 7 !
மலைகாகிதம் அவர்களுக்கும் நன்றி. நன்றி

ரமணியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக